Jump to content

இயக்குனர் பாலா போல் ஆகவேண்டும்! மனம் திறக்கிறார் மன்மதன் பாஸ்கி


Recommended Posts

manmathan_basky001.jpg

ஈழத்து கலைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகர்+இயக்குனர் மன்மதன் பாஸ்கி. இவரின் குறும்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவை. இவர் நம் ‘சினி உலகம்’ நேயர்களுக்காக பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதோ உங்களுக்காக....

1)உங்களை பற்றியும், சினிமா துறைக்கு வந்ததை பற்றியும் சொல்லுங்கள்?

முதலில் ஒரு பாடகராக தான் என் சினிமா பயணத்தை தொடங்கினேன். பின் படி படியாக ஒவ்வொறு துறையிலும் பயணிக்க ஆரம்பித்தேன். 96ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என் பயணம். பாரிஸில் இருக்கும் பொன்குமரன் என்பவர் தான் என்னை இந்த துறைக்கே அறிமுகப்படுத்தினார். நான் முதல் இயக்கிய குறும்படம் நதி. இக்குறும்படம் நிறைய இடங்களில் திரையிடப்பட்டது.

2)நீங்கள் எத்தனை குறும்படங்களை இயக்கிய இருக்கிறீர்கள்?

நான் இதுவரை 12 குறும்படங்களை இயக்கி இருக்கிறேன். இதுவரை 10 குறும்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அதோடு நிறைய குறும்படங்களில் நடித்திருக்கிறேன்.

3)நீங்கள் நடிகராக அறிமுகமானது எப்போது?

நான் எப்போது இயக்குனராக அறிமுகமானேனோ, அப்போதே நடிகராக அறிமுகமாகிவிட்டேன்.

4)நீங்கள் இயக்கி படைப்புகளில் உங்களுக்கு பிடித்தது?

நான் இயக்கி படைப்புகள் எல்லாமே பிடிக்கும். அதில் மிகவும் பிடித்தது எனக்கும் உனக்கும், அடங்காமதவி.

5)உங்களுடைய ரோல் மாடல், அல்லது நீங்கள் யாரையாவது பின்பற்றி இருக்கிறீர்களா?

இல்லை இதுவரை நான் யாரையும் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு எது சரியாக வருமே அதை தான் நான் செய்து வருகிறேன். ஆனால் இயக்குனர்களில் எனக்கு மிகவும் பிடித்தது பாலா. அவரை போல படம் இயக்க வேண்டும் என்பது எனது ஆசை.

6)தென்னிந்திய சினிமா பிரபலங்களுடைய தொடர்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?

தென்னிந்திய சினிமா பிரபலம் என்றால் எனக்கு முதலில் அறிமுகமானது பி.எல். தேனப்பன். எதிர்பாராமல் தான் நான் அவரை சந்தித்தேன்.

7)வஞ்சகம் படத்தை பற்றி சொல்லுங்க?

பி.எல். தேனப்பன் அவர்கள் என்னிடைய பேனரில் ஏதாவது ஒரு குறும்படம் இயக்குங்கள் என்று கூறினார். அப்படி தான் வஞ்சகம் படம் உருவானது.

8)உங்களுடைய அடுத்த படைப்பு?

தெரியவில்லை என்னுடைய அடுத்த படம் எப்போது என்று, கதையெல்லாம் எழுதிக் கொண்டு தான் இருக்கிறோம்.

9)வஞ்சகம் படம் இயக்கும் போது சுவாரஸ்யமான நிகழ்வு பற்றி சொல்லுங்கள்?

சுதா என்பவர் இருக்கிறார், அவர் படப்பிடிப்பை முடித்ததும் உடனே குரட்டை விட்டு தூங்குவார். அதேபோல் நிறைய பேர் லேட்டாக வந்துவிட்டு காமெடியாக காரணம் சொல்லுவார்கள்.

10)தீராநதி திரைப்படத்தை பற்றி சொல்லுங்கள்?

2011ல் காட்சியமைக்கப்பட்டு, 2012 இல் ரிலீஸ் செய்தேன். நான் இயக்கிய ஒரு படம் கூட கஷ்டப்படாமல் இயக்கவில்லை. இப்படமும் மிகவும் கஷ்டப்பட்டு தான் இயக்கி இருக்கிறேன். ஒரு பெரிய சம்பவத்திற்கு பிறகு தான் இப்படம் உருவாகி இருக்கிறது.

11) A Gun And A Ring திரைப்படம் பற்றி?

லண்டன் சென்ற போது நான் அவரை சந்தித்தேன். அப்போது அவர் படத்தின் கதையை சொல்லி இந்த வேடத்தில் நீங்கள் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கூறினார். ஒரு மாதம் இப்படத்தின் படப்பிடிப்புக்கு சென்றேன். படம் வெளியான பிறகு இப்படம் இவ்வளவு பெரிய வெற்றியடைந்தது பார்த்து நான் அப்படியே மிரண்டு போனேன்.

12)உங்கள் குடும்பத்தில் உங்களுடைய படைப்புகளுக்கு ஆதரவு எப்படி?

என் பெற்றோர்கள் என் படைப்புகளுக்கு சரியான ஆதரவு கொடுத்தார்கள். என்னால் தான் என் பெற்றோர்களுக்கு பெரிய கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் படைப்புகளை இயக்குவதில் நான் என்னை கவனிக்காமல் இருந்தேன், அது அவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

13)உங்களுக்கு நகைச்சுவையான கதாபாத்திரம் பிடிக்குமா? அல்லது சீரியஸான வேடம் பிடிக்குமா?

எனக்கு நகைச்சுவையாக நடிப்பது தான் பிடிக்கும்.

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/110480/#sthash.SX7KKhGa.dpuf

Link to comment
Share on other sites

அற்புதக் கலைஞன்.

 

ஜேர்மனி பிறேமன் தமிழ் கலை மன்றத்தின் செயலாளராக இருந்த பொழுதில்... அவரையும் பொங்கல் விழாவின் சிறப்பு விருந்தினராக பங்குபற்ற வைத்த மனத்திருப்தி கிடைத்தது.  :o  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.