Jump to content

கண்கள் பாதிப்பும், அவற்றுக்கான தீர்வுகளும்


Recommended Posts

 
2527-eyes2.jpg
 
கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். கண்கள் காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் வெவ்வேறு விம்பங்களின் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை காண உதவுகின்றன. இந்த வகையில் மனிதனின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும்  அவற்றுக்கான தீர்வுகளையும் பற்றி விளக்குகிறார்  கண் வைத்திய நிபுணர் வாசுகி குரு சாமி.
 
 
சிறு­வ­ய­தி­லேயே கண் பார்வை குறை­வ­டைந்து போவ­தற்­கான காரணம் என்ன?
 
தாய் வயிற்றில் சிசு இருக்­கையில் ஏதா­வது நோய் வந்தால் அது சிசுவின் கண்ணை பாதிக்க வாய்ப்­புள்­ளது.  அதில் (TORCH)  என சொல்லப்படும் நோய்கள் சின்­னம்மை, ருபெல்லா போன்றவை தாய் கரு­த­ரித்து மூன்று மாதங்களுக்குள்  நோய் தொற்று ஏற்பட்டால் பிள்­ளையின் கண் பாதிக்க வாய்ப்­புள்­ளது. தாயும் தந்­தையும் நெருங்­கிய உறவில் திரு­மணம் செய்­தி­ருந்தால்  குழந்தைகளுக்கு கண்பார்வை பிறப்பிலேயே குறைய வாய்ப்புள்ளது. 
 
பெற்றோர் சிறுவயதில் கண்ணாடி பாவித்தவர்களாக இருந்தால் குழந்தை களும் பாவிக்கவேண்டியுள்ளது. சில வேளையில் தாய் கர்ப்பம் தரித்­தி­ருக்­கையில், முதல் மூன்று மாதங்­களில் அதிக மது அருந்­துதல் (அல்­கக்கோல்) புகை­பி­டித்தல் மூலம் குழந்­தையின் கண் ­பார்வை இழக்க நேரி­டலாம். விற்­றமின் குறை­பாட்­டி­னாலும் கண்ணின் வளர்ச்சி பாதிப்ப­டைய வாய்ப்­புள்­ளது. அத்­தோடு குழந்தை தாய் வயிற்­றி­லி­ருந்து வெளி­யேறும் போது பிறப்பு உறுப்­புக்­களில் கிருமி தொற்று காரணமாக தாக்­கு­த­லாலும் குழந்தை பிறந்த பிறகு கண்கள் சிவந்து பார்வை இழக்க வாய்ப்­புண்டு.
 
பிள்­ளை­களின் பழக்க வழக்கம், பிள்­ளைகள் தொடர்ச்­சியாக கிட்ட பார்­வைக்கு இசை­வாக்கப்படுதல் பாதிப்பு நேரிடலாம். மயோ பியா என்ற பார்வை குறை­பாடு வர­வாய்ப்­புள்­ளது. வாக்கு கண் என்­பது ஒரு கண்ணின் பார்­வையை குறைக்கும். வாக்கு கண் உள்­ள­வர்­களை செல்­ல­வாக்கு என்று எண்­ணாது வைத்­தி­யரை நாட­வேண்டும். ஏனென்றால் சிறுவர்களிடையே தலை சரிந்துப் பார்ப்பது போன்ற குறைபாடுகள் இருக்கலாம். இந்த கண்­ணுள்­ள­வர்­க­ளுக்கு கட்­டா­ய­மாக கண்­பா­திக்க வாய்­ப்புள்­ளது.         
கண்­களில் வெள்ளை படர்­வ­தற்­கான         காரணம் என்ன? 
 
பிரதான காரணம் வயது போகப் போக கண்­களில் உள்ள லென்ஸி­லுள்ள செல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்­கி­றது.  செல்ஸ் தள்­ளு­பட்­டு கொண்­டி­ருக்­கையில், பின்­பக்கம் நார்­க­ளாக வளர்ந்து கண்­களில் படர்­கி­றது. அல்ட்டா வைலட் கதிர்கள் கண்­களில் பட கண்­களில் நிற­மாற வாய்ப்­புள்­ளது. steroid மருந்து வகை­களை பாவிப்­ப­த­னாலும் கெட் ரெக் வர­வாய்ப்­புள்­ளது.
 
மின்னல் தாக்­குதல் சடுதியாக குளுக்­கோமா காரணமாகவும் தாய்மார் வயிற்றில் குழந்­தைகள் இருக்கும் போது ஏதா­வது தொற்றுநோய் கார­ண­மாக கெட் ரெக் வர வாய்ப்­புள்­ளது. அதி­க­மாக 55  மேற்பட்ட வய­தி­ன­ருக்கே  உடல் அமைப்புக்கு ஏற்­ற­வகையில் ஏற்­ப­டலாம். சிறு­வ­ய­திலே steroid  மருந்­து­களை பாவிக்கும் போதும், சிறுநீரக நோய்க்­கான மருந்­து­களை பாவிக்கும்  போது கெட் ரெக் வரவாய்ப்புள்­ளது. கெமிக்கல் கண்­க­ளுக்கு படு­வதால் கெட் ரெக் சிறு­வ­ய­திலே வர­வாய்ப்­புள்­ளது. பிறக்கும் சிறு குழந்­தை­க­ளுக்கும் கெட் ரெக் வரலாம். 
 
கண்­களைச் சுற்றி கரு­வ­ளையம் தோன்­று­வ­தற்கும் கண்­ணுக்கும் தொடர்பு உண்டா?
 
கண் பகு­தியை சுற்றி உள்ள தோல் பகுதி மிகவும் மென்­மை­யா­னது. உடலில் உள்ள ஏனை­ய ப­கு­தி­களை போல தடிப்­பா­னது இல்லை. இது மிகவும் மென்­மை­தன்மை ஒளி உட்செல்லவிடும்  தன்மை கொண்­டது.
 
உட­லி­லுள்ள இரத்­தோட்­டத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்­துள்­ளது. உதா­ர­ண­மாக சொன்னால், கண்­களில் ஏற்­படும் கரு­வ­ளை­ய­மானது தெரிவது  இது பரம்­ப­ரை­யா­கும். ஒவ்­வொ­ரு­வரின் எலும்பின் அமைப்பை பொறுத்து அதா­வது கற்குழியைப் பொறுத்து அதன் தோற்­ற­­மைப்பு மாறு­படும். கண்ணில் அழற்சி மற்­றது கண்கடி ஏற்­ப­டுதல், கண்கள் வறட்சி அடைதல், கண்­களில் அழற்சி ஏற்­ப­டு­வதால்  அடிக்­கடி கண்­களை கச­க்­கு­வதால் இதன் காரணமாக கண்­களில் தடிப்பு ஏற்­பட்டு கண்­களில் கரு­வ­ளையம் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. கண்­ணுக்கு கண்­ணாடி தேவை­யேற்­படும் போது கண்­ணாடி பாவிக்­காமை,  தூக்­க­மின்மை, உடம்பில் இரத்த ஓட்டம் குறை­வ­டைதல், உடம்பில் நீர்த்­தன்மை குறை­வ­டைதல்,  மருந்­துகள் (குளுக்­கோமா), தொடர்ந்து கணினி முன் நின்று வேலை செய்தல், நித்திரை குறை­வ­டை­தல் போன்ற கார­ணங்­க­ளினால் கண்­களில் கரு­வ­ளையம் தோன்ற கார­ண­மாக அமை­யலாம். 
 
கண் மஞ்சள் நிற­மாகத் தோன்­று­வ­தற்­கான காரணம் என்ன?
 
மஞ்சள் காமாலை, செங்­க­ன்மாரி இருப்­பதை அறிந்து கொள்­ளலாம். அத்­தோடு நோயுள்ளவர் கழிக்கும் சிறுநீர் மஞ்சள் நிற­மாக இருந்தால் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாட­வேண்டும். பொது­வாக கண்­களில் வெள்­ளை­ நிறமான மையப் ­ப­கு­தியில் மஞ்சள் நிற­மாக இருப்­ப­தற்கு காரணம் சூரிய ஒளியின் அல்டா வைலட் காரண­மாக மஞ்சள் நிற­மாக வரவாய்ப்­புள்­ளது. கண்­களின் வெள்ளைப்­ப­கு­தியில் கரு திட்­டுகள் இருப்­பதால் மஞ்சள் நிற தோற்­ற­ம­ளிக்­கி­றது. எல்லா இடங்­க­ளிலும் சுத்­த­மான மஞ்­ச­ளாக இருந்தால் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாட­வேண்டும். அல்டா வைலட் பாதிப்பாக இருந்தால் பொது­வாக சன்­கிளாஸ், தொப்பி, குடை பாவித்தல் மூலம் இதனை கட்­டு­ப்ப­டுத்­தலாம். 
 
கண் சிவப்­ப­தற்­கான காரணம் என்ன?
 
கண் சிவப்­பாக மாற பல கார­ணங்கள் உண்டு. ஆனால் அதில் முக்­கி­ய­மாக கவனிக்க வேண்­டி­யது,   கண் சிவப்­பாக இருந்து கண்ணில் வேதனை இருக்­குமா என்­பதை கவ­னிக்க­வேண்டும். அதோடு பார்வை குறைபாடு உண்டா என்­பதை முக்­கி­ய­மாக கவ­னிக்­க­வேண்டும்.  கண் சிவப்­பாக இருப்­பது என்­பது அசா­தரண நிலை­யாகும். ஒரு கண் சிவந்து இருந்தால் கட்­டாயம் வைத்­தி­யரை நாட­வேண்டும்.
இரண்டு கண்­களும் சிவந்து இருந்தால் அது அவ்­வ­ள­வுக்கு பார­தூரமா­னது என்று சொல்­ல­மு­டி­யாது. ஒரு கண்ணில் ஒரு பக்­கத்தில் சிவந்து காணப்­பட்டு கடும் வலி, பார்வை குறை­பாடு காணப்­பட்டால் வைத்­தி­யரை உட­ன­டி­யாக நாட­வேண்டும்.
 
இப்படியான சந்தர்ப்பத்தில் ஒவ்­வொரு மணித்­தி­யா­லமும் அதன் பாதிப்பு அதி­க­ரித்து செல்­வதால் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாட­வேண்டும். இப்­ப­டி­பட்ட வேதனை இருக்­கு­மானால் இக்                கு­ளு­மி­யா­வாக இருக்­கலாம். சாதா­ர­ண­மாக கண் சிவப்­பது தொற்றுநோய் அல்­லது நோயா­கவும் இருக்­கலாம்.  இது கடு­மை­யான வேதனை வந்தால் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாடவேண்டும். புரை தள்ளி தண்ணீர் வந்­த­து என்றால், அது கண்­நோ­யாகத் தான் இருக்கும். அதை­வி­டவும் கண்ணில் இரத்த கசிவு கார­ண­மா­கவும் கண் சிவக்கலாம் அல்­லது அது சடு­தி­யாக அல்டா வைலட் கதிர்­வீச்சு கண்ணில் படு­வதால் கண்­களின் இரு பக்­கமும் நடுவில் கோடு­க­ளாக தெரியும்.
 
மாலைக்கண் நோய்க்­கான காரணம் என்ன?
 
இரவு பார்வை குறை­வாக இருப்­பது மாலைக்கண் நோய் இதை plterygium என்று சொல்லாம். குளுக்­கோமாவுக்கு போடும் மருந்துகளால் சில சமயம் இரவு பார்வை பாதிக்கலாம். இரவு பார்­வைக்கு பொது­வான காரணம் ரெகி நை பிக்மன்ட் டோசா. விழித்­தி­ரையில் பிறப்பால் அல்­லது பரம்­ப­ரையால் கண்ணில் சில மாறு­பா­டுகள் வரு­வதால் இது பெற்­றோர்­களால் பிள்­ளை­க­ளுக்கு வர­வாய்ப்­புள்­ளது இது பரம்­பரை நோயாக அமை­யும். இந்நோய் வரும்­போது காது கேட்­காமல் போகவும் வாய்­ப் புள்­ளது. 
 
50-–55 வய­தின­ருக்கு வெள்ளை படி­வதால் இரவு பார்­வையை பாதிக்­கி­றது.  இரவு நேரங்­களில் வாக­னங்கள் செலுத்தும் போது கெட் ரெக் இரவு கண்­பார்வை பாதிப்­ப­டைய செய்­கி­றது.
 
மயோ­பியா திருத்­த­ப்ப­டாமல் இருக்­கையில், தூர பார்­வை தெரி­யாமல் இருக்­கலாம். இதனால் இரவில் பார்வை குறை­வாக இருக்­கலாம். குளுக்­கோ­மா­வுக்கு போடப்­படும் மருந்­துகள் கண்ணின் கரு­ம­ணியை பாதிக்கலாம். 
 
லென்ஸ் போடு­வதால் கண்­க­ளுக்கு ஏதா­வது பாதிப்­பு ஏற்படுமா-?
 
லென்ஸ் பல வகை­யா­னது. இதில் முக்­கி­ய­மா­னது இரண்டு. கென்டேக் லென்ஸ் Intra ocular lens கென்டேக் லென்ஸ் என்­பது கண்  கருமணியில் கண்­ணுக்கு மேலே போட்டு கழற்று­வது.
 
கெட் ரெக் அறுவைச் சிகிச்சை செய்த பின் Intra ocular lens கண்­ணுக்குள் நிரந்­த­ர­மாக போடப்­ப­டு­கின்­றது. கெட் ரெக் அறுவைச் சிகிச்சை செய்த பின் தடித்த கிளாசை முன்பு போட்­டார்கள் ஆனால் இப்­போது Intra ocular lens கண்­ணுக்குள் போடு­கி­றார்கள். கண்­களை அறுவைச் சிகிச்சை செய்த பின் கண்­க­ளுக்குள்ளே லென்ஸ்களை மடித்து போடப்­ப­டு­கின்­றன. இன்­றைய காலத்தின் தேவையை பொறுத்து அமை­கி­றது. நாம் போடும் லென்ஸின்  தரத்தை பொறுத்து சிறு சிறு பிரச்­சி­னைகள் வரலாம். 
 
ஒரு­பி­ரச்­சி­னையும் இல்­லாதவர்களுக்கு  அறு­வைச் ­கிச்சை செய்தால் மறு­நாளே சரி­யா­கிவிடும். ஏதா­வது பிரச்­சி­னைகள் இருப்பின் நாட்கள் தள்ளி போக வாய்ப்­புள்­ளது.  சாதாரண நிலைக்கு  வர ஒரு மாத­காலம் தேவைப்­படும். கெட் ரெக் லென்ஸ் என்­பது கண்­ம­ணிக்கு மேலே போடு­வது. கண் கரு­ம­ணிக்கு கடத்­தப்­ப­டு­கின்ற ஒக்­சிசன் பாதிக்க வாய்ப்­புள்­ளது. இது குறிப்­பிட்ட மணித்­தி­யாலங்­க­ளுக்கு மாத்­திரம் பாவிக்க வேண்டும். உதா­ர­ண­மாக ஒரு லென்ஸ் எட்டு மணித்­தி­யாலம் மாத்­திரம் பாவிக்கவேண்டும் என்ற கால­வ­ரைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தால் அதை கருத்­தி­ல்கொள்­ளாது.  சோம்பல் கார­ணமாக லென்ஸைக் நீக்­காமல்  நித்­திரை செய்தால் கண்­க­ளுக்கு பாதிப்பு வர­வாய்ப்­புள்­ளது. அதற்கு சுத்தம் செய்வதற்கான திரவங்கள் உள்­ளது. அந்த திரவியத்தை கவ­ன­மாக பாவிக்­க­வேண்டும். அதை கவனக் குறை­வாக பாவித்தால் கண்­களில் தொற்று நோய் வர­வாய்ப்­புள்­ளது. அதை தவி­ரவும், கண்­களில் பொருத்தப்பட்ட லென்ஸ் நாளாக நாளாக ஒரு மாதத்தில் அல்­லது மூன்று மாத்­திற்கு பாவிக்­கலாம். இது நாட்­பட பாதிப்பு ஏற்­பட வாய்­ப்புள்­ளது. நாம் போடும் லென்ஸுக்கு திரவங்கள் போடு­வதால் கண்­களில் அழற்சி வர கார­ண­மாக அமை­கின்­றது, ஒரு சில­ருக்கு லென்ஸ் போடு­வதால் நல்ல பார்வை வரும் என்­பதை அறிந்த பின் அந்த நோயா­ளிக்கு Intra ocular lendலென்ஸ் பாவிப்­பது நல்­லது.
லென்ஸுக்கு பின்னால் ஒரு­ படல் மாதிரி பட­ர­ வாய்­புள்­ளது. இதை ஒரு லெசரால் குணப்­ப­டுத்­த­ மு­டியும். இள­மை­யாக உள்­ள­வர்­க­ளுக்கு அடிக்­கடி லெசரால் குணப்­ப­டுத்த வேண்டும். வயது போன­வர்­க­ளுக்கு குறை­வாக படர வாய்ப்­புள்­ளது. 
 
கண்­களுக்கு மேக்­கப்போ­டு­வதால் கண்கள் பாதிக்கப்படுமா-?
 
கண்­க­ளுக்­கு­ தொ­டர்ந்து  மேக்கப் போடு­வதால் வறட்­சி­தன்மை கூடி­ய­வர்­க­ளுக்கும்,  கண்­களில் எண்ணெய் தன்­மை­கூ­டி­ய­வர்­க­ளுக்கும் பிரச்­சினை அதிகம் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. 
 
 கணி­னியில் அதிக நேரம் இருப்­பவர்­க­ளுக்கும், கண்­களில் கட்­டி­யுள்­ள­வர்களும் மேக்­கப்­ போ­டு­வதை தவிர்க்­க­வேண்டும்.  இரவு நேரத்தில் மேக்­கப்பை கட்­டா­ய­மாக நீக்­க­வேண்டும். அத்­தோடு கண்­களில் அழற்சி உள்­ளவர்கள் பாவிப்­பதை தவிர்ப்­பது நல்­லது. மேலும் கால­தா­ம­த­மான கொஸ்­மட்டிக் பொருட்­களையும் தரம் குறைந்த பொருட்­களையும் பாவிப்­பதால் பாதிப்பு வர­வாய்ப்­புள்­ளது. கென்டேக் லென்ஸ் போடு­ப­வர்கள் இதை தவிர்ப்­பது நல்­லது. அவ­சியம் ஏற்­படின் மாத்­திரம் மேக்­கப்­போ­டுவது நல்லது. 
 
25roxy-in-red_8-frames-for-specs-appeal.
 
 
 
தலைக்கு நிறச்­சாயம் (டை) பாவிப்­பதால் பாதிப்பு ஏற்­ப­டுமா?
நிறச்சாயம் என்பது இரசாயன பொருட்கள் சேர்ந்த கலவையாகும். தவிரவும், இது தலைக்கு போட்டு சற்று நேரத்தின் பின்னரே கழுவப்படுகிறது.
 
எந்தவிதமான இரசாயனப் பதார்த்தங்களும் கண்ணுக்குள் செல்லும்  போது பாதிப்பை ஏற்படுத்தும். தலைச்சாயம் என்ற வகையில் இது கண்ணில் அழற்சி, கடி, சிவந்து போதல் ஒவ்வாமை போன்ற குணங்களை ஏற்படுத்தலாம்.
 
முடிந்தவரை டை பாவிக்கும் போது தோல் அழற்சி பரிசோதனை செய்த பின்னரே நிச்சயமாக பாவிக்க வேண்டும். கூடுமானவரை தலையை கழுவும் போது கண்களுக்குள் போகாமல் கழுவவேண்டும். ஏதாவது தவறுதலாக கண்களுக்குள் இந்த டை செல்லுமாயின், உடனடியாக தூய்மையான தண்ணீரால் கண்களை நன்கு அலசிய பிறகு வைத்தியரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
 
தலை­வ­லிக்கும் கண்­க­ளுக்கும் தொடர்பு உண்டா?  
ஆம் நிச்சயமாக. கண்கள் நெடுநேரமாக கிட்டிய தூரத்தில் தொடர்ந்து வேலை செய்வதால் தலைவலி வர வாய்ப்புண்டு. உதாரணமாக நுணுக்கமான தையல் வேலை, பரீட்சைக்காக மன அழுத்தத்துடன் கூடிய நேரம் வாசித்தல், நெடுநேரம் அசாதாரணமான உடலமைப்புடன் கணினியில் வேலை செய்தல் போன்றவை.
 
இது தவிர, ஒருவருக்கு கண்ணாடி போடவேண்டிய பார்வை குறைபாடு இருக்குமாயின் அல்லது கண்கள் கிட்டப்பார்வைக்காக சரியாக குவியாமல் விட்டாலோ, வாக்குத்தன்மை இருந்தாலோ தலைவலி வரக் காரணமாகலாம். வெள்ௌழுத்து குறைபாடு 40 வயதிற்கு பின் ஏற்படும் போது ஒருவர் கண்ணாடியை பாவிப்பதனை தவிர்த்து வந்தாலும் தலைவலி ஏற்படலாம்.
 
இது தவிர, சிவந்த கண்களுடன் கூடிய தலைவலி சடுதியான குளோக்கோமா காரணமாகவும் இருக்கலாம். இந்த நிலை ஏற்படும் போது ஒரு நாளும் அலட்சியமாக இருக்கக் கூடாது.
 
கண் நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கண் நோய் உள்­ள­வ­ர்கள் பாவித்த அழ­கு­ சா­தனப் பொருட்­க­ளையும் அவர்கள் பாவிக்கும் டவல்­களையும் பாவிப்­பதை தவிர்க்க வேண்­டும். கண்­நோ­யா­ளி­களின் கண்­களில்  வடியும் நீரை தொடுதல் அல்லது சுவா­சித்தல் இருமல், தும்மல் மூலம் வெளியேறும் துணிக்கைகளை சுவாசித்தல் போன்ற கார­ணி­களால் கண்நோய் வர­ வாய்ப்­புள்­ளது. மேலும் நாங்கள் பொது இடங்­க­ளுக்கு செல்லும் போது அங்கு கண்நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் இருப்­பார்கள். இவர்களுக்கு  அண்மையில் செல்வதை தவிர்த்தல் நல்லது. 
 
மேலும், கண்நோய் உள்ளவர்கள் தொடும் பொருட்­களை மற்­ற­வர்கள் பாவிப்­பதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க­ மு­டி­யாமல்  கண்நோயாளிகளை  நாம் பராமரிக்க வேண்டியிருந்தால் தகுந்த முறையில் கைகளை கழுவிட்டு முகமூடியை (Mask) பாவிப்பது நல்லது. 
 
கண்நோய் உள்­ள­வர்கள் அலு­வ­ல­கத்தில் வேலை செய்ப­வ­ராக இருந்தால் அவரை வீட்­டி­லி­ருந்து குணமடைந்த பின் வேலைக்கு வர அனு­மதிக்கவேண்டும். மேலும் பொது வாகனங்­களில் செல்லும் போது வீட்­டுக்கு வந்த உடனே சவர்க்­காரம்  அல்லது தொற்று நீக்கியை பாவித்து கைகளை கழுவ­வேண்டும். பொது இடங்­களை சுத்­த­மாக வைத்­தி­ருக்­க­ வேண்டும்.  பொது­வாக சன நெருக்­க­டி­யான இடங்­களை தவிர்ப்­பது பல­வ­கை­யான தொற்று நோய்­களில் இருந்து எங்­களை பாது­காக்­க ­வல்­லது. அத்­துடன் நாங்கள் வேலை செய்யும் இடத்­திலோ, வீட்­டிலோ, ஈக்கள் இருந்தால் அவற்றை அகற்றும் வழி­ மு­றை­களை கடை­பி­டிக்­க­வேண்டும்.
 
வாசித்­தலின் போது கண்­களில் நீர்­ வ­டி­வ­தற்­கான காரணம் என்ன?
பொது­வாக கண்­ காய்ந்து போய் இருத்தல் கண்­களில் நீர் ­வ­டி­வ­தற்கு கார­ண­மாக அமை­கி­றது. கணி­னியில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை­ செய்தாலும், எயா கண்­டிசன்  அறையில் இருந்தாலும்  கண்ணில்  வரட்­சித்­தன்­மையை உண்­டு­பண்ணி நீர் ­வ­டிய கார­ண­மாக அமை­கி­றது. இது மிகவும் பொது­வான காரணம்.
 
இது தவிர, கண்­களில் சாதா­ர­ண­மாக கண்ணீர் மூக்கு துவா­ரத்­தினுள் தான் வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றது. கண்­ணீ­ரா­னது சுரக்கப்­பட்டு நாசிக் குழாய் வழி­யாக  கடத்­தப்­ப­டு­கின்­றது. அந்த பாதையில் ஏதா­வது அடைப்­புகள் இருந்­தால் கண்­களில் நீர் வடிதல் ஏற்­ப­டு­கி­றது. இத்­த­கைய அடைப்பு சிலவேளை பிறப்பின் போதே அல்­லது வயது போன­வர்­க­ளுக்கும் இது வர­ வாய்ப்­புள்­ளது.  இப்­படி  அடைப்பு கார­ண­மாக கண்­களில் தண்ணீர் வந்தால் வைத்­தியரை நாடி சத்­திர சிகிச்­சை செய்­ய­வேண்டும். இது தவிர மூக்­கில் அழற்சி  ஏற்பட்டு வீங்கு­வதால் கண்ணீர் போகிற ­பாதை தடைப்பட வாய்­ப்புள்­ளது இச்­சந்­தர்­ப் பத்தில் தகுந்த சொட்டு மருந்­துகள் பாவிக்­க­ வேண்­டி­வரும். அத்­துடன் உடம்பில் ஒவ்­வாமை ஏற்­ப­டு­வ­தையும் தவிர்க்­க­வேண்டும். 
 
 
கண்­க­ளுக்கு கண்­ணாடி பாவிக்கும் போது எதைக் கருத்தில் கொள்­ள­வேண்டும்?
கண்­ணாடி என்­பது தகுந்த கண் ­வைத்­தியர் மூல­மா­கவோ அல்­லது பயிற்சி பெற்ற கண்­ணாடி பரி­சோ­தகர் மூல­மா­க­வோதான் பரீட்­சிக்­கப்­பட்டு எடுக்­கப்­ப­ட­வேண்டும்.
 
மேலும் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தேவை­யான கிட்­டப்­பார்வை வில்­லை­களின் அளவும் தூரப் பார்­வையின் அளவும் மாறு­ப­டக்­கூ­டி­ய­ன. ஆகவே ஒருவர் பாவிக்கும் கண்­ணாடி மற்­ற­வர்­க­ளுக்கு பொருத்­த­மா­ன­தாக அமை­யாது. வளரும் குழந்­தை­களும், 40 வய­துக்­குமேல் வயது ஏற ஏற கண்­ணா­டியில் அல­குகள் ஏறிக்­கொண்டு போகும். ஆகவே அதனை சொல்­லப்­பட்ட கால இடை­வெ­ளி­களில் பரீட்­சித்து கண்­ணா­டியை மாற்­ற­வேண்டும். கண்­ணா­டிகள் வடி­வ­மைக்­கப்­படும் போது கண்ணின் கரு­ம­ணி­களின் இடை­வெளி (Interpupillary distance) அளக்­கப்­பட்டு அதன்­ப­டியே செய்­யப்­ப­ட­வேண்டும். அத்­துடன் கீறல்­ வி­ழுந்த கண்­ணா­டிகள், படி­வு­க­ளுடன் பழு­தா­கிய கண்­ணா­டிகள், சரி­யாக பொருந்தி நிற்­காமல் தளர்­வாக மூக்கில் நிற்கும் கண்­ணா­டிகள் போடு­வதை தவிர்க்­கவேண்டும்.
 
சில­வே­ளை­க­ளில கண்­களின் பாது­காப்­புக்­கா­கவும் கணி­னியின் பாதிப்­பதை தவிர்ப்­ப­தற்கும் சாதாரண கண்­ணா­டி­களும் சிபா­ரிசு செய்­யப்­ப­டு­வ­துண்டு. இதில் தவ­றில்லை.
 
கண்ணுக்கு அணியும் கண்ணாடியை குறைந்தது எவ்வளவு காலம் பாவிக்கலாம்?
எவ்­வ­ளவு கவ­ன­மாக பாவிக்­கிறோம் என்பதை பொறுத்து அமை­கி­றது. சிறு குழந்­தை­களை பொறுத்­த­வ­ரையில் கண்­ணா­டி­களை பாவிப்­பதில் மிக கவ­னக்­கு­றை­வாக இருப்­பதால்  அடிக்­கடி உடைத்­து­வி­டு­வதால் அடிக்­கடி மாற்­ற­வேண்டி ஏற்­ப­டு­கின்­றது.
 
கண்­ணா­டியை கவனமாக பாவித்தால் ஒருவருடத்திற்கு ஒருமுறை மாற்றவேண்டும். வெள்ளை எழுத்துகாரர்களை பொறுத்தவரையில் ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை இவர்கள் மாற்றவேண்டும். சிறுவயதினரை பொறுத்தவரையில் கண் வளர்ந்து கொண்டிருப்பதால் அடிக்கடி மாற்றவேண்டும். இவர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண்ணாடியை மாற்றவேண்டிய தேவையேற்பட வாய்ப்புள்ளது. 
 
அடிக்­கடி வைத்­தி­யரை மாற்­று­வ­தனால் பாதிப்பு ஏற்­பட வாய்ப்­புண்டா?
இலங்­கையை பொறுத்­த­மட்டில்  ஒரு நோயாளி வைத்­தி­யசா­லைக்கு செல்லும் போது தங்­களின் வைத்­திய விப­ரங்­களை சரி­யாக வைத்­தி­ருப்­பதிலை. உதா­ர­ண­மாக, ஒரு வைத்­தி­ய­ரிடம் சென்­று­விட்டு பிரி­தொ­ரு­ வைத்­தி­ய­ரிடம் செல்லும் போது அந்த நோயா­ளியின் விப­ரங்­களை தொலைத்து விட்டு செல்­வதால் இந்த நோயா­ளியின் நிலை என்ன என்­பதை அறிய வைத்­தி­யர்கள் சிர­மத்­துக்­குள்­ளாக வேண்­டிவரும். ஒரு வைத்­தி­ய­ரிடம் தொடர்ந்து செல்­வது சாலச்­சி­றந்­தது. இருப்­பினும், பிரிதொரு வைத்­தி­ய­ரிடம் அவ­சியம் ஏற்­படும் பட்­சத்தில் செல்லலாம். அதில் தவ­றில்லை.
 
எந்த வயதில் கண்­ணுக்கு கண்­ணாடி உப­யோ­கிக்க வேண்டும்?
சில சம­யங்­களில் ஆகக் குறைந்தது பிறந்த குழந்தைக்கு கூட கண்­ணா­டி பாவிக்க வேண்­டிய தேவை ஏற்­ப­டலாம். சிறு குழந்­தை­க­ளுக்கு கண்பார்வை   பல­வீ­ன­மாக காணப்­ப­ட்டால் வைத்­திய ஆலோ­சனையின் படி கண் நரம்­புகள் சரி­யாக வளர்ச்சி பெற கண்ணாடி பாவிக்க வேண்டி ஏற்­ப­டலாம். இது தவிர, பாட­சாலை செல்லும் பிள்ளைகள் தூர  பார்வை தெரி­யாமல் இருக்கும் போதோ, அல்­லது வாக்­கு ­கா­ர­ண­மா­கவோ கண்­ணாடி பாவிக்­க­ வேண்­டி­வரும். 
 
ஒரு முறை கண்­பார்வை இழந்தால் மறு­ப­டியும் பெற­லாமா?
கண்­பார்வை எவ்­வாறு இழக்­கப்­பட்­டது என்பதை பொறுத்து, கண்­பார்வை வர­வாய்ப்­புகள் உண்டு. கண்­களில்  ஏற்­படும் இரத்த கசிவு கார­ண­மாகவும் இருக்­கலாம். அல்லது நீரி­ழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கண்பார்வை இழக்கின்றமை ஒரு பொது­வான காரணமாகும். சடு­தி­யாக இரத்த கசிவு கார­ண­மாக கண்­பார்­வையை இழந்தால் கண் ­பார்வை வர­ வாய்ப்­புகள் உண்டு.
 
கெட்ரெக் சம்­பந்­த­மாக கண் ­பார்­வையை ஒருவர் இழந்தால் கூட அது பொது­வான பிரச்­சினை. இது நோய் முற்றி போய் பார்­வையை இழந்தால் குணப்­ப­டுத்த 100-–99 வீதம் வாய்ப்­புள்­ளது. இதனை யாரும் கருத்தில் கொள்­வ­தில்லை. இந்த பாதிப்­பி­லி­ருந்து குருட்டு தன்­மையை முற்­றாக  குணப்­ப­டுத்த முடியும்.
 
குளுக்­கோமாவினால் ஏற்­படும் குருட்­டுத்­தன்­மையை பின்­போ­டலாம். இது சரி­யான வைத்­திய பரி­சோ­த­னையின் மூலம் தவிர்த்­துக்­கொள்­ளலாம்.  
 
கண் நரம்பு சம்­பந்­த­மாக ஏதா­வது பிரச்­சினை ஏற்­பட்டால் இதனை சரி­செய்­ய ­மு­டி­யாது. மூளையில் பார்­வையின் பகுதி செய­லி­ழந்தாலும், நரம்பு செய­லி­ழந்தாலும் சரி­ செய்­ய மு­டி­யாது. பார்வை திரும்பி வருவது கஷ்டம். அத்­துடன் விழித்­திரை சம்­பந்­தப்­பட்ட பிரச்­சினை ஏற்­பட்டால் இதற்கு சிகிச்சை வழங்­கு­வதன் மூலம் மீண்டும் பார்­வையை பெற வாய்ப்­புள்­ளது.  
(தொடரும்....)
 
26Photo-401.jpg
 
மேலதிக விபரங்களுக்கு
 011 - 2693911
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.