Jump to content

சபரிமலை,மகரஜோதி என்ற மகரவிளக்கு அற்புதமா? உண்மை என்ன?


Recommended Posts

மனிதனின் நம்பிக்கைகள் எல்லாம் உண்மையாகி விடாது. நம்பிக்கை என்பதும் பக்தி என்பதும் வெவ்வேறானவை.பக்தி பகல் வேசமாகி விடுமானால் ஒன்றல்ல பல நித்தியானந்தர்கள் உருவாக நாமே அடியெடுத்துக் கொடுத்தவர்களாகி விடுவோம்.
 
சென்ற ஆண்டு 2011 தை 14 ல் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பியவர்களில், புல்மேடு என்ற இடத்தில் சன நெருக்கலில் 102 பக்தர்கள் சாகடிக்கப்பட்டனர்.இதே போல் 1999 ல் 54 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சென்ற ஆண்டு விபத்தை கேரள உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, பல கேள்விகளை முதலில் கேரள அரசிடமும்,பின்னர் கோயில் நிர்வாகத்திடமும் கேட்டனர்.
 
இந்த மகரஜோதியை பார்த்த,பக்தர்கள் அதை உண்மை என்று நம்பி, இன்றும் வழிபட்டு தரிசித்து வருகின்றனர். இது மகர நட்சத்திரம்,(மகரஜோதி,) ஆகாயத்தில் முன்னர் தோன்றி வந்ததாகவும்,பின்னர் தோன்றவில்லை எனவும், அது தற்போது மகரஜோதியாக(மகரவிளக்கு) ஒரே இடத்தில் மூன்று முறை தோன்றி மறைவதாகவும், காட்சி தருவதாகவும் சொல்லி வருகின்றனர் நம்பிக்கையுடைய பக்தர்கள்.
 
இது பற்றி வெவ்வேறான கதைகள் உண்டு. கண்டமாலா மலை முகட்டில் முன்னர் ஒரு கோயில் இருந்ததாகவும்,அங்கிருந்து பக்தர்கள் மகரசங்கராந்தி நட்சத்திரத்திரத்தை ஜனவரி 14 இரவு 6.40 அளவில் கண்டு வந்தனர் என்றும் அதுவே பின்னர் மகர ஜோதியாக தற்போது காட்சி தருகிறது என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர். 
 
வேறு சிலரோ, பல வருடங்களுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த ஆதி வாசிகள் அந்த நாளில் ஏதோ காரணதிற்காக நெருப்பை மூட்டிய போது தெரிந்த வெளிச்சத்தைக் தற்செயலாக கண்ட சபரிமலைப் பக்தர்கள், அதுவே மகரஜோதி என்று சொல்லத் தொடங்கியதும், பின்னர் அதை தொடர்ந்து நிலைநாட்ட, ஆதிவாசிகள் விரட்டி அடிக்கப்பட்டு TDB, கேரள வனத்துறை,மின்சார துறை,காவலும் இணைந்து மகரஜோதி என்ற ஒரு ஜோதியை உருவாக்கி, பணத்தை மக்களிடம் இருந்து கொள்ளை அடித்து வருவதாகவும் வேறு சிலர் சொல்லி வருகிறார்கள்.
 
அதே சமயம், Kandararu Maheswararu Thantri, the traditional supreme priest at Sabarimala, மேலே சொன்ன எதையும் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை.அவர் மகரஜோதி என்பது நட்சத்திரம் என்றும்,மகரவிளக்கு அன்றைய தினத்தின் தீபாரதனை என்றும் கூறி வருகிறார்.அத்துடன் இந்துக்களின் புனிதத்தை கெடுக்கிறார்கள் என்றும்,அந்த ஜோதி ஒரு அற்புதம் என்றும் கூறுகிறார்.
 
இது பற்றி அந்த மலை அடிவாரத்தில் 30 வருடங்களாக வாழ்ந்து வரும் இலங்கையில் இருந்து வந்த முதியவர் சிவலிங்கம் என்பவர் வேறு விதமாக கூறுகிறார். குறிப்பிட்ட நாள் காலையில் ஜீப்பில் ஒரு சிலர் வருவதாகவும் அவர்கள் கற்பூரம் பாத்திரங்கள் கொண்டு வருவதாகவும்,அவர்களே இப்படி ஜோதியை ஏற்றி விட்டு பின்னர் சென்று விடுவதாகவும் கூறி,அவர்கள் ஜோதியை ஏற்றிக் காட்டும் காங்கிரீட்டில் ஆன ஒரு மேடையை நிருபர்களுக்கு காட்டுகிறார்.
 
இந்த மகரஜோதி என்பது என்ன? 
 
சபரிமலைக்கு எதிரே கொச்சுபம்பா அருகே உள்ள பொன்னம்பலமேடு மலைப்பகுதியில், ஜனவரி 14 ம் நாள் மாலை 6.40 மணி அளவில் தோன்றும் ஜோதியே அதுவாகும்.சபரிமலை போகும் பக்தர்கள் 41 நாட்கள் நோன்பிருந்து சபரிமலைக்கு செல்கின்றனர். அந்த ஜோதியை தரிசித்த பின் திரும்புகிறார்கள். இந்த நேரத்தில் தான் அதாவது தரிசனம் முடிந்து திரும்பும் போது ஏற்படும் சன நெருக்குதலின் போது தான் இப்படியான மனித அழிவும் விபத்துக்களும் நடந்து வருகின்றன.
 
இது பற்றி மலையாளி ஒருவர் கூறுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இந்த ஜோதி உண்மையல்ல என்பது மலையாளிகள் அனைவருக்கும் தெரியும் என்றும்,இந்த விபத்துக்களில் வழி காட்ட அழைத்து செல்லும் ஓரிருவர் தவிர, வேறு எந்த மலையாளியும் உயிரிழப்பதில்லை என்கிறார். காரணம் இது பொய்யானது என்பது அவர்களுக்கு தெரியுமாதலால் அங்கு செல்வதில்லை என்றும் கூறுகிறார்.
 
அப்போது ஏன் உண்மை இல்லை என்று தெரிந்தும் அற்புதம் என்று கூறி வருகிறார்கள்?
 
அதை தெரிந்து கொள்ளு முன்னர்,விபத்து பற்றி நீதிமன்றம் விசாரித்து என்ன முடிவு எடுத்தது என்பதை பார்ப்போம்.இந்த வழக்கு கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், கோபிநாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மகரஜோதி உண்மையானதா இல்லை மனிதனால் ஏற்றப்படுகின்றதா? என்ற கேள்வியை, நடந்த விபத்தை விசாரித்த நீதிமன்றம், கேரள அரசுக்கும்,கோயில் நிர்வாகத்திடமும் வைத்த போது.....................................
Some people mistakenly call the second light as Makara Vilakku, but Pandalam Palace has clarified, Makara Vilakku is the name of the festival itself, not the lights.
 
அந்த தீபம் மனிதனால் ஏற்றப்படுகிறது என்பதை கேரள அறநிலைத்துறையும்,கோயில் நிர்வாகமும் ஏற்றுக் கொண்டன.அப்போது நீதிமன்றம், சபரிமலை மகரஜோதி மனிதனால் ஏற்பாடு செய்யப்பட்டதா? என்ற கேள்வியை வைத்து, இந்த உண்மை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று, கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், கோபிநாத் ஆகியோர் உத்தரவிட்டனர்.
 
Kerala High Court had recently asked TDB to clarify whether the Makarajyothi is man lit light or celestial phenonemon, in the wake of the Pullumedu stampede in which 102 devotees died on Janauary 14 while returning after witnessing the jyothi. ,The TDB (Travancore Devaswom Board) President said “”It is known to everybody that Makara Jyothi is a fire lit up by men at Ponnabalamedu.
 
இது இங்குள்ள மக்களுக்கும் தெரிந்தது தான் என்றும் தெரிவித்தனர். இந்த உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நீதிமன்றம் உத்தரவு என்னாயிற்று?
 
இந்த மகரஜோதி அற்புதம் இல்லை,மனிதனால் ஏற்றப்படுகிறது என்பது தெரிந்திருந்தும் ஏன் வெளியிடவில்லை, மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்ற கேள்விக்கு வந்த பதில் ….......
 
வரும் பக்தர்கள் கூட்டம் குறையுமானால், பல இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர்,கோயில் வருமானம் குறைவடையும்,அதை நம்பி வாழும் விடுதிகள்,கடைகள்,உணவு விற்பனை,தொலைக்காட்சி ஒளிபரப்பு போன்றவை அனைத்தும் வருவாயை இழந்து பாதிப்புக்கு உள்ளாகும் என்பதுதான்.
…...... the thought of the millions in lost revenue for the Sabarimala temple – not only from the devotee-tourists’ lodging and food and transportation, but also the TV telecast rights on multiple networks! …........................
 
கிடைத்த மேலதிகத் தகவல்...........
 
சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம்; இக்குடும்பத்தின் பி.ரவிவர்மா சொல்கிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்தவேண்டும் என்று கூறி ஆள்களை அனுப்புவார்கள் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
 
அதாவது ஆதிவாசிகள் விரட்டி அடிக்கப்பட்டு TDB, கேரள வனத்துறை,மின்சார துறை,இணைந்து மகரஜோதியை உருவாக்கி பணத்தை மக்களிடம் இருந்து கொள்ளை அடித்தார்கள்.தற்போது நீதிமன்றம் தலையிட்ட பின்னரே அது மகர நட்சத்திரம் என்றும் வெவ்வேறான கருத்துக்களை சொல்லி வருகின்றனர், என்கிறார்கள்.
 
அவர் பெயர் கோபி. இவர் கேரள மின்துறையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அவர் பொன்னம்பலமேடு என்ற இடத்தில் சூடத்தைப் பானையில் நிரப்பி, அதை கொளுத்தி, கொழுந்துவிட்டு எரியச் செய்து மகரஜோதியை உற்பத்தி செய்து 10 வருடங்களாக காட்டி, இல்லை ஏமாற்றி வருகிறார். ஆனால் 1979 ல் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியலை,அந்த ஐயப்பனுக்கும் தெரியல............. என பிலிட்ஸ் ஏடு கூறுகிறது.
 
நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பின்னரே மெதுவாக, என் மனது தங்கம் என உண்மைகளை மெல்ல சொல்ல ஆரம்பித்தார்கள்....................ஆனாலும் இன்றும் கதை தொடரத்தான் செய்கிறது. 
 
இந்த ஆண்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் நடிகர்களுக்கும் கோயில் நிர்வாகம் விளம்பரம் கொடுத்தது. நடிகர் ஜெயராம் அதோ வணங்கிக் கொண்டிருக்கிறார் பின்னால் ஒரு இந்தி நடிகர் நிற்கிறார்.இவர்கள் எல்லோரும் இந்த ஜோதியை அற்புதம் என்று நம்பியே வந்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர்............என்று விளம்பரம் படு பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.........................................ஏன்? காசே தான் கடவுளப்பா,அது அந்தக் கடவுளுக்கும் தெரியுமப்பா................................
 
நம்பிக்கை தவறல்ல,அது ஏமாற்றாக இருக்கக் கூடாது என்பதே எனது நோக்கமாகும்.
 
நக்கீரன் இதழ் இது பற்றிய ஒரு காணொளியையும் முன்ன ரொரு முறை வெளியிட்டது என் நினைவுக்கு வருகிறது.
 
 
Under Creative Commons License: Attribution
 
 

அய்யப்பனுக்கு கூட்டம் சேர்க்க செய்யப்படும் ஒரு செப்படி வித்தையை அம்பலப் படுத்துகிறோம்.

 

மல்லிகைப்பூ விற்கவும், கருவாடு விற்கவும் தான் விளம்பரம் தேவையில்லை; ஆனால் கடவுள் வியாபாரம் செய்யக் கண்டிப்பாய் விளம்பரம் வேண்டும்.விளம்பரமில்லாமல் எந்தக் கடவுளாலும் வாழ முடியாது. இது ஆண்டாண்டு கால உண்மை. தேர், திருவிழா, பூஜை, புன°காரம், விரதம், நேர்த்திக் கடன், வேண்டுதல், படையல் இவையெல்லாம் இல்லாமல் எந்தக் கடவுளாவது உண்டா? இதையெல்லாம் விட கூட்டம் சேர்க்க கூடுதலாக அற்புதம் புரிந்ததாகக் கதைகள் பரப்பப் படும். அப்படி அய்யப்பனுக்காகப் பரப்பப்பட்ட புளுகுதான் மகரஜோதி.

பழனி மலையாண்டிக்கு தைப்பூசம் மட்டும் தான் வசூல். ஆனால் அய்யப்பன் வணிகர்களான, கேரளக்காரர்கள் ஆண்டுதோறும் மூன்று முறை பக்த சிகாமணிகளை வரவழைத்து கறந்து விட ஒரு ‘டெக்னிக்’ வைத்திருக்கிறார்கள். கார்த்திகை தொடக்கத்தில் நடைதிறப்பின் போது ஒரு முறை; மகர ஜோதி தரிசனம் என்று ஒரு முறை; ‘விஷீ’ என்று கூறி ஒருமுறை; இப்படி 3 தடவை வசூல் நடக்கிறது.

சபரிமலையில் பொன்னம்பலமேடு என்னும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் தானாகத் தோன்றும் ஜோதிதான், மகர ஜோதி என்னும் மகா அற்புதம் என ஒவ்வொரு ஆண்டும் ஒரு பித்தலாட் டம் நிகழ்த்தப்படுகிறது.முதலில் ஓர் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் ஒன்று தானாகத் தோன்ற முடியாது; அதற்கு வாய்ப்பே இல்லை. அப்படித் தோன்றுகிறதென்றால் அது நிச்சயம் மனித வேலையாகத் தான் இருக்கமுடியும். இதைக் கண்டுபிடிக்க கேரளப் பகுத்தறிவாளர் கள் முயன்று. அம்பலப்படுத்தினார்கள்.


“1925-க்கு முன்பாக பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு எனும் தெய்வீக ஒளி காட்சியளிப்பதாக வயதான பெரியவர்கள் யாரும் சொன்னதில்லை. 1940க்குப் பிறகே இந்தக் கதை பரவியது” என்கிறார் ஜோசப் எடமருகு. இவர் கேரளாவைச் சேர்ந்த இந்தியப் பகுத்தறி வாளர் சங்கத் தலைவர். பொன்னம்பல மேடு யாரும் ஏற முடியாத மலை என்று கூறுவது தொலைவிலிருந்து பார்ப்பவர்களால் நம்பக் கூடியது. ஆனால் பனி படர்ந்த அண்டார்ட்டிகாவிலும், இமயத்திலுமே மனிதன் சென்று விட்ட பிறகு இந்த மலையெல்லாம் மிகச் சாதாரணம் என்கிறார்கள் மலையேறும் மனிதர்கள். துளியும் பகுத்தறியாது எதையும் பக்திக் கண் கொண்டு மட்டுமே பார்க்கும் சபரிமலை சா°தாவின் ரசிகர்களால் இந்த மலையேற்றப் பயணத்தை உணர முடியாது. அதனால்தான் பொன்னம்பல மேடு கதையும் அவர்களால் நம்பப்படுகிறது.


பொன்னம்பல மேட்டின் மகரஜோதி எப்போது முதன்முதலில் அம்பலப்படுத்தப்பட்டது என்பதை சபரிமலை அய்யப்பன் - உண்மையும் கதைப்பும் என்னும் நூல் எடுத்துக் காட்டுகிறது.“1940-களுக்குப் பிறகு பரப்பப்பட்ட மகர விளக்கின் தெய்வீகக் கதையை முதன்முதலாக உடைத்துக் காட்டியவர் பகுத்தறிவாளர் சங்கத்தின் தீவிர பணியாளரான எம்.ஆர்.எ°. நாதன்தான். அவர் எழுதிய ‘சபரி மலையும் மகர விளக்கும் சூஷணோபாதிகள்’ என்ற நூலை 1974இல் நாங்கள் கோட்டயத்திலிருந்து வெளியிட்டோம். மேட்டில் மலைப்பண்டாரங்கள் வாழ்ந்திருந்தார்கள் என்றும் அவர்கள் தம்முடைய தேவைக்காக மாலை வேளைக்குப் பிறகு ஏற்றுகின்ற நெருப்பே சபரிமலையிலிருந்து பார்க்கும்போது காணப்படுகின்றது என்றும் அக்காலத்தில் எல்லோருக் கும் நன்கு தெரிந்திருந்தது. காடுகளில் அலைந்து திரிந்து காட்டிலுள்ள பொருள்களைச் சேகரித்து வாழ்க்கை நடத்திய இக்கூட்டத்தினர் சபரி மலைக் கோயிலின் சுற்றுப்புறங்களிலும் பற்பல காலங்களில் வாழ்ந்து வந்தனர். பொன்னம்பல மேட்டைத் தவிர மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த சமதளப் பகுதியான வரயாட்டுமேடு, அருணமுடி, குருநாதன் மண்ணு முதலிய இடங்களிலும் மேற்கூறிய மலைவாசிகள் கூட்டமாக வாழ்ந்தனர். ஆடை அணிதலிலும் பேச்சிலும் தமிழ் முறைகளுடனேயே இவர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.

அன்றெல்லாம் சபரிமலைக் கோயிலில் விழா நடை பெறும்போது மட்டும் பொன்னம்பல மேட்டில் ஒளி காணப்படவில்லை. சிறிதும் பெரியதுமான ஒன்றுக்கும் மேற்பட்ட தீப்பிழம்புகள் இரவின் பெரும்பாலான யாமங்களிலும் தெளிவாகவும் மங்கலாகவும் மேட்டில் காணப்பட்டது. பொன்னம்பல மேட்டில் மண்ணோடு மண்ணாகி விட்ட பண்டைக்கால கோயிலைப் பற்றிய விவரங்கள் மலைவாசிகளிடமிருந்து கிடைத்ததும் சா°தா வுக்கு மேட்டுடன் தொடர்பு உண்டென்று கதை புனையப்பட்டது. இந்தப் பொய்ப் பிரசாரத்துக்கு விளம்பரம் கிடைக்கத் தொடங்கியதும் கோயிலுக்காக சிலர் மேட்டிலுள்ள தீபத்தை உருவாக்கினர். மலைவாசிகளை மனமறிய நீக்கி நிறுத்திக் கொண்டு ஒரு பிரச்சார தந்திரம் என்ற முறையில் சில செல்வாக்குப் படைத்தவர்கள் தீபக் காட்சியினை ஏற்பாடு செய்தனர். மகர விளக்கு நாளில் மாலை நேரத் தில் (தீபாராதனை சமயம்) மட்டும் ஒரு தீப்பிழம்பினை ஏற்றுவது என்ற திட்டம் உருவானது. அதன் ‘தெய்வீக’மான அங்கீகாரத்திற்கு சபரிமலையில் பிரச்சார வேலையும் நடத்தினர். எனினும் மகர விளக்கு தவிர்த்த நாட்களிலும் மேட்டில் இரவு நேரங்களில் தீப் பிழம்புகள் காணப்பட்டன. சபரிமலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியுள்ள வயதான பக்தர்கள் இந்த உண்மையை ஒப்புக் கொள்கின்றனர்.

பொன்னம்பல மேட்டைச் சுற்றியுள்ள வனப்பிர தேசங்களையும் நிலைக்கல், ஆங்கு மூழி, சீதத்தோடு முதலிய கிழக்குப் பகுதியிலுள்ள காடுகளை அழித்தாலும் பொன்னம்பல மேட்டில் அடிக்கடி அன்னியர்கள் வருவதாலும் காலப்போக்கில் மலைப் பண்டாரங்கள் மேட்டிலிருந்து வெளியேறி விட்டனர். இதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் சந்தர்ப்பத்துக்கேற்றபடி திரித்து எழுதப் பட்டன. சுருக்கமாகச் சொன்னால் பழைய ‘மகர விளக்கு’, ‘மகர ஜோதி’ என்ற புதிய சிறப்புக்குக் காரணமானது. ‘பொன்னம்பல மேடு ஒருபோதும் செல்லமுடியாத இடமாக இருந்ததில்லை என்பது கவனிக்க வேண்டிய உண்மை. சபரிமலைக் கோயிலுக்கு வடகிழக்கேயுள்ள உப்புப்பாறை, படிஞ்ஞாறு பாறை (மேற்கு பாறை) ஆகிய மலைகளைக் கடந்து பச்சைக் கானத்தின் உள்ளேயுள்ள பாதையில் சிறிது தூரம் சென்ற பிறகு மேற்கு நோக்கி திரும்பினால் மேட்டை அடையலாம். இந்த ரகசிய பாதை வழியாக மேட்டுக்குச் சென்றுதான் தீபத்தை ஏற்றுவோர் முற்காலங்களில் தீப காட்சியைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தனர். சபரி மலையிலிருந்து மேட்டுக்கு நேராக பயணம் செய்து மேட்டை அடைவது பெரும் சிரமம். சபரிமலைக்கு நேராகவுள்ள மேட்டின் பகுதி அவ்வளவுக்குச் செங்குத்தாக உள்ளது. அடர்ந்து வளர்ந்த காட்டு மரங்களுக்கிடையே பயணம் செய்ய இயலுமென்றாலும், மேற்கூறிய காரணத்தால் இந்த வழியாக மேட்டை அடைவது சிரமம்தான். படிஞ்ஞாறு பாறை வழி யாகச் செல்லும் பயண தூரம் அதிக மென்றாலும் சிரமமின்றி மேட்டை அடைய முடியும்.“பதினெட்டாம்படி ஏறிச் செல்கின்ற திருவாபரணப் பெட்டியை மேல் சாந்தி (தலைமை பூசாரி) வாங்கி கோயிலிலுள்ள சிலைக்கு நகைகளை அணிந்த பிறகு தீபாராதனைக்காக நடை திறக்கும் பொழுது 21 சர வெடி முழங்கும். இந்தச் சரவெடியின் ஓசை மேட்டில் கேட்டவுடன் அங்கே இருப்பவர்கள் ஜோதியை ஏற்றுவார் கள். இதுதான் நடைமுறை வழக்கம். ஆனால், தொடர்ந்து செய்யும் வெடி வழிபாடுகளின் ஓசை காரணமாக பல ஆண்டுகளிலும் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாமலும் போனதுண்டு. திருவாபரணப் பெட்டி பதினெட்டாம்படியில் ஏறுவதற்கு முன்பாக மேட்டில் தீபம் உயர்ந்தது சில ஆண்டுகளில் விவாதப் பொரு ளாகவும் ஆனது.”-இப்படித்தான் மகரஜோதியைப் பரப்பியிருக்கிறார்கள்.கேரளப் பகுத்தறிவாளர்கள் மகர ஜோதி தீபக் காட்சியை அரங்கேற்று வதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என தொடர்ந்து முயன்று வந்துள்ளனர்.

எம்.ஆர்.எ°. நாதன் சொல்கிறார்: 1973 ஜனவரி 13ஆம் தேதி பத்தனம்திட்டையிலிருந்து வாங் கிய சில வெடிப் பொருள்களுடன் கொல்லம் - கக்கீ (பம்பை) ஃபா°ட் பாசஞ்சரில் பம்பை அணைக்குப் பயணமானேன். அன்று என் துறை யைச் (Kerala State Electricity Board) சேர்ந்த நண்பர்களுடன் பம்பையில் தங்கினேன். மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு சில நண்பர்களுடன் பொன் னம்பல மேட்டுக்குப் பயணமானேன். பம்பை - வண்டிப் பெரியார் பாதை யில் 2 கி.மீ. சென்று கொச்சு பம்பையை அடைந்தோம்; கொச்சு பம்பையிலி ருந்து கிழக்கு நோக்கி மின்வாரியம் அமைத்த ஜீப் பாதை வழியாக 4 கி.மீ. பயணம் செய்து மேட்டுக்கு அருகில் சென்றடைந்தோம். ஜீப் பாதை முடிவடைகின்ற பகுதி ஏ-பாய்ண்ட் (A Apoint) என்றழைக்கப்படுகின்றது. ஜீப் பாதையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மலைமீது ஏறி மேட்டின்மீது மாலை 4.40 மணிக்கு சென்று சேர்ந்தோம். மின் வாரிய ஊழியர் களையும் வனக் காவலரையும் தவிர, திரு. கடக்கல் ராகவன் பிள்ளையின் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட ‘பரம பக்தர்களும்’ மேட்டில் இருந்தனர். வெடிப் பொருள்களையும் எண்ணெய் பந்தங்களையும் அவர்களும் தேவையான அளவுக்குக் கொண்டு வந்தனர். “பொன்னம்பல மேட்டை சுற்றிப் பார்த்த பிறகு நாங்கள் அனைவரும் பாறைக்கு அருகே குழுமினோம். எங்களுக்கு அறிமுகமில்லாத பலரும் அங்கே இருந்தனர். சபரிமலையிலுள்ள பக்தர்களுடைய சரண கோஷம் இரைச்சல் போல காதில் வந்து மோதியது. நாங்கள் தொலை நோக்கியைப் பயன்படுத்தி சபரி மலைக்கோயில் வளாகத்தைக் கவனித்தோம். கோயில் வளாகம் படிப்படியாக புகை வளையங்களால் மூடப்பட்டது. சபரிமலையிலுள்ள வெடிகளின் ஓசை எப்பொழுதும் கேட்டுக் கொண்டேயிருந்தது. கடைக்கல் குழுவினர் ஒலி பெருக்கியின் வழியாக பக்திப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். பாறைகளுக்கிடையே வேலிபோல நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் பந்தங்களுக்கு தீ கொளுத்தப்பட்டது.


கம்பக் கட்டு வெடிக்கான பொருள்களனைத்தும் தயாராக்கப்பட்டன. அ°தமன சூரியனின் செங்கதிர் களால் சூழப்பட்டிருந்த பொன்னம்பல மேடு படிப் படியாக இருளில் ஆழ்ந்தது. எண்ணெய் பந்தங்கள் தெளிவாக ஒளிர்ந்தன. பெரிய பந்தங்கள் சுடர்விட்டு எரிந்தன. அகில இந்திய வானொலி நிலையத் தோழர் நேர்முக வருணனையில் கூறியது ஏறத்தாழ பின்வருமாறு அமைந்திருந்தது: ‘பொன்னம்பல மேட்டில் இதோ மகர ஜோதி தோன்றியிருக்கின்றது. எவ்வளவு அற்புதகரமான காட்சி. பக்தர்கள் எல்லாவற்றையும் மறந்து அய்யப்பனின் புகழைப் பாடுகின்றனர்; சரண கோஷமிடுகின் றனர். பொன்னம்பல மேட்டில் ஒரு தீபம் அல்ல, ஒன்றுக்கும் அதிகமான தீபங்கள் இப்பொழுது காட்சி யளிக்கின்றன. தீபங்களுடைய ஒரு வரிசையே இப் பொழுது காணப்படுகின்றது. அது ஓர் ஒளிவட்டம் தான்; வருணனைக்கு அப்பாற்பட்ட ஒளிவட்டம்; பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கின்ற தெய்வீக ஒளி!’


“அய்யப்ப பக்தர்களுடைய சரண ஒலியின் ஆரவாரம் ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்தச் சமயத்தில் எங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் ஒரு எவர்சில்வர் தட்டு நிறைய கற்பூரத்துடன் முன்னோக்கி வந்து கற்பூரத் துக்கு தீ கொளுத்தினார். அவருடைய வசதிக்காக நாங்கள் விலகி நிற்க வேண்டும் என்ற உத்தரவும் வந்தது. ஒளியினால் பந்தத்தை மங்கச் செய்த இந்த தீபம், சபரிமலையில் மிகவும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அதற்கேற்ற வருணனையும் கூச்சலும் வானொலியில் கேட்டன. ஜோதி ஓர் ஏமாற்று வேலையே என்பதை பக்தர்களுக்கு அறிவிக்க தகுந்த தருணம் அதுதான் என்று நாங் கள் முடிவெடுத்தோம். கம்பக் கட்டுகளை அகற்றுவதற்காக வந்தவர்களைத் தந்திரமாக தடுத்தபடி கம்பக் கட்டுக்கு தீ கொளுத்த உத்தரவிட்டோம். வாணங்கள் வானில் சீறிப் பாய்ந் தன. ஜோதி வானில் உயர்வதாக வும் அது வானில் பல நிறங்களை அடைவதாகவும் வானொலியில் கேட்டது. பிறகு அறிவிப்பாளர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. நாங்கள் குலுங்கி குலுங்கி சிரித்தோம். அதைத் தொடர்ந்து மேட்டையே நடுங்க வைத்த ஒரு பெரிய கம்பக் கட்டி வெடி வெடித்தது. தீ விபத்து உண்டா காமல் இருப்பதற்காக வனக் காவலர்கள் அங்கெல்லாம் ஓடி நடந்து தீயை அணைத்தனர். மகர ஜோதியை முறியடிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்மையில் கடைக்கல் குழுவினரிடம் இல்லை. ஒரு சாகசப் பயணம் என்ற முறையில் மேட்டை அடைந்த அவர்கள் விரத நியதிகளோடு வந்த அய்யப்ப பக்தர்கள்தான். அவர்கள் தங்களுடைய பயணத்தின் குறிக்கோளை முதலிலேயே வெளிப் படுத்தவும் செய்தனர். எங்களுடைய ஆர்வத்துக்கு அனுமதியளித்து தீப காட்சியை அலங்கோலப்படுத்துவதில் அவர்களும் பங்கேற்க நேர்ந்துவிட்டது. மகர ஜோதி இவ்வளவு காலமும் ஒரு மோசடி வேலை தான் என்று தோன்றியதால் தான் அகில இந்திய வானொலி நிலைய வருணனயாளர் ஒலிபெருக்கிக் கருவியை நண்பரிடம் கொடுத்துவிட்டு விலகியிருக்க வேண்டும். புதிய வருண னையாளர் ஒரு சாட்சியைப் போல் நின்று ஏதேதோ வார்த்தைகளை உதிர்த்தாரே தவிர ஜோதியைப் பற்றியோ மேட்டைப் பற்றியோ ஒரு வார்த்தை பேச வில்லை.

மூடநம்பிக்கையாளர்களுடைய சரண கோஷம் நின்றுவிட்டதால் அவர்கள் ‘மனக் குழப்ப’மடைந் திருப்பதாக நாங்கள் புரிந்து கொண்டோம். இதை எழுதுபவரின் லட்சியமும் அதுவாகத்தான் இருந் தது. வனக் காவலர்கள் பரி மாறிய சர்க்கரைப் பொங்கலை உண்டபிறகு நாங்கள் மேட்டிலிருந்து இறங்கி பம்பைக்குச் சென்றோம்.”(எம்.ஆர்.எ°. நாதன்,‘சபரிமலையும் மகரவிளக்கும் சூஷணோபாதிகள்’ பக். 8-20)கேரள பகுத்தறிவாளர்கள் மகரஜோதி மடமையைத் தோலுரித்த போதும் அய்யப்ப சேவா சங்கமும் தேவ°வம் போர்டும் பொய்ப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
1983-ல் ஒரு முறை 150-க்கும் அதிகமான பகுத்தறிவாளர்கள் பொன்னம்பல மேட்டிற்குச் சென்றனர். அப்போது அவர்களை காவல் துறையின் கடுமை யாகத் தாக்கினார்கள். பின்னர் காவல் துறையினர் உதவியுடன் மகர ஜோதி ஏற்றப்பட்டது என்கிறார் ‘ரணரேகை’ பகுத்தறிவு மாத இதழ் ஆசிரியர். கல்லி யூர் பிரசன்னராஜ். இவர் தனது இதழில் மகர ஜோதியை அம்பலப்படுத்துவதற்காக பொன்னம்பல மேடு சென்று வந்த விவரங்களை விரிவாக எழுதியிருக்கிறார்.

சிறு சிறு குழுக்களாகச் சென்ற பகுத்தறிவாளர்கள் காவல் துறையினரின் கட்டுப்பாடுகளை மீறி பொன் னம்பல மேட்டை நோக்கி நடந்தனர்.“சபரிமலைக்கு நேராக பொன்னம்பல மேட்டில் சற்று விலகி நிற்கின்ற ஒரு பாறையின் மீதுதான் எல்லா ஆண்டும் மகர ஜோதியை ஏற்றிக் காட்டுவார்கள் என்பதை அறிந்திருப்பீர்களல்லவா? கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஓட்டுநராகப் பணி யாற்றும் கோபி என்பவர்தான் ஜோதியை ஏற்றினார். ஆனால், கடந்த ஆண்டு கோபி வரவில்லை; இன்னொருவர் தான் ஏற்றினார். இந்த ஆண்டு கோபி தான் ஏற்றினார். மகரஜோதியை ஏற்ற வேண்டிய நேரமானதும் எங்கள் பக்கத்தில் சில காவலர்கள் மட்டுமே நின்றனர்; மற்றவர்கள் ஜோதியை ஏற்ற வேண்டிய பகுதிக்குச் சென்றனர். 150-க்கும் மேற்பட்ட பகுத்தறி வாளர்களைத் தவிர பம்பை - கொச்சு பம்பை வாசி களும் காவல் துறையினரும் உள்பட 250 பேர் அங்கே இருந்தனர். வழக்கத்துக்கு மாறாக இந்த முறை பெண்களாக அங்கேயிருந்தவர்கள் வண்டிப் பெரியாரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மனைவியும் மகளும்தான்.


“ஜோதியை ஏற்ற வேண்டிய நேரமானதும் சபரிமலையிலிருந்து சிக்னல் விளக்கு மேட்டினை நோக்கி மின்னியது. அப்பொழுது முதலிலேயே தயா ராக வைக்கப்பட்டிருந்த கற்பூரத்தைக் கொளுத்தி உயர்த் திக் காட்டி விட்டு தாழ்த்தினர். உடனே வானொலியிலி ருந்து பின்வருமாறு வருணனை கேட்டது: ‘இதோ மகரஜோதி காணப்படுகின்றது; அந்த மகரஜோதி மத்தாப்புப் போல உயர்ந்தபின் தாழ்ந்துவிட்டது’.


“இரண்டாவதாகவும் கற்பூரத்தைக் கொளுத்தி உயர்த்தியபோதிலும் அது உடனே அணைந்து விட்டதால் வருணனையில் எதுவும் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். மூன்றாவது முறையாக கற் பூரத்தை உயர்த்திய பொழுதுதான் மீண்டும் வருண னையில் ‘அதோ ஜோதி மீண்டும் உயருகின்றது; மக்க ளனைவரும் கைகூப்பி வணங்குகின்றனர்’ என்று கேட்டது.‘அவ்வாறு மூன்று முறை மகர ஜோதியைக் கொளுத் திக் காட்டிய பின்பு இந்த ஆண்டிலுள்ள மகர ஜோதி மோசடி முடிவுற்றது. அவர்கள் பொன்னம் பலமேட்டிலிருந்து கீழே இறங்கினர். அவர்கள் அனைவருக்கும் பின்னால் வரிசையாகச் செல்லும் படி எங்களிடம் காவல்துறையினர் சொன்னார்கள். எங்களுக்குப் பின்னால்தான் காவல் துறையினர் வந்தார்கள்’ (மகரஜோதி° தட்டிப்பும் பொன்னம் பல மெட்டிலே போலீ° மர்த்தனமும், பக். 10-20)இவ்வாறு காவல்துறையினரின் உதவியுடன் தான் இப் பொழுது பொன்னம்பல மேட்டில் மகர விளக்கை ஏற்றுகின்றனர். ‘மனித’ பாதச்சுவடு படாத இடத்தில் அற்புதமாக காட்சியளிக்கின்ற மகர விளக்கு’ என்ற கதை முழுமையாக முறியடிக்கப்பட்டுவிட்டது.


1990ஆம் ஆண்டு பகுத்தறிவாளர்களின் உண்மை விளக்கப் பேரணி தொடர்பான பிரச்சினையின் போது, அன்றைய கேரள முதலமைச்சர் ஈ.கே. நாயனார், “தேவ°வம் போர்டுதான் மகரஜோதியை ஏற்றுகின்றது என்பது தெளிவாகத் தெரிந்த விஷயம்தான், பகுத்தறிவாளர்கள் பொன்னம்பல மேட்டிற்குச் செல்லும் பேரணியை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.


கடவுளின் பெயரால், ஒரு புரட்டு காலம் காலமாக நடந்து வருகிறது. அதை ஆதாரபூர்வமாக பகுத்தறிவாளர்கள் நிரூபிக்கிறார்கள். இதற்குப் பின்னும் சபரிமலை சா°தாவை நோக் கிச் சென்று தம் பொருளையும், அறிவையும் இழக்கும் பக்தர்களை என்னவென்பது?

Source: Unmaionline

 

http://arivagam.blogspot.ch/2006/12/blog-post_11.html


Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி ஆதவன்.. சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்தும் நிறையப்பேர் போகிறார்கள். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி ஆதவன்.. சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்தும் நிறையப்பேர் போகிறார்கள். :huh:

 

ஒரு விமானத்தில் அரைவாசிக்கும்  மேற்பட்ட இருக்கைகளுக்கு இங்கிருந்து எல்லாம் புக்கிங் இருக்கு அண்ண...

Link to comment
Share on other sites

ரொரோன்டோவில் இருந்துதான் நிறைய ஆட்கள் போவார்கள் போல இருக்கு, 5 வருடங்களுக்கு முன் டிசம்பர் 31 ம் திகதி இரவு விமானத்தில் நான் ரொரோண்டோ இல் இருந்து பிராங்போர்ட் வந்தேன். அந்த விமானத்தில் கிட்டதட்ட 150 மேற்பட்டவர்கள் வந்தார்கள் இந்தியா போக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்துவீட்டு ஜோதியை பார்த்தால் நன்மை உண்டு, மகரஜோதியை பார்த்தால் என்ன நன்மை?:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.