Jump to content

விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்துடிப்பு நிமலராஜன்..!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்துடிப்பு ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜன்..!!

விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்தில் வலிப்பெடுக்கின்ற உணர்வுத் துடிப்புக்களை தன்னின மக்களின் செனநயக, சுயநிர்ணய அரசியல் அபிலாசைகளை இயங்கியல் நிலையில் கருப் பொருளாகக் கொண்டு பேனா எடுத்து யதார்த களமுனையில் சிங்கள பேரினவாத கருத்தியலுக்கு எதிராக தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பிய உன்னத ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜனின் 6வது நினைவுதினம் இன்றாகும்.

இவன் மரணிக்கவும் இல்லை, மண்ணாகவும் இல்லை ஈழவிடுதலைப் போராட்டவியலில் தன்னை முழுமையாக அர்பணித்து தன்னின மக்களின் விடியல்களுக்காக எத்தனை இரவுகள் கண்விழித்திருக்கின்றான்.

ஒரு பேனாப்போராளி அடக்கி ஒடுக்கப்பட்டு எந்தவித உரிமைகளும் கொடுக்கப்படாமல் துன்புறுத்தப் பட்டுக் கொண்டு இருக்கும் தன்னின மக்களின் நியாயப்பாடுகளை உலக அரங்கில் ஆற்றுகைப்படுத்த முனைகின்றான்.

சிங்கள வல்லாதிக்க சத்திகளில் திட்டமிட்ட இனப் படுகொலைகளையும், அவர்களின் அரசியல் அசிங்கங்களையும் வெளியுலகத்திற்கு வெளிப்படுத்தி மனித குலமீட்புக்காக அயராது போராடுகின்றான்.

ஊடகவியலாளன் நிமலராஜன் சத்தியத்தின் வேள்ளியில் சரித்திர நாயகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான். இவன் கடந்து வந்த பாதைகளின் சுவடுகளை மீட்டுப் பார்போமானல்… செம்மணிகளில் எங்கள் பிஞ்சுகள் சிங்கள காட்டுமிராண்டிகளினால் கதற கதறக் கற்பலிக்கப்பட்டு குற்றுயிராய் புதைகுழிக்குள் புதைக்கப்பட்ட துன்பியல் நிகழ்வினை சர்வதேசத்திற்கு வெளிச்சமிட்டுக்காட்டியவன்.

சிங்கள கூலிப்படைகளின் ஈவிரக்கமற்ற செம்மணிப் படுகொலைகளையும் பலமனிதப் புதைகுழிகளையும், தோண்டி எடுக்கப்பட்ட சடலங்களையும் நீதியின் முன் நிறுத்திய பெருமை இவனையே சாரும்.

விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுந்த காலத்தில் இடம் பெற்ற போராட்டங்களையும், களமுனை வீரசாதனைகளையும் தமிழ்மக்களின் உள்ளக்கிடக்கைகளையும் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டினான்.

அத்தோடு நின்றுவிடாமல் எமது போராட்டத்தின் நியாயங்களை தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற எம் இன உறவுகளுக்கு உறவுப்பாலமாக திகழ்ந்தான்.

யாழ்ப்பாணத்தில் சிங்கள ஆக்கிரமிப்பு படைகளினால் அரங்கேற்றப்பட்ட வன்முறைகளையும், கொலை வெறியாட்டங்களையும் நிமல் மும் மொழிகளில் புலமை சார்ந்தவனாக இருந்ததினால் பி.பி.சி ஊடகத்தினுடாக சர்வதேச அரங்குகளில் ஓங்கி ஒலிக்கச் செய்தான்.

மானிட இருப்பிற்கான தேடல்கள் முற்றாக முடக்கப்பட்டு மனித நேயத்தையும், மாண்பினையும் சிதைத்து தமிழர்களின் பிணத்தின் மேல் ஆட்சிசெய்து கொண்டிருக்கும் இரத்த வெறிபிடித்த சிங்களப் பேரினவாதத்தின் இரத்த களைபிடித்த பற்களை பிடுங்கி எடுத்தான்.

தமிழ் சமூகத்தை அதனுள் இயல்பாகக் காணப்படும் முரண்பாடுகளை கூர்மை அடையச் செய்வதன் மூலம் அடக்கி ஆளலாம் என நவீன சிங்களப் பேரினவாதிகள் நம்புகின்றார்கள்.

தமிழ் மக்களை பட்டி தொட்டியெங்கும் இன்று அரசியல் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எம்முன் உள்ள மாபெரும் வரலாற்றுக் கடமையாகும்.

என்ற நிலைப்பாட்டினை கொண்டு இருந்தான் நிமலராஜன். பல்துறைசார்தவர்களுடன் தனது நட்பினை ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் கருத்தியல்களை செவிமடுத்து தமிழின விடுதலை பற்றி சிந்திக்கதலைப்பட்டான்.

காலத்தின் தேவைகருதி எதிர்காலக் கனவுகளை மறந்து ஒட்டுமொத்த தமிழ் இனத்தினுடைய எதிர்பார்ப்புக்களை தன் கண்முன் நிறுத்தினான்.

நிமலுடைய தேசியப்பற்றும், புலமைசார்ந்த ஆழமான அரசியல் அறிவையும், ஊடகப்பலத்தையும் சிதைப்பதன் மூலம் தமிழ் மக்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்கிவிடலாம் என்ற திட்டம் சிங்கள புலனாய்வாரள்களின் மூளையின் நரம்புகளில் தட்டுப்பட்டது.

சிங்களப் பலனாய்வாரள்கள் தமிழ் தேசியத்தின் இருப்பிற்கு சவால் விடத் தொடங்கினார்கள்.

இதற்கான திட்டதை நடைமுறைப்படுத்துவதற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (ஈ.பி.டி.பி) தெரிந்து எடுத்தது அவர்களிடம் தமிழ் தேசிய குரல் வலையை அறித்து எறியும் படி சொல்லப்பட்டது.

குறுகிய அரசியல் நலன்களுக்காக விலைபோகும் நயவஞ்சகர்களின் நாசகார கொடூர வெறியாட்டம் 2000.10.19அன்று அதிகாலைப் பொழுது யாழ்ப்பாணம் ஊரடங்கினால் முழ்கியிருந்த சமயத்தில் இயந்திரத் துப்பாக்கியுடன் நிமலின் வீட்டுக்குள் நுளைந்து நிமலை நோக்கி சமாரியாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டது நிமல் இரத்தம் தேய்ந்த உயிரற்ற உடலாய் தரையில் விழுந்து கிடந்தான்.

செய்தியே சுவாசமாய் வாழ்ந்தவன் சுவாசம் இன்றி கிடந்தான்.

இவன் மனைவியின் கண்கள் குவலை மலர்கள் இல்லை குங்குமம் கரைந்ததால் குமுறிய கண்ணீர் தடாகங்கள், தாலி இழந்த கழுத்துக்கள், பூவை மறந்த கூந்தல்கள் காதோரம் பாடும் மௌமொளிகள் ஆயிரமாயிரம்…

நிமலின் இரத்தத்தில் குளிர்காய்ந்த சிங்கள தேசம் இவனைத் தொடர்து பலதேசிய உணர்வாரள்களையும், ஊடகவியலாளர்களையும் அழிக்கத் தொடங்கியது ஜி.நடேசன், டி.சிவராம் (தராக்கி), ச.சுகிதராஜ் , சி.சிவமகாராஜா எனத்தொடர்ந்து கொண்டே போகின்றதைக் காணக்கூடியாதக இருக்கின்றது.

சிங்கள மேலாண்மைவாதிகளின் கருத்துப்படி தமிழின உணர்வாளர்களின் கருத்தியல்களில் கத்தி வைப்பதன் மூலம் அவர்களுக்கிடையிலான கூட்டுணர்வைத் தகர்க முடியும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டு இருக்கின்றார்கள்.

இலங்கையின் கருத்தியல் வலுச் சமநிலை தமக்குச் சார்பாக இருக்கின்றது என சிறிலங்கா அரசும் அதன் பின்னிற்கும் சிங்கள பௌத்த மேலாண்மையாளரும் திடமாக நம்புவார்களேயானால் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை காண பின்னடிப்பார்கள் என்ற உண்மை தெளிவாகின்றது.

நிமல்ராஜன் பாடுகொலை தொடர்பான வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

இச்செயற்பாடனது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திடையேயும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்த செய்யப்படவேண்டும் குற்றவாளிகளுக்கான தண்டணை வழங்குவதன் மூலம் இனியும் இவ்வாறான பாடுகொலைக்கலாச்சாரத்தை தடுக்கமுடியும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்பாகக இருக்கிறது.

ஜெ . டானியல் ( யாழ்ப்பாணம் ) கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை.

http://www.nerudal.com/content/view/3061/38/

Link to comment
Share on other sites

nimalarajan.jpg

* ஏன், புலத்தில் இருக்கும் எம்மவர்களால், இந்த ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை?

* கொலையாளி இன்னும் லண்டனில் ஒழிந்திருப்பதை, ஸ்கொட்லண்ட்யாட்டுக்கு, ஏன் காட்டிக் கொடுக்க முடியவில்லை?

* எம்மால், அங்கு பலியாக்கப்படும் ஊடகவியலாளர்களின் உயிர்களைத்தான் காப்பாற்ற முடியாது, ஆனால் அக்கொலையாளிகள் எம்மத்தியில் ஒழிந்திருப்பதையாவது தடுக்க முடியாதா?

* இலங்கையிலுள்ள கொலையாளிகளைத்தான் நாம் சட்டத்தின் முன் கொணர முடியாது, இங்குள்ள, இக்கொலையாளியை சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டிக்க வேணும். அதற்கு நாம் என்ன முயற்சி எடுத்தோம்?

* எம்மவர் மத்தியில் கதிரைகளுக்காகவும், பெயர்களுக்காகவும் செயற்படும் மனிதவுரிமைவாதிகள் எங்கே?

இதை நாம் செய்யத் தவறுவோமாயின் வரலாறு எம்மை மன்னிக்காது!

Link to comment
Share on other sites

இதை பகிரங்கமாக நிதர்சனம் வெளியிட்டது இருந்தும் என்ன நடந்தது....???

உலகம் ஓமையானது...??ஃ

சிறந்த ஒரு ஓடாக தர்ம வாதியை..இழந்தது தான் மிச்சம்...

இதற்கு தீர்வு யாரல் வழங்க முடியும்....???

கண் முண்ணே விடை கண்டு படி தமிழா....

இரந்தும் அந்த உண்ணத போராளிக்கு என் நினைவாஞ்சாலிகள்....

உந்த பி.பி.சி. என்ன செய்தது....???

எல்லாம் கண் துடைப்பு...தங்கட கடை வியாபாரம் போனால் சரி...அப்படித்தான்..இன்றும் பல நடக்குது...

எவர் இறந்தால் அவருக்கு என்ன....???

ம்..ம்..ம்...

நன்றி

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

இலங்கையில் பிபிசியின் செய்தியாளர் கொலை செய்யப்பட்டு ஆண்டுகள் ஆறு ஆகின்றன

நீதி கிடைக்காத நிமலராஜன்

இலங்கையில் ஆறு வருடங்களுக்கு முன்னர், சரியாக இதே நாளில் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜனின் மரணம் தொடர்பான விசாரணையை, இலங்கை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று, ஆர்.எஸ்.எப் எனப்படும் பத்திரிகை சுதந்திரத்துக்காக செயற்பட்டுவரும் சர்வதேச அமைப்பான, எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கேட்டுள்ளது.

நிமலராஜனின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை நீதிக்கு முன்பாக கொண்டுவருவதை, இலங்கை பொலிஸாரும் மற்றும் சில நீதிபதிகளும் நிறுத்த முயற்சி செய்ததாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கின் அனைத்து சந்தேக நபர்களும் அரசாங்க ஆதரவு தமிழ் கட்சி ஒன்றைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் வவுனியாவில் உள்ள நீதிமன்றத்தால், 2003இல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

nfq9.jpg

ஆனால் வழக்கு இன்னமும் முடியவில்லை.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

ஆனா இவன் எங்கு இருக்கான் என்று பிபிஸிக்கு தெரியாதோ :P :P

Link to comment
Share on other sites

கொலையாளி இன்னும் லண்டனில் ஒழிந்திருப்பதை, ஸ்கொட்லண்ட்யாட்டுக்கு, ஏன் காட்டிக் கொடுக்க முடியவில்லை?

காட்டி கொடுத்து பிறகு? :roll: :roll: :roll: :roll:

கொல்லப்பட்டவர் புலிகளுக்கு எதிராக செய்தி சொல்லி இருந்தால் கொலையாளிகளை கண்டு பிடிப்போம் என்று அடம் பிடிபோம் :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிமலராஜன் வழக்கு விசாரணை: சர்வதேச ஊடக அமைப்பு கடும் அதிருப்தி யாழ்ப்பாணத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட பி.பி.சி. ஊடகவியலாளர் நிமலராஜன் வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்காதது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மீது சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

அந்த அமைப்பின் அறிக்கை:

யாழ்ப்பாணத்தில் 2000 ஆம் ஆண்டு தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசாங்க ஆதரவுக் குழுவான ஈ.பி.டி.பி.யினருக்கு எதிரான நீதித்துறை நடவடிக்கைகளை சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் சில நீதிபதிகள் திட்டமிட்ட முறையில் சீர்குலைத்துள்ளனர்.

பி.பி.சி. சர்வதேச சேவையின் ஊடகவியலாளரான நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சென்றுவிட்ட பின்னர் கொலையாளிகளை தண்டிக்க முயற்சிக்கவில்லை.

அண்மையில் சிறிலங்கா சென்றிருந்த சர்வதேச ஊடக சுதந்திரத்துக்கான குழுவினரிடமும் இதுபற்றி பாதுகாப்பு பேச்சாளரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல உறுதியும்கூட அளித்தார்.

ஒக்ரோபர் 19 ஆம் நாள் நிமலராஜனின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரமானது சவாலுக்கு முகம் கொடுக்கும் காலம் இது. உதயன் நாளிதழின் மூவர் உட்பட மூவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறிலங்கா அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாண நகரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதல்கல் சிலவற்றில் அதே ஈ.பி.டி.பி.யினர் மீது மீண்டும் குற்றம்சாட்டப்பட்டது.

நிமலராஜவன் வழக்கில் கைது செய்யப்பட்ட ஈ.பி.டி.பி. சந்தேக நபர்கள் 2003 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுவிட்டனர். மேலும் சந்தேக நபரான நெப்போலியன் என்ற செபஸ்தியான் ரமேசிடம் ஒருபோதும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவில்லை. சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்கள் மற்றும் கைரேகைகளையும் சிறிலங்கா காவல்துறையினர் முக்கியமானதாகப் பாவிக்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Six years of impunity in murder of BBC journalist

Police and some judges deliberately sabotaged and then blocked judicial steps against members of the pro-government EPDP party implicated in the murder in 2000 of Tamil journalist Mayilvaganam Nimalarajan at his home in Jaffna, northern Sri Lanka, said Reporters Without Borders

The result has been that six years after the death of the BBC World Service journalist, his killers have still not been tried or punished, said the worldwide press freedom organisation, calling on the government to reopen the investigation into his death.

This was the promise made recently by the government spokesman on defence matters, Keheliya Rambukwella, to the international press freedom mission to Sri Lanka, it said.

This sixth anniversary of the cowardly murder of the Tamil journalist on 19 October 2000 comes at a particularly challenging time for press freedom in Jaffna. Four media workers, three of them working for the newspaper Uthayan, have been killed since the start of the year in this town which is held by government troops. Members of the EPDP are again suspects in some of these attacks.

All the suspects in the Nimalarajan case, members of the EPDP, were released in 2003, by a court in Vavuniya in the north of the country. Moreover the Criminal Investigation Department (CID) never managed to interview one of the suspects, Sebastianpillai Ramesh, better known as "Napoleon". Police never seriously made use of the physical evidence, including cartridge cases and fingerprints.

http://www.rsf.org/article.php3?id_article=19344

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...imalrajan.shtml

கேடு கெட்ட தமிழோசை!

இதோ மேலுள்ளது சிங்கள சேவையில் பிரசுரித்திருக்கிரார்கள். அதில் நிமலராஜனின் கொலையாளிகள் யாரென மிகத் தெளிவாக அடையாளம் காட்டியிருக்கிறார்கள். ஆனால் தமிழோசையோ, தனது செய்தியாளனின் கொலையை எப்படி மூடி மறைப்பதென்று தவிப்பது போல் தெரிகிறது.

தமிழோசைக்கு ....

1) யார் நிமலராஜனைக் கொன்றதென்று தெரியாதா?

2) இக்கொலையின் சூத்திரதாரி டக்லஸ் என்று தெரியாதா?

3) கொலையாளி லண்டனில் ஒழிந்திருப்பது தெரியாதா?

இல்லை, தம் எஜமானர்களின் வேண்டுகோலுக்கு, நடனம் ஆடுகிறார்களா? இன்று தமிழோசையில் தாம் ஊடகவியளாலர் என்று கூறி ஆக்கிரமித்திருக்கும் கும்பல், உதை விடுத்து விபச்சாரிகளாக இருந்தாலும் நால்வர் மதிப்பார்கள். இவர்கள் விபச்சாரிகளை விட கேவலமானவர்கள்!!! :idea:

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.