Jump to content

ஈழத்து முன்னோடி எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி – எஸ்.பொ

ஜெயமோகன்

spo87988784654.jpg

ஈழ இலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான எஸ்.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நவம்பர் 26-ஆம் தேதி இரவு 11 மணிக்கு காலமானார். அவருக்கு என் அஞ்சலி.

ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் எஸ்.பொ. அன்று ஈழ இலக்கியத்தை மூடியிருந்தது கைலாசபதி, சிவத்தம்பி இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்தின் முன்வடிவம். அதுவன்றி வேறு எழுத்தே இல்லை என்ற நிலை. அதையொட்டி செய்யப்பட்ட போலி எழுத்துக்களின் பெருக்கத்தை மீறி உண்மையான உணர்ச்சிகள் இலக்கியத்தில் இடம்பெறவே முடியாத சூழல். இடம்பெற்றாலும் அவை ‘அரசியல்சரி’ களைக் கொண்டு அடித்து நொறுக்கப்பட்டன.

மறுபக்கமாக ஒலித்த குரல் மு.தளையசிங்கத்துடையது. ஆனால் அவர் விரைவிலேயே இலக்கியத்தில் இருந்து விலகி சர்வோதயம், தீண்டாமை ஒழிப்பு, ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். அத்தருணத்தில் எழுந்த படைப்பாளியின் குரல் என எஸ்.பொவை சொல்லலாம். இடதுசாரிகள் இலக்கியத்தை அரசியல்பிரச்சாரமாக ஆக்க முயன்றதற்கும் அவர்களின் அரசியல்சரி சார்ந்த ‘ரேஷன்கார்டு விமர்சனத்துக்கும்’ எதிராக எஸ்.பொ தீவிரமாகப் பேசினார். புதிய படைப்பாளிகள், வாசகர்கள் நடுவே அலைகளை உருவாக்கினார்.

யாழ்ப்பாணம் அருகே நல்லூரில் பிறந்த எஸ்.பொ சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். இலங்கையிலும் நைஜீரியாவிலும் ஆங்கிலஆசிரியராக வேலைபார்த்தார். அவரது மகன் பொன் அநுர சிட்னியில் புகழ்பெற்ற மருத்துவர். எஸ்.பொ ஆஸ்திரேலியக் குடிமகன்.

எஸ்.பொவின் முதன்மையான ஆக்கம் என்பது மெல்லிய கேலியுடன் யாழ்ப்பாணத்து நடுத்தர வாழ்க்கையைப் பார்க்கும் சடங்கு என்ற குறுநாவல்தான். தீ என்ற குறுநாவலும் முக்கியமானது. ஆண்மை என்ற சிறுகதைத் தொகுதியில் குறிப்பிடத்தக்க சிறுகதைகள் உள்ளன.

எஸ்.பொ செனகல் நாட்டு எழுத்தாளரான செம்பென் ஒஸ்மேனுடைய ஹால [Xala] என்ற குறுநாவலையும் கூகி வா தியோங்கோ என்ற கென்ய நாட்டு எழுத்தாளரின் தேம்பி அழாதே பாப்பா [Weep Not Child] என்ற நாவலையும் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

எஸ்.பொவின் இரு கட்டுரை நூல்கள் முக்கியமானவை. நனவிடைதோய்தல் என்ற நூல் யாழ்ப்பாணத்தின் அக்கால வாழ்க்கையை நுணுக்கமான தகவல்கள் வழியாக சித்தரிப்பது. ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் பின்னணியைச் சொல்லும் சுயசரிதையான ‘வரலாற்றில் வாழ்தல்’ ஓர் ஆவணக்களஞ்சியம்.

மித்ர என்ற பதிப்பகம் மூலம் ஏராளமான ஈழப் படைப்புகளை தமிழ்நாட்டில் பிரசுரம் செய்தவர் எஸ்.பொ. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010-க்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டபோது நான் கனடா சென்று அப்பரிசை வழங்கினேன்.

எஸ்.பொ என்னுடன் நெருக்கமான தொடர்புள்ளவராக இருந்தார். சென்னையில் இருந்தால் என்னை அழைப்பார். நான் அவரைச் சென்று பார்ப்பதுண்டு. ஈழ இலக்கியப்பூசல்களைப் பற்றியும் அக்கால அரசியல் பற்றியும் ஏராளமான வேடிக்கைக் கதைகளை சொல்லியிருக்கிறார்.

எஸ்.பொ பற்றி நான் எழுதிய ‘யாழ்நிலத்துப்பாணன்’ என்ற கட்டுரை அவருக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. இயல் விருது விழாவில் ஏற்புரையில்கூட ‘நான் ஒரு பாணன்’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

எஸ்.பொவின் துடுக்கும் நக்கலும் கலந்த பேச்சு நினைவில் ஒலிக்கிறது

http://www.jeyamohan.in/66446

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் மூத்த எழுத்தாளராக திகழ்ந்த திரு எஸ்.போ அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவருடைய குடும்பத்தினரின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!சிறு வயதில் தீ என்ற நாவலைப் படித்தேன் .கதை மறந்து விட்டது.ஆனால் அவரது எழுத்துநடை சாதரண பேச்சு வழக்கில் வரம்புமீறிய சொற்கள் எல்லாம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் மறைந்தார்.

முருகபூபதி – அவுஸ்திரேலியா

சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான்

ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ.

இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 26-11-2014 இல் மறைந்தார்.

கடந்த காலங்களில் எனக்குத்தெரிந்த – நான் நட்புறவுடன் பழகிய பல படைப்பாளிகள் சமூகப்பணியாளர்கள் குறித்து எழுதிவந்திருக்கின்றேன். வாழும் காலத்திலும் அதில் ஆழமான கணங்களிலும் அவர்களுடனான நினைவுப்பகிர்வாகவே அவற்றை இன்றும் தொடர்ந்து எழுதிவருகின்றேன்.

காலமும் கணங்களும் ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க முடியாதது.

எஸ்.பொ. அவர்களை 1972 ஆம் ஆண்டு முதல் முதலில் கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில் ரெயின்போ அச்சகத்தில் சந்தித்தேன். அதன்பிறகு கொழும்பில் பல இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன். எஸ்.பொ இரசிகமணி கனக செந்திநாதன் கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை உட்பட பல இலக்கியவாதிகள் எமது நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடத்திய தமிழ் விழாவிற்கு வருகை தந்துள்ளனர்.

எஸ்.பொ. 1980 களில் நைஜீரியாவுக்கு தொழில் நிமித்தம் புறப்பட்ட வேளையில் கொழும்பு – ஜம்பட்டா வீதியில் மலையக நாடகக் கலைஞரும் அவள் ஒரு ஜீவநதி திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அதன் வசனகர்த்தாவுமான மாத்தளை கார்த்திகேசுவின் இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக நடந்த பிரிவுபசார நிகழ்வில் சந்தித்தேன்.

மீண்டும் அவரை சில வருடங்களின் பின்னர் 1985 இல் ஒரு விஜயதசமி நாளில் வீரகேசரியில் நடந்த வைபவத்தின்பொழுது என்னைச்சந்திக்க வந்த எஸ்.பொ.வின் ஆபிரிக்க அனுபவங்கள் பற்றிய நேர்காணலை எழுதி வெளியிட்டேன். 1987 இல் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் – 1989 இல் எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் நூலின் வெளியீட்டு விழாவை மெல்பனில் நடத்தியபொழுது சிட்னியில் மூத்த புதல்வர் டொக்டர் அநுராவிடம் அவர் வந்திருப்பது அறிந்து அவரை பிரதம பேச்சாளராக அழைத்தேன். அன்றைய நிகழ்வே அவர் அவுஸ்திரேலியாவில் முதல் முதலில் தோன்றிய இலக்கிய பொது நிகழ்வு.

1972 முதல் 2010 வரையில் சுமார் 38 ஆண்டுகள் மாத்திரமே அவருக்கும் எனக்குமிடையிலான இலக்கிய உறவு நீடித்தது. அந்த உறவு எவ்வாறு அமைந்தது என்பதுபற்றிய தகவல்களை இந்தத் தொடர் ஆக்கத்தில் பதிவுசெய்யவில்லை.

கலை இலக்கிய ஊடகத்துறையில் ஈடுபடும் எவரும் அன்றாடம் சந்திக்கக்கூடிய அனுபவங்களே அவர்தம் வாழ்வின் புத்திக்கொள்முதலாகும். எஸ்.பொ. குறித்து நானும் என்னைப்பற்றி அவரும் ஏற்கனவே நிறைய எழுதிவிட்டோம். ஒரு கட்டத்திற்குப்பிறகு எழுதுவதற்கு எதுவும் இல்லை என்றாகிப்போனாலும் – அவர்தம் எழுத்தூழிய ஆளுமை தமிழ் சமூகப்பரப்பில் தவிர்க்க முடியாதது.

மூத்த இலக்கிய சகா எஸ்.பொ. வின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என பிரார்த்தித்து அன்னாரின் மனைவி மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் அவரது கலை- இலக்கிய ஊடகத்துறை நண்பர்களின் துயரத்தில் பங்கேற்று இந்த ஆக்கத்தை தொடருகின்றேன்.

——–

இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. என பரவலாக அறியப்பட்ட எஸ்.பொன்னுத்துரை யாழ்ப்பாணத்தில் நல்லூரில் சண்முகம் தம்பதியரின் மகனாக 04-06-1932 ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு இந்த ஆண்டு 82 வயது.

யாழ்ப்பாணத்தில் தமது ஆரம்பக்கல்வியையும் உயர்கல்வியையும் தொடர்ந்து – மேற்கல்விக்காக தமிழ்நாட்டிற்குச்சென்றார். அங்கு தாம்பரம் கிறிஸ்தவக்கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவுசெய்துகொண்ட எஸ்.பொ. அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

பாடசாலைப்பருவம் முதல் தீவிர வாசிப்பில் ஈடுபட்டிருந்த பொன்னுத்துரை – இளம் வயதிலேயே சிறுகதை, கட்டுரை, விமர்சனங்கள் எழுதி கலை இலக்கியத் தேடலை தவமாகவே தொடர்ந்தவர். ஆங்கில இலக்கியங்களின் மீதும் ஈடுபாடு காண்பித்தார்.

தமது 13 வயதில் எழுத ஆரம்பித்திருப்பவர். 1940 ஆம் ஆண்டில் அவரது மூத்த சகோதரர் தம்பையா ( இவரும் தமிழ்ப்புலமையுள்ளவர்) மாணவர் தேர்ச்சிக்கழகத்தின் சார்பில் ஞானோதயம் என்ற கையெழுத்து சஞ்சிகையை நடத்தியபொழுது அதன் பக்கங்களை நிரப்புவதற்காகவும் இலக்கியப்படைப்புகளை அதில் எழுதியிருக்கிறார்.

பெரும்பாலான இலக்கியவாதிகளை பாரதியும் பாரதிதாசனும் ஆரம்பகாலத்தில் பெரிதும் பாதித்திருப்பதுபோன்று பொன்னுத்துரைக்கும் இந்த இரண்டு ஆளுமைகளும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். அவர்களின் கவியாற்றலின் பாதிப்பினால் பொன்னுத்துரை எழுதிய முதலாவது கவிதை வீரகேசரியில் வெளியானது. அதுவே அச்சில் வெளிவந்த அவரது கன்னிப்படைப்பு.

1947 இன் பின்னர் த.ராஜகோபால் என்ற ஒரு பெரியவரின் தொடர்பினால் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் பொன்னுத்துரைக்கு படிக்கக்கிடைத்திருக்கிறது. குறிப்பிட்ட ராஜகோபால்தான் தன்னையும் இலக்கியத்தின்பால் திசை திருப்பிவிட்டவர் என்று டொமினிக்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

தமது பதினைந்து வயதிலேயே இந்தியாவின் புகழ்பூத்த படைப்பாளிகளின் தீவிர வாசகராகிவிட்டதனால் பொன்னுத்துரையும் இலக்கியப்பிரதிகளை எழுதத்தொடங்கினார்.

தம்மை இந்தத்துறையில் வளர்த்துவிட்ட த. ராஜகோபால் என்பவருக்கே தமது தீ நாவலையும் சமர்ப்பணம் செய்தார்.

பொன்னுத்துரையின் முதலாவது சிறுகதை 1948 இல் தந்தை செல்வநாயம் கொழும்பிலிருந்து வெளியிட்ட சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. இலங்கை இதழ்களில் மட்டுமன்றி தமது 17 வயதில் தமிழக இதழ்களான காதல்இ பிரசண்ட விகடன்இ ஆனந்த போதினி முதலானவற்றிலும் எழுதியிருக்கிறார்.

இலங்கையில் பல மூத்த எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் – தமிழகத்தின் சென்னைப் பாதிப்பினால் தமது கதைகளின் பின்புலமாக மெரீனா பீச்சையும் மவுண்ட் ரோட்டையும் சித்திரித்துக்கொண்டிருந்தபொழுது தாமும் அவ்வாறு அந்தப்பகைப்புலத்தை உள்வாங்காமல் ஈழத்து மண்வாசனையுடன் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டவர்களின் வரிசையில் இணைந்துகொண்டவர் பொன்னுத்துரை.

முழுமையான கற்பனாவாதத்தை தவிர்த்து யதார்த்த இலக்கிய மரபினைத்தோற்றுவித்து – சிறுகதையில் – உருவம் – உள்ளடக்கம் உத்திகளில் மாற்றங்களை இலங்கையில் ஏற்படுத்திய மூலவர்களில் ஒருவராக விளங்கியவர் பொன்னுத்துரை. இலங்கையின் இலக்கிய மறுமலர்ச்சிக்காலத்திலிருந்து பொன்னுத்துரையின் ஆக்க இலக்கியங்களை இனம்காணமுடியும். அதனால் ஏறக்குறைய ஏழு தசாப்தகாலம் ( அண்ணளவில் 68 ஆண்டுகள்) அயராமல் எழுதிக்கொண்டிருந்தவர்.

அவரது முதலாவது நாவல் தீ தமிழகத்தில் சரஸ்வதி இதழை நடத்திய விஜயபாஸ்கரனின் முயற்சியால் வெளியானது. இந்நாவல் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் திருப்புமுனையை தோற்றுவித்ததுடன் சர்ச்சைகளையும் உருவாக்கியது.

தீயை தீயிட்டுக்கொளுத்துங்கள் முதலான குரல்களும் எழுந்தன. இவ்வாறு அவரது முதல் நாவல் தீவிர வாசிப்புக்கும் கவனிப்புக்கும் சர்ச்சைக்கும் இலக்கானது முதல் பொன்னுத்துரையும் இலக்கிய உலகில் சர்ச்சைக்குரிய மனிதராகவே தென்படலானார்.

தொடர்ச்சியாக அவர் பல தளங்களில் அவ்வாறே விளங்கினார். அதனால் – அவரை ஒரு இலக்கிய கலகக்காரன் என்றும் பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடும் இலக்கியவாதி என்றும் அழைக்கப்படலானார்.

சூழலில் அவரது கருத்துக்களுக்கு நிகழ்ந்த எதிர்வினைகளினால் அவர் தன்னை தொடர்ந்தும் பல நிலைகளிலும் எதிர்வினைகளை எதிர்நோக்கும் எழுத்தாளராகவே இனம்காட்டி வரலானார். தொடக்கத்தில் அவரும் அவரது நண்பர்களும் யாழ்ப்பாணத்தில் பின்வரும் புனைபெயர்களில் தம்மை அழைத்துக்கொண்டனர்.

இந்த நண்பர்கள் கம்யூனிஸக்கொள்கை கோட்பாடுகளினால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தவர்கள். டானியல் ( புரட்சி தாசன்) டொமினிக் ஜீவா ( புரட்சி மோகன் ) பொன்னுத்துரை (புரட்சிப்பித்தன்)

பொன்னுத்துரை இவ்வாறு முற்போக்கு கூடாரத்தில் தமது பெயரை புரட்சியுடன் இணைத்துக்கொண்டாலும்கூட ஒரு கட்டத்தில் தனது புனைபெயரை பழமை தாசன் என்றும் மாற்றிக்கொண்டவர்.

அவர் அடிக்கடி புனைபெயர்களில் எழுதுவதை வழக்கமாகக்கொண்டிருந்தாலும் இலக்கிய உலகில் நிலைத்த பெயர் எஸ்.பொ. என்ற இரண்டு எழுத்துக்கள்தான்.

1956 இல் ஆசிரியத்தொழில்சார்ந்து அவரது வாழ்வு கிழக்கு மாகாணம் நோக்கி திசை திரும்பியது. கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டுஇ 1960 களில் கொழும்;பு சாகிராக்கல்லூரியில் நடந்த மாநாட்டிலிருந்து வெளிநடப்புச்செய்தார்.

அப்பொழுது அவருடன் இணைந்து வெளியேறியவர்கள் இளம்பிறை ரஹ்மான்இ வ.அ. இராசரத்தினம் உட்பட வேறும் சிலர். இவர்களில் இராசரத்தினம் மூதூரைச்சேர்ந்த ஆசிரியர். மறைந்துவிட்டார். மற்றவர் கொழும்பில் ஆட்டுப்பட்டித் தெருவில் நீண்ட காலம் ரெயின்போ என்ற அச்சகத்தை நடத்தி அரசு வெளியீடு என்ற பதிப்பகத்தின் மூலம் பல நூல்களையும் இளம்பிறை என்ற மாசிகையையும் வெளியிட்ட ரஹ்மான். இவர் தற்பொழுது சென்னையில் கோடம்பாக்கத்தில் வசிக்கின்றார்.

பொன்னுத்துரையின் இலக்கியச்செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் உறுதுணையாக விளங்கியவர் ரஹ்மான். பொன்னுத்துரையின் இலக்கிய வாழ்வில் இரண்டறக்கலந்த இவரின் தொடர்ச்சியான நட்பினால்தான் பிற்காலத்தில் சென்னையில் மித்ர பதிப்பகம் உருவானது. எனவே ரஹ்மான் பொன்னுத்துரையின் வாழ்வில் மிகவும் முக்கியமான இலக்கியசகா.

எஸ்.பொ. சென்னையில் மித்ர பதிப்பகத்தை உருவாக்குவதற்கு பக்கபலமாக இருந்தவர் அவரது மூத்த புதல்வன் டொக்டர் அநுரா.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேறிய பொன்னுத்துரை இ அடுத்த கட்டமாக அதற்கு எதிராக நற்போக்கு இலக்கிய முகாமை தோற்றுவிக்க முனைந்தார்.

முற்போக்குக்கு எதிராக பிற்போக்கு என்று எதனையும் தொடங்க முடியாது. அதனால் நற்போக்கு என்பது – முற்போக்கு – (சய) கம்யூனிஸ்ட் கட்சி. பிற்போக்கு முகாம் அமைக்க முடியாது. அதனால் நற்போக்கு எனச்சூட்டிக்கொண்டோம் என்று தமது வாக்கு மூலத்தை பதிவுசெய்துகொண்ட பொன்னுத்துரை – காலம் கடந்து மேலும் விரிவாக தேடல் என்ற நேர்காணல் ( டென்மார்க் தர்மகுலசிங்கம் எழுதியது) நூலிலும் நற்போக்கு என்ற நூலிலும் முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து தான் வெளியேறியதற்கான நியாயங்களை விரிவாக பதிவு செய்துள்ளார்.

பொன்னுத்துரையிடமிருந்த ஆழமான தமிழ் இலக்கிய ஆற்றலும் கல்வியினால் அவர் பெற்றுக்கொண்ட ஆங்கில அறிவுமே பிற்காலத்தில் – புகழ்பெற்ற சில பிறமொழி இலக்கியப்படைப்புகளை ஆங்கிலமொழி மூலம் படித்து தமிழுக்கு மொழிபெயர்க்கச்செய்திருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து தமது பட்டப்படிப்பை நிறைவு செய்துகொண்டு திரும்பியவேளையில் வடமாகாண தமிழ் சமூக அமைப்பு குறித்த பிரக்ஞை அவரை தீவிரமாக சிந்திக்கவைத்திருக்கிறது. அவ்வேளையில் அவருடைய தோழர்களாக விளங்கிய பலர் முற்போக்கான சிந்தனை உடையவர்களாகவும் மார்க்ஸீய கோட்பாடுகளை வரித்துக்கொண்டவர்களாகவும் விளங்கினர்.

பொன்னுத்துரையின் மூத்த சகோதரி திருமணம் முடித்த எம்.ஸி சுப்பிரமணியம் வடமாகாண சிறுபான்மை வெகுஜன அமைப்பின் ஸ்தாபகராகவும் சமூகப்பணியாளராகவும் விளங்கியவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஸ்கோ) உறுப்பினர். பின்னாளில் இலங்கை பாராளுமன்றத்தில் நியமன எம்.பி. ஆகவும் பதவியேற்றவர்.

பொன்னுத்துரையின் குடும்ப உறவுக்குள்ளும் அவரது தோழர்கள் வட்டத்திலும் சாதி ஒழிப்புக்குறித்த எண்ணங்களே பரவலாகியிருந்தமையினால் பொன்னுத்துரையும் அவர்களினால் உள்வாங்கப்பட்டார். அவர்கள் மட்டத்தில் பட்டம் படித்த ஒருவர் என்ற மேலதிக தகைமையும் இவருக்கு கிடைத்தது.

இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் கே. டானியல்இ டொமினிக்ஜீவா செ. கணேசலிங்கன் முதலானோருடன் தினமும் இலக்கியம் தொடர்பான உரையாடல்களை தொடர்ந்தார். கணேசலிங்கன் யாழ். பரமேஸ்வராக்கல்லூரி மாணவராக அவ்வேளையில் பயின்றுகொண்டிருந்தார்.

டானியலும் டொமினிக் ஜீவாவும் தத்தமது குடும்பச்சூழல்களினால் படிப்பைத்தொடர முடியாமல் தொழில்களில் ஈடுபட்டனர்.

எனினும் இவர்கள் நால்வரும் அடிக்கடி சந்தித்து தமக்குள் ஒரு இலக்கிய வட்டத்தையும் ஏற்படுத்திக்கொண்டனர். பொன்னுத்துரை ஆசிரியப்பணியில் ஈடுபட்டார். அவர் மட்டக்களப்பில் பணியாற்றிய காலத்தில் தம்முடன் பணியாற்றிய ஆசிரியையை காதல் திருமணம் செய்துகொண்டார்.

பொதுவாக எழுத்தாளர்களின் மனைவிமார் தமது கணவரின் கலை – இலக்கிய பொதுவாழ்வில் அந்நியப்பட்டிருப்பவர்கள். ஆனால்இ பொன்னுத்துரையின் மனைவி – மகாகவி பாரதியின் கூற்றுப்போன்று – காதலொருவனைக் கைப்பிடித்தே அவன்

காரியம் யாவிலும் கைகொடுத்து வாழ்ந்தவர்.

அவரது பக்கபலம் பொன்னுத்துரையின் படைப்பு இலக்கிய முயற்சியில் எதுவித அயற்சிக்கும் இடம்கொடுக்கவில்லை. அதனால்தான் பொன்னுத்துரை சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, விமர்சனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு முதலான பல்துறைகளில் தடம் பதித்து பல நூல்களை படைக்க முடிந்திருக்கிறது என்றும் கருத இடமுண்டு. அத்துடன் சில நூல்களின் தொகுப்பாசிரியராகவும் தமது பணி தொடர்ந்திருப்பவர்.

பின்வரும் அவரது நூல்களே அதற்கு ஆதாரம்:

வீ – ஆண்மை – எஸ்.பொ கதைகள் – அவா (சிறுகதைத் தொகுதி)

தீ – சடங்கு – மாயினி (நாவல்)

அப்பையா- கீதை நிழலில் – அப்பாவும் மகனும் – வலை –

முள் – பூ – தேடல் – முறுவல் – இஸ்லாமும் தமிழும்

பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்) மத்தாப்பு + சதுரங்கம்

? – (கேள்விக்குறியில் ஒரு நூல்) நனவிடை தோய்தல்

நீலாவணன் நினைவுகள் – இனி ஒரு விதி செய்வோம்

வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை)

ஈடு (நாடகம்) (அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது)

மணி மகுடம் – தீதும் நன்றும் – காந்தீயக் கதைகள் – காந்தி தரிசனம்

மகாவம்ச ( மொழிபெயர்ப்பு )

பொன்னுத்துரை கிறிஸ்தவ கல்லூரியில் கற்றதனாலும் கிறிஸ்தவ பாடசாலையில் தொடக்கத்தில் பணியாற்றியதனாலும்தானோ என்னவோ கிறிஸ்தவர்கள் தமது மதரீதியான சிந்தனையில் அடிக்கடி பயன்படுத்தும் ஊழியக்காரர் என்ற சொற்பதத்தை தமது வாழ்வில் அடிக்கடி பயன்படுத்திவந்திருக்கிறார்.

ஆனால், இவர் மதம் சார்ந்து அல்ல இலக்கியம் சார்ந்து தன்னை இலக்கிய எழுத்தூழியக்காரன் என்றே குறிப்பிட்டு வந்தவர்.

பொன்னுத்துரைக்கு இலக்கியத்தில் பல்வேறு இஸங்களிலும் ஆபிரிக்க கறுப்பின மக்களின் இலக்கியத்திலும் ஈடுபாடு நீடித்த அதேசமயம் ஆன்மீக ரீதியான சிந்தனைகளும் அவரது வாழ்வில் தொடர்ந்திருக்கிறது.

பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, தமிழ் நாடு அவுஸ்திரேலியா முதலான நாடுகளிலும் மேடையேறியுள்ளன.

தமிழ் நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

தனித்தும் எழுதினார் சிலருடன் இணைந்தும் எழுதினார். உதாரணமாக அவர் இணைந்து எழுதியவை:- மத்தாப்பு – நாவல். எஸ்.பொ.வுடன் இணைந்தவர்கள்: இ.நாகராஜன், இரசிகமணி கனக செந்திநாதன், சு.வேலுப்பிள்ளை, குறமகள்.

ஈழத்து இலக்கியத்தில் முதல் முதலில் வெளியான பரீட்சார்த்த நாவல் மத்தாப்பு.

சதுரங்கம் – கட்டுரை இணைந்தவர்கள்: ஆர். பாலகிருஷ்ணன், வ.அ. இராசரத்தினம், எம்.ஏ. ரஹ்மான், சாலை இளந்திரையன்.

பொன்னுத்துரை ஆக்க இலக்கியத்துறைக்கு அப்பால் சிற்றிதழ்களை நடத்தும் பெருவிருப்பும் கொண்டிருந்தவர். கொழும்பில் பிரபல்யமான விவேகானந்தா கல்லூரியில் அவர் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் ரஹ்மான நடத்திய இளம்பிறையில் பொன்னுத்துரை உத்தியோகப்பற்றில்லாத ஆசிரியராகவே விளங்கினார். ரஹ்மான் தொடங்கிய அரசு வெளியீட்டு நிறுவனம் அகஸ்தியர் தளையசிங்கம், பொன்னுத்துரை, இரசிகமணி கனகசெந்திநான் உட்பட பலரது நூல்களை வெளியிட்டது.

பொன்னுத்துரை இலக்கியத்தில் செம்மைப்படுத்தும் மரபினையும் ஈழத்து இலக்கியவளர்ச்சியில் உருவாக்கினார். பொதுவாக படைப்பாளிகள் தமது படைப்புகளை தாமே படைத்துவிட்டு அவசர அவசரமாக வெளியிடுவதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. பொன்னுத்துரை தமது சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனங்களையும் எழுதியபின்னர் மீண்டும் மீண்டும் படித்து செம்மைப்படுத்தும் இயல்பினைக்கொண்டிருந்தவர். மற்றவர்களின் படைப்புகளையும் நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து படித்து கருத்துச்சொல்லி அவற்றில் நீக்கவேண்டிய இணைக்கவேண்டிய செம்மைப்படுத்த வேண்டிய அம்சங்களை குறித்துக்கொடுப்பார்.

தனது படைப்புகளையும் மற்றவர்களிடம் படிக்கக்கொடுத்து கருத்துக்கேட்டதன் பின்னரே மேலும் செம்மைப்படுத்தி அச்சுக்கு அனுப்புவார். இந்த இயல்பு அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்தது.

மற்றவர்களின் படைப்புகளை செம்மைப்படுத்தும் பொழுது அவருக்கிருக்கும் நிதானம் சிறப்பானது. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் வதியும் பலரது படைப்புகளை அவர் செம்மைப்படுத்தியிருக்கிறார்.

சென்னையில் மித்ர பதிப்பகத்தின் வெளியீடுகளில் அழகியலையும் அச்சமைப்பிலும் பக்கவடிவமைப்பிலும் கலைநேர்த்தியையும் காண்பித்தார்.

கொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளியாகும் ஞானம் இதழின் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனின் கேள்விகளுக்கு எஸ்.பொ தெரிவிக்கும் நீண்ட பதில்களைக்கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக ஞானம் இதழில் வெளியானது.

பின்னர் தீதும் நன்றும் பிறர்தர வரா என்ற தலைப்பில் குறிப்பிட்ட நேர்காணல் நூல் 2007 இல் வெளியானது. 1924 பக்கங்களில் எஸ்.பொ. எழுதிய அவரது சுயவரலாற்று ஆவணம் வரலாற்றில் வாழ்தல் இரண்டு பாகங்களாக ஒரேவேளையில் வெளியானது.

புலம்பெயர்ந்தோர் இலக்கியமே எதிர்காலத்தில் தலைமை ஏற்கும் என்ற கருத்தையும் அவர் சில வருடங்களுக்கு முன்னர் சொன்னதனால் இலக்கியஉலகில் குறிப்பாக தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது.

குறிப்பிட்ட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பதப்பிரயோகத்தை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவரும் பொன்னுத்துரைதான். 1989 இல் இந்தக்கனதியான இரண்டு சொற்களை அவர் மெல்பனில் நடந்த இலக்கிய விழாவில் முன்மொழிந்தார்.

அவருக்கு 2010 இற்கான கனேடிய இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது 2011 ஆம் ஆண்டு கனடாவில் வழங்கப்பட்டது. பொன்னுத்துரையின் பல நூல்களுக்கு தமிழகத்தின் மூத்த முன்னணி படைப்பாளிகளும் விமர்சகர்களும் முன்னுரை வழங்கியுள்ளனர்.

ஜெயமோகன் தமது ஈழ இலக்கியம் என்ற நூலில் எஸ்.பொ.வை யாழ்ப்பாணத்துப்பாணன் என்றே விளித்து தமது விரிவான பார்வையை பதிவுசெய்துள்ளார்.

சென்னையில் மித்ர பதிப்பகத்தின் சார்பில் முழுநாள் இலக்கியக்கருத்தரங்கினை நடத்தியிருக்கும் எஸ்.பொ. அவரது இலக்கியப்பிரவேச ஆரம்ப காலத் தோழர் மல்லிகை ஜீவாவை அதற்கு அழைத்து பாராட்டி விருதுவழங்கி கௌரவித்தார். பொன்னுத்துரையின் வாழ்வும் பணிகளும் இலங்கை – தமிழ்நாடு – ஆபிரிக்கா – அவுஸ்திரேலியா என்று பரந்துபட்டிருந்தது முக்கியமானது. அதனால் அவர் சர்வதேசப்பார்வையுள்ள – ஆளுமையுள்ள படைப்பாளியாகவும் விளங்கினார்.

—00—

http://puthu.thinnai.com/?p=27458

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.