Jump to content

மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வும் இல்லை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே பயந்து போனேன், இனி ஓட்டம் எடுக்க வேண்டியதுதான். சேத்து வாளி கூட்டத்தோட மாரடிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தீப்பொறி ஆறுமுகம் என்று முன்பு திமுகவில் ஒருவர் இருந்தார். கருணாநிதி யாரிடமாவது வசமாக வாங்கி கடுப்பாகினால் அடுத்த கூட்டத்தில் ஆறுமுகத்தை மேடை ஏத்தி விடுவார். ஆறுமுகம் எதிராளியின் பத்து தலைமுறையை பின்னி பெடல் எடுப்பார்.

ஜெயாவிற்க்கு மகளிரணி. ஒரு தடவை சு சாமி ஒரு வழக்கில் ஆஜராவதை தடுக்க - கோர்ட் வளாகத்தினுள்ளே "சேலை உயர்த்தும்" போராட்டம் நடத்தி சாமியை திக்குமுக்காடச் செய்தனர்.

தமது பக்கம் நியாயமில்லை எனும் போது கீழ்தரமான அரசியல்வாதிகள் எல்லோரும் செய்வது இதைத்தான். கூடவே நாங்க அப்ப இருந்தே இருக்கிறம், ஈசல் போல ஓடவைப்போம், எண்டு மட்டை போட்டு விட்டு புலத்து தெருக்களில் காட்டும் சண்டித்தனமும் வெளிப்படும்.

இப்படியானவர்களுக்கு அர்ஜூன் அண்ணா டிரீன்மெண்ட்தான் சரிவரும்.

Link to comment
Share on other sites

இறுதியாக கூறி இந்த திரியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் . :lol:
 
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கருத்து மாற்றாளர்களே ,எதிர்ப்பு புலி வாதிகளே :lol:  ,நீங்கள் குத்துக்கரணம் அடித்து ,உருண்டு பிரண்டு குத்தி முறிந்து ஒப்பாரி வையுங்க ,உங்களைப்போல கொஞ்சப்பேரும் உங்களோடு சேர்ந்து ஒப்பாரி வைத்து கதறுவாங்க ..பிரச்சனையே இல்லை ..ஆனால் இப்படியெல்லாம் எழுதும்போது கொஞ்சம் கூட உங்களுக்கு வெட்கம் மானம் சூடு சுரணை இல்லையா :rolleyes: .............உங்களைப்பார்த்து ,உங்கள் கருத்துக்களைப்பார்த்து ஊரே சிரிக்கும் போது .எப்பிடித்தான் தொடர்ந்து எழுத மனம் வருது ..........உண்மையாய் முடியல :lol:  :D  
Link to comment
Share on other sites

தீப்பொறி ஆறுமுகம் என்று முன்பு திமுகவில் ஒருவர் இருந்தார். கருணாநிதி யாரிடமாவது வசமாக வாங்கி கடுப்பாகினால் அடுத்த கூட்டத்தில் ஆறுமுகத்தை மேடை ஏத்தி விடுவார். ஆறுமுகம் எதிராளியின் பத்து தலைமுறையை பின்னி பெடல் எடுப்பார்.

ஜெயாவிற்க்கு மகளிரணி. ஒரு தடவை சு சாமி ஒரு வழக்கில் ஆஜராவதை தடுக்க - கோர்ட் வளாகத்தினுள்ளே "சேலை உயர்த்தும்" போராட்டம் நடத்தி சாமியை திக்குமுக்காடச் செய்தனர்.

தமது பக்கம் நியாயமில்லை எனும் போது கீழ்தரமான அரசியல்வாதிகள் எல்லோரும் செய்வது இதைத்தான். கூடவே நாங்க அப்ப இருந்தே இருக்கிறம், ஈசல் போல ஓடவைப்போம், எண்டு மட்டை போட்டு விட்டு புலத்து தெருக்களில் காட்டும் சண்டித்தனமும் வெளிப்படும்.

இப்படியானவர்களுக்கு அர்ஜூன் அண்ணா டிரீன்மெண்ட்தான் சரிவரும்.

அர்ஜுன் அண்ணாவின் ரிட்மெண்ந்ட் யாழில் மாத்திரம் அல்ல நேரிலும் பலருக்கு கிடைத்திருக்கு  போனவாரம் யாழ் இந்து கல்லூரி பார்ட்டியில் வாயை திறந்த பிரபல உணவு வியாபாரி அந்த மாதிரி வாங்கிகட்டிக்கொண்டு  போனார் .இதில் பகிடி என்றாவேன்றால் அவரை காணும் போது பல்லை காட்டுபவர்கள் என்னிடம் வந்து "இவங்களுக்கு இப்படித்தான் கொடுக்கவேண்டும் " என்றதுதான் .அசல் தமிழர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த சூ,

கீழே உள்ளதை பாருங்கள். உங்களின் விசம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. எச் ஐ வி போல உள்ளிருந்து கொல்கிறது.

http://www.yarl.com/forum3/index.php?/topic/149774-“உயிர்-வாழும்-பிரபாகரன்”-sgராகவ/

இதை அறியும் பக்குவம் உங்களுக்கும் உங்கள் தலமைக்கும் அன்றும் இருக்கவில்லை இன்றும் இல்லை.

சிலதை கண்டு பிடித்து அழித்தீர்கள் பலதை கோட்டை விட்டு அழிந்தீர்கள்.

உங்கள் இயலாமையின் கோர முகத்தை, வன்முறையை அன்று முதல் நீங்கள் காட்டுவது, ஆயுதம் தூக்காதவர்கள், எதிர்கருத்தாளர்கள், அடிநிலை போராளிகள் மீது மட்டுமே. அதிபர் ஆனந்தராஜா, நீதிபதி ஞானச்சந்திரன், கந்தன் கருணைப் போராளிகள், ரஜனி திரணகம, செல்வி இப்படிப் பலர்.

இப்போதும் பழைய நினைப்பில் ஈசல் கலைக்கிறியள் :) கடந்த கால மேட்டிமையில் வாழும் பரிதாபத்துக்குரிய ஜீவன்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்புட்டும் பேசிப்புட்டு சாப்பாட்டையும் போத்திலையும் ஒரு வெட்டு வெட்டி இருப்பாரே அண்ணாச்சி?

அதை படம் எடுத்துப் போட்டிருந்த இன்னும் ஜோராய் இருந்திருக்கும்.

யாற்றையோ பிள்ளையள் செத்தது இவயளுக்கெல்லாம் - பி எம் டபுள் யூ கார், பொஸ் ஷூ, ஐபோன் போல ஒரு fashion accessory யா ?ஒவ்வொரு வருடமும் நவம்பரில் எடுத்து மாட்டுவீனம்.

Link to comment
Share on other sites

சிங்களவனுக்கும் தமிழனுக்கும் இருக்கும் அடிப்படை வேறுபாட்டுக்கு இந்த திரி ஒரு சிறந்த உதாரணம். 30 வருட கால போரை முடிவுக்கு கொண்டுவந்து அழிக்க முடியாது என்றிருந்த புலிகளை முற்றாக அழித்த மகிந்தவையே அவர் நாட்டை சீரளிக்க வெளிக்கிட தூக்க முடிவெடுத்து விட்டார்கள். தனி மனித துதிபாடலை விட அவர்களுக்கு இன/தேச நலன் தான் முக்கியமாக இருக்கின்றது. இந்த ஒரு காரணம் தான் அவர்கள் பல்லாயிரம் வருடங்களாக இந்தியாவிலிருந்து அத்தனை படையெடுப்புகளையும் தாங்கிக்கொண்டு என்னும் ஒரு தேசிய இனமாக இருக்க காரணம்.
 
இதையே தமிழர்களாக நாங்கள் பிரபாகரன் மக்களை அழிவு பாதையில் கொண்டு செல்கிறார் கட்டாய ஆட்பிடிப்பு தவறு சக தமிழரை கொல்வது தவறு என்றால் நாங்கள் எலும்பு பொறுக்கி, துரோகி காதுக்குள்ள சுடப்பட்டு இறக்க வேண்டியவர்கள். புலிகள் சார்ந்து தமிழர் நலன் பேசுபவர்கள் மட்டுமே தியாகிகள். புலிகளை எதிர்த்து தமிழர் நலன் என்று பேசினால் அவர்கள் துரோகிகள். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீப்பொறி ஆறுமுகம் என்று முன்பு திமுகவில் ஒருவர் இருந்தார். கருணாநிதி யாரிடமாவது வசமாக வாங்கி கடுப்பாகினால் அடுத்த கூட்டத்தில் ஆறுமுகத்தை மேடை ஏத்தி விடுவார். ஆறுமுகம் எதிராளியின் பத்து தலைமுறையை பின்னி பெடல் எடுப்பார்.

ஜெயாவிற்க்கு மகளிரணி. ஒரு தடவை சு சாமி ஒரு வழக்கில் ஆஜராவதை தடுக்க - கோர்ட் வளாகத்தினுள்ளே "சேலை உயர்த்தும்" போராட்டம் நடத்தி சாமியை திக்குமுக்காடச் செய்தனர்.

தமது பக்கம் நியாயமில்லை எனும் போது கீழ்தரமான அரசியல்வாதிகள் எல்லோரும் செய்வது இதைத்தான். கூடவே நாங்க அப்ப இருந்தே இருக்கிறம், ஈசல் போல ஓடவைப்போம், எண்டு மட்டை போட்டு விட்டு புலத்து தெருக்களில் காட்டும் சண்டித்தனமும் வெளிப்படும்.

இப்படியானவர்களுக்கு அர்ஜூன் அண்ணா டிரீன்மெண்ட்தான் சரிவரும்.

திரி எங்கோ இருக்க மட்டை மாடு கருணாநிதி .... இப்படி எழுதினால்தான் உங்காளால் இருப்பு கொள்ள முடியும்.
உண்மையுடன் உங்களால் இருக்க மடியாது என்றுதான் நான் சொன்னேன்.
அதை இனி நான் எழுத தேவை இல்லை............ நீங்களாலே நன்றாக எழுதி வருகிறீர்கள்.
 
ற்றீட்மெண்ட் சரிவாரது என்ற கைவிட்ட கேசுகள் எல்லாம் ............ ரீட்மண்ட் கொடுக்குதா?
நல்லா விளங்கும்!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே பயந்து போனேன், இனி ஓட்டம் எடுக்க வேண்டியதுதான். சேத்து வாளி கூட்டத்தோட மாரடிக்க முடியாது.

பொய்யை பொய் என்று சுட்டி காட்டும்போது அதை எதிர்க்க தைரியமில்லை.

 

இக்னோர் பண்ணுறம் ... இங்கிதம் பண்ணுறம்.

என்பது ஓடுறதிலும் கேவலம் ஆனது. நாகரீகம் கருதி எழுதியதுதான் ஓடுவது என்பது.

--------------------.

நியானி: ஒரு வரி தணிக்கை செய்யப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
இதையே தமிழர்களாக நாங்கள் பிரபாகரன் மக்களை அழிவு பாதையில் கொண்டு செல்கிறார் கட்டாய ஆட்பிடிப்பு தவறு சக தமிழரை கொல்வது தவறு என்றால் நாங்கள் எலும்பு பொறுக்கி, துரோகி காதுக்குள்ள சுடப்பட்டு இறக்க வேண்டியவர்கள். புலிகள் சார்ந்து தமிழர் நலன் பேசுபவர்கள் மட்டுமே தியாகிகள். புலிகளை எதிர்த்து தமிழர் நலன் என்று பேசினால் அவர்கள் துரோகிகள். 

 

நோகாமல் இருந்து நொங்கு குடிப்பவன் எதையாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பான்.
விடுதளிக்கு போராட வெளிக்கிட்டவன் அதையும் தாண்டி போராடவேண்டும்.
அதுதான் உலகம் பிரபாகரனை மாவீரன் என்று சொல்கிறது.
நீங்கள் உங்களை போன்றவர்கள் இன்னமும் ஒரு 10 வருஷம் காகம் மாதிரி கரைஞ்சுட்டு மண்டையை போட்டால். மறுநாள் அயல் வீட்டு காரனுக்கே ஞாபகம் இருக்காது.
ஆயிரம் வருடம் தாண்டியும் பிரபாகரனும் அவனது கொள்கையும் இருக்கும்.
 
இது விளங்க ஐந்தாம் அறிவு என்றாலும் செயற்பாட்டில் இருக்க வேண்டும். விலங்கா விட்டால் வில்லங்கத்திட்கு வர வேண்டாம்.
im not a brain surgeon 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு,திருமலையில்கணிசமான அளவுக்கு முஸ்லிம்,சிங்களவாக்காளர்கள் இருப்பதானால் வாக்களிப்பு வீதம் கூடியிருக்கலாம்.யாழ்ப்பாணத்தில் ட்க்களசின் ஒட்டுக குழுவின் கள்ள வாக்குகள் வந்தும் 25 வீதம் என்கிறீர்கள் .புலிகளின் காலத்திலேயே தமிழ்மாவட்டங்களில் ரணில் வெல்ல யாழில் சந்திரிக்கா வென்றார்.உபயம் ஒட்டுக்குழு கள்ள வாக்குகள் 77 ஆண்டிலிருந்து வாக்கு வீத்த்தை வெளியிட முடியுமா?விக்கிபீடியா 100 வீதம் நம்பிக்கையானது அல்ல.

Link to comment
Share on other sites

மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் பிரச்சனைக்குதீர்வு உண்டா? இல்லையா? என்ற விவாதத்ததில் பங்கு பற்றி வழமைபோல் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் சேறடிக்கும் பாணியிலான அதே விடயங்களைப் பற்றி பேசி பேசி பேசி ஐந்து பக்க விவாதத்தில் ஒருவரை ஒருவர் சீண்டிவிட்ட, அவமதித்த திருப்தியுடன் மைத்திரியின் தேர்தல் அறிக்கையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு உண்டு அல்லது இல்லை,இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளோம் என்ற தகவலைக் கூறி அடுத்த தலைப்பு வரை விடைபெறும் யாழ் கள உறுப்பினர்கள். அடுத்த தலைப்பிலும் நாம் இதே விடயங்களைப் பற்றி மட்டுமே பேசுவோம் என்பதால் நாம் இங்கு பேசியவற்றை மறந்தால் உங்களுக்கு போர் அடிக்காமல் இருக்கும் என்று அன்புடன் கூறிவைக்க விரும்புகிறோம். நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்,

ரணில் வெல்லும் போது டக்கர் சந்திரிக்காவோட நிண்டவர். அப்ப எப்படி அவற்றை ஆக்கள் போட்ட கள்ளவோட்டில ரணில் ஜெயிக்க முடியும்? செம லாஜிக்.

மட்டகளப்பு 70% தமிழர் வாழும் மாவட்டம்.

எலாத்தையும் விடுங்கோ வார எலக்சனில யாழ்,வன்னி,மட்டு வில் வாக்களிப்பு 40% மேல இருக்கும் என்கிறேன்.

நீங்க என்ன சொல்றீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாற்றையோ பிள்ளையள் செத்தது இவயளுக்கெல்லாம் - பி எம் டபுள் யூ கார், பொஸ் ஷூ, ஐபோன் போல ஒரு fashion accessory யா ?ஒவ்வொரு வருடமும் நவம்பரில் எடுத்து மாட்டுவீனம்.

39 ஆயிரம் வரையான மாவீரர்கள் இவையளிண்ட வீட்டு கதவுக்குள்ளலதான் வெளியில வந்தவ.
இந்த கதையை வந்து ஒருக்கா கேளுங்கோ எல்லோரும்.
மாவீரருக்கு காவடி எடுக்கினமாம் ...... வந்து பார்த்திட்டு போங்கோ. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒருவர் மிககீழ்தரமான தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறார். அவரின் கருத்துகளை அப்படியே விடும் ஒரு மறுத்து-ஊட்டுனர் எனது கருத்துக்களை மட்டும் வெட்டித்தள்ளுறார்.

இவர்கள் இருவரும் வட அமெரிக்காவில் இருந்து செயல்படுபவர்கள். இவர்கள் இருவரும் தனி மடலில் இது பற்றி அடிக்கடி பேசிக்கொள்வதாயும் இன்னும் சிலரையும் ஆள்கூட்டியதாயும் கூட அறியக் கிடைக்கிறது.

இதைப் பற்றி நிர்வாகத்துக்கு முன்பும் ஒரு முறை அறிவித்தும் பயனேதுமில்லை.

எனது கருத்துகளை வெட்டுவது கூட பரவாயில்லை ஆனால் அப்பட்டமான சீண்டல்காரர்களை ஒரு மறுத்தூட்டுனரே கொம்பி சீவி கூட்டு சேர்ந்து செயல்படுவது தர்மமாகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துல்பென்,

இது உங்களுக்கு மட்டுமில்லை, கீழ்த்தரமான வார்த்தைகளால், யாழ் மையவாத நச்சுக் கருத்தால், என் வரவை தடுத்து அதன் மூலம் தமது எதேச்ச அதிகார கருத்தை நிலை நிறுத்த முயலும் கருத்து பாசிசிஸ்டுகளை கண்டும் காணாதிருக்கும் நிர்வாகத்துக்கும், ஏனையவர்கும் நான் சொல்லுவது இதுதான்.

இவரின் கருத்துக்களை ஒவ்வொரு திரியிலும் அவதானியுங்கள், யார் சீண்டலை ஆரம்பிக்கிறார் என்று புரியும். தமிழ்தேசியத்து ஆதரவாக பேசுகிறார் என்பதற்க்காக சகலவித கீழ்த்தர வார்த்தைகளையும் சகித்துக் கொள்ளப் போகிற்ரிகளா?

09 க்கு முன்பு இப்ப்டிதான் ஊத்தை சேது என்பவர், நிதர்சனம் என்ற வெப்சைட் மூலம் சேறை வாரி இறைதார். இது புலிகளுக்கு நன்மையை விட அதிக தீமையை செய்தது.

யோசியுங்கள். கண்ணியம் என்பது நண்பர் பகைவர் பார்த்து வருவதில்லை. பிறப்பில், வளர்ப்பில் வருவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோசியுங்கள். கண்ணியம் என்பது நண்பர் பகைவர் பார்த்து வருவதில்லை. பிறப்பில், வளர்ப்பில் வருவது.

 

உன்னைத்திருத்திக்கொள்

சமூகம் தானாக திருந்தும்....

 

இன்று நீங்கள் எழுதிய

வெட்டப்பட்ட கருத்துக்களை ஒருமுறை மீள அலசுங்கள்

சுட்டுவிரல் நீட்டி 

மற்றவரை காட்டுகையில்

நாலு விரல்கள் உன்னைக்காட்டி

நாணி நிற்குதடா தமிழா.... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற கருத்தாளரை பார்த்து "காலைத் தூக்குவது" என்று திட்டும் போது, நீங்களும் நாணிக் கோணுவீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற கருத்தாளரை பார்த்து "காலைத் தூக்குவது" என்று திட்டும் போது, நீங்களும் நாணிக் கோணுவீர்கள் என நம்புகிறேன்.

 

எங்கும் எதிலும் ஒரே கருத்தை திணிப்பதையே  அவ்வாறு சொன்னென்

நீங்கள் நாயையும் விட்டுவைக்கப்போவதில்லை என்று தெரிகிறது....

 

நமக்குள் ஒரு நூலிழையாவது

நேசத்தை வளர்த்துக்கொள்வோம்

அதன் முயற்சியாக

நாய் என்று உங்களை  சுட்டிருந்தால்

மன்னித்தருள்க............. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒருவர் மிககீழ்தரமான தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறார். அவரின் கருத்துகளை அப்படியே விடும் ஒரு மறுத்து-ஊட்டுனர் எனது கருத்துக்களை மட்டும் வெட்டித்தள்ளுறார்.

இவர்கள் இருவரும் வட அமெரிக்காவில் இருந்து செயல்படுபவர்கள். இவர்கள் இருவரும் தனி மடலில் இது பற்றி அடிக்கடி பேசிக்கொள்வதாயும் இன்னும் சிலரையும் ஆள்கூட்டியதாயும் கூட அறியக் கிடைக்கிறது.

இதைப் பற்றி நிர்வாகத்துக்கு முன்பும் ஒரு முறை அறிவித்தும் பயனேதுமில்லை.

எனது கருத்துகளை வெட்டுவது கூட பரவாயில்லை ஆனால் அப்பட்டமான சீண்டல்காரர்களை ஒரு மறுத்தூட்டுனரே கொம்பி சீவி கூட்டு சேர்ந்து செயல்படுவது தர்மமாகாது.

தனிமனித தக்ககுதலில் ஈடுபடுகிறோமாம் .......
இந்த வில்லங்கத்தை ஒருக்கா யாரவது ஏன் என்று கேட்க மாட்டீர்களா???
 
எங்கு தனிமனித தாக்குதல் இருக்கிறது என்று தாங்கள் சுட்டி காட்டினால். நிர்வாகம் தேவை இல்லை அதை நானே நீக்கி விடுகிறேன்.
பொது கருத்துகளத்தில் கருத்தை வைத்தால் ..... இநோருவன் வந்து பதில் கருத்து வைக்கத்தான் செய்வான்.
அதுவும் எனது இனத்திற்காக போராடிய போராளிகள் .... மாவீரர் பற்றி. 
பொய் பரப்புரை செய்வதை அப்படியே விட்டு விட்டு போக முடியாது. திரணி இருந்தால் கருத்துக்களுடன் உடன்பட்டு (கருத்துக்களை வாசித்து. அக்கருத்துக்களுக்கு பதில் இடவும்) கருத்தை முன்வைக்க பழகவும்.
 
"1987இல் புலிகள்" இப்படி எழுதினால் இதற்குள் நிற்கவும். கருணாநிதி ... மட்டை மாடு காவோலை என்று 1987இற்கும் சம்மந்தமில்லாது  புலிகளுக்கும் சம்மந்தமிலாதவற்றை எழுதுவதை நிறுத்திவிட்டால். தேவையில்லாமல் திரி நீளாது.
 
கருத்தாட தெரியவில்லை என்றால்...... ஒரு நாளிக்கு இத்தனை கருத்து குறைந்த பட்சம் பதிய வேண்டும் என்று எந்த கடாயமும் இங்கு இல்லை என்று நினைக்கறேன். அதலால் இவருக்கும் அவருக்கும் தொடர்பு அது இது என்று அவதூறு எழுதுவதையாவது நிறுத்த முயற்சி செய்யலாம். அது தனிமனித தாக்குதலை விட  கேவலம் ஆனது. 
 
அல்லது எனது கருத்திற்கு யாரும் பதில் இடும் உரிமையை ரத்து செய்து. எனது கருத்தை தேவ வாக்காக அறிவிக்க வேண்டும் என்று நிர்வாகத்திடம் கேட்டு பாருங்கள்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

நூல் என்ன, நம் நட்புக்கு வடமே போடுவோம் நான் தயார்.

உருண்டு பிரளுவதெல்லாம் கருத்தாடலில் மட்டும்தான். மற்றப்படி நான் எப்பவும் நட்புக்காகத்தான்.

தவிர உங்கள் உவமானம் என்னை ஒன்றும் உறுத்தவும் இல்லை. ஒரு எடுகோளாக காட்டினேன்.

நட்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புலிகளில் பிடித்ததே கடைசியில் தமக்கு என்று வரும்போது வெள்ளை கொடி பிடித்ததும் காலில் விழுந்து வணங்கியதும் .

ஆனால் சிங்களவன் மசியவில்லை .

ஆழ்ந்த அனுதாபங்கள் .

**********

நியானி: சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன

 

இவற்றை கண்ணுக்கு முள்ளி வாய்க்காலில்  புலிகள் மட்டும்தான் நின்றிருந்தார்கள்.
ஒரு இனமே கேட்பாரற்று கொலை தாண்டவத்தில் சிக்கி சிதறுண்டு கிடந்த அந்த நிலையை.
இப்படி ஒரு சிங்களவனே எழுதமாட்டான் ............ எழுதியதும் இல்லை.
 
இதையே நிர்வாகம் விட்டு வைத்திருக்கிறது.
(மற்றவர்கள் அடிப்படை மனிதம் தெரியாதவர்களை அடையாளம் காண சொல்லி)
 
இதில் தனிமனித தாக்குதலுக்கு குரல் கொடுக்கிறார்கள்.
 
நினைத்தால் ஒரு பக்கம் பாவமாக இருக்கிறது.
கடவுள்தான் காரணம். அப்படி ஒருவர் இருந்தால். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித தக்ககுதலில் ஈடுபடுகிறோமாம் .......

இந்த வில்லங்கத்தை ஒருக்கா யாரவது ஏன் என்று கேட்க மாட்டீர்களா???

எங்கு தனிமனித தாக்குதல் இருக்கிறது என்று தாங்கள் சுட்டி காட்டினால். நிர்வாகம் தேவை இல்லை அதை நானே நீக்கி விடுகிறேன்.

பொது கருத்துகளத்தில் கருத்தை வைத்தால் ..... இநோருவன் வந்து பதில் கருத்து வைக்கத்தான் செய்வான்.

அதுவும் எனது இனத்திற்காக போராடிய போராளிகள் .... மாவீரர் பற்றி.

பொய் பரப்புரை செய்வதை அப்படியே விட்டு விட்டு போக முடியாது. திரணி இருந்தால் கருத்துக்களுடன் உடன்பட்டு (கருத்துக்களை வாசித்து. அக்கருத்துக்களுக்கு பதில் இடவும்) கருத்தை முன்வைக்க பழகவும்.

"1987இல் புலிகள்" இப்படி எழுதினால் இதற்குள் நிற்கவும். கருணாநிதி ... மட்டை மாடு காவோலை என்று 1987இற்கும் சம்மந்தமில்லாது  புலிகளுக்கும் சம்மந்தமிலாதவற்றை எழுதுவதை நிறுத்திவிட்டால். தேவையில்லாமல் திரி நீளாது.

 

கருத்தாட தெரியவில்லை என்றால்...... ஒரு நாளிக்கு இத்தனை கருத்து குறைந்த பட்சம் பதிய வேண்டும் என்று எந்த கடாயமும் இங்கு இல்லை என்று நினைக்கறேன். அதலால் இவருக்கும் அவருக்கும் தொடர்பு அது இது என்று அவதூறு எழுதுவதையாவது நிறுத்த முயற்சி செய்யலாம். அது தனிமனித தாக்குதலை விட  கேவலம் ஆனது. 

 

அல்லது எனது கருத்திற்கு யாரும் பதில் இடும் உரிமையை ரத்து செய்து. எனது கருத்தை தேவ வாக்காக அறிவிக்க வேண்டும் என்று நிர்வாகத்திடம் கேட்டு பாருங்கள்.  

இதில் என்ன சந்தேகம் அநேகமான திரிகளை எடுத்துப் பார்த்தால் சீண்டல்களை ஆரம்பித்தது,திரியை திசை திருப்பியது நீங்களாகத் தான் இருக்கும்..யாராவது கேட்டவுடன் மாவீரர்களை இழுப்பது... கோசான் ஒரு கருத்தில் கூட மாவீரர்களை கொச்சப்படுத்தி எழுதியதை நான் காணவில்லை. இன்னும் சொல்லப் போனால் எதிராக எழுதுபவர்களை விட ஆதரவாக எழுதுகின்றோம் என சொல்பவர்கள் அதிகம் புலிகளை அவமானப்படுத்துகிறார்கள்

Link to comment
Share on other sites

த சூ,

இப்போதும் பழைய நினைப்பில் ஈசல் கலைக்கிறியள் :) கடந்த கால மேட்டிமையில் வாழும் பரிதாபத்துக்குரிய ஜீவன்கள்.

கலோ மை டியர் கோசான் சே ,நாங்கள் அப்போதும்  அப்பிடித்தான் இப்போதும் அப்பிடித்தான்  விடுதலை, நிம்மதியான வாழ்வு எமக்கும் எம் மக்களுக்கும் கிடைக்கும் வரை இப்[படித்தான் இருப்போம் . நயவஞ்சகர்களும் ,நாதாரிக்கூட்டங்களும் விசப்பாம்புகளும் எம்மை சூழ்ந்த ,சூழ்ந்திருக்கின்ற எம்  விடுதலை பாதையில்  அன்றும் சரியாகவே எல்லாம் நடந்தது ,இன்றும் சரியாகவே எல்லாம் நடக்குது ,இனியும் சரியாகவே எல்லாம் நடக்கும் ..........நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் ,உங்கள் எழுத்துக்கள் நிச்சயம் விடுதலை நோக்கிய உறுதியுள்ள மக்களை ஒன்றும் செய்ய முடியாது .ஏனனில் எத்தனையோ பயங்கரமான பயமுறுத்தல்களை எல்லாம் கடந்து இன்றும் உறுதியாய் நிற்கின்றனர் ..அதனோடு ஒப்பிடும்போது உங்கள் எழுத்துக்கள் தூசு மிட்டாய் ............. :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1948 இல் இருந்து ஒரு சிங்களவனும் தமிழனுக்கு தீர்வு தரேல்ல. எனியும் தரப்போறதில்லை. தமிழர்கள் தேசிய தலைவரின் காலத்துக்கு முந்திய ஏமாற்றும்.. ஏமாறும் அரசியலை நோக்கி விரைந்து போய்க்கிட்டிருக்கிறார்கள். அதில் மைத்திரிபால அரசியலும் அடங்கும்.

 

இவர் எல்லாம்.. மகிந்தவின் காபன் கொப்பி. கொடிய சுதந்திரக் கட்சி சிங்களவர்கள். எப்படி எமது அரசியல்வாதிகள்.. ஒரு இனப்படுகொலையாளனான.. சரத்பொன்சேகாவுக்கு வாக்கு கேட்டு அவருக்கு வெள்ளையடிச்சார்களோ.. அதேபோல.. இவருக்கும் அடிக்காமல் விட்டாலே பெரிய காரியம்.

 

மகிந்தவை உள்ளூர் அரசியல் கொண்டு விழுத்தி எமக்கு ஒன்றும் ஆகப் போறதில்லை. மகிந்த தண்டனை பெற வேண்டிய இடம் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம். அங்கு சரத்.. சந்திரிக்கா போன்றோரும்.. நிற்க வேண்டியது அவசியம்..! ஏன் ரணிலும்.. கூட. இந்த மைத்திரிபால வும் கூட. இவர் சுதந்திரக்கட்சியில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு எதிராக செய்த அரசியல் என்பது இன்று இலகுவாக மறக்கப்பட்டுக்கிட்டு இருப்பது நல்லதல்ல..!! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.