Jump to content

நினைவஞ்சலி : எஸ்.பொ: வரலாற்றில் வாழ்பவர்


Recommended Posts

yespo_2227683f.jpg
 
ஈழ மண்ணில் பிறந்து, ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து, பெரும்பான்மை வருடங்களைத் தமிழ்நாட்டில் தமது அயராத இலக்கியப் பணியில் கழித்த எஸ்.பொ என்னும் எஸ்.பொன்னுத்துரை நவம்பர் 26-ம் தேதி காலமானபோது ‘இறுதியில் இந்தச் சாலையில்தான்/ வந்தாக வேண்டும் நான்/ என நன்றாகத் தெரியும்/ ஆனால்/ இன்றுதான் அந்த நாள் என்று/ எனக்குத் தெரியாது நேற்று' என்ற ஜென் கவிதைதான் நினைவுக்கு வந்தது.
 
எழுத்துப் பணி ஒரு போர்
 
ஈழத்தின் ‘இலக்கியப் பொன்னு' என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.பொ.வின் மரணம் முதுமையின் நிசர்சனம் சுமந்தாலும், இழப்பின் துயர் அதனோடு மல்லுக்கு நிற்கிறது. தன்னை மூன்றாம் உலகப் படைப்பாளியாக அறிவித்துக் கொண்ட எஸ்.பொ., ஈழத்தின் இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கு முக்கியமான பங்களிப்பை நல்கியவர். இன விடுதலைப் போரில் மரணமடைந்த தன் மகன் மித்ரவின் நினைவாகவே சென்னையில் ‘மித்ர’ பதிப்பகத்தைத் தொடங்கினார். அதன் முக்கியக் களப்பணி - புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழர்களின் படைப்புகளை வெளியிடுவது. அதன் மூலம் தமிழகத்தில் அதுகாறும் அவ்வளவாக அறியப்படாத ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பை ஆவணப்படுத்துதலுமாகும்.
 
உலக இலக்கியம் பற்றிய அறிவும், ஆங்கில மொழித் தேர்ச்சியும், மொழியாக்கத் திறமையும் பெற்ற அவர், ‘என் எழுத்துப் பணி போரே' என அறிவித்து அதன்படியே வாழ்ந்தும் படைத்தும் காட்டியவர். அனைத்து உலக இலக்கியங்களையும் அங்கீகரித்து, நயந்து போற்றுகின்ற சார்பற்ற விமர்சகர், ரசனையாளர்!
 
போர்க் குணமிக்க படைப்பாளி
 
1961-ல் அவரது ‘தீ’, ‘சடங்கு’ ஆகிய புதினங்கள் வெளிவந்தபோது அவர் பிரச்சினைக்குரிய படைப்பாளியாக ஈழ, தமிழ்நாட்டு இலக்கிய உலகில் விமர்சிக்கப்பட்டார். அவ்விமர்சனங்களை எஸ்.பொ. எதிர்கொண்ட விதம் அபாரமானது - “மொராலிட்டி என்பதைத் தமிழர்கள் ஏன் எப்போதும் பாலுணர்வு சார்ந்து மட்டுமே பொருள் கொள்கின்றனர், எனது பலவீனங்களைச் சொல்லவும், ஒப்புக் கொள்ளவும் நான் ஏன் கூச்சப்பட வேண்டும்?” என 55 ஆண்டுகளுக்கு முன்பே துணிச்சலுடன் கேட்டவர்.
 
1932-ல் ஈழத்தின் நல்லூரில் பிறந்த எஸ்.பொ, தமிழ்த்துவம், தமிழ்த் தேசியம், இன விடுதலை, புலம்பெயர் தமிழர் தம் கெளரவ முகம் மீட்டெடுத்தல் - இவற்றைத் தன் எழுத்து ஊழியத்தின் அச்செனக் கொண்டவர். சிறுகதை, புதினம், நாடகம், காப்பியம், கட்டுரை, தன் வரலாற்று நூல், மொழிபெயர்ப்பு எனத் தான் இயங்கிய அத்தனை தளங்களிலும் சாதீயத்தை, அரசியல் ஊழல்களை, இலக்கியக் கோஷ்டிகளின் வெற்றுக் கோஷத்தைத் தொடர்ந்து எதிர்த்தவர். மரபுகளை, வைதீகச் சடங்குகளை, இசங்களைக் கேள்விக்குட் படுத்தி அவற்றைத் தூக்கி எறிந்த போர்க் குணமிக்க, நவீனப் படைப்பாளியென்பதே அவரது அடையாளம்.
 
ஈழ அரசியலின் குரல்
 
இலக்கியத்தில் மட்டுமல்ல; கல்வித் துறையிலும் ஈடுபாட்டோடுப் பங்களித்தவர். இலங்கையில் தமிழ்ப் பாடத்திட்ட ஆசிரியராகப் பணியாற்றிப் பின் நைஜீரியாவிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அச்சமயம் ஆப்பிரிக்க இலக்கியத்தின் முக்கியமான படைப்புகள் சிலவற்றை மொழிபெயர்த்தவர். தனது இளமை காலத்தைக் கம்யூனிஸ இயக்கத்தில் கழித்தவர். கட்சி சார்ந்தவராக இருக்க இயலாததால், அவர் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளராகச் சித்தரிக்கப்பட்டாலும், அவரது எழுத்துகளை ஆழ்ந்து பயில்கின்ற மார்க்சியத் திறனாய்வாளர்கள் இக்கருத்திலிருந்து நிச்சயமாக மாறுபடுவார்கள்.
 
எஸ்.பொ-வின் படைப்புகளை ஒருசேரப் படித்தால் ஈழத்தின் அரசியல், சமூகப், பண்பாட்டு வரலாற்றை ஒரு கழுகுப் பார்வை பார்த்த அனுபவம் வசப்படும். அவ்வகையில் இந்த ‘யாழ் நிலத்துப் பாணன்’ (ஜெயமோகன் காலம் இதழில் எஸ்.பொ. குறித்து எழுதிய கட்டுரையின் தலைப்பு இது) ஈழ மண்ணின் தமிழ் வரலாற்றைத் தனது ‘மகாவம்ச’வின் மொழிபெயர்ப்பு மூலம் மீட்டெடுத்த பாணனும்கூட.
 
அவரது மரணம் தமிழ் உலகுக்கு மட்டும் அல்லாமல்; தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு. தமிழச்சி எனும் புனைபெயரில் எனது ‘எஞ்சோட்டுப் பெண்’ தொகுப்பை மித்ர மூலம் வெளியிட்டு இலக்கிய அரங்கில் என்னை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். அறிவுமதி, யுகபாரதி, ரவிக்குமார், பச்சியப்பன் என்று என் நண்பர்கள் பலரையும் நான் பெற்ற இடமாகவும், மாலை வேளைகளில் ‘முன்னத்தி ஏர்’ ஒன்று பிஞ்சுகளைச் செதுக்கிய பயிற்சிப் பாசறையாகவும் அவரது பதிப்பகம் இருந்தது.
 
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, எஸ்.பொ- வின் நெருங்கிய நண்பர். அவரைச் சந்தித்துத் துக்கம் பகிரச் சென்றபோது, எஸ்.பொ.வின் முகமூடியற்ற எழுத்து, வாழ்வு குறித்து உரையாடினோம். “ஆல்பர்ட் மொராவியா எனும் புகழ் பெற்ற எழுத்தாளரிடம், ‘நீங்கள் ஆரம்பத்தில் எழுதிய கதைகளுக்காக இன்று வருத்தப்படுவதுண்டா?’ எனக் கேட்கப்பட்ட போது, ‘ அப்படி வருந்தினால் நான் மொராவியோவாக இருக்க முடியாது. என்னால் இன்றும் அக்கதைகளை அப்படித்தான் எழுதியிருக்க முடியும்’ எனச் சொன்னார். எஸ்.பொ.வும் ஆல்பர்ட் மொராவியா போலத்தான்” என்றார் இந்திரா பார்த்தசாரதி.
 
எஸ்.பொ-வின் ‘மாயினி’, சமகால ஈழத்தின் அரசியல் சூழலைப் பகடிசெய்து எழுதப்பட்ட அற்புதமானதொரு புதினம். அவர் மறைந்த இக்கணத்தில் அவர் படைப்புகளை நினைவுகூர்தலே அவருக்கான சரியான அஞ்சலியாக இருக்க முடியும்.
 
- தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர், கட்டுரையாளர்.​​
 
yess_2227679a.jpg
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.