Jump to content

நரகாசுரனுக்கு அஞ்சலிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¿øÄ ´Õ ¸ÕòÐ ¬É¡ þôÀÊÂ¡É ¸ÕòÐì¸¨Ç ¿¡õ ±ôÀ§Å ¬ÃõÀ¢îÍ þÕ츧ÅÛõ ¬É¡Öõ þôÀ×õ ¸¡Äõ ¸¼óРŢ¼Å¢ø¨Ä.............

Link to comment
Share on other sites

  • Replies 245
  • Created
  • Last Reply

சாணாக்கியன் உங்கள் கேள்விக்கான பதில் சபேசனின் இந்தக் கட்டுரையில் இருக்கிறது படித்துப்பாருங்கள்.

‘தமிழர் பண்பாட்டுக்கு எதிரானதே, இராமாயணம்’ - தம்பி பிரபாகரனின் தெளிவான பார்வை

இராமாயண இதிகாசம் - ஆரிய, திராவிடப் போராட்டத்தின் வெளிப்பாடு என்று, தந்தை பெரியார் கூறி வந்தார். அதே கருத்தை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், ஈழத் தமிழர்களிடையே பரப்பி வருகிறது.

இக்கருத்தை மய்யமாகக் கொண்டு தமிழ் ஈழத்தில் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான ‘புலிகளின் குரல்’, ‘இலங்கை மண்’ என்ற தொடர் நாடகத்தை - 53 வாரங்கள் ஞாயிற்றுக் கிழமை தோறும் ஒலிபரப்பியது. கலை இலக்கியவாதியும், பகுத்தறிவாளருமான பொன்.கணேசமூர்த்தி எழுதி இயக்கிய இந்த நாடகத் தொடர், ஈழத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சில பழமை விரும்பிகள், ராமாயணத்தின் பாதுகாவலர்கள் - இதற்கு எதிர்ப்புக் காட்டவும் தயங்கவில்லை. ஆனாலும், தமிழர் பண்பாட்டை சிதைத்த ஆரியத்தை அம்பலப்படுத்திய இந்த நாடகத்தைத் தொடர்ந்து பார்த்துவந்த ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரன் மீண்டும் இந்த நாடகத்தை மறு ஒலிபரப்புச் செய்யுமாறு பணித்ததைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக நாடகம் ஒலிபரப்பானது. அதைத் தொடர்ந்து, இந்நாடகத்தின் உரையாடலை - ‘புலியின் குரல்’ வானொலி, நூலாகவும் வெளியிட்டு, தமிழர்களிடையே பரப்பி வருகிறது.

அந்நூலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்தப் பொறுப்பாளரும், தமிழ் ஈழக் கல்விக் கழகத்தின் பொறுப்பாளருமான வெ.இளங்குமரன் வழங்கியுள்ள நயப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“தமது வரலாற்று இலக்கியங்களான ஐம்பெரும் காப்பியங்களினால் பண்டைத் தமிழர் தமிழன்னையை அழகுபடுத்தி மகிழ்ந்தனர். தொன்மைச் சிறப்பும் மேன்மையும் மிக்கவர்களாகத் திகழ்ந்த தமிழர்கள் மீது பிற்காலத்தில், ஆரியம் மேற்கொண்ட பண்பாட்டுப் படையெடுப்பினால், தமிழினத்தைப் பெருமைப்படுத்தி வந்த ஐம்பெருங்காப்பியங்கள் மறைக்கப்பட்டு, புனை கதைப் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு கலப்பு மொழி நடையில் ஆக்கப்பட்ட இதிகாசங்கள் தமிழ் மக்களிடையே விதைக்கப்பட்டன.

சிங்கள இனத்தை மேன்மைப்படுத்தி, தமிழினத்தை இழிவுபடுத்தும் நோக்கோடு மகாவம்சம் எவ்வாறு படைக்கப்பட்டதோ அது பான்றே, மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் அறநெறி இலக்கியங்கள் மறைக்கப்பட்டு, தமிழர் வரலாறு பண்பாடுகளோடு தொடர்பற்ற இதிகாசங்கள் பல படைக்கப்பட்டன.

இந்த வகையிலே படைக்கப்பட்டதுதான் தமிழ்மன்னன் இராவணனையும் தமிழினத்தையும் இழிவுபடுத்தும் இராமர் கதை.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகப் பொதுமைக்கு வழிகாட்டி வந்த தமிழினத்துக்குள் இவ்விதிகாசங்கள் பகையை மூட்டி உடன்பிறந்தாருக்குள் பிரிவினையை ஏற்படுத்தின.

தமிழர்களை இராக்கதர்கள் என்றும், இரக்கமற்ற அரக்கர்கள் என்றும் திட்டித் தீர்த்தன. தமிழர் தெய்வமெனப் போற்றும் பெண்ணினத்தை இழிவு செய்தன. பகுத்தறிவாளர்களாகத் திகழ்ந்த தமிழர்களை மூடத்தனத்துள் மூழ்க வைத்தன. அறநெறிக்குப் புறம்பான சூழ்ச்சிப் படுகொலைகளுக்கும் இன அழிவுக்கும் வகை செய்தன.

இவை போன்ற நச்சு விதைகளைத் தமிழ் மக்களிடையே விதைக்கும் “திருப்பணி” ஆயிரமாண்டுகளுக்கு மேலாக இன்றும் இடைவிடாது தொடர்கின்றது.

இவற்றை எதிர்த்து தமிழகத்தில் பல போர்க் காவியங்களும் இலக்கியங்களும் தமிழறிஞர் பெருமக்களால் படைக்கப்பட்டன.

இவை போன்றே தமிழினத்துக்கு நாட்டுப் பற்றையும் இனப்பற்றையும் ஊட்டி, வழிகாட்டி நெறிப்படுத்தும் ஓர் அரிய படைப்பு தமிழீழத்திலே நண்பர் பொன்.கணேசமூர்த்தி அவர்களாலே படைக்கப்பட்டது.

“இலங்கை மண்” என்ற பெயரில் புலிகளின் குரல் வானொலியில் ஓராண்டுக்கும் மேலாக, தொடர் நாடகமாக ஒலிபரப்பப்பட்டு வந்த பொன். கணேசமூர்த்தி அவர்களின் வானொலி நாடகம், தமிழ் மன்னன் இராவணனுக்கும், தமிழினத்துக்கும், இலங்கை மண்ணுக்கும் எதிராக ஆரியம் இழைத்த கபடச் சூழ்ச்சிகளைப் புட்டுப்புட்டு வைத்தது.

இராவணனின் தம்பி விபீடணனுக்கு அரியணை அவாவினை ஊட்டி, சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைத்து, அவன் துணையோடு மாமன்னர் இராவணனுக்கெதிராக போரியல் நடைமுறைக்கு மாறான கபடப் போர் நடத்தி, அவனைக் கொன்றொழித்த ஆரிய இராமனைப் போற்றியும் இராவணன் மீது வீண்பழி சுமத்தியும் வந்தவர்களுக்குச் சாட்டையடி கொடுப்பதுபோல அமைந்தது ‘இலங்கை மண்’ வானொலி நாடகம்.

தமிழீழ மக்களிடையே பெருவரவேற்பைப் பெற்ற இலங்கை மண் நாடகத்தை, மக்கள் வேண்டுகோளை ஏற்று புலிகளின் குரல் மீளவும் ஒலிபரப்பியது.

இன்று அந்த அரிய நாடகம், ஒலி வடிவிலிருந்து நூல் வடிவுக்குக் கொண்டுவரப்படுவது வரவேற்கத்தக்கது.

ஏனெனில், வானொலியில் நாடகமாக ஒலித்தபோது அதனைக் கேட்டு விழிப்படைந்தவர்களைவிட நூல் வடிவில் வரும் இலங்கை மண்ணை வாசிப்பதனூடாகக் கூடுதலானவர்கள் பயனடைவார்கள்”

- என்று எழுதியுள்ளார்.

இந்த நூலுக்கு - தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வழங்கியுள்ள வாழ்த்துரை - இராமாயணம் பற்றிய அவரது பார்வையை விளக்குகிறது. புலவர் குழந்தையின் நூல்களை கலைஞர் ஆட்சி அரசுடைமையாக்கிய சூழ்நிலையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஈழத் தமிழ்த் தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன் கருத்தை இங்கே பதிவு செய்கிறது:

“மனிதகுல வரலாற்றில் மனிதர் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒத்திசைவாக ஒரு போதும் இருந்ததில்லை. மனிதன் குடும்பமாக, குழுவாக, இனக் குழுவாக வாழ்ந்த நாளிலிருந்து அவனுக்குள் முரண்பாடுகள் தலைதூக்கின. அவை முற்றி, மோதல்களாக வெடித்தன. அனைத்தையும் ஆள வேண்டும் என்ற ஆசை அவனிடம் பிறந்தது. மனிதனே மனிதனுக்கு விரோதியாக மாறும் விந்தை நிகழ்ந்தது.

தான் சாராத பிறரை எதிரியாகக் கண்டான். அவர்களைத் தீண்டத்தகாதோராக விலக்கி வைக்க முயற்சித்தான். மனிதகுல விரோதியாக, கொடியோராக, கொடுமைக்காரராக, மனிதரே அல்லாத ‘அரக்கராக’ முத்திரை குத்திப் பொய்யான கதைகள் கட்டினான். காலம் காலமாகக் கட்டியெழுப்பப்பட்ட அவர்களது வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கோலங்களையும் ஈவிரக்கமின்றிச் சாடினான். அவர்களை அடியோடு அழிப்பதே தர்மம் எனப் போதனை வேறு செய்தான். கடவுட் கோட்பாட்டைத் துணைக்கு அழைத்துத் தன்னைத் தெய்வ அவதாரமாகக் காட்டிக் கொண்டான். பொய்யான விளக்கங்களை வியாக்கியானங்களைக் கொடுத்தான். தான் வாழ்ந்தாற் போதும் என்ற சுயநலத்துடன் தனது எதிரிகள் மீது ஈவிரக்கமின்றிப் போர் தொடுத்தான்.

இப்படியாக ஒருவரது அழிவில், இன்னொருவரது வெற்றியிற் புதிய வரலாறு எழுதப்பட்டது. உண்மை வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பொய்களையும், புழுகுகளையும் புகுத்திப் புதிய வரலாறு, வெற்றிபெற்ற மனிதனுக்குச் சார்பாக எழுதப்பட்டது. சூதுகளையும், சூழ்ச்சிகளையும் செய்து, கோழைத்தனமாக, வஞ்சகமாக எதிரியைக் கொன்ற அசிங்கம் அதில் சொல்லப்படவில்லை. உண்மை வரலாறு இறந்தவர்களின் புதைகுழிகளின் இருளுக்குள் அப்படியே அடங்கிப் போனது.

இதே கதிதான் இலங்கை மண்ணை ஆதியில் ஆண்ட தமிழ் மன்னனான இராவணனுக்கும் நிகழ்ந்தது. அன்றைய போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ் மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரிபில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

தலைகீழாகத் திரித்துவிடப்பட்ட இந்த வரலாற்றின் தாக்கம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் முடிவுறவில்லை. இன்னமும் அது இலங்கை மண்ணை ஆட்டிப் படைக்கிறது. இலங்கைத் தீவின் அரசியல் முகத்தையும் அது சிதைத்து விட்டிருக்கிறது. சிங்கள இனம் வழிதவறிச் சென்று, தமிழ் மண்ணிலேயே, தமிழர் காலம் காலமாக அடிமைகளாக அவலமான வாழ்வு வாழவும் நிர்ப்பந்தித்திருக்கிறது.

இந்த அவலமான வாழ்வுடன் தமிழர் தமது சுயத்தை இழந்து, தமது முகவரியை இழந்து, அடையாளமற்ற வெற்று மனிதர்களாகத் தொடர்ந்தும் வாழ முடியாது. தமது மூலத்தையும் தனித்துவத்தையும் ஆதி வரலாற்றையும் உலகிற்கு உறுதியாக முன்வைக்க வேண்டிய தேவையும் கடப்பாடும் தமிழருக்கு இன்று இருக்கிறது. திரு.பொன்.கணேசமூர்த்தி அவர்கள் இந்தத் தேவைகளையும் கடப்பாடுகளையும் கவனத்திற் கொண்டு, கடந்த காலக் கற்பனைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து, வரலாற்றுத் திரிபுகளுக்குச் சாட்டையடி கொடுத்து, தமிழரின் பண்டைய சரித்திர வரலாற்றை அதன் உண்மைப் பக்கங்களில் இலங்கைமண் என்ற பெயரில் நாடகமாக வடித்து, நூலாக வெளியிடுவது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது.

- என்று மேதகு பிரபாகரன் நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார். http://www.webeelam.com/

Link to comment
Share on other sites

ஈழவன்85 இங்கு வந்து அஞ்சலியும் தெரிவித்துவிட்டு "தீபாவளி வாழ்த்துக்கள்" பகுதியில் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

ஈழவனுக்கு என்ன குழப்பம்?

நான் கொண்டாடுவதில்லை ஆனால் கொண்டாடுபவர்க்கு நான் எதிரியுமல்ல அது அவரவர் விருப்பம் ஆகவே தீபாவளியை கொண்டாடும் எம் கள நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்தை தெரிவித்தேன் என்னை தனிமடலில் தொடர்புகொண்டு வாழ்த்தியவர்ருக்கும் வாழ்த்தி தனிமடல் அனுப்பினேன்.இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக நான் இருந்தேன் என நான் நினைகிறேன்.சபேசன் இதில் ஏதும் பிழையிருப்பின் சுட்டிக்காட்டவும்

Link to comment
Share on other sites

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். துன்ப இருள் நீங்கி இன்ப ஒளி அனைவர் வாழ்விலும் பரவட்டடும்.

துன்பமே.. நரகாசுரன் ( கற்பனைப் பாத்திரம்) இன்பமே.. விஷ்ணு ( அதுவும் கற்பனைப் பாத்திரம்) இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

நரகாசுரனையும் கண்டதில்லை விஷ்ணுவையும் கண்டதில்லை. அதில ஆரிய திராவிட பிரிவினை வேற. கொஞ்ச ***** கூட்டம் ஓசில விளம்பரம் தேட தங்கள் மேதாவித்தனம் சிந்தனையில் வெளிப்படுவதாகக் காட்ட ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் ஒரு நாளை என்றாலும் மகிழ்வாக ஒன்றுகூடி மனம் மகிழ வாழ அனுமதிப்போம்.

நெடுக்காலபோவான் குறிப்பிட்ட ****** என்பது இங்க எல்லோருக்கும் நல்லாத் தெரியும்.

***** நீக்கம்-யாழ்பாடி

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறவர்களாக நினைப்பவர்களிற்கு உறைக்க சொல்வதானால் தமிழீழ விடுதலைப் போராட்டம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுமானால் ஒரு பயங்கரவாதம் என்று தற்போது சிறீலங்காவால் கூறுவதுபோல் தான் வரலாற்றில் அது இடம் பெறும். 50....100 வருடங்களின் பின்னர் பாடசாலைகளில் ஆடி 05 உம் கார்த்திகை 27 உம் தீபாவளி போன்று தான் தீமை நீங்கி நன்மை வந்த நாட்களாகவும் சுபீட்சம் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தும் நாட்களாகவும் ஒன்று கூடி கொண்டாடுவார்கள். யார் யாருரடைய உருவங்களிற்கு கோர பற்களும் கொம்புகளும் முளைத்திருக்கும் எவ்வாறு வீதி தோறு ஊர்வலாமாக எடுத்து செல்லப்பட்டு எரிக்கப்படுவார்கள், யார் நன்மை காக்க வாழ்வு வழங்க வந்த கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுவார்கள் என்றதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

மேலும் முல்லைத்தீவில் சிறை வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சிறுமிகள் விமானத்தில் வந்த தேவர்களால் காப்பாற்றப்பட்டு கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டனார்....

முத்தையன்கட்டில் 480 உணவு பொட்டலங்கள் போடப்பட்டது....

என்று தான் 100...200 வருடங்களில் இதிகாசங்கள் சொல்லும்.

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் குறிப்பிட்ட "******" கூட்டத்திற்குள் அடங்குகின்ற சிலர்

தேசியத் தலைவர்

மூத்த உறுப்பினர் பாலகுமார்

நிதித்துறைப் பொறுப்பாளர் பரா

பழநெடுமாறன்

சுபவீரபாண்டியன்

வீரமணி

திருமாவளவன்

இப்படி பலர் உண்டு. நம்பவில்லை என்றால் கேட்டுப்பாருங்கள். நாட்டில் இருந்து நேரடியாக செய்திகளை எடுக்கும் வன்னிமைந்தனும் நாட்டுக்கு தொடர்பு கொண்டு கேட்டுப்பார்க்கலாம்

Link to comment
Share on other sites

தைப் பொங்கலை பெரிதாக கொண்டாடிய விடுதலைப்புலிகள் தீபாவளியை ஏன் கொண்டாடவில்லை என்று சிந்தித்துப் பாருங்கள். நாம் சொல்வதில் உள்ள உண்மை விளங்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாராயனசூவாமி எழுதிய இலுசிவ் மயின்ற் ஒவ் பிரபாகரன் என்ற புத்தகத்தில் தேசிய தலைவரின் ஊரில் சிவன் கோவில் இருப்பதாகவும் சிவன் அழித்தல் தொழிலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இன்றும் இந்த வட இந்தியர் எம்மவரை மட்டம் தட்டிதான் எழுதுகிறார்கள்.......எம்மை அறியாமலெ இந்த கடவுள் என்ற மாயைக்குள் அகப்பட்டு எமது அடையாளங்களை இழந்துவிடுகிறோம்..இழந்துகொண்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் குறிப்பிட்ட "*******" கூட்டத்திற்குள் அடங்குகின்ற சிலர்

தேசியத் தலைவர்

மூத்த உறுப்பினர் பாலகுமார்

நிதித்துறைப் பொறுப்பாளர் பரா

பழநெடுமாறன்

சுபவீரபாண்டியன்

வீரமணி

திருமாவளவன்

இப்படி பலர் உண்டு. நம்பவில்லை என்றால் கேட்டுப்பாருங்கள். நாட்டில் இருந்து நேரடியாக செய்திகளை எடுக்கும் வன்னிமைந்தனும் நாட்டுக்கு தொடர்பு கொண்டு கேட்டுப்பார்க்கலாம்

நரகாசுரன் தமிழன். இராவணன் தமிழன். கடவுள் எல்லாம் சிங்களவன் ஆரியன் என்று மேல நீங்கள் பட்டியலிட்டவர்கள் எங்க சொல்லி இருக்கினம் என்று ஒருக்கா சொல்லிறீங்களோ? தேசிய தலைவரையும் உங்களின் மேதாவித்தனச் சிந்தனைக் குப்பைகளைக் கொட்ட சாட்சிக்கு இழுத்திட்டியள் போல.

நாளைக்கு ஜேசு கிறிஸ்துநாதர் வெள்ளைக்காரன். நத்தார் கொண்டாடுவது தமிழ் தேசிய விரோதம் என்றுவீர்கள் போல இருக்குதே.

நரகாசுரன் சரி இராவணன் சரி எல்லாம் கற்பனை கதாபாத்திரங்கள். இவர்கள் பூமியில் வாழ்ந்தார்கள் என்பதற்கே சான்றுகளில்லை. அதிலும் இவர்களை துவம்சம் செய்த விஷ்ணுவும் சரி இராமனும் சரி கடவுளா பூமியில் வாழ்ந்தற்கு ஏதாச்சும் சான்றுகள் வெறும் சிலைகள் தான் இருக்கிறது. அதற்கு மேல ஏதாச்சும் சான்றுகள் வைச்சிருக்கிறீங்களோ?

தயவுசெய்து இலக்கிய புராணக் கட்டுக்கதைகளை மையமாகக் கொண்ட புனைகதைகளுக்குள் ஒரு இனத்தில் விடுதலைக்காக போராட்டம் நடத்தும் சக்திகளின் பெயர்களை இட்டு அவர்களை கலங்கப்படுத்தாதீர்கள்.

நீங்கள் தான் அரைவேக்காட்டுத்தனமாக இருக்கிறீர்கள் என்றால் ஏன் உங்களுக்கு சாட்சியாக அவர்களையும் இங்கிழுத்து அவர்களின் உயரிய மானுடவியல் கொள்கைகளை மட்டம் தட்டுகின்றீர்கள். இது எதிரியின் எதிர்ப் பிரச்சாரத்தை விட மோசமானது.

எங்களைப் பொறுத்தவரை கொண்டாட்டங்கள் மனித மனங்களுக்கு ஒரு ஓய்வும் மகிழ்வும் அளிக்கும் நிகழ்வுகள். அதற்குள்ளும் அநாவசிய தமிழன் சிங்களவன் ஆரியன் திராவிடன் என்ற பாகுபாடுகளைப் புகுத்தி மக்களின் நிம்மதிக்கான சந்தர்ப்பங்களை அழிக்க நிற்காதீர்கள்.

நாங்கள் தமிழர்கள் என்பதற்காக நபிகள் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று சொல்லவோ நோன்பின் போது இஸ்லாமிய சகோதரர்களுடன் கூடி மகிழ வேண்டாம் என்றவோ அதைக் கொண்டாட வேண்டாம் என்று சொல்லவோ யாருக்கும் உரிமை கிடையாது.

நரகாசுரன் உங்கள் கற்பனையில் உதித்தது போல ஒரு தமிழனாக இருந்தாலும் அவன் புராணக் கதையில் வந்தது போல தேவர்களுக்கு தீமை செய்ததற்காய் தண்டிக்கப்பட்டதற்கு சான்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பதை ஏற்றுக் கொண்டாலும் அதைக் கொண்டாடும் மக்களோடு சேர்ந்து கொண்டாட எல்லோருக்கும் உரிமை உண்டு. அதை எவரும் மறுக்க முடியாது. கொண்டாட்டங்கள் என்பது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனை சிறு ஓய்வெடுத்து ஒன்று கூடி ஆறுதல் பெற என்று தான் சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவை சில மானுடவியல் பண்புகளை வெளிப்படுத்துகின்றன. நரகாசுரன் என்பது மனிதனைச் சூழும் துன்பங்களாகி நிற்கிறது. விஷ்ணு என்பது மனிதன் நாடிச் செல்லும் இன்பமாக உள்ளது. அந்த வகையிலேயே தீபாவளியும் மனித மனங்களின் இருந்து நான் என்ற ஆணவத்தால் எழுந்த துன்பங்களை நீக்கி நாம் என்ற அடக்கத்துடன் அயலவர்களுடன் கூடிக் கொண்டாடி மனதளவில் இன்புற்று இருங்கள் என்பதுதான் சொல்லப்படுகிறது.

நீதிக் கதைகளில் விலங்குகள் மனிதர்களாகப் பேசவில்லையா? காகம் நரி பேசவில்லையா? சிட்டுக்குருவி குரங்கு பேசவில்லையா? அங்கு கதைகளில் உண்மைத் தன்மை இல்லை என்றாலும் கதைகள் காவி வரும் மானுட நீதி என்ன என்பதே நோக்கப்படுகிறது. அந்த வகையினதே புராணங்கள் என்பவையும். கற்பனையில் எழுந்தவை. சில மானுடவியல் நீதிகளைக் காவி வருகின்றன. அந்த அகையோடு நோக்கி கொண்டாட்டங்களை இன மத நிற மனித வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல் மானுட நீதி வேண்டிக் கொண்டாடி மகிழுங்கள். அவற்றுள் அநாவசிய இனவாத மதவாத மொழிவாத மனித மன வெறித்தனங்களைப் புகுத்தி மக்களின் மனங்களில் அநாவசிய இனவாத வெறியைப் புகுத்தாதீர்கள்.

பேரினவாதத்தின் திணிப்புகளுக்குள் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களை நோக்கி அநாவசிய திணிப்புக்களை கற்பனைகளின் அடிப்படையில் முன்னிறுத்தாமல் மக்களின் மனங்களில் கொண்டாட்டங்கள் தாங்கி வரும் மானுடவியல் பண்புகள் நீதிகளை எடுத்துக்காட்டுங்கள். நரகாசுரன் விஷ்ணு போன்ற காலவோட்டத்தில் புகுத்தப்பட்ட கற்பனைப் பாத்திரங்களைக் களைய அதுவே உதவும். அதைவிடுத்து தீபாவளி நத்தார் நோன்பு தமிழர் பண்டிகை இல்லை. கொண்டாடாதேங்கோ என்று சொல்லி தமிழர்கள் நீங்கள் அரைவேக்காட்டுத்தன சிந்தனையூடு உங்களைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

உலகெங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐதீகத்துடன் கொண்டாடுகின்றனர். ஆனால் எல்லா மனிதரும் இதன் மூலம் பெறும் பயன் என்பது மகிழ்ந்திருத்தல் என்பதாகத்தான் இருக்கிறது. ஐதீகம் என்பது அங்கு அடிபட்டுப் போகிறது, உலக நாடுகள் பலவும் இக்கொண்டாட்டங்களை அனுமதிக்கின்றன. ஆனால் நாம் எங்கும் தமிழ் இனவாதக் கருத்துக்களை விதைத்து தமிழ் தேசிய வாதத்தைப் பலவீனப்படுத்தக் கூடிய அநாவசியச் செயல்களைச் செய்து கொண்டு அதற்கு தலைவர்களின் பெயர்களையும் சாட்சிக்கு இழுத்துக் கொள்கின்றோம்.

இப்படிப் பேசுபவை முற்போக்கு அல்லது மேதாவித்தனம் என்பது போன்ற பச்சாப்புக்களை ஏமாளிகள் கண்டு ஏமாறலாம். சிந்திக்க தெரிந்த எந்த மனிதனும் இவ்வாறான ஏமாற்று வேலைகளுக்கு தன்னுள் இடமளிக்கமாட்டான்.

குறிப்பாக சபேசன் அவர்களை நோக்கி உங்களால் நரகாசுரன் என்ற புராணப்பாத்திரம் திராவிடனாக வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றைத் தேடித் தரமுடியுமா? ஆதாரமற்ற வகையில் மக்கள் மனங்களைப் குழப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உங்களை நீங்களே பொய்யர்களாக்கி உங்களின் மீதுள்ள சிறிய நம்பிக்கைகளையும் தகர்த்து நிற்காதீர்கள்.

***** நீக்கம்-யாழ்பாடி

Link to comment
Share on other sites

எனக்கு பெருவியப்பையும் கோபத்தையும் அளிக்கின்ற விடயம் ஒன்று இருக்கிறது.

பல நு}று ஆண்டுகளாக ஆபாசமும் பொய்யானதுமான கதைகளை கூறி தீபாவளி கொண்டாடுங்கள் என்று பார்ப்பனர்கள் சொன்ன பொழுது செம்மறி ஆடுகள் மாதிரி தலை ஆட்டி மறு பேச்சு இன்றி கொண்டாடியவர்கள், எங்களிடம் மட்டும் இத்தனை கேள்வி கேட்கிறார்களே??

தேசியத் தலைவர் "இலங்கை மண்" என்ற நு}லுக்கு எழுதிய வாழ்த்துரையை படித்துப் பாருங்கள். அவருடைய சிந்தனை விளங்கும். பொங்கலை கொண்டபடியவர்கள் ஏன் திபாவளியைக் கொண்டாடிவில்லை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவின் 10 ஆண்டிற்கு தேசியத் தலைவர் வழங்கிய வாழ்த்துச் செய்தியை படித்துப் பாருங்கள். இந்து மதத்தின் முக்கிய வேதமாகிய "மனு"வை கடுமையாக சாடியிருப்பார்.

தமிழீழ நீதித்துறையின் இணையத் தளத்தில் இருக்கும் தொடர்பு இலக்கத்தின் மூலம் பரா அவர்களுடன் உரையாடிப் பாருங்கள். அதன் பிறகு சில வேளைகளில் உங்களுக்கு உண்மை புரியும்.

சுபவீ, திருமாவளவன், வீரமணி போன்றவர்களின் உரைகளை நீங்கள் கேட்கவோ, படிக்கவோ இல்லை என்று தெரிகிறது.

இன்னும் ஒன்றை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் யாரும் நரகாசுரன் என்று ஒருவன் இருந்தன் என்று சொல்லவில்லை. இருந்த ஒரு மன்னனுக்கு ஆரியர்கள் அசுரன் என்று பெயரிட்டு விட்டார்கள் என்று சொல்கிறோம். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

"இதே கதிதான் இலங்கை மண்ணை ஆதியில் ஆண்ட தமிழ் மன்னனான இராவணனுக்கும் நிகழ்ந்தது. அன்றைய போர் விதிமுறைகளுக்கு மாறாகஇ மிகவும் கபடமான வழியில் தமிழ் மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டுஇ உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரிபில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டது."

மேற்குறிப்பிட்ட வரி தேசியத் தலைவர் அவர்கள் "இலங்கை மண்" என்று நு}லிற்கு எழுதிய வாழ்த்துச் செய்தியில் வருகின்ற வரிகள்.

இதற்கு மேலும் வேறு என்ன ஆதாரம் உங்களுக்கு வேண்டும்?

Link to comment
Share on other sites

இன்னும் ஒன்றையும் நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் யாரும் "தீபாவளி ஆரியர்களின் விழா, ஆகவே கொண்டாட வேண்டாம்" என்று சொல்லவில்லை.

நத்தார், புதுவருடப் பிறப்பு, சித்திரை புதுவருடப் பிறப்பு (இதுவும் தமிழர்களின் புது வருடம் அல்ல) என்று எல்லாவற்றையும் கொண்டாடுங்கள். காதலர்தினம், அன்னையர்தினம், தந்தையர்தினம் என்று அவைகளையும் கொண்டாடுங்கள்.

ஆனால் எங்களுடைய பிரச்சனை அதுவல்ல. தமிழர்களை வெற்றி கொண்டதாக ஆரியர்கள் கொண்டாடுகின்ற நாளை தமிழர்களும் கொண்டாடுகிறார்களே என்பதுதான்.

யாழ்நகர் வீழ்ந்த நாளை சிங்களவன் கொண்டாடலாம். கொண்டாடும் மக்களோடு சேர்ந்து கொண்டாட எல்லோருக்கும் உரிமை உண்டு என்று சொல்லிக்கொண்டு தமிழர்களும் இணைந்து கொண்டாடலாமா???

Link to comment
Share on other sites

ஒண்டு மட்டும் விளங்குது நாய் வாலை நிமித்தேலாது எத்தின அவதாரம் எடுத்தாலும்,மற்றவன் எல்லரும் ****** தனமான உளறல் எண்டது மட்டும் நல்லா விளங்குது.

***** நீக்கம் யாழ்பாடி

Link to comment
Share on other sites

மிஸ்டர் நரகாசுரனுக்கு எனது அஞ்சலி :cry: :cry:

ம் வேற யாருக்கு அஞ்சலி

அது சரி உங்கை கோயிலுவளுக்கு போகேல்லையே அஞ்சலியை பாக்க (தம்பி மதன் காவல் நிக்கிறாராம் கோயில் வாசலில போகலாமே )

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

திராவிடம்பற்றி பேசும் போது வடமொழியைத் தலைப்பாக்குவதைத் தவிர்த்தால் என்ன?

ஒன்றுமில்லை அஞ்சலி என்ற சொற்பதம் எந்த மொழிக்கு உரியது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¾£À¡ÅÇ¢ ±ÁìÌ §¾¡øŢ¢ý ¿¢¨É×ýɧÁ

¾£À¡ÅÇ¢¨Â ¦¸¡ñ¼¡ÎÅÐõ ¦¸¡ñ¼¡¼Á

Å¢ÎÅÐ «ÅÃÅ÷ ¦º¡ó¾ Å¢¼Âõ ¬É¡ ÅÃÄ¡¨È

¦¾Ã¢óÐ ¦¸¡ñÎ ¦¸¡ñ¼¡Îí¸û...........

ż Á¡½¢Äò¾¢ø ±øÄ¡õ «Ãì¸¨É ¦ÅüÈ¢Â¼ó¾ ¿¡Ç¡¸ ¦¸¡ñ¼¡Î¸¢È¡÷¸û «÷¸Ç¢ý À¡÷¨Å¢ø «ó¾ «Ãì¸÷¸û¾¡ý ¿¡õ «ô§À¡ ¿¡í¸û «Ãì¸÷¸û ¾¡ý ±ýÚ ±üÚ ¦¸¡ûÙÅÁ¡?

Link to comment
Share on other sites

வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்ட விடுதலையில் வந்துள்ள கட்டுரை

தீபாவளி - ஒரு பொய் மூட்டை

பரத்வாஜன் என்பவன் ஒரு ரிஷியாம். இந்தப் பெயரில் ஆசிரமம் நடத்திக் கொள்ளையடிப்பவர்கள் உண்டு. அந்தப் பரத்வாஜன் ஆற்றில் குளிக்கப் போனான். ஏற்கெனவே குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் புற அழகைப் பார்த்துக் கொண்டிருந்தா-னாம். ரிஷிகளுக்குத் தான் காம விகா-ரமே அதிகம். எவ்வளவோ புராணக்-கதைகள் இதைக் கூறுகின்றன. அந்த விகார எண்ணத்தின் விளைவு விந்து வெளிப்பட்டு விட்டது. ஆற்று நீரில் சிந்தி விட்டது.

ரிஷிப் பிண்டம் ராத்தங்காது என எழுதி வைத்திருக்கிறார்கள். அதன்படி ஆற்று நீரில் சிந்திய விந்து சிறிது நேரத்-தில் குழந்தையாக உருவெடுத்து விட்-டது. பரத்வாஜனுக்குக் கையும் ஓட-வில்லை, காலும் ஓடவில்லை. அந்தக் குழந்தையை அப்படியே வாரிச் சுருட்டி நில மகளிடம் ஒப்படைத்தார். அதை பூமாதேவியிடம் ஒப்படைத்து வளர்க்கச் சொன்னார். விந்து தண்ணீரில் விழுந்-தால் குழந்தையாகுமா எனக் கேள்வி கேட்கக் கூடாது. எல்லாம் புராணம். அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தீபாவளி மலர் போடும் தீக்கதிர் உள்பட அனைத்துக்-கும் கோபம் வரும்.

பூமாதேவி தன் வளர்ப்பு மகனுக்குப் பெயர் வைத்தாள். பெற்றவன் அப்-படியே போய்விட்டான். வளர்த்தவள் பெயர் வைத்தாள். பவுமன் என்று பெயர். அப்படியென்றால் பூமிபுத்திரன் என்று பொருள். அப்படியென்றால் நிலமகன் என்று பொருள் . இது ஒரு புராணக் கதை..

சிவனுக்குப் பிறந்தது

இன்னொரு புளுகு. சிவனுடன் சம்பந்தப்படுத்தி ஒரு கதை. சிவன் நெற்றியில் வியர்வை வடிந்ததாம். அதிலிருந்து பவுமன் பிறந்தான் என ஒரு கதை. அவனை பூமாதேவியிடம் தந்து வளர்க்கச் சொன்னானாம் சிவன். திருட்டுப் பிள்ளைகளை வளர்க்கும் ஆளா பூமாதேவி? விளங்கவில்லை.

இவன் தவம் செய்தானாம். பல்லா-யிரம் ஆண்டுகளாகத் தவம் செய்தா-னாம். சிவன் கடைசியாக அவன் முன் வந்தானாம். என்ன வேண்டும் என்று கேட்டானாம்.

நான் கடைசி வரை சாகவே கூடாது - எத்தனை யுகமானாலும் நான் வாழ வேண்டும் என்ற வரம் கேட்டானாம். கேட்டது - மகன். கேட்பது - அப்பனிடம். ஆனால், உறவு முறை இருவருக்கும் தெரிந்ததா எனத் தெரியவில்லை. புராணம் அதைத் தெரிவிக்கவில்லை. எனினும் அப்பன் மகனிடம் சொன்னா-னாம் - உனக்கு மிகமிக அதிக ஆசை. மண்ணுலகில் வாழும் எவனும் இறந்தே ஆக வேண்டும் - நீயும் அதே போல ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும் என்-றானாம். மார்க்கண்டேயன் கதையை மறந்து விட்டானா சிவன்? அவன் சாகா-தவன் - சிரஞ்சீவி என்று எழுதி வைத்தி-ருக்கிறார்களே!

வரம் கேட்டது

பவுமன் கேட்டான் அப்பன் கூறி-யதை. சரி, அப்படியானால் என் அம்மா கையால் மட்டுமே நான் சாக வேண்டும் என்று வரம் கேட்டானாம். சரி, தந்தேன் என்றானாம் சிவன். தாய் மகனைக் கொல்ல மாட்டாள் என்ற நம்பிக்கையில் பவுமன் கேட்டான் போலும். அவள்-தான் இவனுக்குத் தாய் அல்லவே! இவ-னுக்குத் தாய் என்றுதான் யாரும் கிடையாதே.

தாம் சாகப்போவது கிடையாது, தன் தாய் தன்னைச் சாகடிக்கப் போவதும் கிடையாது என்ற தைரியத்தில் பவுமன் பண்ணாத அக்கிரமங்கள் எல்லாம் செய்-தான். இவன் பிறப்பு சரியில்லை என்பது தெரியும். வளர்ப்பும் சரியில்லை போலும். பிறப்பும் வளர்ப்பும் ஒருவனை உருவாக்குகிறது என்பார்கள். சூயவரசந யனே சூரசவரசந என்று சிக்மண்ட் ஃபிராய்டு சொன்னதைப் போல. பிறப்பு முறை கேடு. வளர்ப்பு ஒழுக்கக் கேடு போலத் தோன்றுகிறது. மக்கள் இந்த “தாதா” வுக்குப் பெயர் வைத்தார்கள். நரகாசுரன் என்று பெயர் வைத்தார்களாம்.

கிருஷ்ணனை வென்றான்

இவனை ஒழிக்க கிருஷ்ணன் சண்டை போட்டுத் தோற்றுப் போனானாம். அவன் தேரை ஓட்டி வந்த அவன் மனைவிகளுள் ஒருத்தி சத்யபாமா அம்பு எய்து நரகாசுரனைக் கொன்றாளாம். அவனைக் கொன்றதால் - அவளே தன் தாய் என்பது தெரிந்து - அவளை வணங்கி மன்னிப்பு கேட்டானாம்.

இதுதான் தீபாவளி கதையாம். பல கதைகளில் இது ஒரு கதை. அவ்வளவே! இதில் எவ்வளவு மடமை. மூடத்தனம். பொய்கள்.

ஒருபடி மேலே போய், ஓர் ஆள் எழுதுகிறார் - அமாவாசையன்று மனம் ஆன்மாவில் சென்று அடங்கியிருக்கு-மாம். மனம் எது? ஆன்மா எது? இது எப்படி அதில் அடங்கும்? விளக்கம் இல்லை. ஆனால் அன்றைய நாளில் ஜெபம் செய்ய வேண்டும் என்று சாத்திரம் கூறுவதாக எழுதுகிறார்.

சூதாடும் பண்டிகை

அன்றைய நாளில் சூது ஆடுகிறார்-கள். வி.எச்.பி., ஆர்.எ°.எ°., ஆள்களான குஜராத்திகளும் மார்வாரிகளும், அகர்-வால்களும், பனியாக்களும். யார் ஜெபம் செய்கிறார்கள்?

திடீரென ஒரு குண்டு - மனிதனின் மன நிலையை, அசுர எண்ணங்களை அழித்து ஞான தீபத்தை ஏற்றுகிறதாம், கடவுள்! இதுதான் நரகாசுர வதக் கதையின் தத்துவமாம்!

கடுகளவாவது அறிவு இருக்கிறதா, கதையிலும் கதையை எழுதியவர்களிட-மும்?

விஷ்ணுவுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன் என்பது பொய்.

பூமாதேவி நரகாசுரனின் வளர்ப்-புத் தாய்தானே தவிர பெற்ற தாய் என்பது பொய்.

பரத்வாஜனின் விந்துக்குப் பிறந்த பவுமன்தான் நரகாசுரன். எனவே விஷ்ணுவுக்குப் பிறந்தவன் என்பது பொய்.

சிவனின் வியர்வைக்குப் பிறந்தவன் பவுமன் என்று கதை கூறுவதால் பரத்-வாஜனும் பொய் - விஷ்ணுவுக்குப் பிறந்-தான் என்பதும் பொய்.

தீமையை அழித்த நாள் தீபாவளி என்றால் சூதாடுவது நடக்கலாமா? சூது தீமையல்லவா? அதை ஊக்கப்படுத்த-லாமா? எனவே தீமையை ஒழித்த நாள் என்பதும் பொய்.

அறிவுக்கொவ்வாத பொய்கள் இக்-கதைகளில் அநேகம். தீபாவளி கொண்-டாடுவது அறிவற்றவர்களின் செயல்.

இதற்கு வாழ்த்துச் சொல்பவர்கள் மோசடிக்காரர்கள்.

http://www.viduthalai.com/20061021/news04.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா சபேசா!

உங்கள் வெப்ஈழத்தை வாரம் ஒருமுறை பார்வையிடுவேன். ஆக்கங்கள் சுப்பர்

Link to comment
Share on other sites

இதில் சொல்லப்பட்ட கதை மிக முட்டாள்தனம்

என வைத்து கொள்வோம்....

அது நம்பகத்தன்மையுமே...

ஆனால் இதில் என்ன குழப்பம் என்றால்

அதில் சொல்ல வந்த விடயம் தெழிவாக கூறப்படவில்லை...

இதில் சின்ன ஒரு விளக்கம் தருகிறேன்...

எள்ளாளன் பற்றி சிவதம்பி அவர்கள் குறிப்பிடும் போது

சில இடங்களில் நளுவல்தன்மை செய்வது போல் படுகிறது...

அதை தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய

ஆய்வுகளில் அவர் அவர் தாம் சொல்வதே சரியன

வாதிடப் பட்டு அந்த கதை திசை மாறி

போனதை அறிய முடிகிறது...

எனவே இதுவும் அதுபோலவே தெரிகிறது..

எனவே இதை யார் ஆய்வு நடாத்தினர்கள்

என்பதை தெரியபடுத்த வேண்டும்...

தெழிவான முறையில் விளங்க படுத்த வேண்டும்

ஏனெனில் இதை நாங்கள் தொடராய் கடைபிடிக்க

வேண்டுமாயின் அதை செய்ய வேண்டும்...

அதிலும் குறிப்பாக ஒரு அரசியல்கட்சி சார்ந்தவர்

இதை புனைந்தால் அது மக்களிடையே ஒரு

நம்பகத்தன்மையை உருவாக்கும்...

குளப்பங்களோடு கதையை உள்நகர்த்தி

படிப்பவனை குளப்பி அவனை திசை மாற்றுகின்ற

செயலகவே இது இருக்கிறது...

என என்னோடு கூட இருந்தவர்கள் கூறினார்கள்...

ஆனால் சிவதம்பி அவர்கள் எள்ளாளனுடய அஸ்தி பற்றிய

ஆய்தலை குறிப்பிடும் போது அதை நடாத்தியவர்களின்

தொடரையும் காலப்பகுதியையும் தெழிவாகவே

கொடுத்துள்ளார்...எனவே இந்த தங்களுடய

இந்த பாத்திரத்திற்கு அவ்வாறு கூறப்படவில்லை

ஏன்...???

இதை தொடர்ந்து முழுமையான ஆதரத்துடன்

வைய்யுங்கள் அதுவே சிறந்தது உகந்தது...

எதிர் பார்கிறோம்...

நன்றி

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன் கேட்பது நியாயம். நரகாசுரன் என்பவன் வாழ்ந்தானா? அவன் திராவிடன் என்பதற்கு என்ன வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றது. பிள்ளையார் விஷ்ணு சிவபெருமான் எல்லாரும் வாழ்ந்தார்களா? அவர்கள் ஆரியர் என்றும் வட இந்தியர் என்பதற்கும் என்ன வரலாற்றுச் சான்றுகள் உண்டு. ஒரு சில மனிதர்கள் கூறிவிட்டார்காள் என்பதற்காக ஒரு விடயத்தைத் தூக்கிப்பிடித்து எழுதுவதற்கு முன்னர் சரியான வரலாற்று ஆதாரங்கள் தரப்பட்டுள்ளனவா??!

உலகெங்கும் ஏன் மேற்குலகில் கூட தீபாவளியைக் கொண்டாட அனுமதிக்க்கிறார்கள். எவரும் தமிழரை வெற்றி கொண்ட நாளாக அனுஷ்டிக்கவில்லை. அப்படி இருக்க தமிழர்கள் மட்டும் ஏன் தான் கற்பனைகளைத் தங்கள் தலையில் கொட்டி அநாவசிய விளம்பரம் சொல்கிறார்கள். விடுதலைப் புலிகள் சொல்லிவிட்டார்கள் அல்லது கொண்டாடாமல் விட்டுவிட்டார்கள் எனவே அது அப்படியே மக்கள் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டும் என்ற கண்மூடித்தனமான வாதம் தவறானது.

தமிழரின் வடக்குக்கிழக்கு தாயக் கோட்பாட்டைக் கூட எம்மால் சர்வதேசத்தின் முன் நிறுவ முடியாமல் வடக்குக் கிழக்கை பிரித்து சேர்த்து அந்நிய சக்திகள் விளையாடிக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் வரலாற்றுச் சான்றே அல்ல அல்லது அருச்சுவடிச் சான்றுகளற்ற புராணக் கதைகளின் அடிப்படையில் சிங்களவர்கள் போல நாமும் கற்பனை வரலாற்றின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுப்பதையும் பரப்புரை செயதையும் தவிர்ப்பது நன்று, மகா வம்சம் போல எங்கள் வரலாற்றுக்கும் கற்பனைகளை காரணங்களாக்கி வரலாற்றை மலினப்படுத்துதல் அவசியமில்லை.

தீபாவளியை துன்பத்தில் இருந்து விடுதலைக்கான நாளாகக் கொண்டாடுதல் மனிதர் அனைவருக்கும் பொருந்தும் போது அதற்குள் ஏன் அநாவசியமாக நரகாசுரன் தமிழன் என்ற இனப்பாகுபாட்டைப் புகுத்தி பார்பர்ணிய எதிர்ப்பு என்ற அடிமனத்தில் உள்ள இன எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும். அது தவறானது கூட. தீபாவளியைக் கொண்டாடமல் விடக் கேட்பதிலும் நரகாசுரன் என்ற கற்பனைக் கதையின் செருகலுக்கான அர்த்தப்படுத்தலுடன் அதனைக் கொண்டாடாமல் இருக்க நீங்கள் வலியுறுத்துவதே நன்று. அதற்குக் கூட வரலாற்றுச் சான்றுகள் இருக்க வேண்டும்.

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று கேட்டு பூம்பூம் மாடு போல தலையாட்டுவதும் கட்டுரை வரைவதும் தான் இன்றைய தமிழ் முற்போக்கு வாதம். எந்த அடிப்படை ஆதாரங்களையும் ஆராயாமல் பெரிய ஓட்டைகளை வைத்துக் கொண்டு வெறும் வார்த்தை அளவில் பேசப்படுவது எல்லாம் முற்போக்குவாதமாகவோ அல்லது நீடித்த பயனுள்ள மாற்றங்களைத் தரவல்லனவாகவோ அமையாது. சிலர் தங்களை விளம்பரப்படுத்த மட்டும் அது உதவலாம்.

----

நாரதர் போன்றவர்கள் தயவுசெய்து ஒழுங்காக ஒரு விடயத்தை அனுகி கருத்தை நாகரிகமாக வைக்க முடியும் என்றால் வையுங்கள். வெறும் கற்பனைகளுக்கு கருத்து எழுதுவதால் பயனில்லை. நீங்கள் பல தடவைகள் இங்கு கருத்து வைப்பவர்களுடன் அப்படி நடந்ததால் இப்படிக் கூற வேண்டி வந்தது. உங்கள் அணுகுமுறைகளை எங்களோடு வைத்திருக்க வேண்டாம். நமக்கு உங்கள் அணுகுமுறை பிடிக்கவில்லை. அந்த வகையில் உங்கள் கருத்துக்களுக்கு பதிலும் தரமாட்டோம்.

Link to comment
Share on other sites

சபேசன் சொன்னது...

மிக்க நன்றி நைனா

இங்கே நாம் கேட்ட கேள்விக்கும் அவர்கள் சொன்ன

பதில் பார்த்தீர்களா...

இது எதை குறிக்கிறது...???

சரி வரலாற்றை சொல்ல வரும் தாங்கள் தெழிவுபடுத்த வேண்டும்

அதன் அடி ஆழத்தில் இருந்து அதன் கருபொருளை விளக்க வேண்டும்

அதுவே முறை...

அப்படி தாங்கள் கூறாத பட்சத்து இது ஏற்புடையதொன்றல்ல என்ற

முடிவிற்கே நாங்கள் வர வேண்டும்...???

இதை ஆய்வு செய்த இந்த சபேசன் இதை வலியுறுத்தி கூறும் போது

ஏன் அந்த வரலாற்றை செம்மையாக சொல்ல மறுக்கிறார்...??

இன்றய அறிவியல் விஞ்ஞான காலத்தில் நீரில் விழுந்த விந்தில் இருந்து

பிள்ளை உருவானது என்பது ஏற்கலாக ஒன்று....

வியர்வையில் இருந்து பிறந்ததும் ஏற்கலாக...

இவ்வாறாக தொடராய் தாங்கள் அதன் தொடரை சொன்னால்

ஏற்புடையதாய் இருக்கும்...

அதை விடுத்து "" மிக்க நன்றி நைனா'' என்ற இந்த

சொல் பதம் தங்களால் தாங்களே தன் முகத்தில்

கரி புசும் நிகழ்வாகவும் தங்களை தாங்கலே இழிவு படுத்துவதாக அமையும்...

இந்த கதாபாத்திரத்தை அந்த கதையை ஆய்வு செய்தவரின்

நம்பகத்தன்மையையும் . அவர் இவ்வாறு சொல்ல முற்படுதின்

உள்நோக்கத்தையும் தெழிவாக சொல்லி விடுகிறது....

இந்த செயல் சபேசனின் சிறுபிள்ளைத்தனமான செயலாக இருக்கிறது

நானும் தங்கள் மீது ஒரு தனி மதிப்பு வைத்திருந்தேன் இந்த சொல் பதத்துடன் அதுவும்

உடைந்து போகிறது....

( மிக்க நன்றி நைனா)

நன்றி

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.