Jump to content

ஆட்டுக் குடல் குழம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • குடல் – ஒன்று
  • வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – 3
  • பச்சைமிளகாய் – 4
  • பூண்டு – 8 பல்

 

  • இஞ்சி – அரை இன்ச் அளவு
  • சோம்பு – ஒரு தேக்கரண்டி
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
  • மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி
  • மல்லிப்பொடி – 4 தேக்கரண்டி
  • தேங்காய் – அரை மூடி
  • புளி – பாக்களவு
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • பட்டை – ஒன்று
  • கிராம்பு – ஒன்று
  • இலை – சிறிது
  • கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது
  • குடலை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் குடலைப்போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டு வரும்.
  • சுருள வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு குக்கரிலும் வைக்கலாம்.
  • சோம்பு, சீரகம் அரைத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, 8 வெங்காயம் போட்டு அரைத்து குடலில் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  • நன்கு வெந்தவுடன் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை தாளித்து 4 நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி குழம்பில் போட்டு, புளியை ஊற்றி கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி வற்றியவுடன் இறக்கவும்

 

http://theanamutham.wordpress.com/2014/08/27/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக் குடல் கறி சுவையானதுதான்.....
ஆனால், அது சமைக்கும் போது வரும் நாத்தம், நமது... குடலைப் பிரட்டும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
 
வெளியே புற்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் உள்ள போய், 'process' பண்ணப் படும் முன்னம். தங்கி இருக்கும் குடலையே சாப்பிட்டால், வம்பை விலைக்கு வாங்கிற கதைதான். :o
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக்குடல் சமைக்க முன்னர் அந்த குடலை பிரட்டி எடுத்து களுவாது விட்டால் உள்ளிருக்கும் சாமான் போகவே போகாது.

 

ஆட்டுக்குடல் ஆட்டு ரத்த வறை சரியான முறையில் செய்தால் சுவை சொல்லி வேலையில்லை.

 

இணைப்பிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவாய் என்ன சொல்ல வாறீங்கள் சாப்பிடலாமோ இல்லை சாப்பிடக் கூடாதோ :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவாய் என்ன சொல்ல வாறீங்கள் சாப்பிடலாமோ இல்லை சாப்பிடக் கூடாதோ :rolleyes::lol:

 

தாராளமாய்ச் சாப்பிடுங்கோ, சுவைப்பிரியன்!

 

ஆனால், முதல்ல ஆட்டுக்குடலைக் கடலுக்குள்ள போட்டுக் கழுவுங்கோ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவாய் என்ன சொல்ல வாறீங்கள் சாப்பிடலாமோ இல்லை சாப்பிடக் கூடாதோ :rolleyes::lol:

 

டெட்டொல், பொலிடோல் எல்லாம் போட்டுக் கழுவினால், பக்டீரியா செத்துப் போடுவினம். 
 
தமிழ் சிறியர் சொல்லுற  மனமும் வராது. மூக்கு முட்ட பிடிச்சுப் போட்டு படுத்தியல் எண்டால்.... சொர்க்கம் தான்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவாய் என்ன சொல்ல வாறீங்கள் சாப்பிடலாமோ இல்லை சாப்பிடக் கூடாதோ :rolleyes::lol:

முதல்ல குடலைக்கழுவுங்க,பிறகு ஒரு பிடி பிடிக்கலாம்;)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவ்வளவு வில்லங்கப்பட்டு குடல்கறி கட்டாயம் சாப்புடோணுமோ?  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவ்வளவு வில்லங்கப்பட்டு குடல்கறி கட்டாயம் சாப்புடோணுமோ?  :lol:

 

300px-kutteln.jpg?w=247&h=180

 

திருமணம் செய்ய முன் நண்பர்களுடன் இருந்த போது...

ஓரிரு முறை, அவர்களுடன் சமைத்து சாப்பிட்டுள்ளேன்.

சமைக்கும் போது வரும் மணத்தை, தாங்கினாலும்... சமைத்த பின் அதன் ருசியே.... அலாதிதான்.

 

பின் எப்போதாவது ஆசை வந்தால், ஜேர்மன் சுப்பர் மாக்கெற்றில்...... மாட்டு குடலை அவித்து, கழுவி.... சமைக்க ஆயத்தமாக வைத்திருப்பார்கள். கிலோ 10 ஐரோ.

அதனை வாங்கிவந்து, இது ஆட்டுக்குடல் என்று சொல்லி... :D  மனைவியிடம் சமைத்து தரச் சொல்லி, சாப்பிட்டுள்ளேன்.

ஜேர்மன் மொழியிலும், குடலுக்கு Kutteln  என்று தான் பெயர்.

தமிழ், எங்கெல்லாம் பரவியுள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300px-kutteln.jpg?w=247&h=180

 

திருமணம் செய்ய முன் நண்பர்களுடன் இருந்த போது...

ஓரிரு முறை, அவர்களுடன் சமைத்து சாப்பிட்டுள்ளேன்.

சமைக்கும் போது வரும் மணத்தை, தாங்கினாலும்... சமைத்த பின் அதன் ருசியே.... அலாதிதான்.

 

பின் எப்போதாவது ஆசை வந்தால், ஜேர்மன் சுப்பர் மாக்கெற்றில்...... மாட்டு குடலை அவித்து, கழுவி.... சமைக்க ஆயத்தமாக வைத்திருப்பார்கள். கிலோ 10 ஐரோ.

அதனை வாங்கிவந்து, இது ஆட்டுக்குடல் என்று சொல்லி... :D  மனைவியிடம் சமைத்து தரச் சொல்லி, சாப்பிட்டுள்ளேன்.

ஜேர்மன் மொழியிலும், குடலுக்கு Kutteln  என்று தான் பெயர்.

தமிழ், எங்கெல்லாம் பரவியுள்ளது. :)

 

myfg_zps93849d0e.jpg :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.