Jump to content

யாழ்களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இருந்த யாழ் என்னை பொறுத்தவரை இறந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

ஈசனரே...

உங்களது, முதல் மூன்று உலகங்களும் யாவை?

அம்மை,  அப்பா, குடும்பம் என்று  சொல்ல வருகிறீர்களா?

 

 

(பரவாயில்லையே.. தூண்டிலப் போட்டால் உடன மீன் சிக்குது)   :D
 
மூன்று இன்டர்நெட் உலகங்கள் (செய்திகள், பாடல், சினிமா etc.) 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா,கலைஞன்,சுண்டல்,தூயவன் எல்லாம் இதற்கு பிறகு வந்த ஆட்களா

 

"ஆதியும் நீயே..... அந்தமும் நீயே....."

என்ற, மாதிரி, "சிற்று வேஷன்"  சாங் ஒன்றை இணையுங்கப்பா....... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இருந்த யாழ் என்னை பொறுத்தவரை இறந்து விட்டது.

 

ok.gifஏன்...மீரா,

அப்படிச் சொல்கிறீர்கள்..

என்ன, காரணம், உங்களை, வெறுக்க வைத்தது?

அதனை..... நீங்கள், எங்களைப் போன்ற இளையவருக்கு,  சொன்னால்...

திருத்துக் கொள்ள, பல வாய்ய்பு உள்ளது.Laie_22.gif

 

மீரா... உங்களது, மௌனத்தை கலைத்து.... எங்களுடன் உரையாடுங்களேன்.

நல்ல, அருமருந்தாக.....உங்கள் மனதுக்கு, ஒத்தடம் தர பலர் உள்ளார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.....

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Link to comment
Share on other sites

அப்ப இருந்த யாழ் என்னை பொறுத்தவரை இறந்து விட்டது.

 

இடையில் 2009 இல் எம் விடுதலைப் போராட்டம்  கடும் தோல்வியை சந்தித்தது என்பதையும் அதன் பின்னான சூழ்நிலையில் தாக்குப் பிடிக்க முடியாமல் எண்ணற்ற தமிழ் இணையத்தளங்கள் மூடப்பட்டது என்பதையும் மீரா கவனத்தில் எடுத்தால் நல்லது.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்களாக யாழில் நிலைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்களாக யாழில் நிலைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
அவர்களை கௌரவப்படுத்துவதற்காக இத்திரியை ஆரம்பித்த தமிழ்சிறிக்கு  நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருட பலவான்கள் அனைவருக்குமு; வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

இத்திரியை ஆரம்பித்த தமிழ்சிறி உங்களுக்கு முதலில் நன்றிகள். நான் 2000ம் ஆண்டில் யாழில் இணைந்தேன். முதலில் பாமினி எழுத்துருவில் யாழ் இயங்கிய காலம் அது. யேர்மனியில் வெளியாகிய இளைஞன் மாதாந்த இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த எனது கணவர் ரமேஷ் வவுனியன் மற்றும் இளைஞன் ஆசிரியர் சேகர் இருவரும் இணைந்து ஒரு இணைய வானொலியை ஆரம்பித்திருந்தார்கள்1999 இறுதிபகுதி.

 

இளைஞன் இணைய வானொலியின் அறிவிப்பாளராக நானே அப்போது இருந்தேன். அப்போது இணைய வானொலி பெரிதாக அறிமுகமில்லாத காலம். ஆனால் குறிப்பிட்டளவு நேயர்களை கொண்டது.இளைஞன் இணைய வானொலி முற்றிலும் பொழுது போக்கான விடயங்களையே கொண்டிருந்தது.

 

உலகத்தமிழர்களின் இதயத்துடிப்பு என்ற சுலோகத்துடன் இளைஞன் வானொலி ஆரம்பித்தது. பிறகு லங்காசிறி அப்படியே எங்களது சுலோகத்தை கொப்பியடித்து இன்று தனதாக்கிக் கொண்டது வேறுகதை. 

 

அப்போது ஐரோப்பிய வானொலிகளிலும் நான் பணியாற்றிக் கொண்டிருந்தமையால் எனது நிகழ்ச்சிகளுக்கான கவிதைகள் ஆக்கங்களை இணையத்தில் தேடுவேன். அக்காலத்தில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் அங்கம் வகித்த காந்தன் என்ற தம்பியொருவரே எனக்கு யாழ் இணையம் மோகன் பற்றியும் சொல்லி யாழ் இணையத்தை அறிமுகப்படுத்தினார். 

 

முதலில் கருத்தெழுதத் தொடங்கிய போது குறித்தவர்கள் சிலர்தான் கருத்தாளர்களாக இருந்தோம். அதுவொரு புதிய அனுபவமாகவும் இருந்தது. வானொலி மூலம் அறிமுகமான தோழி நளாயினி தாமரைச்செல்வனையும் யாழில் இணைய வைத்தேன். அதுபோல வேறும் சிலர் என்னோடு யாழில் இணைந்தார்கள். அப்போது பதிவு செய்து அங்கத்தவராக வேண்டியதில்லை. புதிய அனுபவம் ஒரு பெயரின் பாஸ்வேட் அல்லது ஏதும் மறந்தால் கூட மாற்றவோ திருத்தவோ பெரிதாக விளக்கம் தெரியாத நேரம். மெல்ல மெல்ல கருத்துக்களத்தில் தான் தட்டச்சே அதிகம் பழகினேன் எனக்கூறலாம். 

 

யுனிகோட்டிற்கு முதல் மாற்றம் பெற்றபோதும் நளாயினி எழுதிக்கொண்டேயிருந்தார். குருவிகள் என்றொருவர் களத்தில் உறுப்பினராக இருந்தார். அவருக்கு பெண்கள் மீது காறித்துப்புவதே வேலை. இதனை நான் நளாயினி அதிகம் எதிர்த்து எழுதுவோம். ஆனால் குருவிகளின் மோசமான எழுத்துக்கள் ஒரு கட்டத்தில் நளாயினி மீது தனிப்பட்ட தாக்குதலாக அமைந்து நளாயினியும் இன்னும் சிலரும் விலகினார்கள்.

 

தற்போதைய  களம் யுனிகோட் 2வது வடிவம்.

 

(சூடு சொரணையில்லாம 14வருசமா இழுபடுறியே என ஒருவரும் திட்டப்படாது சொல்லீட்டன்)

 

2000ம் ஆண்டு காலம் தாயகம் மாவீரர் சார்ந்து அப்போது எந்த இணையமும் உருவாகவில்லை. வன்னிக்களத்தில் நின்ற போராளி நண்பர்கள் சிலரின் தொடர்புகள் கடிதங்களால் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. ஒரு போராளி மாவீரர்கள் பற்றியெல்லாம் கடிதங்களில் எழுதுவார்.  மாவீரர்களின் விடயங்களை வெளியில் கொண்டுவர நானும் எனது கணவரும் இணைந்து தமிழ்வெப்றேடியோ என்றொரு இணைய வானொலியை 2000ம் ஆண்டு ஆரம்பித்தோம். 

 

அப்போது சற்லைட் தொலைபேசி வசதி வந்திருந்தது. வன்னியிலிருந்து காலை மாலை புலிகளின்குரல் செய்திகள் நிகழ்ச்சிகள் போன்றவற்றை அங்கிருந்து ஒரு போராளி தொலைபேசியால் தருவார். அவற்றை ஒலிப்பதிவு செய்து தமிழ்வெப்றேடியோவில் போடுவேன். அத்தோடு ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்களும் பக்சில் அனுப்புவார் போராளி நண்பர் அதனையும் தட்டச்சு செய்து போடுவேன். 
 
யாழில் தமிழ்வெப்றேடியோவில் போடும் விடயங்களையும் இணைப்பேன். 
 
பிறகு தமிழ்நாதம் இணையத்தின் பொறுப்பாளர் தொடர்பெடுத்து தமிழ்வெப்றேடியோவின் செய்திகள் நிகழ்ச்சிகளை போடக்கேட்டார். தாயகம் சார்ந்த விடயங்கள் எங்கேயும் வரட்டும் என்ற நோக்கில் அனைத்தையும் அப்போது கிடைத்த மின்னஞ்சல் முதல் அனைத்து இணையங்களுக்கும் அனுப்பி வைப்பேன். இப்படித்தான் யாழின் அறிமுகம் வந்தது எனக்கு.
 
தமிழ்நாதத்துக்கும் யாழை அறிமுகப்படுத்தி விடயங்களை பகிரச்சொன்னேன். பிறகு நடந்த கதைகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. நானும் யாழும் ஊடகங்களும் என்றதொரு பெரிய தொடரை எழுதலாம். சுவாரசியம் , முதுகில்குற்று , துரோகம் வஞ்சம் என நிறைய அனுபவங்கள் இருக்கிறது. ஆறுதலாக எழுதவுள்ளேன்.
 
அழகன் நிழலி அடிக்கவரப்படாது போனவருடம் இப்படியொரு தொடரை எழுதப்போவதாக யாழில் போட அனுமதியும் கேட்டேன். ஆனால் இன்னும் எழுதாமல் என்ன கதையென நிழலி கடுப்பாகி நிற்பது கண்முன் தெரிகிறது.  
 
கவிதன், அருவி , நிதர்சன் , சயந்தன் இப்படியொரு நீண்ட வரிசை 2000 - 2004 இற்குள் யாழை ஆண்ட ராசாக்கள். நல்ல நண்பர்கள் இவர்கள் பற்றியெல்லாம் ஒரு தொடரை அடுத்த வருடமெண்டாலும் எழுதுவேன். 
 
யாழ் இணையமும் மோகனும் தங்கள் சொல்லில் இயங்குவதாக சிலர் 2005இல் யாழில் வந்து பரப்பாகிய பிறகு விட்ட பூவிசிறிகள் வாணவேடிக்கைகள் என நிறைய அனுபவங்கள் இருக்கிறது. 
 
2003 இல் அஸ்வினி 2003 என்றொரு பெயரை ஒரு போராளிக்காக பதிவு செய்து கொடுத்து அவன் அனுப்புவதை அஸ்வினியால் போடுவேன். அஸ்வினியை அந்தப்போராளியும் லொக்கின் பண்ணி தனிமடல்கள் பார்ப்பான். அஸ்வினி யார் என்பது அப்போது யாருக்கும் தெரியாது. சில பூவிசிறிகளின் வாணவேடிக்கையை அஸ்வினி ஐடியால் பிடித்தோம். இறுதியில் அஸ்வினியை சந்திக்க ஆட்கள் கேட்ட போது நானே வெளிப்பட்டேன். நிறைய சுவாரசியங்கள் இருக்கிறது. இன்னொருமுறை எழுதுகிறேன்.
 
 
2004 யேர்மன் காவல்துறையால் வந்த சட்டசிக்கலின் போது துணைநின்றவர்களும் யாழ்கள உறவுகளான கவிதன், நிதர்சன் , அருவி போன்ற நண்பர்கள் பெரும் ஆறுதலாக இருந்தார்கள்.
 
சுரதா அண்ணாவும் யாழின் மூலமே அறிமுகமானார்.2000ம் அறிமுகமானவர்களில் இவரும் ஒருவர்.
 
இன்னும் புதினங்கள் தொடரும்.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்களாக யாழில் நிலைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவி தமிழ்சிறி

இன்னும் ஒரு மாதம் பொறுத்திருந்தால் எனக்கும் வாழ்த்துக்களும் பண முடிச்சும் கிடைத்திருக்குமே?பறவாயில்லை போகட்டும்.

 

பத்து வருத்துக்கு மேலாக கடலை போட்டுக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

 

இங்கே சகோதரம் குருவிகளை எவரும் கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது.

 

குருவிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் போது யாழில் ஏற்பட்ட சுனாமியால் நெடுக்காலபோவான் என்னும் பெயரில் எழுதத் தொடங்கியவர் பிரச்சனை முடிந்த பின்னரும் ஏனோ குருவிகளாகாமல் நெடுக்காலபோவானாகவே இருக்கிறார்.

 

முகம் தெரியாவிட்டாலும் என்னை மிகவும் கவர்ந்தவர்.சகலகலாவல்லவன்.

Link to comment
Share on other sites

 

யுனிகோட்டிற்கு முதல் மாற்றம் பெற்றபோதும் நளாயினி எழுதிக்கொண்டேயிருந்தார். குருவிகள் என்றொருவர் களத்தில் உறுப்பினராக இருந்தார். அவருக்கு பெண்கள் மீது காறித்துப்புவதே வேலை. இதனை நான் நளாயினி அதிகம் எதிர்த்து எழுதுவோம். ஆனால் குருவிகளின் மோசமான எழுத்துக்கள் ஒரு கட்டத்தில் நளாயினி மீது தனிப்பட்ட தாக்குதலாக அமைந்து நளாயினியும் இன்னும் சிலரும் விலகினார்கள்.

அக்கா தங்களின் மேற்படி குறிப்பு கடந்த கால சம்பவத்தை திரித்துச் சொல்வதால், தவிர்க்கப்பட வேண்டியதாயின் உண்மைகள் திரிக்கப்படாது என்ற வகையில் குருவிகளாகிய நாங்கள் இதனை நேரடியாக குறிப்பிட விரும்புகிறோம்.

 

யாழ் இணையக்களத்தில் பெண்ணியம் என்ற ஒரு தலைப்பு முன்னர் இடம்பெற்றிருந்தது. தமிழ் அகராதியிலேயே இல்லாத அந்த தலைப்பை யாழ் கொண்டிருப்பது அநாவசியமானது ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமூகப் பிரச்சனைகள் உள்ளன அவற்றை பொதுவில் ஆராய்வதே நல்லது என்று கருத்துப் பகிரப்பட்ட நேரத்தில் தான் நளாயினி அக்கா சேது என்பவரோடு நிகழ்ந்த அநாகரிகக் கருத்துப் பரிமாற்றம் மற்றும் தனிமடலில் எங்களோடு மேற்கொண்ட அநாகரிகக் கருத்துப் பரிமாற்றத்தின் கீழ் யாழ் நிர்வாகத்தின் நடவடிக்கையின் பிரகாரம் மோகன் அண்ணாவோடு தொலைபேசியில் புடுங்குப்பட்டு இறுதியில் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவரை யாழ் நிர்வாகமோ நாங்களோ ஒதுக்கி வைக்கவில்லை. அவர் அநாகரிமாக திட்டி தனிமடல்கள் இட்ட போதும் மிகவும் நாகரிகமாக அவருக்கு புத்திமதிகள் சொன்னோம். நீ சின்னப்பொடியன் எனக்கென்ன புத்திமதி சொல்லுறது என்ற ஒரு வீராப்பில் தான் அவா நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தா. அது அவவின் அவசர அறிவுப் பிரச்சனை.

 

இதனை நீங்கள் குருவிகள் களத்தை விட்டு விரட்டினார் என்று திரித்துக் கூறுவது தவறாகும்.

 

மேலும் இதே நீங்கள் நளாயினி அக்காவோடு பல விடயங்களில் தகராறு பட்டதையும் யாழில் பகிரங்கமாக சண்டை பிடித்ததையும் யாழ் அறியும். நாங்களும் அறிவோம். அவற்றை மீள நினைவுபடுத்தப்படக் கூடாது என்றே விரும்புகிறோம்.

 

மேலும் அன்றைய பொழுதுகளில் எம் எஸ் என் வழியாக நீங்கள் இணைய தள உதவிகள் கேட்டு நச்சரித்த பொதுகளையும் எண்ணிப் பார்க்க முடிகிறது. அப்போது எல்லாம் நச்சரிப்பாக அன்றி அன்பு அக்காவின் வேண்டுகோளாக ஏற்று உங்களுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்திருக்கிறோம். நீங்கள் இன்று அவற்றை மறந்திருக்கலாம். அல்லது மறைத்திருக்கலாம்.

 

ஆனால் உண்மையை பேச தயங்குவது உங்களின் இதய சுத்தி மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு தவறான விடயங்கள் தவறாக யாழில் உதாரணப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இந்த பதிவை இட்டு ஓய்கிறோம்.

 

நன்றி.

அன்புடன் நட்பின் குருவிகள். :)

 

---------------

 

யாழில் 10 ஆண்டுகள் கழித்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா தங்களின் மேற்படி குறிப்பு கடந்த கால சம்பவத்தை திரித்துச் சொல்வதால், தவிர்க்கப்பட வேண்டியதாயின் உண்மைகள் திரிக்கப்படாது என்ற வகையில் குருவிகளாகிய நாங்கள் இதனை நேரடியாக குறிப்பிட விரும்புகிறோம்.

 

யாழ் இணையக்களத்தில் பெண்ணியம் என்ற ஒரு தலைப்பு முன்னர் இடம்பெற்றிருந்தது. தமிழ் அகராதியிலேயே இல்லாத அந்த தலைப்பை யாழ் கொண்டிருப்பது அநாவசியமானது ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமூகப் பிரச்சனைகள் உள்ளன அவற்றை பொதுவில் ஆராய்வதே நல்லது என்று கருத்துப் பகிரப்பட்ட நேரத்தில் தான் நளாயினி அக்கா சேது என்பவரோடு நிகழ்ந்த அநாகரிகக் கருத்துப் பரிமாற்றம் மற்றும் தனிமடலில் எங்களோடு மேற்கொண்ட அநாகரிகக் கருத்துப் பரிமாற்றத்தின் கீழ் யாழ் நிர்வாகத்தின் நடவடிக்கையின் பிரகாரம் மோகன் அண்ணாவோடு தொலைபேசியில் புடுங்குப்பட்டு இறுதியில் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவரை யாழ் நிர்வாகமோ நாங்களோ ஒதுக்கி வைக்கவில்லை. அவர் அநாகரிமாக திட்டி தனிமடல்கள் இட்ட போதும் மிகவும் நாகரிகமாக அவருக்கு புத்திமதிகள் சொன்னோம். நீ சின்னப்பொடியன் எனக்கென்ன புத்திமதி சொல்லுறது என்ற ஒரு வீராப்பில் தான் அவா நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தா. அது அவவின் அவசர அறிவுப் பிரச்சனை.

 

இதனை நீங்கள் குருவிகள் களத்தை விட்டு விரட்டினார் என்று திரித்துக் கூறுவது தவறாகும்.

 

மேலும் இதே நீங்கள் நளாயினி அக்காவோடு பல விடயங்களில் தகராறு பட்டதையும் யாழில் பகிரங்கமாக சண்டை பிடித்ததையும் யாழ் அறியும். நாங்களும் அறிவோம். அவற்றை மீள நினைவுபடுத்தப்படக் கூடாது என்றே விரும்புகிறோம்.

 

மேலும் அன்றைய பொழுதுகளில் எம் எஸ் என் வழியாக நீங்கள் இணைய தள உதவிகள் கேட்டு நச்சரித்த பொதுகளையும் எண்ணிப் பார்க்க முடிகிறது. அப்போது எல்லாம் நச்சரிப்பாக அன்றி அன்பு அக்காவின் வேண்டுகோளாக ஏற்று உங்களுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்திருக்கிறோம். நீங்கள் இன்று அவற்றை மறந்திருக்கலாம். அல்லது மறைத்திருக்கலாம்.

 

ஆனால் உண்மையை பேச தயங்குவது உங்களின் இதய சுத்தி மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு தவறான விடயங்கள் தவறாக யாழில் உதாரணப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இந்த பதிவை இட்டு ஓய்கிறோம்.

 

நன்றி.

அன்புடன் நட்பின் குருவிகள். :)

 

---------------

 

யாழில் 10 ஆண்டுகள் கழித்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.

 

மிகவும் சுவாரசியமாக இருக்கிறது குருவிகலாரே. இன்னும் பல விடயங்களைப் பகிரலாமே எங்களுடன். கொட்டாவி விடும் எமக்கு கொஞ்சம் உற்சாகமாய் இருக்குமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 photo-4.jpg?_r=0 பரணி. 14.04.2003.

 

வசி_சுதா.  21.04. 2003.

 

ஆளவந்தான். 20.06.2003.

 

தேவகுரு. 14.09.2003.

 

av-138.png?_r=0  பிரபா. 29.09.2003.

 

சனியன். 04.10.2003.

 

av-164.jpg?_r=0 ஆதிபன்.18.10.2003.

 

மதன். 29.01,2004.

 

சயந்தன். 21.07.2004.

 

நிர்மலன். 22.09.2004.

 

ஜூட். 24.09.2004.

 

av-831.jpg?_r=0சிறி. 25.09.2004.

photo-615.jpg?_r=1405268876 ஹரி.26.09.2004.

 

photo-636.jpg?_r=1416732807 நிதர்சன். 07.10.2004.

 

photo-786.jpg?_r=1389681032 டபிள். 17.11.2004
 

photo-845.jpg?_r=0 குளக்காட்டான்.30.11.2004.
 

ஈழப்பிரியன். 30.01.2005.

 

அனைவருக்கும், வாழ்த்துக்கள். :)  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நன்றி தமிழ்சிறி மற்றும் உறவுகளுக்கு,

நான் யாழ்களம் ஒவ்வொரு நாளும் வந்து ஊர்புதினம் பார்த்து விட்டு சென்றுவிடுவேன், முன்புபோல் இப்பொழுது நேரம் இன்மையால் கருத்து எழுதுவது இல்லை இந்த்வருடம் கனடா சென்றபோது உறவுகளை சந்திப்பதற்கு முயற்சித்தேன் ஆனால் அது கைகூடவில்லை. நானும் குசா அண்ணரும் ஒரே நாளில் யாழில் இணைந்திருந்தாலும் நான் கருத்து எழுதுவது மிகமிக குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமடல் அனுப்பிய தமிழ்சிறிக்கு நன்றிகள்.

 

நேரமின்மையால் யாழ்களத்தில் எழுதுவதில்லை, ஆனால் ஒரு நாளைக்கு 10 தடைவைக்கு மேல் யாழ்களத்துக்கு வந்துபோவேன்.

Link to comment
Share on other sites

10 வருடங்கள் தாண்டிய ஏனைய கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

குருவிகள், யாழுக்கும் உங்களுக்கும் மோகனுக்கும் நளாயினிக்கும் இடையில் நடந்த புடுங்குப்பாடு எனக்கு தெரியாது. ஆனால் நளாயினி மீது நீங்கள் தொடர்ந்து செய்த தனிமனித தாக்குதலே நளாயினியை தொடர்ந்து எழுதாமல் ஒதுங்க வைத்தது உண்மை. இந்த விடயத்தை நளாயினியை திரும்ப அழைத்த போது நளாயினியே சொன்னார். இனி உங்களது ஆலோசனையை நளாயினி கேட்கேல்லயென்று நீங்கள் குறைபட்டால் இது பற்றி நான் எழுத ஒன்றுமில்லை.
 
நளாயினி எனக்கு பிடிக்க பல விடயங்கள் உண்டு :-
காதல் கவிதைகள் ஆண்களால் மட்டுமே அதிகம் வெளிப்படுத்த முடியுமென்ற வரையறையை மறுத்து துணிந்து காதல் கவிதைகளை வெளிப்படையாக தன்னுணர்வு சார்ந்து எழுதுவது.
பெண்கள் பெண்விடுதலை அடக்குமுறைகள் பற்றி துணிச்சலோடு அது குருவியென்றாலென்ன தோழியான நானென்றாலென்ன துணிச்சலோடு எழுதுவது.
யாழ் களத்தில் எல்லா பெண்களையும் விட துணிவோடு உங்களது எல்லா பெண்கள் மீதான அநாகரீக கருத்துக்களுக்கு பதில் எழுதிய ஒருத்தி நளாயினி.
நளாயினி பற்றி இன்னும் நிறைய இருக்கு ஆறுதலாக எழுதுகிறேன்.
 
நளாயினியும் நானும் வானொலிகளில் ஒன்றாக நிகழ்ச்சிகள் செய்துள்ளோம். ஆனால் இருவருக்கும் தனித்த தனித்த கருத்துக்கள் பல விடயங்களில் இருந்தது இப்போதும் இருக்கிறது ஆனால் ஒருநாளும் எங்களது நட்புக்குள் அவற்றை புகுத்தி கோபித்து கொண்டு போனதில்லை. இப்போதும் அப்போதும் நளாயினி எனக்கு நல்ல நட்பு. யாழைவிட்டு நளாயினி ஒதுங்கிய பிறகும் பலதடவைகள் திரும்பி வாவென்று அழைத்தும் நளாயினி வராமல் போனது இன்னும் கவலைதான். நல்லதொரு கருத்தாளரை யாழ் கருத்தாளர்களாகிய நாங்கள் இழந்து போனோம்.
 
முரண்பாடான புதினங்களை கருத்துக்களை நீங்கள் இங்கு மீள இணைத்தாலும் நல்லது. இங்கு சுமேரியர் கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பதாகவும் பொழுது போகாமல் தவிப்பதாகவும் எழுதியுள்ளார். அவருக்கு பொழுது போக நீங்கள் உதவிய புண்ணியமும் வந்து சேரும்.
 
நிதர்சன், அருவி, கவிதன் , குளைக்காடான் இப்படி ஒரு குழு நாங்கள் தினமும் மெசென்சரில் பேசிக்கொள்வோம். நிதர்சன் எனது நிகழ்ச்சிகளை போடவதற்கு தனது இணையத்தளத்தின் சேவரையும் தந்த நல்லிதயம். ஆனால் இந்த நல்லிதயங்களுடன் கூட கருத்துக்களால் மோதியிருக்கிறேன். ஆனால் இன்றளவும் நட்பில் நாங்கள் எதிரிகளாகியதில்லை. 
 
தம்பி கவிதன், அருவியை இப்போதும் நினைப்பதுண்டு. இன்று இதனை அவர்களால் வாசிக்க நேர்ந்தால் மீண்டும் அவர்கள் இங்கு வந்து எழுத வேண்டுமென வேண்டுகிறேன்.
 
குருவிகளாரே உங்களுடனும் நளாயினிக்கு அடுத்த ஆளாக முரண்பாடு நிறைய இருந்து வருகிறது கருத்தால். ஆனால் கருத்துகளம் தவிர்ந்து உங்கள் மீது அன்பும் மதிப்பும் இருக்கிறது. கருத்தை கருத்தால் வெல்ல உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். கொட்டாவிகளுக்கு இதெல்லாம் தெரியாது. உங்களிடம் மட்டுமல்ல எனக்க தெரியாத தொழில்நுட்ப விடயங்களை நிதர்சன், குருவிகள், இளைஞன், சுரதா அண்ணா இப்படி பல நண்பர்களிடம் கேட்டு அறிந்து எனது இணைய கணணி அறிவை வளர்த்துக் கொண்டுள்ளேன். உங்களுக்க பலமுறை தனித்து நன்றி சொல்லிப்பழகியதால் இங்கு உங்களது ஆதரவை சொல்ல மறந்துவிட்டேன் மன்னித்தருள்க தம்பியன்.
 
சேது இணைந்தது 2003 காலம்.
 
கனோன் - 2003(இவர் தான் எங்களது நெல்லையன். பிறகு சோழன் என பெயரை மாற்றிக்கொண்டார் பிறகு நெல்லையானார். நெல்லையன் கூட நல்லதொரு கருத்தாளர். 2000ம் களில் நாம் செய்த சில பரப்புரைகளுக்கு ஆங்கிலத்தில் எழுதத்தேவையான விடயங்களை எழுதித்தந்தவர்)
 
இன்னொரு உறவு - மதன். நல்ல கருத்தாளர் மட்டுமன்றி தேடல் வாசிப்பு மிகுந்தவர். கடந்தவருடம் அவரது நண்பர் ஒருவர் பற்றி நான் எழுதிய மாவீரர் நினைவொன்றை பார்த்துவிட்டு தொடர்ப கொண்டார். அவரும் யாழை விட்டு ஒதுங்கி போனார். மதன் இதனை படித்தால் நிச்சயம் திரும்பி வாருங்கள். பழையகளத்தில் இருந்தது போல மீண்டும் எழுதுவோம்.
 
வினித் இவர் நெதர்லாந்திலிருந்து எழுதிக்கொண்டிருந்தார். இவரும் 2003 காலங்களில் இணைந்ததாக ஞாபகம். எனது வானொலி நாடகம் ஒன்றுக்கு குரல் தந்தவர்.  கவிதன் ,அருவி போன்றோரும் நாடகத்திலும் உதவியவர்கள்.
 
பரணி - 2000ம் களில் அரேபிய நாடொன்றில் இருந்த நினைவு. நல்ல கவிஞன், கருத்தாளன் ஆனால் பிறகு அதிகம் எழுதாமல் ஒதுங்கிக்கொண்டார். எனது வானொலி நிகழ்ச்சிகளில் பரணியின் கவிதைகள் ஒலித்திருக்கிறது. அதிகம் அப்போது காதல் கவிதைகளை எழுதியவர் பரணி.
 
விதுரன்- இவர் ஸ்கண்டிநேவிய நாடுகளில் ஒன்றிலிருந்து எழுதியவர். சிறந்த அரசியல் கருத்தாளர். இவரும் 2000ம்களில் இருந்தவர். பிறகு இங்கு வருவதில்லை.
 
தமிழினி என்றொரு தங்கை கணணிதொடர்பாக எனக்கு பல விடயங்கள் சொல்லித்தந்தவர். பிறகு இவரும் காணாமற்போனார். தமிழினி இதனை வாசித்தால் மின்மடலாயினும் போடுங்கள்.
 
2003 பிற்பட்ட காலங்களில் வலைப்பூவில் எழுதிக்கொண்டிருந்த தங்கை தூயா, மற்றும் சினேகிதி ,ரசிகை இவர்களெல்லாம் இணைந்து ஒரு பெண்கள் இணைய சஞ்சிகையையும் ஆரம்பித்தார்கள். பிறக தொடர்புகள் எதுவுமற்று ஒதுங்கிவிட்டார்கள். இவர்களும் இணைய வேண்டும் மீள.
 
சோழியன் நல்ல எழுத்தாளர். கருத்தாளர். நட்பு என்ற பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவு நேரடி பழக்கம் குறைவு. 1997 தொடக்கம் வானொலிகள் பத்திரிகைகள் மூலம் நிறைய அறிந்த உறவு. 2000ம் ஆண்டு டோட்மூண்ட் நகரில் புத்தகத்திருவிழாவில் முதலில் சந்தித்தேன். இன்றுவரை கருத்துக்களால் பல இடங்களில் கருத்து மோதல் இருந்தது ஆனால் எதிரிகளாக கருத்துக்களுக்காக குத்துபட்டு முறித்துக்கொண்டு போகாமல் தொடரும் நல்ல நட்பு.
 
கிருபன் :- கிருபன் போடும் அனைத்து கருத்துக்களையும் இணைப்புகளையும் வாசிப்பேன்.பக்கசார்பற்று எல்லா விடயங்களையும் அறியும் ஆர்வம் மிக்க கருத்தாளர். நான் தவாறாமல் வாசிக்கும் கருத்தாளர் கிருபன்.  நான் மதிக்கும் கருத்தாளர்களின் கிருபனுக்கு தனியிடம்.
 
குருவித்தம்பியா, கனக்க விடயங்கள் எழுதப்போகிறேன் தொடரும் என்று முதலே போட்டுள்ளன். ஆக பழைய பல உறவுகள் பற்றி விரைவில் எழுதுவேன். சிலருக்கு நேற்று மின்னஞ்சல் போட்டுள்ளேன் அவர்களது பெயர்களை எழுதுவதில் ஏதும் சங்கடம் இருப்பின் அறியத்தருமாறு.
 
விரைவில் தொடராக எழுதுவேன் அதுவரை பொறுத்தருள்ள குருவிகளே.
Link to comment
Share on other sites

வினித் இவர் நெதர்லாந்திலிருந்து எழுதிக்கொண்டிருந்தார். இவரும் 2003 காலங்களில் இணைந்ததாக ஞாபகம். எனது வானொலி நாடகம் ஒன்றுக்கு குரல் தந்தவர்.

வினித் அண்ணா ஏன் இப்பொழுது வருவதில்லை? இவருடன் போன வருடம் திண்ணையில் பல தடவை உரையாடியிருக்கிறேன். எனக்கு பிடித்த அண்ணாக்களில் ஒருவர். :)

Link to comment
Share on other sites

தனிமடல் அனுப்பிய தமிழ்சிறிக்கு நன்றிகள்.

 

நேரமின்மையால் யாழ்களத்தில் எழுதுவதில்லை, ஆனால் ஒரு நாளைக்கு 10 தடைவைக்கு மேல் யாழ்களத்துக்கு வந்துபோவேன்.

மீண்டும் வாருங்கள் எழுதுங்கள் பிரபா.

 நானும் குசா அண்ணரும் ஒரே நாளில் யாழில் இணைந்திருந்தாலும் நான் கருத்து எழுதுவது மிகமிக குறைவு.

பழைய கருத்தாளர்கள் மீள இணைய வேண்டும். வாருங்கள் சிறி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.