Jump to content

யாழ்களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இருந்த யாழ் என்னை பொறுத்தவரை இறந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

ஈசனரே...

உங்களது, முதல் மூன்று உலகங்களும் யாவை?

அம்மை,  அப்பா, குடும்பம் என்று  சொல்ல வருகிறீர்களா?

 

 

(பரவாயில்லையே.. தூண்டிலப் போட்டால் உடன மீன் சிக்குது)   :D
 
மூன்று இன்டர்நெட் உலகங்கள் (செய்திகள், பாடல், சினிமா etc.) 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா,கலைஞன்,சுண்டல்,தூயவன் எல்லாம் இதற்கு பிறகு வந்த ஆட்களா

 

"ஆதியும் நீயே..... அந்தமும் நீயே....."

என்ற, மாதிரி, "சிற்று வேஷன்"  சாங் ஒன்றை இணையுங்கப்பா....... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இருந்த யாழ் என்னை பொறுத்தவரை இறந்து விட்டது.

 

ok.gifஏன்...மீரா,

அப்படிச் சொல்கிறீர்கள்..

என்ன, காரணம், உங்களை, வெறுக்க வைத்தது?

அதனை..... நீங்கள், எங்களைப் போன்ற இளையவருக்கு,  சொன்னால்...

திருத்துக் கொள்ள, பல வாய்ய்பு உள்ளது.Laie_22.gif

 

மீரா... உங்களது, மௌனத்தை கலைத்து.... எங்களுடன் உரையாடுங்களேன்.

நல்ல, அருமருந்தாக.....உங்கள் மனதுக்கு, ஒத்தடம் தர பலர் உள்ளார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.....

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Link to comment
Share on other sites

அப்ப இருந்த யாழ் என்னை பொறுத்தவரை இறந்து விட்டது.

 

இடையில் 2009 இல் எம் விடுதலைப் போராட்டம்  கடும் தோல்வியை சந்தித்தது என்பதையும் அதன் பின்னான சூழ்நிலையில் தாக்குப் பிடிக்க முடியாமல் எண்ணற்ற தமிழ் இணையத்தளங்கள் மூடப்பட்டது என்பதையும் மீரா கவனத்தில் எடுத்தால் நல்லது.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்களாக யாழில் நிலைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்களாக யாழில் நிலைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
அவர்களை கௌரவப்படுத்துவதற்காக இத்திரியை ஆரம்பித்த தமிழ்சிறிக்கு  நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருட பலவான்கள் அனைவருக்குமு; வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

இத்திரியை ஆரம்பித்த தமிழ்சிறி உங்களுக்கு முதலில் நன்றிகள். நான் 2000ம் ஆண்டில் யாழில் இணைந்தேன். முதலில் பாமினி எழுத்துருவில் யாழ் இயங்கிய காலம் அது. யேர்மனியில் வெளியாகிய இளைஞன் மாதாந்த இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த எனது கணவர் ரமேஷ் வவுனியன் மற்றும் இளைஞன் ஆசிரியர் சேகர் இருவரும் இணைந்து ஒரு இணைய வானொலியை ஆரம்பித்திருந்தார்கள்1999 இறுதிபகுதி.

 

இளைஞன் இணைய வானொலியின் அறிவிப்பாளராக நானே அப்போது இருந்தேன். அப்போது இணைய வானொலி பெரிதாக அறிமுகமில்லாத காலம். ஆனால் குறிப்பிட்டளவு நேயர்களை கொண்டது.இளைஞன் இணைய வானொலி முற்றிலும் பொழுது போக்கான விடயங்களையே கொண்டிருந்தது.

 

உலகத்தமிழர்களின் இதயத்துடிப்பு என்ற சுலோகத்துடன் இளைஞன் வானொலி ஆரம்பித்தது. பிறகு லங்காசிறி அப்படியே எங்களது சுலோகத்தை கொப்பியடித்து இன்று தனதாக்கிக் கொண்டது வேறுகதை. 

 

அப்போது ஐரோப்பிய வானொலிகளிலும் நான் பணியாற்றிக் கொண்டிருந்தமையால் எனது நிகழ்ச்சிகளுக்கான கவிதைகள் ஆக்கங்களை இணையத்தில் தேடுவேன். அக்காலத்தில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் அங்கம் வகித்த காந்தன் என்ற தம்பியொருவரே எனக்கு யாழ் இணையம் மோகன் பற்றியும் சொல்லி யாழ் இணையத்தை அறிமுகப்படுத்தினார். 

 

முதலில் கருத்தெழுதத் தொடங்கிய போது குறித்தவர்கள் சிலர்தான் கருத்தாளர்களாக இருந்தோம். அதுவொரு புதிய அனுபவமாகவும் இருந்தது. வானொலி மூலம் அறிமுகமான தோழி நளாயினி தாமரைச்செல்வனையும் யாழில் இணைய வைத்தேன். அதுபோல வேறும் சிலர் என்னோடு யாழில் இணைந்தார்கள். அப்போது பதிவு செய்து அங்கத்தவராக வேண்டியதில்லை. புதிய அனுபவம் ஒரு பெயரின் பாஸ்வேட் அல்லது ஏதும் மறந்தால் கூட மாற்றவோ திருத்தவோ பெரிதாக விளக்கம் தெரியாத நேரம். மெல்ல மெல்ல கருத்துக்களத்தில் தான் தட்டச்சே அதிகம் பழகினேன் எனக்கூறலாம். 

 

யுனிகோட்டிற்கு முதல் மாற்றம் பெற்றபோதும் நளாயினி எழுதிக்கொண்டேயிருந்தார். குருவிகள் என்றொருவர் களத்தில் உறுப்பினராக இருந்தார். அவருக்கு பெண்கள் மீது காறித்துப்புவதே வேலை. இதனை நான் நளாயினி அதிகம் எதிர்த்து எழுதுவோம். ஆனால் குருவிகளின் மோசமான எழுத்துக்கள் ஒரு கட்டத்தில் நளாயினி மீது தனிப்பட்ட தாக்குதலாக அமைந்து நளாயினியும் இன்னும் சிலரும் விலகினார்கள்.

 

தற்போதைய  களம் யுனிகோட் 2வது வடிவம்.

 

(சூடு சொரணையில்லாம 14வருசமா இழுபடுறியே என ஒருவரும் திட்டப்படாது சொல்லீட்டன்)

 

2000ம் ஆண்டு காலம் தாயகம் மாவீரர் சார்ந்து அப்போது எந்த இணையமும் உருவாகவில்லை. வன்னிக்களத்தில் நின்ற போராளி நண்பர்கள் சிலரின் தொடர்புகள் கடிதங்களால் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. ஒரு போராளி மாவீரர்கள் பற்றியெல்லாம் கடிதங்களில் எழுதுவார்.  மாவீரர்களின் விடயங்களை வெளியில் கொண்டுவர நானும் எனது கணவரும் இணைந்து தமிழ்வெப்றேடியோ என்றொரு இணைய வானொலியை 2000ம் ஆண்டு ஆரம்பித்தோம். 

 

அப்போது சற்லைட் தொலைபேசி வசதி வந்திருந்தது. வன்னியிலிருந்து காலை மாலை புலிகளின்குரல் செய்திகள் நிகழ்ச்சிகள் போன்றவற்றை அங்கிருந்து ஒரு போராளி தொலைபேசியால் தருவார். அவற்றை ஒலிப்பதிவு செய்து தமிழ்வெப்றேடியோவில் போடுவேன். அத்தோடு ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்களும் பக்சில் அனுப்புவார் போராளி நண்பர் அதனையும் தட்டச்சு செய்து போடுவேன். 
 
யாழில் தமிழ்வெப்றேடியோவில் போடும் விடயங்களையும் இணைப்பேன். 
 
பிறகு தமிழ்நாதம் இணையத்தின் பொறுப்பாளர் தொடர்பெடுத்து தமிழ்வெப்றேடியோவின் செய்திகள் நிகழ்ச்சிகளை போடக்கேட்டார். தாயகம் சார்ந்த விடயங்கள் எங்கேயும் வரட்டும் என்ற நோக்கில் அனைத்தையும் அப்போது கிடைத்த மின்னஞ்சல் முதல் அனைத்து இணையங்களுக்கும் அனுப்பி வைப்பேன். இப்படித்தான் யாழின் அறிமுகம் வந்தது எனக்கு.
 
தமிழ்நாதத்துக்கும் யாழை அறிமுகப்படுத்தி விடயங்களை பகிரச்சொன்னேன். பிறகு நடந்த கதைகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. நானும் யாழும் ஊடகங்களும் என்றதொரு பெரிய தொடரை எழுதலாம். சுவாரசியம் , முதுகில்குற்று , துரோகம் வஞ்சம் என நிறைய அனுபவங்கள் இருக்கிறது. ஆறுதலாக எழுதவுள்ளேன்.
 
அழகன் நிழலி அடிக்கவரப்படாது போனவருடம் இப்படியொரு தொடரை எழுதப்போவதாக யாழில் போட அனுமதியும் கேட்டேன். ஆனால் இன்னும் எழுதாமல் என்ன கதையென நிழலி கடுப்பாகி நிற்பது கண்முன் தெரிகிறது.  
 
கவிதன், அருவி , நிதர்சன் , சயந்தன் இப்படியொரு நீண்ட வரிசை 2000 - 2004 இற்குள் யாழை ஆண்ட ராசாக்கள். நல்ல நண்பர்கள் இவர்கள் பற்றியெல்லாம் ஒரு தொடரை அடுத்த வருடமெண்டாலும் எழுதுவேன். 
 
யாழ் இணையமும் மோகனும் தங்கள் சொல்லில் இயங்குவதாக சிலர் 2005இல் யாழில் வந்து பரப்பாகிய பிறகு விட்ட பூவிசிறிகள் வாணவேடிக்கைகள் என நிறைய அனுபவங்கள் இருக்கிறது. 
 
2003 இல் அஸ்வினி 2003 என்றொரு பெயரை ஒரு போராளிக்காக பதிவு செய்து கொடுத்து அவன் அனுப்புவதை அஸ்வினியால் போடுவேன். அஸ்வினியை அந்தப்போராளியும் லொக்கின் பண்ணி தனிமடல்கள் பார்ப்பான். அஸ்வினி யார் என்பது அப்போது யாருக்கும் தெரியாது. சில பூவிசிறிகளின் வாணவேடிக்கையை அஸ்வினி ஐடியால் பிடித்தோம். இறுதியில் அஸ்வினியை சந்திக்க ஆட்கள் கேட்ட போது நானே வெளிப்பட்டேன். நிறைய சுவாரசியங்கள் இருக்கிறது. இன்னொருமுறை எழுதுகிறேன்.
 
 
2004 யேர்மன் காவல்துறையால் வந்த சட்டசிக்கலின் போது துணைநின்றவர்களும் யாழ்கள உறவுகளான கவிதன், நிதர்சன் , அருவி போன்ற நண்பர்கள் பெரும் ஆறுதலாக இருந்தார்கள்.
 
சுரதா அண்ணாவும் யாழின் மூலமே அறிமுகமானார்.2000ம் அறிமுகமானவர்களில் இவரும் ஒருவர்.
 
இன்னும் புதினங்கள் தொடரும்.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்களாக யாழில் நிலைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவி தமிழ்சிறி

இன்னும் ஒரு மாதம் பொறுத்திருந்தால் எனக்கும் வாழ்த்துக்களும் பண முடிச்சும் கிடைத்திருக்குமே?பறவாயில்லை போகட்டும்.

 

பத்து வருத்துக்கு மேலாக கடலை போட்டுக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

 

இங்கே சகோதரம் குருவிகளை எவரும் கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது.

 

குருவிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் போது யாழில் ஏற்பட்ட சுனாமியால் நெடுக்காலபோவான் என்னும் பெயரில் எழுதத் தொடங்கியவர் பிரச்சனை முடிந்த பின்னரும் ஏனோ குருவிகளாகாமல் நெடுக்காலபோவானாகவே இருக்கிறார்.

 

முகம் தெரியாவிட்டாலும் என்னை மிகவும் கவர்ந்தவர்.சகலகலாவல்லவன்.

Link to comment
Share on other sites

 

யுனிகோட்டிற்கு முதல் மாற்றம் பெற்றபோதும் நளாயினி எழுதிக்கொண்டேயிருந்தார். குருவிகள் என்றொருவர் களத்தில் உறுப்பினராக இருந்தார். அவருக்கு பெண்கள் மீது காறித்துப்புவதே வேலை. இதனை நான் நளாயினி அதிகம் எதிர்த்து எழுதுவோம். ஆனால் குருவிகளின் மோசமான எழுத்துக்கள் ஒரு கட்டத்தில் நளாயினி மீது தனிப்பட்ட தாக்குதலாக அமைந்து நளாயினியும் இன்னும் சிலரும் விலகினார்கள்.

அக்கா தங்களின் மேற்படி குறிப்பு கடந்த கால சம்பவத்தை திரித்துச் சொல்வதால், தவிர்க்கப்பட வேண்டியதாயின் உண்மைகள் திரிக்கப்படாது என்ற வகையில் குருவிகளாகிய நாங்கள் இதனை நேரடியாக குறிப்பிட விரும்புகிறோம்.

 

யாழ் இணையக்களத்தில் பெண்ணியம் என்ற ஒரு தலைப்பு முன்னர் இடம்பெற்றிருந்தது. தமிழ் அகராதியிலேயே இல்லாத அந்த தலைப்பை யாழ் கொண்டிருப்பது அநாவசியமானது ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமூகப் பிரச்சனைகள் உள்ளன அவற்றை பொதுவில் ஆராய்வதே நல்லது என்று கருத்துப் பகிரப்பட்ட நேரத்தில் தான் நளாயினி அக்கா சேது என்பவரோடு நிகழ்ந்த அநாகரிகக் கருத்துப் பரிமாற்றம் மற்றும் தனிமடலில் எங்களோடு மேற்கொண்ட அநாகரிகக் கருத்துப் பரிமாற்றத்தின் கீழ் யாழ் நிர்வாகத்தின் நடவடிக்கையின் பிரகாரம் மோகன் அண்ணாவோடு தொலைபேசியில் புடுங்குப்பட்டு இறுதியில் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவரை யாழ் நிர்வாகமோ நாங்களோ ஒதுக்கி வைக்கவில்லை. அவர் அநாகரிமாக திட்டி தனிமடல்கள் இட்ட போதும் மிகவும் நாகரிகமாக அவருக்கு புத்திமதிகள் சொன்னோம். நீ சின்னப்பொடியன் எனக்கென்ன புத்திமதி சொல்லுறது என்ற ஒரு வீராப்பில் தான் அவா நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தா. அது அவவின் அவசர அறிவுப் பிரச்சனை.

 

இதனை நீங்கள் குருவிகள் களத்தை விட்டு விரட்டினார் என்று திரித்துக் கூறுவது தவறாகும்.

 

மேலும் இதே நீங்கள் நளாயினி அக்காவோடு பல விடயங்களில் தகராறு பட்டதையும் யாழில் பகிரங்கமாக சண்டை பிடித்ததையும் யாழ் அறியும். நாங்களும் அறிவோம். அவற்றை மீள நினைவுபடுத்தப்படக் கூடாது என்றே விரும்புகிறோம்.

 

மேலும் அன்றைய பொழுதுகளில் எம் எஸ் என் வழியாக நீங்கள் இணைய தள உதவிகள் கேட்டு நச்சரித்த பொதுகளையும் எண்ணிப் பார்க்க முடிகிறது. அப்போது எல்லாம் நச்சரிப்பாக அன்றி அன்பு அக்காவின் வேண்டுகோளாக ஏற்று உங்களுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்திருக்கிறோம். நீங்கள் இன்று அவற்றை மறந்திருக்கலாம். அல்லது மறைத்திருக்கலாம்.

 

ஆனால் உண்மையை பேச தயங்குவது உங்களின் இதய சுத்தி மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு தவறான விடயங்கள் தவறாக யாழில் உதாரணப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இந்த பதிவை இட்டு ஓய்கிறோம்.

 

நன்றி.

அன்புடன் நட்பின் குருவிகள். :)

 

---------------

 

யாழில் 10 ஆண்டுகள் கழித்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா தங்களின் மேற்படி குறிப்பு கடந்த கால சம்பவத்தை திரித்துச் சொல்வதால், தவிர்க்கப்பட வேண்டியதாயின் உண்மைகள் திரிக்கப்படாது என்ற வகையில் குருவிகளாகிய நாங்கள் இதனை நேரடியாக குறிப்பிட விரும்புகிறோம்.

 

யாழ் இணையக்களத்தில் பெண்ணியம் என்ற ஒரு தலைப்பு முன்னர் இடம்பெற்றிருந்தது. தமிழ் அகராதியிலேயே இல்லாத அந்த தலைப்பை யாழ் கொண்டிருப்பது அநாவசியமானது ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமூகப் பிரச்சனைகள் உள்ளன அவற்றை பொதுவில் ஆராய்வதே நல்லது என்று கருத்துப் பகிரப்பட்ட நேரத்தில் தான் நளாயினி அக்கா சேது என்பவரோடு நிகழ்ந்த அநாகரிகக் கருத்துப் பரிமாற்றம் மற்றும் தனிமடலில் எங்களோடு மேற்கொண்ட அநாகரிகக் கருத்துப் பரிமாற்றத்தின் கீழ் யாழ் நிர்வாகத்தின் நடவடிக்கையின் பிரகாரம் மோகன் அண்ணாவோடு தொலைபேசியில் புடுங்குப்பட்டு இறுதியில் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவரை யாழ் நிர்வாகமோ நாங்களோ ஒதுக்கி வைக்கவில்லை. அவர் அநாகரிமாக திட்டி தனிமடல்கள் இட்ட போதும் மிகவும் நாகரிகமாக அவருக்கு புத்திமதிகள் சொன்னோம். நீ சின்னப்பொடியன் எனக்கென்ன புத்திமதி சொல்லுறது என்ற ஒரு வீராப்பில் தான் அவா நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தா. அது அவவின் அவசர அறிவுப் பிரச்சனை.

 

இதனை நீங்கள் குருவிகள் களத்தை விட்டு விரட்டினார் என்று திரித்துக் கூறுவது தவறாகும்.

 

மேலும் இதே நீங்கள் நளாயினி அக்காவோடு பல விடயங்களில் தகராறு பட்டதையும் யாழில் பகிரங்கமாக சண்டை பிடித்ததையும் யாழ் அறியும். நாங்களும் அறிவோம். அவற்றை மீள நினைவுபடுத்தப்படக் கூடாது என்றே விரும்புகிறோம்.

 

மேலும் அன்றைய பொழுதுகளில் எம் எஸ் என் வழியாக நீங்கள் இணைய தள உதவிகள் கேட்டு நச்சரித்த பொதுகளையும் எண்ணிப் பார்க்க முடிகிறது. அப்போது எல்லாம் நச்சரிப்பாக அன்றி அன்பு அக்காவின் வேண்டுகோளாக ஏற்று உங்களுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்திருக்கிறோம். நீங்கள் இன்று அவற்றை மறந்திருக்கலாம். அல்லது மறைத்திருக்கலாம்.

 

ஆனால் உண்மையை பேச தயங்குவது உங்களின் இதய சுத்தி மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு தவறான விடயங்கள் தவறாக யாழில் உதாரணப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இந்த பதிவை இட்டு ஓய்கிறோம்.

 

நன்றி.

அன்புடன் நட்பின் குருவிகள். :)

 

---------------

 

யாழில் 10 ஆண்டுகள் கழித்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.

 

மிகவும் சுவாரசியமாக இருக்கிறது குருவிகலாரே. இன்னும் பல விடயங்களைப் பகிரலாமே எங்களுடன். கொட்டாவி விடும் எமக்கு கொஞ்சம் உற்சாகமாய் இருக்குமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 photo-4.jpg?_r=0 பரணி. 14.04.2003.

 

வசி_சுதா.  21.04. 2003.

 

ஆளவந்தான். 20.06.2003.

 

தேவகுரு. 14.09.2003.

 

av-138.png?_r=0  பிரபா. 29.09.2003.

 

சனியன். 04.10.2003.

 

av-164.jpg?_r=0 ஆதிபன்.18.10.2003.

 

மதன். 29.01,2004.

 

சயந்தன். 21.07.2004.

 

நிர்மலன். 22.09.2004.

 

ஜூட். 24.09.2004.

 

av-831.jpg?_r=0சிறி. 25.09.2004.

photo-615.jpg?_r=1405268876 ஹரி.26.09.2004.

 

photo-636.jpg?_r=1416732807 நிதர்சன். 07.10.2004.

 

photo-786.jpg?_r=1389681032 டபிள். 17.11.2004
 

photo-845.jpg?_r=0 குளக்காட்டான்.30.11.2004.
 

ஈழப்பிரியன். 30.01.2005.

 

அனைவருக்கும், வாழ்த்துக்கள். :)  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நன்றி தமிழ்சிறி மற்றும் உறவுகளுக்கு,

நான் யாழ்களம் ஒவ்வொரு நாளும் வந்து ஊர்புதினம் பார்த்து விட்டு சென்றுவிடுவேன், முன்புபோல் இப்பொழுது நேரம் இன்மையால் கருத்து எழுதுவது இல்லை இந்த்வருடம் கனடா சென்றபோது உறவுகளை சந்திப்பதற்கு முயற்சித்தேன் ஆனால் அது கைகூடவில்லை. நானும் குசா அண்ணரும் ஒரே நாளில் யாழில் இணைந்திருந்தாலும் நான் கருத்து எழுதுவது மிகமிக குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமடல் அனுப்பிய தமிழ்சிறிக்கு நன்றிகள்.

 

நேரமின்மையால் யாழ்களத்தில் எழுதுவதில்லை, ஆனால் ஒரு நாளைக்கு 10 தடைவைக்கு மேல் யாழ்களத்துக்கு வந்துபோவேன்.

Link to comment
Share on other sites

10 வருடங்கள் தாண்டிய ஏனைய கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

குருவிகள், யாழுக்கும் உங்களுக்கும் மோகனுக்கும் நளாயினிக்கும் இடையில் நடந்த புடுங்குப்பாடு எனக்கு தெரியாது. ஆனால் நளாயினி மீது நீங்கள் தொடர்ந்து செய்த தனிமனித தாக்குதலே நளாயினியை தொடர்ந்து எழுதாமல் ஒதுங்க வைத்தது உண்மை. இந்த விடயத்தை நளாயினியை திரும்ப அழைத்த போது நளாயினியே சொன்னார். இனி உங்களது ஆலோசனையை நளாயினி கேட்கேல்லயென்று நீங்கள் குறைபட்டால் இது பற்றி நான் எழுத ஒன்றுமில்லை.
 
நளாயினி எனக்கு பிடிக்க பல விடயங்கள் உண்டு :-
காதல் கவிதைகள் ஆண்களால் மட்டுமே அதிகம் வெளிப்படுத்த முடியுமென்ற வரையறையை மறுத்து துணிந்து காதல் கவிதைகளை வெளிப்படையாக தன்னுணர்வு சார்ந்து எழுதுவது.
பெண்கள் பெண்விடுதலை அடக்குமுறைகள் பற்றி துணிச்சலோடு அது குருவியென்றாலென்ன தோழியான நானென்றாலென்ன துணிச்சலோடு எழுதுவது.
யாழ் களத்தில் எல்லா பெண்களையும் விட துணிவோடு உங்களது எல்லா பெண்கள் மீதான அநாகரீக கருத்துக்களுக்கு பதில் எழுதிய ஒருத்தி நளாயினி.
நளாயினி பற்றி இன்னும் நிறைய இருக்கு ஆறுதலாக எழுதுகிறேன்.
 
நளாயினியும் நானும் வானொலிகளில் ஒன்றாக நிகழ்ச்சிகள் செய்துள்ளோம். ஆனால் இருவருக்கும் தனித்த தனித்த கருத்துக்கள் பல விடயங்களில் இருந்தது இப்போதும் இருக்கிறது ஆனால் ஒருநாளும் எங்களது நட்புக்குள் அவற்றை புகுத்தி கோபித்து கொண்டு போனதில்லை. இப்போதும் அப்போதும் நளாயினி எனக்கு நல்ல நட்பு. யாழைவிட்டு நளாயினி ஒதுங்கிய பிறகும் பலதடவைகள் திரும்பி வாவென்று அழைத்தும் நளாயினி வராமல் போனது இன்னும் கவலைதான். நல்லதொரு கருத்தாளரை யாழ் கருத்தாளர்களாகிய நாங்கள் இழந்து போனோம்.
 
முரண்பாடான புதினங்களை கருத்துக்களை நீங்கள் இங்கு மீள இணைத்தாலும் நல்லது. இங்கு சுமேரியர் கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பதாகவும் பொழுது போகாமல் தவிப்பதாகவும் எழுதியுள்ளார். அவருக்கு பொழுது போக நீங்கள் உதவிய புண்ணியமும் வந்து சேரும்.
 
நிதர்சன், அருவி, கவிதன் , குளைக்காடான் இப்படி ஒரு குழு நாங்கள் தினமும் மெசென்சரில் பேசிக்கொள்வோம். நிதர்சன் எனது நிகழ்ச்சிகளை போடவதற்கு தனது இணையத்தளத்தின் சேவரையும் தந்த நல்லிதயம். ஆனால் இந்த நல்லிதயங்களுடன் கூட கருத்துக்களால் மோதியிருக்கிறேன். ஆனால் இன்றளவும் நட்பில் நாங்கள் எதிரிகளாகியதில்லை. 
 
தம்பி கவிதன், அருவியை இப்போதும் நினைப்பதுண்டு. இன்று இதனை அவர்களால் வாசிக்க நேர்ந்தால் மீண்டும் அவர்கள் இங்கு வந்து எழுத வேண்டுமென வேண்டுகிறேன்.
 
குருவிகளாரே உங்களுடனும் நளாயினிக்கு அடுத்த ஆளாக முரண்பாடு நிறைய இருந்து வருகிறது கருத்தால். ஆனால் கருத்துகளம் தவிர்ந்து உங்கள் மீது அன்பும் மதிப்பும் இருக்கிறது. கருத்தை கருத்தால் வெல்ல உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். கொட்டாவிகளுக்கு இதெல்லாம் தெரியாது. உங்களிடம் மட்டுமல்ல எனக்க தெரியாத தொழில்நுட்ப விடயங்களை நிதர்சன், குருவிகள், இளைஞன், சுரதா அண்ணா இப்படி பல நண்பர்களிடம் கேட்டு அறிந்து எனது இணைய கணணி அறிவை வளர்த்துக் கொண்டுள்ளேன். உங்களுக்க பலமுறை தனித்து நன்றி சொல்லிப்பழகியதால் இங்கு உங்களது ஆதரவை சொல்ல மறந்துவிட்டேன் மன்னித்தருள்க தம்பியன்.
 
சேது இணைந்தது 2003 காலம்.
 
கனோன் - 2003(இவர் தான் எங்களது நெல்லையன். பிறகு சோழன் என பெயரை மாற்றிக்கொண்டார் பிறகு நெல்லையானார். நெல்லையன் கூட நல்லதொரு கருத்தாளர். 2000ம் களில் நாம் செய்த சில பரப்புரைகளுக்கு ஆங்கிலத்தில் எழுதத்தேவையான விடயங்களை எழுதித்தந்தவர்)
 
இன்னொரு உறவு - மதன். நல்ல கருத்தாளர் மட்டுமன்றி தேடல் வாசிப்பு மிகுந்தவர். கடந்தவருடம் அவரது நண்பர் ஒருவர் பற்றி நான் எழுதிய மாவீரர் நினைவொன்றை பார்த்துவிட்டு தொடர்ப கொண்டார். அவரும் யாழை விட்டு ஒதுங்கி போனார். மதன் இதனை படித்தால் நிச்சயம் திரும்பி வாருங்கள். பழையகளத்தில் இருந்தது போல மீண்டும் எழுதுவோம்.
 
வினித் இவர் நெதர்லாந்திலிருந்து எழுதிக்கொண்டிருந்தார். இவரும் 2003 காலங்களில் இணைந்ததாக ஞாபகம். எனது வானொலி நாடகம் ஒன்றுக்கு குரல் தந்தவர்.  கவிதன் ,அருவி போன்றோரும் நாடகத்திலும் உதவியவர்கள்.
 
பரணி - 2000ம் களில் அரேபிய நாடொன்றில் இருந்த நினைவு. நல்ல கவிஞன், கருத்தாளன் ஆனால் பிறகு அதிகம் எழுதாமல் ஒதுங்கிக்கொண்டார். எனது வானொலி நிகழ்ச்சிகளில் பரணியின் கவிதைகள் ஒலித்திருக்கிறது. அதிகம் அப்போது காதல் கவிதைகளை எழுதியவர் பரணி.
 
விதுரன்- இவர் ஸ்கண்டிநேவிய நாடுகளில் ஒன்றிலிருந்து எழுதியவர். சிறந்த அரசியல் கருத்தாளர். இவரும் 2000ம்களில் இருந்தவர். பிறகு இங்கு வருவதில்லை.
 
தமிழினி என்றொரு தங்கை கணணிதொடர்பாக எனக்கு பல விடயங்கள் சொல்லித்தந்தவர். பிறகு இவரும் காணாமற்போனார். தமிழினி இதனை வாசித்தால் மின்மடலாயினும் போடுங்கள்.
 
2003 பிற்பட்ட காலங்களில் வலைப்பூவில் எழுதிக்கொண்டிருந்த தங்கை தூயா, மற்றும் சினேகிதி ,ரசிகை இவர்களெல்லாம் இணைந்து ஒரு பெண்கள் இணைய சஞ்சிகையையும் ஆரம்பித்தார்கள். பிறக தொடர்புகள் எதுவுமற்று ஒதுங்கிவிட்டார்கள். இவர்களும் இணைய வேண்டும் மீள.
 
சோழியன் நல்ல எழுத்தாளர். கருத்தாளர். நட்பு என்ற பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவு நேரடி பழக்கம் குறைவு. 1997 தொடக்கம் வானொலிகள் பத்திரிகைகள் மூலம் நிறைய அறிந்த உறவு. 2000ம் ஆண்டு டோட்மூண்ட் நகரில் புத்தகத்திருவிழாவில் முதலில் சந்தித்தேன். இன்றுவரை கருத்துக்களால் பல இடங்களில் கருத்து மோதல் இருந்தது ஆனால் எதிரிகளாக கருத்துக்களுக்காக குத்துபட்டு முறித்துக்கொண்டு போகாமல் தொடரும் நல்ல நட்பு.
 
கிருபன் :- கிருபன் போடும் அனைத்து கருத்துக்களையும் இணைப்புகளையும் வாசிப்பேன்.பக்கசார்பற்று எல்லா விடயங்களையும் அறியும் ஆர்வம் மிக்க கருத்தாளர். நான் தவாறாமல் வாசிக்கும் கருத்தாளர் கிருபன்.  நான் மதிக்கும் கருத்தாளர்களின் கிருபனுக்கு தனியிடம்.
 
குருவித்தம்பியா, கனக்க விடயங்கள் எழுதப்போகிறேன் தொடரும் என்று முதலே போட்டுள்ளன். ஆக பழைய பல உறவுகள் பற்றி விரைவில் எழுதுவேன். சிலருக்கு நேற்று மின்னஞ்சல் போட்டுள்ளேன் அவர்களது பெயர்களை எழுதுவதில் ஏதும் சங்கடம் இருப்பின் அறியத்தருமாறு.
 
விரைவில் தொடராக எழுதுவேன் அதுவரை பொறுத்தருள்ள குருவிகளே.
Link to comment
Share on other sites

வினித் இவர் நெதர்லாந்திலிருந்து எழுதிக்கொண்டிருந்தார். இவரும் 2003 காலங்களில் இணைந்ததாக ஞாபகம். எனது வானொலி நாடகம் ஒன்றுக்கு குரல் தந்தவர்.

வினித் அண்ணா ஏன் இப்பொழுது வருவதில்லை? இவருடன் போன வருடம் திண்ணையில் பல தடவை உரையாடியிருக்கிறேன். எனக்கு பிடித்த அண்ணாக்களில் ஒருவர். :)

Link to comment
Share on other sites

தனிமடல் அனுப்பிய தமிழ்சிறிக்கு நன்றிகள்.

 

நேரமின்மையால் யாழ்களத்தில் எழுதுவதில்லை, ஆனால் ஒரு நாளைக்கு 10 தடைவைக்கு மேல் யாழ்களத்துக்கு வந்துபோவேன்.

மீண்டும் வாருங்கள் எழுதுங்கள் பிரபா.

 நானும் குசா அண்ணரும் ஒரே நாளில் யாழில் இணைந்திருந்தாலும் நான் கருத்து எழுதுவது மிகமிக குறைவு.

பழைய கருத்தாளர்கள் மீள இணைய வேண்டும். வாருங்கள் சிறி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.