Jump to content

யாழ்களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள்.


Recommended Posts

மீண்டும் வாருங்கள் எழுதுங்கள் பிரபா.

பழைய கருத்தாளர்கள் மீள இணைய வேண்டும். வாருங்கள் சிறி.

நன்றி சாந்தி மீண்டும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது இணைகின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள், யாழுக்கும் உங்களுக்கும் மோகனுக்கும் நளாயினிக்கும் இடையில் நடந்த புடுங்குப்பாடு எனக்கு தெரியாது. ஆனால் நளாயினி மீது நீங்கள் தொடர்ந்து செய்த தனிமனித தாக்குதலே நளாயினியை தொடர்ந்து எழுதாமல் ஒதுங்க வைத்தது உண்மை.இந்த விடயத்தை நளாயினியை திரும்ப அழைத்த போது நளாயினியே சொன்னார். இனி உங்களது ஆலோசனையை நளாயினி கேட்கேல்லயென்று நீங்கள் குறைபட்டால் இது பற்றி நான் எழுத ஒன்றுமில்லை.

நளாயினி எனக்கு பிடிக்க பல விடயங்கள் உண்டு :-

காதல் கவிதைகள் ஆண்களால் மட்டுமே அதிகம் வெளிப்படுத்த முடியுமென்ற வரையறையை மறுத்து துணிந்து காதல் கவிதைகளை வெளிப்படையாக தன்னுணர்வு சார்ந்து எழுதுவது.

பெண்கள் பெண்விடுதலை அடக்குமுறைகள் பற்றி துணிச்சலோடு அது குருவியென்றாலென்ன தோழியான நானென்றாலென்ன துணிச்சலோடு எழுதுவது.

யாழ் களத்தில் எல்லா பெண்களையும் விட துணிவோடு உங்களது எல்லா பெண்கள் மீதான அநாகரீக கருத்துக்களுக்கு பதில் எழுதிய ஒருத்தி நளாயினி.

நளாயினி பற்றி இன்னும் நிறைய இருக்கு ஆறுதலாக எழுதுகிறேன்.

நளாயினியும் நானும் வானொலிகளில் ஒன்றாக நிகழ்ச்சிகள் செய்துள்ளோம். ஆனால் இருவருக்கும் தனித்த தனித்த கருத்துக்கள் பல விடயங்களில் இருந்தது இப்போதும் இருக்கிறது ஆனால் ஒருநாளும் எங்களது நட்புக்குள் அவற்றை புகுத்தி கோபித்து கொண்டு போனதில்லை. இப்போதும் அப்போதும் நளாயினி எனக்கு நல்ல நட்பு. யாழைவிட்டு நளாயினி ஒதுங்கிய பிறகும் பலதடவைகள் திரும்பி வாவென்று அழைத்தும் நளாயினி வராமல் போனது இன்னும் கவலைதான். நல்லதொரு கருத்தாளரை யாழ் கருத்தாளர்களாகிய நாங்கள் இழந்து போனோம்.

முரண்பாடான புதினங்களை கருத்துக்களை நீங்கள் இங்கு மீள இணைத்தாலும் நல்லது. இங்கு சுமேரியர் கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பதாகவும் பொழுது போகாமல் தவிப்பதாகவும் எழுதியுள்ளார். அவருக்கு பொழுது போக நீங்கள் உதவிய புண்ணியமும் வந்து சேரும்.

நிதர்சன், அருவி, கவிதன் , குளைக்காடான் இப்படி ஒரு குழு நாங்கள் தினமும் மெசென்சரில் பேசிக்கொள்வோம். நிதர்சன் எனது நிகழ்ச்சிகளை போடவதற்கு தனது இணையத்தளத்தின் சேவரையும் தந்த நல்லிதயம். ஆனால் இந்த நல்லிதயங்களுடன் கூட கருத்துக்களால் மோதியிருக்கிறேன். ஆனால் இன்றளவும் நட்பில் நாங்கள் எதிரிகளாகியதில்லை.

தம்பி கவிதன், அருவியை இப்போதும் நினைப்பதுண்டு. இன்று இதனை அவர்களால் வாசிக்க நேர்ந்தால் மீண்டும் அவர்கள் இங்கு வந்து எழுத வேண்டுமென வேண்டுகிறேன்.

குருவிகளாரே உங்களுடனும் நளாயினிக்கு அடுத்த ஆளாக முரண்பாடு நிறைய இருந்து வருகிறது கருத்தால். ஆனால் கருத்துகளம் தவிர்ந்து உங்கள் மீது அன்பும் மதிப்பும் இருக்கிறது. கருத்தை கருத்தால் வெல்ல உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். கொட்டாவிகளுக்கு இதெல்லாம் தெரியாது. உங்களிடம் மட்டுமல்ல எனக்க தெரியாத தொழில்நுட்ப விடயங்களை நிதர்சன், குருவிகள், இளைஞன், சுரதா அண்ணா இப்படி பல நண்பர்களிடம் கேட்டு அறிந்து எனது இணைய கணணி அறிவை வளர்த்துக் கொண்டுள்ளேன். உங்களுக்க பலமுறை தனித்து நன்றி சொல்லிப்பழகியதால் இங்கு உங்களது ஆதரவை சொல்ல மறந்துவிட்டேன் மன்னித்தருள்க தம்பியன்.

சேது இணைந்தது 2003 காலம்.

கனோன் - 2003(இவர் தான் எங்களது நெல்லையன். பிறகு சோழன் என பெயரை மாற்றிக்கொண்டார் பிறகு நெல்லையானார். நெல்லையன் கூட நல்லதொரு கருத்தாளர். 2000ம் களில் நாம் செய்த சில பரப்புரைகளுக்கு ஆங்கிலத்தில் எழுதத்தேவையான விடயங்களை எழுதித்தந்தவர்)

இன்னொரு உறவு - மதன். நல்ல கருத்தாளர் மட்டுமன்றி தேடல் வாசிப்பு மிகுந்தவர். கடந்தவருடம் அவரது நண்பர் ஒருவர் பற்றி நான் எழுதிய மாவீரர் நினைவொன்றை பார்த்துவிட்டு தொடர்ப கொண்டார். அவரும் யாழை விட்டு ஒதுங்கி போனார். மதன் இதனை படித்தால் நிச்சயம் திரும்பி வாருங்கள். பழையகளத்தில் இருந்தது போல மீண்டும் எழுதுவோம்.

வினித் இவர் நெதர்லாந்திலிருந்து எழுதிக்கொண்டிருந்தார். இவரும் 2003 காலங்களில் இணைந்ததாக ஞாபகம். எனது வானொலி நாடகம் ஒன்றுக்கு குரல் தந்தவர்.கவிதன் ,அருவி போன்றோரும் நாடகத்திலும் உதவியவர்கள்.

பரணி - 2000ம் களில் அரேபிய நாடொன்றில் இருந்த நினைவு. நல்ல கவிஞன், கருத்தாளன் ஆனால் பிறகு அதிகம் எழுதாமல் ஒதுங்கிக்கொண்டார். எனது வானொலி நிகழ்ச்சிகளில் பரணியின் கவிதைகள் ஒலித்திருக்கிறது. அதிகம் அப்போது காதல் கவிதைகளை எழுதியவர் பரணி.

விதுரன்- இவர் ஸ்கண்டிநேவிய நாடுகளில் ஒன்றிலிருந்து எழுதியவர். சிறந்த அரசியல் கருத்தாளர். இவரும் 2000ம்களில் இருந்தவர். பிறகு இங்கு வருவதில்லை.

தமிழினி என்றொரு தங்கை கணணிதொடர்பாக எனக்கு பல விடயங்கள் சொல்லித்தந்தவர். பிறகு இவரும் காணாமற்போனார். தமிழினி இதனை வாசித்தால் மின்மடலாயினும் போடுங்கள்.

2003 பிற்பட்ட காலங்களில் வலைப்பூவில் எழுதிக்கொண்டிருந்த தங்கை தூயா, மற்றும் சினேகிதி ,ரசிகை இவர்களெல்லாம் இணைந்து ஒரு பெண்கள் இணைய சஞ்சிகையையும் ஆரம்பித்தார்கள். பிறக தொடர்புகள் எதுவுமற்று ஒதுங்கிவிட்டார்கள். இவர்களும் இணைய வேண்டும் மீள.

சோழியன் நல்ல எழுத்தாளர். கருத்தாளர். நட்பு என்ற பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவு நேரடி பழக்கம் குறைவு. 1997 தொடக்கம் வானொலிகள் பத்திரிகைகள் மூலம் நிறைய அறிந்த உறவு. 2000ம் ஆண்டு டோட்மூண்ட் நகரில் புத்தகத்திருவிழாவில் முதலில் சந்தித்தேன். இன்றுவரை கருத்துக்களால் பல இடங்களில் கருத்து மோதல் இருந்தது ஆனால் எதிரிகளாக கருத்துக்களுக்காக குத்துபட்டு முறித்துக்கொண்டு போகாமல் தொடரும் நல்ல நட்பு.

கிருபன் :- கிருபன் போடும் அனைத்து கருத்துக்களையும் இணைப்புகளையும் வாசிப்பேன்.பக்கசார்பற்று எல்லா விடயங்களையும் அறியும் ஆர்வம் மிக்க கருத்தாளர். நான் தவாறாமல் வாசிக்கும் கருத்தாளர் கிருபன்.நான் மதிக்கும் கருத்தாளர்களின் கிருபனுக்கு தனியிடம்.

குருவித்தம்பியா, கனக்க விடயங்கள் எழுதப்போகிறேன் தொடரும் என்று முதலே போட்டுள்ளன். ஆக பழைய பல உறவுகள் பற்றி விரைவில் எழுதுவேன். சிலருக்கு நேற்று மின்னஞ்சல் போட்டுள்ளேன் அவர்களது பெயர்களை எழுதுவதில் ஏதும் சங்கடம் இருப்பின் அறியத்தருமாறு.

விரைவில் தொடராக எழுதுவேன் அதுவரை பொறுத்தருள்ள குருவிகளே.

நளாயினி அக்கா யாழ் களத்தில் எல்லாப் பெண்களை விட தைரியமாக குருவிக்கு எதிராக கருத்து எழுதினார் என்டால் பின்னர் ஏன் குருவிகளது தனி மனித தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் விட்டுட்டு ஓடினவர்? ...அவரை எப்படி சாந்தி அக்கா தைரியமானவர் என சொல்கிறார்.தைரியமானவ்ர் என்டால் தொடர்ந்து எதிர்த்து நின்று அல்லவா இருக்க வேண்டும்

நெல்லையனை நீங்கள் தானே யாழுக்கு வராமல் பண்ணீங்கள்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மீண்டும் பலரை நினைவு படுத்தியமைக்கு நன்றி தமிழ் சிறி அண்ணா,
 
யாழில் high School படிக்கும் போது இணைந்தேன்…. அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை அல்லது நான் அறிந்திருக்கவில்லை.  தமிழை தட்டச்சு செய்வதற்க்கும், தமிழில் இணைங்களை உருவாக்குதற்க்கும் யாழ் கற்றுத்தந்தது. குறிப்பாக இளைஞன் அண்ணா, பொறுமையோடு எம்.எஸ்.என்னில், ஸ்ஹைப்பில் எல்லாம் வந்து சொல்லித் தருவார்.
 
முதல் முதலாக யாழில் முலம் நேரடியாக அஜீவன் அண்ணாவை சந்திக்கும் பொருட்டு நாம். ரொரன்ரோவில் ஒன்று கூடினோம், நான் அருவி, ரமா அக்கா, சினேகிதி மற்றும் ரசிகை அக்கா, இவர்களோடு அர்ஜீன் அண்ணா மற்றும் அஜீவன் அண்ணா இருவரும் இணைந்து முதல் முதலாக நேருக்கு நேர் சந்தித்தோம்.
 
அதன் பின்னரும் பலரை சந்தித்தித்தோம்…
 
இன்று இவர்களின் பலர் யாழின் வாசகர்களாக மட்டும் மாறியிருக்கிறார்கள், நானும் அப்படியே சில காலம் எழுதவில்லை. ஆனால் மீண்டும் எழுத சந்தர்பப்ம் கிடைத்துள்ளது எழுதுகிறேன் முடிந்தளவுக்கு... இதில் குறிப்பிட்டு கூற வேண்டியது என்னவெனில் யாழால் இணைந்த, அருவி, ரமாக்கா, இரசிகை அக்கா, தூயவன் அண்ணா, சினேகிதி, மணிவாசன், போன்றோர் யாழுக்கு வெளியே இன்றும் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம். 
ஆனாலும் யாழில் எழுதும் கனடா வாழ் உறவுகள் பலரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்
தற்போது கால மாற்றத்துக்கு ஏற்ப நேரங்கள் கிடைப்பது அரிது. ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்க வேண்டும் என்ற விருப்பு உண்டு.
 
இன்னும் பல கனடா யாழ் உறவுகளை அறிவேன் ஆனால் நெருக்கமான பழக்கம் யாழுக்கு வெளியில் இல்லை. குறிப்பாக சகாரா அக்கா, கலைஞன் அண்ணா, குளைக்காட்டான், அர்ஜுன் அண்ணா, நிழலி அண்ணா இன்னும் சிலரின் பெயரை மறந்து விட்டேன் மன்னிக்க…  
 
2009 ம் ஆண்டு எனது சகோதரியின் வீரச்சாவின் போது பெரும்பாலான யாழ் உறவுகள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். ஆந்த நேரத்தில் யார் யார் வந்தார்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்த முடியவில்லை மன்னிக்கவும், 
ஆனால் யாழ் ஒரு இனிய குடும்பம்.
 
இந்த உறவு நிலை தொடர வேண்டும்..!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதை விட யாழின் மூலம் இணைந்த ஜேர்மனியை சேர்ந்த சோழியன் அண்ணா, அப்போது இங்கிலாந்தில் இருந்த கணிணிப்பித்தன், தற்போதும் கருத்தெழுதும் குருவி அண்ணா, தமிழினி,  கனடாவிலிருந்து சந்திக்க முடியாமல் போன கவிதன் அண்ணா,  விஸ்னு, பிரியசகி, இலங்கையில் இருந்து எழுதிய ஹரி அண்ணா,(எனக்கு ஜீ மெயில் அழைப்பை அனுப்பியவர் இவர் தான்)  நிலா அக்கா, கனடாவிலிருந்து எழுதிக சிறிரமணன்,  பிரித்தானியாவிலிருந்து எழுதும் சனியன் அண்ணா…! அனைவரும் தொலை தூரங்களில் இருந்தாலும் ஒரு குடும்பமாய் மாலைத் பொழுதில் எம்.எஸ்.என்னில் அரட்டை அடிப்போம்… 

Link to comment
Share on other sites

ஆதை விட யாழின் மூலம் இணைந்த ஜேர்மனியை சேர்ந்த சோழியன் அண்ணா, அப்போது இங்கிலாந்தில் இருந்த கணிணிப்பித்தன், தற்போதும் கருத்தெழுதும் குருவி அண்ணா, தமிழினி,  கனடாவிலிருந்து சந்திக்க முடியாமல் போன கவிதன் அண்ணா,  விஸ்னு, பிரியசகி, இலங்கையில் இருந்து எழுதிய ஹரி அண்ணா,(எனக்கு ஜீ மெயில் அழைப்பை அனுப்பியவர் இவர் தான்)  நிலா அக்கா, கனடாவிலிருந்து எழுதிக சிறிரமணன்,  பிரித்தானியாவிலிருந்து எழுதும் சனியன் அண்ணா…! அனைவரும் தொலை தூரங்களில் இருந்தாலும் ஒரு குடும்பமாய் மாலைத் பொழுதில் எம்.எஸ்.என்னில் அரட்டை அடிப்போம்… 

 

அதுவும் நம்ம இளைஞன்...? யாகூ சற் ரூமில் 'அதைப்பற்றி கதைக்கிறோம்.. இதைப்பற்றிக் கதைக்கிறோம்' என்று கூப்பிடுவார்... பேந்து தட்டுத் தடுமாதிரி யாகூ சற் ரூம் போகப் பழகி... பேந்து வேற வேற சற் ரூம்கள் போகப் பழகி... இப்பிடித்தான் 'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?' என்றொரு தொடர் கதை யாழில் உருவாச்சு.

 

கணனிப்பித்தன் போன்ற பலருடன் தொடர்பில் இருந்தேன்... 2009இன் பின் நானும் சிலகாலம் ஒதுங்கி அல்லது நெற் பாவனையைக் குறைத்து இருந்ததால் பலருடைய உரையாடலை இழந்துவிட்டேன்.. எனினும் அவர்களில் பலர் மௌனமாக எனது முகனூலில் இருந்து.. எப்பவாவது ஒருமுறையாவது நலம் விசாரித்துக் கொண்டுதான் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பலரை நினைவு படுத்தியமைக்கு நன்றி தமிழ் சிறி அண்ணா,

யாழில் high School படிக்கும் போது இணைந்தேன்…. அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை அல்லது நான் அறிந்திருக்கவில்லை. தமிழை தட்டச்சு செய்வதற்க்கும், தமிழில் இணைங்களை உருவாக்குதற்க்கும் யாழ் கற்றுத்தந்தது. குறிப்பாக இளைஞன் அண்ணா, பொறுமையோடு எம்.எஸ்.என்னில், ஸ்ஹைப்பில் எல்லாம் வந்து சொல்லித் தருவார்.

முதல் முதலாக யாழில் முலம் நேரடியாக அஜீவன் அண்ணாவை சந்திக்கும் பொருட்டு நாம்.ரொரன்ரோவில் ஒன்று கூடினோம், நான் அருவி, ரமா அக்கா, சினேகிதி மற்றும் ரசிகை அக்கா, இவர்களோடு அர்ஜீன் அண்ணா மற்றும் அஜீவன் அண்ணா இருவரும் இணைந்து முதல் முதலாக நேருக்கு நேர் சந்தித்தோம்.

அதன் பின்னரும் பலரை சந்தித்தித்தோம்…

இன்று இவர்களின் பலர் யாழின் வாசகர்களாக மட்டும் மாறியிருக்கிறார்கள், நானும் அப்படியே சில காலம் எழுதவில்லை. ஆனால் மீண்டும் எழுத சந்தர்பப்ம் கிடைத்துள்ளது எழுதுகிறேன் முடிந்தளவுக்கு... இதில் குறிப்பிட்டு கூற வேண்டியது என்னவெனில் யாழால் இணைந்த, அருவி, ரமாக்கா, இரசிகை அக்கா, தூயவன் அண்ணா, சினேகிதி, மணிவாசன், போன்றோர் யாழுக்கு வெளியே இன்றும் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம்.

ஆனாலும் யாழில் எழுதும் கனடா வாழ் உறவுகள் பலரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்

தற்போது கால மாற்றத்துக்கு ஏற்ப நேரங்கள் கிடைப்பது அரிது. ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்க வேண்டும் என்ற விருப்பு உண்டு.

இன்னும் பல கனடா யாழ் உறவுகளை அறிவேன் ஆனால் நெருக்கமான பழக்கம் யாழுக்கு வெளியில் இல்லை. குறிப்பாக சகாரா அக்கா, கலைஞன் அண்ணா, குளைக்காட்டான், அர்ஜுன் அண்ணா, நிழலி அண்ணா இன்னும் சிலரின் பெயரை மறந்து விட்டேன் மன்னிக்க…

2009 ம் ஆண்டு எனது சகோதரியின் வீரச்சாவின் போது பெரும்பாலான யாழ் உறவுகள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். ஆந்த நேரத்தில் யார் யார் வந்தார்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்த முடியவில்லை மன்னிக்கவும்,

ஆனால் யாழ் ஒரு இனிய குடும்பம்.

இந்த உறவு நிலை தொடர வேண்டும்..!

உங்கள் சகோதரியின் மரணச் செய்தி கேட்டு யாழ் களம் சார்பாக நிழலி,அர்ஜீன் அண்ணா,கலைஞன்,சகாறா அக்கா போன்றோர்[எனக்குத் தெரிந்து] உங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.அத் துயரத்தில் இருந்து நீங்கள் கொஞ்சமாவது மீண்டு வந்தது மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனை ஏற்கனவே கண்டது போல் இருக்கிறதே எந்த high shcool ல் படித்தீர்கள் அறிந்து கொள்ளலாமா...விரும்பினால் சொல்லுங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சனை ஏற்கனவே கண்டது போல் இருக்கிறதே எந்த high shcool ல் படித்தீர்கள் அறிந்து கொள்ளலாமா...விரும்பினால் சொல்லுங்கள். :)

 

கண்டிருப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கலாம்...

 

high school : Nelson A boylen C,I (Jane and falstaff, North York)  இங்கு தமிழ் மாணவர்கள் என்று ஒரு 10 -15 மட்டும் தான்.

college: centennial college progress campus. (இங்க நம்ம ஆக்கள் நிறைய :D  கண்டிருக்க சந்தர்ப்பம் இருக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிருப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கலாம்...

 

high school : Nelson A boylen C,I (Jane and falstaff, North York)  இங்கு தமிழ் மாணவர்கள் என்று ஒரு 10 -15 மட்டும் தான்.

college: centennial college progress campus. (இங்க நம்ம ஆக்கள் நிறைய :D  கண்டிருக்க சந்தர்ப்பம் இருக்கு)

 

ம்ம்ம்..சென்ரானியல் பக்கம் கண்டு இருக்கிறன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 photo-4.jpg?_r=0 பரணி. 14.04.2003.

 

வசி_சுதா.  21.04. 2003.

 

ஆளவந்தான். 20.06.2003.

 

தேவகுரு. 14.09.2003.

 

av-138.png?_r=0  பிரபா. 29.09.2003.

 

சனியன். 04.10.2003.

 

av-164.jpg?_r=0 ஆதிபன்.18.10.2003.

 

மதன். 29.01,2004.

 

சயந்தன். 21.07.2004.

 

நிர்மலன். 22.09.2004.

 

ஜூட். 24.09.2004.

 

av-831.jpg?_r=0சிறி. 25.09.2004.

photo-615.jpg?_r=1405268876 ஹரி.26.09.2004.

 

photo-636.jpg?_r=1416732807 நிதர்சன். 07.10.2004.

 

photo-786.jpg?_r=1389681032 டபிள். 17.11.2004

 

photo-845.jpg?_r=0 குளக்காட்டான்.30.11.2004.

 

ஈழப்பிரியன். 30.01.2005.

 

அனைவருக்கும், வாழ்த்துக்கள். :) 

 

குறை மாதத்தில் பிறந்த என்னையும் சேர்த்ததுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நானும் பத்துவருசமாய் இதுக்கை நிண்டு குப்பை கொட்டியிருக்கிறன்.....நம்பவே முடியேல்லையப்பா. :o  :D
 
அசரீதி:- வாறது நடுச்சாமத்திலை.......அதுவும் சுயநினைவிலை வாறேல்லை.....பத்தோடை பதினொண்டாய் இருக்கத்தான் லாயக்கு  :lol: 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் சிறகசைத்துப் பறந்துகொண்டிருக்கும் நண்பர் குருவிகள் மாந்தோப்புக்கு வருகை தந்தது மகிழ்ச்சியைத் தந்தது. இப்போதைக்கு சாந்தி அக்கா ஞாபகவீதியில் பயணிப்பதால் அந்தப் பயணம் முடியுமட்டும் நான் பாதையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் பின்னர் சிலவற்றை எழுதுகின்றேன். இந்தப் பத்தே முக்கால் வருடத்தில் யாழில் இருந்து கற்ற பாடம் என்னவென்றால் நாங்கள் ஒருபோதும் பாடம் கற்பதில்லை என்பதைத்தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் சிறகசைத்துப் பறந்துகொண்டிருக்கும் நண்பர் குருவிகள் மாந்தோப்புக்கு வருகை தந்தது மகிழ்ச்சியைத் தந்தது. இப்போதைக்கு சாந்தி அக்கா ஞாபகவீதியில் பயணிப்பதால் அந்தப் பயணம் முடியுமட்டும் நான் பாதையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் பின்னர் சிலவற்றை எழுதுகின்றேன். இந்தப் பத்தே முக்கால் வருடத்தில் யாழில் இருந்து கற்ற பாடம் என்னவென்றால் நாங்கள் ஒருபோதும் பாடம் கற்பதில்லை என்பதைத்தான்!

 

குருவிகளார் ஒரு எட்டு எட்டிப்பார்த்திட்டு போயிருக்கார். :)

 

1924323_10152917175486810_38155349864371

Link to comment
Share on other sites

யாழ் கள மத்திய குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்  :D

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் சிறகசைத்துப் பறந்துகொண்டிருக்கும் நண்பர் குருவிகள் மாந்தோப்புக்கு வருகை தந்தது மகிழ்ச்சியைத் தந்தது. இப்போதைக்கு சாந்தி அக்கா ஞாபகவீதியில் பயணிப்பதால் அந்தப் பயணம் முடியுமட்டும் நான் பாதையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் பின்னர் சிலவற்றை எழுதுகின்றேன். இந்தப் பத்தே முக்கால் வருடத்தில் யாழில் இருந்து கற்ற பாடம் என்னவென்றால் நாங்கள் ஒருபோதும் பாடம் கற்பதில்லை என்பதைத்தான்!

ஏன் எங்க போனாலும் கற்க வேணுமெண்டு யோசிக்கிறீங்கள்? மகளோட சேர்ந்து Frozen படம் பார்த்த பின்னர் நானும் யோசிக்கிறன்! Let it go! :D

Link to comment
Share on other sites

ஏன் எங்க போனாலும் கற்க வேணுமெண்டு யோசிக்கிறீங்கள்? மகளோட சேர்ந்து Frozen படம் பார்த்த பின்னர் நானும் யோசிக்கிறன்! Let it go! :D

https://www.youtube.com/watch?v=moSFlvxnbgk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எங்க போனாலும் கற்க வேணுமெண்டு யோசிக்கிறீங்கள்? மகளோட சேர்ந்து Frozen படம் பார்த்த பின்னர் நானும் யோசிக்கிறன்! Let it go! :D

எல்லாம் வள்ளுவர் சொல்லித் தந்ததுதான்!

"கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையோர் கல்லா தவர்"

Frozen படத்தில் வருகின்ற மாதிரி அன்பு/நட்பு எனும் வேடம் பூண்டவரும் உளர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வள்ளுவர் சொல்லித் தந்ததுதான்!

"கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையோர் கல்லா தவர்"

Frozen படத்தில் வருகின்ற மாதிரி அன்பு/நட்பு எனும் வேடம் பூண்டவரும் உளர்!

 
குறள் 393
 
கண்னுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
குறள் 393
 
கண்னுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

 

 

இந்தக் குறள் ஏற்றுக்கொள்ள முடியாதது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவருக்கு எதிராக வழக்கு போட உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவருக்கு எதிராக வழக்கு போட உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு 

 

வழக்குப் போடலாம் தான். இல்லாத ஆளுக்குப் போட்டு என்னதான் பயன். பொருத்தமில்லாத குறள்களைப் போடுறவைக்கு எதிராத்தான் வழக்குப் போடவேணும் இனி.

Link to comment
Share on other sites

  • 1 month later...

தமிழ் சிறி கடந்த டிசம்பர் மாதத்தில் யாழில் இணைந்து 10 வருடங்கள் ஆனதை நினைவு படுத்தி, வாழ்த்தி மடல் போட்டிருந்தார், நன்றி. பொதுவாக  களத்துக்கு வந்து பதிவுகளை மேலோட்டமாக பார்த்து விட்டு போவது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தான் களத்துக்குள் உறுப்பினராக உள்நுழைந்து பார்வையிட்டேன். என்னை நினைவில் வைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி. களத்தில் இணைத்து 10 வருடங்கள் போனதை நம்ப முடியாமல் இருக்கிறது. 2004 இல் புதிதாக புலம் பெயர்ந்து தனிய வசித்த நேரம், தமிழ்ல் வசிக்க, எழுத, தனிமை உணர்வை போக்க யாழ் உதவியது.

அப்போது பல உறவுகளுடன் யாழிலும், எம் எஸ் என் இலும் அடிக்கடி தொடர்பில் இருந்தேன். குறிப்பிட தக்க உறவுகளை சந்தித்தும் இருக்கிறேன். அதைபற்றி பின்னர் எழுதுகிறேன். கானடாவில் இருந்தாலும், ஒன்ராறியோவில் வசிக்காத  காரணத்தால் யாரையும் சந்திக்க முடிவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.