Jump to content

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல்


Recommended Posts

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - 1

குறுக்குவழிகள் தொடரில் தூயவன் கூறிய கருத்து (வன்பொருள் தொடர்பான உங்களின் பதிவுகளை வரவேற்கின்றோம். அதை புதிய தலைப்பில் தருவது நன்றாக இருக்கும்.) சரியென எனக்கும் படுவதால் இவ்விடயத்தை புதிய தலைப்பில் ஆரம்பிக்கின்றேன்

கம்பியூட்டர் திருத்தும் பயிற்சியில் கடந்த பல மாதங்களாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். இதனால் பலர் பயனடைவார்கள் என்பதும் குறுக்குவழிகள் தொடருக்கு கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என்பதும் எனது நம்பிக்கை. நான் திருத்துவதில் நிபுணன் அல்ல. சிலவேளைகளில் தவறாக ஏதாவது சொல்லக்கூடும். கோபிக்கவேண்டாம். திருத்திக்கொள்வோம்.

எல்லா முட்டைகளையும் ஒரு கூடைக்குள் வைக்கவேண்டாம்

பலர் தெரியாமல் விடும் தவறு என்னவெனில் ஒரு ஹாட் டிஸ்க்கில் ஒரு பாட்டிஷனை உண்டாக்கி அதில் Operating System, Applications, Softwares,Datas என எல்லாவற்றையும் சேமித்து வைப்பதுதான். ஹாட் டிஸ்க் பழுதடையும்போது அல்லது வைரஸ் தொற்றி Rebooting செய்யமுடியாதபோது, Datas ஐ மீட்க கஷ்ட பட்டு அல்லலுற்று பலர் தோல்வி அடைவதை கண்டுள்ளேன். இதற்கு நிவர்த்தி என்னவெனில் ஒரு ஹாட் டிஸ்க் இருந்தால் இரு பாட்டிஷனாவது செய்யுங்கள், இரு ஹாட் டிஸ்க் இருந்தால் முதலாவதில் Operating System, Applications, Softwares ஐயும் அடுத்ததில்,Datas ஐயும் சேமியுங்கள். ஒரு சிலர் பல நூறு பாட்டுக்களை டவுண்லோட்பண்ணி ஒரே பாட்டிஷனில் சேமித்து பின் எல்லாவற்றையும் ஒரேயடியாக தொலைத்தது எனக்கு தெரியும். O/S மும் applications ம் நிறுவ அதிக பட்சம் 5 GB போதுமானது.. ஆனால் ஒரு DVD Drive வைத்திருப்பவர்களுக்கு மேலதிகமாக 10 GB இடம் சினிமாப்படம் கொப்பி பண்ணவேண்டி ஏற்படின் தேவைப்படும். 15 GB தவிர மிகுதியை அடுத்த பாட்டிஷனுக்கு ஒதுக்கலாம். CD Drive மாத்திரம் வைத்திருப்பவர்களுக்கு 10 GB இடம் முதலாவது பாட்டிஷனுக்கு போதுமானது

இரு ஹாட் டிஸ்க் வைத்திருப்பதானால் முதலாவதை 20 GB ஆகவும் அடுத்ததை (டேட்டாவிற்கு) உங்கள் சேமிப்பைப பொறுத்து 20 லிருந்து 200 GB வரை வைத்துக்கொள்ளலாம். தற்போது 1000 GB ஹாட் டிஸ்க்கும் பாவனைக்கு வந்துள்ளது.

சரி என்னிடம் 40 அல்லது 80 GB ஹாட் டிஸ்க் உள்ளது. அதில் ஒரு பாட்டிஷனை உண்டாக்கி அதில் எல்லாவற்றையும் நிறுவி கடைக்காரர் தந்துவிட்டார்களே! என்ன செய்வது என்று சொல்லப்போகிறீர்களா? சரி கடைக்காரர்கள் அதைத்தான் செய்வார்கள். கூடை கவிழ்ந்து முட்டைகளெல்லாம் ஒரேயடியாக உடைந்தால் அடிக்கடி கடைக்கு ஓடுவீர்கள் அல்லவா! அதனால்தான். இப்படியான சந்தர்ப்பத்தில் இரண்டு வழிகள் தான் உள்ளன. Reformat பண்ணி பின் இரண்டு பாட்டிஸன்களை உண்டாக்குவது அல்லது Partition Magic என்னும் Software ஐ டவுண்லோட் பண்ணி அதன் துணைகொண்டு நிறுவப்பட்டவை யாவும் அப்படியே இருக்க இன்னொரு பாட்டிஷனை உருவாக்குவது. இந்த இரண்டும் செய்ய முடியாவிடின் Datas ஐ அடிக்கடி backup செய்யுங்கள்

இந்த விடயத்தில் கண்டிப்பாக நீங்கள் கவனம் செலுத்துவது உங்களுக்கு நல்லது

Software களும் அதற்கு தேவைப்படும் இட அளவுகளும் (அண்ணளவாக)

XP with SP2 = 615 MB

MS Office 2000 = 375 MB

McAFee Anti-Virus 2006 = 105 MB

Spyware = 100 MB

Nero = 75 MB

Adobe Reader = 65 MB

Adobe Photoshop 7.0 = 142 MB

Java VM = 150 MB

__________

1627 MB

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply

நனறி தேவகுரு உங்கள் அருமையான கருத்துக்களுக்கு. தொடர்ந்து தாருங்கள்.

மேலும் உங்களிடம் ஒரு கேள்வி:

ஹாட் டிஸ்க்கில் பாட்டிஷன் செய்யும் போது Reformat செய்து பிரிக்கலாம் என எழுதியுள்ளீர்கள் அப்போது ஹாட் டிஸ்க்கில் உள்ளவை அழிந்து விடுமே??

நான் Partition Magic 8 பாவித்தே பிரித்து வைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாவது Harddisk ஐ பெரும்பாலும் Extern usb ஆக வைத்திருத்தல் பெரிதும் உதவியாக இருக்கும். அவற்றிலிருந்து வேறு கணனிகளுக்கும் வேண்டியவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

எனக்கு தெரிந்தவரை முதலில் பாட்டிசன்களை உருவாக்கவேண்டும்(ஆனால் OS வேறுபட்ட இரண்டை பயன்படுத்தும்போது தானாக பாட்டிசன் நடைபெறும்.)

Link to comment
Share on other sites

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - 1 (சந்தேக நிவர்த்தி)

Vasampu வின் கேள்வி : ஹாட் டிஸ்க்கில் பாட்டிஷன் செய்யும் போது Reformat செய்து பிரிக்கலாம் என எழுதியுள்ளீர்கள் அப்போது ஹாட் டிஸ்க்கில் உள்ளவை அழிந்து விடுமே?

பதில்:ஒரு ஹாட்டிஸ்க்கின் தனி பாட்டிஷனில் எல்லாவற்றையும் நிறுவி வைத்திருந்தால் reformat செய்யும்போது அழிந்து விடும் என்பது உண்மைதான் .முக்கியமான Datas இருப்பின் அவற்றை Backup எடுத்துவிட்டு பின் reformat செய்து இரு பாட்டிஷன்களாக பிரிக்கவேண்டும். பின்பு Datas ஐ restore செய்யலாம்

வியாசனின் சந்தேகம்: எனக்கு தெரிந்தவரை முதலில் பாட்டிசன்களை உருவாக்கவேண்டும்(ஆனால் O/S வேறுபட்ட இரண்டை பயன்படுத்தும்போது தானாக பாட்டிசன் நடைபெறும்.)

பதில்: எந்த ஒரு O/S மும் நிறுவப்படும்போது தானாக பாட்டிஷனை உருவாக்காது. ஆனால் XP & Win 2000 ஐ பொறுத்தவரை ஹாட்டிஸ்க்கின் விபரங்களை தந்து, என்ன செய்யவேண்டும் என கேட்டு (எமது வேலையை இலேசாக்குகிறது) தானே அதன்படி செய்யும். ஆனால் Win 98 ல் format & Partioning வேலையை நாம் அதிகம் manual ஆகவே செய்யவேண்டும். ஒரு பாட்டிஷனில் இரண்டு O/S களையும் நிறுவமுடியும் என்பதும் கவனிக்கத்தக்கது (இரண்டு வெவ்வேறு போல்டர்களில்). ஆனால் இது புத்திசாலிதனமானது அல்ல. ஒரு வீட்டில் இரு குடும்பங்கள் வசிப்பது போன்று: உரசல்கள் அடிக்கடி வரலாம்.

இரண்டு O/S களை நிறுவும்போது முதலில் வெளிவந்ததை முதலிலும் அடுத்து வந்ததை பின்புமாக நிறுவவேண்டும். உ.ம்: Win 2000 முதலிலும் XP ஐ பின்புமாக நிறுவவேண்டும். அப்போதுதான் கம்பியூட்டர் பூட் பண்ணும்போது எந்த O/S ஆரம்பிப்பது என்று கேட்டு தெரிவு செய்யும்படி இரண்டு O/S ஐயும் பட்டியலிட்டு தரும்.

Link to comment
Share on other sites

நனறி தேவகுரு உங்கள் அருமையான கருத்துக்களுக்கு. தொடர்ந்து தாருங்கள்.

மேலும் உங்களிடம் ஒரு கேள்வி:

ஹாட் டிஸ்க்கில் பாட்டிஷன் செய்யும் போது Reformat செய்து பிரிக்கலாம் என எழுதியுள்ளீர்கள் அப்போது ஹாட் டிஸ்க்கில் உள்ளவை அழிந்து விடுமே??

நான் Partition Magic 8 பாவித்தே பிரித்து வைத்துள்ளேன்.

நானும் உந்த Partition Magic 8 ஐ பாவித்து பிரித்து வைத்தேன் அதில் சி முக்கிய படங்களைவேறு போட்டு வைத்தேன் ஒரு முறை போர்மற் செய்யும் போது

அது தானாகவே எல்லாவற்றையும் அளித்து விட்டு பின்வரும் படத்தில் உள்ளது போல செய்து விட்டது

மிகவும் முக்கியமான படங்கள் அளிந்து விட்டன...

:cry: :cry: :cry: :cry:

எப்பொழுது நான் முழுவதுமா போர்மட் செய்தாலும் அது தானாக D இல இப்படி வந்து விடும்

அதனால் இப்ப extern hard disk வாங்கி எல்லாத்தையும் பதியிறன்

:evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - 2

பையன் ஒருவன் தனது நோட்புக் கம்பியூட்டரை எமது நிலையத்திற்கு கொண்டுவந்தான். தான் வேலை செய்துகொண்டிருக்கும்போது கம்பியூட்டரின் காட்சி (Display) 90 பாகை வலது புறமாக திரும்பி கிடக்கை நிலையில் (Horizontal) உள்ளது. முயன்று பார்த்தும் தன்னால் சீர்செய்ய முடியவில்லை என்றான்.

கம்பியூட்டரை இயக்கி டெஸ்க்ரொப் ஐ பார்த்தோம். My Computer, My Document, Recycle Pin ஆகிய எல்லாம் வரிசையில் மேலிருந்து கீழ் என்பதற்கு பதில் வலமிருந்து இடமாக கிடந்தன. Task Bar நெடும் குத்தாக இடதுகரை ஓரமாக கிடந்த்து. Start Button இடதுகை மேல்மூலையில் காணப்பட்டது,

சரி இப்போ என்ன வழி? நோட்புக் கணினி என்பதால் Graphic Cards ஏதும் கிடையாது. கிடந்தாலாவது அதன் Properties க்கு போய் இடதுபுறம் rotate பண்ணுவதற்கு ஏதாவது option உண்டாவென பார்க்கலாம். Video வும் இணைந்த Intetgrated Motherboard தான் இக்கணினிகளில் உண்டு. இருந்தாலும் அதன் Display Properties க்கு போய் பார்த்தோம். உதவக்கூடியமாதிரி எதுவும் காணப்படவில்லை. Help Topics இலிருந்தும் ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.

Display Turned Sideways என Google லில் அடித்து தேடினோம். விடை உள்ள சில வெப்தளங்களை அது தேடித்தந்தது. அதில் ஒன்றில் விடை கிடைத்தது. அதன்படி CTRL + ALT + UP-ARROW ஆகிய மூன்றையும் ஒன்றுசேர அழுத்தியவுடன் கிடக்கையில் கிடந்த காட்சி நிமிர்ந்தெழுந்து நெடுங்குத்தாக நின்றது, எமது பிரச்சனையும் தீர்ந்தது.

மேலும் சில தகவல்கள்:

CTRL +ALT + UP-Arrow = இடதுபுறமாக 90 பாகை திரும்பும்

CTRL +ALT + Right- Arrow = வலதுபுறமாக 90 பாகை திரும்பும்

CTRL +ALT + Down-Arrow = வலதுபுறமாக 180 பாகை திரும்பும்

CTRL +ALT + LEFT-Arrow = வலதுபுறமாக 270 பாகை திரும்பும்

வீட்டிலே கிடந்த இன்னொரு கணினியில் Trial பார்ப்போமென எண்ணி இந்த Key combination களை அடித்து கிடக்கைகு Display ஐ .வீழ்த்த முயன்றேன். எந்த கீ கம்பினேஷன்களை அடித்தும் எந்த பக்கமும் திரும்பமாட்டேன் என்றது. இந்த கணினியில் Sticky Keys enable பண்ணுபடாமல் இருக்கலாம்.

நோட்புக்கணினியில் Sticky Keys enable பண்ணுபட்டிருக்கலாம். அதனால்தான் பையன் கணினியை பாவிக்கும்போது Sticky Keys களை தெரியாமல தவறுதலாக அடித்துவிட்டிருக்கின்றான். Sticky Keys என்பது CTRL, ALT, SHIFT என்பதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவகுரு சார் எனக்கு நிண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இதில் எது சரி கணிணி, கணினி,

கணனி

Link to comment
Share on other sites

தேவகுரு மிகவும் பல நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள்.

நீண்ட நாட்களாக யாரிடமோ எல்லாம் கேட்டு களைத்து விட்டேன். முடிந்தால் நீங்களாவது உதவுங்களேன். எனது கையடக்க கணணி(லப்டப்) யை போட்டவுடன் (ஆன் பண்ணியவுடன்) வளமைபோல விண்டோஸ் திih (ஆரம்பிக்கும்போது ஒப்ரட்டிக்சிஸ்ரம் என்று வந்து பின் மெல்லிய இடைவெளிக்குள் ஒளி ஒன்று ஓடி மறையும்) வருகிறது ...ஆனால் பின் திரையில் ஒன்றுமே தெரியவில்லை கணணிக்குள் மிக முக்கியமான விடயங்கள் உள்ளது. என்னண்டு சரிசெய்யலாம் ????

Link to comment
Share on other sites

யாரிடமாவது Partition Magic 8 இருந்தால் அறியத்தரமுடியுமா.........அல்லது எங்கு போய் பதிவிறக்கம் செய்யலாம் என்று கூறுங்களேன்...

Link to comment
Share on other sites

Jeya அவர்கட்கு!

Partition Resizer என்று ஒரு முற்றிலும் இலவசமான மென்பொருளை கீழ்காணும் பிரபல்யமான நம்பிக்கையான தளத்திலிருந்து டவுண்லோட் பண்ணலாம். விற்பனையாகும் Partition Magic க்கிற்கு மாற்றீடு. பாவித்த சிலர் நன்று என கூறினார்கள். கீழ்க்காணும் தளத்திலிருந்து டவுண்லோட் பண்ணலாம்.

http://www.majorgeeks.com/Partition_Resizer_d4701.html

Link to comment
Share on other sites

வணக்கம் தேவகுரு

கனநாட்களுக்குப் பின் களத்தில் கண்டதில் மகழ்ச்சி உங்கள் தகவலுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

நன்றி தேவகுரு ...(Partition Resizer)

நான் முதலாவதாக கேட்ட கேள்விக்கு பதில் என்னும் தரவில்லை முடிந்தால் முயற்சித்துப் பாருங்களேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவகுரு அவர்களே raid பற்றி கொஞ்சம் சொல்லலாமே புதிது புதிதாக Raid ல் வந்தகொண்டிருக்கின்றது. கொஞ்சம் தெரியும் நீங்கள் கணனி திருத்துதல் சம்மந்தப்பட்ட தொழில் புரிவதால் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தேவகுரு ஜயா. நீண்ட நாட்களின் பின் கன்டதில் மகிழச்சி. உங்கள் தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

கறுப்பி அவர்கட்கு!

கணிணி அல்லது கணினி என்பதில் எது சரி என்பதில் சந்தேகம் உள்ளது என்கிறீர்கள்.

வெப்பமானி, பாரமானி என்பது சரியென ஏற்றுக்கொண்டால், னி என்ற எழுத்தில் இயந்திரங்களின் பெயர்கள் முடிவது சரி என ஏற்றுக்கொள்ளலாம்.

அப்படி பார்க்கும்பொழுது கணித்தல் வேலையை செய்யும் இயந்திரத்தின் பெயர் கணினி ஆகத்தான் இருக்கவேண்டும்.

கணினி என்பதுதான் சரி என நான் கூறுவேன்

Link to comment
Share on other sites

Jeya அவர்கட்கு!

Quote :lol:நீண்ட நாட்களாக யாரிடமோ எல்லாம் கேட்டு களைத்து விட்டேன். முடிந்தால் நீங்களாவது உதவுங்களேன். எனது கையடக்க கணணி(லப்டப்) யை போட்டவுடன் (ஆன் பண்ணியவுடன்) வளமைபோல விண்டோஸ் திih (ஆரம்பிக்கும்போது ஒப்ரட்டிக்சிஸ்ரம் என்று வந்து பின் மெல்லிய இடைவெளிக்குள் ஒளி ஒன்று ஓடி மறையும்) வருகிறது ...ஆனால் பின் திரையில் ஒன்றுமே தெரியவில்லை கணணிக்குள் மிக முக்கியமான விடயங்கள் உள்ளது. என்னண்டு சரிசெய்யலாம்?)

விடை :-நீங்கள் கேட்ட முதலாவது கேள்விக்கு நான் இன்னமும் பதில் தரவில்லை என ஆதங்கப்பட்டீர்கள். சரி இப்போ பார்ப்போம்.

கணினி முன் உட்கார்ந்து ஒரு செயலை ஆரம்பித்தவுடன், மூளைக்கு தூண்டுதல் திரையில் Dialog Box களை பார்ப்பதனால் கிடைக்கிறது, கணினிக்கு தூர இருக்கும்போது Prompt கிடைப்பதில்லையாததினால் விடை கூறுவது கடினம். அதனால்தான் பலர் உங்கள் கேள்விக்கு பதில் கூறவில்லை. கணினியை பொறுத்தவரை அதன் பாகங்களெல்லாம் ஒரு கைப்பந்தாட்டக்குழுவின் அங்கத்தவர்கள் போல. ஒருவர் தவறுவிட்டாலும் அதன் விளைவு முழு செயற்பாட்டையும் பாதிக்கும். உ.ம்: Keyboard ல் ஒரு சிறு பிழை இருந்தாலே Booting இடை நடுவில் ஒரே காட்சியை காட்டியபடி freeze ஆகி நிற்கும். எனவே பிழை எங்குள்ளது என கண்டுபிப்பற்கு, ஒவ்வொரு பாகமாக கழற்றி வேறு நம்பிக்கையான பாகம் போட்டுத்தான் பரீட்சிக்கவேண்டும். இப்படித்தான் பிழை திருத்துபவர்கள் செய்வார்கள்.

நீங்கள் உடனே செய்யவேண்டியது உங்களது Lap Top கணினியின் ஹாட் டிஸ்க்கை கழற்றி இன்னொரு Desk Top PC யில் இணைத்து. உங்கள் ஹாட் டிஸ்க் அந்த Desk Top PC யால் கண்டுகொள்ளப்பட்டால் உங்கள் Data களை மீட்டு ஒரு CD யில் பதிந்துகொள்வதுதான். (உங்கள் ஹாட் டிஸ்கை Desk Top PC உடன் இணைப்பதற்கு விசேஷ சாதனமொன்று உண்டு). அதன் பின்னர் தான் Repair பற்றியோசிக்கவேணும்.

உங்கள் ஹாட் டிஸ்க் Desk Top PC ஆல் கண்டுகொள்ளப்பட்டால் பெரும்பாலும் அதில் பிழை இருக்காது. Datas மீட்கப்பட்டபின் O/S த்தை reinstall பண்ணி பார்க்கவும். Insall பண்ணுப்பட்டால் தப்பினீகள்.

சரிவராத பட்சத்தில் இன்னொரு நல்ல Memory stick ஐ மாற்றி போட்டு பரீட்சியுங்கள். Memory யிலும் பிழையில்லையானல், Motherboard தான் குற்றவாளி. எதற்கும் warranty இருந்தால் அது தந்தவர்களைக்கொண்டு திருத்திவிப்பது சிறந்தது. அல்லது Lap Top நிபுணர் ஒருவரிடம் காட்டிப்பாருங்கள். Desk Top PC திருத்துபவர்கள் எல்லாரும் Lap Top ஐ திருத்தமாட்டார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்,

Desk Top PC யில் பிழை திருத்துவது இலேசு. ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் தனித்தனி பாகங்கள் உண்டு. Lap Top ல் எல்லா செயற்பாடுகளும் இணைக்கப்பட்ட Integrated Motherboard ஐதான் காணலாம். எனவே செலவு அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jeya அவர்கட்கு!

Quote :lol:நீண்ட நாட்களாக யாரிடமோ எல்லாம் கேட்டு களைத்து விட்டேன். முடிந்தால் நீங்களாவது உதவுங்களேன். எனது கையடக்க கணணி(லப்டப்) யை போட்டவுடன் (ஆன் பண்ணியவுடன்) வளமைபோல விண்டோஸ் திih (ஆரம்பிக்கும்போது ஒப்ரட்டிக்சிஸ்ரம் என்று வந்து பின் மெல்லிய இடைவெளிக்குள் ஒளி ஒன்று ஓடி மறையும்) வருகிறது ...ஆனால் பின் திரையில் ஒன்றுமே தெரியவில்லை கணணிக்குள் மிக முக்கியமான விடயங்கள் உள்ளது. என்னண்டு சரிசெய்யலாம்?)

விடை :-நீங்கள் கேட்ட முதலாவது கேள்விக்கு நான் இன்னமும் பதில் தரவில்லை என ஆதங்கப்பட்டீர்கள். சரி இப்போ பார்ப்போம்.

கணினி முன் உட்கார்ந்து ஒரு செயலை ஆரம்பித்தவுடன், மூளைக்கு தூண்டுதல் திரையில் Dialog Box களை பார்ப்பதனால் கிடைக்கிறது, கணினிக்கு தூர இருக்கும்போது Prompt கிடைப்பதில்லையாததினால் விடை கூறுவது கடினம். அதனால்தான் பலர் உங்கள் கேள்விக்கு பதில் கூறவில்லை. கணினியை பொறுத்தவரை அதன் பாகங்களெல்லாம் ஒரு கைப்பந்தாட்டக்குழுவின் அங்கத்தவர்கள் போல. ஒருவர் தவறுவிட்டாலும் அதன் விளைவு முழு செயற்பாட்டையும் பாதிக்கும். உ.ம்: Keyboard ல் ஒரு சிறு பிழை இருந்தாலே Booting இடை நடுவில் ஒரே காட்சியை காட்டியபடி freeze ஆகி நிற்கும். எனவே பிழை எங்குள்ளது என கண்டுபிப்பற்கு, ஒவ்வொரு பாகமாக கழற்றி வேறு நம்பிக்கையான பாகம் போட்டுத்தான் பரீட்சிக்கவேண்டும். இப்படித்தான் பிழை திருத்துபவர்கள் செய்வார்கள்.

நீங்கள் உடனே செய்யவேண்டியது உங்களது Lap Top கணினியின் ஹாட் டிஸ்க்கை கழற்றி இன்னொரு Desk Top PC யில் இணைத்து. உங்கள் ஹாட் டிஸ்க் அந்த Desk Top PC யால் கண்டுகொள்ளப்பட்டால் உங்கள் Data களை மீட்டு ஒரு CD யில் பதிந்துகொள்வதுதான். (உங்கள் ஹாட் டிஸ்கை Desk Top PC உடன் இணைப்பதற்கு விசேஷ சாதனமொன்று உண்டு). அதன் பின்னர் தான் Repair பற்றியோசிக்கவேணும்.

உங்கள் ஹாட் டிஸ்க் Desk Top PC ஆல் கண்டுகொள்ளப்பட்டால் பெரும்பாலும் அதில் பிழை இருக்காது. Datas மீட்கப்பட்டபின் O/S த்தை reinstall பண்ணி பார்க்கவும். Insall பண்ணுப்பட்டால் தப்பினீகள்.

சரிவராத பட்சத்தில் இன்னொரு நல்ல Memory stick ஐ மாற்றி போட்டு பரீட்சியுங்கள். Memory யிலும் பிழையில்லையானல், Motherboard தான் குற்றவாளி. எதற்கும் warranty இருந்தால் அது தந்தவர்களைக்கொண்டு திருத்திவிப்பது சிறந்தது. அல்லது Lap Top நிபுணர் ஒருவரிடம் காட்டிப்பாருங்கள். Desk Top PC திருத்துபவர்கள் எல்லாரும் Lap Top ஐ திருத்தமாட்டார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்,

Desk Top PC யில் பிழை திருத்துவது இலேசு. ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் தனித்தனி பாகங்கள் உண்டு. Lap Top ல் எல்லா செயற்பாடுகளும் இணைக்கப்பட்ட Integrated Motherboard ஐதான் காணலாம். எனவே செலவு அதிகம்.

Ooperating system (OS) தொடக்கம் வந்தால், நீங்கள் safe mode (you have to hit f8 key when the system try to boot - right after the pre boot message) பாவிச்சு உட்போகப் பார்க்கலாம். அப்பிடி போனால் data backup செய்யலாம். அது முடியவில்லையானால், அனேகமாக corrupted OS எண்டுதான் நினைக்கிறேன். OS CD போட்டு OS repair பண்ணிப் பார்க்கலாம். அதுவும் சரிவரவில்லையெண்டால் தேவகுரு சொன்ன மாதிரி desktop PC பயன் படுத்தி data back up செய்திட்டு மீண்டும் OS reinstall பண்ணிப்பாருங்கோ.

Motherboard (MB) பிழையெண்டால் post boot (won't try to launch windows) பண்ணாது, அதனால் MB பிழையாக இருக்க சந்தர்ப்பம் குறைவு.

Hard drive (HD) பழுதொண்டால் boot பண்ண முயற்சிக்கும் போது click சத்தம் வரும் (check if you hear a grinding sound).

அப்படி இல்லாவிடில், HD யும் Memory card யும் கழட்டிப்போட்டு திரும்பப் போட்டுப் பாருங்கோ (As I said, try to reseat the hard drive and memory card, if you have more than one memory card, try one by one).

.

Link to comment
Share on other sites

நன்றி தேவகுரு,சபேஸ் ....

சபேஸ் நீங்கள் கூறியது போல ..........f8 key when the system try to boot - right after the pre boot messageசேவ் மொட் அடித்து பார்த்து விட்டேன்... அடுத்தது சிஸ்ரம் சீடி போட்டு திருத்தி பார்க்க போறன்.... என்ர கேள்வி உங்கள் இருவரிடமும் கேட்கிறன் OS repair பண்ணிப் பார்க்கும் போது Hard drive இருக்கும் ஒன்று கூட அழியாதா?? ஏனென்றால் அதில் மிக முக்கிய படங்கள், தரவுகள் உள்ளது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

crashஆன O/S files அழிக்கப்பட்டு புது fileகள் உருவாக்கப்படும். ஆனால் வேறு எந்த dataவுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பயப்படாமல் செய்யலாம்

Link to comment
Share on other sites

Jeya அவர்கட்கு

Repair installation செய்யும்போது Datas ஐ அழிக்காமல் system files மட்டும் புதுப்பிக்கப்படுகிறது என்பது உண்மைதான். Clean installation செய்யும்போது யாவும் அழிக்கப்பட்டு புதியதாக நிறுவப்படும்.

ஆரம்பத்தில் நீங்கள் கம்பியூட்டர் வாங்கியபோது O/S தை நிறுவுவீர்கள். அதன் பின்னர் Device drivers, Anti-Virus software களை நிறுவுவீர்கள். இவைகள் நிறுவப்படும்போதெல்லாம் றிஜிஸ்ரியில் பதிவுகள் மேற்கொள்ளப்படும். Program File லில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

பின்னர் பிரச்சனை ஏற்பட்டு Repair installation செய்யும்போது உங்களது system files மற்றும் Registry மீண்டும் Installation CD யில் இருந்து கொப்பி பண்ணப்பட்டு ஆரம்ப நிலைக்கு வந்துவிடும். அதாவது Device drivers, Anti-Virus software நிறுவுவதற்கு முன்பு இருந்த நிலை. எனவே கம்பியூட்டர் சரியாக இயங்குவதற்கு இவைகளை மீண்டும் நிறுவவேண்டி ஏற்படும்.

எனக்கு அப்படி 3 வருடங்களின் முன் ஒருமுறை Repair installation செய்யும்போது ஏற்பட்டது. சில Device drivers ஐ புதிதாக நிறுவவேண்டி ஏற்பட்டது. Norton Anti-Virus ஐ இயக்கியபோது அது சொன்னது தனது பைல்கள் சில Corrupted என்றும் தன்னை அழித்துவிட்டு மீண்டும் நிறுவும்படியும். (காரணம் இதன் பதிவுகள் புதிய Registry யில் இல்லை). மீண்டும் NAV நிறுவுவதானால் காசு கொடுத்து புதிய Version வாங்க வேணும். அதனால் அதை அழித்துவிட்டு இலவச AVG Anti-Virus ஐ நிறுவினேன். இச்சிக்கல் காரணமாக நான் Repair installation செய்ய தற்போது விரும்புவதில்லை. Datas அழியாதே தவிர கிட்டத்தட்ட Clean installation மாதிரித்தான். எனவே நான் முன் சொன்ன மாதிரி Datas ஐ மீட்டுக்கொண்டு Clean installation செய்வது சிறந்தது என்பது என் அபிப்பராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலு;க்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், தேவகுரு கூறியது போல repair installation பண்ணும் போது சில driver files & application files களுக்கு மாற்றங்கள் வந்து நீங்கள் அவற்றை reinstall செய்ய வேண்டி வரலாம்.

சில laptop உடன் OS CD க்கு பதில் "Quick Restore" எண்டொரு CD வரும். அந்த quick restore CD போட்டு run பண்ணினால் எல்லாமே போய்விடும். சுயாதீனமாக format பண்ணி, clean install பண்ணி drivers install எல்லம் பண்ணிவிடும். உங்கள் data வும் அழிந்து விடும். ஆகவே, quick restore CD தான் வந்ததெண்டால், retail version of OS CD பயன்படுத்தி repair installation செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

Troubleshooting the computers - கம்பியூட்டர் திருத்துதல் - 3

Primary, Extended and Logical Partitions.

கம்பியூட்டர் துறை கடல் போன்றது. இதை முழுமையாக கற்றுக்கொண்டவர் யாரும் இலர். சிலர் ஒரு சில பிரிவில் நிபுணராக இருப்பர். ஒருவர் கம்பியூட்டரின் எல்லா பிரிவிலும் நிபுணர் என்று இல்லை. எமக்கு தேவையானவற்றை அறிந்து கொள்ளவேண்டுமே தவிர, எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முயன்றால் 10 வருடங்கள் முயன்றாலும் முடியாது.

ஒரு ஹாட்டிஸ்க்கை எடுத்துக்கொண்டால் குறைந்தது இரு பாட்டிசன்களாவது வைத்துக்கொள்ளவேண்டும் என முன்பு கூறியுள்ளேன். இப்போது பெரிய அளவுள்ள ஹாட்டிஸ்க்குகள் சந்தையில் காணப்படுகின்றன. ஒருவர் 160 GB Size ஹாட்டிஸ்க் வைத்துள்ளார். அதில் 35 GB ல் ஒரு Primary பாட்டிசன் உண்டாக்கி XP நிறுவி உள்ளார். மிகுதியாகவுள்ள 125 GB ல் எத்தனை பாட்டிசன்கள் நிறுவவேண்டும் அதில் Primary ஆ, Extended ஆ, Logical பாட்டிசனா நிறுவ வேண்டும் என்பதில் குழப்பமாகவுள்ளார். Disk Management க்கு போய் unallocated space ல் வலது கிளிக் செய்தால் இந்த 3 தெரிவுகளும் காணப்படும்.

சாதரணமாக வீட்டுக்கணனிகளை பொறுத்தவரை 4 பாட்டிசன்கள் தாராளம். ஒரு O/S த்தின் கீழ் 4 Primary partitions மட்டும் உண்டாக்கமுடியும். அதற்கு மேல் ஏன் வைத்திருக்க முடியாது? என்பதற்கு விடை தெரியாது. எனவே 4 அல்லது அதற்கு குறைவான partition களை வைத்திருக்க விரும்புவர்கள் Primary partition களையே உண்டாக்குங்கள். இந்த நான்கு பாட்டிசன் வரையறையை மீறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிதான் Extended Partition என்னும் முறைமை. இதன்படி மூன்று Primary partition களையும் நான்காவதை Extended Partition ஆக்கி, அந்த Extended Partition ஐ எத்தனை Logical Drive ஆகவும் பிரிக்கலாம். வீட்டு கணனிகளை பொறுத்தவரை Logical Drive அதிகம் தேவையில்லை.

அடுத்து நாம் Partition களை உருவாக்கும்போது அதன் அளவுகளை ஒரே எண்ணில் வைத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. உ.ம்: 160 GB அளவுள்ள ஹாட்டிஸ்க் வைத்திருப்பவர் நான்கு பாட்டிசன் உருவாக்க விரும்பின் நான்கையும் 40 GB யில் வைத்துக்கொள்வதை தவிர்த்து 30 GB., 35 GB, 45 GB, 50 GB என்ற அளவுகளில் வைத்துக்கொள்வது நன்று. காரணம் நாம் DOS இல் வேலைசெய்யும்போது அல்லது BIOS ல் பார்வையிடும்போது Partition களை பிரித்து அடையாளம் கண்டு கொள்வது எளிது. ஒரே எண்ணில் வைத்துக்கொண்டதனால் Ghost Restore செய்யும்போது மாறி தவறான பாட்டிசனில் restore செய்து கஷ்டப்பட்டவர்கள் உளர். அடுத்து பாட்டிசன்களுக்கு பெயர் வைத்துக்கொள்வதும் அவைகளை அடையாளப்படுத்துவதற்கு உதவும். Windows Explorer ல் பாட்டிசன் மேல் வலது கிளிக் செய்து Rename பண்ணிக்கொள்ளவும் முடியும். Primary partition னில் O/S நிறுவி Boot Volume ஆக பாவிக்க முடியும். Logical Drive வில் அப்படி செய்ய முடியாது. அதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.