Jump to content

வான் நிறையும் தனிமை


Recommended Posts

பெரும் குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கிறது

இலையுதிர்காலத்தின் கடைசிப் பாடலை

நீண்டவால்க் குருவி.

 

வானத்தின் சோகங்களையும்

வீதியின் தனிமைகளையும்

பழுத்த ஊசிஇலைகளின் துயரங்களையும்

துணைக்கழைத்து நேசிப்பின் வரிகளை

இழைத்துக்  கூவியழுகின்றது.

 

சேர்ந்து இசைக்கும்

குரலொன்று வருமென்ற தேடலில்

நியமம் தப்பாத இடைவெளிகளை

சலிப்பின்றி விட்டு காத்திருக்கவும் செய்கின்றது.

 

நீண்டவால்க் குருவியின் ஒற்றைக்குரலில்

சூரியன் மரணிக்கத்தொடங்குகிறான்.

 

இருளின் பெருக்கத்தொடு இயைந்து

மௌனத்தின் இடைவெளியும் நீண்டு

கனக்கத் தொடங்குகையில்,

 

அந்த

இடைவெளிகளின் நிசப்தத்தில்

மூச்சின் ஒலிகளை  நிறுத்திக்

காவலிருக்கத் தொடங்குகிறேன்.

 

இன்னொருகுரல்

எங்காவது ஒலித்துவிடாதா....

நீள்கின்ற தனிமை இந்த

இலையுதிர்காலத்தொடு கலைந்துவிடாதா ....

 

நீண்டவால்க் குருவியின்

ஒற்றைக்குரலும் தளம்பத்தொடங்குகிறது.

குளிர் மெல்லப் பரவ.

அங்குமிங்கும் வெண்துகள்கள் சிந்தத்தொடங்குகிறது.

 

எங்கும் இருள்.

தூண்களில், 

மின்குமிழ்களில்

தடித்த கோடுகள் நீள்கின்றன.

யன்னல்கள்  அடைந்து கொள்கின்றன.

 

உதிர்ந்துகிடக்கும்

மஞ்சள்  இலையொன்றை எடுத்து

நரம்புகளோடு பேசத்தொடங்குகிறேன்.

 

உள்ளங்கையில் தவறிவிழுந்த

ஒற்றைத் துளியின் சூட்டில்

நீண்டவால்க் குருவியின் மௌனத்தால்

நட்சத்திரமொன்று  உதிர்ந்துகொண்டதை உணர்ந்தேன்.

 

காலடியில்,

வானம் வெறுமையாகிக் கிடந்தது.

 

Link to comment
Share on other sites

நல்லதொரு கவிதை நெற்கொழு. வாசிக்கின்றவர்கள் தனிமையில் இருந்தாலோ அல்லது அவர்கள் தனிமையில் ஒரு காலத்தில் வாழ்ந்து இருந்தாலோ  அனுபவத் தொற்றலைக் கொடுக்க கூடிய கவிதை இது.

 

நீண்ட வானில் எவருமற்று இருளுக்குள் கரையும் ஆட்காட்டிக் குருவியின் குரலைப் போன்று இருக்கின்றது கவிதை.

 

 


சேர்ந்து இசைக்கும்

குரலொன்று வருமென்ற தேடலில்

நியமம் தப்பாத இடைவெளிகளை

சலிப்பின்றி விட்டு காத்திருக்கவும் செய்கின்றது.

 

 

எங்கும் இருள்.

தூண்களில், 

மின்குமிழ்களில்

தடித்த கோடுகள் நீள்கின்றன.

யன்னல்கள்  அடைந்து கொள்கின்றன.

 

அருமை....!

Link to comment
Share on other sites

மிக்க அன்பு நிழலி அண்ணா. 

 

உங்களில் வார்த்தைகள் புதிதாய் என்னை உருவாக்குகின்றன.

முதல் கவிதையில் விட்ட தவறினை விடக்கூடாது என நினைத்தேன். ஓரளவு சாத்தியமாக்கி விட்டேன் என்றே நினைக்கிறேன். 

இன்னும் முயற்சிப்பேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேர்ந்து இசைக்கும்
குரலொன்று வருமென்ற தேடலில்.........

 

 

பாராட்டுக்கள். சேர்ந்து இசைக்கும் குயில் விரைவில் வரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

சேர்ந்து இசைக்கும்

குரலொன்று வருமென்ற தேடலில்

நியமம் தப்பாத இடைவெளிகளை

சலிப்பின்றி விட்டு காத்திருக்கவும் செய்கின்றது.

 

 

 

 

 

இருளின் பெருக்கத்தொடு இயைந்து

மௌனத்தின் இடைவெளியும் நீண்டு

கனக்கத் தொடங்குகையில்,

 

அந்த

இடைவெளிகளின் நிசப்தத்தில்

மூச்சின் ஒலிகளை  நிறுத்திக்

காவலிருக்கத் தொடங்குகிறேன்.

 

இன்னொருகுரல்

எங்காவது ஒலித்துவிடாதா....

நீள்கின்ற தனிமை இந்த

இலையுதிர்காலத்தொடு கலைந்துவிடாதா ....

 

நீண்டவால்க் குருவியின்

ஒற்றைக்குரலும் தளம்பத்தொடங்குகிறது.

குளிர் மெல்லப் பரவ.

அங்குமிங்கும் வெண்துகள்கள் சிந்தத்தொடங்குகிறது.

 

எங்கும் இருள்.

 

 

 

 

உதிர்ந்துகிடக்கும்

மஞ்சள்  இலையொன்றை எடுத்து

நரம்புகளோடு பேசத்தொடங்குகிறேன்.

 

உள்ளங்கையில் தவறிவிழுந்த

ஒற்றைத் துளியின் சூட்டில்

நீண்டவால்க் குருவியின் மௌனத்தால்

நட்சத்திரமொன்று  உதிர்ந்துகொண்டதை உணர்ந்தேன்.

 

காலடியில்,

வானம் வெறுமையாகிக் கிடந்தது.

 

உன் சோகம் எம் இனத்துக்கான சாபம்

நாம் எல்லோரும் எதை எதை ஒரு மனிதன் இழக்கக்கூடாதோ

அவற்றை பறி  கொடுத்தவர்கள்

உன்னை பார்த்திருக்கின்றேன்

என்னை கண்டிருக்கின்றாய்

எம் முகங்கள் எவ்வளவு தான் சிரித்தாலும்

மனமார்ந்த சிரிப்பென்பது

எம்மினத்துக்கு தமிழீழம் கிடைத்தாலும் வராது...

இழந்தவை அத்தனை அத்தனை.........

 

ஒவ்வொரு வரியும் பின்னிப்போடுகிறது

கண்கள் பனிக்கின்றன

ஒரு இனத்தை உன்னால்

உன் வரிகளால்தொடமுடியும் என்பதை

உன்னைக்கண்டதிலிருந்து நம்புகின்றேன்..

அதற்கொரு படி இது...

தொடர்க

வாழ்க  வளமுடன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழு தனிமை பற்றிய  உணர்வேந்திய படைப்பு. தேடல்கள் வேறாகினும் தனிமையைத் தாண்டியிருக்கிறேன் எழுத்துகளின் துணையோடு ....  உறவுகளும் , தோழமைகளும் தராத ஆறுதலையும் நிம்மதியையும் எழுத்துக்கள் பிரசவிக்கும். இந்த எழுத்துப்பிரசவிப்பின் பின்னர் சிறிது நாட்களுக்கு மனம் சற்றே ஆழ்ந்து உறங்கும். இதை எழுதிய பின்னால் உங்களுடைய மனதில்கூட பேரமைதி ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். தனிமை அரவின்றி கொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பணின் வரிகள் என்ற உணர்வோடு வாசிக்கும்போது வாசகன் என்பதைத்தாண்டி ஒரு நெகிழ்ச்சி மனமெங்கும் இருக்கும்.. இந்த கவிதா உணர்வுகள் எம்மை எத்தனை வயதிலும் அத்தனை இளமையோடு இணைத்திருக்கும்.. இந்த அழகியல் உணர்வு நிறைந்த நண்பர்களோடு வாழ்வைக்கடப்பதில் கொஞ்சம் கர்வமாகவும் இருக்கு. கவிதை வார்த்தைக்கோர்ப்பில் பிரமாண்டமாக இருக்கிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையின் வாடை முகத்திலறையும் வேளைகளில் தனிமையின் சுவாசம் மூச்சை அடைக்கும் வேளைகளில் சுற்றிலும் உறவுகளிருந்தாலும் முற்றிலும் தனிமை உணர்வு நிறைந்தவளாய் நானும் என் கனவுகளும் ம்ட்டுமே வாழும் பொழுதுகள் ஏராளம். தனிமை உணர்வை நெகிழ்ச்சியுடன் எடுத்து வந்த நெற்சொழுவின் கவிதை மிக அற்புதம். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

இனிமையாய் தோன்றும் தனிமை ஒரு கட்டத்தில் சலித்து வெறுப்பாய் வெறுமையாய் தோன்றும்.

வரிகள் அருமை நேற்கொழு. எதுவுமெ நிரந்தரமில்லை... உங்கள் தனிமையும் விரைவில் விலகும்.

Link to comment
Share on other sites

தனிமையின் எல்லைவரை  துணை தேடி அலைந்து கடைசியில் தனித்து நின்று கூவியலும் ஒற்றை வாழ்  குருவி தனிமையில் நிறைந்திருக்கும் வெறுமையை மனதில் இருத்துகிறது.  வசந்தம்  வர அமைதியாக காத்து கிடந்த புள் தானாக முளைக்கும். நீண்ட வால் குருவியின் தனிமை விலகும் வரும் நாட்களில். தனிமையின் வேர்களை ஆழ எம்முள் பதிய வாய்த்த குருவி இணை சேர்ந்து இளவேனிற் காலத்தில் பூத்து குலுங்கும் மஞ்சள் நிற மலர்களை உடைய மரத்தின் உச்சியில் நின்று வசந்தத்தின் ரீங்கார கானத்தை எம்முள் நிரப்ப வேண்டும் :) நிரப்பும் .... :)

 

வாழ்த்த வயதில்லை அண்ணா ....

Link to comment
Share on other sites

கருத்துக்களோடு வந்து என்னை உற்சாகமூட்டிய 

நண்பன் ராஜன் விஷ்வா,நண்பன் கவிதை காவலூர் கண்மணி அக்கா, நண்பன் சுபேஸ், வல்வை அக்கா, விசுகு அண்ணை, நுனாவிலான் அண்ணை , நிலாமதி அக்கா, மற்றும் அனைவருக்கும் என் அன்புகள். 

 

தன் முகநூலில் பகிர்ந்த நிழலி அன்னைக்கும் மீண்டும் என் அன்புகள்.

 

நான் எவ்வளவு பெறு  பெற்றவன் என்பதனை உணர்கிறேன் உங்களில் வரிகள். 

நீங்கள் எல்லோரும் இருக்கையில் இந்த தனிமை என்னை செய்துவிடும்....  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமையாய் தோன்றும் தனிமை ஒரு கட்டத்தில் சலித்து வெறுப்பாய் வெறுமையாய் தோன்றும்...எனக்கு மிகவும் பிடித்தவரிகள்...

 

உங்களை மட்டும் தான் தனிமை ஆள்கொள்கிறது என நினைக்க வேண்டாம்.இங்கு பலர் அப்படித் தான்....வெளியில் தொிவதில்லை....நட்புக்கள் உறவுகள் என்று பழகினாலும் ஏதோ ஒரு வகையில் அவர்களாலும் மேலதிக தண்டனைகளைப் பெறும் சந்தர்ப்பங்களையோ,பேச்சுக்களையோ கேட்கும் போது தனிமை மேலானாது எனத் தோன்றும்...முன்பு எல்லாம் நான் இரண்டு இடங்களில் யாழ்,முகநூலில் பலருடனும் பேசும் சந்தர்ப்பங்கள் இருந்தது..

இப்போ எல்லாம் யாழ் மட்டும் தான்.அவ்வப்போது முகப் புத்தகப் பக்கம் எட்டிப் பார்ப்பேன்.. எழுதுவது என்பது இனிமேல் நடக்காத ஒன்று....என்ன முகப் புத்தகத்தை எட்டிப் பார்க்கும் தருணங்களில் எல்லாம் ஜடம் போல் நின்று விட்டு திரும்புவேன்..

வீட்டில் சில உறவுகள் இருந்தாலும் அவர்கள் உடல் நிலை,வயது கருதி எங்கள் விடையங்களை பரிமாறிக் கொள்ள முடியாது..இயல்பிலயே அமைதியானவள் ஆகையினால் கேட்கும் கேள்விக்கு ஓம்,இல்லையோடு காலத்தை நகர்த்திக் கொண்டு செல்கிறேன்.

ஆகவே இப்படியானவர்களும் உலாவிக் கொண்டு தான் இருக்கின்றோம்.. உங்கள் தனிமையும் நீங்களாக நீண்ட காலத்திற்கு  இழுக்காதவரையில் ஒன்றும் நிரந்தரமானது அல்ல...விரைவில் இதிலிருந்து விடுபட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை உங்களுக்கு நேற்கொளுதாசன்

Link to comment
Share on other sites

யாயினி அக்கா ,மற்றும் அம்மாவுக்கும் அன்புகள். 

 

நீங்கள் பயப்படுவது போல இருக்கே ... ஆஹா ஆஹா அஹா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி அக்கா ,மற்றும் அம்மாவுக்கும் அன்புகள். 

 

நீங்கள் பயப்படுவது போல இருக்கே ... ஆஹா ஆஹா அஹா 

 

சுமேயையா அம்மா என்றீர்கள் நெற்கொழு????????!!!!!

laughing_cartoon_persona.gif

Link to comment
Share on other sites

சுமேயையா அம்மா என்றீர்கள் நெற்கொழு????????!!!!!

 

 

நிச்சயமாக, 

 

அம்மா எழுதிய மொசப்பத்தேமியா தொடரில் "ஐயா" என விளித்து ஒரு கருத்தினை பதிவு செய்தேன். அதன் பின் அவ  வந்து தான் ஐயா இல்லை என்றார். அப்ப சரி அம்மாவா என்றேன். அன்று எதோ சம்பிரதயாமாக உரையாடி இருந்தாலும், இன்று  உணர்வோடு அம்மா என்று அழைக்கும் உரிமையை பெற்றுவிட்டேன். அது நிரந்தரமாக இருக்கும் எனக்குள்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயையா அம்மா என்றீர்கள் நெற்கொழு????????!!!!!

laughing_cartoon_persona.gif

 

நேர்கொழு கன காலமாக என்னை அம்மா என்கிறாரே. நீங்கள் இப்பதான் கவனித்தீர்களோ சகாரா ??? எனக்கும் அப்படி அழைப்பது  மகிழ்வாகத்தான் இருக்கு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.