Jump to content

திருக்குறளும் திருக்குர்ஆனும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருக்குறளும் திருக்குர்ஆனும்

 

திருக்குறளுக்கும் திருக்குர்ஆனுக்கும் அப்படியொரு பெயரொற்றுமை வரக் காரணமென்னவென்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.  இது ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது திருக்குர்ஆனுக்குப் போட்டியாக எழுதப்பட்டதனாலா? என்ற சந்தேகம் எழுகிறது.  

திருக்குறள் எழுதப்பட்ட காலப்பகுதிபற்றிச் சரியான தெளிவில்லை.  அக்காலம் இந்தியாவிற்குள் இஸ்லாம் நுழைவதற்கு முன்னரா அதன் பின்னரா என்பது புரியவில்லை.

 

திருக்குறள் பழைய ஏற்பாட்டிற்கு முற்பட்டது அல்லது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்றெல்லாம் கூறி நாம் தமிழருக்கெனத் திருக்குறளைப் பின்பற்றி ஆண்டுக்கணக்கொன்றை வேறு வைத்திருக்கிறோம்.  இது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது?

 

திருக்குறளிலிருந்து காமத்துப்பாலை நீக்கிவிட்டாலும் அது உலகத்தரம் வாய்ந்த நூலாகவே இருக்கும். அப்படியிருக்க, சினிமாவில் காதற்காட்சிகளைச் சேர்ப்பது போல சம்பந்தமில்லாமல் காமத்துப்பாலைச் குறளில் சேர்த்தது ஜனரஞ்சகத் தன்மையை அதிகரித்து மக்களைக் கவரும் நோக்கிலா?  அல்லது தமிழிலக்கியங்களின் திணையொழுக்க மரபைக் குறளிலும் புகுத்தும் நோக்கிலா?

 

இஸ்லாம் இல்லறத்தை வலியுறுத்துவது போலத் திருக்குறளும் வலியுறுத்துகிறது.  இந்தியாவின் சமயங்கள் துறவறத்தினாலேயே இறைவனையடைய முடியுமென்று வலியுறுத்த, இஸ்லாம் வந்து இல்லறத்தை அதுவும் பலதார மணத்தை ஆதரித்த போது ஒன்றும் செய்யமுடியாமல் சுதாரித்துக் கொண்டு இல்லறத்தை ஆதரித்து அதோடு பரத்தமையையும் நியாயப்படுத்தித் திருக்குறள் மக்களைக் கவர முற்பட்டதோ?  மதமாற்றத்தைத் தடுக்க ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்பதற்காக எழுதப்பட்டதோ?  தெரியவில்லை.

இத்தகைய பல சந்தேகங்கள் எழுகின்றன.  கல்வியாளர்கள் இத்திசையில் தங்கள் பார்வையைச் செலுத்தித் நடு நிலைத் தன்மையோடு ஆய்வுசெய்து திருக்குறள் மீது ஏற்படுகின்ற சந்தேகங்களை நீக்குவார்களானால் நலமாக இருக்கும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதையும் ஒருதடவை கேட்டுப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் உட்பட பலர் திருக்குறளில் சில அத்தியாயங்கள் திருவள்ளுவரால் எழுதபட்டவையல்ல என்ற கருத்தை முன்வைக்கின்றனர். அவற்றுள் கடவுள் வாழ்த்தும் ஒன்று.  கடவளுக்கு சமயங்கள் குறிக்கும்; பௌதிக குணாம்சங்களை மிகச்சாதுரியமாகத் தவிர்த்துத் தனது உயர்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்திய வள்ளுவர் இறைவனை 'மலர்மிசையேகினான்' என்றோ 'மலைமிசையேகினான்' என்றோ குறித்திருக்க நியாயமில்லை.  அத்துடன் சுவடிகளில் உச்சிக்குற்று வைத்து எழுதுவதுமில்லை.  அதனால் 'மலாமிசை..' அல்லது 'மலமிசை..' என்றே எழுதப்பட்டிருத்தல் வேண்டும். திருக்குறளை படியெடுத்தவர்கள் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ 'மலர்மிசை...' என்ற பொருளைக் கொடுத்திருக்கலாம். கடவுள் வாழ்த்தின் ஏனைய குறள்கள் சைவசித்தாந்தம் அல்லது பரிமேலழகர் வார்த்தையிற் கூறுவதாயின் சைவாகமங்கள் கூறும் இறைவனின் பௌதிக குணமல்லாத இயல்புகளையும் சொற்களையும் உள்ளடக்குவதால் (உதாரணம்: பொறிவாயிலைந்தவித்தான், எண்குணத்தான், இருவினை, தனக்குவமையில்லாதான், வேண்டுதல் வேண்டாமையிலான்), 'மலர்மிசை...' என்ற சொற்றொடரும் அவ்விடத்திற பொருந்தாது. அது சைவ சித்தாந்தம் சொல்லும்;  ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களையும் அடக்கி அதில் சவாரிசெய்யும்  நிர்மலனாகிய இறைவனின் இயல்பைக் குறிக்க 'மலமிசை..' யென்றே எழுதப்பட்டிருக்க வேண்டும்.  அப்போதுதான் அக்குறளில் நிலமிசையென்ற சொல்லோடு  ஒத்திசைவும் கிடைக்கின்றது என்றும் வாதிக்க இடமுண்டு.  ஆயினும்; 'மலமிசை...' என்னும் சொற்றொடரை  தற்காலத் தமிழ்கூறும் நல்லுலகு ஏற்காது.  ஆண்டாள் நறுமணத்தை நாற்றமென்றாள், வள்ளுவரோ மும்மலங்களையும் மலமென்றார். ஆனால் இரு சொற்களும் இப்போது ஏற்புடையனவாயில்லை.  ஆகவே 'மலர்மிசை..' என்னும் சொற்றொடரையே, அதை வள்ளுவரே எழுதியதாகக் கருதி ஏற்றுக்;கொள்ளலாம். இருப்பினும் இச்சொல் திருக்குறளின் பொதுமைத் தன்மைக்குப்பங்கம் விளைவிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் பதிலைச் சொல்லுங்கவன். திருக்குரானுக்கு போட்டியாக எங்களிண்ட திருக்குறள் எழுதப்பட்டதாம். இந்த அநியாயப்படுவாருக்கு ஒரு முடிவேஇல்லியா? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாய்.... ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு, மனிசரையும் கடிச்சு.....
திருக்குறளுக்கும் தொடர்பு ஏற்படுத்த வந்திட்டாங்கள்.JC_doubledown.gif
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குர் ஆனுக்கு எதற்காக 'திரு' போட்டுள்ளார்கள் என்று தெளிவில்லை!

 

'கரு' ஆரம்பித்து வைத்த திரி ஒரு நல்ல விவாதத்துக்கு அடிகோலும் என்று நம்புகிறேன்!

 

திருக்குறளுக்கும், குர் ஆனுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை!

 

இரண்டுமே, வாழ்க்கை நெறியை எடுத்தியம்பும் நூல்கள்!

 

குர்-ஆன் எழுதப் பட்ட கால கட்டத்தில், அரேபியர்கள் பல பெண்களை மனைவிகளாகவும், பல சொரூபங்களை வழிபடுபவர்களாகவும், மிகவும் சுத்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்ததாக, முகமது நபி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அத்துடன் 'குர்-ஆன் மட்டுமே, அதன் மூலம் மாறாது இன்றும் உள்ளது என்று கூறப்படுகின்றது! 'கபிரியேல்' என்னும் தேவதையால், எழுதப்படிக்கத் தெரியாத முகமது நபிக்கு, இந்த வாழ்க்கை நெறி உபதேசிக்கப் பட... அதை அவர் குகையினுள் கிடந்த 'ஆட்டுக்குட்டிகளின் தோள் பட்டை எலும்புகளில்' எழுதினர் என்பது ஐதீகம்!

 

மெக்காவின் உள்ள மசூதியின் உள்ளே, நாற்பதுக்கும் மேற்பட்ட 'சொரூபங்கள்' முகமது நபியால் உடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது!

 

குர்- ஆன் எழுதப்பட்ட காலம், கி.பி ஆறாம் நூற்றாண்டு என்று கூறப்படுகின்றது!

 

ஆனால் , திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது! பெரும்பாலும், சமண மதக் கருத்துக்களையும், பவுத்த மதக் கருத்துக்களையுமே 'திருக்குறள்' வலியுறுத்துகின்றது!

 

அதில் வரும் 'இந்து மதம்' பற்றிய கருத்துக்கள், பிராமணர்களால் பிற்காலத்தில் திணிக்கப்பட்டிருக்கலாம்!

 

திருக்குறளில் வரும் வாழ்க்கை நெறிமுறைகள், ஒரு பிராமணரல்லாத ஒருவரால் எழுதப்பட்டதை, அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை!

 

அதனால், திருவள்ளுவரைப் பறையர் எனவும், புலையர் எனவும் பல இடங்களில் வர்ணித்துள்ளார்கள்!

 

திருக்குறளில் வரும் 'காமத்துப் பாலில்' காமம் என்பது துளியளவும் இல்லை! அது ஒரு வாழ்க்கை நெறியாக மட்டுமே சொல்லப்படுகின்றது!

 

அதே போலவே குர் ஆனிலும், காமம் என்பது விரசமில்லாமல் வர்ணிக்கப்படுகின்றது!

 

திருக்குறள் பல புலவர்களால் தொகுக்கப் பட்டிருக்கவும் சாத்தியங்கள் உண்டு!

 

மேலே கட்டுரையாளர் கூறுவது போல, திருக்குறளோ அல்லது குர் ஆனோ, வியாபார நோக்கில் எழுதப்படவில்லை!

 

மனித வாழ்வை மேம்படுத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டன!

 

 

Link to comment
Share on other sites

திருக்குறளில் உள்ள தனித்துவமான எழுசீர் கட்டு மற்றும் அச்சீர்கள் அமைக்கப்பட்ட அலகு முறைகளின் நேர்த்தியான தன்மை முதலியன திருக்குறளை ஒரு தனித்த இலக்கியவாதியின் கைவண்ணம் என நம்ப வைக்கின்றன. :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ? Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.  செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. இதற்கு கபிதான் பொதுமக்கள் போரை விரும்பவில்லை என்று கொள்கை விளக்கம் தந்துள்ளார். இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.
    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.