Jump to content

எங்கள் தேசத்தின் குரல் ஓய்ந்திடவில்லை


Recommended Posts

 
எங்கள் தேசத்தின் குரல் ஓய்ந்திடவில்லை
 
 
ஆண்டுகள் எட்டு  ஓடி மறைந்ததா?- எங்கள்
தேசத்தின் குரல் ஓய்வெடுத்து 
ஆண்டுகள் எட்டானதோ?
அன்பே மூலதானமாக 
அடக்கமே ஆளுமையாக
அறிவே ஆயுதமாக
தமிழினத்தின் குரலை
தரணிக்கு எடுத்துக் கூறிய
எங்கள் அன்பு பாலா அண்ணா
உலகத்தைவிட்டு பறந்தோடி
ஆண்டுகள் ஏழு ஆனதோ? 
 
உண்மையுள் உண்மையாய்
உண்மையே உணர்வாய்
உண்மையே இவராய்
உண்மையாய் வாழ்ந்த 
உயரிய மகன்-இன்று
எம்மைவிட்டு சென்றதை
இன்னும் நம்ப மனம் மறுக்கின்றது
 
உலகின் பார்வையில்
இவரின் உறக்கம்
சாவு எனச்  சொல்லப்படலாம்
ஆனால்,
உலகத்தமிழர் உளங்களில்- இவர்
என்றும் வாழ்ந்திருக்கும்; மனிதன்.
 
தமிழின விடிவுக்காகவே
இறுதிவரை உழைத்த
உறுதியான போராளி இவர்.
பாழும் நோய் வந்து
பாடையேறும் நாளை
இரக்கமின்றி தெரிவித்தபோது
பதட்டமின்றி பதில் சொன்ன
பக்குவமனிதர் 
சிரிப்புடன் பேசி-எமை
சிந்திக்க வைத்த செம்மையாளர் 
 
நோயின் வலியுடன் போராடினாலும்--தமிழ்
தாயின் விடிவுக்கான வழியைப் பேசிட
இறுதித் துடிப்புவரை போராடிய
தூயதமிழ்மகன் இவர்.
 
விடிவினை எட்டும் தருணம்
கிட்ட நெருங்கும் வேளை
விட்டு விலகிப் போகும் வேதனை
மனதை வருத்தினாலும்
கடமைகளை உணர்த்திய
நிம்மதியுடன் கண்மூடிய
எங்கள்  பாலா அண்ணா
காத்திருப்பேன் நல்ல நாளுக்காக-- -என
சொல்லாமல் சொல்லி துயில்கின்றார்.
 
தூக்கம் கலைக்காமல்-இவர்
காட்டிய பாதையில் 
உறுதியுடன் கால்பதிப்போம்.
தமிழ்ஈழவிடிவைப்பார்க்க வருவாரென
நம்பிக்கை மனதில் வைத்து
தெளிவுடன் பணிதொடர்வோம்.
 
இறுதி இழப்பு தனதாக இருக்கட்டும்
இதுவேதான் அவரின் இறுதிக்கண
நினைப்பாகவும் இருந்திருக்கும்.
 
தன் நோயின் வலியை விட தமிழ்மக்கள் 
வாழ்வின் வலிகளை நினைந்து
இறுதிக் கணங்களிலும் 
நொந்து வருந்திய-தமிழ்
ஈழத் தாயின் தலைமகன் இவர்.
 
பாசமுடன் தன்னை அங்கிளென்றும் 
அண்ணாவென்றும் அழைத்தவர்கள்
உலகச்சதிவலைக்குள் சிக்குண்டு
அழிக்கப்பட்ட கொடுமையை அறியுமுன்னர்
தேசத்தின்குரல் ஓய்ந்து போனதோ?
 
தனது இழப்பை தாங்காது கதறும் தமிழினம்
இனி என்றுமே அழுதிடக்கூடாது என்பதை
இறுதிநொடிப் பொழுதின் உறுதிப்பதிவாக்கி
உலகின் காதுகளில் ஓர் செய்தி
சொல்லாமல் சொல்லி சென்றார்
 
ஆனால் ஒட்டுமொத்த தமிழினமும்
உடைந்து நொந்து அவதியுறும் 
அவலம் நேரும் என
அன்று அவர் நினைத்திருப்பாரா?
 
 
சத்திய வழியில் போராடும் தமிழினத்தின்
உண்மைப் பலத்தை
உலகே விரைவில் உணர்வாய் நீயென
தெளிவான சேதி ஒன்றை 
சொல்லாமல் சொல்லி
தூயமகன் விழிமூடி உறங்குகின்றார்.
 
'நான் சாவடையவில்லை
என் சிந்தனைகள் சுமந்து
செயல்ப்படும் அனைத்து
உறவுகள் விழிகளாலும்
அகிலமே உனைப் பார்ப்பேன்'-என
உறுதி உரைத்தபடி
இமைமூடித் தூங்குகின்றார்.
 
எங்கள் தேசத்தின் குரல் ஓய்ந்திடவில்லை
தமிழினத்தின் இதயஒலியாய்
என்றும் நிலைத்து நிற்கும்.
 
மந்தாகினி
Link to comment
Share on other sites

இதை சென்ற வருடமும் படித்தேன் என்று நினைக்கிறேன்.. மந்தாகினி அக்கா...

மன்னிக்கவேண்டும் . 

 

கடந்த வருடம் எழுதினேன். யாழ் இணையத்துக்கு அனுப்பியது நினைவில் இல்லை. காரணம் கடந்த 3,4 ஆண்டுகளாக மனதில் நினைப்பதை எழுதி வைத்திருப்பேன். ஆனால் எதனையும் அனுப்ப மனம் வருவதில்லை. அவ்வளவுக்கு மனம் உடைந்துபோயிருந்தேன். 

அதனால் இதனை அனுப்பியது நினைவில் இருக்கவில்லை. பாலா அங்கிளை பற்றி எழுதும்போது அதே உண்மை விடயங்கள் தானே வரும் என்பதும் இன்னொரு பக்கம் உண்மைதானே.

 

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.