Jump to content

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி: கருத்து பகிர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாதப்பிரதிவாதங்களுக்காக என்றால் இதை நீடித்துச் செல்லலாம்.

ஒரு பாடசாலையின் மாணவர்களின் தவறுகள் சமூகத்தில் தரும் பாதகமான விளைவுகளையும் நோக்க வேண்டியது அவசியமாகிறது அதன் வளர்ச்சிக்கு.

பிரதேசவாதம் பேசினால் இன்றைய அதிபர் கூட யாழ்ப்பாணத்தவர்தான். கடந்த கால அதிபர்களில் பலரும் அதே ஊரவர்தான்..அந்த வகையில்>>>>

Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply

ஆனால் 95ம் ஆண்டு இடப்பெயர்வால், எவ்வித கல்விச் சான்றிதழும் இன்றி கொழும்பு வந்தவர்களுக்கு, அவர்களின் வாய்மொழியை நம்பி தராதரம் பிரித்துக் கொடுக்க கல்லூரி இந்து மட்டும் தான். ஏனென்றால் ஒரு மாணவனின் கல்விக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்று தான்.

ரத்மலானை முதல் வத்தளையில் இருந்து

கூட பாடசாலைக்கு வந்த ஏராளமானவர்கள் உண்டு. ஏன் அவர்களுக்கு வேறு பாடசாலையில்லாமலா இங்கு காண வர வேண்டும்?

ஒரு பாடசாலை தன்னைச் சுற்றியுள்ள சூழலில் இருக்கும் மாணவர்களிற்கு இடம் கொடுக்க வேண்டும் என்னும் நிலையில் இருக்கும் போதும் அச்சூழலில் வாழும் மாணவர்களால் வகுப்புக்கள் நிரம்பியிருந்த போதும் தூர இடங்களில் இருக்கும் மாணவர்களுடனும் அவர்கள் கல்வி பாழடிக்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்கா பகிர்ந்து கொண்ட ஒரே ஒரு பாடசாலை இந்துக்கல்லூரி கொழும்பு. :idea:

Link to comment
Share on other sites

வாதப்பிரதிவாதங்களுக்காக என்றால் இதை நீடித்துச் செல்லலாம்.

ஒரு பாடசாலையின் மாணவர்களின் தவறுகள் சமூகத்தில் தரும் பாதகமான விளைவுகளையும் நோக்க வேண்டியது அவசியமாகிறது அதன் வளர்ச்சிக்கு.

பிரதேசவாதம் பேசினால் இன்றைய அதிபர் கூட யாழ்ப்பாணத்தவர்தான். கடந்த கால அதிபர்களில் பலரும் அதே ஊரவர்தான்..அந்த வகையில்>>>>

வாதப்பிரதிவாதங்களிற்கான இதை நீடிப்பதற்காக இங்கு பதிலிடவில்லை. ஓர் பாடசாலைபற்றி உண்மைக்குப் புறம்பான தவறான பார்வை சமூகத்திற்கு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக இங்கு இவ்விடயம் பற்றி எழுதுகிறேன். நீங்கள் விரும்பினால் பொதுவான தலைப்பின் கீழ் பாடசாலைகள் பற்றிய உங்கள் பார்வைகளை வைக்கும் போது பரந்துபட்ட அளவில் எமது விவாதப் பொருளும் அமையும். ஆயினும் உங்கள் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக பாடசாலை பற்றிய கருத்து அமையுமானால் அதனை மறுத்து சமூகத்திற்கு பாடசாலை பற்றிய தெளிவை ஏற்படுத்த வேண்டிய கடமைப்பாடு அப்பாடசாலையின் பழைய மாணவன் எனும் அடிப்படையில் எமக்கு உண்டு என்று நாம் கருதுகிறோம்.

கடைசி வரிகளில் உங்கள் நோக்கத்தை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கருத்துக்கள் ஒரு பாடசாலையின் மீதான காழ்புணர்ச்சி என்று நீங்கள் வகைப்படுத்துவதனால் அப்பாடசாலை சார்ந்த நடவடிக்கைகள் உண்மைக்குப் புறம்பானது என்றாகிவிடாது.

ஆரம்பத்தில் நாம் சுட்டிக்காட்டிய உங்கள் மாணவர்களின் தவறுகளை மறுதலிக்க முடியாத நீங்கள் எல்லா இடமும் நடப்பதுதான் இங்கும் நடக்கிறது என்று முடித்ததே போதும் உண்மை என்ன என்பதை அறிவதற்கு.

யாழ் ஆசிரியர்கள் பலரை குறித்த பாடசாலை உள்வாங்கியதும் வடக்குகிழக்கு மாணவர்களை உள்வாக்கியதையும் குறிப்பிடுதல் உங்களுக்குப் பிரதேசவாதமாகத் தெரியின் அது எமது குற்றமல்ல. உங்கள் பாடசாலையின் அறிவூட்டலின் குறைபாடு.

நாங்கள் கேட்டிருந்தோம் 1980 முதல் 90 வரையும் பின் 90 முதல் 2006 வரையும் உள்ள கல்வித்தராதரப் பரீட்சைப் பெறுபேறுகளை கொண்டுவாருங்கள் ஒப்பிட்டு நோக்குவோம் என்று. அது வந்த பாடில்லை.

வெகுசில சமீபத்திய கல்வித்தரத் தரவுகளை மையமாகக் கொண்டு பாடசாலையின் வீழ்ச்சி எழுச்சி பற்றிப் பேச முடியாது.

எது எப்படியோ குறித்த பாடசாலையின் வளர்ச்சியில் வடக்குக்கிழக்கு தமிழ் மாணவர்களினதும் யாழ் ஆசிரியர்களினதும் பங்களிப்பு என்றும் மறக்க மறைக்க முடியாத பங்களிப்பைச் செய்திருப்பதுடன் பம்பலப்பிட்டி மாணவர்களின் சில செயற்பாடுகள் தேசிய அளவில் அக்கல்லூரிக்கு அவப்பெயரையும் ஈட்டித்தந்துள்ளன. அதையும் மறுதலிக்க முடியாது என்பதற்கு நீங்களே றோயல் தோமஸ் சண்டையோடு உங்கள் பாடசாலையின் நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பேசியது நல்ல சான்றாகி உள்ளது.

பாடசாலை மாணவர்களின் வெளி ஒழுக்கமே நடத்தையே சமூகத்தில் அதன் பெயரைக் காக்கும். அந்த வகையில் இக்கல்லூரி மாணவர்களின் வெளி நடத்தை மேம்பட பாடசாலை இன்னும் அதிகம் பணியாற்ற வேண்டி இருக்கிறது என்பது எங்கள் அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

ஈழவன்85 பம்பலப்பிட்டிய இந்து மகா வித்தியாலயம் என்பது கூட 90களில் தான் இந்துக்கல்லூரி என்ற நிலைக்கு தரமுயர்ந்திருக்க வேண்டும். உங்கள் கல்லூரி பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை முழுமையாக நோக்காமல் எம்மால் உங்கள் இணையத்தள செய்தியை உறுதி செய்ய முடியாது.

இந்துக்கல்லூரி கொழும்பு காலத்துக்குக்காலம் பெயர்மாற்றம் அடைந்து வந்திருக்கிறது. முன்பும் கொழும்பு இந்துக்கல்லூரி என்னும் பெருடன் இயங்கிய கல்லூரி பின்னர் பெயர் மாற்றப்பட்டு 'இந்துக்கல்லூரி கொழும்பு' என்னும் பெயருடன் இயங்குகிறது. கல்லூரி 1991ம் ஆண்டு இலங்கைத் தேசியபாடசாலைகளின் வரிசையில் இணைந்து கொண்டது. கல்லூரி பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி என்றும் கொழும்பு இந்துக்கல்லூரி என்றும் அழைக்கப்பட்டாலும் பாடசாலையின் பெயரானது இந்துக்கல்லூரி கொழும்பு.

Link to comment
Share on other sites

எங்கள் கருத்துக்கள் ஒரு பாடசாலையின் மீதான காழ்புணர்ச்சி என்று நீங்கள் வகைப்படுத்துவதனால் அப்பாடசாலை சார்ந்த நடவடிக்கைகள் உண்மைக்குப் புறம்பானது என்றாகிவிடாது.

ஆரம்பத்தில் நாம் சுட்டிக்காட்டிய உங்கள் மாணவர்களின் தவறுகளை மறுதலிக்க முடியாத நீங்கள் எல்லா இடமும் நடப்பதுதான் இங்கும் நடக்கிறது என்று முடித்ததே போதும் உண்மை என்ன என்பதை அறிவதற்கு.

யாழ் ஆசிரியர்கள் பலரை குறித்த பாடசாலை உள்வாங்கியதும் வடக்குகிழக்கு மாணவர்களை உள்வாக்கியதையும் குறிப்பிடுதல் உங்களுக்குப் பிரதேசவாதமாகத் தெரியின் அது எமது குற்றமல்ல. உங்கள் பாடசாலையின் அறிவூட்டலின் குறைபாடு.

நாங்கள் கேட்டிருந்தோம் 1980 முதல் 90 வரையும் பின் 90 முதல் 2006 வரையும் உள்ள கல்வித்தராதரப் பரீட்சைப் பெறுபேறுகளை கொண்டுவாருங்கள் ஒப்பிட்டு நோக்குவோம் என்று. அது வந்த பாடில்லை.

வெகுசில சமீபத்திய கல்வித்தரத் தரவுகளை மையமாகக் கொண்டு பாடசாலையின் வீழ்ச்சி எழுச்சி பற்றிப் பேச முடியாது.

எது எப்படியோ குறித்த பாடசாலையின் வளர்ச்சியில் வடக்குக்கிழக்கு தமிழ் மாணவர்களினதும் யாழ் ஆசிரியர்களினதும் பங்களிப்பு என்றும் மறக்க மறைக்க முடியாத பங்களிப்பைச் செய்திருப்பதுடன் பம்பலப்பிட்டி மாணவர்களின் சில செயற்பாடுகள் தேசிய அளவில் அக்கல்லூரிக்கு அவப்பெயரையும் ஈட்டித்தந்துள்ளன. அதையும் மறுதலிக்க முடியாது என்பதற்கு நீங்களே றோயல் தோமஸ் சண்டையோடு உங்கள் பாடசாலையின் நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பேசியது நல்ல சான்றாகி உள்ளது.

பாடசாலை மாணவர்களின் வெளி ஒழுக்கமே நடத்தையே சமூகத்தில் அதன் பெயரைக் காக்கும். அந்த வகையில் இக்கல்லூரி மாணவர்களின் வெளி நடத்தை மேம்பட பாடசாலை இன்னும் அதிகம் பணியாற்ற வேண்டி இருக்கிறது என்பது எங்கள் அபிப்பிராயம்.

நீங்கள் கூறிய இவ்விடயங்கள் பற்றி பரந்துபட்டநோக்கில் விவாதிக்கப்படத் தேவை இருப்பதனால் இது பற்றி பிறிதொரு தலைப்பில் உங்கள் வாதத்தினை முன்வைப்பீர்களானால் அதுபற்றிய விரிவாக தெளிவுகளை உங்களிற்கு தெரிவிக்க முடியும். இந்துக்கல்லூரி கொழும்பு என்னும் தலைப்பின் கீழ் மற்றைய பாடசாலைகளைப் பற்றிப் பேசவேண்டிய தேவை இல்லை. அதனால் அது பற்றி முதலே குறிப்பிட்டிருந்தோம். நீங்கள் சுட்டிக்காட்டிய சில பாடசாலைகளின் பெயர்களைத் தேவைகருதி சுட்டிக்காட்டியிருந்தோம். பாடசாலையின் இணையத்தளத் தரவுகளைத் தரும் போது அதனை நம்ப மறுக்கும் உங்களிற்கு வேறு வழிகளில் தரவுகள் தருவது என்பது சாத்தியமல்லாதது. அக்கல்லூரியில் படித்திருந்தால் அக்கல்லூரி பற்றிய குறிப்புக்களை உங்களால் அறிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கலாம். ஆயினும் வெளியில் இருந்துகொண்டு தரும் தரவினையும் நம்பமுடியாது என்று மறுதலிக்கும் உங்களுடன் தொடர்ந்து இத்தலைப்பின் கீழ் விவாதிப்பதானது எந்தவொரு பயனையும் தரப்போவதில்லை.

இந்துக்கல்லூரி கொழும்பு மாணவர்களின் செயற்பாடுகள் தேசிய அளவில் அவப்பெயரை ஈட்டித் தந்துள்ளன என்ற கூற்றினை முற்றுமுழுதாக நாம் மறுதலிக்கிறோம்.

மீண்டும் மேலே கூறியதை நினைவுறுத்த விரும்புகிறோம். ஒரு மாணவனுக்கு ஒழுக்கத்தினையும் கல்வியையும் ஒரு பாடசாலையானது ஊட்டமுடியுமே தவிர அம் மாணவனின் தனிப்பட்ட வாழ்விலே எல்லாவிடத்திலும் அப்பாடசாலையால் நின்று வழிநடத்த முடியாது. அவ்வாறு பார்க்கப்போனால் தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் குழுச்சண்டைகளிற்கும் குழுக்களிற்கும் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் மீதும் குற்றஞ்சுமத்தவேண்டும். அவ்வாறு ஒட்டுமொத்த சமூகத்தின் மீது நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்களா? அவ்வாறு இல்லை எனில் ஒரு பாடசாலை பற்றிய குறிப்பில் அப்படியான தனிப்பட்டவர்கள் பற்றி விவாதிப்பதன் காரணம்? :roll:

Link to comment
Share on other sites

நீங்கள் கூறிய இவ்விடயங்கள் பற்றி பரந்துபட்டநோக்கில் விவாதிக்கப்படத் தேவை இருப்பதனால் இது பற்றி பிறிதொரு தலைப்பில் உங்கள் வாதத்தினை முன்வைப்பீர்களானால் அதுபற்றி விரிவாக விவாதிக்க முடியும். இந்துக்கல்லூரி கொழும்பு என்னும் தலைப்பின் கீழ் மற்றைய பாடசாலைகளைப் பற்றிப் பேசவேண்டிய தேவை இல்லை. அதனால் அது பற்றி முதலே குறிப்பிட்டிருந்தோம். நீங்கள் சுட்டிக்காட்டிய சில பாடசாலைகளின் பெயர்களைத் தேவைகருதி சுட்டிக்காட்டியிருந்தோம். பாடசாலையின் இணையத்தளத் தரவுகளைத் தரும் போது அதனை நம்ப மறுக்கும் உங்களிற்கு வேறு வழிகளில் தரவுகள் தருவது என்பது சாத்தியமல்லாதது. அக்கல்லூரியில் படித்திருந்தால் அக்கல்லூரி பற்றிய குறிப்புக்களை உங்களால் அறிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கலாம். ஆயினும் வெளியில் இருந்துகொண்டு தரும் தரவினையும் நம்பமுடியாது என்று மறுதலிக்கும் உங்களுடன் தொடர்ந்து இத்தலைப்பின் கீழ் விவாதிப்பதானது எந்தவொரு பயனையும் தரப்போவதில்லை.

இந்துக்கல்லூரி கொழும்பு மாணவர்களின் செயற்பாடுகள் தேசிய அளவில் அவப்பெயரை ஈட்டித் தந்துள்ளன என்ற கூற்றினை முற்றுமுழுதாக நாம் மறுதலிக்கிறோம்.

மீண்டும் மேலே கூறியதை நினைவுறுத்த விரும்புகிறோம். ஒரு மாணவனுக்கு ஒழுக்கத்தினையும் கல்வியையும் ஒரு பாடசாலையானது ஊட்டமுடியுமே தவிர அம் மாணவனின் தனிப்பட்ட வாழ்விலே எல்லாவிடத்திலும் அப்பாடசாலையால் நின்று வழிநடத்த முடியாது. அவ்வாறு பார்க்கப்போனால் தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் குழுச்சண்டைகளிற்கும் குழுக்களிற்கும் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் மீதும் குற்றஞ்சுமத்தவேண்டும். அவ்வாறு ஒட்டுமொத்த சமூகத்தின் மீது நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்களா? அவ்வாறு இல்லை எனில் ஒரு பாடசாலை பற்றிய குறிப்பில் அப்படியான தனிப்பட்டவர்கள் பற்றி விவாதிப்பதன் காரணம்? :roll:

Link to comment
Share on other sites

ஜ்யா நெடுக்க்லபோவான் எமது பாடசாலை யில் எந்த அறிவூட்டல் குறைபாடும் இல்லை ஏன் நானும் அருவியும் கூட 95 இடம்பெயவுக்கு பிந்தான் இந்துவில் சேர்ந்தோம் ஆனால் யாழ் இடம்பெயர்வு கல்லூரி வழ்ர்சிக்கு காரணம் என்பது சுத்தப்பொய் அதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

1.இலங்கை சட்டமா அதிபர் எமது பழைய மாணவன்(கமல சபேசன்)

2.இலங்கை கணக்காய்வாளர் நாயகமும் எமது பழையமாணவந்தான்(கந்தசாமி)

3.இல்ங்கை உச்சநீதிமன்ரத்தில் 2 பழையமாணவர்கள் நீதிபதியாக இருகிறார்கள்(சிறீபவன்,)

4வெளிநாடுகளில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக இருகிறார்கள்

5.வெளிநாடுகளில் இருக்கும் எம்பழையமாணவர்கள் உயர்ந்தநிலையில்தான் இருகிறார்கள்

இவர்கள் அனைவரும் 95 இடம்பெயர்வுக்கு பிறகு படிக்கவில்லை என்பது உறுதி

பாடசாலை இணையத்தில் அத்தனை கல்விசார் பதிவுகளும் இருகின்றன போய் பாரும்

நீர் சொல்லுவது போல யாரும் சுவரில் எழுதி நான் பார்த்தது இல்லை அல்லது கேள்விப்பட்டதுமில்லை அதனை என்னால் உருதிப்படுத்தமுடியும்

ஆசிரியரை அடித்ததாக சொல்வது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு அவ்வறு அடிக்கும் ஆசிரியர்களுக்கு அடிக்க வேணுமாயின் முதலில் அதிபருக்குத்தான் அடிவிழவேண்டும் ஏனேனின் அவர் அடிக்கும் அடி அப்படி அருவி நான் எல்லாம் நல்லா வாங்கியிருகிறோம்

தோமியனில் நாம் சோடாப்போத்தல் கொண்டு சொன்றதாக சொல்கிறீர் அதுக்கு என்ன ஆதாரம் ஆதாரத்தை இன்கு சொல்லும் அவ்வாறு இல்லையேல் சற்றே பொத்தும்

பாடசாலை இணையத்தில் 80-2005 ஆண்டுவரையான கல்வி சார் பதிவுகளில் அத்தனை தரவும் இருக்குது போய் ஒப்பிட்டு பாரும்,

ஜ்யா வடகிழக்கு வடகிழக்கு என்கின்றேர்களே அவ்வாறு வடகிழக்கில் இருந்து வந்து ரிசல்ட் எடுத்தார்களானால் நீங்கள்95,96 ஆண்டோடு நீங்கள் விட்டுவிடவேண்டும் அந்தவருடம்தான் எமது ரிசல்ட் மோசம் அதற்குபின் இடம்பெயர்ந்த மாணவர்களாயினும் அவர் இந்துவின் பட்டறையில் தீட்டப்பட்டவர்களே அதற்காகா வடகிழக்கு மாணவர்களிடம் மேல்மாடி ஸ்ரோங் என்பது போல கதைப்பது கேனைத்தனம்.

உமக்கு பாடசாலை மீது காழ்புணர்சி என நினைகின்ரேன் நீர் எழுதிய தரவில் இருந்து நீர் லோரன்ஸ் ரோட் கடைசியில் எமது பாடசாலை கேட்போர்கூடத்துக்கு அண்மையில் வசிக்கிறீர் என்ரு தெளிவு.அடுத்தவர் வீடு மீது உளவு பார்பதாக சொலுகிறீர் 4000 மாணவர்களை 150 ஆசிரியர்கள் ஒவ்வொரு செக்கனும் கவனிக்கமுடியாது பாடசாலைக்கு அண்மையில் இருக்கும் வீடுகள் இப்பிரச்சினையை எதிர்நோக்குவது எலோருக்கும் தெரியும் அந்த்வீட்டுகாரர் அவ்வாறுபார்பார்கள் என்று அறிந்தும் ஜன்னல் வீட்டுவாசல் திறந்து விட்டு இருப்பது யாரின் பிழையோ நானறியேன்

Link to comment
Share on other sites

நீங்கள் கூறிய இவ்விடயங்கள் பற்றி பரந்துபட்டநோக்கில் விவாதிக்கப்படத் தேவை இருப்பதனால் இது பற்றி பிறிதொரு தலைப்பில் உங்கள் வாதத்தினை முன்வைப்பீர்களானால் அதுபற்றிய விரிவாக தெளிவுகளை உங்களிற்கு தெரிவிக்க முடியும். இந்துக்கல்லூரி கொழும்பு என்னும் தலைப்பின் கீழ் மற்றைய பாடசாலைகளைப் பற்றிப் பேசவேண்டிய தேவை இல்லை. அதனால் அது பற்றி முதலே குறிப்பிட்டிருந்தோம். நீங்கள் சுட்டிக்காட்டிய சில பாடசாலைகளின் பெயர்களைத் தேவைகருதி சுட்டிக்காட்டியிருந்தோம். பாடசாலையின் இணையத்தளத் தரவுகளைத் தரும் போது அதனை நம்ப மறுக்கும் உங்களிற்கு வேறு வழிகளில் தரவுகள் தருவது என்பது சாத்தியமல்லாதது. அக்கல்லூரியில் படித்திருந்தால் அக்கல்லூரி பற்றிய குறிப்புக்களை உங்களால் அறிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கலாம். ஆயினும் வெளியில் இருந்துகொண்டு தரும் தரவினையும் நம்பமுடியாது என்று மறுதலிக்கும் உங்களுடன் தொடர்ந்து இத்தலைப்பின் கீழ் விவாதிப்பதானது எந்தவொரு பயனையும் தரப்போவதில்லை.

இந்துக்கல்லூரி கொழும்பு மாணவர்களின் செயற்பாடுகள் தேசிய அளவில் அவப்பெயரை ஈட்டித் தந்துள்ளன என்ற கூற்றினை முற்றுமுழுதாக நாம் மறுதலிக்கிறோம்.

மீண்டும் மேலே கூறியதை நினைவுறுத்த விரும்புகிறோம். ஒரு மாணவனுக்கு ஒழுக்கத்தினையும் கல்வியையும் ஒரு பாடசாலையானது ஊட்டமுடியுமே தவிர அம் மாணவனின் தனிப்பட்ட வாழ்விலே எல்லாவிடத்திலும் அப்பாடசாலையால் நின்று வழிநடத்த முடியாது. அவ்வாறு பார்க்கப்போனால் தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் குழுச்சண்டைகளிற்கும் குழுக்களிற்கும் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் மீதும் குற்றஞ்சுமத்தவேண்டும். அவ்வாறு ஒட்டுமொத்த சமூகத்தின் மீது நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்களா? அவ்வாறு இல்லை எனில் ஒரு பாடசாலை பற்றிய குறிப்பில் அப்படியான தனிப்பட்டவர்கள் பற்றி விவாதிப்பதன் காரணம்? :roll:

குதுரையை தண்ணீயை காட்ட முடியுமோ அன்றி தண்ணிகுடிக்கவைக்கமுடியாது

எமது பாடசாலை கொழும்பின் அனைத்து சமுக்கத்தை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் சேரி மாண்வரில் இருந்து மேல்தட்டு மாணவர்கள் வரையில் இருகிறார்கள் இதனால் ஒருசிலர் தமது ப்புறசூழல் காரணமாக செய்யும் தவறை நீர் 4000 மாணவ்ருக்கும் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கொழும்பில் தமிழ் மக்களால் பொதுவாக முன்வைக்கப்படும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மீதான் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் சண்டை பிடித்தோம் அவர்கள் வந்து அடித்தார்கள் என்பதற்காக.

நாங்கள் சோடாப் போத்தல் சகிதம் தோமியன்ஸை அடித்தம் றோயலை சாட்சிக்கு இழுக்கிறம்.

நாங்கள் ஆசிரியை வீதியில் விட்டு அடித்தம் (ஆசிரியரின் பெயர் குறிப்பிட விரும்பவில்லை) அவர் வகுப்பில் எங்களுக்கு ரோதனை தந்தபடியால்.

யாழ்ப்பாணத்து நிர்வாகம் இருந்தது. ஆனால் அது என்ன செய்து கொண்டிருந்தது.நாங்கள் அனுமதி வழங்கினோம். துண்டுப் பேப்பர் கூட ஆதாரம் கேட்கவில்லை ஆனால் துட்டுக்கேட்டம் 10,000 மற்றும் 15,000 என்று.சர்மா வாங்கியது கல்லூரியின் பெயரால் சுருட்டினது..மாணவரின் பெயரால்...நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை.யன்னல் கண்ணாடிகள் உடைத்தோம் ஆனால் அதை யாரும் கேட்காதபடிக்கு சுவரெல்லாம் வீட்டுக்காரப் பெண்களின் பெயரைப் பாவித்து ஏதேதோ எழுதினம்.இன்னும் இன்னும் செய்தம் சொன்னால் திருந்தச் சொன்னால் அதை ஏற்கோம்.இதில் என்ன நியாயமோ தெரியவில்லை. பழைய மாணவர்கள் விட்ட தவறுகளை புதியவர்களாவது விடாமல் இருக்கட்டும் என்பதே எங்கள் விருப்பம்.

குறித்த கல்லூரியில் ஏதோ படித்த பெருமை எம்மையும் சாரும்.

எதையுமே மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்றது என்று சொல்லும் அளவிற்கு இது குற்றசாட்டே இல்லை என்பது தான் எம் கருத்தே தவிர, நீ்ர் அதைக் கருதும் விதத்துக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல.

மற்ற பாடசாலைகளை வைத்து இந்துக் கல்லூரியை நியாயப்படுத்தவில்லை. ஆனால் மேட்டுக்குடி பாடசாலைகளில் நடக்கும் அசிங்கம், அமத்தப்பட்டு, தமிழர் கல்விகற்கும் இந்துக் கல்லூரியின் எந்த விடயத்துக்கும் அவப்பெயர் பூச நினைக்கின்ற முறை தான் வெறுக்கத் தக்கது. 2002ம் ஆண்டு காலப்பகுதியில், பாடசாலை களியாட்டம் ஒன்றில் இரவில் பெண்களோடு, நடந்து கொண்ட தப்பான முறை, றோ**ல் கல்லூரி மாணவர்கள் என்ற காரணத்தால் மறைக்கப்பட்டது. ஆனால் அதை ஒளிப்பதிவு செய்த சிலர் நீலப்படமாக வெளியிட்டது மறைக்க முடியாதது.

பொதுவாக கொழும்பு இந்துக் கல்லூரி மீது மற்றவர்களுக்கு ஒரு இளங்காரம் உண்டு. ஏன் என்றால் வசதி படைத்த சிங்கள பாடசாலைகளோடு, இணையாக கல்வி, மற்றும் இதர துறைகளில் உள்ள சவால் என்பது எரிச்சனை ஊட்டக் கூடியது தான். அதனால் சிங்களப் பாடசாலையில் படித்த மாணவர்கள், இந்துக் கல்லூரி மீது இளங்காரமாக இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அது நிற்க,

எந்த ஆசிரியருக்கும் மாணவர்கள் அடித்தார்கள் என்பது மிகவும் பொய்க் குற்றச்சாட்டு ஆகும். இதில் எவ்வித ஆதாரமும் கிடையாது. அவ்வாறு ஒரு ஆசிரியர் சொன்னார் என்று உம்மால் உறுதிப்படுத்த முடியுமா? அப்படி என்றால் குறித்த மாணவனைச் சட்டத்தினூடாகச் சந்திக்க வழியிருக்கின்றது. அதை விடுத்து, இளங்காரத்தில் குற்றசாட்டை முன் வைக்க கூடாது.

வி**க பெண்கள் பாடசாலையில் நடந்த சில அசம்பாவிதங்கள், பற்றி நீர் அறிந்திருப்பீரோ தெரியாது.( அதை பகிரங்மாகப் பகிர முடியாது. விரச எண்ணம் இருப்பின் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்). ஆனால் அவை எல்லாம் மறைக்கப்பட்ட விட்டன.

மேலும், மாணவர்கள் என்றால் குழுவாகத் திரிவார்கள். காதலிலும் ஈடுபடுவார்கள். அதற்கு சண்டைகளும் இருக்கும். அது பொதுவான விடயம். அதை குற்றச்சாட்டு என்று நீர் தலைப்பிட்டால் யார் பொறுப்பாக முடியும். எந்தப் பாடசாலையிலும் அவ்வாறன செயற்பாடு இல்லை என்று சொன்னால், நான் இந்துக் கல்லூரி பிழையானது என்றே ஏற்றுக் கொள்கின்றேன்.

நீங்கள் ஏன் பாடசாலையாக அண்டி, வீடு வாங்குகின்றீர்கள். அல்லது யன்னலுக்கு கண்ணாடி போடுகின்றீர்கள். சமீபத்தில் ஆனந்தக் கல்லூரியில் இருந்து மாணவர்கள் அடித்த பந்து, அருச்னா ரணதுங்க வீட்டிற்குச் சென்றதால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, நீதிமன்று வரைக்கும் வழக்குச் சென்றதை மறந்து விட்டீர்களா?

பாடசாலைச் சுவரில் எழுதினது, யாழ்பாணத்தில் இருந்து அடிப்படை இன்றி கொழும்புக்கு வந்ததால் தமிழ் மாணவர்கள் என்ற காரணத்துக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் குழுவாகக் கூட இருக்கலாம். யார் கண்டது?

யாழ்பாணத்தில் இருந்து வந்த ஆசிரியர்களுக்கு, கொழுத்த சம்பளத்தில் தனியார் பாடசாலைகள் இருந்தன. அல்லது சிங்களப் பாடசாலைகளில் இருந்த தமிழ் பிரிவுகள் இருந்தன. அப்படியிருந்தும் கொழும்பு இந்துக் கல்லூரிக்குத் தான் வந்து இணைய வேண்டும் என்ற தேவையில்லை. இப்போது கூட பல சிங்களப் பாடசாலைகளில் தமிழ்பிரிவுக்கு ஆசிரியர் பற்றக் குறையோடு தான் இருக்கின்றார்கள்.

அடிப்படையின்றி, வந்த எந்தத் தமிழ் மாணவர்களையும் கைவிடக் கூடாது என்று இந்துக் கல்லூரி எடுத்த முயற்சியை வெளியால் இருந்து சீண்டுகின்ற குணம் கேவலமானது. எந்தத் தனிப்பட்ட பிரச்சனைக்கும் இந்துக் கல்லூரி பொறுப்பெடுக்க முடியாது.

உம் கருத்து என்பது தெளிவில்லாமல், இந்துக் கல்லூரியைச் சாட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் புனையப்பட்டதாகவே தோன்றுகின்றது. முதலில் யாழ்பாணத்தான் தான் பாடசாலை வளர்ச்சிக்கு காரணம் என்றீர். இப்போது அது அடங்கிப் போய், பக்கத்து வீட்டுப் பிரச்சனை என்று கிளப்புகின்றீர்.

ஆனால் அடிப்படையாக ஒன்று சொல்ல முடியும். எந்த மாணவனும் ஆரம்ப காலக் கல்வியால், உயர்தரத்தில் சித்தி பெற முடியாது. அந்த அடிப்படையை விளங்கிக் கொண்டு யாழ்பாணத்து வீராப்புக்களை இறக்கி வையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாடசாலை தன்னைச் சுற்றியுள்ள சூழலில் இருக்கும் மாணவர்களிற்கு இடம் கொடுக்க வேண்டும் என்னும் நிலையில் இருக்கும் போதும் அச்சூழலில் வாழும் மாணவர்களால் வகுப்புக்கள் நிரம்பியிருந்த போதும் தூர இடங்களில் இருக்கும் மாணவர்களுடனும் அவர்கள் கல்வி பாழடிக்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்கா பகிர்ந்து கொண்ட ஒரே ஒரு பாடசாலை இந்துக்கல்லூரி கொழும்பு. :idea:

உம். இதனால் தான் பாசாலையின் கடைசிப்பக்கத்தில் புதிய கல்லூரி கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டது. அப்படியிருந்தும் இட நெருக்கடிகள் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கருத்துக்கள் ஒரு பாடசாலையின் மீதான காழ்புணர்ச்சி என்று நீங்கள் வகைப்படுத்துவதனால் அப்பாடசாலை சார்ந்த நடவடிக்கைகள் உண்மைக்குப் புறம்பானது என்றாகிவிடாது.

ஆரம்பத்தில் நாம் சுட்டிக்காட்டிய உங்கள் மாணவர்களின் தவறுகளை மறுதலிக்க முடியாத நீங்கள் எல்லா இடமும் நடப்பதுதான் இங்கும் நடக்கிறது என்று முடித்ததே போதும் உண்மை என்ன என்பதை அறிவதற்கு.

யாழ் ஆசிரியர்கள் பலரை குறித்த பாடசாலை உள்வாங்கியதும் வடக்குகிழக்கு மாணவர்களை உள்வாக்கியதையும் குறிப்பிடுதல் உங்களுக்குப் பிரதேசவாதமாகத் தெரியின் அது எமது குற்றமல்ல. உங்கள் பாடசாலையின் அறிவூட்டலின் குறைபாடு.

நாங்கள் கேட்டிருந்தோம் 1980 முதல் 90 வரையும் பின் 90 முதல் 2006 வரையும் உள்ள கல்வித்தராதரப் பரீட்சைப் பெறுபேறுகளை கொண்டுவாருங்கள் ஒப்பிட்டு நோக்குவோம் என்று. அது வந்த பாடில்லை.

வெகுசில சமீபத்திய கல்வித்தரத் தரவுகளை மையமாகக் கொண்டு பாடசாலையின் வீழ்ச்சி எழுச்சி பற்றிப் பேச முடியாது.

எது எப்படியோ குறித்த பாடசாலையின் வளர்ச்சியில் வடக்குக்கிழக்கு தமிழ் மாணவர்களினதும் யாழ் ஆசிரியர்களினதும் பங்களிப்பு என்றும் மறக்க மறைக்க முடியாத பங்களிப்பைச் செய்திருப்பதுடன் பம்பலப்பிட்டி மாணவர்களின் சில செயற்பாடுகள் தேசிய அளவில் அக்கல்லூரிக்கு அவப்பெயரையும் ஈட்டித்தந்துள்ளன. அதையும் மறுதலிக்க முடியாது என்பதற்கு நீங்களே றோயல் தோமஸ் சண்டையோடு உங்கள் பாடசாலையின் நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பேசியது நல்ல சான்றாகி உள்ளது.

பாடசாலை மாணவர்களின் வெளி ஒழுக்கமே நடத்தையே சமூகத்தில் அதன் பெயரைக் காக்கும். அந்த வகையில் இக்கல்லூரி மாணவர்களின் வெளி நடத்தை மேம்பட பாடசாலை இன்னும் அதிகம் பணியாற்ற வேண்டி இருக்கிறது என்பது எங்கள் அபிப்பிராயம்.

காழ்புணர்ச்சி மிக்க வார்த்தைகள், உண்மையில்லை என்று தெரியும் போது, அது பாடசாலையின் சார்பான நடவடிக்கைகள் என்றே ஆகாது. பாடசாலை மாணவர்களின் மீதான குற்றசாட்டு வைக்கத் தெரிந்த உமக்கு எவ்வித ஆதாரங்களையும் தரமுடியாத போது அதற்கு பதில் அவசியமற்றது.

எந்த மாணவர்களையும் உள்வாங்குவது என்பது பாடசாலை சார்ந்தது."யாழ்பாணத்தான் வாங்கோ, வாங்கோ என்று இந்துக் கல்லூரி அழைக்கவில்லையே! " தேவைக்கு தானே உள்நுழைந்தார்கள். படித்த மாணவர்களோ, அல்லது ஆசிரியரோ, அதிபரோ இப்படி பிரதேசவாதமே, கொண்டிருக்காத போது பிரதேசவாதமாகக் கொண்டு சென்றது நீர். அதற்குப் பிறகும் அது பிரதேச வாதமில்லை என்று பூச்சாண்டி காட்டுவது மற்றவர்களை அறிவிலிகளாக நினைக்கும் உம் மடமை.

உம் காழ்ப்புணர்ச்சியின் வடிவம்!

எது எப்படியோ குறித்த பாடசாலையின் வளர்ச்சியில் வடக்குக்கிழக்கு தமிழ் மாணவர்களினதும் யாழ் ஆசிரியர்களினதும் பங்களிப்பு என்றும் மறக்க மறைக்க முடியாத பங்களிப்பைச் செய்திருப்பதுடன் பம்பலப்பிட்டி மாணவர்களின் சில செயற்பாடுகள் தேசிய அளவில் அக்கல்லூரிக்கு அவப்பெயரையும் ஈட்டித்தந்துள்ளன. அதையும் மறுதலிக்க முடியாது என்பதற்கு நீங்களே றோயல் தோமஸ் சண்டையோடு உங்கள் பாடசாலையின் நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பேசியது நல்ல சான்றாகி உள்ளது.

இக் கருத்து சரி என்று நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் உம் மனதில் எவ்விதமான பிரதியோட்டங்கள் ஓடுகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றது. வடக்குகிழக்கு மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு பயன்பட்டனர் என்று சொல்லுகின்ற நீர், அவப்பெயர் என்ற விடயத்தில் வடக்கு -கிழக்கு மாணவர்கள் பற்றி அமத்தி வாசிப்பது உம் சுயரூபத்தை வெளிக்காட்டுகின்றது.

மேலும், தோமஸ்- றோயல் கல்லூரிச் சண்டை பற்றிக் கதைத்தது, அந்தக் கல்லூரியில் அப்படி பெரிய அளவு நடந்த போதும், அந்தப் பாடசாலைகளை ரவுடிக் கும்பல்கள் என்று சொல்ல வாக்கிலாதவர்கள், இந்துக் கல்லூரியில் அப்படி ஒன்றும் நடக்காதே போது, காழ்ப்புணர்சியோடு கருத்தெழுதுகின்றார்கள் என்பது தான். இதை இந்துக் கல்லூரி சார்ந்த உம் பொய்யான கருத்துக்களை நாம் ஆமோதிப்பதாகச் சொல்வது, உம் பிறப்பு அடிப்படை அறிவூட்டலில் உள்ள குறைபாடு.

நீர் ஏதோ, கல்வித் பரிட்சை முடிவுகளைக் கேட்டதாகச் சொன்னீர் என்கின்றீர். ஆனால் அதைத் தரமுடியவில்லை என்றும் ஏதோதோ, சொல்லிக் கொள்கின்றீர்! தொடக்கத்திலேயே நாம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் என்றே சொல்லியிருக்கின்றோம். பள்ளி உடனான தொடர்புகள் எமக்கு விடுபட்டு நீண்ட காலமாகின்றது. அதிலும் நாம் தொடர்பு கொண்டு, கேட்டவுடன் உடனே எடுத்துத் தருவதற்கு அங்கே வேறு ஒரு வேலையுமில்லை. பாருங்கள்! இந்த இலட்சணத்தில், பள்ளித் தராத நிலைகளைக் கொண்டு வாருங்கள் என்று கேட்பது கூட, உம் அறிவூட்டலில் உள்ள குறைபாடாகும்.

யாராவது தரமுடிந்தால், முக்கியமாக காழ்ப்புணர்ச்சியோடு கொண்ட குற்றச்சாட்டுக்களை வைத்த நீர் தான் அதைப் பற்றிய பகுத்தாய்வைச் செய்ய முன்வர வேண்டும்.

கல்லூரியின் இப்போது வளர்ச்சியடைந்துள்ளது என்று ஏற்றுக் கொள்வாதாகச் சொல்லும் நீர், வளர்ச்சிக்காக குற்றச்சாட்டை வைப்பதாகச் சொல்வது ஏளனமானது. ஏனென்றால் வேறுபட்ட, இந்துக் கல்லூரி மீதான காழ்ப்புணர்ச்சியாக அடையாளப்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் தான் இந்துக் கல்லூரி மாணவன் என்றோ, அல்லது கல்லூரி வளர்ச்சி என்றோ கதை விடுவது எமக்கு ஒன்றும் புதியது அல்ல.

Link to comment
Share on other sites

வி**க பெண்கள் பாடசாலையில் நடந்த சில அசம்பாவிதங்கள், பற்றி நீர் அறிந்திருப்பீரோ தெரியாது.( அதை பகிரங்மாகப் பகிர முடியாது. விரச எண்ணம் இருப்பின் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்). ஆனால் அவை எல்லாம் மறைக்கப்பட்ட விட்டன.

இப்படி ஒருநிகழ்வு வடகிழக்கச்சேர்ந்த வேம்படி வித்தியாலத்திலும் நடந்ததாக நான் அறிந்தேன் ஜயா நானும் யாழ்பாணத்தை சேர்ந்தவந்தான் யாழிலே என் இளமைக்காலத்தில் படித்தேன் 7 ல்தான் இந்துவில் சேர்ந்தேன் நீர் கூறும் வடபகுதிமாணவந்தான் நானும் ஆனால் வடபகுதிமாணவ்ர்கள் வந்து படித்துதான் நல்ல ரிசல்ட் வந்தது என்றால் அது சுத்த பைதியக்காரத்தனம்.என்ன வடகிழக்கு மாணவருக்கு என்ன கொங்ரீட்டாலா தலையில் மாடிகட்டப்பட்டது அல்லது கொம்பிட்யூட்டர் சிப் வைக்கப்பட்டிருக்கா.மானவனை கல்விசார்துரையில் வழர்ப்பது அவரவர் பாடசாலியிலேயே இருக்குது அன்றி பிரதேசவாததிலன்றி.1976.1.1 அன்று எமது பாடசாலையில் உயர்தரம் தொடங்கப்பட்டது 1980லேயே(அதவது பாடசாலையின் இரண்டாவது பச் முதலாவது உயர்தர பச் 79 )2 மாணவர்கள் அனைத்து பாடத்திலும் A பெற்றுசாதனை படைத்தார்கள்.

Muruhan Rahinam

Mathematics

index num- 313033

Ragulan Thiyagarajh

Mathematics

index num-313076

வேணுமெண்டால் இலங்கை கல்விகழகத்தில் அவர்களின் சுட்டெண்ணை கொண்டு போய் பரீலித்துபாரும் எம்பாடசாலை தனித்துவமானது எவரையும் நம்பியும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது தான் உன்மை.இன்று எமது பாடசாலயில் அனுமதி பெறதல் எண்டால் மிக மிக அரிது அதற்கு காரணம் இடப்பர்றாக்குறை மற்றது பாமன்கடையில் மூடப்பட்ட ஒரு தமிழ்பாடசாலைமாதிரி இன்னும் மூடப்படும் நிலையில் இருக்கும் பாடசாலைகள்தான் காரணம்.ஒருதமிழ் பாடசாலை இன்னொருதமிழ்பாடசாலையின் நடவடிக்கையால் முட்டப்பட்டது எண்டால் அது அசிங்கம்

95 இல் வந்தவர்கல் ஏன் மோதரை இந்துவுக்கோ அல்லது ரத்மலானை இந்துவுக்கோ செல்லவில்லை ஏன் பம்பலப்பிட்டி இந்துவுக்கு வருகிறார்கள் சொல்லுங்கள் பாப்போம்,ஏன் என்னை கூட என் பெற்றோர் வேறுபாடசாலையில் சேர்க்காமல் இங்கு சேர்த்தார்கள் என்பெர்றோர் கல்விசார் துறையில் இருக்கிரார்கள் அவர்களுக்கு தெரியும் எது நல்ல பாடசாலை எண்டு அதனால்தான் என்னை அங்கு சேர்த்தார்கள் சும்மா ரோயல் தோமச் என பீத்திக்கொண்டு திரிய எனக்கும் தெரியாதா.

இங்கு கள உரவுகள் யாராவது உம்கருத்துடன் ஒத்துபோகிறார்களா வீணாக நீரே முக்குடைபடுகிறீர் என்பதுதான் நிதர்சனம்

அன்புடன்

ஈழவன்

தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. உங்கள் பாடசாலை இணையத்தளத்தில் உள்ள தரவுகள் எதுவும் சதவீதப்படி இல்லை. 80 பதுகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது 90 களில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில் சதவீத ஒப்பீடே தரவுகளை சரிவரக் காட்டும். இருந்தும் அது தரப்படவில்லை.

2. எல்லாப் பாடசாலைகளும் தான் நாட்டிற்கு முக்கியமானவர்களை உருவாக்கி உள்ளது. அதில் பம்பலப்பிட்டி இந்துவும் ஒன்று. அதற்காக அக்கல்லூரியின் மாணவர் குழுக்கள் சிலவற்றின் நடத்தைகள் சமூக அங்கீகாரம் பெற்றவை என்று கூற முடியாது. அதற்கு சான்றாக தோமியன் மீதான சோடாப் போத்தல் தாக்குதலும் அதற்கு தேசிய ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவமும் நாடறியும். அப்படி எந்த நிகழ்வும் கடந்த 15 ஆண்டுகாலத்தில் வடக்குக்கிழக்கு மலையக தமிழ் பாடாசாலைகளில் இருந்து எழவில்லை என்பது கவனிக்க வேண்டிய விடயம்.

3. பல மலையக மாணவர்கள் அனுமதி கேட்டு வந்த போதும் டொனேசன் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. அந்த வகையில் டொனேசன் தான் அனுமதிக்கு முக்கியமாக இருந்துள்ளதே தவிர வடக்குக்கிழக்கு மாணவர்கள் மீதான கல்வி அக்கறை என்று தனித்துக் கூறி சிறப்புப்பாராட்ட முடியாத நிலையை பாடசாலையின் கடந்த கால நடவடிக்கைகள் கூறுகின்றன. அவை தொடராமல் இருக்க வேண்டும். என்பதே பலரின் அவா.

4. ஆசிரியர் பழிவாங்கும் நோக்கோடு தாக்கப்பட்டது உண்மையான நிகழ்வு. அவர் வகுப்பில் கட்டிப்பானவர் என்பதற்காக தாக்கப்பட்டிருந்தார். அது குறித்து பாடசாலை நிர்வாகம் குறித்த மாணவர்கள் சிலர் மீது எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது.

(குறித்த ஆசிரியரின் அனுமதி பெறாமல் அவர் குறித்ட்த தரவுகளை வெளியிட முடியாது. அதுபோலவே அவரும் பொலிஸுக்கு முறையிடுவதைத் தவிர்த்திருக்கலாம். அநாவசிய உபத்திரபங்களைத் தவிர்க்கும் நோக்கோடு)

5. தெகிவளை தொடங்கி கொல்பிட்டி வரை இரவு வேளைகளின் நடமாடும் குழுக்களில் இப்பாடசாலை மாணவர்களே அதிகம். அவர்கள் செய்யும் சேட்டைகளால் பாதிக்கப்படும் பெண்களும் அதிகம். அநேக தனியார் கல்வி நிறுவனங்கள் இச்சூழலிலேயே இருக்கின்றன. இங்கு வரும் குறித்த பாடசாலை மாணவர்கள் பெண் பிள்ளைகளை வழிமறித்துப் பேசும் அதேவேளை பாதைகளின் குழுக்கலாகக் கூடி நின்று பொதுமக்களின் நடமாட்டங்களுக்கும் இடையூறு விளைவித்தனர். நிறச்சாயங்களை பெண் பிள்ளைகள் மீது தெளித்து சேட்டை விட்டு பொலிஸாரின் எச்சரிக்கைக்கும் உட்பட்டிருந்தார்கள்.

இப்படியான செயற்பாடுகள் கொழும்பில் பாடசாலைகளில் பொதுவாக இருப்பதாக நீங்கள் கூறிக் கொண்டு இப்படியான பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளை நியாயமாக காட்டலாம். ஆனால் அப்படி இல்லாத தனியார் சர்வதேச பாடசாலைகளும் இருக்கின்றன. வடக்குக்கிழக்குப் பாடசாலைகளின் இப்படியான செயற்பாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை.

6. வடக்குக் கிழக்கிலும் பல பாடசாலைகள் குடிமனைகள் மத்தியில் தான் இருக்கின்றன. பரியோவான் கல்லூரி கூட அப்படித்தான். அங்கெல்லாம் அயலவர்களுக்கு மாணவர்கள் தொந்தரவளிப்பது அனுமதிக்கப்படுகிறதா? இல்லையே. சிங்கள மாணவர்கள் செய்கிறார்கள் நாங்கள் செய்தால் தான் தப்பா என்ற பாணியில் உங்கள் தவறுகளை மற்றவர்களின் தவறான செயற்பாடுகளுக்கு உதாரணமாக்கி நியாயம் கற்பிக்க விளைவதால் அது சமூகத்தில் ஏற்கப்பட்டு விடும் என்பது கிடையாது.

6. வடக்குக்கிழக்கு மாணவர்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்தால் சிங்களப் பாடசாலைகளில் இடவசதி இல்லாததால் தான் அநேக தமிழ் மாணவர்கள் பம்பலப்பிட்டி நோக்கி வந்தனர். இவர்களும் டொனேசனுக்காக மாணவர்களை உள்வாங்கினர். எப்படி இருப்பினும் மாணவர்கள் காட்டிய திறமையால் பாடசாலை நல்ல தரத்தையும் புகழையும் ஈட்டிக் கொண்டது. முன்னரெல்லாம் இப்பாடசாலையை கொழும்பில் மற்றப் பாடசாலைகள் மதிப்பதில்லை. இன்று அந்த நிலை அருகி வருகிறது. அதற்குக் காரணம் வடக்குக்கிழக்கு மாணவர்களின் வருகை. அவர்களின் வருகை இன்றேல் புதிய கட்டிடமும் வந்திருக்காது முன்னேற்றமும் இவ்வளவு வேகமாடைந்திருக்காது.

7. யாழ் ஆசிரியர்கள் பலர் அரச ஊழியர்கள். அவர்களில் பலர் தங்கியதும் வெள்ளவத்தை பம்பலப்பட்டி போன்ற இடங்களில் தான். அந்த வகையில் அவர்கள் பம்பலப்பிட்டிய இந்துவை நாடி வேலை பெற்றுக் கொண்டனர். அதற்குக் கூட சிலர் அமைச்சினூடாக காசு கொடுத்து வேலை செய்ய வேண்டி இருந்தது. இருப்பினும் பல சிறந்த யாழ் ஆசிரியர்களின் வருகை கல்லூரியின் உயர்தரப் பெறுபேறுகளில் செல்வாக்குச் செலுத்தியது உண்மை.

8. பாடசாலையின் கல்லூரி தரம் தேசிய தரம் குறித்த கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு குறித்த இணையத்தளம் செய்தி தரவில்லை. அவற்றிற்கான இணைப்புக்களோடு அவர்கள் குறித்த தரவுகளை இட்டால் அதிக உறுதிப்படுத்தல் இருக்கும் செய்வார்களா?

9. குறித்த பாடசாலை மீது எமக்கும் அதீத அக்கறை உண்டு. இன்று கொழும்பில் தமிழ் மாணவர்களின் கல்வியில் அதிக செல்வாக்குள்ள நிறுவனமாக மாறியுள்ள இப்பாடசாலை மாணவர்களின் வெளி நடத்தைகள் மீதும் ஒழுங்குகளைப் பேண முனைவதோடு மாணவர்களின் நடவடிக்கைகளை அயலவர்களை பொதுமக்களை பாதிக்காத வகையிலும் அவர்களின் நன்மதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமைவதே பாடசாலைக்கு மேலும் சிறப்பாகும்.

9. குறித்த பாடசாலையில் கல்வி கற்ற அனுபவம் எமக்கும் உண்டு என்பதையும் கூறிக் கொள்கின்றோம். அந்த வகையில் கல்லூரி மீதான சமூகத்தின் பார்வையை சரிவர உள்வாங்கி தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர மறைக்க அல்லது மற்றவர்களைக் காட்டி நியாயப்படுத்தக் கூடாது.

10. இக்களத்தில் இக்கருத்துக்கள் குறித்து மற்றவர்களின் ஆமோதிப்போ அல்லது அங்கீகாரமோ வேண்டப்படவில்லை. சமூகத்தின் முன்னிலையில் பாடசாலைச் சூழலில் இக் கருத்துக்களோடு பொதுமக்கள் இருக்கின்ற போது நாம் அதைச் சுட்டிக்காட்டுதலும் அவற்றிற்கு தீர்வுகள் கோருவதற்கும் எவரினதும் அனுமதி அவசியமில்லை. எம்மை வந்தடைந்த தகவல்கள் சிங்கள மாணவர்கள் தந்தவையல்ல. குறித்த பாடசாலைச் சூழலில் உள்ள பொதுமக்கள் பெற்றோர் மாணவர்கள் வெளியிட்ட ஆதங்கங்களே..!

Link to comment
Share on other sites

6. வடக்குக் கிழக்கிலும் பல பாடசாலைகள் குடிமனைகள் மத்தியில் தான் இருக்கின்றன. பரியோவான் கல்லூரி கூட அப்படித்தான். அங்கெல்லாம் அயலவர்களுக்கு மாணவர்கள் தொந்தரவளிப்பது அனுமதிக்கப்படுகிறதா? இல்லையே. சிங்கள மாணவர்கள் செய்கிறார்கள் நாங்கள் செய்தால் தான் தப்பா என்ற பாணியில் உங்கள் தவறுகளை மற்றவர்களின் தவறான செயற்பாடுகளுக்கு உதாரணமாக்கி நியாயம் கற்பிக்க விளைவதால் அது சமூகத்தில் ஏற்கப்பட்டு விடும் என்பது கிடையாது.

பரி யோவான் கல்லூரியிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருந்தன.எல்லாப் பாடசாலைகளும் அது இருக்கும் சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவன தான்.இதில் இந்துக்கல்லூரியும் விதி விலக்கல்ல.இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கு பாடசாலை அபிவிருத்திச் சபையும் பழைய மாணவர் அமைப்பும் அதிக பங்காற்றி உள்ளன.இங்கே யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மாணவர்கள் முன்னர் இருந்த மாணவர்கள் என்ற பிரிவினை செயற்கையானது.எல்லாச் சமுகத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையானவர்கள் சிந்தனைத் திறன் கூடியவர்களாக இருப்பது இயல்பே.இங்கே பரீட்ச்சைகளில் சிறந்த பெறுபேறு ஒன்றே பாடாசாலையின் தரத்தை நிர்ணையிக்கப் பயன் படுத்துவது சிறிலன்காவின் அடிப்படைக் கல்வியிச் செயற்பாடுகளில் இருக்கும் அடிப்படைக் குறை பாடு ஆகும்.மனித ஆளுமையை வளர்க்கவே பாடசாலைகள் மேற் குலகில் செயற்படுகின்றன.இங்கே பாடசாலைகளின் பங்களிப்பை அளவிட ஒவ்வொரு மாணவர் பாடசாலையில் சேர்ந்த போது அவரின் கலிவித் தராதரம் அளவிடப்பட்டு பின்னர் அவர் இறுதி வருடத்தில் பெறும் கல்வித் தராதரம் அளவிடப்பட்டு ,பாடாசாலையால் அவரின் கல்வித் தரத்தில் ஏற்பட்ட உயர்வே பாடசாலையின் திறனை அளவிடப் பயன்படுத்தப்படுறது. அத்துடன் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான திறமைகளை உடையவர்கள் அல்ல என்பதன் அடிப்படையிலயே இங்கே கல்விச் செயற்பாடுகள் நெறிப்படுத்தப் படுகின்றன.சிறிலான்காவில் அரசால் கல்விச் செயற்பாடுகளில் நடை முறைப்படுத்தப் படும் இனப்பாகுபாட்டால் வெகுவாகப் பதிக்கப் பட்ட ஒரு பாடசாலை இந்துக் கல்லூரி, பல சிரமங்களின் மத்திலும் அது பல தமிழ் மாணவர்களுக்கு கல்வியை வழங்கி உள்ளது.மேலோட்டமான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து , இந்துக் கலூரி இயங்கும் சூழ் நிலையையும் சிறிலங்காவின் கல்விச் செயற்பாடுகளில் காட்டப்படும் இனக் குரோத நடவடிக்கைகளையும் மறுதலித்துக் கருத்து எழுதுவது மேற்போக்கான கருத்தாடல்.

சும்மா பிடித்த முயலுக்கு மூன்றுகால் தான் என்ற நிலையில் இல்லாமல் உண்மைகளை அது சார்ந்த பின் புலத்தில் ஆளாமாகப் புரிந்து கொண்டு கருத்து எழுதுவதே ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வழி வகுக்கும்.இல்லாது விடின் அது தனி நபர் சார்ந்த கருதாடலாகவே உருவெடுக்கும்.இதனை எல்லோரும் கவனித்தில் எடுத்து கருதுக்களைப் பகரவும்.

Link to comment
Share on other sites

நீர் இணைத கருத்துகளுக்கான பதில்கள் இலக்க வரிசையில் இருக்கிறது படியும்

1.பாடசாலை இணையங்களிலில் அதன் கல்வியல் தரவுகளை இணைத்திருப்பது இந்துவின் இணையத்தில்தான் அதனை நீர் உட்சாகப்படுத்தாமல் அதில் குறைகாண்பதில் இருந்து உமது காழ்ப்புணர்ச்சி தெரிகிறது.தரவுகளை கணக்கெடுத்து நீர் பாத்துக்கொள்ளும்

2.தோமியனின் இந்துவின் மாணவர்கள் தான் சோடாப்போத்தல் எறிந்தார்கல் என்பதற்கு ஆதாரமில்லை அதில் ரோயல் மாணவர்களுடன் எமது படசாலையை சேர்ந்த சிலர் இருந்திருக்கக்கூடும்

3.இந்துவில் பரீட்சை நடத்தியே மாணவர்களை உள்வாங்குவது உண்டு டொனேசனுக்காக இல்லை பரீட்ச்சையில் தேறினால் நன்கொடையில்லமல் பாடசாலையில் சேரலாம் இது மற்ற்றைய தமிழ் பாடசாலைகள் பாதிக்கப்படக்கூடாதென்பதற்க

Link to comment
Share on other sites

பரி யோவான் கல்லூரியிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருந்தன.எல்லாப் பாடசாலைகளும் அது இருக்கும் சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவன தான்.இதில் இந்துக்கல்லூரியும் விதி விலக்கல்ல.இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கு பாடசாலை அபிவிருத்திச் சபையும் பழைய மாணவர் அமைப்பும் அதிக பங்காற்றி உள்ளன.இங்கே யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மாணவர்கள் முன்னர் இருந்த மாணவர்கள் என்ற பிரிவினை செயற்கையானது.எல்லாச் சமுகத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையானவர்கள் சிந்தனைத் திறன் கூடியவர்களாக இருப்பது இயல்பே.இங்கே பரீட்ச்சைகளில் சிறந்த பெறுபேறு ஒன்றே பாடாசாலையின் தரத்தை நிர்ணையிக்கப் பயன் படுத்துவது சிறிலன்காவின் அடிப்படைக் கல்வியிச் செயற்பாடுகளில் இருக்கும் அடிப்படைக் குறை பாடு ஆகும்.மனித ஆளுமையை வளர்க்கவே பாடசாலைகள் மேற் குலகில் செயற்படுகின்றன.இங்கே பாடசாலைகளின் பங்களிப்பை அளவிட ஒவ்வொரு மாணவர் பாடசாலையில் சேர்ந்த போது அவரின் கலிவித் தராதரம் அளவிடப்பட்டு பின்னர் அவர் இறுதி வருடத்தில் பெறும் கல்வித் தராதரம் அளவிடப்பட்டு ,பாடாசாலையால் அவரின் கல்வித் தரத்தில் ஏற்பட்ட உயர்வே பாடசாலையின் திறனை அளவிடப் பயன்படுத்தப்படுறது. அத்துடன் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான திறமைகளை உடையவர்கள் அல்ல என்பதன் அடிப்படையிலயே இங்கே கல்விச் செயற்பாடுகள் நெறிப்படுத்தப் படுகின்றன.சிறிலான்காவில் அரசால் கல்விச் செயற்பாடுகளில் நடை முறைப்படுத்தப் படும் இனப்பாகுபாட்டால் வெகுவாகப் பதிக்கப் பட்ட ஒரு பாடசாலை இந்துக் கல்லூரி, பல சிரமங்களின் மத்திலும் அது பல தமிழ் மாணவர்களுக்கு கல்வியை வழங்கி உள்ளது.மேலோட்டமான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து , இந்துக் கலூரி இயங்கும் சூழ் நிலையையும் சிறிலங்காவின் கல்விச் செயற்பாடுகளில் காட்டப்படும் இனக் குரோத நடவடிக்கைகளையும் மறுதலித்துக் கருத்து எழுதுவது மேற்போக்கான கருத்தாடல்.

சும்மா பிடித்த முயலுக்கு மூன்றுகால் தான் என்ற நிலையில் இல்லாமல் உண்மைகளை அது சார்ந்த பின் புலத்தில் ஆளாமாகப் புரிந்து கொண்டு கருத்து எழுதுவதே ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வழி வகுக்கும்.இல்லாது விடின் அது தனி நபர் சார்ந்த கருதாடலாகவே உருவெடுக்கும்.இதனை எல்லோரும் கவனித்தில் எடுத்து கருதுக்களைப் பகரவும்.

இதற்கு ஒரு உதாரணமிது பாடசாலக்கு வான் ஜபானில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது முதலில் அதற்கு வரிவிலக்கு அளிப்பதாக கூறிய அரசு பின் 15 லட்சங்கலை வரியாக விதித்தது இடனேயே மாணவ்ர்கள் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் மர்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரால் கலை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டு நிதி திரட்டி 1 மாததுக்கு பின்னமே நாம் வானை துரமுகத்தில் இருந்து எடுத்தோம்

சுற்றியிருக்கும் சிங்கள பாடசாலைகின் மாணவ்ர்களால் தாக்கப்படோம்.ஆசிரியர் முதல் பாலர்வகுப்பச்சேர்ந்தவர் வரை கடைசியாக நடந்த அச்ம்பாவிததில் ஒரு அசிரியை மீது மிகமோசமாக நடந்த சிங்கல மாணவர்களினாலேயே உருவாக்கப்பட்டது அந்த ஆசிரியை காலுடைந்து வைதியசாலையில் இருந்தார் அவரை இந்த வருடம் பெப்ரவரிமாதம் இலங்கை சென்ரபோது அவரை பாடசாலையில் சந்திதேன் அவரே இதை தன் வாயால் கூறீனார்.

பாடசாலை அபிவிருத்தியானது எம் மாணவர்கள் பழையமாணவ்ர்கள் மற்றும் அபிவிருத்தி சங்கதினராலேயே முழுக்க முழுக்க செய்யப்பட்டது சிங்கல அரசால் மிக மிக சொர்ப ரீதியிலான உதவியே தரப்பட்டது 2003 ஆண்டு பாடசாலை மின்கட்டணத்தை செலுத்தமுடியாது என்ரு சொன்ன அரசு பாடசாலைக்கான மின்கட்டணத்தை துண்டித்தது அதன் பின்னர் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரின் நிதியில் அவ் நிதி கட்டப்பட்டது

யாழ் பாடசாலை சூழ்நிலை வேறு கொழும்பு பாடசாலை சூழ்நிலை வேறு அதுதான் உண்மை நான் நாரதரின் கருத்துடன் ஒத்துபோகின்றேன்

அன்புடன்

ஈழவன்

தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர் இணைத கருத்துகளுக்கான பதில்கள் இலக்க வரிசையில் இருக்கிறது படியும்

1.பாடசாலை இணையங்களிலில் அதன் கல்வியல் தரவுகளை இணைத்திருப்பது இந்துவின் இணையத்தில்தான் அதனை நீர் உட்சாகப்படுத்தாமல் அதில் குறைகாண்பதில் இருந்து உமது காழ்ப்புணர்ச்சி தெரிகிறது.தரவுகளை கணக்கெடுத்து நீர் பாத்துக்கொள்ளும்

1.பொதுவாக தரவுகளில் சதவீதம் காட்டப்படும். விகிதாசாரங்களும் காட்டப்படும். அந்த வகையில் உங்கள் தரவுகள் அனலைசுக்கு நேரடியாக உதவவில்லை. அதுமட்டுமன்றி தரவுகளின் ஆதாரங்களும் தரப்படவில்லை.

2.தோமியனின் இந்துவின் மாணவர்கள் தான் சோடாப்போத்தல் எறிந்தார்கல் என்பதற்கு ஆதாரமில்லை அதில் ரோயல் மாணவர்களுடன் எமது படசாலையை சேர்ந்த சிலர் இருந்திருக்கக்கூடும்

2.ஆரம்பத்தில் எமக்கு சம்பந்தமே இல்லை என்றீர்கள். இப்போ உங்கள் மாணவர்கள் சிலர் இருந்திருக்கலாம் என்று கூறி ஓரளவென்றாலும் உண்மையை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். தேசம் அறிந்த உண்மை யாழில் மாற்றப்படலாம் ஆனால் ஒரு கட்டத்தில் வெளிப்பட்டுத்தான் ஆகும்.

3.இந்துவில் பரீட்சை நடத்தியே மாணவர்களை உள்வாங்குவது உண்டு டொனேசனுக்காக இல்லை பரீட்ச்சையில் தேறினால் நன்கொடையில்லமல் பாடசாலையில் சேரலாம் இது மற்ற்றைய தமிழ் பாடசாலைகள் பாதிக்கப்படக்கூடாதென்பதற்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச உதவி கிடைக்காமல் இல்லை. அரச உதவி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. உங்களுக்கு வடக்குக்கிழக்கு பாடசாலைகளை வழங்கப்படும் சலுகைகளை விட அதிகம் அரசு தருகிறது. அதைவிட டொனேசன் என்று வாங்கும் பணம் எங்கு போகிறதோ தெரியவில்லை. சர்மா ஐயா போன்றவர்களின் நிர்வாகச் சீர்கேடுகள் கூட பண விரயமாதலுக்குக் காரணமாக இருக்கலாம. வெறுமனவே அரசைக் குற்றம்சாட்ட முடியாது. அரசு பராபட்சம் காட்டுவது உண்மை என்றாலும் வடக்குக்கிழக்குக்கு வெளியில் தமிழ் பாடசாலை என்ற வகையில் உங்களுக்கே அதிகம் உதவி செய்கிறது. இல்லை என்பீர்களா?

இப்போ அரசின் நிதிச் சலுகைகள் பற்றி நாம் இங்கு முக்கியத்துவம் கொடுக்க முதல் சில குழுக்களாக செயற்படும் மாணவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்துக்கு உபத்திரபம் கொடுப்பதை தவிர்ப்பதோடு கல்லூரிக்கும் சமூகத்துக்கும் நற்பெயரைப் பெற்றுக் கொடுக்க முயல வேண்டும். அதுவே இங்கு எம்மால் கோரப்படுகிறது என்பதை மீண்டும் தெளிவாக்க விரும்புகின்றோம். சம்பந்தப்பட்டோர் கவனத்தில் எடுக்க வேண்டும். பாடசாலையின் சமகாலச் சாதனைகளை சில மாணவர்களின் நடவடிக்கைகள் தேசப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. உங்கள் பாடசாலை இணையத்தளத்தில் உள்ள தரவுகள் எதுவும் சதவீதப்படி இல்லை. 80 பதுகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது 90 களில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில் சதவீத ஒப்பீடே தரவுகளை சரிவரக் காட்டும். இருந்தும் அது தரப்படவில்லை.

தரவேண்டியது என்பது கட்டாய தேவை அல்ல. அதை வெளிப்படுத்தித் தான் ஆக வேண்டும் என்ற விதிகளும் இல்லை

2. எல்லாப் பாடசாலைகளும் தான் நாட்டிற்கு முக்கியமானவர்களை உருவாக்கி உள்ளது. அதில் பம்பலப்பிட்டி இந்துவும் ஒன்று. அதற்காக அக்கல்லூரியின் மாணவர் குழுக்கள் சிலவற்றின் நடத்தைகள் சமூக அங்கீகாரம் பெற்றவை என்று கூற முடியாது. அதற்கு சான்றாக தோமியன் மீதான சோடாப் போத்தல் தாக்குதலும் அதற்கு தேசிய ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவமும் நாடறியும். அப்படி எந்த நிகழ்வும் கடந்த 15 ஆண்டுகாலத்தில் வடக்குக்கிழக்கு மலையக தமிழ் பாடாசாலைகளில் இருந்து எழவில்லை என்பது கவனிக்க வேண்டிய விடயம்.
கடைசியில் இந்துக் கல்லூரி பற்றியதெளிவை ஊட்டிய பிறகு வேறு வழியில்லாமல் எல்லாப் பாடசாலைகளும் பொதுவான என்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்கின்றீர்.சோடப் போத்தல் அல்ல, அதை விடக் கீழ்தரமாக தமிழ் மாணவர்களைப் பற்றிஎழுத சிங்கள ஊடகங்கள் தயாராகத் தான் இருக்கின்றன. நாளைக்கு புலிகளோடு தொடர்பு படுத்தி எழுதினால் கூட ஆச்சரியப்படக் கூடியதல்ல.

சோடாப் போத்தல் விடயம் என்று ஒரு சம்பவமே நடக்கவில்லை.அது பொய்யாக பாடசாலையின் நற்பெயரைக் களங்கப்படுத்த நினைக்கும் சில விசமிகளின் கருத்து மட்டுமே!

3. பல மலையக மாணவர்கள் அனுமதி கேட்டு வந்த போதும் டொனேசன் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. அந்த வகையில் டொனேசன் தான் அனுமதிக்கு முக்கியமாக இருந்துள்ளதே தவிர வடக்குக்கிழக்கு மாணவர்கள் மீதான கல்வி அக்கறை என்று தனித்துக் கூறி சிறப்புப்பாராட்ட முடியாத நிலையை பாடசாலையின் கடந்த கால நடவடிக்கைகள் கூறுகின்றன. அவை தொடராமல் இருக்க வேண்டும். என்பதே பலரின் அவா.

மலையகத்தவர்கள் உள்வாங்கப்படவில்லை என்பது பொய்யான கருத்து. மலையகத்தவர்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இந்த வீண்டா விவாதம், தம்பி குறுக்கால போவான்!

இதை விட்டுவிட்டு பிரயோசனமாய் ஏதாவது கதைக்கலாமே.

தம்பியவை, ஏன் பற்குணம் மாஸ்ட்டர் அதிபரக இருந்தவர் அல்லோ :?: , ஏன் அவரை அதிபர் எண்டு home pageல் போடயில்லை?.

Link to comment
Share on other sites

நயினா என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறியள். 1...2 விகாரலேன் பெடியமாரோட உள்ளுக்கு அரச கருமாய் போனத விட வேறு தொடர்பு இல்லையுங்கோ பம்பலபிட்டி இந்துக் கல்லூரியோடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நயினா என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறியள். 1...2 விகாரலேன் பெடியமாரோட உள்ளுக்கு அரச கருமாய் போனத விட வேறு தொடர்பு இல்லையுங்கோ பம்பலபிட்டி இந்துக் கல்லூரியோடு.
விட்ட சவுண்டில பெரே மறந்துபோச்சு. அது சரி உம்மட பெயர் என்ன காரணப்பெயரோ? பள்ளிக்கூடத்துக்கு குறுக்கால ஒருக்கா போயிருகிறதால குருகாலபோவான்
Link to comment
Share on other sites

ஏன் இந்த வீண்டா விவாதம், தம்பி குறுக்கால போவான்!

இதை விட்டுவிட்டு பிரயோசனமாய் ஏதாவது கதைக்கலாமே.

தம்பியவை, ஏன் பற்குணம் மாஸ்ட்டர் அதிபரக இருந்தவர் அல்லோ :?: , ஏன் அவரை அதிபர் எண்டு home pageல் போடயில்லை?.

பற்குணம் ஆசிரியர் அதிபராய் இருக்கவில்லை சில மாதங்கள் பதில் அதிபராகத்தான் கடைமையாற்றினார்(அதி[அதிபர் மாற்றலாகிசெல்லும் போது மர்றைய அதிபர் வரும்வரை) ஆனால் அவரினை பற்றி பழையமானவர்கள் கதைக்கும் போது எவ்வளவு சிறந்த ஆசிரியர் என்பது தெளிவு பாடசாலைக்காக தன் முழுநேரத்தையும் செலவிட்ட நல்ல ஆசான் அவர் அவர் கல்லூரியில் கடமை நேரத்தில் காலமானதாக அறிந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பம்பலபிட்டிஇந்துக்கல்லூரி 1978ம் ஆண்டுகளிலேய ஒரு வகுப்பில் 4 பிரிவுகளுடன் இயங்கியது ( A B C D)

இந்தக் கல்லூரி வளர்ச்சி அடைய முலகாரணம் அதிபராய் இருந்த சங்கரலிங்கம் தான்.

பற்குணம் ஆசிரியரும் அவர் மனைவியும் அங்கு ஆசிரியராய் இருந்தார்கள். அவர்களின் ஒரே ஒரு புதல்வர் இப்போ டாக்டராய் இருக்கின்றார். அவரும் அங்கு தான் படித்தவர்.

சங்கரலிங்கம் அதிபராய் இருந்த காலத்தில் (1978) தான் சரஸ்வதி மண்டபம் பாடசாலை உடைமையாகியது. பாடசாலை மைதானம் விஸ்தரிக்கப் பட்டது. பல அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டன.

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.