Jump to content

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி: கருத்து பகிர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம். இனிச் சொல்லுவியள். ஒரு பள்ளி உள்வாங்குவது அவர்களைச் சார்ந்தது. ஆனால் அதைப் பற்றி விமர்ச்சித்து, யாழ்பாணத்தான் தான் எல்லாமே என்று தொடங்கத்தில் பிரதேசவாத சிந்தனை கொண்டு வந்து கதைத்தது நீர். நல்லாப் பூச்சுத்துறியள் பாருங்கோ!

இலங்கையரசின் கீழ் செயற்படுகின்ற பாடசாலைகள் எல்லாமே சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் தான் செயற்பட முடியும். இன்று முல்லைத்தீவு அரசாங்கா அதிபர்,( திருமதி இமல்டா சுகுமார்) புலிகளின் தேசியக்கொடிக்கு தமிழீழத்தில் சல்யுட் அடித்தாலும் அரசாங்க உத்யோகத்தில் தான் இருக்கின்றார். அரசுக்குத் தெரியும். தமிழீழத்தில் ஒன்றும் புடுங்க முடியாது என்று.

அரசாங்க உத்தியோகத்தார்கள் எங்கிருந்தாலும், அரசாங்கப் பணத்தில் தான் இப்போதும் ஜுவிக்கின்றனர். அப்படியிருக்க கொழும்பில் இருந்து கொண்டு, இலங்கையரசுக்கு எதிராகச் செயற்படு என்று சொல்வது, படு முட்டாள்தனமானது. ஏற்கனவே சிங்கள ஊடகங்கள் புலிச்சாயம் பூச அலையும்போது இவரும் அதற்கு எடுத்துக் கொடுக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றார்.

முன்னர், எழுதிய கருத்துக்களில் உம்மால் எவ்வித ஆதாரங்களையும் வைக்கவில்லையே! பிறகு எப்படி நியாயம் பற்றிப் பேசுவது. முந்திச் சொல்வது எல்லாம் குதர்க்க கதைகளாகத் தானே உதிர்த்தீர்! அதில் நாங்கள் சடைகின்றோம் என்று வேறு பினாத்தல்!

மக்களின் மனவோட்டங்கள் என்று உம் கருத்தை மட்டும் எடுத்து, நம்புவதற்கு ஒன்றும் முட்டாள்கள் அல்ல. மக்களின் குரல் என்று ஒருத்தன் ஓலமிடுவதை எல்லாம் கணக்கில் எடுக்கத் தேவையும் இல்லை. மேலும் நீர் சொன்ன எக்ககருத்துக்களுமே, பாடசாலை வளர்ச்சிக்கு அல்ல, என்பதும் அது வஞ்சத்தால் வந்த கருத்துக்கள் என்பது புரிந்து கொள்ள முடியும்.

றோயல் கல்லூரி ஒரு போக்கைக் கொண்டது. இந்துக் கல்லூரி ஒரு வழியைக் கொண்டது. இணையத்தில் தகவல் தருவது தான் திருத்தம் என்ற முட்டாள்தனமான சிந்தனைகள் இரண்டுக்கும் இடையில் இல்லை. றோயல்கல்லூரி என்பது மேட்டுக்குடிகளின் பாடசாலை. அங்கே சிறிய பார்ட்டி நடந்தாலே, லட்சக்கணக்கில் செலவளிப்பார்கள். ஆனால் இந்துக் கல்லூரி பள்ளிக்கு இடவசதியற்ற, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை உள்வாங்குகின்ற பாடசாலை.

பாடசாலையின் பல அபிவிருத்தித் திட்டங்கள் பெற்றோர், ஆதரவாளர் நிதித் திட்டங்களோடு தான் நட்நதன். பொது மைதானம் முழுக்க முழுக்க, அரசாங்கப் பணம் இன்றித் தான் நடந்தன. அதைச் சொல்லி இங்கே பெருமையடிக்க வேண்டிய தேவையும் இல்லை.

உம் வீட்டு மதிலில் இந்துக் கல்லூரி மாணவர்கள் எழுதட்டும் என்று பார்த்துக் கொண்டு நிற்கின்றது உம் பிழை! அந்த ஏமாளித்தனத்துக்கு நாம் பதில் சொல்ல முடியாது!

இராமநாதன் பள்ளிக்குள் பந்து அடித்துப் போகும் அளவு தூரம் இல்லை. இரண்டுக்கும் இடையே பெரும்வீதி வேறு உண்டு. அதை விட, இரு பக்கங்களும் மாடிக்கட்டங்கள் உள்ளது. எனவே, இராமனாதன் பள்ளி பக்கத்தில் இருக்கின்றது என்று யாரோ சொன்னதைக் கேட்டு, லண்டனில் இருந்து வரைபடம் போடாதீர்!

Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது பள்ளி மீது அக்கறையுள்ளவனாகக் காட்டிக் கொள்ள முனையும் நீர், தொடக்கத்தில், வடக்கு மாணவர்கள் முக்கியமாக யாழ்பாணத்தானால் தான் தரம் உயர்வு என்று பிரதேசவாதத்தோடு எழுத முனைந்ததையும், பின் யாழ்களத்தின் மீது 10 கேள்விகள் என்ற பாணியில் இந்துக் கல்லூரி மீது ஆதாரமற்ற காழ்ப்புணர்ச்சி வசனங்கள் எழுதியதை மறக்கக் கூடியதல்ல.

ஆனால் கடைசியில் எந்த வித ஆதாரங்களையும் திரட்ட முடியாமல், சந்தியில் நின்று ஊர்வம்பு கதைப்பது போல, இந்துக் கல்லூரி மீது அசிங்கம் செய்ய முடியும் என்று நினைத்தால் அது உம் மடமையாகும். 4 பக்கங்கள் தாண்டினால், தொடக்கத்தை மறந்துவிடுவோம் என்று நினைப்பதை நிறுத்துவது சாலச் சிறந்தது.

கடைசியில் தலைப்பில் இருந்து கதைக்க முடியாமல் போகும் என்று தெரிந்ததும், முதலே சாட்டுக்களோடு வெளியேறும் உம் புத்தியை மெச்சாமலும் இருக்க முடியவில்லை. வாழ்த்துக்கள்!

அருமையான பதில் தூயவன். (இதுக்கு மேல நான் ஏதாவது சொல்லப்போனால் என் கருத்துக் காணாமல் போய்விடும் :lol::lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுதந்திர தினக் கொண்டாட்டம் அது இதென்று சிறீலங்கா அரச நிகழ்வுகளுக்கு தமிழ் மாணவர்களை அனுப்பி பிழைப்பு நடத்தும் ஒரு பள்ளிக்கூடம் நீங்கள் பிரதேசவாதம் பற்றி என்ன பயங்கரவாதம் பற்றியும் பேசுவீர்கள்.

ஏன்ராப்பாமாரே! என்ன எழுதுவதென்ற ஒரு விவஸ்தை இல்லையா??? உந்தப் பள்ளிக்கூடம் யாழ்ப்பாணத்தில்தானே இருக்கு! அவங்கள் கூப்பிட மறுக்க!!

உந்த யாழ்ப்பாணப் பள்ளிக்கூடங்களான் தேசியப் பற்று எல்லாம் தெரிந்த ஒன்றுதான்!! ஒரு அதிபர் கிறிக்கெட் விட்டு மேலை! சிலர் ஓட்டிகளோடு ஒட்டி மேலை! சிலருக்கு ... வேண்டாம்! ஒரு பாடசாலை என்றால்! அதில் நல்லது, கெட்டது ஆயிரம் இருக்கும்! அது எல்லாப் பாடசாலைகளிலும்தான்!!

ஒரு பாடசாலையின் காலத்து நினைவுகளைப் பகிருவது என்பது, குப்பை கொட்டவல்ல!

தேவை அற்ற விவாதங்களைத் தவிர்ப்போம்! பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கியிருங்கோ!!! எனது முன்னைய கல்லூரியும் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமானதே! நான் படிக்கும் காலகட்டத்தில், சில உயர்தர வகுப்பு மாணவர்கள், வேறு பாடசாலையில் களவில் ஈடுபட்டு பிடிபட்டார்கள். இன்னும் சிலர் ஓர் அப்பாவி சக மாணவனை பாலியல் சித்திரவதை செய்ததனால், அம்மாணவன் தற்கொலை செய்தது, அன்று யாழையே உலுக்கிய செய்தி! ... இப்படிப் பல பல!! அதற்காக அப்பாடசாலை பிழையானதா?

தொழிலற்ற புண்ணாக்குக் கூட்டங்கள்! எதுக்கு விவாதம் என்று ஒரு விவஸ்தை இல்லையா???????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயதேவன்..யாழில் நிகழ்ந்த நிகழ்வுகள் உடனடியாக பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு அவற்றிற்கு தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளன. யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பகிடி வதை சித்திரவதைகள் கூட அப்படி பொதுமக்களால் வெளிக்கொண்ரப்பட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

குறித்த பாடசாலை மாணவர்கள் பொதுமக்களை துன்புறுத்தும் வகையிலான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுதலும் தவிர்த்தலும் குப்பை கொட்டுவது என்று நீங்கள் கருதினால் மக்கள் குப்பைகளோடுதான் காலங்கடத்த வேண்டிய சூழல் வரும்.

புதிய மாணவர்களை ராக்கிங் செய்வது கூட இந்தப் பாடசாலையின் நடந்தது. அந்தளவுக்கு மோசமான நிலை இருந்தது. இன்று அந்த நிலை வெகுவாக குறைந்து குழுச் செயற்பாடுகளே ஆபத்தான அளவில் நடக்கின்றது. இதுவே யாழ்ப்பாணம் என்றால் இங்கு எழுதத் தேவையில்லை.பரிகாரம் கண்டிருப்பார்கள் அங்கையே.

அரசின் நிகழ்வுகளுக்குச் செல்வதை ஏன் இவர்கள் பகிஸ்கரித்திருக்க முடியாது. வடக்குக்கிழக்குப் பாடசாலைகள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதும் பகிஸ்கரிப்புக்களைச் செய்த போது இவர்கள் ஏன் செய்ய முடியாது. அரச விசுவாசத்தைக் காட்டி அரச உதவி பெற்றவர்கள் என்பதை மறுக்கவும் முடியாது. தமிழ் பாடசாலைகளுள் அதிகம் அரச உதவி பெற்ற பாடசாலை இது என்றாலும் தவறில்லை.

இன்று வடக்குக்கிழக்கு மாணவர்களின் வருகையையும் அதன் பின்னான வளர்ச்சியையும் ஒத்துக்கொள்ள மறுக்கும் இவர்களா தமிழ் விசுவாசுகள்???! யாழ் பிரபல்ய ஆசிரியர்கள் இடம்பெயர்ந்து யாழ் மாவட்ட மாணவர்கள் கல்விக்காக திண்டாடிய வேளைகளை எண்ணிப்பார்த்திருந்தால் பிரதேசவாதம் கதைப்பதாக கதையளந்து தங்கள் தவறுகளை மறைக்க முனைவரா?

எதுவாகவும் இருக்கட்டும் கொழும்பில் தமிழ் மக்களின் கல்வியில் இன்று முக்கிய இடம்பெற்றுவிட்ட இப்பாடசாலை இன்னும் சிறப்புற மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் அவா. அந்த வகையில் நிறைகளை மட்டும் நோக்காமல் குறைகளை நோக்கியும் அவற்றைத் தவிர்க்கவும் முனைவதே ஒரு சிறந்த கல்லூரிக்கு அழகு. அந்தப் பக்குவம் இங்கு யாழில் உள்ள இக்கல்லூரி மாணவர்கள் சிலரிடம் இல்லை என்பதற்காக நாம் அக்கல்லூரி மாணவர்கள் எல்லோரும் அப்படி என்று முத்திரை குத்தினால் அது எம்மையும் தான் தாக்கும். :idea:

Link to comment
Share on other sites

ஜயா நெடுக்கால போவான் கனவில் கண்டதெல்லாம் எழுதாதயும் நான் பாடசாலையை சார்ந்தவன் என்னை பற்றி துயவன் அல்லது அருவியிடம் கேளும் எனக்கு அங்கு நடக்கும் ஒவ்வொரு விடயங்களும் தெரியவரும் நீர் இப்போது சொல்வது போல ராகிங் நடந்ததாக நான் அறியவில்லை நான் 8 வருடங்கள் இக்கல்லூரியில்தான் படித்தேன் 2000- 2003 வரை மாணவர்தலைவர் ஒன்றியத்திலும் உருப்பினராக இருந்தேன் எமக்குதெரியாத ஒன்ரு உமக்கு தெரிந்திருக்க வாய்பே இல்லை என நான் உறுதிபடக்கூறுகின்றேன்

நைனா அப்போது சங்கரலிங்கம் அவர்கள் அதிபராக இருந்திருக்கவேண்டும் என நினைக்கின்றேன் அப்போ வெலுப்பிள்ளை அசிரியரிடம் படித்திருபீர்கள் என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

அரசின் நிகழ்வுகளுக்குச் செல்வதை ஏன் இவர்கள் பகிஸ்கரித்திருக்க முடியாது. வடக்குக்கிழக்குப் பாடசாலைகள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதும் பகிஸ்கரிப்புக்களைச் செய்த போது இவர்கள் ஏன் செய்ய முடியாது. அரச விசுவாசத்தைக் காட்டி அரச உதவி பெற்றவர்கள் என்பதை மறுக்கவும் முடியாது. தமிழ் பாடசாலைகளுள் அதிகம் அரச உதவி பெற்ற பாடசாலை இது என்றாலும் தவறில்லை.

ஒரு பாடசாலை தனித்து பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தால் யாழில் இன்று அப்பாடசாலை இயங்கமுடியாத சூழ்நிலை நிலவியிருக்கும். கொழும்பில் பகிஸ்பரிப்பில் ஈடுபட முடியாத சூழல் காணப்படுவதனைப் புரிந்துகொள்ளவேண்டும். கொழும்பிலே இருந்து அரசிற்கு எதிராக ஏதாவது தனித்துச் செய்யும் போது அவ்விடத்தில் இருந்து மறைந்துபோகக்கூடிய சூழலே அங்கு காணப்படுகிறது. அரச விசுவாசத்தினைக் காட்டி அரச உதவிகளைப் பெறவில்லை. சூழ்நிலையை அனுசரித்துப் போகவேண்டிய சூழல் காணப்படுகிறது. அவ்வாறு சூழ்நிலையை அனுசரித்துப் போகாதிருந்தால் உலகில் மனிதப் பரம்பலே அமைந்திருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நெடுங்கால போவன், எதிர்வரும் காலங்களில், கொழும்பு பொலிசில் மாட்டுப்பட்டாலோ, அல்லது இராணுவத்திடம் மாட்டுப்பட்டாலோ, தான் தமிழ்தேசிய ஆதரவாளன் என்றும், புலிகளுக்கு ஆதரவு செய்வதாகவும் பகிரங்கமாக ஒத்துக் கொள்வார் என்று மேலே சொன்ன வார்த்தைகளால் உறுதிப்படுகின்றார் என நம்புகின்றோம்.

அவ்வாறு அவர் செய்யாத பட்சத்தில், அவர் தன்னைத் துரோகி என்று ஒத்துக் கொள்வதற்கு ஈடானது. இதனால் பொலிசுக்கும் அதிக கஸ்டமும் இல்லை. இப்படியே nவுறு யாரும் செய்ய முனைந்தாலும் செய்து உங்களின் தேசியப் பற்றைக் காட்டிக் கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

அரச உதவி அரச உஅதவி என்கிண்ரீரே பாடசாலைக்கு அரசௌதவி கிடைத்ததற்கானா ஆதாரங்கலை இங்கே இணையும் பாப்போம் உமது ஸ்ரைலிலே கேக்கிறேன் *********

******* நீக்கம் யாழ்பாடி.

வேறு பகுதிகளில் எழுதப்படும் விடயங்களை அப்பகுதியுடன் நிறுதுவது நல்லது.. தேவையற்று மற்றைய தலைப்புக்களில் எழுதப்படும் விடயங்களை தொடர்புபடுத்தி எழுதுவதை தவிருங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

ஏன்ராப்பாமாரே! என்ன எழுதுவதென்ற ஒரு விவஸ்தை இல்லையா??? உந்தப் பள்ளிக்கூடம் யாழ்ப்பாணத்தில்தானே இருக்கு! அவங்கள் கூப்பிட மறுக்க!!

உந்த யாழ்ப்பாணப் பள்ளிக்கூடங்களான் தேசியப் பற்று எல்லாம் தெரிந்த ஒன்றுதான்!! ஒரு அதிபர் கிறிக்கெட் விட்டு மேலை! சிலர் ஓட்டிகளோடு ஒட்டி மேலை! சிலருக்கு ... வேண்டாம்! ஒரு பாடசாலை என்றால்! அதில் நல்லது, கெட்டது ஆயிரம் இருக்கும்! அது எல்லாப் பாடசாலைகளிலும்தான்!!

ஒரு பாடசாலையின் காலத்து நினைவுகளைப் பகிருவது என்பது, குப்பை கொட்டவல்ல!

தேவை அற்ற விவாதங்களைத் தவிர்ப்போம்! பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கியிருங்கோ!!! எனது முன்னைய கல்லூரியும் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமானதே! நான் படிக்கும் காலகட்டத்தில், சில உயர்தர வகுப்பு மாணவர்கள், வேறு பாடசாலையில் களவில் ஈடுபட்டு பிடிபட்டார்கள். இன்னும் சிலர் ஓர் அப்பாவி சக மாணவனை பாலியல் சித்திரவதை செய்ததனால், அம்மாணவன் தற்கொலை செய்தது, அன்று யாழையே உலுக்கிய செய்தி! ... இப்படிப் பல பல!! அதற்காக அப்பாடசாலை பிழையானதா?

தொழிலற்ற புண்ணாக்குக் கூட்டங்கள்! எதுக்கு விவாதம் என்று ஒரு விவஸ்தை இல்லையா???????????

ஜெயதேவன் சார்...அந்த அப்பாவி ஸடூடண்ட் அவங்களை பொண்ணு மாதிரியே நினைச்சுக்கு வாங்களாம் ரொம்ப பசங்களுடன் காதல்(ஓரின) வைச்சிருந்தங்காளாம்... காதல் போட்டி, பொறாமை., தோல்விங்க.. எக்ஸ்ற்ரா,எக்ஸ்ற்ரா.....

அது தான் உயிரை மாய்சுட்டாங்க.... எனக்கென்ன சார் தெரியும்... தினத்தந்தியிலை.... பார்த்து கிட்டதா பேசி கிட்டாங்க

Link to comment
Share on other sites

  • 4 months later...

1. சர்மா ஐயா அதிபராக இருந்த போது அகதிகளாக வந்த மாணவர்களிடம் கூட ஈவு இரக்கமில்லாமல் 10,000 ரூவைக் கறந்ததும் ஒரு கட்டிடம் கூட புதிதாகக் கட்டாததும் அதன் பின்னர் அரசின் பண உதவி பெற்று முத்துக்குமாரர் கட்டியதுகளும் பம்பலப்பிட்டிய வாழ் மக்கள் அறிவார்கள்.

2. சரஸ்வதி மண்டபத்துக்கு முன்னால் உள்ள வீதிகளின் மதிலோரங்கள் எங்கும் கறுப்பு எண்ணைச் சோக் கட்டிகளால் எழுதித் தள்ளியதை நாங்களே அழித்திருக்கும் போது நீங்கள் பொய் என்றால் எனிப் புகைப்படத்துடன் தான் தகவல் போட வேண்டும். அதுவரை அது பொய்யாகவே இருக்கட்டும்.

3. சோடாப் போத்தல்கள் சகிதம் கல்கிசை தோமியன் சென்று சிங்கள மாணவர்களோடு மோதியதும் காயங்கள் ஏற்படுத்தியதுவும் கொழும்பில் பரப்பரப்பாக செய்திகளில் பேசப்பட்டதும் பத்திரிகைகளில் வந்து இந்துவின் பெயரை நாறடித்தவும் உண்மை இல்லை என்றாகிடுமா?

பழைய மாணவர்கள் புதிய மாணவர்கள் என்று கொழும்பில் காங் நடத்துவதும் வீதிகளில் நின்று சண்டித்தனம் செய்வதும் தெகிவளை முதல் கொல்பிட்டி வரை தெரிந்த விடயங்கள்.

4. 90, 95 இடம்பெயர்வுக்கு முன்னர் பொதுத்தராதரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் மோசமாக இருந்தமையும் வடக்கு கிழக்கு மாணவர்களின் வருகையின் பின்னர் பெறுபேறுகளின் உயர்வும் இராமனாதனுக்குப் போட்டியாக இருக்க முடிந்ததுவும் சமகால நிகழ்வுகளை மறைக்கும் செயல்.

5. கொழும்பு வாழ் தமிழர்கள் றோயல் தோமஸ் ஆனந்தா என்று தேடித்தேடி தங்கள் பிள்ளைகளை சேர்த்தது போய் பம்பலப்பட்டி என்று தேடி வந்ததும் வடக்கு கிழக்கு மாணவர்களின் வருகையின் பின் நிகழ்ந்த பரீட்சைப் பெறுபேறுகளின் உயர்ச்சியின் பிந்தான்.

6. பம்பலப்பிட்டிய இந்துவில் படித்த எல்லோரும் ரவுடிசுமோ அல்லது காங்கோ நடத்தவில்லை. ஆனால் தமிழ் ரவுடிகளை காங்குகளை உருவாக்கிய பெருமையும் பம்பலப்பட்டிய இந்துக் கல்லூரியைச் சாரும்.

7. நீங்கள் குறிப்பிட்டது போல 1991 இல்தான் உங்கள் பாடசாலைக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து கிடைத்தது என்பதற்கான ஆதாரத்தை தரமுடியுமா?

8. இன்று பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரி குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒழுக்கத்தில் திகழ்வதற்கு யாழில் இருந்து இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் பலரை உள்வாங்கி இருப்பதுவும் காரணம். அதை மறுக்க முடியுமா?

9. உங்கள் பாடசாலை மாணவர்கள் மீது பம்பலப்பிட்டிய கதிரேசன் கோயில் பக்கம் உள்ள அயலவர்கள் அனுப்பி வைத்த முறைப்பாடுகள் குறித்து உங்கள் அதிபரிடம் விசாரித்து அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்று அவரால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை இங்கு தரமுடியுமா?

10. பத்திரிகைகளில் வந்த உங்கள் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்ட செய்திகளை தவறானவை என்று பத்திரிகைகள் மூலம் அறிவிக்க முடியுமா?!

ஐயா நெடுக்ஸ் இப்போதுதான் இந்த தலைப்பைப் பார்த்தேன், நானும் சர்மா காலத்தில் தான் இடம்பெயர்ந்து வந்து இணைந்தேன், நீர் சொல்வது போல எல்லோரிடமும் காசு வாங்குவதில்லை, விரும்பியவர்களிடம்தான் அதுவும் பாடசாலை அபிவிருத்தி சபை சார்பாக பற்றுச்சீட்டு கூட வழங்கப் பட்டு வருட இறுதியில் வரவு செலவு கூட பணம் கொடுத்த்வருக்கு வழங்கப்படும், தேசிய பாட சாலையென்றுதான் பெயர் ஆனால் அரசாங்கம் பாடசாலைக்கென்று நான் படித்த 8வருடத்தில் எதுவும் பண்ணியதாக தெரியாது. நான் படித்த 8வருடத்தில் சுமார் 3கோடிக்கும் மேற்பட்ட பணிகள் நடத்தப் பட்டது அதில் 90% அதிகமான நிதி எப்படி வந்தது.........? நீரா கொடுத்தீர்........? பாடசாலை அதிபரின் முயற்ச்சியால்தான், இது பற்றி அறிய வேணுமானல் கல்லூரி நூலகத்தில் ஆதாரங்கள் இருக்கும் போய் பாரும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.