Jump to content

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி: கருத்து பகிர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம். இனிச் சொல்லுவியள். ஒரு பள்ளி உள்வாங்குவது அவர்களைச் சார்ந்தது. ஆனால் அதைப் பற்றி விமர்ச்சித்து, யாழ்பாணத்தான் தான் எல்லாமே என்று தொடங்கத்தில் பிரதேசவாத சிந்தனை கொண்டு வந்து கதைத்தது நீர். நல்லாப் பூச்சுத்துறியள் பாருங்கோ!

இலங்கையரசின் கீழ் செயற்படுகின்ற பாடசாலைகள் எல்லாமே சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் தான் செயற்பட முடியும். இன்று முல்லைத்தீவு அரசாங்கா அதிபர்,( திருமதி இமல்டா சுகுமார்) புலிகளின் தேசியக்கொடிக்கு தமிழீழத்தில் சல்யுட் அடித்தாலும் அரசாங்க உத்யோகத்தில் தான் இருக்கின்றார். அரசுக்குத் தெரியும். தமிழீழத்தில் ஒன்றும் புடுங்க முடியாது என்று.

அரசாங்க உத்தியோகத்தார்கள் எங்கிருந்தாலும், அரசாங்கப் பணத்தில் தான் இப்போதும் ஜுவிக்கின்றனர். அப்படியிருக்க கொழும்பில் இருந்து கொண்டு, இலங்கையரசுக்கு எதிராகச் செயற்படு என்று சொல்வது, படு முட்டாள்தனமானது. ஏற்கனவே சிங்கள ஊடகங்கள் புலிச்சாயம் பூச அலையும்போது இவரும் அதற்கு எடுத்துக் கொடுக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றார்.

முன்னர், எழுதிய கருத்துக்களில் உம்மால் எவ்வித ஆதாரங்களையும் வைக்கவில்லையே! பிறகு எப்படி நியாயம் பற்றிப் பேசுவது. முந்திச் சொல்வது எல்லாம் குதர்க்க கதைகளாகத் தானே உதிர்த்தீர்! அதில் நாங்கள் சடைகின்றோம் என்று வேறு பினாத்தல்!

மக்களின் மனவோட்டங்கள் என்று உம் கருத்தை மட்டும் எடுத்து, நம்புவதற்கு ஒன்றும் முட்டாள்கள் அல்ல. மக்களின் குரல் என்று ஒருத்தன் ஓலமிடுவதை எல்லாம் கணக்கில் எடுக்கத் தேவையும் இல்லை. மேலும் நீர் சொன்ன எக்ககருத்துக்களுமே, பாடசாலை வளர்ச்சிக்கு அல்ல, என்பதும் அது வஞ்சத்தால் வந்த கருத்துக்கள் என்பது புரிந்து கொள்ள முடியும்.

றோயல் கல்லூரி ஒரு போக்கைக் கொண்டது. இந்துக் கல்லூரி ஒரு வழியைக் கொண்டது. இணையத்தில் தகவல் தருவது தான் திருத்தம் என்ற முட்டாள்தனமான சிந்தனைகள் இரண்டுக்கும் இடையில் இல்லை. றோயல்கல்லூரி என்பது மேட்டுக்குடிகளின் பாடசாலை. அங்கே சிறிய பார்ட்டி நடந்தாலே, லட்சக்கணக்கில் செலவளிப்பார்கள். ஆனால் இந்துக் கல்லூரி பள்ளிக்கு இடவசதியற்ற, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை உள்வாங்குகின்ற பாடசாலை.

பாடசாலையின் பல அபிவிருத்தித் திட்டங்கள் பெற்றோர், ஆதரவாளர் நிதித் திட்டங்களோடு தான் நட்நதன். பொது மைதானம் முழுக்க முழுக்க, அரசாங்கப் பணம் இன்றித் தான் நடந்தன. அதைச் சொல்லி இங்கே பெருமையடிக்க வேண்டிய தேவையும் இல்லை.

உம் வீட்டு மதிலில் இந்துக் கல்லூரி மாணவர்கள் எழுதட்டும் என்று பார்த்துக் கொண்டு நிற்கின்றது உம் பிழை! அந்த ஏமாளித்தனத்துக்கு நாம் பதில் சொல்ல முடியாது!

இராமநாதன் பள்ளிக்குள் பந்து அடித்துப் போகும் அளவு தூரம் இல்லை. இரண்டுக்கும் இடையே பெரும்வீதி வேறு உண்டு. அதை விட, இரு பக்கங்களும் மாடிக்கட்டங்கள் உள்ளது. எனவே, இராமனாதன் பள்ளி பக்கத்தில் இருக்கின்றது என்று யாரோ சொன்னதைக் கேட்டு, லண்டனில் இருந்து வரைபடம் போடாதீர்!

Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது பள்ளி மீது அக்கறையுள்ளவனாகக் காட்டிக் கொள்ள முனையும் நீர், தொடக்கத்தில், வடக்கு மாணவர்கள் முக்கியமாக யாழ்பாணத்தானால் தான் தரம் உயர்வு என்று பிரதேசவாதத்தோடு எழுத முனைந்ததையும், பின் யாழ்களத்தின் மீது 10 கேள்விகள் என்ற பாணியில் இந்துக் கல்லூரி மீது ஆதாரமற்ற காழ்ப்புணர்ச்சி வசனங்கள் எழுதியதை மறக்கக் கூடியதல்ல.

ஆனால் கடைசியில் எந்த வித ஆதாரங்களையும் திரட்ட முடியாமல், சந்தியில் நின்று ஊர்வம்பு கதைப்பது போல, இந்துக் கல்லூரி மீது அசிங்கம் செய்ய முடியும் என்று நினைத்தால் அது உம் மடமையாகும். 4 பக்கங்கள் தாண்டினால், தொடக்கத்தை மறந்துவிடுவோம் என்று நினைப்பதை நிறுத்துவது சாலச் சிறந்தது.

கடைசியில் தலைப்பில் இருந்து கதைக்க முடியாமல் போகும் என்று தெரிந்ததும், முதலே சாட்டுக்களோடு வெளியேறும் உம் புத்தியை மெச்சாமலும் இருக்க முடியவில்லை. வாழ்த்துக்கள்!

அருமையான பதில் தூயவன். (இதுக்கு மேல நான் ஏதாவது சொல்லப்போனால் என் கருத்துக் காணாமல் போய்விடும் :lol::lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுதந்திர தினக் கொண்டாட்டம் அது இதென்று சிறீலங்கா அரச நிகழ்வுகளுக்கு தமிழ் மாணவர்களை அனுப்பி பிழைப்பு நடத்தும் ஒரு பள்ளிக்கூடம் நீங்கள் பிரதேசவாதம் பற்றி என்ன பயங்கரவாதம் பற்றியும் பேசுவீர்கள்.

ஏன்ராப்பாமாரே! என்ன எழுதுவதென்ற ஒரு விவஸ்தை இல்லையா??? உந்தப் பள்ளிக்கூடம் யாழ்ப்பாணத்தில்தானே இருக்கு! அவங்கள் கூப்பிட மறுக்க!!

உந்த யாழ்ப்பாணப் பள்ளிக்கூடங்களான் தேசியப் பற்று எல்லாம் தெரிந்த ஒன்றுதான்!! ஒரு அதிபர் கிறிக்கெட் விட்டு மேலை! சிலர் ஓட்டிகளோடு ஒட்டி மேலை! சிலருக்கு ... வேண்டாம்! ஒரு பாடசாலை என்றால்! அதில் நல்லது, கெட்டது ஆயிரம் இருக்கும்! அது எல்லாப் பாடசாலைகளிலும்தான்!!

ஒரு பாடசாலையின் காலத்து நினைவுகளைப் பகிருவது என்பது, குப்பை கொட்டவல்ல!

தேவை அற்ற விவாதங்களைத் தவிர்ப்போம்! பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கியிருங்கோ!!! எனது முன்னைய கல்லூரியும் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமானதே! நான் படிக்கும் காலகட்டத்தில், சில உயர்தர வகுப்பு மாணவர்கள், வேறு பாடசாலையில் களவில் ஈடுபட்டு பிடிபட்டார்கள். இன்னும் சிலர் ஓர் அப்பாவி சக மாணவனை பாலியல் சித்திரவதை செய்ததனால், அம்மாணவன் தற்கொலை செய்தது, அன்று யாழையே உலுக்கிய செய்தி! ... இப்படிப் பல பல!! அதற்காக அப்பாடசாலை பிழையானதா?

தொழிலற்ற புண்ணாக்குக் கூட்டங்கள்! எதுக்கு விவாதம் என்று ஒரு விவஸ்தை இல்லையா???????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயதேவன்..யாழில் நிகழ்ந்த நிகழ்வுகள் உடனடியாக பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு அவற்றிற்கு தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளன. யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பகிடி வதை சித்திரவதைகள் கூட அப்படி பொதுமக்களால் வெளிக்கொண்ரப்பட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

குறித்த பாடசாலை மாணவர்கள் பொதுமக்களை துன்புறுத்தும் வகையிலான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுதலும் தவிர்த்தலும் குப்பை கொட்டுவது என்று நீங்கள் கருதினால் மக்கள் குப்பைகளோடுதான் காலங்கடத்த வேண்டிய சூழல் வரும்.

புதிய மாணவர்களை ராக்கிங் செய்வது கூட இந்தப் பாடசாலையின் நடந்தது. அந்தளவுக்கு மோசமான நிலை இருந்தது. இன்று அந்த நிலை வெகுவாக குறைந்து குழுச் செயற்பாடுகளே ஆபத்தான அளவில் நடக்கின்றது. இதுவே யாழ்ப்பாணம் என்றால் இங்கு எழுதத் தேவையில்லை.பரிகாரம் கண்டிருப்பார்கள் அங்கையே.

அரசின் நிகழ்வுகளுக்குச் செல்வதை ஏன் இவர்கள் பகிஸ்கரித்திருக்க முடியாது. வடக்குக்கிழக்குப் பாடசாலைகள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதும் பகிஸ்கரிப்புக்களைச் செய்த போது இவர்கள் ஏன் செய்ய முடியாது. அரச விசுவாசத்தைக் காட்டி அரச உதவி பெற்றவர்கள் என்பதை மறுக்கவும் முடியாது. தமிழ் பாடசாலைகளுள் அதிகம் அரச உதவி பெற்ற பாடசாலை இது என்றாலும் தவறில்லை.

இன்று வடக்குக்கிழக்கு மாணவர்களின் வருகையையும் அதன் பின்னான வளர்ச்சியையும் ஒத்துக்கொள்ள மறுக்கும் இவர்களா தமிழ் விசுவாசுகள்???! யாழ் பிரபல்ய ஆசிரியர்கள் இடம்பெயர்ந்து யாழ் மாவட்ட மாணவர்கள் கல்விக்காக திண்டாடிய வேளைகளை எண்ணிப்பார்த்திருந்தால் பிரதேசவாதம் கதைப்பதாக கதையளந்து தங்கள் தவறுகளை மறைக்க முனைவரா?

எதுவாகவும் இருக்கட்டும் கொழும்பில் தமிழ் மக்களின் கல்வியில் இன்று முக்கிய இடம்பெற்றுவிட்ட இப்பாடசாலை இன்னும் சிறப்புற மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் அவா. அந்த வகையில் நிறைகளை மட்டும் நோக்காமல் குறைகளை நோக்கியும் அவற்றைத் தவிர்க்கவும் முனைவதே ஒரு சிறந்த கல்லூரிக்கு அழகு. அந்தப் பக்குவம் இங்கு யாழில் உள்ள இக்கல்லூரி மாணவர்கள் சிலரிடம் இல்லை என்பதற்காக நாம் அக்கல்லூரி மாணவர்கள் எல்லோரும் அப்படி என்று முத்திரை குத்தினால் அது எம்மையும் தான் தாக்கும். :idea:

Link to comment
Share on other sites

ஜயா நெடுக்கால போவான் கனவில் கண்டதெல்லாம் எழுதாதயும் நான் பாடசாலையை சார்ந்தவன் என்னை பற்றி துயவன் அல்லது அருவியிடம் கேளும் எனக்கு அங்கு நடக்கும் ஒவ்வொரு விடயங்களும் தெரியவரும் நீர் இப்போது சொல்வது போல ராகிங் நடந்ததாக நான் அறியவில்லை நான் 8 வருடங்கள் இக்கல்லூரியில்தான் படித்தேன் 2000- 2003 வரை மாணவர்தலைவர் ஒன்றியத்திலும் உருப்பினராக இருந்தேன் எமக்குதெரியாத ஒன்ரு உமக்கு தெரிந்திருக்க வாய்பே இல்லை என நான் உறுதிபடக்கூறுகின்றேன்

நைனா அப்போது சங்கரலிங்கம் அவர்கள் அதிபராக இருந்திருக்கவேண்டும் என நினைக்கின்றேன் அப்போ வெலுப்பிள்ளை அசிரியரிடம் படித்திருபீர்கள் என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

அரசின் நிகழ்வுகளுக்குச் செல்வதை ஏன் இவர்கள் பகிஸ்கரித்திருக்க முடியாது. வடக்குக்கிழக்குப் பாடசாலைகள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதும் பகிஸ்கரிப்புக்களைச் செய்த போது இவர்கள் ஏன் செய்ய முடியாது. அரச விசுவாசத்தைக் காட்டி அரச உதவி பெற்றவர்கள் என்பதை மறுக்கவும் முடியாது. தமிழ் பாடசாலைகளுள் அதிகம் அரச உதவி பெற்ற பாடசாலை இது என்றாலும் தவறில்லை.

ஒரு பாடசாலை தனித்து பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தால் யாழில் இன்று அப்பாடசாலை இயங்கமுடியாத சூழ்நிலை நிலவியிருக்கும். கொழும்பில் பகிஸ்பரிப்பில் ஈடுபட முடியாத சூழல் காணப்படுவதனைப் புரிந்துகொள்ளவேண்டும். கொழும்பிலே இருந்து அரசிற்கு எதிராக ஏதாவது தனித்துச் செய்யும் போது அவ்விடத்தில் இருந்து மறைந்துபோகக்கூடிய சூழலே அங்கு காணப்படுகிறது. அரச விசுவாசத்தினைக் காட்டி அரச உதவிகளைப் பெறவில்லை. சூழ்நிலையை அனுசரித்துப் போகவேண்டிய சூழல் காணப்படுகிறது. அவ்வாறு சூழ்நிலையை அனுசரித்துப் போகாதிருந்தால் உலகில் மனிதப் பரம்பலே அமைந்திருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நெடுங்கால போவன், எதிர்வரும் காலங்களில், கொழும்பு பொலிசில் மாட்டுப்பட்டாலோ, அல்லது இராணுவத்திடம் மாட்டுப்பட்டாலோ, தான் தமிழ்தேசிய ஆதரவாளன் என்றும், புலிகளுக்கு ஆதரவு செய்வதாகவும் பகிரங்கமாக ஒத்துக் கொள்வார் என்று மேலே சொன்ன வார்த்தைகளால் உறுதிப்படுகின்றார் என நம்புகின்றோம்.

அவ்வாறு அவர் செய்யாத பட்சத்தில், அவர் தன்னைத் துரோகி என்று ஒத்துக் கொள்வதற்கு ஈடானது. இதனால் பொலிசுக்கும் அதிக கஸ்டமும் இல்லை. இப்படியே nவுறு யாரும் செய்ய முனைந்தாலும் செய்து உங்களின் தேசியப் பற்றைக் காட்டிக் கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

அரச உதவி அரச உஅதவி என்கிண்ரீரே பாடசாலைக்கு அரசௌதவி கிடைத்ததற்கானா ஆதாரங்கலை இங்கே இணையும் பாப்போம் உமது ஸ்ரைலிலே கேக்கிறேன் *********

******* நீக்கம் யாழ்பாடி.

வேறு பகுதிகளில் எழுதப்படும் விடயங்களை அப்பகுதியுடன் நிறுதுவது நல்லது.. தேவையற்று மற்றைய தலைப்புக்களில் எழுதப்படும் விடயங்களை தொடர்புபடுத்தி எழுதுவதை தவிருங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

ஏன்ராப்பாமாரே! என்ன எழுதுவதென்ற ஒரு விவஸ்தை இல்லையா??? உந்தப் பள்ளிக்கூடம் யாழ்ப்பாணத்தில்தானே இருக்கு! அவங்கள் கூப்பிட மறுக்க!!

உந்த யாழ்ப்பாணப் பள்ளிக்கூடங்களான் தேசியப் பற்று எல்லாம் தெரிந்த ஒன்றுதான்!! ஒரு அதிபர் கிறிக்கெட் விட்டு மேலை! சிலர் ஓட்டிகளோடு ஒட்டி மேலை! சிலருக்கு ... வேண்டாம்! ஒரு பாடசாலை என்றால்! அதில் நல்லது, கெட்டது ஆயிரம் இருக்கும்! அது எல்லாப் பாடசாலைகளிலும்தான்!!

ஒரு பாடசாலையின் காலத்து நினைவுகளைப் பகிருவது என்பது, குப்பை கொட்டவல்ல!

தேவை அற்ற விவாதங்களைத் தவிர்ப்போம்! பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கியிருங்கோ!!! எனது முன்னைய கல்லூரியும் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமானதே! நான் படிக்கும் காலகட்டத்தில், சில உயர்தர வகுப்பு மாணவர்கள், வேறு பாடசாலையில் களவில் ஈடுபட்டு பிடிபட்டார்கள். இன்னும் சிலர் ஓர் அப்பாவி சக மாணவனை பாலியல் சித்திரவதை செய்ததனால், அம்மாணவன் தற்கொலை செய்தது, அன்று யாழையே உலுக்கிய செய்தி! ... இப்படிப் பல பல!! அதற்காக அப்பாடசாலை பிழையானதா?

தொழிலற்ற புண்ணாக்குக் கூட்டங்கள்! எதுக்கு விவாதம் என்று ஒரு விவஸ்தை இல்லையா???????????

ஜெயதேவன் சார்...அந்த அப்பாவி ஸடூடண்ட் அவங்களை பொண்ணு மாதிரியே நினைச்சுக்கு வாங்களாம் ரொம்ப பசங்களுடன் காதல்(ஓரின) வைச்சிருந்தங்காளாம்... காதல் போட்டி, பொறாமை., தோல்விங்க.. எக்ஸ்ற்ரா,எக்ஸ்ற்ரா.....

அது தான் உயிரை மாய்சுட்டாங்க.... எனக்கென்ன சார் தெரியும்... தினத்தந்தியிலை.... பார்த்து கிட்டதா பேசி கிட்டாங்க

Link to comment
Share on other sites

  • 4 months later...

1. சர்மா ஐயா அதிபராக இருந்த போது அகதிகளாக வந்த மாணவர்களிடம் கூட ஈவு இரக்கமில்லாமல் 10,000 ரூவைக் கறந்ததும் ஒரு கட்டிடம் கூட புதிதாகக் கட்டாததும் அதன் பின்னர் அரசின் பண உதவி பெற்று முத்துக்குமாரர் கட்டியதுகளும் பம்பலப்பிட்டிய வாழ் மக்கள் அறிவார்கள்.

2. சரஸ்வதி மண்டபத்துக்கு முன்னால் உள்ள வீதிகளின் மதிலோரங்கள் எங்கும் கறுப்பு எண்ணைச் சோக் கட்டிகளால் எழுதித் தள்ளியதை நாங்களே அழித்திருக்கும் போது நீங்கள் பொய் என்றால் எனிப் புகைப்படத்துடன் தான் தகவல் போட வேண்டும். அதுவரை அது பொய்யாகவே இருக்கட்டும்.

3. சோடாப் போத்தல்கள் சகிதம் கல்கிசை தோமியன் சென்று சிங்கள மாணவர்களோடு மோதியதும் காயங்கள் ஏற்படுத்தியதுவும் கொழும்பில் பரப்பரப்பாக செய்திகளில் பேசப்பட்டதும் பத்திரிகைகளில் வந்து இந்துவின் பெயரை நாறடித்தவும் உண்மை இல்லை என்றாகிடுமா?

பழைய மாணவர்கள் புதிய மாணவர்கள் என்று கொழும்பில் காங் நடத்துவதும் வீதிகளில் நின்று சண்டித்தனம் செய்வதும் தெகிவளை முதல் கொல்பிட்டி வரை தெரிந்த விடயங்கள்.

4. 90, 95 இடம்பெயர்வுக்கு முன்னர் பொதுத்தராதரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் மோசமாக இருந்தமையும் வடக்கு கிழக்கு மாணவர்களின் வருகையின் பின்னர் பெறுபேறுகளின் உயர்வும் இராமனாதனுக்குப் போட்டியாக இருக்க முடிந்ததுவும் சமகால நிகழ்வுகளை மறைக்கும் செயல்.

5. கொழும்பு வாழ் தமிழர்கள் றோயல் தோமஸ் ஆனந்தா என்று தேடித்தேடி தங்கள் பிள்ளைகளை சேர்த்தது போய் பம்பலப்பட்டி என்று தேடி வந்ததும் வடக்கு கிழக்கு மாணவர்களின் வருகையின் பின் நிகழ்ந்த பரீட்சைப் பெறுபேறுகளின் உயர்ச்சியின் பிந்தான்.

6. பம்பலப்பிட்டிய இந்துவில் படித்த எல்லோரும் ரவுடிசுமோ அல்லது காங்கோ நடத்தவில்லை. ஆனால் தமிழ் ரவுடிகளை காங்குகளை உருவாக்கிய பெருமையும் பம்பலப்பட்டிய இந்துக் கல்லூரியைச் சாரும்.

7. நீங்கள் குறிப்பிட்டது போல 1991 இல்தான் உங்கள் பாடசாலைக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து கிடைத்தது என்பதற்கான ஆதாரத்தை தரமுடியுமா?

8. இன்று பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரி குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒழுக்கத்தில் திகழ்வதற்கு யாழில் இருந்து இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் பலரை உள்வாங்கி இருப்பதுவும் காரணம். அதை மறுக்க முடியுமா?

9. உங்கள் பாடசாலை மாணவர்கள் மீது பம்பலப்பிட்டிய கதிரேசன் கோயில் பக்கம் உள்ள அயலவர்கள் அனுப்பி வைத்த முறைப்பாடுகள் குறித்து உங்கள் அதிபரிடம் விசாரித்து அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்று அவரால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை இங்கு தரமுடியுமா?

10. பத்திரிகைகளில் வந்த உங்கள் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்ட செய்திகளை தவறானவை என்று பத்திரிகைகள் மூலம் அறிவிக்க முடியுமா?!

ஐயா நெடுக்ஸ் இப்போதுதான் இந்த தலைப்பைப் பார்த்தேன், நானும் சர்மா காலத்தில் தான் இடம்பெயர்ந்து வந்து இணைந்தேன், நீர் சொல்வது போல எல்லோரிடமும் காசு வாங்குவதில்லை, விரும்பியவர்களிடம்தான் அதுவும் பாடசாலை அபிவிருத்தி சபை சார்பாக பற்றுச்சீட்டு கூட வழங்கப் பட்டு வருட இறுதியில் வரவு செலவு கூட பணம் கொடுத்த்வருக்கு வழங்கப்படும், தேசிய பாட சாலையென்றுதான் பெயர் ஆனால் அரசாங்கம் பாடசாலைக்கென்று நான் படித்த 8வருடத்தில் எதுவும் பண்ணியதாக தெரியாது. நான் படித்த 8வருடத்தில் சுமார் 3கோடிக்கும் மேற்பட்ட பணிகள் நடத்தப் பட்டது அதில் 90% அதிகமான நிதி எப்படி வந்தது.........? நீரா கொடுத்தீர்........? பாடசாலை அதிபரின் முயற்ச்சியால்தான், இது பற்றி அறிய வேணுமானல் கல்லூரி நூலகத்தில் ஆதாரங்கள் இருக்கும் போய் பாரும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.