Jump to content

தமிழ் புத்தாண்டு எது???


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் எதையும் காரண காரியத்தோடு செய்தவர்கள். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அப்படியானால் அவர்களின் புத்தாண்டில் ஏன் குழப்பம்? “தை” யா “சித்திரையா” – தெளிவாக நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது. தமிழக அரசும், கட்சிகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தமிழ் அறிஞர்கள் எவரும் இதுவரை எது தமிழ் புத்தாண்டு என்பதை துல்லியமாக அறிவிக்க அஞ்சுகிறார்களா? அல்லது அவர்களுக்கும் தெரியாதா?

 

ஆண்டிற்கு 12 முழுநிலவும் (பவுர்ணமி) 12 நிலவில்லா (அமாவாசை) நாட்களும் உண்டு. குறைந்தாலும் கூடினாலும் தவறுதான்.

 

தினமும் சூரியன் கிழக்கே தோன்றி மேற்கே மறைகிறான். அத்தோடு சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கும் தெற்கும் சென்று வருகிறான். வடக்கே சென்று வடக்கிலிருந்து தெற்கே திரும்புவது – வடசெலவு என அழைக்கப்படுகிறது. அதேபோல தெற்கே சென்று “நின்று” வடக்கு திரும்புவது – தென்செலவு என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு வருடம் ஒருமுறை நடைபெறுகிறது. சூரியனின் இந்த தென்செலவைப் பொறுத்துதான் பூமியின் நிகழ்வுகள் அமைகின்றன. அதாவது மழை, புயல், வெள்ளம், கடற்கோள்கள் போன்றவைகளை கட்டியம் கூறி முன்னறிவிப்பவை இந்த தென்செலவு நாட்களே. இன்றைய நவீன அறிவியல் இதனை solstice (December solstice, June Solstice) என வகைப்படுத்துகிறது. அநேகமாக டிசம்பர் 21 அல்லது 22ம் தேதி இது நடைபெறலாம் என அறிவியல் கூறுகிறது. இது இந்த தேதியில்தான் நடைபெறுகிறதா? யார் இதனை பதிவு செய்கிறார்கள் என்பதனை தெரிந்தவர்கள் விளக்கமாக கூறினால் நலம்.

 

 

செந்தமிழ் இலக்கியங்கள் கூறுகிறபடி தென்செலவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் அனைத்து நல்லதையும், கெட்டதையும் தீர்மானிப்பவை இந்த தென்செலவுதான். அதாவது சூரியன் எல்லா ஆண்டிலும் இந்த டிசம்பர் 21 அல்லது 22ல் தென்செலவை முடிப்பதில்லை. சில நாட்கள் நின்று பின் திரும்புகிறது. இதனை தெளிவாக எவரும் கணக்கிடமுடியும். ஒரு சிறு குச்சியை ஊன்றி நிழல்களை கவனித்தால் போதும். சிறுபிள்ளைகள் கூட இதனைத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். அதே சமயம், அதாவது தென்செலவு நேரத்தில் அமாவாசையும் சேர்ந்து வருவதால் நிலவின் அசைவுகளை வைத்து கணிப்பது கடினம். இதனால் அமாவாசை முடிந்து நிலவு தோன்றும் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.

 

மரத்தச்சன் ஒரு மூலையை ‘தை’ப்பது போல இந்த தென்செலவுதான் வருட துவக்கமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டது. அதாவது சூரியன் தென் திசையில் தைக்கப்படுவதனால்தான், அம்மாதம் தை என்னும் பெயர் பெற்றது. அன்றுதான் பொங்கல் கொண்டாடப்படும் அரசு அறிவுரைப்படி. இன்று தமிழர்களுக்கான அரசு இருந்தால் அது முறைப்படி கொண்டாடப்பட்டிருக்கும். கடைசியாக அப்படி அறிவிப்போடு கொண்டாடிய தமிழ் அரசன் ராஜ ராஜ சோழன். அப்படியானால் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேல் தமிழர்கள் சுயம் இழந்து காணப்படுகிறார்கள். யாரோ சொல்வதை, பஞ்சாங்கம் பார்த்து சொல்வதை தமிழர்கள் கேண்டுக்கொண்டாட வேண்டிய இழிநிலை தமிழனுக்கு இன்று. ராஜேந்திர சோழன் காலம் தொட்டு இன்றுவரை இதுதான் நடைபெறுகிறது. சூரியனை, நிலவைப் பார்த்து கொண்டாட வேண்டிய தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கத்திற்குள் திணறி நிற்கும் அவலம்தான் இன்று. மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா அவர்கள் அறிவித்த சித்திரையும் அல்ல, மாண்புமிகு முன்னால் முதல்வர் மு. கருணாநிதி அறிவித்த தையும் அல்ல தமிழ் புத்தாண்டு.

இன்று தமிழர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? மார்கழி அமாவாசை முடிந்து முதல் நிலவு தோன்றும் நாளுக்கு அடுத்த நாளே தமிழ் புத்தாண்டு. தமிழர்கள் கொண்டாடவேண்டிய புத்தாண்டு இதுவே.

 

இப்போதே சிவப்பு அரிசியை ஊறப் போட்டு புளித்த அந்த அரிசியைக் கொண்டு முதல் நிலவுக்கு மறுநாள் பொங்கல் கொண்டாடுவோம். அன்று தெற்கு முகமாய் நின்று நம் முன்னோரை நினைவு கூற வேண்டிய நாள். இதைத்தான் கிறித்தவர்கள் ‘சகல பரிசுத்தவான் களின் திருநாள்’ (All Saints Day) என கொண்டாடுகிறார்கள். நாம் செய்வது என்ன என்பதை அறிந்து செய்வோம். அறியாமையை போக்குவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதியுள்ள நாளிலேயே நான் இம்முறை கொண்டாடுகிறேன். நன்றி கட்டுரைக்கு

Link to comment
Share on other sites

பூமத்திய ரேகையின் வடக்கில் வாழ்பவர்களுக்கு சூரியன் தெற்கில் செலவு பண்ணும் நாட்களில் :D டிசம்பர் மூன்றாம் வாரத்தில் ஒருநாளில் மிகக் குறைந்த அளவு சூரிய ஒளி கிடைக்கிறது. (இது குளிர்காலத் தொடக்கத்தின் முதல் நாள்) இதைத் தொடர்ந்து வரும் நாட்களில் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவு அதிகரித்துச் செல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டு
சிங்கள தமிழ்ப் புத்தாண்டு
 இப்படிப் பலவகையான  புத்தாண்டுகளைத் தமிழனைத் தவிர யாரும் கொண்டாட மாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனின் எழுச்சிக்கும் தமிழ் புத்தாண்டு பொங்கலுக்கும் நிச்சயமான தொடர்பு உண்டு. தெரிந்தவர்கள் விளக்கமாக கூறவும்.

 

உலகிலே நம் இனம் தமிழினம். ஆங்கிலப் புத்தாண்டு, சிங்கள புத்தாண்டு பற்றிய கவலை நமக்கு தேவையில்லை. 

 

உலகிலே தமிழர், தமிழல்லாதவர் என்னும் நிலைப்பாட்டை தமிழர்கள் எடுத்தால் மட்டுமே, தமிழனுக்கு விடிவு உண்டு. இல்லையேல் இல்லை. 

 

பாண்டியன் அழகாக கூறுகிறான் 'தமிழ் பொது எனப் பொறான்' - புரியும் தமிழர்களுக்கு புரிந்தால் சரி.

Link to comment
Share on other sites

மாதத்தில் முதலாவது முழு நிலவு வரும் நாளை வருடத்தின் முதல் நாளாகக் கணிக்க முடியாது. நிலவின் சுழற்சிக் காலம் 29.5 நாட்கள். வருடத்தில் 365 நாட்கள் வராது. முழு நிலவு  மார்கழி மாதத்தில்  15ஆம் திகதியும் வரலாம் தை 15 ஆம் திகதியும் வரலாம்.

Link to comment
Share on other sites

இன்று தமிழர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? மார்கழி அமாவாசை முடிந்து முதல் நிலவு தோன்றும் நாளுக்கு அடுத்த நாளே தமிழ் புத்தாண்டு. தமிழர்கள் கொண்டாடவேண்டிய புத்தாண்டு இதுவே.

 

இப்போதே சிவப்பு அரிசியை ஊறப் போட்டு புளித்த அந்த அரிசியைக் கொண்டு முதல் நிலவுக்கு மறுநாள் பொங்கல் கொண்டாடுவோம். அன்று தெற்கு முகமாய் நின்று நம் முன்னோரை நினைவு கூற வேண்டிய நாள். இதைத்தான் கிறித்தவர்கள் ‘சகல பரிசுத்தவான் களின் திருநாள்’ (All Saints Day) என கொண்டாடுகிறார்கள். நாம் செய்வது என்ன என்பதை அறிந்து செய்வோம். அறியாமையை போக்குவோம்.

 

எதை சகல பரிசுத்தவான்களின் திருநாளாக கொண்டாடுவார்கள்???? :rolleyes:  All Saints Day நினைவுகூறப்படுவது கார்த்திகை 1ம் நாள். அதற்கும் புத்தாண்டுக்கும் என்ன தொடர்பு என்று விளங்கவில்லை :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் எழுச்சிக்கும் தமிழ் புத்தாண்டு பொங்கலுக்கும் நிச்சயமான தொடர்பு உண்டு. தெரிந்தவர்கள் விளக்கமாக கூறவும்.

 

உலகிலே நம் இனம் தமிழினம். ஆங்கிலப் புத்தாண்டு, சிங்கள புத்தாண்டு பற்றிய கவலை நமக்கு தேவையில்லை. 

 

உலகிலே தமிழர், தமிழல்லாதவர் என்னும் நிலைப்பாட்டை தமிழர்கள் எடுத்தால் மட்டுமே, தமிழனுக்கு விடிவு உண்டு. இல்லையேல் இல்லை. 

 

பாண்டியன் அழகாக கூறுகிறான் 'தமிழ் பொது எனப் பொறான்' - புரியும் தமிழர்களுக்கு புரிந்தால் சரி.

 

ஒன்றை எழுதிவிட்டு புரியும் தமிழனுக்குப் புரிந்தால் சரி என்று எப்படிக் கூறுவீர்கள் ???அனைவருக்கும் புரியும்படி கூறவேண்டும்.

 

Link to comment
Share on other sites

தமிழ் வருடம் சித்திரைப்புத்தாண்டுதான்,தை மாதம் அறுவடைகாலம் அது சூரியனுக்கு நன்றி சொல்லும்  நிகழ்வு,அது தான் தைப்பொங்கல்.மற்றும் மாடுகளின் மூலம் உழவு மற்றும் நீர் இறைத்தல் செய்வதால் பட்டிப்பொங்கல் செய்வார்கள்.இதுவும் ஒருவகை  தாங்க்ஸ் கிவ்விங்தான்

Link to comment
Share on other sites

உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.
உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்!
உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்!
உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்!
உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்!
அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்-கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்!. அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.
ஒரு நாள் என்பது என்ன?
சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.
ஒருமாதம் என்பது என்ன?
ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்-படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.
அதேபோல் ஆண்டு என்பது என்ன?
சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் (உத்ராயணம் தொடங்கும்) நாள் முதல் மீண்டும் அதே நிலை (உத்ராயணம் மீண்டும்) தொடங்கும் வரையுள்ள

கால அளவு ஓர் ஆண்டு.
அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.
சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.
சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும் வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.
உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள்.
சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும் பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் தென் கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.
சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர்.
இவ்வாறு சூரியனின் இருப்பைக் கொண்டுதான் நாளும் கணக்கிடப்பட்டது. ஆண்டும் கணக்கிடப்பட்டது. நிலவைக் கொண்டு மாதம் கணக்கிடப்பட்டது. ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.
தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.ஆக இயற்கை நிகழ்வுகளின் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் காலக்-கணக்கீடு என்பது உறுதியாவதோடு தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமா? எனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாதத்தில் முதலாவது முழு நிலவு வரும் நாளை வருடத்தின் முதல் நாளாகக் கணிக்க முடியாது. நிலவின் சுழற்சிக் காலம் 29.5 நாட்கள். வருடத்தில் 365 நாட்கள் வராது. முழு நிலவு  மார்கழி மாதத்தில்  15ஆம் திகதியும் வரலாம் தை 15 ஆம் திகதியும் வரலாம்.

 

"மார்கழி அமாவாசை முடிந்து முதல் நிலவு தோன்றும் நாளுக்கு அடுத்த நாளே தமிழ் புத்தாண்டு. தமிழர்கள் கொண்டாடவேண்டிய புத்தாண்டு இதுவே."

 

ஐயா அமாவாசை முடிந்து நிலவு தோன்றும் முதல் நாள் அதாவது அது முழு நிலவு நாளல்ல. இன்னும் தெளிவாகக் கூறினால் அமாவாசை முடிந்து நிலவு தோன்றும் முதல்நாள் அதாவது சரியாக அமாவாசை முடிந்து 3ஆம் நாள் தோன்றலாம். அதுவும் மாலை 5 மணி முதல் 7மணி வரை தான் அந்த நிலவு இருக்கும். பின் மறைந்துவிட வாய்ப்பு உண்டு.

 

பழந்தமிழ் இலக்கியங்கள் ஆண்டிற்கு 360 நாட்கள் உண்டு எனக் கூறுகிறது. சூரியன் தெற்கே தைக்கப்பட்டதால்தான் நமது முதல் மாதம் 'தை' ஆகியது. இவை போக முதல் நிலவு வெளிறியிருந்தால், பளிச்சென்றிருந்தால், மாசுபட்டிருந்தால், தேற்கே சாய்ந்திருந்தால், தேற்கே ஏறியிருந்தால்..... என பல விளக்கங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்கால நிகழ்வுபடி இவை பொருந்துகிறதா எனவும் ஆய்வு தேவை. கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் தமிழன் இந்த கண்ணோட்டத்தையே மறந்ததுதான் அத்தனை தவறுகளுக்கும் காரணமாகியது. பஞ்சாங்கத்தை நம்பும் தமிழன் சூரியனையும், சந்திரனையும் பார்க்க மறந்தது தான் நம் அறிவை இழந்ததற்கு காரணம். நம் இளந்தலைமுறைக்கு அறிவை ஊட்டலாமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றை எழுதிவிட்டு புரியும் தமிழனுக்குப் புரிந்தால் சரி என்று எப்படிக் கூறுவீர்கள் ???அனைவருக்கும் புரியும்படி கூறவேண்டும்.

சரியான கூற்று.

 

"பாண்டியன் அழகாக கூறுகிறான் 'தமிழ் பொது எனப் பொறான்' - புரியும் தமிழர்களுக்கு புரிந்தால் சரி" 

பாண்டியன் கூறியிருக்கிறான் அவ்வளவே. தமிழர்கள் அனைவருக்கும் புரியும் என்ற நம்பிக்கையில் தான் எழுதுகிறேன்.

 

"தமிழ் வருடம் சித்திரைப்புத்தாண்டுதான்,தை மாதம் அறுவடைகாலம் அது சூரியனுக்கு நன்றி சொல்லும்  நிகழ்வு,அது தான் தைப்பொங்கல்.மற்றும் மாடுகளின் மூலம் உழவு மற்றும் நீர் இறைத்தல் செய்வதால் பட்டிப்பொங்கல் செய்வார்கள்.இதுவும் ஒருவகை  தாங்க்ஸ் கிவ்விங்தான்" - Blue Bird.

 

இப்படி புரிந்துகொள்ள மறுக்கும் தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதால்தான் 'புரியும் தமிழர்களுக்கு புரிந்தால் சரி' என எழுதவேண்டியதாயிற்று. நான் கூறியது தவறு என நீங்கள் நினைத்தால், மன்னித்துகொள்ளுங்கள்.

 

 


எதை சகல பரிசுத்தவான்களின் திருநாளாக கொண்டாடுவார்கள்???? :rolleyes:  All Saints Day நினைவுகூறப்படுவது கார்த்திகை 1ம் நாள். அதற்கும் புத்தாண்டுக்கும் என்ன தொடர்பு என்று விளங்கவில்லை :unsure: - தமிழினி.

 

 

All Saints Dayக்கும் தமிழ் புத்தாண்டான தைக்கும் சம்பந்தம் உண்டு என்பதற்காக இதை நான் கூறவில்லை.

 

மறைந்தவர்களை நினைவுகூறல் - கிறித்தவத்திலும் உண்டு. அது தமிழனிடத்தில் இருந்திருக்கிறது என்பதற்காகவே நான் அதை கூறினேன். All Saints Day - தமிழில் இருந்து கிறித்தவத்திற்கு சென்றிருக்கிறதா அல்லது கிறித்தவத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கிறதா என பட்டிமன்றமே நடத்தலாம். தமிழில் இருந்துதான் கிறித்தவத்திற்கு சென்றிருக்கவேண்டும் என்பது என் கணிப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.