Jump to content

கருணாவின் கட்சி அரசுடன் சேர்ந்து அமைச்சர்களாவளாம்-லங்காதீப


Recommended Posts

கருணாவின் அரசியற் கட்சியாகிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் கடந்த 20 ஆம் திகதி முற்பகல் திருகோணமலை நகரில் துறைமுக வீதியில் (றேகு வீதி) அமைந்துள்ள 56 ஆவது இலக்க நிலையத்தில் திறந்துவைக்கப்பட்டது. இந்த திறப்பு நிகழ்ச்சியில் பங்குபற்றிய மேற்படி த.ம.வி.பு. கட்சியின் திருகோணமலை மாவட்ட அரசியற் பிரிவுத் தலைவர் பிரதீப் மாஸ்ரர் தெரிவிக்கையில், தமது அரசியற் கட்சி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடவிருப்பதாகவும் அவ்வாறு போட்டியிட்டு கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காகப் பாடுபடுவர் எனக் கூறியுள்ளார்.

மேற்படி கட்சி அலுவலக திறப்பு விழாவின் போது த.ம.வி.பு. கட்சியின் கொடியைக் கருணா குழுவின் திருகோணமலை மாவட்ட ஆயுதப் பிரிவுத் தலைவர் மார்க்கண்டு ஏற்றிவைக்க அரசியற் பிரிவுத் தலைவர் பிரதீப் மாஸ்ரர் கட்சியின் பெயர்ப் பலகையைத் திறந்து வைக்கத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தை கட்சியின் ஊடகப் பேச்சாளர் தூயவன் திறந்துவைத்தார். இந்த நிகழ்வின் போது பிரதீப் மாஸ்டர் பேசுகையில்;

"நாம் எமது பாதுகாப்புக்காகவே ஆயுதங்களை வைத்திருக்கிறோம்" எமது மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசியல் நடத்துவதே எமது குறிக்கோளாகும். பிரபாகரன் போல் மக்களைக் கொல்வது எமது இலட்சியமல்ல. இப்பொழுது பிரபாகரன் எத்தகையவர் என்பது தமிழ் மக்களுக்கு விளங்கியிருக்கும்? முதலில் பிரபாகரன் யாரென்று எங்களுக்கு விளங்கவில்லை. அவ்வாறு விளங்கியதும் நாம் பிரிந்து வந்துவிட்டோம்" என்று தெரிவித்தார்.

மேலும், இந்தக் கட்சி அலுவலகத்திறப்பு விழாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் திருகோணமலை நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட நகரசபைத் தலைவர் சண்முகராஜா கௌரி முகுந்தன் சமுகமளித்திருந்ததும் அவருக்கு சர்வமதத் தலைவர்கள் அருகில் ஆசனம் அளிக்கப்பட்டு அமர்ந்திருந்ததும் விசேட அம்சமாகும். இந்த விழா நிகழ்வில் கருணா குழு ஆயுதப் பிரிவுத்தலைவர் உரையாற்றுகையில், "நாம் பிரபாகரனிடமிருந்து பிரிந்து வந்தது, அவர் வடக்கு பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தார் என்பதற்காகவே. பிரபாகரன் தனது இலாபத்துக்காக யுத்தம் செய்கிறார். நாம் உண்மையை உணர்ந்ததும் அதிலிருந்து தப்பிவந்தோம். பிரபாகரன் தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு இடம்கொடாது தம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்து வெளிநாட்டு உதவி நிதிகளை தன்னுடைய தேவைகளுக்குப் பயன்படுத்தும் மனிதராகும். இவ்வாறே தமிழர் புனர்வாழ்வு அமைப்பும் (ரி.ஆர்.ஓ.)மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதாகக் கூறிக்கொண்டு மக்களுக்காகக் கிடைக்கும் உதவிகளை எடுத்துப் புலிகள் இயக்கத்துக்குக் கொடுத்துள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த அலுவலகத் திறப்பு விழாவின் ஆரம்பத்தில் அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் ஒரு நபர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்ற நிலை காணப்பட்டபோது, பின்னர் விழா சுமுகமாக நடந்து முடிந்தது.

-லங்காதீப: 21.10.2006-

http://www.thinakkural.com/news/2006/10/23...s_page13565.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொறி வாசிக்க வாசிக்க சத்தி வருது போட்டு வாறன்

Link to comment
Share on other sites

இந்த அலுவலகத் திறப்பு விழாவின் ஆரம்பத்தில் அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் ஒரு நபர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்ற நிலை காணப்பட்டபோது

நல்ல காலம் முகத்தான் அந்தப்பக்கம் போகேலை..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலுவலகம் திறந்த முதலாவது அதிரடி!

திருமலையில் 50 சிறுவர்கள் கருணா துணை ஆயுதக் குழுவினரால் கடத்தல்.

திருமலையிலும் அதன் அண்டைய பகுதிகளிலும் கடந்த சில நாட்களினுள் சிறீலங்கா துணை இராணுவக் குழுவான கருணா அணியினரால் வயது குறைந்த 50 50 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட இளைஞர்கள் பொலநறுவை தீவுச்சேனை முகாமுக்கு கட்டாய ஆயுதப் பயிற்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சிறீலங்காவின் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் திருமலையில் கருணா துணை ஆயுதக்குழுவினர் அலுவலகம் ஒன்றைத் திறந்து வயது குறைந்த சிறுவர் ஆட்கடத்தல்களைச் செய்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

-பதிவு

அடுத்தது வவுனியாவாம். குழந்தை குட்டிகளைத் தனியே, றோட்டுக்கு அனுப்பாதையுங்கோ!

Link to comment
Share on other sites

எமது மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசியல் நடத்துவதே எமது குறிக்கோளாகும்.-அதலாதான் கொழும்பில வெள்ளைவான்ல வந்து தமிழர கடத்திக் கொண்டு போய் கப்பம் கேட்டவையோ? அது சரி கொடியில என்ன நரச்சின்னமோ கழுதைச்சின்னமோ பதிச்சிரிக்கினம். என்னே தமிழ் மக்கள் மேல் இவர்களுக்குள்ள பாசம் அடடா பிடரி மயிர் சிலிர்க்கிறது.

ஈழத்திலிருந்து

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¯ÅÕìÌ º¢ÚÅ÷ ÁüÚõ Ó츢ÂÁ¡ Á¸Ç¢÷ ŢŸ¡Ã «¨Áîº÷ À¾Å¢¨Â ¦¸¡Îò¾¡ø ÅÖ ºó§¾¡ºÁ¡¸ ²üÚ즸¡ûÅ¡÷. Á¸Ç¢÷ ŢŸ¡Ãò¾¢Ä «Å÷ À¢º¢Â¡É¡ø ¸¢ÆìÌ Á¡¸¡½ò¾¢Ä Ì𨼨 ÌÆôÀ «ÅÕìÌ §¿ÃÁ¢Õ측Ð. «Ð×õ ¿øÄо¡§É

Link to comment
Share on other sites

அலுவலகம் திறந்த முதலாவது அதிரடி!

திருமலையில் 50 சிறுவர்கள் கருணா துணை ஆயுதக் குழுவினரால் கடத்தல்.

திருமலையிலும் அதன் அண்டைய பகுதிகளிலும் கடந்த சில நாட்களினுள் சிறீலங்கா துணை இராணுவக் குழுவான கருணா அணியினரால் வயது குறைந்த 50 50 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட இளைஞர்கள் பொலநறுவை தீவுச்சேனை முகாமுக்கு கட்டாய ஆயுதப் பயிற்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சிறீலங்காவின் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் திருமலையில் கருணா துணை ஆயுதக்குழுவினர் அலுவலகம் ஒன்றைத் திறந்து வயது குறைந்த சிறுவர் ஆட்கடத்தல்களைச் செய்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

-பதிவு

அடுத்தது வவுனியாவாம். குழந்தை குட்டிகளைத் தனியே, றோட்டுக்கு அனுப்பாதையுங்கோ!

வவுனியாவுல ஏற்கனவே கொள்ளைகளைத் தொடங்கிட்டாங்களே கோதாரி விழுந்தவங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கருணாக்கு ஒரு கொள்கையும் இல்லை தனது பெயர் தொடர்ந்து எப்படியாவது தன்னை ஒரு வீரனாக ஏதும் வந்தா சரி மற்றும் படி இந்த ஆள் கடத்தல் எல்லாம் சிங்கள இராணுவன் சில தமிழ் ஒட்டுக்களை வைச்சு நடத்துது உண்மையில் கருணா என்ற ஒட்டுகுழு கருணாவின் கட்டுபாட்டில் இல்லை சிங்கள புலனாய்வுடுறையிடம் தான் இருக்கு கருணாக்கு எதிர்த்து ஏதும் சொல்லவே பயம் பிறகு 2 சிங்கள இராணுவதுக்காக் தன்னை புலிகளிடம் ஒப்ப்டைத்தாலும் ஒப்படைப்பார்கள் என்ற பயத்தில தனது பெயரை எப்படியாவது பாவிக்க விட்டு விட்டு அது தன் பாட்டில இந்தியாவில் திரியுது( சும்மா இல்லை (..................) தான்................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.