Jump to content

காட்சியும் கவிதையும்


Recommended Posts

k34u14.jpgகாட்சியும் கவிதையும்

உயரக் கூடு கட்டி
உல்லாசமாக வாழ்ந்தாலும்
நிலம் நோக்கிய வாழ்வில்லாமல்
நின்மதி கிட்டாது.

 

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply

நன்றி ராஜன் விஷ்வா

அன்னிய மண்ணில் மாடி வீடுகட்டி, மகிழூந்தில் சவ்வாரி செய்து, ஆடம்பரமாக வாழ்ந்தாலும் தாய் மண்ணைச்  சிந்தித்து,  அதற்கு உதவி செய்து,  அங்கு வாழும் வாழ்க்கையே நின்மதியானது.

 

 

 

Link to comment
Share on other sites

நன்றி ராஜன் விஷ்வா

அன்னிய மண்ணில் மாடி வீடுகட்டி, மகிழூந்தில் சவ்வாரி செய்து, ஆடம்பரமாக வாழ்ந்தாலும் தாய் மண்ணைச்  சிந்தித்து,  அதற்கு உதவி செய்து,  அங்கு வாழும் வாழ்க்கையே நின்மதியானது.

 

 

 

 

நூறு விதம் உண்மை தான் அண்ணா, இன்னும் கூட வரிகளை சேர்த்திருக்கலாம், கவிதைக்கு பட்ட மரத்தின் உச்சியில் உள்ள பறவையின் கூடு மிக பொருத்தமாக உள்ளது, நீங்கள் எடுத்ததா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் இருக்கு கவிதையும் படமும்...!

Link to comment
Share on other sites

ராஜன் விஷ்வா, Suvy அன்புடன் இருவருக்கும் நன்றிகள். காட்சிகள் சிலவற்றைப் பார்க்கும்போதும் தமிழ் மக்கள் சிலரின் செயற்பாடுகளைக் கவனிக்கும்போதும் என்னுள் தோன்றிய எண்ணங்களே இக் கருவும் காட்சியும். காட்சி என்னால் பதிவு செய்யப்பட்டது.  காட்சியைப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே வரிகளைச் சுருக்கியுள்ளேன்.

நன்றி  

 

 

 
Link to comment
Share on other sites

33m7aza.jpgகாட்சிகள் மாறுவது போல்
காலங்கள் மாறினாலும்
ஒட்டிய இடம்தான் உருமாறிப்போனாலும்
உறிஞ்சி வாழ்வதே உறுதியான கொள்கை

Link to comment
Share on other sites

  • 1 month later...

குருவிச்சை ஒரு ஒட்டுண்ணித் தாவரம். அது எங்கிருந்தாலும் தன்னை வளர்த்துக் கொள்வதிலும் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வதிலும் கவனத்தைச் செலுத்துவதுதான் அதன் கொள்கை. அதுபோல்தான் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில்  விடுதலைப் போராட்டம் என்று கூறி அதற்குள் புகுந்து, தம்மை வளர்த்துக்கொண்டும்  தம் உறவினர்களையும் வளர்த்துக்கொண்டு வாழ்பவர்கள் பலர். இப்படியானவர்களின் செயலால்தான் எமதுபோராட்டம் வீழ்த்தப்பட்டது.  இப்படியானவர்களுக்கு இப் படம் பொருத்தமாக இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவிச்சை ஒரு ஒட்டுண்ணித் தாவரம். அது எங்கிருந்தாலும் தன்னை வளர்த்துக் கொள்வதிலும் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வதிலும் கவனத்தைச் செலுத்துவதுதான் அதன் கொள்கை. அதுபோல்தான் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில்  விடுதலைப் போராட்டம் என்று கூறி அதற்குள் புகுந்து, தம்மை வளர்த்துக்கொண்டும்  தம் உறவினர்களையும் வளர்த்துக்கொண்டு வாழ்பவர்கள் பலர். இப்படியானவர்களின் செயலால்தான் எமதுபோராட்டம் வீழ்த்தப்பட்டது.  இப்படியானவர்களுக்கு இப் படம் பொருத்தமாக இருக்கிறதா?

 

நீங்கள் கூறியதை விட சிங்களத்துடன் ஒட்டி நின்று தமிழர்களின் அழிவில் வாழ்வு நடத்தும் ஒட்டுக்குழுக்களுக்கு இந்தக்காட்சி பொருந்தலாம்.

Link to comment
Share on other sites

                           நன்றி வாத்தியார். இங்கே காணப்படும் மரங்கள் வெப்பவலையத்துக்குரியவை அல்ல. குளிர்வலய நாடுகளுக்குட்பட்டவை. குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள மரங்கள்.  இந்த மரங்களில் காணப்படும் குருவிச்சையைப் பாருங்கள். மரத்தில் ஒட்டி, அதிகமான இடங்களில் பரவி செழிப்பாக வாழுகிறது.  மரம் இலை உதிர்த்து வெறுமனே நிற்கிறது..

 

எமது விடுதலைப் போராட்டம் வீழ்த்தப்பட்ட பின்னர்,  விடுதலை விரும்பி கடன்பட்டுக் காசு கொடுத்தவர்கள் கவலையுடன் கடனாளியாக முகம் கவிழ்ந்து வாழுகிறார்கள். விடுதலைப் போருக்கெனப் பணம் சேர்த்த சிலரோ மாடமாளிகையில் இருந்து கொண்டு அதி நவீன மகிழுந்தில் மகிழ்வாகப் பயணம்  செய்கிறார்கள்

Link to comment
Share on other sites

vdmz4z.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பனைகள் பல கொண்ட மாளிகை
கட்டியவர்கள் வெளியினிலே – அதுபற்றி
கனவிலும் எண்ணாதோர் அங்கு
களிப்புடனே குடிபுகுந்தார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வரிகளுக்குள்... எவ்வளவு பெரிய 'வாழ்வியல்' உண்மையை 'அடக்கி' விட்டீர்கள் செண்பகன்!

 

 

தொடருட்டும் உங்கள் பதிவுகள்!

Link to comment
Share on other sites

நன்றி புங்கையூரான். விமர்சனமும் ஊக்குவிப்பும் தான்  இப்பணிகளை முன்னெடுக்க உதவும்.

தங்களைப் போன்றவர்களின் ஆதரவுக்கு   எனது மனமார்ந்த நன்றிகள்.

மேலும் எழுத்துருமாற்றத்தில் வாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக அறிந்து  அதை மாற்றியுள்ளேன்.

இதுபற்றி நேரடியாக அறியத்தந்த நண்பருக்கு எனது நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vdmz4z.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பனைகள் பல கொண்ட மாளிகை

கட்டியவர்கள் வெளியினிலே – அதுபற்றி

கனவிலும் எண்ணாதோர் அங்கு

களிப்புடனே குடிபுகுந்தார்..

 

எளிய வரிகளில் ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.

 

குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதுகிறீர்கள்.

 

"கரையான்கள் புற்றெடுக்க

கருநாகம் புகுந்ததுபோல்

ஆனதெங்கள் ஜனநாயகம்"

 - இது எங்கள் ஜனநாயகத்தைப் பற்றி நான் முன்பு எழுதியது.

Link to comment
Share on other sites

33m7aza.jpgகாட்சிகள் மாறுவது போல்

காலங்கள் மாறினாலும்

ஒட்டிய இடம்தான் உருமாறிப்போனாலும்

உறிஞ்சி வாழ்வதே உறுதியான கொள்கை

உறிஞ்சி வாழ்வதே உறுதியான கொள்கை....

இப்படி பல மரங்கள் ஐரோப்பில் வாழ்கிறது மனிதமா அருமை கவி ..

Link to comment
Share on other sites

v4us05.jpg

 

 

 

 

 

கோடரிக் கழுந்தில் குடிபுகுந்து
தன் இனமழிக்கும் சிறுகோல் போல்
மாற்றானோடு இணைந்து  தமிழினம்
கொன்றொழிக்கும்  ஒட்டுக்குழு

Link to comment
Share on other sites

தங்கள் கருத்துக்கு எனது நன்றிகள்.. Seyon yazhvaendhan , அஞ்சரன்   

Seyon yazhvaendhan

கரையான் என்பது  கடற்கரையில் வாழும் ஒரு இனத்தைக் குறிப்பது. ( வலைஞன்)  

நன்றி

கறையான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கோடரிக் கழுந்தில் குடிபுகுந்து

தன் இனமழிக்கும் சிறுகோல் போல்"

 

மிகச் சிறந்த உவமை.   

Link to comment
Share on other sites

oiymhs.jpgஎங்கெங்கோ பறந்து பறந்து
எதிர்கால எண்ணத்தோடு சேர்த்த  சொத்து
முயற்சியின்றிக் கிடந்தவன் கண்ணில் பட்டு
முழுவதுமாய் அழிந்தது..

Link to comment
Share on other sites

vh7xci.jpgஅருகில் வந்து அணைத்து நடந்து  
சிரித்து மகிழ்ந்து சேர்ந்து திரிந்தோர்
ஏறவிரும்பித் தூக்கிப்பிடித்தார்
ஏறியபின்னே எட்டி உதைத்தார்.

Link to comment
Share on other sites

"கோடரிக் கழுந்தில் குடிபுகுந்து

தன் இனமழிக்கும் சிறுகோல் போல்"

 

மிகச் சிறந்த உவமை.  

 

தங்கள் கருத்துக்கு எனது நன்றிகள்.. Seyon yazhvaendhan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10292528_649160095239249_616591947750321

 

கொலைக்கருவிக்கு கூட

உயிர் மீது இரக்கமிருக்கு..

கொலைக்கருவி தாங்கிய

சிங்களத்துக்கோ.. மனிதமே இல்லை.

இத்தனைக்கும்..

புத்தன் வழியில் பயணிக்கும் கூட்டமாம் அது.!!!

Link to comment
Share on other sites

10292528_649160095239249_616591947750321

எமது தேசத்தைச் சுட்டெரித்து
எமது மக்களையும் கொன்றுகுவித்த
கொலைக் கருவிக்கு பூவைத்ததுபோல்  - அதன்
கொலையாளிக்கும் பூ வைக்கச் செய்வோம்.

நன்றி
நெடுக்காலபோவான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vh7xci.jpgஅருகில் வந்து அணைத்து நடந்து  

சிரித்து மகிழ்ந்து சேர்ந்து திரிந்தோர்

ஏறவிரும்பித் தூக்கிப்பிடித்தார்

ஏறியபின்னே எட்டி உதைத்தார்.

மிகவும் வருத்தத்திற்குரிய உண்மை. இதுவே எமது குமுகாயத்தின் தன்மை.
நறுக்கென்று இருக்கிறது!
Link to comment
Share on other sites

காட்சியும் கவிதையும்  உண்மைகளை மையமாகக் கொண்டவை.

காட்சிகளுக்கான உண்மைத் தன்மைகளை அதிகமானவர்கள்

மேலோட்டமாகத்தான் புரிந்துகொள்வதாக உணர முடிகிறது. 

ஆகவே காட்சிகள் பற்றிய தங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.   

 

தங்கள் கருத்துக்கு எனது நன்றிகள் நொச்சி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.