Jump to content

யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு


Recommended Posts

யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு

யாழ்கருத்துக்கள மட்டுறுத்தினர்களில் ஒருவரான நிழலி அவர்கள் 15.12.2014 அன்று தனது 40வது பிறந்தநாளில் 120 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட குடும்பநல வாழ்வாதார உதவிகளை தனது சக்திக்கு மேற்பட்டு பலவகையில் உதவி வருவதோடு நின்றுவிடாமல் பல வகையில் செயற்பட்டு வரும் ஒருவர்.

DSCN0824-300x225.jpg

2009யுத்தத்தில் மாவீரர்களான குடும்பமொன்றின் குழந்தைகள் 2பேரை கடந்த 3வருடங்களுக்கு மேலாக மாதாந்த உதவி வழங்கி வருவதோடு மாவீரர்களின் தாயார் ஒருவருக்கும் மாதாந்தம் உதவிவருகிறார் நிழலி. நிழலியின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் அவரது துணைவியாரையும் இந்நேரம் நினைவு கொள்கிறோம்.

நிழலியின் உதவியில் கழுவங்கேணி 1குடும்பலநல உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட போசாக்கு குறைந்த குழந்தைகளை நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பானது ஒருங்கிணைத்து உணவு வழங்கலோடு உளவள கருத்தரங்கினையும் நடத்தியிருந்தது.

கழுவங்கேணி கிராமமானது கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமைந்துள்ளது. இக் கிராமானது மட்டக்களப்பு நகரை அண்டிய ஒரு கிராமமாகும். 1300குடும்பங்களைக் கொண்ட இக்கிராமமானது மீன்பிடித் தொழிலையே பிரதான தொழிலாகக் கொண்டது. மிகவும் பின்தங்கிய இக்கிராமத்தில் 5சத வீதத்துக்குள்ளேயே கல்வித்தரம் இருக்கிறது.

அரபு நாடுகளுக்கு செல்லும் தாய்மார் அதிகமாக இக்கிராமத்தில் இருக்கிறார்கள். தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்தும் கனவோடு அரபு நாடுகளுக்குச் செல்லும் தாய்மாரின் குழந்தைகள் எதிர்நோக்கும் சிக்கல்களும் பாதிப்புகள் அதிகம். இங்கு அதிகளவிலான பெண்பிள்ளைகள் 15,16வயதுகளில் திருமணம் செய்துவிடும் அவலம் இன்னும் நடந்து கொண்டேயிருக்கிறது.

திருமண வயதுக் கட்டுப்பாடு நாடெங்கிலும் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இதுபோன்ற கிராமங்களில் இன்னும் மீறப்பட்டே வருகிறது. சுயபொருளாதார உயர்வு , கல்வியறிவு குறைந்த இத்தகைய கிராமங்களுக்கான நிரந்தர உளவள உயர்வு மேம்படுத்தப்பட வேண்டும்.

தங்களைத் தாங்களே சிந்திக்கவும் தங்களை வழிநடத்தவும் இவர்களுக்கு தற்போது வேண்டியது உளவள மேம்பாடு. தேன்சிட்டு உளவள அமைப்பின் செயற்பாட்டுக் குழுவினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உளவள மேம்பாட்டு பயிற்சிகளுக்கான உதவிகள் கிடைக்கப்பெற்றால் இக்கிராமத்தையும் மேம்படுத்த முடியும்.

இக்கிராமத்தின் முதல் கருத்தரங்கை நடத்தவும் போசாக்கு குறைந்த குழந்தைகளுக்கான உணவையும் தந்து முதல் மாற்றத்தை ஏற்படுத்திய யாழ்கள மட்டுறுத்தினர் நிழலி அவர்களுக்கு எமது சிறப்பான நன்றிகள்.

DSCN0785-150x150.jpg DSCN0788-150x150.jpg DSCN0791-150x150.jpg

DSCN0797-150x150.jpg DSCN0809-150x150.jpg DSCN0813-150x150.jpg

DSCN0817-150x150.jpg DSCN0819-150x150.jpg DSCN0823-150x150.jpg

DSCN0824-150x150.jpg DSCN0825-150x150.jpg DSCN0828-150x150.jpg

DSCN0830-150x150.jpg DSCN0834-150x150.jpg DSCN0835-150x150.jpg

DSCN0840-150x150.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://nesakkaram.org/ta/nesakkaram.3753.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  களத்தில் இப்படியான முன்னுதரணமாகத் திகழும் உறவுகளில் நிழலியும் ஒருவர்.

தனது பிறந்த தினத்தை ஏழைகளின் மன நிறைவோடு பகிர்ந்துகொண்ட நிழலிக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

மிக உன்னதமான செயல். இவர்களின் வாழ்த்துக்கள் போன்று வேறெதுவும் அமையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் உன்னதமான செயல், வாழ்த்துக்கள் நிழலி...!

Link to comment
Share on other sites

நல்லதொரு முன்னுதாரணமான செயலை செய்திருக்கும் நிழலி அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்!

இப்படி ஒரு குடும்பத்தில் ஒருவரின் பிறந்தநாள் செலவை ஒவ்வொரு வருடமும் நாம் செய்தாலே பல குழந்தைகளுக்கு

தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறந்தநாட்களில் மட்டுமல்லாது இறந்தவர்களின் நினைவுநாட்களில் கூட இப்படியான தர்மங்கள் செய்தால் இறந்தவர்களின் ஆத்மா மகிழ்வடையும்.

( இறந்தவர்களின் நினைவு நாட்களில் (வெளிநாட்டில் உள்ளவர்கள்) ஊரை கூட்டி விருந்தளிப்பதிலும் பார்க்க 10 பிள்ளைகளுக்காவது உணவளிப்பது எவ்வளவோ மேல்)

 

அந்த குழந்தைகளின் மனம் நிறைந்த வாழ்த்து நிழலி அண்ணா குடும்பத்திற்கு மகிழ்வான வாழ்வை என்றும் கொடுக்கும்!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நினைக்க பெருமையா இருக்கு அண்ணா...........

Link to comment
Share on other sites

நிழலி உங்கள் முன்னுதாரணம் நிச்சயமாக பாராட்டபடவேண்டியது. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது அடுத்த பிறந்த நாளுக்கு, இப்படியான ஒன்றைச் செய்யும் உத்தேசம் உள்ளது!

 

நன்றிகள், நிழலி!

 

உங்கள் முன்னுதாரணம் நிச்சயமாக என்னை வருங்காலத்தில் நெறிப்படுத்தும்!

Link to comment
Share on other sites

சிறப்பான பணி காலத்தின் தேவையுங்கூட.. 

 

வாழ்த்துக்கள் நிழலி அண்ணைக்கும் , உதவிகளை ஒருங்கிணைத்த சாந்தி அக்காவுக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSCN0824-300x225.jpg
 

படங்களைப் பார்க்க, எம்மையறியாமலே... ஆனந்தக் கண்ணீர் வருகின்றது.
உங்களை நினைக்க... பெருமையாக உள்ளது நிழலி.
இதனை உரியவர்களிடம், சேர்ப்பித்த சாந்திக்கு... பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

பாராட்டிய, வாழ்த்திய, பதிவுக்கு பச்சை குத்தி ஊக்குவித்த அனைத்து உறவுகளுக்கும் என் அன்பான நன்றி.

 

நான் உணவு கொடுத்தது 365 நாட்களில் ஒரே ஒரு நாள், ஒரே ஒரு நேரத்திற்கு மட்டுமே. உதவிகள் கிடைக்காவிடின் மிகுதி 364 நாட்கள் இச் சிறுவர்கள் போசாக்கற்ற உணவுடன் தான் வாழப் போகின்றனர். இவர்களைப் போன்று தாயகத்தில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் போசாக்குள்ள நிறையுணவு இன்றி வளர்ந்து எதிர்காலத்தின் சவால்களை சந்திக்க போகின்றனர். தாயகத்தில் போரின் பின் ஒரு பலகீனமான சமுதாயமாக எம் சிறுவர்கள் வளரப் போகின்றனர்.

 

இதை சிங்கள அரசு நிவர்த்தி செய்ய போவதில்லை. அயல் தேசமும் கவனத்தில் எடுக்கப் போவதில்லை. சர்வதேசமும் இது பற்றி அக்கறை கொள்ளப் போவதில்லை.

 

ஆனால் எமக்கு இதை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்யும் தார்மீக கடமை இருக்கின்றது. நாமும் கைவிட்டு விட்டால் இவர்களை எவரும் திரும்பிப்பார்க்கப் போவதில்லை.

 

சிறு துளி பெரு வெள்ளம்

 

தமிழினி குறிப்பிட்டுள்ளது போன்று ஒவ்வொரு குடும்பமும் தம் பிள்ளைகளின் ஒருவரின் பிறந்த நாள் அல்லது இறந்த ஒருவரின் நினைவு நாளன்று இவ்வாறான உதவிகளை செய்ய முன்வருவார்களாயின் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.

 

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பர். இவ்வாறான உதவிகளை விளம்பரம் செய்வது தவறும் என்பர். ஆனால் இதை வெளியில் சொல்வதால் இவ்வாறான உதவிகளை செய்ய விரும்பி ஆனால் எவ்வாறு செய்வது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இவ்வாறான தகவல்கள் கண்டிப்பாக உதவியாக இருக்கும். அத்துடன் இதைப் பார்க்கின்றவர்களுக்கு தாமும் செய்ய தூண்டுதலாகவும் இருக்கும்.

 

போன வருடமோ அல்லது அதற்கு முதல் வருடமோ உடையார் இப்படியான ஒரு விடயத்தினை செய்தார் என்று அறிந்தது எனக்கு ஒரு சிறு  தீப் பொறியாக மாறியது. நான் செய்த இவ் விடயமும் ஒரு சிலருக்கு தீப்பொறியாக மாறி பல சிறுவர்கள் / பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறு விளக்கைத் தானும் ஏற்றி வைக்கும் என்று நம்புகின்றேன்.

 

என் சலிப்பூட்டும் பல கேள்விகளுக்கும், தொடர் மின்னஞ்சல்களுக்கும் பொறுமையாக பதில் கொடுத்து இவ் நிகழ்வை ஒழுங்கு செய்த சாந்திக்கு என் நன்றி.

 

அத்துடன் யாழ் இணையம் இல்லாதிருந்தால் வழக்கம் போன்று வெறுமனே குடித்து கும்மாளம் மட்டுமே போட்டு இருப்பேன். மோகனுக்கும் நன்றி

 

- நிழலி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான

முன்னுதாரணமானதொரு நல்ல காரியம் செய்த தம்பி  நிழலிக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

இவர் போன்ற  தம்பிகளைத்தந்த யாழுக்கு தலை வணங்குகின்றேன்.

 

 

 

 

சிறு துளி பெரு வெள்ளம்

 

தமிழினி குறிப்பிட்டுள்ளது போன்று ஒவ்வொரு குடும்பமும் தம் பிள்ளைகளின் ஒருவரின் பிறந்த நாள் அல்லது இறந்த ஒருவரின் நினைவு நாளன்று இவ்வாறான உதவிகளை செய்ய முன்வருவார்களாயின் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.

 

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பர். இவ்வாறான உதவிகளை விளம்பரம் செய்வது தவறும் என்பர். ஆனால் இதை வெளியில் சொல்வதால் இவ்வாறான உதவிகளை செய்ய விரும்பி ஆனால் எவ்வாறு செய்வது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இவ்வாறான தகவல்கள் கண்டிப்பாக உதவியாக இருக்கும். அத்துடன் இதைப் பார்க்கின்றவர்களுக்கு தாமும் செய்ய தூண்டுதலாகவும் இருக்கும்.

 

போன வருடமோ அல்லது அதற்கு முதல் வருடமோ உடையார் இப்படியான ஒரு விடயத்தினை செய்தார் என்று அறிந்தது எனக்கு ஒரு சிறு  தீப் பொறியாக மாறியது. நான் செய்த இவ் விடயமும் ஒரு சிலருக்கு தீப்பொறியாக மாறி பல சிறுவர்கள் / பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறு விளக்கைத் தானும் ஏற்றி வைக்கும் என்று நம்புகின்றேன்.

 

என் சலிப்பூட்டும் பல கேள்விகளுக்கும், தொடர் மின்னஞ்சல்களுக்கும் பொறுமையாக பதில் கொடுத்து இவ் நிகழ்வை ஒழுங்கு செய்த சாந்திக்கு என் நன்றி.

 

அத்துடன் யாழ் இணையம் இல்லாதிருந்தால் வழக்கம் போன்று வெறுமனே குடித்து கும்மாளம் மட்டுமே போட்டு இருப்பேன். மோகனுக்கும் நன்றி

 

- நிழலி

 

இது சம்பந்தமாக அதிகம் எழுத கூசும் தம்பி  நிழலி 

இவ்வளவு எழுதியுள்ளதே

இன்னொருவராவது செய்யமாட்டார்களா என்ற நம்பிக்கையில் தான்.....

உறவுகளே

மனமிருந்தால் இடமுண்டு...

 

 

Link to comment
Share on other sites

நிழலியின் செயலுக்கும், சாந்தியின் சேவைக்கும் சிரம் தாழ்த்திய வந்தனங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானத்தில் சிறந்தது அன்னதானம்.

 

இதை முன்னின்று நடத்திய சாந்திக்கும் பண உதவிகள் செய்த நிழலிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நிழலியும்.. விஜய்.. சூர்யா ரேஞ்சுக்கு ஒரு நாள் சத்துணவு திட்டம் செய்கிறாரா..??!

 

ஊரில ஒரு தடவை ஒரு பிரண்ட் எல்லாருக்கும் சைவ சாப்பாட்டுப் பார்சல் வாங்கித் தந்தான். என்னடா திடீரென்னு.. பாசமழை கொட்டுதேன்னு.. கேட்டா.. இல்ல மச்சான்.. அம்மம்மாட திவசம்.. அது தான் 10 பிச்சைக்காரங்களுக்கு அம்மா சாப்பாடு வாங்கிக் கொடு என்று சொன்னவ என்றான்.

 

சரி இப்படியாவது நன்மை நடக்குதேன்னு வாழ்த்தத்தான் வேணும்.

 

ஆனால்.. இந்தச் சத்துணவு திட்டத்தை கொஞ்சம் அகலமாக்கி.. ஒரு சத்துணவு பொடி மா திட்டத்தை கொண்டு வந்தால்.. அதன் மூலம்.. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும்.. பிள்ளைகளுக்கு சத்துணவும் ஆகும். நீண்ட கால ஒழுங்கில் அது பிள்ளைகள் சத்துணவை தமதாக்க..உதவும் இல்ல என்ற ஒரு ஆதங்கம் தான். மற்றும்படி.. நிழலியின் இந்த ஓர் நாள் சத்துணவு திட்டம்.. நடைமுறைப்படுத்தப்பட்டது ஒரு முன்மாதிரி என்பதிலும்.. நல்ல ஒரு வழிகாட்டலுக்கான ஆரம்பம் என்று கொள்வதே நல்லது. :icon_idea::)

 

 

 

 


ஒரு நாள் வாய்க்குருசியா உணவு போட்டிட்டு.. மிச்ச நாட்கள் அதனை எண்ணி பட்டினி போட வைப்பது பாவம் இல்லையா..???! :o:rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறந்த செயற்பாட்டை செய்த நிழலியவர்களுக்கும் அதனைத் தாயகத்திலே முன்னெடுத்துப் பதிவிட்ட சாந்தியவர்களுக்கும் பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஆனால்.. இந்தச் சத்துணவு திட்டத்தை கொஞ்சம் அகலமாக்கி.. ஒரு சத்துணவு பொடி மா திட்டத்தை கொண்டு வந்தால்.. அதன் மூலம்.. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும்.. பிள்ளைகளுக்கு சத்துணவும் ஆகும். நீண்ட கால ஒழுங்கில் அது பிள்ளைகள் சத்துணவை தமதாக்க..உதவும் இல்ல என்ற ஒரு ஆதங்கம் தான். 

 

ஒரு நாள் வாய்க்குருசியா உணவு போட்டிட்டு.. மிச்ச நாட்கள் அதனை எண்ணி பட்டினி போட வைப்பது பாவம் இல்லையா..???! :o:rolleyes::icon_idea:

 

நீங்க சொல்லவருவது உண்மைதான்

ஆனால் எப்பொழுதுமே சிறு துளிகள் தானே பெருவெள்ளம் ஆகின்றன.

 

நிழலி போல ஒவ்வொருவரும் செய்யும் போது

பின்னர் அவர்கள் ஒன்றிணைந்து சிலவற்றை  செய்யலாம்..

 

நான்

இந்த அடுத்த கட்டத்தில் நிற்பதால்  இதை இங்கு குறிப்பிடுகின்றேன்

இது போன்று சிலவிடயங்களைச்செய்தோர் ஒன்றிணைந்து

ஆண்டுக்கு பல லட்சங்களுக்கு பலபேருக்கு செய்யக்கூடியதாக இருக்கு.....

 

முதலில் இவர் போன்ற  இரக்கவாளிகளை அடையாளம் காணவேண்டும்

ஒன்றிணைக்கணும்

அடுத்த கட்டத்துக்கு போகலாம்.......... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிழலி

Link to comment
Share on other sites

  • 2 months later...
நிழலியின் முன்னுதாரண உதவியை வாசித்து பலர் தங்களது பிறந்தநாள் , உறவுகளின் நினைவுநாட்கள் போன்ற நிகழ்வுகளை சிறார்கள் , வயோதிபர்களின் தேவைகளுக்கு தந்துதவ முன்வந்து சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
 
எல்லா நன்மைளுக்கும் பின்னால் யாராவது ஒருவர் அல்லது சிலரின் எதிர்மறையான கருத்துக்களும் வரும். அதற்கு இந்த திரியும் விதிவிலக்கில்லாமல் ஒருவர் கருத்தெழுதியிருந்தார். ஆனால் பலருக்கு நிழலியின் எண்ணம் உதவியாக இருந்தது மட்டுமன்றி உதவிகளும் கிடைத்துள்ளது. 
 
நன்றிகள் நிழலி மற்றும் நிழலியின் எண்ணத்தை வரவேற்று ஆதரித்து ஊக்குவித்த கள உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.