Jump to content

சுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ???


Recommended Posts

எப்பவும் போல சுமே அக்காவின்ட கடையில பீர் களவாடுற கோதாரி இன்டைக்கு காலமே நல்லா பட்டைய போட்டுட்டு வந்து நல்ல பிள்ளையா 200 ரூபாய்க்கு சாமான் வாங்கிட்டு வடிவா 1000 ரூபாய எடுத்து நீட்டினான், நடக்குறத பாத்து அதிர்ச்சியான சுமே அக்கா பேச்சும் மூச்சும் வராம வாங்கி சில்லறைய தேடுனா, பத்து காசு கூட இல்ல பெட்டியில...

அட கடவுளே இவன் கிட்ட சில்லற கொடுக்கலனா அவன் இஷ்டத்துக்கு பின்னாடி வந்து பீர் எடுப்பானே என்டு வருத்தமாக, அந்த நேரம் பாத்து நம்ம வெள்ளக்கார காடு வெட்டி கத்தையா காசு எண்ணிட்டு போறத பார்த்த சுமே அக்கா, அவன் கிட்ட எட்ட நின்னபடியே சில்லற காச மாத்திட்டு வந்து அந்த பீர்பாய் கிட்ட பொருளுக்கு காசு போக மிச்சத்த நாலு தரம் எண்ணி கொடுக்க, அவன் காச வாங்கிட்டு ஹெவ் அ நைஸ் டே ஆன்ரி என்டு சொல்லிட்டு நடைய கட்ட இங்கின ஆனந்த கண்ணீர் வழிய ஆரம்பிச்சிட்டது.

அப்படா ஒருவழியா இனி பீர் களவு இருக்காது என்டு சந்தோச படக்குல்ல, கடையில காத பொழக்கற காண்டாமிருக சத்தம். யாரு நம்ம காடுவெட்டி ஜான்சன் தான். "யார ஏமாத்தர உன் ஆயரம் ரூவா கள்ள நோட்டுனு" திரும்ப கத்த, சுமே அக்கா வேகமா வீட்டுகுள்ள ஒடி கடுகு டப்பாவில தீபாவளி பலகார சீட்டுக்கு யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருந்த ஆயிரம் ருபாய எடுத்த அவனுக்கு கொடுக்க, அவனும் போயிட்டான். அந்த கள்ள நோட்ட திருப்பி திருப்பி பாக்க கண்ணுல ஆனந்த கண்ணீர் அருவியா கொட்டுது.

சரி நமக்கு சனி பெயர்ச்சி நல்ல இல்ல போல, தமிழ் சிறியிட்ட ஒருக்கா ராசிபலன் பார்த்தா சரியா போகுமென்டு மனசுக்க நெனசிட்டு கணக்கு பார்த்த இன்டைக்கு எவ்வளவு காசு நட்டம்னு மண்டையை உடைச்சாலும் கணக்கு பிடிபடல, வெளிய போன மனுசன் இரவைக்கு வாரகுள்ள கல்லாவில காணம போனத கண்டுபிடிக்கனும்.

எவ்வளவு நட்டமென்டு கண்டுபிடிச்சு சொல்லி சுமே அக்காவை காப்பாத்துங்கோ சாமியோவ் :D

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

800 மீதிக்காசு கொடுத்தது

200 ஈரோக்கள் பொருட்கள்(விற்பனைவிலை)

 

மொத்தம் - 1000 ஈரோக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடையின் பொருள் விலை - 200
பீர்பாய்க்கு கொடுத்த மீதிக்காசு.- 800
வெள்ளைக்கார காடு வெட்டி கந்தையாவுக்கு 2´ம் தரம்  கொடுத்த, ஒரிஜினல் காசு 1000.
மொத்தம் 2000 பவுண்ட்ஸ். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவவுக்கு 200 பவுன்ட்ஸ் சாமான்தான் நட்டம்...!  அந்தக் கள்ளநோட்டை  நேற்று நடந்த கல்யாணத்துக்கு கவர்ல போட்டு மொய் எழுதிட்டா...!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பத்தான்  குழம்புகிறார்கள்..... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

800 மீதிக்காசு கொடுத்தது

200 ஈரோக்கள் பொருட்கள்(விற்பனைவிலை)

 

மொத்தம் - 1000 ஈரோக்கள்...

 

ஈரோக்கள் என எழுதிவிட்டேன்

1000 பவுன்ட்ஸ் என வரணும்..

Link to comment
Share on other sites

நன்னா அடிச்சு மல்லு கட்டுங்கோ, நான் நாளைக்கு சொல்லுறன் :)

(சுமே அக்காவிடம் இருந்தும் காப்பாத்துங்கோ அப்படியே)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது  தொழில் நிறுவனங்களில் அடிக்கடி நடப்பது தான்..

 

கடையை  ஆரம்பித்த புதிதில் இவ்வாறு சிலர் திரிவார்கள்

இடம் கொடுத்தால்

ஏமாந்தால் தொடர்வார்கள்

இல்லாது விட்டால் தமக்கு சிக்கலாகிவிடும் என்பதால் வரவே மாட்டார்கள்

 

இங்கு நடக்கும் ஒருவகை திருட்டு..

ஒருவர் வருவார்

இன்னொருவர் வெளியில் நிற்பார்

உதாரணமாக

5 ஈரோக்கு ஒரு பொருளை வாங்குவார்

50 ஈரோ தாளைத்தருவார்

நாம் மிகுதிப்பணம் 45 ஈரோக்களை கொடுத்ததும்

அதை கையில் எடுத்துவிட்டு

என்னிடம் 5 ஈரோக்கள் சில்லறை இருக்கு

மறந்துவிட்டேன்

இந்தா 5 ஈரோ

எனது 50 ஈரோவைத்தா என்பார்

நாம் 50 ஈரோவை வெளியில் எடுத்துவிட்டால்

5 ஈரோவைத்தந்து 50 ஈரோவை வாங்கிவிடுவார்

அதற்குள் நாம் மீதி கொடுத்த 45 ஈரோக்களை மறைத்துவிடுவார்

நமக்கும் மறந்துவிடும்

வெளியில் நின்ற நண்பர் எமக்கு வேறு ஒன்றுக்கு விலை கேட்டபடி

இவரை அவசரப்படுத்துவார்

வெளியேறி விடுவார்கள்..

இப்போ எமக்கு எவ்வளவு நட்டம்.....??

 

ஒருமுறை அண்ணரின் மகன் கடையில் நின்றான்

இவ்வாறு நடந்தது

ஆனால் தான் ஏமாறியது போல் தெரியவில்லை

ஆனால் முடிவாகத்தெரியவுமில்லை என்றான்..

சரி

இன்னொருநாள் வருவார் தானே என காத்திருந்தோம்

நாங்கள் 3 பேர் நிற்கும் போது வந்தார்கள்

மகன் எம்மை உசார்ப்படுத்தினான்

இவனாகத்தான் இருக்கவேண்டும் என..

கதவடியில் அண்ணரின் மகனும்

அவருக்கு பக்கத்தில் நானும்

கல்லாப்பட்டியில் மற்றவருமாக ஆயுத்தமானோம்

தொடங்கினார்

50 ஐக்கொடுத்து

45 வாங்கி 

மீண்டும் சில்லறை தேடும் போது

45 யை உள்ளே வைத்தார்

5 ஈரோவைக்கொடுத்து எனது 50 ஐ தா என்றார்

நான் கல்லாப்பட்டியில் உள்ளவரிடம் சொன்னேன்

50 ஐ  கொடு

45ஐ கேள் என...

அது எனது 50 என்றவர்  

50 ஐ  புடுங்கிக்கொண்டு ஓட ஆயுத்தமானார்...

மேசையில் கையூன்றி எழும்பி நெஞ்சில் காலால் ஒரு உதை..

வெளியில் நின்றவர் எட்டிப்பார்க்க

அவருக்கு மூஞ்சியில ஒன்றுவிழ

ஓடிட்டார்

 

இவருக்கு வெளி  இரும்புக்கதவை சாத்திவிட்டு

ஆறுதலாக வெளிக்காயம் வராதபடி பாடம் எடுக்க

காய்க்கு விளங்கிட்டுது

இவர்கள் இதில டாக்டர் பட்டம் எடுத்தவர்கள் என்று...

3 பேருடைய கால்களையும் மாறிமாறிபிடித்து கும்பிட்டு அழத்தொடங்கிட்டுது..

சூரவேட்டை முடித்து

95 ஈரோக்களையும் புடுங்கிவிட்டு

ஆளை இருவர்  தூக்கிப்பிடித்து வெளியில் விட்டு

இனிமேல் என்ர கடையில இல்லை

இந்த ஏரியாக்கடை எதிலாவது கண்டன் ....

இப்ப  நடந்தது வெறும் சாம்பிள் தான் என அனுப்பி வைத்தது

அதுக்கு பிறகு

அவர் மட்டுமல்ல வேறு ஆட்களும் வாறதில்லை... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடையின் பொருள் விலை - 200
பீர்பாய்க்கு கொடுத்த மீதிக்காசு.- 800
வெள்ளைக்கார காடு வெட்டி கந்தையாவுக்கு 2´ம் தரம் கொடுத்த, ஒரிஜினல் காசு 1000.
மொத்தம் 2000 பவுண்ட்ஸ் ----> அதே தான்

விளையாட்டுக்கு எண்டாலும் இப்படி எல்லாம் நிஜத்தில் நடக்ககூடாது என்று பிரார்த்திப்போம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீர்பாய் முதல் குடுத்தது கள்ள நோட்டாக இருந்தால் - 2000

 

காடு வெட்டி திரும்ப கொடுத்தது கள்ள நோட்டாக இருந்தால் - 3000

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200 யூரோ பொருளுக்குக் காசு முதலில் கல்லாவில் சேர்ந்து விட்டது.
அந்த  200 ஐயும்  சேர்த்து இன்னும் 800 உடன் 1000 ஐக் கொடுத்தால்
சுமேரியருக்கு 1000 மட்டும் தானே நஸ்டம். :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் ... செந்தில் கவுண்டமணி
வாழைப்பழ கணக்கு போல
நீண்டு போகுதே இந்த பிணக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு காணாமல் போகவேயில்லை.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200 யூரோ பொருளுக்குக் காசு முதலில் கல்லாவில் சேர்ந்து விட்டது.

அந்த  200 ஐயும்  சேர்த்து இன்னும் 800 உடன் 1000 ஐக் கொடுத்தால்

சுமேரியருக்கு 1000 மட்டும் தானே நஸ்டம். :(:lol:

 

வெள்ளைக்கார துரையிடம் கள்ள நோட்டு 1000 கொடுத்து மாற்றிய காசு, தான்... அந்த 200

மிகுதி 800 ஐ பாவிப்பயல் கொண்டு போய் விட்டான்.

 

நம்ம வெள்ளைக்கார துரை... அது கள்ள நோட்டுன்னு, லேட்டாக தான் கண்டு பிடித்தார்.

அவருக்கு... இப்ப, நல்ல நோட்டு கொடுத்தே ஆகணும்.

 

மொத்தத்திலை பீர்பாய் கள்ள நோட்டை கொடுத்து..... 200 க்கு பொருளும், 800´ம் கொண்டு போய் விட்டான்.

இப்ப வெள்ளைக்கார துரைக்கு, 1000 நல்ல நோட்டு, கொடுத்தே ஆகணும்.

நட்டம்.... 2000 பவுண்ஸ். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோவின், கல்லா பெட்டிக்குள் காசு இருந்து....
அதனை அவ, நேரடியாக மாற்றிக் கொடுத்திருந்தால் மட்டுமே.... 1000 நட்டம்.
இப்ப, வெள்ளைக்காரனுக்கும் சேர்த்து...1000 கொடுக்க வேண்டி வந்திட்டுது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ சிரிச்சே வயிறு நொந்து போச்சு விஷ்வா.

 

கணக்கு சரியாத்தானே போட்டேன். :unsure: அங்க போட்டதுக்கு இங்க ........ இருந்தாலும் உங்கள் குறும்புத்தனத்தை இரசிக்காமல் இருக்க முடியவில்லை. :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.