Jump to content

சுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ???


Recommended Posts

எப்பவும் போல சுமே அக்காவின்ட கடையில பீர் களவாடுற கோதாரி இன்டைக்கு காலமே நல்லா பட்டைய போட்டுட்டு வந்து நல்ல பிள்ளையா 200 ரூபாய்க்கு சாமான் வாங்கிட்டு வடிவா 1000 ரூபாய எடுத்து நீட்டினான், நடக்குறத பாத்து அதிர்ச்சியான சுமே அக்கா பேச்சும் மூச்சும் வராம வாங்கி சில்லறைய தேடுனா, பத்து காசு கூட இல்ல பெட்டியில...

அட கடவுளே இவன் கிட்ட சில்லற கொடுக்கலனா அவன் இஷ்டத்துக்கு பின்னாடி வந்து பீர் எடுப்பானே என்டு வருத்தமாக, அந்த நேரம் பாத்து நம்ம வெள்ளக்கார காடு வெட்டி கத்தையா காசு எண்ணிட்டு போறத பார்த்த சுமே அக்கா, அவன் கிட்ட எட்ட நின்னபடியே சில்லற காச மாத்திட்டு வந்து அந்த பீர்பாய் கிட்ட பொருளுக்கு காசு போக மிச்சத்த நாலு தரம் எண்ணி கொடுக்க, அவன் காச வாங்கிட்டு ஹெவ் அ நைஸ் டே ஆன்ரி என்டு சொல்லிட்டு நடைய கட்ட இங்கின ஆனந்த கண்ணீர் வழிய ஆரம்பிச்சிட்டது.

அப்படா ஒருவழியா இனி பீர் களவு இருக்காது என்டு சந்தோச படக்குல்ல, கடையில காத பொழக்கற காண்டாமிருக சத்தம். யாரு நம்ம காடுவெட்டி ஜான்சன் தான். "யார ஏமாத்தர உன் ஆயரம் ரூவா கள்ள நோட்டுனு" திரும்ப கத்த, சுமே அக்கா வேகமா வீட்டுகுள்ள ஒடி கடுகு டப்பாவில தீபாவளி பலகார சீட்டுக்கு யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருந்த ஆயிரம் ருபாய எடுத்த அவனுக்கு கொடுக்க, அவனும் போயிட்டான். அந்த கள்ள நோட்ட திருப்பி திருப்பி பாக்க கண்ணுல ஆனந்த கண்ணீர் அருவியா கொட்டுது.

சரி நமக்கு சனி பெயர்ச்சி நல்ல இல்ல போல, தமிழ் சிறியிட்ட ஒருக்கா ராசிபலன் பார்த்தா சரியா போகுமென்டு மனசுக்க நெனசிட்டு கணக்கு பார்த்த இன்டைக்கு எவ்வளவு காசு நட்டம்னு மண்டையை உடைச்சாலும் கணக்கு பிடிபடல, வெளிய போன மனுசன் இரவைக்கு வாரகுள்ள கல்லாவில காணம போனத கண்டுபிடிக்கனும்.

எவ்வளவு நட்டமென்டு கண்டுபிடிச்சு சொல்லி சுமே அக்காவை காப்பாத்துங்கோ சாமியோவ் :D

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

800 மீதிக்காசு கொடுத்தது

200 ஈரோக்கள் பொருட்கள்(விற்பனைவிலை)

 

மொத்தம் - 1000 ஈரோக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடையின் பொருள் விலை - 200
பீர்பாய்க்கு கொடுத்த மீதிக்காசு.- 800
வெள்ளைக்கார காடு வெட்டி கந்தையாவுக்கு 2´ம் தரம்  கொடுத்த, ஒரிஜினல் காசு 1000.
மொத்தம் 2000 பவுண்ட்ஸ். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவவுக்கு 200 பவுன்ட்ஸ் சாமான்தான் நட்டம்...!  அந்தக் கள்ளநோட்டை  நேற்று நடந்த கல்யாணத்துக்கு கவர்ல போட்டு மொய் எழுதிட்டா...!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பத்தான்  குழம்புகிறார்கள்..... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

800 மீதிக்காசு கொடுத்தது

200 ஈரோக்கள் பொருட்கள்(விற்பனைவிலை)

 

மொத்தம் - 1000 ஈரோக்கள்...

 

ஈரோக்கள் என எழுதிவிட்டேன்

1000 பவுன்ட்ஸ் என வரணும்..

Link to comment
Share on other sites

நன்னா அடிச்சு மல்லு கட்டுங்கோ, நான் நாளைக்கு சொல்லுறன் :)

(சுமே அக்காவிடம் இருந்தும் காப்பாத்துங்கோ அப்படியே)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது  தொழில் நிறுவனங்களில் அடிக்கடி நடப்பது தான்..

 

கடையை  ஆரம்பித்த புதிதில் இவ்வாறு சிலர் திரிவார்கள்

இடம் கொடுத்தால்

ஏமாந்தால் தொடர்வார்கள்

இல்லாது விட்டால் தமக்கு சிக்கலாகிவிடும் என்பதால் வரவே மாட்டார்கள்

 

இங்கு நடக்கும் ஒருவகை திருட்டு..

ஒருவர் வருவார்

இன்னொருவர் வெளியில் நிற்பார்

உதாரணமாக

5 ஈரோக்கு ஒரு பொருளை வாங்குவார்

50 ஈரோ தாளைத்தருவார்

நாம் மிகுதிப்பணம் 45 ஈரோக்களை கொடுத்ததும்

அதை கையில் எடுத்துவிட்டு

என்னிடம் 5 ஈரோக்கள் சில்லறை இருக்கு

மறந்துவிட்டேன்

இந்தா 5 ஈரோ

எனது 50 ஈரோவைத்தா என்பார்

நாம் 50 ஈரோவை வெளியில் எடுத்துவிட்டால்

5 ஈரோவைத்தந்து 50 ஈரோவை வாங்கிவிடுவார்

அதற்குள் நாம் மீதி கொடுத்த 45 ஈரோக்களை மறைத்துவிடுவார்

நமக்கும் மறந்துவிடும்

வெளியில் நின்ற நண்பர் எமக்கு வேறு ஒன்றுக்கு விலை கேட்டபடி

இவரை அவசரப்படுத்துவார்

வெளியேறி விடுவார்கள்..

இப்போ எமக்கு எவ்வளவு நட்டம்.....??

 

ஒருமுறை அண்ணரின் மகன் கடையில் நின்றான்

இவ்வாறு நடந்தது

ஆனால் தான் ஏமாறியது போல் தெரியவில்லை

ஆனால் முடிவாகத்தெரியவுமில்லை என்றான்..

சரி

இன்னொருநாள் வருவார் தானே என காத்திருந்தோம்

நாங்கள் 3 பேர் நிற்கும் போது வந்தார்கள்

மகன் எம்மை உசார்ப்படுத்தினான்

இவனாகத்தான் இருக்கவேண்டும் என..

கதவடியில் அண்ணரின் மகனும்

அவருக்கு பக்கத்தில் நானும்

கல்லாப்பட்டியில் மற்றவருமாக ஆயுத்தமானோம்

தொடங்கினார்

50 ஐக்கொடுத்து

45 வாங்கி 

மீண்டும் சில்லறை தேடும் போது

45 யை உள்ளே வைத்தார்

5 ஈரோவைக்கொடுத்து எனது 50 ஐ தா என்றார்

நான் கல்லாப்பட்டியில் உள்ளவரிடம் சொன்னேன்

50 ஐ  கொடு

45ஐ கேள் என...

அது எனது 50 என்றவர்  

50 ஐ  புடுங்கிக்கொண்டு ஓட ஆயுத்தமானார்...

மேசையில் கையூன்றி எழும்பி நெஞ்சில் காலால் ஒரு உதை..

வெளியில் நின்றவர் எட்டிப்பார்க்க

அவருக்கு மூஞ்சியில ஒன்றுவிழ

ஓடிட்டார்

 

இவருக்கு வெளி  இரும்புக்கதவை சாத்திவிட்டு

ஆறுதலாக வெளிக்காயம் வராதபடி பாடம் எடுக்க

காய்க்கு விளங்கிட்டுது

இவர்கள் இதில டாக்டர் பட்டம் எடுத்தவர்கள் என்று...

3 பேருடைய கால்களையும் மாறிமாறிபிடித்து கும்பிட்டு அழத்தொடங்கிட்டுது..

சூரவேட்டை முடித்து

95 ஈரோக்களையும் புடுங்கிவிட்டு

ஆளை இருவர்  தூக்கிப்பிடித்து வெளியில் விட்டு

இனிமேல் என்ர கடையில இல்லை

இந்த ஏரியாக்கடை எதிலாவது கண்டன் ....

இப்ப  நடந்தது வெறும் சாம்பிள் தான் என அனுப்பி வைத்தது

அதுக்கு பிறகு

அவர் மட்டுமல்ல வேறு ஆட்களும் வாறதில்லை... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடையின் பொருள் விலை - 200
பீர்பாய்க்கு கொடுத்த மீதிக்காசு.- 800
வெள்ளைக்கார காடு வெட்டி கந்தையாவுக்கு 2´ம் தரம் கொடுத்த, ஒரிஜினல் காசு 1000.
மொத்தம் 2000 பவுண்ட்ஸ் ----> அதே தான்

விளையாட்டுக்கு எண்டாலும் இப்படி எல்லாம் நிஜத்தில் நடக்ககூடாது என்று பிரார்த்திப்போம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீர்பாய் முதல் குடுத்தது கள்ள நோட்டாக இருந்தால் - 2000

 

காடு வெட்டி திரும்ப கொடுத்தது கள்ள நோட்டாக இருந்தால் - 3000

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200 யூரோ பொருளுக்குக் காசு முதலில் கல்லாவில் சேர்ந்து விட்டது.
அந்த  200 ஐயும்  சேர்த்து இன்னும் 800 உடன் 1000 ஐக் கொடுத்தால்
சுமேரியருக்கு 1000 மட்டும் தானே நஸ்டம். :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் ... செந்தில் கவுண்டமணி
வாழைப்பழ கணக்கு போல
நீண்டு போகுதே இந்த பிணக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு காணாமல் போகவேயில்லை.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200 யூரோ பொருளுக்குக் காசு முதலில் கல்லாவில் சேர்ந்து விட்டது.

அந்த  200 ஐயும்  சேர்த்து இன்னும் 800 உடன் 1000 ஐக் கொடுத்தால்

சுமேரியருக்கு 1000 மட்டும் தானே நஸ்டம். :(:lol:

 

வெள்ளைக்கார துரையிடம் கள்ள நோட்டு 1000 கொடுத்து மாற்றிய காசு, தான்... அந்த 200

மிகுதி 800 ஐ பாவிப்பயல் கொண்டு போய் விட்டான்.

 

நம்ம வெள்ளைக்கார துரை... அது கள்ள நோட்டுன்னு, லேட்டாக தான் கண்டு பிடித்தார்.

அவருக்கு... இப்ப, நல்ல நோட்டு கொடுத்தே ஆகணும்.

 

மொத்தத்திலை பீர்பாய் கள்ள நோட்டை கொடுத்து..... 200 க்கு பொருளும், 800´ம் கொண்டு போய் விட்டான்.

இப்ப வெள்ளைக்கார துரைக்கு, 1000 நல்ல நோட்டு, கொடுத்தே ஆகணும்.

நட்டம்.... 2000 பவுண்ஸ். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோவின், கல்லா பெட்டிக்குள் காசு இருந்து....
அதனை அவ, நேரடியாக மாற்றிக் கொடுத்திருந்தால் மட்டுமே.... 1000 நட்டம்.
இப்ப, வெள்ளைக்காரனுக்கும் சேர்த்து...1000 கொடுக்க வேண்டி வந்திட்டுது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ சிரிச்சே வயிறு நொந்து போச்சு விஷ்வா.

 

கணக்கு சரியாத்தானே போட்டேன். :unsure: அங்க போட்டதுக்கு இங்க ........ இருந்தாலும் உங்கள் குறும்புத்தனத்தை இரசிக்காமல் இருக்க முடியவில்லை. :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.