Jump to content

லின்சன்


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லின்சன் குடும்பத்தின் கடைக்குட்டி, மூத்தவர்கள் இருவரும் பெண்கள் .தந்தை இளம் வயதிலயே இறக்க தாயின் மீது குடும்ப சுமை விழுகின்றது.வீட்டின் செல்லப்பிள்ளை லின்சன் .சிறுவயது முதல் பெண்களுடன் தான் அவன் அதிகமாக விளையாடுவான்,ஆண் நண்பர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

சகோதரிகளின் உடைகளை சிறுவயதில் அவனுக்கு அணிந்துவித்து அழகுபார்ப்பாள் தாயார்.அவனுக்கு அந்த ஆடைகள் மிகவும் பிடித்தமானதாகவிருந்தது.பாடசாலைக்கு செல்லும் வயதிலும் சகோதரிகளின் ஆடைகளை அணிந்து மகிழ்வான்,தாயார் சகோதரிகள் பேசி தடுத்தாலும் அவர்களுக்கு தெரியாமல் தனிமையில் அணிந்து மகிழ்வான்.

பாடசாலையிலும் அவன் பெண்களுடனே அதிகம் பழகினான் .இது பாடசாலை அதிபருக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது.அந்த சமுகம் ஆண்கள் பெண்களுடன் பழகுவதை ஒரு மதகுற்றமாக கருதுகின்ற சமுகமாகும்.இதனால் அவனை ஆண்கள் கல்வி பயிலும் தனியார் பாடசாலைக்கு அனுப்பி வைக்கும்படி அதிபர் தாயாருக்கு அறிவுறுத்தினார்

அதிபரின் வேண்டுகொளின்படி அவனை தனியார் பாடசாலையில் அனுமதித்தாள் தாயார் .அவர்களின் கிராமத்திலிருந்து சில மைல் தொலைவில் பாடசாலை இருந்தபடியால் ,விடுதியில் தங்கியிருந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

முதல் நாள் பாடசாலை விடுதியில் தாயாரிடமிருந்து பிரியாவிடை பெறும்பொழுது அந்த விடுதியே அதிரும் படி அழுதான்.விடுதி மாணவர்கள் அவனை சமாதனப்படுத்தினார்கள் .விடுதி ஆசிரியர் அவனை மடியில் இருத்தி அன்பாக பேசினார். அவன் அமைதியானவுடன் அவனுக்கு அவனது கட்டில் , கோப்பை போன்றவற்றை காட்டினார்.

தாயாரும் பிரிய மனமில்லாது அவனிடமிருந்து விடை பெற்று சென்றாள்.விடுதியில் முதல்நாள் இரவு படுக்கைக்கு செல்லும் பொழுது தனியாக படுக்க பயமாக இருக்கிறது என விடுதி ஆசிரியரிடம் சொல்லி அழுதான் , விடுதியில் பலர் இருக்கின்றனர் நீ பயப்படாமல் தூங்கு நான் இரவு வந்து உன்னை பார்க்கின்றேன் ,இவனின் பெயர் கென்ட் உனது பக்கத்து கட்டிலில் படுத்திருப்பான் அவசர உதவி தேவை என்றால் இவனிடம் கேள் ,இவன் தான் இந்த விடுதியின் மொனிட்டர் என அறிமுகப்படுத்தி வைத்தார் .கென்ட் உயர்தர வகுப்பில் கல்வி கற்றுகொண்டிருந்தார். லின்சனை கண்ட கென்ட் தன்நிலை மறந்தான் .கென்டினின் அன்பான உபசரிப்பால் லின்சனுக்கு வீட்டின் ஞாபகங்கள் மெல்ல மெல்ல அகலத்தொடங்கியது.

அன்று கென்ட் தன்னிடம் உள்ள சில ஆபாசபடங்களை மேசையில் வைத்து பார்த்து கொண்டிருந்தான்.தற்செயலாக அங்கு வந்த லின்சன் அதை கவனித்துவிட்டான். இருந்தாலும் அதை அவன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.கென்ட் அந்த புத்தகத்தை வேண்டுமென்றே லின்சன் பார்க்கும் படி மறைத்துவைத்துவிட்டு அங்கு இருந்து சென்றுவிட்டான். அவன் சென்றவுடன் லின்சன் அந்த புத்தகத்தை எடுத்து பார்க்க தொடங்கினான்.அதை பார்க்க தொடங்கியவுடன் அவனது அந்தரங்க உறுப்பு அவனது சொல்லை கேட்காமல் சுதந்திரமாக செயல்பட தொடங்கிவிட்டது. கென்ட் தனது திட்டம் சரியாக செயல்படுவதை லின்சனின் அந்தரங்க உறுப்பின் செயல்களின் மூலமறிந்து கொண்டான்.

அவனுக்கு அருகில் சென்று லின்சனின் உணர்ச்சிகளை தூண்டி தனது கட்டளைகளுக்கு அடிபணியவைத்தான்.

ஒவ்வொரு தடவையும் கென்ட தனது உணர்ச்சிகள் தீர்ந்தவுடன் லின்சனை ஆடைகளை அணிந்து கொண்டு உடனே வெளியே சென்றுவிடு யாராவது பார்த்துவிடுவார்கள் என எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுவான்.இதனால் லின்சன் தனது உணர்ச்சிகளுக்கு வடிகால் தேட தன்னையே நம்பவேண்டிய சூழ்நிலை பல தடவை ஏற்பட்டது.

சகமாணவர்களுக்கு இந்த விடயம் தெரிய தொடங்கிவிட்டது."பக்லா" என்று சக மாணவன் ஒருத்தன் இவனை அழைத்தான் .அந்த கிராமத்தில் பக்லா என்றால் அலி என்று அர்த்தம். இதனால் ஆத்திரமடைந்த லின்சன் அவனை பலமாக தாக்கி அருகிலிருந்த கூறிய ஆயுதத்தை காட்டி குத்தி போடுவேன் என மிரட்டினான்.என்னை ஆண் என்று சொல்லுங்கள் அல்லது பெண் என்று அழையுங்கள் ஆனால் பக்லா என்று அழைக்காதீர்கள் மீறி அழைத்தீர்கள் என்றால் கொலை செய்து விடுவேன் என எச்சரித்து பாடசாலையை விட்டு வெளியெ சென்றுவிட்டான்.

உல்லாச விடுதியில் பணியாளர் வேலையில் அமர்ந்தான் அங்கு வரும் வெளிநாட்டு ஆண்களுடன் இவனுக்கு தொடர்புகள் உண்டானது .அப்படி தொடர்பில் வந்தவன் தான் மைக்கல் .மைக்கல் புகைப்படக்கலைஞன் மொடல் அழகிகளை புகைப்படம் எடுப்பவன்.அவன் எடுத்த பல அழகிகளின் படங்களை காட்டினான் .உனக்கு மார்பகங்கள் இருந்தால் நீயும் பிரபல மொடலாக வந்திருப்பாய்,என சொல்லிய படியே அவனது கன்னத்தில் முத்தமிட்டான்.

"உன்னை திருமணம்செய்து அவுஸ்ரேலியாவுக்கு அழைத்து செகின்றேன் உனக்கு சம்மதமா?" .

"என்னையா?நான் ஆண் என்னை எப்படி, திருமணம் செய்ய முடியும் "

"எங்கள் நாட்டில் இதற்கெல்லாம் சட்டமிருக்கு "

"அடுத்த தடவை வரும்பொழுது சகல ஏற்பாட்டுடனும் வருகின்றேன்,நீ பாஸ்போர்ட்டை எடுத்து தயாராக இரு"

மேலதிகாரியுடன் அவுஸ்ரேலியா செல்வதாக தாயாரிடம் சொன்னான்.தாயார் சகோதரிமார் எல்லோரும் மகழ்ச்சியடைந்தனர்

மூன்று மாத்தின் பின் சிட்னி விமான நிலையத்தில் மைக்கலுடன் வந்திறங்கினான்.மைக்கல் அவனை தனது உதவியாளராக சகலருக்கும் அறிமுகப்படுத்தினான்.சிலருக்கு மட்டும் தன்னுடைய ஆசைநாயகன் என சொல்லி வைத்தான்,.

இவன் ஒரு ஆண் என ஒரு மொடலழகியை காட்டினான்.அவன் அதிர்சியடைந்தான் அது எப்படி அவளுக்கு /அவனுக்கு மார்பகங்கள் இருக்கு ?

"சத்திர சிகிச்சை மூலம் அவன் அவளாக மாறிவிட்டாள்"

அதன்பின்பு அவளை கண்டாள் தானாக சென்று அவளிடம் சுகம் விசாரிப்பான் அவளும் இவனுடன் நெருங்கி பழகதொடங்கி விட்டாள்.மொடல் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம் என அவள் கூறியதை கேட்ட லின்சனுக்கு தானும் மொடலக வேண்டுமென்ற ஆசை வரதொடங்கி விட்டது.தனது விருப்பத்தை மைக்கலிடம் சொன்னான் .மைக்கல் சம்மதம் தெரிவித்து தன்னை விவாக ரத்து செய்யும் படி கேட்டு கொண்டான்.

லின்சன் லின்சியாக மாறி பல மொடல்ழகிகளுகு போட்டியாக பணம் சம்பாதித்தான்/ள்.

சில வியாபார பெரும்புள்ளிகளுக்கு ஆசைநாயகியாகவும் இருந்து பணம் சம்பாதிதாள்/ன்.ஒரு வாடிக்கயாளன் அவளை தன்னுடன் நிரந்தரமாக தங்கும்படி கேட்டுகொண்டான் லின்சியும் பணத்துக்கு ஆசைப்பட்டு சம்மதித்தாள்.ஒருநாள் இருவரும் வாக்குவாதத்தில் இடுபட்டனர்.ஆத்திரமடைந்த லின்சி தனது ஆண்குணத்தை வெளிக்காட்டினாள் உன்னை குத்தி கொலைசெய்து அடுப்புக்குள் போடுவேன் என எச்சரித்துவிட்டு உறங்க சென்றுவிட்டாள்/ன் . .இதை ஒரு கெளரவ குறைச்சலாக அவளது வாடிக்கயாளன் உணர்ந்தான்.

அன்று இரவு லின்சி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் .இதையறிந்த வாடிக்கையாளன் சமையலறையிலிருந்த மாமிசம் வெட்டும் கத்தியால் அவளது கழுத்தை வெட்டி ,அங்கங்களையும் வெட்டி அவண்னில் போட்டு விட்டான்....தூர்நாற்றம் அந்த வீட்டை சுற்றி வருவதாக பொலிசார்க்கு அயலவர்கள் தகவல் கொடுத்தனர்.பொலிஸ் படை வருவதை அறிந்த வாடிக்கையாளன் பெரிய குப்பை தொட்டியுனுள் ஒடி மறைந்து தனது கையை வெட்டி தற்கொலை செய்து கொண்டான்.

உனது மகள் லின்சி அவுஸ்ரெலியாவில் இறந்து விட்டார் என தூதரக அதிகாரிகள் தாயாருக்கு செய்தி அனுப்பினார்கள்,ஆனால் அவள் நம்பவில்லை.எனது மகன் தான் அவுஸ்ரேலியாவில் இருக்கின்றான் ,மகள்மார் இருவரும் என்னுடன் இங்குதான் இருக்கிறார்கள் ,தப்பான விலாசத்திற்க்கு செய்தியை அனுப்பிருக்கிறார்கள் என புலம்பத்த்தொடங்கிட்டாள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதைக்கு(கிறுக்களுக்கு) பச்சை புள்ளியும் ஒருத்தரும் இடவில்லை கருத்தும் வைக்கவில்லை என்ன காரணமாக இருக்கும் ?வாசகர் சொன்னல் நான் திருந்தலாமல்லோ :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கிறிஸ்மஸ் ரைம் எல்லோ!! சனத்துக்கு கதை வாசிக்கிற அளவுக்கு மனபக்குவம் வராது...இன்னும் ஒருகிழமையாலை பாருங்கோ எல்லாரும் ஆகா ஓகோ எண்டுவினம்.  :)  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தா... இது,
கதை,கவிதை .... எழுதுற... நேரமா.. இது?
பேசாமல்.... நாலு, பகிடியை விட்டு, மூன்று பேருக்கு... கடுப்பு ஏத்துங்கோ..... பாப்பம். :rolleyes:  :)  :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிச்சனான், நல்ல கதை. பச்சை முடிந்துவிட்டது. பிள்ளைகளை விடுதியில் விடுவது நல்லதில்லை.

 

ஆஸியில் நடந்த பிரச்சனைகள் உங்களுக்கு தெரியுமென்று நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்துக்கு எட்டு அரவாணிகளுக்கு இதுதான் பிரச்சினை...! நல்ல கதை புத்ஸ்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான கதைகளை எம்மவர் விரும்பாததுதான் காரணம் புத்தன் உங்களுக்குப் பச்சை குவியாததுக்கு. என்னிடம் பச்சை இல்லை போட :D இது ஓட ஓட எழுதியதுபோல் இருக்கு. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் இந்தக் கதையைப் போட்டபோதே வாசித்திருந்தேன். கதையை அவரசத்தில் எழுதிய மாதிரி இருந்ததால் கதையா அல்லது செய்திவிவரணமா என்ற குழப்பம் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லின்சன் குடும்பத்தில்.... கடைக்குட்டி, தந்தை இல்லை, இரண்டு சகோதரிகள்....
இளவயதில் அவனுக்கு.  கிடைத்த செல்லமான கவனிப்பும்... அவனில் ஒரு பெண்தன்மையை... உருவாக்கியிருக்கலாம்.
இந்த உலகில்... லின்சன் போன்றவர்கள் பலர் நன்றாக வாழும் போது...
அவுஸ்திரேலிய சென்ற, லின்சனின் முடிவு கவலைக்குரியது.
மனதை... பாதித்த கதை புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் புத்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

இப்ப கிறிஸ்மஸ் ரைம் எல்லோ!! சனத்துக்கு கதை வாசிக்கிற அளவுக்கு மனபக்குவம் வராது...இன்னும் ஒருகிழமையாலை பாருங்கோ எல்லாரும் ஆகா ஓகோ எண்டுவினம்.  :)  :D

 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கு.சா ....நானும் நேற்றுத்தான் கிறிஸ்மஸ் விடுமுறையிலிருந்து வீடு திரும்பினேன்....

புத்தா... இது,

கதை,கவிதை .... எழுதுற... நேரமா.. இது?

பேசாமல்.... நாலு, பகிடியை விட்டு, மூன்று பேருக்கு... கடுப்பு ஏத்துங்கோ..... பாப்பம். :rolleyes:  :)  :D  :lol:  :icon_idea:

 

நன்றிகள் தமிழ்சிறி அதுவும் சரிதான் ...இப்ப கதை ,கவிதை எழுதுற நேரமா? :D

வாசிச்சனான், நல்ல கதை. பச்சை முடிந்துவிட்டது. பிள்ளைகளை விடுதியில் விடுவது நல்லதில்லை.

 

ஆஸியில் நடந்த பிரச்சனைகள் உங்களுக்கு தெரியுமென்று நினைக்கின்றேன்

 

நன்றிகள் உடையார் ...இதுவும் அவுஸ்ரேலியா பிரிஸ்பேர்னில் நடந்த ஒரு உண்மைசம்பவம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கதையை வாசிச்சனான்.பதில் போட ரேப்பிரச்சனை.வேற ஒன்டும் இல்லை. :)

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை வாசிக்கும் போது " கிழக்கே போகும் ரயில், 16 வயதினிலே, புதிய வார்ப்புகள்" போன்ற மண்வாசனைக் கதைகளை (சுரேஸ் ) எடுத்துகொண்டிருந்த பாராதிராஜா , "டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள்"  போன்ற மண்வாசனை அற்ற (லின்சன்) படங்களை எடுத்தது போல  இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

இந்தக் கதையை வாசிக்கும் போது " கிழக்கே போகும் ரயில், 16 வயதினிலே, புதிய வார்ப்புகள்" போன்ற மண்வாசனைக் கதைகளை (சுரேஸ் ) எடுத்துகொண்டிருந்த பாராதிராஜா , "டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள்"  போன்ற மண்வாசனை அற்ற (லின்சன்) படங்களை எடுத்தது போல  இருக்கிறது.

ஆகா ஆகா ....தலைவா என்னை அந்த மாதிரி குளிரப்பண்ணிட்டியள்.....அதற்கு நன்றிகள்....அதுசரி என்ன பழைய கதைகளை தூசிதட்டி எடுத்து வாசிக்கிறீயள்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.