Jump to content

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

  • Replies 709
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

கோதாரிவிழுவார்.....ரிவி...சீரியல்.....tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா கைது முதற் கொண்டு இலங்கையில் இன்று அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் "அரசியல் ஆற்றுகைகளை" (Political Performances) அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமாயின் எல்லாத்தையும் திரும்ப ஆரம்பத்தில் இருந்து பார்க்க வேண்டியுள்ளது.

ஐ மீன் 56 க்கு முந்தைய கால அரசியலில் இருந்து.....

அது அலுப்படிச்சால்,

அட்லீஸ்ட் 2009 வரைக்குமாவது கொஞ்சம் ரிவேர்சில் போக வேண்டியுள்ளது.

அந்த வகையில்,

போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்ட இலங்கை அரசின் முதலும் முதன்மையானதுமான குறிக்கோள்....

திரும்ப இன்னொரு "போராட்டம்" உருவாகாமல் இருப்பதற்கான நிலைமையை உருவாக்குவதாகவே இருந்தது. அதாவது புலிகள் திரும்ப தலையெடுக்காமல் பார்த்து கொள்வது.

புலிகளை அடக்க கைகொடுத்த அமெரிக்காவும் சரி, சீனாவும் சரி, இந்தியாவும் சரி இதைத்தான் வற்புறுத்தி இருக்கும்.

ஆனால் மகிந்த அதை தன்னுடைய "மொக்கு" வழியில் செய்ய வெளிக்கிட்ட போது அது சரிவராது என்று அமெரிக்காவுக்கும் தெரியும். இந்தியாவுக்கும் தெரியும். சிங்கள அதிகார வர்க்கம் மற்றும் புத்திசீவிகளுக்கும் தெரியும்.

இனப்பிரச்சினைக்கு ஒரு "தீர்வை" கொண்டு வருவதன் ஊடாகவே தமிழர்களை அமைதிப்படுத்த முடியும் என்பது யாவரும் அறிந்த விடயம்.

ஆனால் என்ன மாதிரியான தீர்வு?

அமெரிக்கா அல்லது மேற்கு உலகைப் பொறுத்தளவில் தமது ஏகாதிபத்திய நலன்கள் சார்ந்து ஏதாவது ஒரு தீர்வு வந்தால் சரி.

இந்தியாவை பொறுத்தளவில்
"ராஜீவ்-ஜே ஆர்" ஒப்பந்தத்துக்கு மேலாலை போகாத வகையில் எந்த தீர்வு வந்தாலும் சரி.

சிங்கள பேரினவாத அதிகார வர்க்கத்தை பொறுத்தளவில் அடிப்படைவாத சிங்கள கட்சிகள், அமைப்புகள், பௌத்த மடலாயங்களை மீறி ஒரு தீர்வை கொண்டு வர முடியாது. கனக்க வேண்டாம், தமிழ் மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட "ராஜீவ்-ஜேஆர்" ஒப்பந்தத்தை கூட கொண்டு வர முடியாது.

அப்ப என்னதான் செய்யிறது?

"பம்மாத்து தீர்வு" ஒன்றை நடைமுறைப்படுத்துவது!

ஆனால் புலிகள் ஆழப் பதிய வைத்து சென்ற அந்த "தாயகக்" கனவை மீறி ஒரு பம்மாத்து தீர்வை தமிழர்கள் இலேசில் ஏற்கமாட்டார்கள்.

அதுக்காக உரிமைகளை அள்ளி வழங்கவா முடியும்?

தீர்வு இவ்வளவுதான் என்பது தீர்மானமானது. ஆனால் எப்படி திணிப்பது?

யார் சொன்னால் தமிழ் மக்கள் கேட்பார்கள்?

புலிகள் சொன்னால் கேட்பார்கள். ஆனால் புலிகள்தான் இலல்லையே? அப்படி இருந்தாலும் அவர்கள் ஒத்து வரப்போறதில்லை.

புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லது புலிகளின் பிரதிநிதிகள் என்று அறியப்பட்டவர்கள் சொன்னால் கேட்பார்கள்.

அதன் பிரகாரம் காலகாலமாக கைகொடுத்து வந்த டக்ளசையும் கழட்டிவிட்டிட்டு, கடைசி நேரத்தில் கைகொடுத்த கருணா, பிள்ளையான் ஆகியோரின் காலையும் வாரிவிட்டிட்டு....

த.தே.கூ இன் தயவை நாடினார்கள்.

மகிந்தவுடன் சேர்வதில் இருந்த தர்மசங்கடங்கள் மைத்திரி-ரணில்-சந்திரிகா கூட்டுடன் சேர்வதில் த.தே.கூ க்கு இருக்கவில்லை.

அதற்கு முன்னமே த.தே.கூ இலிருந்து கஜேந்திரகுமார் அணி பிரிந்து த.தே.ம.மு என ஒரு தனிக் கூட்டு உருவாகிற்று.

அவர்கள் தனிப்பட்ட மோதல்களால் பிரிந்தார்களோ கொள்கை அடிப்படையில் பிரிந்தார்களோ....

எதுவாக இருந்தாலும் அதனையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டது சிங்கள பேரினவாதம்.

எப்படி?

த.தே.கூ இன் ஊடாக மிதவாத தமிழ் தேசியவாதிகளையும், போலி தமிழ்த் தேசியவாதிகளையும், த.தே.கூ ஐ புலிகளின் பிரதிநிதிகள் என நம்பும் அப்பாவி மக்களையும் த.தே.கூ இன் கீழ் ஸ்தாபனமயப்படுத்தி அதனூடாக தமது நிகழ்ச்சி நிரலை நகர்த்துவது ஒரு பக்கம் செல்ல.....

அப்படி செய்யும் போது த.தே.கூ இன் கள்ளத்தனத்தை கண்டு நிட்சயம் ஒரு பகுதியினர் (தீவிர தமிழ்த் தேசியவாதிகள், உண்மையான புலி விசுவாசிகள்) கொதிக்கத் தொடங்குவர். அந்த பிரிவினரை அப்பிடியே விட்டால் அது இன்னொரு குழப்பத்துக்கு வழி வகுக்கும்.

அப்ப என்ன செய்வது?

ம்....

அதற்கு வசமா வாய்த்தவரும், கைகொடுப்பவரும்தான் கஜேந்திரகுமாரும், த.தே.ம.மு உம் அதன் பின்னர் தமிழ் மக்கள் பேரவையும்!

த.தே.கூ இன் மீது அதிருப்தி கொண்ட தீவிர தமிழ்த் தேசியவாதிகளுக்கும், உண்மையான புலி விசுவாசிகளுக்குமான போலியான "புரட்சிகர" தலைமையை வழங்குவதன் மூலம் த.தே.ம.மு உம் சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலையை நிறைவைற்றி வருகின்றது.

மொத்தத்தில் த.தே.கூ + த.தே.ம.மு

இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களேதான்.

-தொடரும்

FB

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.