Jump to content

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

  • Replies 709
  • Created
  • Last Reply
திருமதி கமலினி செல்வராஜனும் கலையும்..!!!

தமிழ் - நாடகம், திரைப்படத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும் விளங்கிய கமலினி செல்வராஜன் அவர்களின் மறைவு, கலைத்துறைக்குப் பேரிழப்பாகும். 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தனது அறிவிப்புப் பணியை ஆரம்பித்த அவர், பின்னர் ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வந்த ஆயுபோவன் என்ற நிகழ்ச்சியை 1990 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் முதன் முதலில் நடத்திய பெருமைக்குரியவர்.

இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோரின் மூத்த மகளான கமலினி, கொள்ளுப்பிட்டி சென். அந்தனீஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். பின்னர் களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். 

தந்தை மு. கணபதிப்பிள்ளை - இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது, அவரது நண்பராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராசஜனைக் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.

மேலும், சில்லையூர் செல்வராசன் எழுதிய 'தணியாத தாகம்' வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக 'கமலி' பாத்திரத்தில் இவர் நடித்தார். இலங்கை வானொலியில் 'கலைக்கோலம்' முதலான சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து வழங்கியுள்ளார் .

ரூபவாஹினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய 'திருப்பங்கள்', எஸ். ராம்தாசின் 'எதிர்பாராதது', எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய 'சமூக சேவகி' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கமலினி செல்வராஜன் ரூபவாஹினியிலும், ஐ.ரி. என். தொலைக்காட்சியிலும் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார்.

இலங்கையில் 1976 இல் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற “கோமாளிகள்” திரைப்படத்தில் அவரது கணவர் சில்லையூர் செல்வராஜனின் காதலியாக கமலினி செல்வராஜன் நடித்தார். 

இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற “கோமாளிகள் கும்மாளம்” என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது. 

S. ராம்தாஸ், T. ராஜகோபால், S. செல்வசேகரன், B. H. அப்துல் ஹமீட், K. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், K.A. ஜவாஹர் போன்ற பலர் அத் திரைப்படத்தில் நடித்தனர்.

ஏற்கனவே, வானொலி மூலம் பிரபலம் பெற்ற கலைஞர்களைக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டமை அத்திரைபடத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

'ஆதர கதாவ" என்ற சிங்களத் திரைப்படத்திலும் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று கமலினி செல்வராஜன் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் பெற்ற விருதுகள் சில வருமாறு:

- நாட்டுக்கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக கலாசார அமைச்சின் விருது (1995)

- கொழும்பு றோயல் கல்லூரி நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்புக்காக கொழும்பு றோயல் கல்லூரியின் விருது (2008)

- நோர்வே கலை மன்றம் நாட்டுக்கூத்து பாரம்பரியத்தை பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது (2010)

- 35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் இளைஞர் நற்பணி மன்றம் விருது

1995 ஆம் ஆண்டில், கணவர் செல்வராசனின் இறப்பை அடுத்து இவர் கொழும்பில் தனது மகன் அதிசயனுடன் வசித்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக டிமென்ஷா என்ற மறதி நோய்க்கு உட்பட்ட அவர், சுகயீனமுற்ற நிலையில் 2015 ஏப்ரல் 7 ஆம் திகதி அன்று கொழும்பில் காலமானார்.

அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தார், நண்பர்கள் அபிமானிகள், அனைவருடனும் நாமும் பங்கெடுக்கின்றோம்.

தமிழ் மொழிக்கும், தமிழ் வானொலி / தொலைக்காட்சி மற்றும் கலைத்துறைக்கும் அவர் ஆற்றிய அரும்பணி என்றும் போற்றுதற்குரியது.

அன்னாரின் ஆத்மா அமைதியாக உறங்கட்டும்...!!!

- நினைவுப் பகிர்வு : உதயன் எஸ். பிள்ளை -

— with Kavitha Uthayan.

Link to comment
Share on other sites

Facebook

[#வசீகரா என் நெஞ்சினிக்க எனும் இனிமையான பாடலினை தன் நாத இசை மூலம் மேலும் இனிக்கச் செய்து ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட #குமரன்....... என்னவென்று சொல்ல....!!!! சொல்ல வார்த்தைகளே இல்லை.... நீங்களே பாருங்கள் பிடித்தால் #பகிருங்கள்...!!!]

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

C0j72ZgUQAA6DT4.jpg

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜஸ்டின் .....
அரசியலில் என்னைக் கவர்ந்த வெகு சொற்பமான  விரல் விட்டு எண்ணக் கூடிய நாயகர்களில் ஒருவர்......

 

 

Link to comment
Share on other sites

உலகின் மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி வெனிசூலாவில் உள்ளது

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.