Jump to content

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

  • Replies 709
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2017 at 0:13 AM, Knowthyself said:

இனிமை

 

முன்னைய காலங்களில் அவள் தாமரை .. இசை என்று இருந்திருக்கலாம்.
ஆனால் இப்போ நிச்சயமாக 
வலது பக்கம் நின்று பாடும் பிள்ளையில்தான் இருக்கிறாள்!

சரஸ்வதிக்கு எந்த ஊரு ?? 
இப்போ என்ன பேரு?

clear version!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ரோட்டைக் கடக்க கண்தெரியாத பெண்ணுக்கு உதவும் குரங்கு.

Link to comment
Share on other sites

Image may contain: 1 person, standing and outdoor

 

 

 

 

 

 

 

 

நாசாவில் சாதனை படைத்த வன்னித் தமிழ் பொறியியலாளன்

அமெரிக்காவில் விண்பொறியியல் ஆய்வுக்கல்வி மாணவர் ர.ரணேந்திரன் தனது கற்கை நெறி திட்டத்திற்காக வடிவமைத்த ஏவுகணை ஒன்றுக்கே “அகரன்” என பெயரிட்டுள்ளார்.

இது குறித்த செய்திகளும், காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது. அத்துடன், இவரின் திட்டத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

யார் இவர் ?

முல்லைதீவை வசிப்பிடமாக கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் புதல்வனே
ரானேந்திரன் .இவர் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிர மணிய வித்தியாசாலை
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்று பின்னர்

சென்னை Srm பல்கலைக்கழகத்தில் விண்பொறியியல் இளங்கலை அறிவியல் கற்றவர்.

பல்கலையால் அப்போது அனுப்பப்பட்ட நுண்செய்மதி ஒன்றில் கற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

Isro வின் பல இணைப்பகங்கள் உள்ளடங்கலாக இந்தியாவில் பல வான்பொறியியல் நிறுவனங்களில்
கற்கைப்பயணம் மேற்கொண்டிருந்தவர்.

விண்ணறிவியல் தொடர்பான பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.

பட்டப்பின் கல்வி தற்போது அமெரிக்காவில்.
Spacecraft navigation dynamics and contol- விண்கலம் செலுத்துகை இயக்கவியலும்
கட்டுப்படுத்தலும் என்கின்ற நுண்ணறிவியலில் ஆய்வுக்கல்வியை மேற்கொள்பவர்.

இது தொடர்பில் பதினொரு செயற்றிட்டங்களிலும் ஈடுபட்டவர்.

விண்கலங்களை தாய்க்கலத்துடன் இணைக்கும் முறையின் மேம்பாடு பற்றி தனி ஆய்வை மேற்கொள்பவர்.

பல செயற்றிட்டங்கள் மற்றும் ஆய்வுமுறைகள் தொடர்பில், அமெரிக்க விண்வெளிவீரர்கள் மற்றும்
அறிவியலாளர்கள் பலரது பாராட்டைப்பெற்றவர்.

காலவெளி அறிவியலில் மேற்கொள்ளும் தனிப்பட்ட ஆய்வுகளுக்காக அமெரிக்க அறிவியலாளர்களின்
கவனத்தைப்பெற்றவர்.
பாராட்டையும்.

வியாழக்கோளின் சுழற்சியால் விளையும் பொதுச்சார்பு விளைவுகளில் ஒன்றான காலவெளிச்சட்ட
இழுகையான Einstein thirring lense விளைவை மையப்படுத்திய அறிவியல் உரையாடலில்
நாசாவின் கோளியல் காந்தமண்டல ஆய்வுக்கூட அறிவியலாளரால் பதிலளிக்க இயலாத ஆய்வுக்கேள்வி
என அவையில் பாராட்டுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

விண்ணறிவியல் சார்ந்த பல அறிவியல் மாநாடுகளில் பங்குகொண்டவர்.

வானூர்தி அறிவியல் ,ஏவுகணை அறிவியல், செய்மதித்தொழில் நுட்பம் உள்ளடங்கலான பல
பிரிவுகளில் செயற்றிட்டங்களை மேற்கொண்டவர்.

கற்கை நெறி சார்ந்து தற்போது வடிவமைத்த ஏவுகணைக்கு அகரன் எனப்பெயரிட்டார்.

வரும் மாதங்களில் மேலும் திறன்வாய்ந்த ஏவுகணைகளால் தமிழை அழகுபடுத்துவேன் என தெரிவித்தார்.

https://www.facebook.com/abinayaa123?hc_ref=NEWSFEED

 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆளுக்கு எலி கடித்ததால் வெள்ளைக்காரனாக மாறிவிட்டாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குழந்தைக்கு இருக்கும் புத்தியைப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.