Jump to content

அழகான சில படங்கள்


Recommended Posts

WR_20180422065826.jpeg
சீனாவில் சீதோஷ்ணம் நிலையற்றதாக உள்ளது. சீனாவின் கிழக்குபகுதி நகரான குயிங்டோ நகர் மின்னொளியில் ஜொலிக்கையில் அதைச்சுற்றி பனியும், வானில் சூரிய வெளிச்சமுமாக கண்ணைக்கவருகிறது
WR_20180422113444.jpeg
வெயிலில் இருந்து தப்பிக்க இந்தியா கேட் பகுதியில் குளிக்கும் இளைஞர்கள். இடம்: டில்லி.
ELARGE_20180422111101258977.jpeg
ஒரு துளியாவது...?: மழை நீரை சேமிக்காதது, மரங்களை வளர்க்க அக்கறை காட்டாதது போன்றவற்றால், தண்ணீரை தேடிய பயணம் இன்னும் முடிந்தபாடில்லை. இதோ... இந்த பறவைக்கு ஒரு துளி தண்ணீரை கூட கொடுக்க முடியாத துயரத்தை எண்ணி, வெட்கப்படத்தான் வேண்டும். இடம்: திருப்பூர் அருகே குல்லாவூர்.
ELARGE_20180422063928636745.jpeg
மேக சிதறல்கள் ஏரி நீரில் பிரதிபலிக்க அடிவானில் பொட்டு வைத்தது போல் உதயமாகும் சூரியன் இடம்: லேபஸ், கிழக்கு ஜெர்மனி
Link to comment
Share on other sites

  • Replies 892
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பறவையை பார்க்க மனசு வலிக்கிறது....! 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
ELARGE_20180517050830159813.jpeg
ஹவாய் தீவிலுள்ள கிளாவே எரிமலை தொடர்ந்து சீறி வரும் நிலையில் அதன் வாய்ப்பகுதியில் கொந்தளித்த லாவா குழம்பின் வெளிச்சத்தில் புகை மண்டலம் ஜொலித்த காட்சி.
 
ELARGE_20180515223518035510.jpeg
இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லையான காஸாவில், சூரியன் அஸ்தமனமாகும் அழகிய காட்சி.
ELARGE_20180515011503086664.jpeg
டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் உள்ள நீர்நிலையில் பூத்திருக்கும் தாமரை
ELARGE_20180514014646114895.jpeg
பாத்திரத்தில் இருக்கும் நீரை குடித்து தாகம் தீர்க்கும் மைனா இடம்: புதுடில்லி
ELARGE_20180508143657307992.jpeg
ஹவாய் தீவின் பாகோ பகுதியில் ஏற்பட்ட எரிமலைக்குழம்பு சாலைநோக்கி வந்த காட்சி.
ELARGE_20180508084846855500.jpeg
'ம்... ஹூம்...! ஒண்ணும் ஆகலே...': 'நானும் பல மாசமாக படியேறு மனு கொடுத்து சலிச்சு போச்சு. காரியம் மட்டும் கைகூடலை. உனக்கு? " எனக்கும் அதே கதிதான்,' இப்படித்தான் இவை பேசியிருக்கக்கூடும். 'நமக்கு ஒரு நாள் விடியும்' என்று மக்களும், சளைக்காமல் கலெக்டர் அலுவலக கதவுகளை கைவலிக்க தட்டிக்கொண்டே உள்ளனர். ஆனால், அதிகாரிகளுக்குத்தான் கேட்பதே இல்லை. இடம்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், ஒரு வித்தியாசமான 'கிளிக்'.
Link to comment
Share on other sites

ELARGE_20180520080048728626.jpeg
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் ஒரே நேரத்தில் 18,000 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட கோள அரஙகம் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்க கூடியதாக உள்ளது.
ELARGE_20180519072633772171.jpeg
ஜெர்மனியின் பிபெசெய்ம் நகரில் தாங்கள் கட்டிய கூட்டின் மீது நின்றிருக்கும் பறவை குடும்பம்.
ELARGE_20180519033215169522.jpeg
நாள் முழுவதும் வயலில் உழைத்து விட்டு, அந்தி சாய்ந்தபின் வீடு திரும்பும் விவசாயி. இடம்: அகர்தலா, திரிபுரா.
ELARGE_20180518080655440088.jpeg
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரின் வயல் வெளியில் தாழ்வாக பறக்கும் உல்லாச பறவை.1
Link to comment
Share on other sites

ELARGE_20180527074134274969.jpeg

கற்களுக்கு இடையே தங்கியிருக்கும் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டும் கூபே பறவை இடம்: தர்மசாலா

ELARGE_20180527100731286964.jpeg
ஒரு மொபட், லாரியானது!: திருப்பூர், நடராஜா தியேட்டர் ரோட்டில் ஒரு மொபட்டில் இதற்கு மேல் பொருட்களை கொண்டு போக முடியாது என்றவாறு, பயணம் செய்யும் வியாபாரி.
ELARGE_20180526080044882184.jpeg
இத்தாலி நாட்டின் பியோபார்கோ உயிரியல் பூங்காவில், தண்ணீரில் விளையாடி மகிழும் குட்டிக்கரடிகள்..
ELARGE_20180525032554430979.jpeg
ஜெர்மனியிலுள்ள கொலோன் உயிரியில் பூங்காவில், புதிதாக பிறந்த குட்டிகளை காண ஆர்வமுடன் எட்டிப்பார்க்கும் பாலைவனக் கீரி.
 
ELARGE_20180522065604708762.jpeg
வாஷிங்டன் வார்வ் பகுதியில் அதிகாலை நேரத்தில் செவ்வானத்தின் நிறம் ஆற்று நீரில் பிரதிபலித்த அழகு.
 
ELARGE_20180520151007279130.jpeg
" கிஸ் " டரி பிரிட்டன் இளவரசர் ஹாரி , நடிகை மெகன் மெர்க்கல் திருமணம் கோலாகலமாக நடந்தது. இது தொடர்பான படங்கள் முக்கிய பத்திரிகைகளில் முதலிடத்தை பிடித்தது.

ELARGE_20180520201218803690.jpeg

டில்லியில் குடிநீரை லாவகமாக சுவைக்கும் மயில்.

ELARGE_20180521040405451070.jpeg
சுவிஸ் நாட்டின் மான்ட்ருக்ஸ் அருகே புல்வெளியில் மலர்கள் பூத்திருக்க எதிர்த்திசையில் ஏரி அருகே மேகங்கள் தவழும் மலைக்காட்சி மனதை மயக்குகிறது.

சுவிஸ் நாட்டின் மான்ட்ருக்ஸ் அருகே புல்வெளியில் மலர்கள் பூத்திருக்க எதிர்த்திசையில் ஏரி அருகே மேகங்கள் தவழும் மலைக்காட்சி மனதை மயக்குகிறது.

Link to comment
Share on other sites

ELARGE_20180527074134274969.jpeg
கற்களுக்கு இடையே தங்கியிருக்கும் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டும் கூபே பறவை இடம்: தர்மசாலா
ELARGE_20180528055552193483.jpeg
ஹவாய் தீவின் கடற்கரையில் மாலை வேளையில் சூரியன் மறையும் அழகை ரசிக்கும் மக்கள்.
ELARGE_20180530071214493520.jpeg
கிரீஸ் நாட்டில் தெரிந்த அழகிய முழு நிலவு. இடம்: ஏதென்ஸ்.
ELARGE_20180601073123560179.jpeg
பெலாரஸ் நாட்டின் டுகோரா என்ற இடத்தில் மரக்கிளை ஒன்றின் மீது அமர்ந்து சிறகை விரிக்கும் அழகிய பறவை.
Link to comment
Share on other sites

  • 1 month later...
ELARGE_20180713013459710649.jpeg
தன் குஞ்சுகள் பசியாற பாசத்துடன் இரை கொடுக்கும் புல்புல் பறவை இடம்: கோல்கட்டா
ELARGE_20180712121527040534.jpeg
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, கர்நாடக மாநில போலீஸ் சார்பில், வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இடம்: பெங்களூரு.
ELARGE_20180706130722292035.jpeg
அம்மா உடுத்திய சேலையின் மணம்... இன்னும் இன்னும் வேணும்! மீண்டும் குழந்தையாய் பிறக்கும் ஆசையை தூண்டும் இந்த காட்சி காண கிடைத்த இடம்: கோவை இருகூர் சாலையோரம்.
ELARGE_20180701190219252178.jpeg
டில்லி உயிரியல் பூங்காவில் விளையாடி மகிழ்ந்த வெள்ளை நிற மான்கள்.
WR_20180712113016.jpeg
தொடர் கனமழையால் நீரில் மூழ்கி, கடல் போல் காட்சி தரும் மும்பை புறநகர் ரயில்நிலையம்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
114462_DSC_3385_689786169_220718124800.jpg
கள்ளிச்செடியில் பூ: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் கள்ளிச் செடியில் பூத்துள்ள பூக்கள்.
 
 
WR_20180722083106.jpeg
ஒடிசா மாநிலம் புரியில் தேங்கிய மழைநீரில் பிரதிபலிக்கும் 3 பிரம்மாண்ட தேர்கள்.
 
ELARGE_20180719070102562062.jpeg
அமெரிக்காவின் மய்னே மாகாணத்தின் பால்மவுத் துறைமுகத்தில் அதிகாலை நேரத்தில் அடிவானில் தோன்றிய செம்மேகமும், சுவரில் அமைதியாக ஓய்வெடுக்கும் பறவையும்.
 
 
ELARGE_20180719024758783057.jpeg
இது மேகக்கூட்டம் அல்ல!: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், காட்டுத்தீயால் எழுந்த புகை வானில் மேகம் போல திரண்டுள்ளது.
Link to comment
Share on other sites

ELARGE_20180728062327345199.jpeg
ஹாங்காங்கில் தோன்றிய பிளட் மூன் வானவியல் ஆர்வலர்களை பரவசப்படுத்தியது.
ELARGE_20180727044135005831.jpeg
இங்கிலாந்தின் டுன்ஸ்டேபிளில் உள்ள விப்ஸ்னாடே உயிரியல் பூங்காவில் நீராடும் பழுப்பு நிற கரடி
ELARGE_20180726070625412214.jpeg
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா அலிபோரா உயிரியல் பூங்காவில், காதல் மொழி பேசும் ஒட்டகச்சிவிங்கிகள்.
ELARGE_20180723151935455245.jpeg
மண்ணுலகில் பிறந்து புத்தம் புது உலகை காணும் ஆர்வ நடை போடும் அரிய வகை இன கொக்கு குஞ்சு. இடம்: நியூஆர்லியன்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா.
Link to comment
Share on other sites

ELARGE_20180731184717547158.jpeg
சிறப்பு...!: உடுமலை அமராவதி அணை பூங்காவில் உள்ள மரத்தில் பூத்துள்ள நாகலிங்க பூக்கள் .
ELARGE_20180731183935337080.jpeg
பேரணியோ..!: மதுரை வைகை ஆற்றில் வாத்துக்கள் போட்டு தூரிகை ஓவியம்.
ELARGE_20180731192242875303.jpeg
அழகாய் பூத்ததே..!: திண்டுக்கல் நாகல்நகர்புதுாரில் அழகாக பூத்துள்ள கொன்றை பூக்கள்
ELARGE_20180730184706527472.jpeg
அழகாய் பூத்ததே..!: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வனப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு பூக்கும் குறிஞ்சி மலர்கள் அழகாய் பூத்துள்ளன.
Link to comment
Share on other sites

ELARGE_20180802021911988755.jpeg
குறிஞ்சி மலர்!: நீலகிரி மாவட்டத்தில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களின் அழகு
 
ELARGE_20180802021345589381.jpeg
கீதம் பாடும் துணிகள்!: ஆடி காத்தில் அம்மியே நகரும் அப்படிப்பட்ட காற்றை தாக்கு பிடிக்காமல் காற்றில் கீதம் பாடும் துணிகள். இடம்: கோவை குறிச்சி குளம்.
ELARGE_20180802021709278940.jpeg
மீன்பிடிப்பு!: இயற்கை எழில்மிகுந்த மன்னார் வளைகுடா அருகே நல்லதண்ணீர் தீவு அருகே நாட்டுப்படகில் மீன்பிடிக்கும் மீனவர்கள்.
 
ELARGE_20180730191344495690.jpeg
ஆச்சர்யமுங்க...! ..: கோவை மதுக்கரை வனப்பகுதி் சாலையோரம் ஒரே மரத்தில் பூத்துள்ள இரு வண்ண மலர்கள் பார்ப்பவர் கண்களை கவர்கிறது.
Link to comment
Share on other sites

ELARGE_20180803020420474333.jpeg
காலிபோர்னியா மாகாணத்தின் மாரிபோஸா கவுன்டியில் மாலை நேரத்து சூரியனுக்கு நேராக பறந்து சென்ற விமானம்.
 
ELARGE_20180801054043728359.jpeg
லவ்வா பழத்தை ருசி பார்க்கும் அணில். இடம்: புதுடில்லி.
 
ELARGE_20180803013411098906.jpeg
புதிய வரவு!: நீர் நிறைந்துள்ள குளங்களுக்கு புதிய வரவாக வந்துள்ள பெலிக்கான் பறவைகளின் அணிவகுப்பு. இடம்; உக்கடம் வாலாங்குளம்.
 
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
ELARGE_20180818071043033328.jpeg
தெற்கு ஜெர்மனியின் ஸ்வென்னிகன் அருகே பூத்துள்ள மலர்களை நோட்டமிடும் பட்டாம் பூச்சி.
 
ELARGE_20180819064449478538.jpeg
போஸ்னியா நாட்டின் சரஜேவோ நகரில் நடந்த டைவ் அடிக்கும் போட்டியி்ல் கலந்து கொண்ட வீரர்.
 
ELARGE_20180820065748000643.jpeg
சுவிஸ் நாட்டின் ஜெர்மாட் அருகே நடந்த பசுமாடுகளுக்கு இடையே நடந்த போட்டியில் மோதிய பசுக்கள்.
ELARGE_20180821070537240433.jpeg
ஜெர்மனியின் கோஹன்ஜோலர்னில் உள்ள கோட்டைக்கு பின்புறம் எட்டிப்பார்க்கும் அதிகாலை சூரியன் நம் கண்களை கூச செய்கிறது.
Link to comment
Share on other sites

  • 5 weeks later...
ELARGE_20180925070409701419.jpeg
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்துள்ள காண்டா மிருக குட்டி.
 
ELARGE_20180926200438706533.jpeg
தனி அழகு..!: மரக்கிளையில் அமர்ந்து பழத்தை ருசிக்கும் அனிலின் அழகு தனி அழகு தான். இடம்: கோவை,சிஙகாநல்லூர்.
 
ELARGE_20180926195556671411.jpeg
விந்தை செய்கிறதோ..!: சூரியன் தன் கதிர்களை விரிப்பதை தடுக்கும் வகையில் மேகக்கூட்டங்கள் விந்தை செய்கிறதாம். இடம்:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை
ELARGE_20180925181709088331.jpeg
பசுமை போர்வை:: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கண்ணாபட்டி பகுதியில் நடப்பட்ட நெல் நாற்றுகள் கண்ணுக்கு குளிச்சியூட்டும் வகையில் பசுமையாக காட்சியளிக்கிறது.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ELARGE_20181004200528038830.jpegஎஸ்கேப்!: தமிழ்நாட்டுக்கு ரெட் அலார்ட்டா... எஸ்கேப்... இடம்: கோவை காளப்பட்டி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.