Jump to content

இந்தோனேசியா மலசியாக்கு இஸ்லாம் பரப்பப்பட்டது எப்பிடி


Recommended Posts

பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்குமான காலகட்டத்தில் இஸ்லாம் தென்-கிழக்கு ஆசியாவில் பரவியது. அந்த நேரத்தில் தென்-கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மூன்று வலிமையுள்ள அரசாங்கங்கள் ஆண்டு கொண்டிருந்தன. மலேசியாவில் ஸ்ரீவிஜயர்களும், இந்தோனேஷியாவில் மஜாபஹித்களும், தாய்லந்தை சயாமிய அரசர்களும் ஆண்டு கொண்டிருந்தார்கள். அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் பொதுவாக இந்து, பவுத்த மற்றும் பழங்குடி நம்பிக்கைகள் கொண்டவர்கள்.

காலிஃபா ஒத்மான் (656) காலத்தில் சீனாவுடன் வணிகம் செய்யச் சென்ற இஸ்லாமியர்கள் வழியிலிருந்த இந்தோனேஷியாவுடன் முதன் முதலாக தொடர்பு கொள்ள ஆரம்பித்தார்கள். அதற்கு பல வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீவிஜய அரசர்களுடன் தொடர்பு கொண்ட முஸ்லிம் வணிகர்கள் சுமத்திராவின் துறைமுகங்களை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். 904-ஆம் வருடத்திலிருந்து பனிரெண்டாம் நூற்றாண்டின் மத்திய பகுதிவரை இந்தத் தொடர்பு மேலும் கூடியது. இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிலைபெற்ற பின்னர், இந்தியாவின் குஜராத், வங்காளம், மற்றும் தென் இந்தியாவிலிருந்து முஸ்லிம் வணிகர்கள் இந்தோனேஷியாவிற்கு பெருமளவில் வருகை தர ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு இந்தியாவிலிருந்து சென்ற முஸ்லிம் வியாபாரிகள் இஸ்லாமை அங்கு (இந்தோனேஷியாவில்) பரப்பி, நிலை நிறுத்தும் எண்ணத்துடனேயே சென்றார்கள். கரையோர துறைமுக நகரங்களான மலாக்கா மற்றும் வடக்கில் சுமத்ராவிலிருக்கும் சமுத்ராவில் (அல்லது பசாய், ஜாவா) சென்று தங்கினார்கள். அங்கிருந்த காஃபிர் பெண்களை மணந்து இஸ்லாமிய குடும்பங்களைப் பெருக்கினார்கள். இவ்வாறு சிறு அளவில் பத்தாம் நூற்றாண்டில் ஆரம்பித்த முஸ்லிம் குடியேற்றம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் சுமத்ரா பகுதியில் பல்கிப் பெருகியிருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் இரண்டு சிறு நகர ராஜ்ஜியங்களை – சமுத்ராவில் (பசாய்) மற்றும் பெர்லாக்கில் – உருவாக்கியிருந்தார்கள். மொராக்கோ நாட்டுப் பயணியான இப்ன்-பதூதா 1345-46-ஆம் ஆண்டுகளில் முஸ்லிம் நகர அரசுகளில் ஒன்றான சமுத்ராவிற்கு சென்றதாகக் குறிப்பிடுகிறார்.

பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் இந்தோனேஷிய காஃபிர்கள் எவரும் பெருமளவிற்கு இஸ்லாமிற்கு மதம் மாறவில்லை. காஃபிர்களின் சகிப்புத்தன்மையை உபயோகித்துக் கொண்ட முஸ்லிம்கள் பெருமளவிலான காஃபிர் பெண்களை மணந்து தங்களின் எண்ணிக்கையைக் கூட்ட ஆரம்பித்தார்கள். ஓரளவிற்குத் தங்களின் எண்ணிக்கையை கூட்டிக் கொண்ட முஸ்லிம்கள் அதனைத் தொடர்ந்து அங்கிருந்த காஃபிர்களின் மீது பயங்கரமான ஜிகாதினை (“புனிதப் போர்”) நடத்தா ஆரம்பித்தார்கள். சுல்தானிய நகரான சமுத்ராவிற்குச் சென்ற இப்ன்-பதூதா, அப்போது அதனை ஆண்டு கொண்டிருந்த சுல்தான் அல்-மாலிக் அஸ்-ஜாகிரை “மிகச் சிறந்த மற்றும் திறந்த கரங்களை” உடையவராக வர்ணிக்கிறார்.

“சுல்தான் அல்-மாலிக் தொடர்ந்து காஃபிர்களின் மீது “புனிதப் போர் (ஜிகாத்)” செய்பவராக இருந்தார்….காஃபிர்களின் வாழ்விடங்களின் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் அவரால் மேற்கொள்ளப்பட்டன….சுல்தானின் படைகள் அந்தப் போரில் மிகவும் உற்சாகம் உடையவர்களாக அவருடன் இந்தப் புனிதப் போரில் பங்கெடுத்தார்கள். அங்கிருந்த காஃபிர்களின் மீது தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தி, அவர்கள் அமைதியாக வாழ வேண்டுமானால் வரி (ஜிஸியா) கொடுக்கும்படி வைத்தார்கள்”

இருப்பினும் பதினான்காம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தோனிஷிய இஸ்லாம் பெருமளவிலான காஃபிர்களை மதம் மாற்றம் செய்ய இயலாமல், அங்கிருந்த சில சிறு பகுதிகளில் மட்டுமே செல்வாக்குடன் இருந்தார்கள். ஆனால் அந்த நிலைமை அப்போது இந்தோனேஷியாவை ஆண்டு கொண்டிருந்த ஸ்ரீவிஜய அரசனான பரமேஸ்வரன் மோசடியான முறையில் மதம் மாற்றப்பட்ட பின்னர் முற்றிலுமாக மாறியது.

ஸ்ரீவிஜய அரசனான பரமேஸ்வரன் இந்தோனேஷியாவின் பாலம்பெங்கிலிருந்து ஆண்டுகொண்டிருந்தான். வலிமை குன்றிய ஸ்ரீவிஜய அரசின் அதிகாரம் தாழ்ந்து அவரகளின் எதிரிகளான மஜாபாஹித்கள் வலிமை பெற ஆரம்பித்திருந்தார்கள். மஜாபாஹித்களுடனான சச்சரவுகள் காரணமாக, பரமேஸ்வரன் தனது தலைநகரை பாலெம்பெங்கிலிருந்து தெமாசெக் தீவிற்கு (இன்றைய சிங்கப்பூர்) மாற்றிக் கொண்டான். பின்னர் அங்கு நடந்த ஒரு சண்டையில், மஜாபாஹித்களின் நண்பர்களான சயாமியர்களின் இளவரசன் தெமாகியை பரமேஸ்வரன் கொன்றுவிட்டான். இதனால் கோபமுற்ற சயாமிய அரசன், மஜாபாஹித்களுடன் சேர்ந்து கொண்டு ஸ்ரீவிஜயத்தின் மீது படையெடுத்தான். பரமேஸ்வரனைக் கொல்வதே அந்தப் படையெடுப்பின் நோக்கம்.

அதன் காரண்மாகவே பரமேஸ்வரன் தெமாசிக் தீவிலிருந்து தப்பி முவாருக்கும் அதன் பின்னர் மலாக்காவிற்கும் செல்ல வேண்டியதாயிற்று. அதனைத் தொடர்ந்து 1402-ஆம் வருடம் மலாக்கா ஸ்ரீவிஜயத்தின் தலைநகராகியது.

இதற்கிடையில், பல நூற்றாண்டுகள் நடந்த தொடர்ச்சியான முஸ்லிம் குடியேற்றங்கள் காரணமாக மலாக்கா முஸ்லிம்களின் பிடியில் இருந்தது. இந்தியாவுடனான கடல் வாணிபத்தில் அந்த முஸ்லிம்களின் பங்கு மிக முக்கியமானதாகவும் இருந்தது. பரமேஸ்வரனின் அரசவைக்குள் மெல்ல மெல்லப் புகுந்த முஸ்லிம்கள் பின்னர் அவனது ஆட்சியின் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறினார்கள். முக்கியமாக முஸ்லிம்கள் ஸ்ரீவிஜய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, சயாமிய மற்றும் மஜபாஹித்களுக்கு எதிரான போர்களில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இருப்பினும் ஸ்ரீவிஜய அரசு இந்தப் போர்களைச் சமாளிக்க இயலாமல் திணறிக் கொண்டிருந்தது.

இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட முஸ்லிம்கள் பரமேஸ்வரனை அணுகி, அவன் முஸ்லிமாக மதம் மாறினால் தாங்கள் மேலும் பல முஸ்லிம் படைவீரர்களை அவனுக்கு உதவியாக அனுப்புவதாக பேரம் பேசினர். ஆனால் பரமேஸ்வரன் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். அதே சமயம் மஜாபாஹித்களுடான தொடர்ச்சியான போர்களின் காரணமாக பரமேஸ்வரன் நாளுக்கு நாள் பலவீனமடைந்து கொண்டிருந்தான்.

இப்படியிருக்கையில் ஒரு நாள், அரேபிய முஸ்லிம் வியாபாரிகள் பேரழகியான ஒரு பஸாய் கலப்பினப் பெண்ணை பரமேஸ்வரனுக்குப் பரிசளித்தார்கள். அரேபிய தந்தைக்கும் இந்தோனேஷிய தாய்க்கும் பிறந்தவள் அப்பெண். பரமேஸ்வரன் அந்த அடிமைப் பெண்ணைக் கண்டவுடன் காதலுற்றான். அவனால் அந்தப் பெண் கருவுற்றாள். தனக்கென ஒரு வாரிசு உருவாகாமல் இது நாள் வரை தவித்துக் கொண்டிருந்த பரமேஸ்வரனுக்கு மகிழ்ச்சி கட்டுக்கடங்கவில்லை. எனவே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய பரமேஸ்வரனிடம், அவன் முஸ்லிமாக மதம் மாறினால் மட்டுமே திருமணம் நடக்கும் என்று சொல்கிறாள் அந்தப் பெண்.

இந்த நேரத்தில் தொடர்ந்த தோல்விகளால் மிகவும் மோசமான நிலையிலிருந்த பரமேஸ்வரன் அவனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முஸ்லிம் படைவீரர்களை முழுவதும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தான். தனக்கென ஒரு வாரிசு இல்லாத வருத்தத்திலுமிருந்த பரமேஸ்வரன் உடனடியாக அதற்குச் சம்மதிக்கிறான். மதம் மாற்றப்பட்ட பரமேஸ்வரன் அந்தப் பெண்ணை மணந்து தனது அரசியாக்கினான்.

1410-ஆம் வருடம் முஸ்லிமாக மதம் மாறிய பரமேஸ்வரன், ஸ்ரீவிஜய அரசினை ஒரு முஸ்லிம் சுல்தானிய நாடாக – சுல்தானேட் ஆஃப் மலாக்கா – அறிவித்ததுடன் அவனது பெயரையும் சுல்தான் இஸ்கந்தர் ஷா என மாற்றி கொண்டான். அவன் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்ணும், அவனைச் சுற்றியிருந்த இஸ்லாமியர்களும் அவனை ஒரு முழு இஸ்லாமிய நம்பிக்கையாளனாக மாற்றினர்.

1414-ஆம் வருடம் சீனப் பேரரசர் யங்-லோவின் பிரதிநிதியாக மலாக்காவிற்கு விஜயம் செய்த சீன இஸ்லாமியரான மா-ஹுவான், “சுல்தான் மிகக் கண்டிப்பான நம்பிக்கையாளராக” மாறியிருந்தார் எனக் குறிப்பிடுகிறார்.

பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென்-கிழக்கு ஆசியாவில் காஃபிர்களின் மீதான வன்முறை சிறிதளவு அதிகாரம் பெற்ற சுமத்ராவில் நிகழ்ந்ததாக இப்ன்–பதூதா கூறியதைப் பார்த்தோம். மலாக்கா சுல்தானிய ஆட்சி நிறுவப்பட்ட பின்னர் இந்த வன்முறை (ஜிகாத்) பெருமளவில் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது. இஸ்லாமின் ஆக்கிரமிப்பை அந்தப் பகுதிகளில் பரப்பும் நோக்கத்துடன் சுல்தானேட்டைச் சுற்றியிருந்த நாடுகளின் மீதான ஜிகாத் பெருமளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது. மத அடிப்படைவாதம் கொண்ட சுல்தானியப் படையினர் “காஸி”களாகும் (காஃபிரை கொல்பவர்கள்) நோக்கத்துடன் சுற்றியிருந்த நாடுகளின் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.

பெரும் அழிவினை எதிர் நோக்கியிருந்த பரமேஸ்வரனும் (சுல்தான் இஸ்கந்தர் ஷா) அவனது வாரிசுகளும் பின்னர் வலிமையுடையவர்களாக, அந்தப் பிராந்தியத்தின் தலைவிதியை மாற்றும் வல்லமையுடையவரகளாக மாறினார்கள். இன்றைய மலேசியாவின் பெரும்பகுதியும், சிங்கப்பூரும், கிழக்கு சுமத்ராவும், போர்னியாவும் சுல்தானேட்டின் கீழ் வந்தன. பின்னர் போர்னியோ தனியே பிரிந்து சுதந்திர சுல்தானிய நாடாக மாறியது. அதனைத் தொடர்ந்த பல நூற்றாண்டுகளுக்கு தென் கிழக்கு ஆசிய இஸ்லாமிய பிராந்தியங்களின் – மலேசியா, அசே, ரியூ, பலெம்பங்க், சுலவாசி போன்ற – தலைமையகமாக மலாக்கா இருந்து வந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டில் மலாக்கா சுல்தானிய அரசுகள் அதனைச் சூழ்ந்திருந்த சயாமிய மற்றும் மஜபாஹித் அரசுகளின் மீது ஜிகாதினைத் தொடர்ந்து நடத்தி வந்தன. 1526-ஆம் வருடம் இஸ்லாமியர்கள் ஜாவாவின் மீது படையெடுத்து வென்றதுடன் மஜபாஹித் அரசின் ஆட்சி முடிவிற்கு வந்தது. ஓரளவிற்கு தப்பிப் பிழைத்த சயாமிய அரசுடன் தொடர்ந்து போரிட்டு வந்த மலாக்கா சுல்தானியர்கள், தாய்லாந்தின் தெற்குப் பிராந்தியத்தையும் வென்றார்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இஸ்லாமியர்கள் தாய்லாந்தின் தலைநகரான அயுத்யாவின் மீது படையெடுத்து ஏறக்குறைய அதனைக் கைப்பற்றும் நிலைக்குச் சென்றார்கள்.

ஆனால் எதிர்பாரமல் அந்த நேரத்தில் மலாக்காவினை நோக்கிச் சென்று கொண்டிருர்ந்த போர்ச்சுக்கீசிய வியாபாரக் கப்பல்கள் அங்கு வந்தடைந்தன. போர்ச்சுக்கீசியர்களுக்கும், மலாக்கா சுல்தானுக்கும் நடந்த கடுமையான போரின் காரணமாக சயாம் (தாய்லாந்து) பேரழிவிலிருந்து தப்பியது.

1509-ஆம் வருடம் போர்ச்சுக்கீசிய கப்பல்படைத் தளபதியான அட்மிரல் லோபாஸ்-டி-சிகுரா ஒரு பெரும் கப்பல் படையுடன் மலாக்காவை சென்றடைந்தார். அங்கு ஆட்சியிலிருந்த சுல்தான் மகமூத் ஷா, போர்ச்சுக்கீசியர்களைத் தாக்கி அவர்களை பின் வாங்க வைத்தான். பின்னர், 1511-ஆம் வருடம் வேறொரு பெரும் போர்ச்சுக்கீசிய கப்பல்படை இந்தியாவின் கொச்சியிலிருந்து வைசிராய் அல்ஃபோன்ஸோ டி’அல்பர்குர்கி தலைமையில் மலாக்காவின் மீது படையெடுத்தது. அதனைத் தொடர்ந்து நாற்பது நாட்கள் நடந்த போரின் பின்னர், ஆகஸ்ட் 24-ஆம் தேதி மலாக்கா போர்ச்சுக்கீசியர்களிடம் வீழ்ந்தது. சுல்தான் மஹ்முத் ஷா மலாக்காவை விட்டுத் தப்பியோடினான்.

அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகள் முஸ்லிம் படைகளுக்கும், போர்ச்சுகீசியர்களுக்குமான மோதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. இந்தப் பிரச்சினையின் காரணமாக இஸ்லாமியர்கள் சயாமின் மீதான படையெடுப்பைத் தொடர முடியாமல் போனது. சயாமிய ஆட்சியாளர்கள் போர்ச்சுக்கீசியர்களுடனும், டச்சுக்காரர்களுடனும் ஒப்பந்தங்கள் இட்டுக் கொண்டு, இஸ்லாமியர்களை எதிர்த்துப் போராடினார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் சயாமியர்கள் மலாக்கர்களின் மீது படையெடுத்து, முந்தைய போர்களில் தாங்கள் இழந்திருந்த பகுதிகளை மீட்டெடுத்துக் கொண்டார்கள். முஸ்லிம் சுல்தானேட்டாக இருந்த பட்டானியையும் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்கள்.

The Hindu

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரர் வந்ததால்தான் இந்தியா, தாய்லாந்த் போன்ற நாடுகள் முழுமையான முஸ்லிம் மத மாற்றத்தில் இருந்து தப்பின (கிறிஸ்தவ மதமாற்றம் நடந்தும்). ஒரு காலத்தில் பௌத்த, இந்து நாடாக இருந்த இந்தோனேசியா, மலேசியா என்பன முழுமையான முஸ்லிம் நாடுகள். உலகளிலேயே அதிகம் முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தோனேசியா என்று நினைக்கிறன்.

இதற்கு முன்பு இப்பிராந்தியங்களில் பௌத்த பரம்பலும் நடந்திருக்கின்றன. பௌத்தம், இஸ்லாம் கிட்ட தட்ட சம கால மதங்கள்.

எனக்கு ஒரு சிங்கள நண்பர் சொன்னார்: சிங்களவனும் தமிழனும் சண்டை பிடித்து சாகிறம். இவன் பிள்ளைகளை பெற்று இனப் பெருக்கத்தை கூட்டிக் கொண்டே இருக்கின்றான். கடைசியிலே குரங்கு அப்பம் பிரித்த கதைதான்.

மதங்கள் மனிதனை நல் வழிப் படுத்தவே தோன்றின. மற்றவன் மேல் திணிக்க அல்ல.

Link to comment
Share on other sites

வரலாற்றை நோக்கும்போது மதம் என்றைக்கும் மானுட செழுமைக்கு உதவியதாக இல்லை. மாறாக பேரழிவுகளைத்தான் கொடுத்திருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.