Jump to content

கார் வாங்கலாம் வாங்கோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கார் வாங்கலாம் வாங்கோ

மேற்குலகில் வாழும் நாங்கள் பொதுவாகப் போக்குவரத்திற்காக எப்போதுமே ஒரு வாகனத்தை வைத்திருப்போம்.கார் வசதி இல்லாத சிலர் தங்கள் தூரப் பயணத்திற்கு புகையிரதமோ  அல்லது பேருந்தோ அல்லது விமானமோ எனப் பல வேறு வழிகளில் பண விரயத்துடன் தங்கள் பிரயாணத்தைச் செய்யவேண்டியிருக்கும்.

சோ பொதுவாக நீங்கள் பாவனைக்கு வைத்திருக்கும் காரை வாங்கும்போது பல விடயங்களை அலசி ஆராய்ந்து தான் அந்தக்காரை வாங்கியிருப்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என யாரும் வாகனத்தை வாங்குவதை இரும்புவதில்லை.

பலர் முதலில் யோசிப்பது பதிய காரா? அல்லது ஏற்கனவே பாவிப்பில் இருந்த  காரா?  எந்தக் கொம்பனிக் கார் வாங்கலாம் அந்தக்காரின் அமைப்பு, வேகம் எப்படி இருக்கும்  என்றுதான் என  நான் நினைக்கின்றேன்.

அடுத்த பிரச்சனை எப்படி வாங்கும் காரின் பணத்தைச்  செலுத்துவது என்பது இன்னும் முக்கியமான பிரச்சனையாக இருக்கும்.
ஒரே தவணையில் செலுத்துவதா? அல்லது மாதாந்த அடிப்படையில் கடன் மூலம் தீர்ப்பதா எனவும் யோசிக்கலாம்.

இப்போது நான் ஒரு கார் வாங்க விரும்புகின்றேன் என வைத்துக் கொண்டால் அதில் வரும் எங்களுக்குத் தெரியாத பல சிக்கலகள் இருக்கும். இந்தச் சிக்கல்களை எவை? அவற்றை எப்படிச் சமாளிப்பது?
கார் வாங்கும்போது எங்களுக்குத் தெரியாத பல தொழில் நுட்பப் பிரச்சனைகளை எவ்வாறு கண்டு அறிந்து கொள்ளலாம்?

எந்தக்காரை வாங்கினால்  அளவிற்கதிகமாகப்  பெறுமதி குறையாமல் மீண்டும் விற்பனை செய்யலாம்?
புதிய கார் வாங்குவது நல்லதா? அல்லது பாவனையில் இருக்கும் காரை வாங்குவது நல்லதா? அல்லது என்னைப்போல நன்றாக அடிபட்ட பழைய காரை வாங்கி அது உடையும் வரை :D:lol: பாவித்து விட்டு இரும்புக்கு மிகுதியை விற்று விடுவது நல்லதா?
உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

வாங்கோ கார் வாங்கலாம் வாங்கோ :D

Link to comment
Share on other sites

இதுக்கெல்லாம் நான் கனக்க சிந்திக்கிறேல்ல.. மனதில் தோன்றுவதை பாரியாருடன் கலந்து பேசிவிட்டு செயற்படுத்துவதுதான். :D

கனடாவுக்கு வந்த புதிதில், கார் வாங்கியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் ஒரு Camry வாங்கினேன். அப்போது வேலை கிடைத்திருக்கவில்லை. காரும் 14 வருடப் பழசு.. சில தடவைகள் பழுதாப் போய் தொல்லை கொடுத்துவிட்டது.. வேலைகிடைத்து பிறகு குழந்தையும் பிறக்க புதிய வாகனம் ஒன்றை வாங்கினேன். (RAV 4) பிறகு சில வருடங்களில் corolla ஒன்றையும் வாங்கினேன். இருவருக்கும் வாகன சுதந்திரம் வேண்டும் என்பதற்காக.

இரண்டையுமே தவணைப் பணத்தில் வாங்கியே கட்டி முடித்தேன். உண்மையில் இங்கு வாகனத்தில் காசைப் போடுவது ஆற்றில் போடுவதுக்கு சமம். ஆனாலும் குளிர்காலத்தில் நடுவழியில் நின்று விடுவதைப்போன்ற சிக்கல்/ஆபத்து வேறெதுவும் இல்லை. இந்த அனுபவத்தினால்தான் புதிய கார்களை வாங்கினேன். வேலை விடயமாக தூர இடங்களுக்கு சென்றுவர இந்த உத்தரவாதம் தேவையாக உள்ளது.

இரண்டாவது காரையும் ஏன் டொயட்டாவில் வாங்கினேன் என்றால் முதல் காருக்கு அவர்கள் வழங்கிய தரமான சேவையே காரணம். இரண்டு வாகனங்களையும் டொயட்டா டீலரிடம் மாத்திரமே பராமரிப்பு சேவைக்கு கொடுத்து எடுக்கிறேன்..

ஆகவே இனிமேல் காரை மாத்தினாலும் புது கார்தான் வாங்குவேன்.. :D அந்த வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

இது என்ன பா சிவில் engineer மார் எல்லாம் 120 k மேல உழைக்கிராக்கள் எல்லாம் Toyota ஓடையே நிக்குறீங்க :D

Link to comment
Share on other sites

இது என்ன பா சிவில் engineer மார் எல்லாம் 120 k மேல உழைக்கிராக்கள் எல்லாம் Toyota ஓடையே நிக்குறீங்க :D

விரலுக்கு ஏத்த வீக்கம்தானே இருக்க வேணும்.. நம்மட லெவலுக்கு அவ்வளவுதான் வரும்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புதுக்கார் வாங்குகையில் விற்பனை வரி 20% கட்டணும். ஒரு முறை தான் அறவிடுவார்கள்.
 
பசை உள்ளவர்களும், பெரு நிறுவன உயர் அதிகாரிகளும் தமது வாகனங்களை 6 மாதங்களுக்கு ஒரு முறையோ, அல்லது பிடிக்காவிடில் அதற்கு முன்னரோ மாத்துவார்கள்.
 
ஆகவே நான் எப்போதும் 6 மாத வயதுள்ள புதுக்கார் வாங்கி 20% சேமித்துக் கொள்வேன். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதல் இரண்டு கார்களையும் ஏலத்தில்தான் வாங்கினேன்! அதன் பின்னர் ஏலத்தில் சென்று கார் வாங்குமளவிற்கு நேரம் இல்லாததால் கார் டீலர்களிடமே சென்று வாங்கினேன்.

ஏலத்தில் கார் வாங்குவது சூதாட்டம் போன்றது. எனவே சிலவேளை கார் எடுத்துக்கொண்டு வரும்போதே இடையில் நின்றாலும் நின்றுவிடும்!!

ஆனாலும் ஏலத்தில் வரும் கார்களின் தகவல்கள் முன்கூட்டியே இணையத்தில் கிடைப்பதால் அவை பற்றிய விமர்சனங்களைப் படித்துப் பார்த்துவிட்டுச் செல்லுவது நல்லது. குறைந்த பட்சம் எவ்வளவு விலைக்கு மேல் கேட்கக்கூடாது என்று அறிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

காரை ஓடிப் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் விருப்பமான காரை அவர்கள் ஸ்ரார்ட் செய்யும்போது அதன் சத்தத்தை வைத்து எஞ்சின் எப்படி இருக்கும் என்று ஓரளவு அனுமானிக்கலாம். அத்தோடு எக்ஸோஸ்ற்றில் கைவைத்து புகையுடன் நீராவியைத் தவிர்த்து எண்ணைக் கசிவு வருகின்றதா என்று பார்க்கவேண்டும். காஸ்கற் போயிருந்தால் அதைப்போலச் செலவு இல்லை. வேறு ஏதாவது கசிவுகள் நிறுத்துமிடத்தில் உள்ளனவா என்று பார்த்து எல்லாம் திருப்தி என்றால் வாங்க முயற்சிக்கலாம்.

பலருடன் போட்டிபோட்டு வாங்கவேண்டிவருவதால் விருப்பமான கார் கிடைக்காமல் போகலாம். எனவே மூன்று நான்கு கார்கள் பார்க்கவேண்டி வரும். இரண்டு மூன்று தடவைகள் போகவேண்டிவரும். பொறுமை இருந்தால் நல்ல கார் நியாயமான விலைக்கு வாங்கலாம்.

குதிரைக்குக் குணம் அறிந்துதான் கொம்பைக் கடவுள் கொடுக்கவில்லையாம். அதனை நினைவில் வைத்திருப்பதால் ஒருபோதும் பவர் கூடின கார்களை நான் வாங்கியதில்லை. என்றாலும் கார் ஓட ஆரம்பித்த முதல் இரண்டு வருடங்களில் ஒவ்வொரு வாரமும் கேம்பிரிட்ஜ் - இலண்டன் பயணங்களில் என்னை முந்தி ஒரு காரையும் போகவிட்டதில்லை! ஒருமுறை என்னுடன் போட்டிக்கு ஓடியவனை முந்தவிடாது கண்டபடி ஓடி அவன் பின்னுக்கு வந்து மோதும்படி திடீரென்று பிரேக் அடித்துவிட்டேன். இப்படியான மோட்டு வேலைகளைப் பார்க்கக்கூடாது என்று அதற்குப் பின்னரும் ஒவ்வொருமுறையும் நினைத்துக்கொண்டாலும் விரைவுப்பாதைகளில் போகும்போது மைக்கல் சூமாக்கர் போன்று நினைத்துக் கொள்வது மாற்றமுடியாத பலவீனமாக உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில்... ஒரு முறையாவது, புதுக்கார் வாங்கி ஓட வேண்டும் என்பதற்காக, "மெர்சிடஸ் 190" வாங்கி... 18 வருடம், 280,000 கி.மீ. வரை ஓடி Katalysator  இல்லாமல் எமது நகரத்துக்குள் ஓட முடியாது என்ற சட்டம் வந்த பின் அதனை விற்றேன்.
 

புதுக்காரில் சௌகரியம், அசௌகரியம் என்று இரண்டும் உண்டு.
அதனை குறிப்பிட்ட கால அளவுகளில் அதனை பராமரிப்புக்கு விட்டு, அதன் புத்தகத்தில் பதிந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு முறை பராமரிப்புக்கு.... 500 - 1000€ வரை செலவாகும்.

 

இங்கு வாகனம் வைத்திருந்து 28 வருடங்களானாலும், இப்போ வைத்திருக்கும் காருடன் மூன்று கார்களையே வாங்கியுள்ளேன்.
கார் வாங்கப் போவது என்று தெரிந்தவுடன் எந்தக் கொம்பனி கார் வாங்கலாம்.... என்று மனைவியுடனும், நண்பர்களுடனும் கலந்து ஆலோசிப்பேன்.

 

இன்ன கார்தான் ... வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் ஊரில் உள்ள அது சம்பந்தம்பட்ட கார் கொம்பனிகளின் விற்பனை நிலையங்களையும், பத்திரிகைகளையும் தனியே... நோட்டமிடுவேன்.(இதற்கு 2 மாதம் எடுக்கும்)
 

நிறமும், விலையும், கி.மீ எவ்வளவு உள்ளது என்பது பிடித்துக் கொண்டவுடன் மனைவியுடன் சென்று அந்தக் காரை மீண்டும் நோட்டமிட்டு, அதன் முன்னைய உரிமையாளர்... எத்தனை வயது உடையவர் என்பதை அறிய முயற்சிப்பேன்.

அதனை பென்சன் எடுத்தவர் பாவித்திருந்தால்... இன்னும் சந்தோசம்.
இளையவர்களும், துருக்கியரும் பாவித்த காரை வாங்கவே மாட்டேன்.

 

எல்லாம் சரி வந்து விட்டால்..... காரின் தரத்தை அறிய ஒரு Hobby மெக்கானிக் ஒருவரையும், குறிப்பிட்ட விலையிருந்து 1500 € குறைக்க இன்னுமொரு நண்பர் உள்ளார், அவரையும் அழைத்துச் சென்று பேரம் பேசி.....   :D

விற்பனையாளர் உங்களுக்கு காரே விற்பதில்லை... என்று சொல்லும் அளவுக்கு, அரியண்டம் கொடுத்து.... காரை வாங்கி வந்து விடுவேன். :)

Link to comment
Share on other sites

உண்மையில் எனக்கு பிடித்த கார்கள் டோயார்ரா ......மஸ்டா ...........இதைத்தவிர வேறு எந்தக்கார்களையும் நான் வாங்குவதில்லை  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கார் வாங்கும் போது...நாம பாக்கிறது

1. வருடம்
2. நிறம்
3. கிலோ மீற்றர்
4. காரின் வரலாறு
 

பெரும்பாலும் ஜேர்மன் கார்களும்... அமெரிக்க வாகனங்களுமே வாங்க பிடிக்கும்... ஜேர்மனி கார்களில் பிடிக்காத விடயம் அதன் மெயின்ரெனன் .... யானை விலை.... குதிரை விலை... உதிரிப்பாகங்கள்...$120 மணித்தியால லேபர்.

 

BMW விட Audi உள்ளும் வெளியும் நன்றாக இருக்கும்.... ! 

வாங்குங்க... ஏ 8 8 சிலின்டர்....4.2 லீட்டர் இன்ஜின்.... பறக்கலாம் அதிவேக பாதையில்.....

சோகம் என்ன என்றா....12மாதத்தில் 11 ஸ்பீடிங் ரிக்கற்.... :(   (சத்தியமாக)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது காரையும் ஏன் டொயட்டாவில் வாங்கினேன் என்றால் முதல் காருக்கு அவர்கள் வழங்கிய தரமான சேவையே காரணம். இரண்டு வாகனங்களையும் டொயட்டா டீலரிடம் மாத்திரமே பராமரிப்பு சேவைக்கு கொடுத்து எடுக்கிறேன்..

ஆகவே இனிமேல் காரை மாத்தினாலும் புது கார்தான் வாங்குவேன்.. :D அந்த வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. :lol:

 

ரொயோட்டா கார்கள் தான் தற்சமயம் உலகில் விற்பனையில் முன்னணியில் நிற்கின்றன. குறைந்தளவு பெற்றோல் செலவில் ஓடக்கூடியதாக அதன் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கின்றது எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால் அதிவேக பாதையில் வேகமான காற்றுக்குச்

சிறிது அசைவும் இருக்குமாம் உண்மையா ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொன்னாலும் Toyota - Toyota தான் :D

 

Me it is LEXUS.

 

என் கனவு தேவதையே......

 

LS.png

 

1445068258134588994.jpg

 

lexus-nx-interior_a_mid.jpg?itok=tPytWjS

Link to comment
Share on other sites

Me it is LEXUS.

 

ஏழைக்கேற்ற எள்ளுறுண்டை காணும் என நான் நினைப்பதால் Lexus பாவித்து பாத்ததில்லை :icon_idea:

Lexus ன் விலைக்கு தகுந்தமாதிரி அது நன்றாகத்தானே இருக்கும் நாதமுனி அண்ணா :)

Link to comment
Share on other sites

ரொயோட்டா கார்கள் தான் தற்சமயம் உலகில் விற்பனையில் முன்னணியில் நிற்கின்றன. குறைந்தளவு பெற்றோல் செலவில் ஓடக்கூடியதாக அதன் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கின்றது எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால் அதிவேக பாதையில் வேகமான காற்றுக்குச்

சிறிது அசைவும் இருக்குமாம் உண்மையா ? :D

எந்த வாகனத்தின் சில்லிலும் 4 ஆணிகள் மட்டும் இருந்தால் அசையத்தான் செய்யும்.. :D சின்னக் கார்களில் அநேகமாக 4 ஆணிகள்தான் இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைக்கேற்ற எள்ளுறுண்டை காணும் என நான் நினைப்பதால் Lexus பாவித்து பாத்ததில்லை :icon_idea:

Lexus ன் விலைக்கு தகுந்தமாதிரி அது நன்றாகத்தானே இருக்கும் நாதமுனி அண்ணா :)

 

ஜேர்மன் காரர்கள் அது எக்ஸ்ட்ரா, இது எக்ஸ்ட்ரா என்று ஒவ்வொரு சிறு மேலதிக விசயங்களுக்கும் காசு பறிப்பார்கள். (உதாரணம்: electric window, electric mirror, etc)
 
ஒரு நண்பரின் C கிளாஸ் merc பார்த்து விட்டு அப்படியே வேண்டும் எண்டு போனால், அங்க அந்த கார் very basic நிலையில் இருந்து டீலருக்கு, டீலர், உங்களுக்கு ஏத்த மாதிரி, உங்களுக்கு என்னென்ன தேவை என்று கேட்டு விலை சொல்லுவார்கள். 
 
ஆனால் lexus ரகத்தில் இது எல்லாமே basic ஆக தருவதே சிறப்பு. அதுவே அவர்களது சந்தை தந்திரம். டொயோடா  குடும்ப luxury brand என்பதால்...
 
Lexus, இந்த வகை பிராண்டில் இது, இது கிடைக்கும், இது தான் விலை என்று நம்பி போகலாம்.. :wub:

 

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில்   volkswagen passat வாங்கினேன் ஐரோப்பாவில் முதல் முதல் வாங்கிய கார் .....நல்ல இதமாக இருக்கும் ........ஒரு நாள் நண்பருடைய toyota corolla  காரை ஓடும்படி வந்தது .ஆகாக என்ன இதமாக இருந்தது  ஜெர்மன் காருக்கும் ஜப்பான் காருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தெரிந்தது ..............சில மாதங்களின் பின் toyata corolla  stationwagon ஒன்று வாங்கினேன் பல நாட்கள் என்னோடு சேர்ந்து உழைத்தது .........தற்போது மஸ்டா வைத்திருக்கிறேன் ஸ்பீட் breaker .........உண்மையில்  இது வரை காலமும் என்னுடன் எனது நிலைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்குது .............எனக்கு பிடித்த சில்வர் கலரிலும் அது  அமைந்தது தான் இன்னும் சிறப்பாக தெரிந்தது :D  :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரியை  திறந்த வாத்தியாருக்கு நன்றிகள்

 

 

கார் வாங்கும்போது நான் கவனிப்பவை..

 

1- காரை வாங்கியபின்னர் ஏற்படக்கூடிய பராமரிப்புச்செலவு( விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும்)

 

2- நிறம்

 

3- வாகனத்தின் நிறை (நம்ம ஓட்டத்துக்கு வழுக்காது பறக்காது :lol:  இருக்கணும்)

 

4- வாகனத்தின் குதிரைவலு - பரிசுக்குள் (நகரம்) அதிகம் ஓடுவதால் குதிரைவலு குறைந்த வாகனத்தையே தெரிவு செய்வேன். அத்துடன் காப்புறுதியும் குறைவு.

 

5- விமானநிலையம் உட்பட கார் தரிப்பிடங்களுக்குள் செல்லக்கூடிய  உயரம் - 1 M 90க்கு மேலிருக்கக்கூடாது)

 

6- புதிய காரைவிட (0 கிலோமீற்றர்) சில ஆயிரம் கிலோமீற்றர்கள்ஓடிய வாகனத்தையே வாங்குவது வழமை. புதிது என்றால் திறப்பை  வாங்கிவிட்டு  திருப்பிக்கொடுத்தாலும் 10 வீதம் அடிபட்டுவிடும். இரண்டாவது கையாகிவிடும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன பா சிவில் engineer மார் எல்லாம் 120 k மேல உழைக்கிராக்கள் எல்லாம் Toyota ஓடையே நிக்குறீங்க :D

 

ரொயோட்டா என்றாலும் பரவாயில்லையே .சிலர் இன்னும் சைக்கிள்தானாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

குதிரைக்குக் குணம் அறிந்துதான் கொம்பைக் கடவுள் கொடுக்கவில்லையாம். அதனை நினைவில் வைத்திருப்பதால் ஒருபோதும் பவர் கூடின கார்களை நான் வாங்கியதில்லை. என்றாலும் கார் ஓட ஆரம்பித்த முதல் இரண்டு வருடங்களில் ஒவ்வொரு வாரமும் கேம்பிரிட்ஜ் - இலண்டன் பயணங்களில் என்னை முந்தி ஒரு காரையும் போகவிட்டதில்லை! ஒருமுறை என்னுடன் போட்டிக்கு ஓடியவனை முந்தவிடாது கண்டபடி ஓடி அவன் பின்னுக்கு வந்து மோதும்படி திடீரென்று பிரேக் அடித்துவிட்டேன். இப்படியான மோட்டு வேலைகளைப் பார்க்கக்கூடாது என்று அதற்குப் பின்னரும் ஒவ்வொருமுறையும் நினைத்துக்கொண்டாலும் விரைவுப்பாதைகளில் போகும்போது மைக்கல் சூமாக்கர் போன்று நினைத்துக் கொள்வது மாற்றமுடியாத பலவீனமாக உள்ளது!

 

ஏலத்தில் வாங்கும் வாகனங்கள் பற்றிய அறிவித்தல்களை முன்னரே அறிந்துகொண்டு செயற்பட்டால் மிகுந்த இலாபத்துடன் வாங்கலாம்.

ஆனாலும் பல பெரிய முதலைகளுடன் மோதத் தயாராக இருக்கவேண்டும்.

 உங்கள் அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கிருபன். :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் வாங்கும்பொழுது அதன் சம தரத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களோடு ஒப்பிட்டு புதுக் கார்(ஏற்கனவே கார் ஓட்டுவதில் போதிய அனுபவம் இருந்தால்) வாங்குவதே நீண்ட காலத்திற்கு நல்லது.

முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது.. :o

ஒரு லிட்டர் எரிபொருளுக்கு கார் செல்லும் தூரம் (KmpL)
கார் இயந்திரத்தின் குதிரை திறன்(BHP)
காரின் பாதுகாப்பு அம்சங்கள்(ABS, EBD, Air bags, Auto lock/open etc)

காரின் உட்புற வசதிகள் (ICE, Leg Room, seat adjustments, cooling etc)
சாலைகளில் காரின் பாவனை(easy manoeuvrability, road handling, turning radius etc)
விற்பனைக்கு பிந்திய சர்வீஸ் வசதி(After sales service)

உத்திரவாதம்(Warranty)
எளிதில் கிடைக்கும் உதிரிப் பாகங்கள்(Spareparts availability)
விலை/வசதி விகிதாச்சாரம்(Cost/benefit ratio)
மறு விற்பனைக்கான பெறுமதி(Resale value)
கார் வண்ணங்களுக்கான தேர்வும், வடிவும்(availability of colors, aerodynamic design)

 

வசதிக்கேற்ற எள்ளுருண்டை என்னுடைய கார்.. :)

147_349X215.jpg
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபாரு என்று ஒரு கார் இருக்கிறது. ஜப்பானியக் கார்களில் மிகவும் தரமானது. ஓடுவதற்கும் இதமானது. 4சில்லுகளும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் மிகவும் வசதியான ஓட்டம்.

 

பொக்ஸர் எனும் நேர் 4 அல்லது 6 சிலிண்டர்களைக் கொண்டது.

 

விலையும் கைக்கு அடக்கமானது.

 

எம்மவர்கள் பலருக்குத் தெரியாத ஒரு கார்.

 

டொயோட்டா , மஸ்டா , கொண்டா என்று நிற்காமல் மற்றைய கார்கள் பற்றியும் தேடிப் பாருங்கள்.

 

 

Link to comment
Share on other sites

நான் அவுஸ் வந்து முதன் முதல் வாங்கிய கார் Holden Commodore. 
 
நான்கு வருடங்கள் பழையது. எந்த விதமான என்ஜின் பிரச்சனையும் தரவில்லை.  V6 3.6 லீட்டர் என்ஜின்.
 
அதன் பின் புத்தம் புதிய Holden Commodore ஒன்று வாங்கினேன் $ 39,000. வியாபரத்திற்கு என்று பதிவு செய்ததால் 5 வருடத்தில் மொத்தத்தையும் வரிக்கழிப்பு செய்து விட்டேன்.
 
நன்றாகப் பெற்றோல் குடிக்கும். ஆனால் அமுத்தினால் அமுத்து தான். பறக்கும். அவுஸில் 110 கிலோ மீட்டர் தான் உச்ச வேகம். சிட்னியில் இருந்து கன்பெறா போகும் போது 170 இல் ஓடியிருக்கிறேன். பொலிஸ் பிடித்தால் உட்னேயே லைஸென்ஸ் பறிப்பார்கள்.
 
 
Holden ஐ அமெரிக்கவில் Pontiac என்பார்கள்.
 
2008-holden-ve-commodore-sportwagon-fron
 
 
 
 
Holden_Commodore_sv6_2009_Holden-downloa
 
 
   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mercedes-Benz-C-KLasse-W-205-C-250-AMG-L

 

ஜேர்மனியர் அதிகம் விரும்பும் காரின் நிறம்..... சாம்பல் கலந்த சில்வர், மற்றும் கறுப்பு.

பிடிக்காத நிறம்..... ஒரேஞ், வயலட்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.