Jump to content

கார் வாங்கலாம் வாங்கோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கார் வாங்கலாம் வாங்கோ

மேற்குலகில் வாழும் நாங்கள் பொதுவாகப் போக்குவரத்திற்காக எப்போதுமே ஒரு வாகனத்தை வைத்திருப்போம்.கார் வசதி இல்லாத சிலர் தங்கள் தூரப் பயணத்திற்கு புகையிரதமோ  அல்லது பேருந்தோ அல்லது விமானமோ எனப் பல வேறு வழிகளில் பண விரயத்துடன் தங்கள் பிரயாணத்தைச் செய்யவேண்டியிருக்கும்.

சோ பொதுவாக நீங்கள் பாவனைக்கு வைத்திருக்கும் காரை வாங்கும்போது பல விடயங்களை அலசி ஆராய்ந்து தான் அந்தக்காரை வாங்கியிருப்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என யாரும் வாகனத்தை வாங்குவதை இரும்புவதில்லை.

பலர் முதலில் யோசிப்பது பதிய காரா? அல்லது ஏற்கனவே பாவிப்பில் இருந்த  காரா?  எந்தக் கொம்பனிக் கார் வாங்கலாம் அந்தக்காரின் அமைப்பு, வேகம் எப்படி இருக்கும்  என்றுதான் என  நான் நினைக்கின்றேன்.

அடுத்த பிரச்சனை எப்படி வாங்கும் காரின் பணத்தைச்  செலுத்துவது என்பது இன்னும் முக்கியமான பிரச்சனையாக இருக்கும்.
ஒரே தவணையில் செலுத்துவதா? அல்லது மாதாந்த அடிப்படையில் கடன் மூலம் தீர்ப்பதா எனவும் யோசிக்கலாம்.

இப்போது நான் ஒரு கார் வாங்க விரும்புகின்றேன் என வைத்துக் கொண்டால் அதில் வரும் எங்களுக்குத் தெரியாத பல சிக்கலகள் இருக்கும். இந்தச் சிக்கல்களை எவை? அவற்றை எப்படிச் சமாளிப்பது?
கார் வாங்கும்போது எங்களுக்குத் தெரியாத பல தொழில் நுட்பப் பிரச்சனைகளை எவ்வாறு கண்டு அறிந்து கொள்ளலாம்?

எந்தக்காரை வாங்கினால்  அளவிற்கதிகமாகப்  பெறுமதி குறையாமல் மீண்டும் விற்பனை செய்யலாம்?
புதிய கார் வாங்குவது நல்லதா? அல்லது பாவனையில் இருக்கும் காரை வாங்குவது நல்லதா? அல்லது என்னைப்போல நன்றாக அடிபட்ட பழைய காரை வாங்கி அது உடையும் வரை :D:lol: பாவித்து விட்டு இரும்புக்கு மிகுதியை விற்று விடுவது நல்லதா?
உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

வாங்கோ கார் வாங்கலாம் வாங்கோ :D

Link to comment
Share on other sites

இதுக்கெல்லாம் நான் கனக்க சிந்திக்கிறேல்ல.. மனதில் தோன்றுவதை பாரியாருடன் கலந்து பேசிவிட்டு செயற்படுத்துவதுதான். :D

கனடாவுக்கு வந்த புதிதில், கார் வாங்கியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் ஒரு Camry வாங்கினேன். அப்போது வேலை கிடைத்திருக்கவில்லை. காரும் 14 வருடப் பழசு.. சில தடவைகள் பழுதாப் போய் தொல்லை கொடுத்துவிட்டது.. வேலைகிடைத்து பிறகு குழந்தையும் பிறக்க புதிய வாகனம் ஒன்றை வாங்கினேன். (RAV 4) பிறகு சில வருடங்களில் corolla ஒன்றையும் வாங்கினேன். இருவருக்கும் வாகன சுதந்திரம் வேண்டும் என்பதற்காக.

இரண்டையுமே தவணைப் பணத்தில் வாங்கியே கட்டி முடித்தேன். உண்மையில் இங்கு வாகனத்தில் காசைப் போடுவது ஆற்றில் போடுவதுக்கு சமம். ஆனாலும் குளிர்காலத்தில் நடுவழியில் நின்று விடுவதைப்போன்ற சிக்கல்/ஆபத்து வேறெதுவும் இல்லை. இந்த அனுபவத்தினால்தான் புதிய கார்களை வாங்கினேன். வேலை விடயமாக தூர இடங்களுக்கு சென்றுவர இந்த உத்தரவாதம் தேவையாக உள்ளது.

இரண்டாவது காரையும் ஏன் டொயட்டாவில் வாங்கினேன் என்றால் முதல் காருக்கு அவர்கள் வழங்கிய தரமான சேவையே காரணம். இரண்டு வாகனங்களையும் டொயட்டா டீலரிடம் மாத்திரமே பராமரிப்பு சேவைக்கு கொடுத்து எடுக்கிறேன்..

ஆகவே இனிமேல் காரை மாத்தினாலும் புது கார்தான் வாங்குவேன்.. :D அந்த வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

இது என்ன பா சிவில் engineer மார் எல்லாம் 120 k மேல உழைக்கிராக்கள் எல்லாம் Toyota ஓடையே நிக்குறீங்க :D

Link to comment
Share on other sites

இது என்ன பா சிவில் engineer மார் எல்லாம் 120 k மேல உழைக்கிராக்கள் எல்லாம் Toyota ஓடையே நிக்குறீங்க :D

விரலுக்கு ஏத்த வீக்கம்தானே இருக்க வேணும்.. நம்மட லெவலுக்கு அவ்வளவுதான் வரும்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புதுக்கார் வாங்குகையில் விற்பனை வரி 20% கட்டணும். ஒரு முறை தான் அறவிடுவார்கள்.
 
பசை உள்ளவர்களும், பெரு நிறுவன உயர் அதிகாரிகளும் தமது வாகனங்களை 6 மாதங்களுக்கு ஒரு முறையோ, அல்லது பிடிக்காவிடில் அதற்கு முன்னரோ மாத்துவார்கள்.
 
ஆகவே நான் எப்போதும் 6 மாத வயதுள்ள புதுக்கார் வாங்கி 20% சேமித்துக் கொள்வேன். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதல் இரண்டு கார்களையும் ஏலத்தில்தான் வாங்கினேன்! அதன் பின்னர் ஏலத்தில் சென்று கார் வாங்குமளவிற்கு நேரம் இல்லாததால் கார் டீலர்களிடமே சென்று வாங்கினேன்.

ஏலத்தில் கார் வாங்குவது சூதாட்டம் போன்றது. எனவே சிலவேளை கார் எடுத்துக்கொண்டு வரும்போதே இடையில் நின்றாலும் நின்றுவிடும்!!

ஆனாலும் ஏலத்தில் வரும் கார்களின் தகவல்கள் முன்கூட்டியே இணையத்தில் கிடைப்பதால் அவை பற்றிய விமர்சனங்களைப் படித்துப் பார்த்துவிட்டுச் செல்லுவது நல்லது. குறைந்த பட்சம் எவ்வளவு விலைக்கு மேல் கேட்கக்கூடாது என்று அறிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

காரை ஓடிப் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் விருப்பமான காரை அவர்கள் ஸ்ரார்ட் செய்யும்போது அதன் சத்தத்தை வைத்து எஞ்சின் எப்படி இருக்கும் என்று ஓரளவு அனுமானிக்கலாம். அத்தோடு எக்ஸோஸ்ற்றில் கைவைத்து புகையுடன் நீராவியைத் தவிர்த்து எண்ணைக் கசிவு வருகின்றதா என்று பார்க்கவேண்டும். காஸ்கற் போயிருந்தால் அதைப்போலச் செலவு இல்லை. வேறு ஏதாவது கசிவுகள் நிறுத்துமிடத்தில் உள்ளனவா என்று பார்த்து எல்லாம் திருப்தி என்றால் வாங்க முயற்சிக்கலாம்.

பலருடன் போட்டிபோட்டு வாங்கவேண்டிவருவதால் விருப்பமான கார் கிடைக்காமல் போகலாம். எனவே மூன்று நான்கு கார்கள் பார்க்கவேண்டி வரும். இரண்டு மூன்று தடவைகள் போகவேண்டிவரும். பொறுமை இருந்தால் நல்ல கார் நியாயமான விலைக்கு வாங்கலாம்.

குதிரைக்குக் குணம் அறிந்துதான் கொம்பைக் கடவுள் கொடுக்கவில்லையாம். அதனை நினைவில் வைத்திருப்பதால் ஒருபோதும் பவர் கூடின கார்களை நான் வாங்கியதில்லை. என்றாலும் கார் ஓட ஆரம்பித்த முதல் இரண்டு வருடங்களில் ஒவ்வொரு வாரமும் கேம்பிரிட்ஜ் - இலண்டன் பயணங்களில் என்னை முந்தி ஒரு காரையும் போகவிட்டதில்லை! ஒருமுறை என்னுடன் போட்டிக்கு ஓடியவனை முந்தவிடாது கண்டபடி ஓடி அவன் பின்னுக்கு வந்து மோதும்படி திடீரென்று பிரேக் அடித்துவிட்டேன். இப்படியான மோட்டு வேலைகளைப் பார்க்கக்கூடாது என்று அதற்குப் பின்னரும் ஒவ்வொருமுறையும் நினைத்துக்கொண்டாலும் விரைவுப்பாதைகளில் போகும்போது மைக்கல் சூமாக்கர் போன்று நினைத்துக் கொள்வது மாற்றமுடியாத பலவீனமாக உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில்... ஒரு முறையாவது, புதுக்கார் வாங்கி ஓட வேண்டும் என்பதற்காக, "மெர்சிடஸ் 190" வாங்கி... 18 வருடம், 280,000 கி.மீ. வரை ஓடி Katalysator  இல்லாமல் எமது நகரத்துக்குள் ஓட முடியாது என்ற சட்டம் வந்த பின் அதனை விற்றேன்.
 

புதுக்காரில் சௌகரியம், அசௌகரியம் என்று இரண்டும் உண்டு.
அதனை குறிப்பிட்ட கால அளவுகளில் அதனை பராமரிப்புக்கு விட்டு, அதன் புத்தகத்தில் பதிந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு முறை பராமரிப்புக்கு.... 500 - 1000€ வரை செலவாகும்.

 

இங்கு வாகனம் வைத்திருந்து 28 வருடங்களானாலும், இப்போ வைத்திருக்கும் காருடன் மூன்று கார்களையே வாங்கியுள்ளேன்.
கார் வாங்கப் போவது என்று தெரிந்தவுடன் எந்தக் கொம்பனி கார் வாங்கலாம்.... என்று மனைவியுடனும், நண்பர்களுடனும் கலந்து ஆலோசிப்பேன்.

 

இன்ன கார்தான் ... வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் ஊரில் உள்ள அது சம்பந்தம்பட்ட கார் கொம்பனிகளின் விற்பனை நிலையங்களையும், பத்திரிகைகளையும் தனியே... நோட்டமிடுவேன்.(இதற்கு 2 மாதம் எடுக்கும்)
 

நிறமும், விலையும், கி.மீ எவ்வளவு உள்ளது என்பது பிடித்துக் கொண்டவுடன் மனைவியுடன் சென்று அந்தக் காரை மீண்டும் நோட்டமிட்டு, அதன் முன்னைய உரிமையாளர்... எத்தனை வயது உடையவர் என்பதை அறிய முயற்சிப்பேன்.

அதனை பென்சன் எடுத்தவர் பாவித்திருந்தால்... இன்னும் சந்தோசம்.
இளையவர்களும், துருக்கியரும் பாவித்த காரை வாங்கவே மாட்டேன்.

 

எல்லாம் சரி வந்து விட்டால்..... காரின் தரத்தை அறிய ஒரு Hobby மெக்கானிக் ஒருவரையும், குறிப்பிட்ட விலையிருந்து 1500 € குறைக்க இன்னுமொரு நண்பர் உள்ளார், அவரையும் அழைத்துச் சென்று பேரம் பேசி.....   :D

விற்பனையாளர் உங்களுக்கு காரே விற்பதில்லை... என்று சொல்லும் அளவுக்கு, அரியண்டம் கொடுத்து.... காரை வாங்கி வந்து விடுவேன். :)

Link to comment
Share on other sites

உண்மையில் எனக்கு பிடித்த கார்கள் டோயார்ரா ......மஸ்டா ...........இதைத்தவிர வேறு எந்தக்கார்களையும் நான் வாங்குவதில்லை  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கார் வாங்கும் போது...நாம பாக்கிறது

1. வருடம்
2. நிறம்
3. கிலோ மீற்றர்
4. காரின் வரலாறு
 

பெரும்பாலும் ஜேர்மன் கார்களும்... அமெரிக்க வாகனங்களுமே வாங்க பிடிக்கும்... ஜேர்மனி கார்களில் பிடிக்காத விடயம் அதன் மெயின்ரெனன் .... யானை விலை.... குதிரை விலை... உதிரிப்பாகங்கள்...$120 மணித்தியால லேபர்.

 

BMW விட Audi உள்ளும் வெளியும் நன்றாக இருக்கும்.... ! 

வாங்குங்க... ஏ 8 8 சிலின்டர்....4.2 லீட்டர் இன்ஜின்.... பறக்கலாம் அதிவேக பாதையில்.....

சோகம் என்ன என்றா....12மாதத்தில் 11 ஸ்பீடிங் ரிக்கற்.... :(   (சத்தியமாக)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது காரையும் ஏன் டொயட்டாவில் வாங்கினேன் என்றால் முதல் காருக்கு அவர்கள் வழங்கிய தரமான சேவையே காரணம். இரண்டு வாகனங்களையும் டொயட்டா டீலரிடம் மாத்திரமே பராமரிப்பு சேவைக்கு கொடுத்து எடுக்கிறேன்..

ஆகவே இனிமேல் காரை மாத்தினாலும் புது கார்தான் வாங்குவேன்.. :D அந்த வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. :lol:

 

ரொயோட்டா கார்கள் தான் தற்சமயம் உலகில் விற்பனையில் முன்னணியில் நிற்கின்றன. குறைந்தளவு பெற்றோல் செலவில் ஓடக்கூடியதாக அதன் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கின்றது எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால் அதிவேக பாதையில் வேகமான காற்றுக்குச்

சிறிது அசைவும் இருக்குமாம் உண்மையா ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொன்னாலும் Toyota - Toyota தான் :D

 

Me it is LEXUS.

 

என் கனவு தேவதையே......

 

LS.png

 

1445068258134588994.jpg

 

lexus-nx-interior_a_mid.jpg?itok=tPytWjS

Link to comment
Share on other sites

Me it is LEXUS.

 

ஏழைக்கேற்ற எள்ளுறுண்டை காணும் என நான் நினைப்பதால் Lexus பாவித்து பாத்ததில்லை :icon_idea:

Lexus ன் விலைக்கு தகுந்தமாதிரி அது நன்றாகத்தானே இருக்கும் நாதமுனி அண்ணா :)

Link to comment
Share on other sites

ரொயோட்டா கார்கள் தான் தற்சமயம் உலகில் விற்பனையில் முன்னணியில் நிற்கின்றன. குறைந்தளவு பெற்றோல் செலவில் ஓடக்கூடியதாக அதன் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கின்றது எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால் அதிவேக பாதையில் வேகமான காற்றுக்குச்

சிறிது அசைவும் இருக்குமாம் உண்மையா ? :D

எந்த வாகனத்தின் சில்லிலும் 4 ஆணிகள் மட்டும் இருந்தால் அசையத்தான் செய்யும்.. :D சின்னக் கார்களில் அநேகமாக 4 ஆணிகள்தான் இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைக்கேற்ற எள்ளுறுண்டை காணும் என நான் நினைப்பதால் Lexus பாவித்து பாத்ததில்லை :icon_idea:

Lexus ன் விலைக்கு தகுந்தமாதிரி அது நன்றாகத்தானே இருக்கும் நாதமுனி அண்ணா :)

 

ஜேர்மன் காரர்கள் அது எக்ஸ்ட்ரா, இது எக்ஸ்ட்ரா என்று ஒவ்வொரு சிறு மேலதிக விசயங்களுக்கும் காசு பறிப்பார்கள். (உதாரணம்: electric window, electric mirror, etc)
 
ஒரு நண்பரின் C கிளாஸ் merc பார்த்து விட்டு அப்படியே வேண்டும் எண்டு போனால், அங்க அந்த கார் very basic நிலையில் இருந்து டீலருக்கு, டீலர், உங்களுக்கு ஏத்த மாதிரி, உங்களுக்கு என்னென்ன தேவை என்று கேட்டு விலை சொல்லுவார்கள். 
 
ஆனால் lexus ரகத்தில் இது எல்லாமே basic ஆக தருவதே சிறப்பு. அதுவே அவர்களது சந்தை தந்திரம். டொயோடா  குடும்ப luxury brand என்பதால்...
 
Lexus, இந்த வகை பிராண்டில் இது, இது கிடைக்கும், இது தான் விலை என்று நம்பி போகலாம்.. :wub:

 

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில்   volkswagen passat வாங்கினேன் ஐரோப்பாவில் முதல் முதல் வாங்கிய கார் .....நல்ல இதமாக இருக்கும் ........ஒரு நாள் நண்பருடைய toyota corolla  காரை ஓடும்படி வந்தது .ஆகாக என்ன இதமாக இருந்தது  ஜெர்மன் காருக்கும் ஜப்பான் காருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தெரிந்தது ..............சில மாதங்களின் பின் toyata corolla  stationwagon ஒன்று வாங்கினேன் பல நாட்கள் என்னோடு சேர்ந்து உழைத்தது .........தற்போது மஸ்டா வைத்திருக்கிறேன் ஸ்பீட் breaker .........உண்மையில்  இது வரை காலமும் என்னுடன் எனது நிலைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்குது .............எனக்கு பிடித்த சில்வர் கலரிலும் அது  அமைந்தது தான் இன்னும் சிறப்பாக தெரிந்தது :D  :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரியை  திறந்த வாத்தியாருக்கு நன்றிகள்

 

 

கார் வாங்கும்போது நான் கவனிப்பவை..

 

1- காரை வாங்கியபின்னர் ஏற்படக்கூடிய பராமரிப்புச்செலவு( விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும்)

 

2- நிறம்

 

3- வாகனத்தின் நிறை (நம்ம ஓட்டத்துக்கு வழுக்காது பறக்காது :lol:  இருக்கணும்)

 

4- வாகனத்தின் குதிரைவலு - பரிசுக்குள் (நகரம்) அதிகம் ஓடுவதால் குதிரைவலு குறைந்த வாகனத்தையே தெரிவு செய்வேன். அத்துடன் காப்புறுதியும் குறைவு.

 

5- விமானநிலையம் உட்பட கார் தரிப்பிடங்களுக்குள் செல்லக்கூடிய  உயரம் - 1 M 90க்கு மேலிருக்கக்கூடாது)

 

6- புதிய காரைவிட (0 கிலோமீற்றர்) சில ஆயிரம் கிலோமீற்றர்கள்ஓடிய வாகனத்தையே வாங்குவது வழமை. புதிது என்றால் திறப்பை  வாங்கிவிட்டு  திருப்பிக்கொடுத்தாலும் 10 வீதம் அடிபட்டுவிடும். இரண்டாவது கையாகிவிடும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன பா சிவில் engineer மார் எல்லாம் 120 k மேல உழைக்கிராக்கள் எல்லாம் Toyota ஓடையே நிக்குறீங்க :D

 

ரொயோட்டா என்றாலும் பரவாயில்லையே .சிலர் இன்னும் சைக்கிள்தானாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

குதிரைக்குக் குணம் அறிந்துதான் கொம்பைக் கடவுள் கொடுக்கவில்லையாம். அதனை நினைவில் வைத்திருப்பதால் ஒருபோதும் பவர் கூடின கார்களை நான் வாங்கியதில்லை. என்றாலும் கார் ஓட ஆரம்பித்த முதல் இரண்டு வருடங்களில் ஒவ்வொரு வாரமும் கேம்பிரிட்ஜ் - இலண்டன் பயணங்களில் என்னை முந்தி ஒரு காரையும் போகவிட்டதில்லை! ஒருமுறை என்னுடன் போட்டிக்கு ஓடியவனை முந்தவிடாது கண்டபடி ஓடி அவன் பின்னுக்கு வந்து மோதும்படி திடீரென்று பிரேக் அடித்துவிட்டேன். இப்படியான மோட்டு வேலைகளைப் பார்க்கக்கூடாது என்று அதற்குப் பின்னரும் ஒவ்வொருமுறையும் நினைத்துக்கொண்டாலும் விரைவுப்பாதைகளில் போகும்போது மைக்கல் சூமாக்கர் போன்று நினைத்துக் கொள்வது மாற்றமுடியாத பலவீனமாக உள்ளது!

 

ஏலத்தில் வாங்கும் வாகனங்கள் பற்றிய அறிவித்தல்களை முன்னரே அறிந்துகொண்டு செயற்பட்டால் மிகுந்த இலாபத்துடன் வாங்கலாம்.

ஆனாலும் பல பெரிய முதலைகளுடன் மோதத் தயாராக இருக்கவேண்டும்.

 உங்கள் அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கிருபன். :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் வாங்கும்பொழுது அதன் சம தரத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களோடு ஒப்பிட்டு புதுக் கார்(ஏற்கனவே கார் ஓட்டுவதில் போதிய அனுபவம் இருந்தால்) வாங்குவதே நீண்ட காலத்திற்கு நல்லது.

முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது.. :o

ஒரு லிட்டர் எரிபொருளுக்கு கார் செல்லும் தூரம் (KmpL)
கார் இயந்திரத்தின் குதிரை திறன்(BHP)
காரின் பாதுகாப்பு அம்சங்கள்(ABS, EBD, Air bags, Auto lock/open etc)

காரின் உட்புற வசதிகள் (ICE, Leg Room, seat adjustments, cooling etc)
சாலைகளில் காரின் பாவனை(easy manoeuvrability, road handling, turning radius etc)
விற்பனைக்கு பிந்திய சர்வீஸ் வசதி(After sales service)

உத்திரவாதம்(Warranty)
எளிதில் கிடைக்கும் உதிரிப் பாகங்கள்(Spareparts availability)
விலை/வசதி விகிதாச்சாரம்(Cost/benefit ratio)
மறு விற்பனைக்கான பெறுமதி(Resale value)
கார் வண்ணங்களுக்கான தேர்வும், வடிவும்(availability of colors, aerodynamic design)

 

வசதிக்கேற்ற எள்ளுருண்டை என்னுடைய கார்.. :)

147_349X215.jpg
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபாரு என்று ஒரு கார் இருக்கிறது. ஜப்பானியக் கார்களில் மிகவும் தரமானது. ஓடுவதற்கும் இதமானது. 4சில்லுகளும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் மிகவும் வசதியான ஓட்டம்.

 

பொக்ஸர் எனும் நேர் 4 அல்லது 6 சிலிண்டர்களைக் கொண்டது.

 

விலையும் கைக்கு அடக்கமானது.

 

எம்மவர்கள் பலருக்குத் தெரியாத ஒரு கார்.

 

டொயோட்டா , மஸ்டா , கொண்டா என்று நிற்காமல் மற்றைய கார்கள் பற்றியும் தேடிப் பாருங்கள்.

 

 

Link to comment
Share on other sites

நான் அவுஸ் வந்து முதன் முதல் வாங்கிய கார் Holden Commodore. 
 
நான்கு வருடங்கள் பழையது. எந்த விதமான என்ஜின் பிரச்சனையும் தரவில்லை.  V6 3.6 லீட்டர் என்ஜின்.
 
அதன் பின் புத்தம் புதிய Holden Commodore ஒன்று வாங்கினேன் $ 39,000. வியாபரத்திற்கு என்று பதிவு செய்ததால் 5 வருடத்தில் மொத்தத்தையும் வரிக்கழிப்பு செய்து விட்டேன்.
 
நன்றாகப் பெற்றோல் குடிக்கும். ஆனால் அமுத்தினால் அமுத்து தான். பறக்கும். அவுஸில் 110 கிலோ மீட்டர் தான் உச்ச வேகம். சிட்னியில் இருந்து கன்பெறா போகும் போது 170 இல் ஓடியிருக்கிறேன். பொலிஸ் பிடித்தால் உட்னேயே லைஸென்ஸ் பறிப்பார்கள்.
 
 
Holden ஐ அமெரிக்கவில் Pontiac என்பார்கள்.
 
2008-holden-ve-commodore-sportwagon-fron
 
 
 
 
Holden_Commodore_sv6_2009_Holden-downloa
 
 
   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mercedes-Benz-C-KLasse-W-205-C-250-AMG-L

 

ஜேர்மனியர் அதிகம் விரும்பும் காரின் நிறம்..... சாம்பல் கலந்த சில்வர், மற்றும் கறுப்பு.

பிடிக்காத நிறம்..... ஒரேஞ், வயலட்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.