Jump to content

கார் வாங்கலாம் வாங்கோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கார் வாங்கலாம் வாங்கோ

மேற்குலகில் வாழும் நாங்கள் பொதுவாகப் போக்குவரத்திற்காக எப்போதுமே ஒரு வாகனத்தை வைத்திருப்போம்.கார் வசதி இல்லாத சிலர் தங்கள் தூரப் பயணத்திற்கு புகையிரதமோ  அல்லது பேருந்தோ அல்லது விமானமோ எனப் பல வேறு வழிகளில் பண விரயத்துடன் தங்கள் பிரயாணத்தைச் செய்யவேண்டியிருக்கும்.

சோ பொதுவாக நீங்கள் பாவனைக்கு வைத்திருக்கும் காரை வாங்கும்போது பல விடயங்களை அலசி ஆராய்ந்து தான் அந்தக்காரை வாங்கியிருப்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என யாரும் வாகனத்தை வாங்குவதை இரும்புவதில்லை.

பலர் முதலில் யோசிப்பது பதிய காரா? அல்லது ஏற்கனவே பாவிப்பில் இருந்த  காரா?  எந்தக் கொம்பனிக் கார் வாங்கலாம் அந்தக்காரின் அமைப்பு, வேகம் எப்படி இருக்கும்  என்றுதான் என  நான் நினைக்கின்றேன்.

அடுத்த பிரச்சனை எப்படி வாங்கும் காரின் பணத்தைச்  செலுத்துவது என்பது இன்னும் முக்கியமான பிரச்சனையாக இருக்கும்.
ஒரே தவணையில் செலுத்துவதா? அல்லது மாதாந்த அடிப்படையில் கடன் மூலம் தீர்ப்பதா எனவும் யோசிக்கலாம்.

இப்போது நான் ஒரு கார் வாங்க விரும்புகின்றேன் என வைத்துக் கொண்டால் அதில் வரும் எங்களுக்குத் தெரியாத பல சிக்கலகள் இருக்கும். இந்தச் சிக்கல்களை எவை? அவற்றை எப்படிச் சமாளிப்பது?
கார் வாங்கும்போது எங்களுக்குத் தெரியாத பல தொழில் நுட்பப் பிரச்சனைகளை எவ்வாறு கண்டு அறிந்து கொள்ளலாம்?

எந்தக்காரை வாங்கினால்  அளவிற்கதிகமாகப்  பெறுமதி குறையாமல் மீண்டும் விற்பனை செய்யலாம்?
புதிய கார் வாங்குவது நல்லதா? அல்லது பாவனையில் இருக்கும் காரை வாங்குவது நல்லதா? அல்லது என்னைப்போல நன்றாக அடிபட்ட பழைய காரை வாங்கி அது உடையும் வரை :D:lol: பாவித்து விட்டு இரும்புக்கு மிகுதியை விற்று விடுவது நல்லதா?
உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

வாங்கோ கார் வாங்கலாம் வாங்கோ :D

Link to comment
Share on other sites

இதுக்கெல்லாம் நான் கனக்க சிந்திக்கிறேல்ல.. மனதில் தோன்றுவதை பாரியாருடன் கலந்து பேசிவிட்டு செயற்படுத்துவதுதான். :D

கனடாவுக்கு வந்த புதிதில், கார் வாங்கியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் ஒரு Camry வாங்கினேன். அப்போது வேலை கிடைத்திருக்கவில்லை. காரும் 14 வருடப் பழசு.. சில தடவைகள் பழுதாப் போய் தொல்லை கொடுத்துவிட்டது.. வேலைகிடைத்து பிறகு குழந்தையும் பிறக்க புதிய வாகனம் ஒன்றை வாங்கினேன். (RAV 4) பிறகு சில வருடங்களில் corolla ஒன்றையும் வாங்கினேன். இருவருக்கும் வாகன சுதந்திரம் வேண்டும் என்பதற்காக.

இரண்டையுமே தவணைப் பணத்தில் வாங்கியே கட்டி முடித்தேன். உண்மையில் இங்கு வாகனத்தில் காசைப் போடுவது ஆற்றில் போடுவதுக்கு சமம். ஆனாலும் குளிர்காலத்தில் நடுவழியில் நின்று விடுவதைப்போன்ற சிக்கல்/ஆபத்து வேறெதுவும் இல்லை. இந்த அனுபவத்தினால்தான் புதிய கார்களை வாங்கினேன். வேலை விடயமாக தூர இடங்களுக்கு சென்றுவர இந்த உத்தரவாதம் தேவையாக உள்ளது.

இரண்டாவது காரையும் ஏன் டொயட்டாவில் வாங்கினேன் என்றால் முதல் காருக்கு அவர்கள் வழங்கிய தரமான சேவையே காரணம். இரண்டு வாகனங்களையும் டொயட்டா டீலரிடம் மாத்திரமே பராமரிப்பு சேவைக்கு கொடுத்து எடுக்கிறேன்..

ஆகவே இனிமேல் காரை மாத்தினாலும் புது கார்தான் வாங்குவேன்.. :D அந்த வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

இது என்ன பா சிவில் engineer மார் எல்லாம் 120 k மேல உழைக்கிராக்கள் எல்லாம் Toyota ஓடையே நிக்குறீங்க :D

Link to comment
Share on other sites

இது என்ன பா சிவில் engineer மார் எல்லாம் 120 k மேல உழைக்கிராக்கள் எல்லாம் Toyota ஓடையே நிக்குறீங்க :D

விரலுக்கு ஏத்த வீக்கம்தானே இருக்க வேணும்.. நம்மட லெவலுக்கு அவ்வளவுதான் வரும்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புதுக்கார் வாங்குகையில் விற்பனை வரி 20% கட்டணும். ஒரு முறை தான் அறவிடுவார்கள்.
 
பசை உள்ளவர்களும், பெரு நிறுவன உயர் அதிகாரிகளும் தமது வாகனங்களை 6 மாதங்களுக்கு ஒரு முறையோ, அல்லது பிடிக்காவிடில் அதற்கு முன்னரோ மாத்துவார்கள்.
 
ஆகவே நான் எப்போதும் 6 மாத வயதுள்ள புதுக்கார் வாங்கி 20% சேமித்துக் கொள்வேன். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதல் இரண்டு கார்களையும் ஏலத்தில்தான் வாங்கினேன்! அதன் பின்னர் ஏலத்தில் சென்று கார் வாங்குமளவிற்கு நேரம் இல்லாததால் கார் டீலர்களிடமே சென்று வாங்கினேன்.

ஏலத்தில் கார் வாங்குவது சூதாட்டம் போன்றது. எனவே சிலவேளை கார் எடுத்துக்கொண்டு வரும்போதே இடையில் நின்றாலும் நின்றுவிடும்!!

ஆனாலும் ஏலத்தில் வரும் கார்களின் தகவல்கள் முன்கூட்டியே இணையத்தில் கிடைப்பதால் அவை பற்றிய விமர்சனங்களைப் படித்துப் பார்த்துவிட்டுச் செல்லுவது நல்லது. குறைந்த பட்சம் எவ்வளவு விலைக்கு மேல் கேட்கக்கூடாது என்று அறிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

காரை ஓடிப் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் விருப்பமான காரை அவர்கள் ஸ்ரார்ட் செய்யும்போது அதன் சத்தத்தை வைத்து எஞ்சின் எப்படி இருக்கும் என்று ஓரளவு அனுமானிக்கலாம். அத்தோடு எக்ஸோஸ்ற்றில் கைவைத்து புகையுடன் நீராவியைத் தவிர்த்து எண்ணைக் கசிவு வருகின்றதா என்று பார்க்கவேண்டும். காஸ்கற் போயிருந்தால் அதைப்போலச் செலவு இல்லை. வேறு ஏதாவது கசிவுகள் நிறுத்துமிடத்தில் உள்ளனவா என்று பார்த்து எல்லாம் திருப்தி என்றால் வாங்க முயற்சிக்கலாம்.

பலருடன் போட்டிபோட்டு வாங்கவேண்டிவருவதால் விருப்பமான கார் கிடைக்காமல் போகலாம். எனவே மூன்று நான்கு கார்கள் பார்க்கவேண்டி வரும். இரண்டு மூன்று தடவைகள் போகவேண்டிவரும். பொறுமை இருந்தால் நல்ல கார் நியாயமான விலைக்கு வாங்கலாம்.

குதிரைக்குக் குணம் அறிந்துதான் கொம்பைக் கடவுள் கொடுக்கவில்லையாம். அதனை நினைவில் வைத்திருப்பதால் ஒருபோதும் பவர் கூடின கார்களை நான் வாங்கியதில்லை. என்றாலும் கார் ஓட ஆரம்பித்த முதல் இரண்டு வருடங்களில் ஒவ்வொரு வாரமும் கேம்பிரிட்ஜ் - இலண்டன் பயணங்களில் என்னை முந்தி ஒரு காரையும் போகவிட்டதில்லை! ஒருமுறை என்னுடன் போட்டிக்கு ஓடியவனை முந்தவிடாது கண்டபடி ஓடி அவன் பின்னுக்கு வந்து மோதும்படி திடீரென்று பிரேக் அடித்துவிட்டேன். இப்படியான மோட்டு வேலைகளைப் பார்க்கக்கூடாது என்று அதற்குப் பின்னரும் ஒவ்வொருமுறையும் நினைத்துக்கொண்டாலும் விரைவுப்பாதைகளில் போகும்போது மைக்கல் சூமாக்கர் போன்று நினைத்துக் கொள்வது மாற்றமுடியாத பலவீனமாக உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில்... ஒரு முறையாவது, புதுக்கார் வாங்கி ஓட வேண்டும் என்பதற்காக, "மெர்சிடஸ் 190" வாங்கி... 18 வருடம், 280,000 கி.மீ. வரை ஓடி Katalysator  இல்லாமல் எமது நகரத்துக்குள் ஓட முடியாது என்ற சட்டம் வந்த பின் அதனை விற்றேன்.
 

புதுக்காரில் சௌகரியம், அசௌகரியம் என்று இரண்டும் உண்டு.
அதனை குறிப்பிட்ட கால அளவுகளில் அதனை பராமரிப்புக்கு விட்டு, அதன் புத்தகத்தில் பதிந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு முறை பராமரிப்புக்கு.... 500 - 1000€ வரை செலவாகும்.

 

இங்கு வாகனம் வைத்திருந்து 28 வருடங்களானாலும், இப்போ வைத்திருக்கும் காருடன் மூன்று கார்களையே வாங்கியுள்ளேன்.
கார் வாங்கப் போவது என்று தெரிந்தவுடன் எந்தக் கொம்பனி கார் வாங்கலாம்.... என்று மனைவியுடனும், நண்பர்களுடனும் கலந்து ஆலோசிப்பேன்.

 

இன்ன கார்தான் ... வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் ஊரில் உள்ள அது சம்பந்தம்பட்ட கார் கொம்பனிகளின் விற்பனை நிலையங்களையும், பத்திரிகைகளையும் தனியே... நோட்டமிடுவேன்.(இதற்கு 2 மாதம் எடுக்கும்)
 

நிறமும், விலையும், கி.மீ எவ்வளவு உள்ளது என்பது பிடித்துக் கொண்டவுடன் மனைவியுடன் சென்று அந்தக் காரை மீண்டும் நோட்டமிட்டு, அதன் முன்னைய உரிமையாளர்... எத்தனை வயது உடையவர் என்பதை அறிய முயற்சிப்பேன்.

அதனை பென்சன் எடுத்தவர் பாவித்திருந்தால்... இன்னும் சந்தோசம்.
இளையவர்களும், துருக்கியரும் பாவித்த காரை வாங்கவே மாட்டேன்.

 

எல்லாம் சரி வந்து விட்டால்..... காரின் தரத்தை அறிய ஒரு Hobby மெக்கானிக் ஒருவரையும், குறிப்பிட்ட விலையிருந்து 1500 € குறைக்க இன்னுமொரு நண்பர் உள்ளார், அவரையும் அழைத்துச் சென்று பேரம் பேசி.....   :D

விற்பனையாளர் உங்களுக்கு காரே விற்பதில்லை... என்று சொல்லும் அளவுக்கு, அரியண்டம் கொடுத்து.... காரை வாங்கி வந்து விடுவேன். :)

Link to comment
Share on other sites

உண்மையில் எனக்கு பிடித்த கார்கள் டோயார்ரா ......மஸ்டா ...........இதைத்தவிர வேறு எந்தக்கார்களையும் நான் வாங்குவதில்லை  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கார் வாங்கும் போது...நாம பாக்கிறது

1. வருடம்
2. நிறம்
3. கிலோ மீற்றர்
4. காரின் வரலாறு
 

பெரும்பாலும் ஜேர்மன் கார்களும்... அமெரிக்க வாகனங்களுமே வாங்க பிடிக்கும்... ஜேர்மனி கார்களில் பிடிக்காத விடயம் அதன் மெயின்ரெனன் .... யானை விலை.... குதிரை விலை... உதிரிப்பாகங்கள்...$120 மணித்தியால லேபர்.

 

BMW விட Audi உள்ளும் வெளியும் நன்றாக இருக்கும்.... ! 

வாங்குங்க... ஏ 8 8 சிலின்டர்....4.2 லீட்டர் இன்ஜின்.... பறக்கலாம் அதிவேக பாதையில்.....

சோகம் என்ன என்றா....12மாதத்தில் 11 ஸ்பீடிங் ரிக்கற்.... :(   (சத்தியமாக)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது காரையும் ஏன் டொயட்டாவில் வாங்கினேன் என்றால் முதல் காருக்கு அவர்கள் வழங்கிய தரமான சேவையே காரணம். இரண்டு வாகனங்களையும் டொயட்டா டீலரிடம் மாத்திரமே பராமரிப்பு சேவைக்கு கொடுத்து எடுக்கிறேன்..

ஆகவே இனிமேல் காரை மாத்தினாலும் புது கார்தான் வாங்குவேன்.. :D அந்த வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. :lol:

 

ரொயோட்டா கார்கள் தான் தற்சமயம் உலகில் விற்பனையில் முன்னணியில் நிற்கின்றன. குறைந்தளவு பெற்றோல் செலவில் ஓடக்கூடியதாக அதன் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கின்றது எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால் அதிவேக பாதையில் வேகமான காற்றுக்குச்

சிறிது அசைவும் இருக்குமாம் உண்மையா ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொன்னாலும் Toyota - Toyota தான் :D

 

Me it is LEXUS.

 

என் கனவு தேவதையே......

 

LS.png

 

1445068258134588994.jpg

 

lexus-nx-interior_a_mid.jpg?itok=tPytWjS

Link to comment
Share on other sites

Me it is LEXUS.

 

ஏழைக்கேற்ற எள்ளுறுண்டை காணும் என நான் நினைப்பதால் Lexus பாவித்து பாத்ததில்லை :icon_idea:

Lexus ன் விலைக்கு தகுந்தமாதிரி அது நன்றாகத்தானே இருக்கும் நாதமுனி அண்ணா :)

Link to comment
Share on other sites

ரொயோட்டா கார்கள் தான் தற்சமயம் உலகில் விற்பனையில் முன்னணியில் நிற்கின்றன. குறைந்தளவு பெற்றோல் செலவில் ஓடக்கூடியதாக அதன் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கின்றது எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால் அதிவேக பாதையில் வேகமான காற்றுக்குச்

சிறிது அசைவும் இருக்குமாம் உண்மையா ? :D

எந்த வாகனத்தின் சில்லிலும் 4 ஆணிகள் மட்டும் இருந்தால் அசையத்தான் செய்யும்.. :D சின்னக் கார்களில் அநேகமாக 4 ஆணிகள்தான் இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைக்கேற்ற எள்ளுறுண்டை காணும் என நான் நினைப்பதால் Lexus பாவித்து பாத்ததில்லை :icon_idea:

Lexus ன் விலைக்கு தகுந்தமாதிரி அது நன்றாகத்தானே இருக்கும் நாதமுனி அண்ணா :)

 

ஜேர்மன் காரர்கள் அது எக்ஸ்ட்ரா, இது எக்ஸ்ட்ரா என்று ஒவ்வொரு சிறு மேலதிக விசயங்களுக்கும் காசு பறிப்பார்கள். (உதாரணம்: electric window, electric mirror, etc)
 
ஒரு நண்பரின் C கிளாஸ் merc பார்த்து விட்டு அப்படியே வேண்டும் எண்டு போனால், அங்க அந்த கார் very basic நிலையில் இருந்து டீலருக்கு, டீலர், உங்களுக்கு ஏத்த மாதிரி, உங்களுக்கு என்னென்ன தேவை என்று கேட்டு விலை சொல்லுவார்கள். 
 
ஆனால் lexus ரகத்தில் இது எல்லாமே basic ஆக தருவதே சிறப்பு. அதுவே அவர்களது சந்தை தந்திரம். டொயோடா  குடும்ப luxury brand என்பதால்...
 
Lexus, இந்த வகை பிராண்டில் இது, இது கிடைக்கும், இது தான் விலை என்று நம்பி போகலாம்.. :wub:

 

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில்   volkswagen passat வாங்கினேன் ஐரோப்பாவில் முதல் முதல் வாங்கிய கார் .....நல்ல இதமாக இருக்கும் ........ஒரு நாள் நண்பருடைய toyota corolla  காரை ஓடும்படி வந்தது .ஆகாக என்ன இதமாக இருந்தது  ஜெர்மன் காருக்கும் ஜப்பான் காருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தெரிந்தது ..............சில மாதங்களின் பின் toyata corolla  stationwagon ஒன்று வாங்கினேன் பல நாட்கள் என்னோடு சேர்ந்து உழைத்தது .........தற்போது மஸ்டா வைத்திருக்கிறேன் ஸ்பீட் breaker .........உண்மையில்  இது வரை காலமும் என்னுடன் எனது நிலைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்குது .............எனக்கு பிடித்த சில்வர் கலரிலும் அது  அமைந்தது தான் இன்னும் சிறப்பாக தெரிந்தது :D  :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரியை  திறந்த வாத்தியாருக்கு நன்றிகள்

 

 

கார் வாங்கும்போது நான் கவனிப்பவை..

 

1- காரை வாங்கியபின்னர் ஏற்படக்கூடிய பராமரிப்புச்செலவு( விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும்)

 

2- நிறம்

 

3- வாகனத்தின் நிறை (நம்ம ஓட்டத்துக்கு வழுக்காது பறக்காது :lol:  இருக்கணும்)

 

4- வாகனத்தின் குதிரைவலு - பரிசுக்குள் (நகரம்) அதிகம் ஓடுவதால் குதிரைவலு குறைந்த வாகனத்தையே தெரிவு செய்வேன். அத்துடன் காப்புறுதியும் குறைவு.

 

5- விமானநிலையம் உட்பட கார் தரிப்பிடங்களுக்குள் செல்லக்கூடிய  உயரம் - 1 M 90க்கு மேலிருக்கக்கூடாது)

 

6- புதிய காரைவிட (0 கிலோமீற்றர்) சில ஆயிரம் கிலோமீற்றர்கள்ஓடிய வாகனத்தையே வாங்குவது வழமை. புதிது என்றால் திறப்பை  வாங்கிவிட்டு  திருப்பிக்கொடுத்தாலும் 10 வீதம் அடிபட்டுவிடும். இரண்டாவது கையாகிவிடும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன பா சிவில் engineer மார் எல்லாம் 120 k மேல உழைக்கிராக்கள் எல்லாம் Toyota ஓடையே நிக்குறீங்க :D

 

ரொயோட்டா என்றாலும் பரவாயில்லையே .சிலர் இன்னும் சைக்கிள்தானாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

குதிரைக்குக் குணம் அறிந்துதான் கொம்பைக் கடவுள் கொடுக்கவில்லையாம். அதனை நினைவில் வைத்திருப்பதால் ஒருபோதும் பவர் கூடின கார்களை நான் வாங்கியதில்லை. என்றாலும் கார் ஓட ஆரம்பித்த முதல் இரண்டு வருடங்களில் ஒவ்வொரு வாரமும் கேம்பிரிட்ஜ் - இலண்டன் பயணங்களில் என்னை முந்தி ஒரு காரையும் போகவிட்டதில்லை! ஒருமுறை என்னுடன் போட்டிக்கு ஓடியவனை முந்தவிடாது கண்டபடி ஓடி அவன் பின்னுக்கு வந்து மோதும்படி திடீரென்று பிரேக் அடித்துவிட்டேன். இப்படியான மோட்டு வேலைகளைப் பார்க்கக்கூடாது என்று அதற்குப் பின்னரும் ஒவ்வொருமுறையும் நினைத்துக்கொண்டாலும் விரைவுப்பாதைகளில் போகும்போது மைக்கல் சூமாக்கர் போன்று நினைத்துக் கொள்வது மாற்றமுடியாத பலவீனமாக உள்ளது!

 

ஏலத்தில் வாங்கும் வாகனங்கள் பற்றிய அறிவித்தல்களை முன்னரே அறிந்துகொண்டு செயற்பட்டால் மிகுந்த இலாபத்துடன் வாங்கலாம்.

ஆனாலும் பல பெரிய முதலைகளுடன் மோதத் தயாராக இருக்கவேண்டும்.

 உங்கள் அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கிருபன். :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் வாங்கும்பொழுது அதன் சம தரத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களோடு ஒப்பிட்டு புதுக் கார்(ஏற்கனவே கார் ஓட்டுவதில் போதிய அனுபவம் இருந்தால்) வாங்குவதே நீண்ட காலத்திற்கு நல்லது.

முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது.. :o

ஒரு லிட்டர் எரிபொருளுக்கு கார் செல்லும் தூரம் (KmpL)
கார் இயந்திரத்தின் குதிரை திறன்(BHP)
காரின் பாதுகாப்பு அம்சங்கள்(ABS, EBD, Air bags, Auto lock/open etc)

காரின் உட்புற வசதிகள் (ICE, Leg Room, seat adjustments, cooling etc)
சாலைகளில் காரின் பாவனை(easy manoeuvrability, road handling, turning radius etc)
விற்பனைக்கு பிந்திய சர்வீஸ் வசதி(After sales service)

உத்திரவாதம்(Warranty)
எளிதில் கிடைக்கும் உதிரிப் பாகங்கள்(Spareparts availability)
விலை/வசதி விகிதாச்சாரம்(Cost/benefit ratio)
மறு விற்பனைக்கான பெறுமதி(Resale value)
கார் வண்ணங்களுக்கான தேர்வும், வடிவும்(availability of colors, aerodynamic design)

 

வசதிக்கேற்ற எள்ளுருண்டை என்னுடைய கார்.. :)

147_349X215.jpg
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபாரு என்று ஒரு கார் இருக்கிறது. ஜப்பானியக் கார்களில் மிகவும் தரமானது. ஓடுவதற்கும் இதமானது. 4சில்லுகளும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் மிகவும் வசதியான ஓட்டம்.

 

பொக்ஸர் எனும் நேர் 4 அல்லது 6 சிலிண்டர்களைக் கொண்டது.

 

விலையும் கைக்கு அடக்கமானது.

 

எம்மவர்கள் பலருக்குத் தெரியாத ஒரு கார்.

 

டொயோட்டா , மஸ்டா , கொண்டா என்று நிற்காமல் மற்றைய கார்கள் பற்றியும் தேடிப் பாருங்கள்.

 

 

Link to comment
Share on other sites

நான் அவுஸ் வந்து முதன் முதல் வாங்கிய கார் Holden Commodore. 
 
நான்கு வருடங்கள் பழையது. எந்த விதமான என்ஜின் பிரச்சனையும் தரவில்லை.  V6 3.6 லீட்டர் என்ஜின்.
 
அதன் பின் புத்தம் புதிய Holden Commodore ஒன்று வாங்கினேன் $ 39,000. வியாபரத்திற்கு என்று பதிவு செய்ததால் 5 வருடத்தில் மொத்தத்தையும் வரிக்கழிப்பு செய்து விட்டேன்.
 
நன்றாகப் பெற்றோல் குடிக்கும். ஆனால் அமுத்தினால் அமுத்து தான். பறக்கும். அவுஸில் 110 கிலோ மீட்டர் தான் உச்ச வேகம். சிட்னியில் இருந்து கன்பெறா போகும் போது 170 இல் ஓடியிருக்கிறேன். பொலிஸ் பிடித்தால் உட்னேயே லைஸென்ஸ் பறிப்பார்கள்.
 
 
Holden ஐ அமெரிக்கவில் Pontiac என்பார்கள்.
 
2008-holden-ve-commodore-sportwagon-fron
 
 
 
 
Holden_Commodore_sv6_2009_Holden-downloa
 
 
   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mercedes-Benz-C-KLasse-W-205-C-250-AMG-L

 

ஜேர்மனியர் அதிகம் விரும்பும் காரின் நிறம்..... சாம்பல் கலந்த சில்வர், மற்றும் கறுப்பு.

பிடிக்காத நிறம்..... ஒரேஞ், வயலட்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.