Jump to content

ஈழத்தில் பஞ்சாயத்து ஆட்சி


Recommended Posts

தற்சமயம் மீண்டும் எங்கள் ஈழப்பிரச்னைக்கான பேச்சுவார்தை மேசைக்கு சர்வதேசம் பிரச்சனைக்குரிய இரு தரப்பையும் கொண்டு வந்து இருத்தியுள்வேளை இந்தியாவும் தனது பங்கிற்கு தங்கள் ஆட்சிமுறையிலுள்ள பஞ்சாயத்து மற்றும் யூனியன் பிரதேச ஆட்சி முறையை பரிசீலிக்கசொல்லி ஈழதமிழருக்கு அதனடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கசொல்லி சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

அந்த சட்டவரைபுகள் என்பது வேறு ஆனால் தென்னிந்திய சினிமாக்களை பார்த்து பழகிவிட்ட எமக்கு பஞ்சாயத்து என்றதும் நினைவிற்கு வருவது ஊரின் எல்லையில் ஒரு ஆலமரம் அதனடியில் ஒரு பெரிசு மேல்சட்டையில்லாமல் விறைப்பாய் அமர்ந்திருக்க அவரைச்சுற்றி ஊர்மக்கள் அமர்ந்திருக்க . அந்த பெரிசு அவர்கள் பிரச்சனையை கேட்டு அவரே தனது அறிவுக்கெட்டினபடி ஏதாவது தீர்ப்பை கூறுவார்

இதுதான் எமக்கு உடனே ஞபகத்திற்கு வருகின்ற பஞசாயத்து முறை.எனவே இந்த பஞசாயத்து முறையை ஈழத்தமிழர் ஏற்றுக்கொண்டு எங்கள் பிரச்சனை முடிவிற்கு வந்து விட்டது என்றும் வைத்துக்கொண்டு(ஒரு கற்பனைதான்)இந்த பஞ்சாயத்து முறையை நடைமுறைப்படுத்த தொடங்குவோம் முதலில் பஞ்சாயத்தை கூட்டுவதற்கு முக்கியமாக ஊருக்கு ஊர் இடவசதியுள்ள இடங்களில் ஒரு அரச மரமோ அல்லது ஆலமரமோ நடவேண்டும்.

இந்த மரங்கள் வளர அதிக காலங்கள் எடுக்கும் என்பதால் அவை வளரும்வரை தற்காலிகமாக அந்த மரங்களை போல் பெரிய கட்டவுட்டுகளை (கீறிய படங்களை) செய்து பயன்படுத்தலாம்.இப்போ இடம் தயார் அடுத்ததாக் தீர்ப்பு சொல்ல தலைவர் தேவை அவரை தேர்ந்தெடுக்க சில அடிப்படை தகுதிகள் என்னவென்றால் கொஞ்சம் சொத்துகள் உள்ள வயதான ஆனால் நல்ல உடற்கட்டுள்ளவராக இருக்கவேண்டும்.

சேட்டு போடக்கூடாது. வேட்டி கட்டத்தெரிந்திருக்கவேண்டும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் எனக்கு இதுவரை தேன்றிய ஆட்சி முறை கட்டமைப்பு இனிமேலும் ஏதாவது தோன்றினால் எழுதுகிறேன் எனவே இதனை யாராவது கொப்பி எடுத்து ஒன்றை நோர்வேக்கும் மற்றதை இலங்கை அரசிற்கும் பரிசீலனைக்காக காகத்தின்ரையே அல்லது கழுகின்ரையோ காலிலை கட்டி அனுப்பி விடவும் நன்றி.

காகமும் கறுப்பு தானே. எண்ட காலில கட்டி அந்த பணியை செய்யுறன் சாத்திரி சார்

Link to comment
Share on other sites

யோவ் சாத்திரி

உப்படியெல்லாம் எழுதிய உம்மை பேசாமல் கழு மரம் ஏற்றினால் என்ன என்று இந்த நாட்டாமை யோசிக்கிறேனுங்க. :P :lol: :P :lol:

Link to comment
Share on other sites

ஒய் கறுப்பி நான் சொன்னது கறுப்பை மட்டும் அடையாளமாய் வைத்து அல்ல பறக்க தெரிய வேணும் பறக்க தெரியுமா அப்ப தான் உம்மடை வாலிலை சே காலிலை கட்டி விடுவன் இதோடா வசம்பு நான் பஞ்சாயத்து ஆட்சி முறை தொடங்க முதல் இவர் மன்னராட்சி தொடங்கிட்டார் நீங்கள் கழுமரம் ஏத்த முதல் நான் பனை மரம் ஏறிடுவனே

Link to comment
Share on other sites

இன்னாப்பா சாத்திரி..

ஆலமரத்தில் கிளைகள் எல்லாம் தூங்கம்தானே....

ஒண்டுமில்லை நம்ம குடும்பத்துகாரங்கள் பொழுது போகவில்லையாம் தொங்கிக் குதிச்சு விளையாடத்தான்.....

ஆ.. சொல்ல மறந்திட்டன் முதல் வழக்கே நம்ம சின்னா மேல போட சின்னாச்சி இழுத்துச் செருகின சீலையோட கண்ணபின்னாவென்று கத்திக்கொண்டு வாறதைக் கண்டனான் இன்னும் வரேல்லையோ?

Link to comment
Share on other sites

பஞ்சாயத்து ராஜ்ஜில் ஆட்டம்போடுபவர் வால்கள் ஒட்ட நறுக்கப்படுமாம் வசதி எப்படி ஆதிவாசி. :P :P :P

Link to comment
Share on other sites

பஞ்சாயத்துத் தலைவரும் பஞ்ச ஆலோசகர்களும் நம்பாளுங்களா இருக்கையில ஆதிக்கு ஏம்பா கவலை?

ஆதியின் வாலுக்கு வாரவாரம் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி வளவளப்பாக வளர்ப்பாங்கப்பா.

Link to comment
Share on other sites

யோவ் சாத்திரி

உப்படியெல்லாம் எழுதிய உம்மை பேசாமல் கழு மரம் ஏற்றினால் என்ன என்று இந்த நாட்டாமை யோசிக்கிறேனுங்க. :P :lol: :P :lol:

நான் என்ன யோசிக்கிறன் என்று சொல்லவா வம்பண்ணா? :wink: :lol: :evil:

Link to comment
Share on other sites

நான் என்ன யோசிக்கிறன் என்று சொல்லவா வம்பண்ணா? :wink: :lol: :evil:

ஐயோ வேண்டாமுங்க நான் கப்சிப்பாக எஸ்கேப். :(:(

Link to comment
Share on other sites

சுண்டல் உங்களை நினைத்தால் தான் பாவமா இருக்கு!!

Link to comment
Share on other sites

சாத்திரி பக்கத்தில் செம்பு வைத்துக் கொண்டு ஒருவர் நிற்பாரே அவரை மறந்திட்டிங்கள் போல, அல்லது அந்த வேலை உங்களுக்கு உரியதோ? :lol:

Link to comment
Share on other sites

ஒய் சுண்டல் தண்டனைகளை படிச்சனீர்தானே பெண்ணின் கையை பிடிச்சா இரண்டு ஆட்டுக்குட்டி அபராதம் நீரும் சின்னாவும் ஊருக்கு போனதும் முதல் வேலையா ஒரு ஆட்டுப்பண்ணை தொடங்குங்கோ அப்பதான் சமாளிக்கலாம் :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒய் சுண்டல் தண்டனைகளை படிச்சனீர்தானே பெண்ணின் கையை பிடிச்சா இரண்டு ஆட்டுக்குட்டி அபராதம்

ஆட்டுக்குட்டி இரண்டும் எப்படியிருக்கவேணும் (ஆண், பெண் அல்லது ஒன்று ஆண் மற்றயது பெண்) :P :P ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி பஞ்சாயத்துத் தலைவர் யார்? நெடுக்ஸ் தான் இதற்குச்சரியான ஆளெண்டு நான் நினைகிறன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.