Jump to content

இவரைத் தெரிகிறதா? போட்டி நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் தெரிஞ்ச ஆட்களாப் போடக்கூடாதோ மணிவாசகன் :D

ஆன்ரியின்ர ஆத்துக்காரரின்ர படம் இருந்தா போட்டுவிடுங்கோ:)
Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆன்ரியின்ர ஆத்துக்காரரின்ர படம் இருந்தா போட்டுவிடுங்கோ :)

 

உங்கள் ஆத்துக்காரியின் படம் போட்டாலும் கண்டு பிடிச்சிடுவன் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  முயற்சி

தொடருங்கள் மணிவாசகர்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8uLO9Y.jpg

 

ஞானசார தேரருக்கு முஸ்லிம்கள் எப்படியோ அதே மாதிரித் தான் இவனுக்கு தமிழ் ஆக்களிலை ஒரு வெறுப்பு... யாரெண்டு சொல்லுங்கோ பாப்பம்....

 

சிறில் மத்யூ.

 

ஜெயவர்த்தன அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும், திணைக்களத் தலைவர்களாகவும் இருந்த பலர்  1983 கலவரத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தனர். குறிப்பாக அப்போது விஞ்ஞானக் கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில் மத்யூ பெருமளவு உறுப்பினர்களைக் கொண்ட சிங்களக் காடையர் குழு ஒன்றை வழிநடத்துபவராக இருந்தார்.

கொழும்பு, கம்பஹா பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு அவரே தலைமை தாங்கினார் என்பதுடன், அதற்கான திட்டங்களை வகுத்துக்கொடுத்தவராகவும் அவரே இருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் தெரிஞ்ச ஆட்களாப் போடக்கூடாதோ மணிவாசகன் :D

 

malayalam-actor-kamal-hassan-180.jpg

 

இவரை தெரியுமா?  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

malayalam-actor-kamal-hassan-180.jpg

 

இவரை தெரியுமா?  :lol:

 

கமலகாசனும்  அவரது பாட்டனாரும் :D  :D

Link to comment
Share on other sites

ஆரம்பித்து ஒரு நாளே ஆன பொதிலும் ஆர்வத்துடன் பலரும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி...

 

பதில்களை வழங்கியோருக்கும் வாழ்த்துக்களைப் பகிர்ந்தோருக்கும் எனது அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..


கொஞ்சம் தெரிஞ்ச ஆட்களாப் போடக்கூடாதோ மணிவாசகன் :D

 

இந்தப் படங்களை உடனுக்குடன் கண்டுபிடித்து விடுகிறார்களே எம் களத்துக் கில்லாடிகள்.

 

இந்தப் படங்களைத் தெரிவு செய்ததன் நோக்கம் பெயர்களை அறிந்திருந்தும் புகைப்படங்களை அறிந்திராத சில நல்ல மற்றும் கெட்டவர்களை அறிமுகப்படுத்துவதற்கே.

 

இருந்தாலும் உங்கள் ஆலோசனையை கருத்தில் எடுக்கிறேன் அக்கா...

 

 

 

 


கடைசியாக இணைத்த படத்தை சரியாக இனங்கண்ட வாலிக்கும் அவர் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட குமாரசாமி அண்ணைக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

 

அத்துடன் பதில்களைப் பதிந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

 

 

 

 

 

 

 

 


யார் இவர்?

 

lgaYCL.jpg


அதோடை சேத்து இந்த மரத்தையும் கண்டுபிடியுங்கோ!

 

UDrlbn.jpg

Link to comment
Share on other sites

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகல துறை ஆட்டக்காறர் சோபர்சை அர்யுன் அண்ணா சரியாக இனங்கண்டுள்ளார். வாழ்த்துக்கள்.

 

சரி நாங்கள் மரத்தை கண்டுபிடிப்போம்... 

 


மரம்:ஆடாதோடை

 

இது ஆடாதோடை மரம் அல்ல நந்தன்...

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவைச் சரியாகக் கண்டுபிடித்த அர்யுன் அண்ணாவிற்கும் மரத்தை சரியாக கண்டுபிடித்த நுணாவிலானுக்கும் பாராட்டுக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணி அண்ணா கொஞ்சம் கடினமாகக் கேளுங்க.

Link to comment
Share on other sites

RBD40Y.jpg

 

இவரைக் கண்டுபிடியுங்கோ

 


அதோடை சேத்து இவரையும் கண்டுபிடியுங்கோ

 

U6bbzO.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மேலே உள்ளவர் தோமஸ் அல்வா எடிசன்.
 
கீழே உள்ளவர் குட்டிமணி.
Link to comment
Share on other sites

சரியான விடைகளைத் தந்த கல்யாணிக்கு வாழ்த்துக்கள்...

 

 

 

RIKUg8.gif

 

இவரை யாரென்று  கண்டுபிடிப்போமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடைகளைத் தந்த கல்யாணிக்கு வாழ்த்துக்கள்...

 

 

 

RIKUg8.gif

 

இவரை யாரென்று  கண்டுபிடிப்போமா?

 

செ. சுந்தரலிங்கம்

 

யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் சுந்தரலிங்கம். யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி, கொழும்பு புனிய யோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற சுந்தரலிங்கம், 1914 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் ஒக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பேர்லியல் கல்லூரியில் கணிதத்தில் பட்டப் பின்படிப்பும் பயின்று, இலங்கை திரும்பிய சுந்தரலிங்கம், இந்தியக் குடிமைப் பணியில் இணைந்தார். 1920 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பாரிஸ்டர்களுக்கான பார் கழகத்தில் சேர்ந்து வழக்கறிஞராகத் தேர்ந்து இலங்கையில் பணியாற்றினார். கொழும்பு ஆனந்தா கல்லூரி அதிபராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணிததுறைத் தலைவராகவும் பின்னர் பணியாற்றினார்.
 
சுந்தரலிங்கத்திற்கு நான்கு சகோதரர்கள். செ. நாகலிங்கம், இலங்கை மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 1954 இல் பதில் மகாதேசாதிபதியாகவும் இருந்தவர்; அடுத்தவர் செ. பஞ்சலிங்கம் ஒரு மருத்துவர், செ. அமிர்தலிங்கம் மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளராகப் பணியாணியவர், அடுத்தவர் செ. தியாகலிங்கம் ஒரு பிரபல வழக்கறிஞர்.
 
கனகசபை என்பவரின் மகள் கனகாம்பிகை அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஞானலிங்கம், சத்தியலிங்கம், லிங்காம்பிகை, லிங்காவதி, லிங்காமணி, லிங்கேசுவரி என ஆறு பிள்ளைகள்.
 
சுந்தரலிங்கம் அரசியலில் ஈடுபாடு கொண்டு 1940 ஆம் ஆண்டில் தனது பணியில் இருந்து ஓய்வு எடுத்தார். இலங்கை அரசாங்க சபைக்கு 1943, 1944 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1947 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்து 1947 செப்டம்பர் 26 இல் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரானார். இலங்கையின் 11 விழுக்காடு மக்களுக்கு (இந்தியத் தமிழருக்கு) குடியுரிமையைப் பறிந்த்த சர்ச்சைக்குரிய இலங்கைக் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக அன்று வாக்களித்தார். ஆனாலும், 1948 டிசம்பர் 10 இல் சமர்ப்பிக்கப்பட்ட "இந்தியப் பாக்கித்தானிய குடிமக்கள் குடியுரிமைச் சட்டம்" நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்பட்ட போது வெளிநடப்புச் செய்தார். அன்றைய இலங்கை பிரதமர் டிஎஸ் . சேனநாயக்கா இவரது நடத்தை குறித்துக் கேள்வி எழுப்பியதை அடுத்து, தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.
 
1951 ஆம் ஆண்டில் இலங்கையின் தேசியக்கொடியாக சிங்களக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து சுந்தரலிங்கம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1952 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தெரிவானார். இலங்கையில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1955 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்தில் பங்கெடுக்காமையால் தனது உறுப்பினர் பதவியை இழந்தார். இதன் பின்னர் இடம்பெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.1956 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.
 
1959 ஆம் ஆண்டில் "ஈழத் தமிழ்ர் ஒற்றுமை முன்னணி" என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாததால் 1960 மார்ச்சு தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தா. சிவசிதம்பரம் என்ற சுயேட்சை வேட்பாளரிடம் தோற்றார்.
 
1963 ஆம் ஆண்டில் சுந்தரலிங்கம்   Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents என்ற நூலை வெளியிட்டு தனித் தமிழீழம் கேட்ட முதலாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றார்.
 
சுந்தரலிங்கம் 1965 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மூன்றாவதாவே வந்தார். 1970 தேர்தலில் காங்கேசன்துறை தொகுதியில் தமிழரசுக் கட்சித் தலைவர் சா. ஜே. வே. செல்வநாயகத்துடன் போட்டியிட்டுத் தோற்றார்.
 
தகவலுக்கு நன்றி விக்கிபீடியா.
Link to comment
Share on other sites

93137802167147286982.jpg


பொழுது போகவில்லை எனவே இணைத்தேன் .ஐந்து வேறு விதமான பிரமுகங்கள் .கண்டுபிடியுங்கள் .

மன்னிக்கவும் மணி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.