Jump to content

இவரைத் தெரிகிறதா? போட்டி நிகழ்வு


Recommended Posts

  • Replies 185
  • Created
  • Last Reply

2013-11-07-11-34-30-q-with-jian-ghomeshi

 

சி.பி.சி வானொலி அறிவிப்பாளர் Jian Ghomeshi. பல பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியாக பல பெண்கள் முறையிட்டதை அடுத்து பொலிசில் சரணடைந்தவர். இப்போ வீட்டுக்காவலில் உள்ளார்  என நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

93137802167147286982.jpg

பொழுது போகவில்லை எனவே இணைத்தேன் .ஐந்து வேறு விதமான பிரமுகங்கள் .கண்டுபிடியுங்கள் .

மன்னிக்கவும் மணி .

 

 

 

 

தெரியாத முகங்களை அறிமுகப்படுத்துவதற்கான பதிவே இது, தாராளமாக உங்கள் படங்களை இணையுங்கள் அர்யுன் அண்ணா...

அர்யுன் அண்ணா இணைத்த படங்களில் தாடிக் காறர் ஜேம்ஸ் கமறுன்.. தலைமுடியுடன் இருப்பவர் இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் பெக்கம்..

Link to comment
Share on other sites

புது வருடத்திற்கு கஷ்டமான சில படங்கள் .முடிந்தால் கண்டு பிடியுங்கள் .

 

bjorn-borg-grass-ta_684890n.jpg


giuliano-gemma.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ragini-closeup-2.jpg

திருவாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்ட லலிதா, ராகினி, பத்மினி மூவரில் ஒருவராகிய ராகினி (சத்தியமாக முன்ன பின்ன பார்த்தது கிடையாது!) :)

அர்ஜுன் அண்ணா, எங்கள் புலனாய்வுக்கு இதெல்லாம் ஜுஜுபி. முடிந்தால் படத்தை டவுண்டோல்ட் செய்து EXIF metadata ஐ எடுத்துவிட்டுப் போடுங்கள். இல்லாவிட்டால் ஒரு சில செக்கன்கள் போதும்!!!

 

Link to comment
Share on other sites

படத்தில் பெயர் வருகிறதே அர்ஜுன் அண்ணா :lol:

நன்றி நவீனன் .நான் கவனிக்கவில்லை  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

துலிப் மென்டிஸ் இளமை காலத்தில் .

 

சரியான பதில் அர்ஜுன் அண்ணா :)  பச்சை பிறகு போட்டு விடுகிறேன் :D

Link to comment
Share on other sites

Dr. Rajasundaram

 

இவரை யாரென்று தெரியுமா?

 

தெரிந்தவர்கள் விபரங்களை பதிவிடுங்கள்... 

 

 

Link to comment
Share on other sites

காந்தியத்தில் இருந்தவர் .வெலிக்கடை சிறையில் கொலையானவர் .பல விடயங்கள் தெரியும் ஏனெனில் இவருடன் இருந்த பலர் எம்முடன் இருந்தார்கள் .பின்னர் வந்து பதிகின்றேன் .

Link to comment
Share on other sites

நல்ல வெய்யில் சுட்டெரிக்கின்ற மாதம் ஆனால் மாதமும் திகதியும் சரியாக ஞாபகம் இல்லை, 79 ம் ஆண்டு அல்லது 80 ம் ஆண்டாக இருக்க வேண்டும், சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாசாலையில் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் யாழ்ப்பாணத்தின் முதலாவது கிளை ஆரம்பிக்கப்படுவதற்கான கூட்டத்திற்கு சந்ததியாரின் வழிகாட்டலில் சில குறிப்பிட்ட சமூக அக்கறையுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

அதற்கு முன்னர் வலிகாமம் மேற்குப் பகுதியிலுள்ள பிரதான கல்லூரிகளுக்கும் சீநோருக்கும் நானும் சந்ததியாரும் மோட்டார் சைக்கிளில் சென்று அகதிகளுக்கான உதவியாக மாதாந்த சம்பளத்தில் ஒரு குறிப்பிட்டளவு இயலுமான தொகையினை சம்பளத்திலிருந்து கழித்து எடுத்து தந்து இந்த அகதிகளுக்காக தேவைகளை நிறைவேற்றும் பணிக்குப் பங்களிப்புச் செய்யும்படி கோரி வந்தோம். இந்தப் பயணத்தின் போது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் இன்றி நடுவழியில் நின்றுவிட, பஸ்சில் சுழிபுரம் வந்து சந்ததியார் வீட்டில் நல்ல கைத்குத்தரிசிக் கஞ்சி சந்ததியாரின் தங்கையால் பரிமாறப்பட்டபோது பசியாறிக் கொண்டு விடைபெற்றது ஞாபகத்தில் நிலைத்து விட்டது. ஒரு திண்ணையும் அதனோடு சேர்ந்த உள்ளறையும் வெளியில் ஓலைக் குசினியும் கொண்ட மண்வீடு. வீரத்தாய் என அமிர்தலிங்கத்தால் பெயர் சூட்டப்பட்ட சந்ததியாரின் தாயும், தங்கையும் அங்கு குடியிருந்தனர். சந்ததியார் அமிர்தலிங்கத்தின் அரசியலுக்கு நேரெதிரான இடதுசாரிய அரசியலுக்கு மாற்றம் பெற்று கூட்டணியின் கூட்டங்களில் நேரேயே வந்து அவர்களை அம்பலப்படுத்தி வந்தபோது அந்த தாய் வீரத்தாயிலிருந்து துரோகத்தாயாக மாறியிருக்கக் கூடும்.

இவ்வாறொரு சூழலில் இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.

அதற்கு வருகை தந்திருந்தவர்களில், எனது கல்லூரியான வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியின் அதிபராக இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற அன்றைய விக்டோரியா கல்லூரி அதிபர் அருணாசலம் அவர்களும் ஒருவர்.

அன்று கூட்டத்துக்கு எப்பவும் நடக்குமாற் போலவே நேரத்துக்கு ஆட்கள் வந்து சேராததால் பிந்தியே ஆரம்பமாகியது.

அதிக கூட்டமில்லை ஆனால் சுமாராக ஒரு பத்துப் பதினைந்து பேர் மட்டில் வந்ததாக ஞாபகம்.

இத்தனைக்கும் எனது முதல் காதல் முளைவிட்டிருந்த வயது அது. தரப்பட்ட வேலையை தவறவிட்டு விட்டு தாமதமாகவே கூட்ட அறிவிப்பை நான் செய்திருந்தேன். சந்ததியாரிமிடமிருந்து தப்ப முடியவில்லை. மிகக் கண்டிப்பாகவும் ஆனால் மிகச் சரியாகவும் வாங்கிக் கட்டிக்கொண்டேன். கண்டிப்பான மனிதன் என்ற பெயர் இவருக்கு உண்டு.

ஆனால் கூட்டம் முடிந்தபின்னர் சந்ததியார் மலர்ந்த முகத்துடன் அந்தக் கடுப்பான கண்டிப்பான மனிதனா இவர் என்று வியக்கும் வண்ணம் தன்னுடைய கண்ணாடிக்குள்ளால் கண்களைச் சிமிட்டினார்.

இந்தக் கூட்டத்திற்கு சந்ததியார் இருவரை அழைத்து வந்தார். அவர்களில் ஒருவர் டேவிட் ஐயா மற்றவர் அரபாத் என்ற பெயரால் அழைக்கப்பட்ட காந்தீயப் பண்ணையில் தொண்டராக இருந்தவர்.

அன்றைய கூட்டத்தின் பேச்சாளரான திரு. டேவிட் ஐயா பேச்சுக்கு அடுத்ததாக அரபாத்தின் பேச்சில் காந்தீயப் பண்ணைகளில் நடந்த பொலிஸ் கெடுபிடிகள் பற்றியும் தனது சிறை மற்றும் சித்திரவதை அனுபவங்களையும் சொல்லியபோது அது சமூகந்தந்தவர்களிடத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றது.

அகதிகளுக்கான புனர்வாழ்வுக் கழக யாழ்ப்பாண நிர்வாகம் அங்கு தெரிவு செய்யப்பட்டது. அதன் தலைவராக அதிபர் அருணாசலம் தெரிவு செய்யப்பட்டார்.

இக் கூட்டத்திற்குப் பின்னர் விக்டோரியாக் கல்லூரி, வட்டு இந்துக்கல்லூரி, காரைநகர் இந்துக்கல்லூரி போன்ற கல்லூரிகளின் ஆசிரியர்களின் சம்பளப் பணத்தில் மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகை அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்துக்கு பங்களிப்பாக ஓதுக்கித் தர சம்மதித்தனர்.

டேவிட் ஐயா அவர்கள் வேட்டியுடனும் கால்களில் சிலிப்பர்களுடனும் மிக எளிமையான வகையில் அங்கு வந்திருந்தார்.

இதற்குப் பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு சந்ததியார் யாழ்ப்பாணம் வந்திருந்த போது சடுதியாக வந்து கிடைத்த செய்தியொன்றின் பிரகாரம் தான் உடனடியாக வவுனியாவுக்குச் செல்லவேண்டும் என்று புறப்பட்டு சென்றார். அகதி மக்களுக்கு எதிராக வன்னி மக்களின் கலவரங்கள் சில இடங்களில் தூண்டப்பட்டு சேதங்கள் விளைவிக்கப்பட்டதாக அச்செய்தி இருந்ததாக எனது ஞாபகம். இது வரைக்கும் இந்தக் காந்தீய அமைப்புக்கும் சந்ததியாருக்கும் புளட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது எவருக்கும் தெரியாது. காந்தீயம் என்பது அகதிகளுக்கு உதவுகின்ற ஒரு தொண்டு நிறுவனம் என்பது மட்டுமே பரகசியமான விடயம்.

அன்று சென்றவரை நான் மீண்டும் நேரில் சந்திக்கவேயில்லை. காலம் பல கொடுவினைகளை இதற்குள் ஆற்றியிருந்தது. அவற்றில் ஒன்று தான் வெலிக்கடைப் படுகொலை. ஏனைய சிறைக்கைதிகளோடு டொக்டர் இராஜசுந்தரம் அவர்கள் கொல்லப்பட்டதும் இனக்கலவரங்களும் என்று காலம் பிறழ்ந்து போக எமது இளமைப் பருவம் அதற்குள் அமிழ்ந்து போனது. நீண்ட காலத்துக்குப் பின்னர் சந்ததியார் புளட்டின் மத்தியகுழு உறுப்பினர் அரசியல் செயலர் என அறிகிறேன்.

இதே காந்தீயத்தின் பாலமோட்டை அகதிகள் குடியிருப்புக்கான தற்காலிக குடில்கள் அமைக்கும் சிரமதானவேலை, பொதுக் கிணற்றுக்கு சென்று வருவதற்காக, கற்களைக் கொட்டிப் பரவி மேடான பாதை ஒன்று அமைக்கும் சிரமதானம், வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகரில் காட்டுப்புதர்களையும் மரங்களையும் அகற்றி கிராமத்துக்கான ஒரு சீரிய பாதை ஒன்றினை அமைக்கும் சிரமதானம் என்பனவற்றில் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களான நாங்கள் கலந்து கொண்டோம்.

செட்டிகுளம் கந்தசாமி நகர் பொதுப்பாதைக்கான காடு வெட்டுகின்ற வேலையின் போது டொக்டர் இராஜசுந்தரம் அவர்கள் கோடரியுடன் மரங்களை வெட்டுவதற்கு எங்களுடன் இணைந்து கொண்டார். எங்களுக்கு நுளம்புக்கடியால் ஏற்படக்கூடிய மலேரியோ நோய்க்கான தடுப்பு மாத்திரைகளை வவுனியாவிலுள்ள தன்னுடைய சாந்தி கிளினிக்கில் தந்து எங்களை அனுப்பி வைத்த பின்னர் அவர் ஒதுங்கிவிடாமல் கந்தசாமி நகரில் தானும் தனது பங்குக்கு கோடரியுடன் வந்து நின்றது சிரமதானப்பணிக்காய் வந்தவர்கள் மத்தியில் ஊக்கத்தை உருவாக்கியது.

கோடாரி பிடித்து காடுவெட்டி பழக்கமின்றிய எமது யாழ்ப்பாணத்து உடல் அலுப்புடன், பசித்துக் களைத்து வந்தால், மதிய வேளையில், அகதி மக்களின் அன்புடன் கூடிய அன்றைய உணவு ஆரவாரமாக இருக்கும். பெரும்பாலும் ஓரு கறி இறைச்சியாகவும் பலவகை பச்சிலைக் கறிகளுடன் ஊரே கூடிச் சமைத்த அந்த உணவு உலகெங்கும் தேடியும் இன்னும் எனக்கு கிடைக்கவேயில்லை. அமிர்தமாகவே இன்றும் நினைவில் இருக்கின்றது.

மாலைநேரங்களில் சிரமதானப் பணிகள் முடிந்து வந்தால் சந்ததியார் விறகுகள் சுள்ளிகள் அடுக்கி நாங்கள் தங்கியிருந்த குடிலுக்குள் கூதல் வராமல் கணகணப்பாக்குவதற்கும் ஆளையே தூக்கிச் செல்லுமாற்போல் படையெடுத்து வரும் ஙொய் ஙொய் நுளம்புகளை விரட்டுவதற்கு புகை எழுப்புதற்கும் நெருப்பு மூட்டி வைத்திருப்பார். அந்தக் கணகணப்பில் சுற்றி அமர்ந்திருக்கின்றபோது சந்ததியார் சில வார்த்தைகளை மெல்லத் தொகுத்து உதிர்ப்பார். அவற்றுள் «தமிழீழ» எல்லைக்கிராமங்களைப் பற்றியும் இருக்கும். கூட்டணியின் அரசியல் ஏமாற்றைப் பற்றியும் இருக்கும். ஆனால் ஆயுதப் போராட்டத்தினை நோக்கிய கருத்துக்கள் அன்று இருக்கவில்லை. அவதானமாக இருந்திருக்கக் கூடும்.

இப்படி ஒருநாள் கூடியிருந்துவிட்டு எல்லோரும் கிழங்கடுக்கின மாதிரி சாக்குத் தறுப்பாளுக்கு மேல் விரிக்கப்பட்ட பாய்களில் கைகளை மடக்கி தலையணையாக்கி நித்திரையாகி விட்ட சற்று நேரத்தில் காட்டு மரங்களையெல்லாம் ஊடறுத்துக் கொண்டு பெரும் கூச்சல்கள் எழுந்தன. பரபரப்புடன் நாங்கள் எழுந்து என்னவோ ஏதோ என்று விசாரிக்கத் தொடங்கிய வேளை தகரங்களில் தட்டும் ஒலி நாலா பக்கமும் இருந்து வந்தது. தீப்பந்தங்கள் அங்கொன்றும் இங்கொன்றாக உயர்ந்து ஒளிரத் தொடங்கியது. கூச்சலுடனும் சிலர் விரைவாக ஒரு திசை நோக்கி செல்வது தெரிந்தது. சந்ததியார் எங்களில் இருவரை அழைத்துக் கொண்டு என்ன ஏதென விசாரிப்பதற்கு அந்த இருட்டிலும் விரைந்து சென்றுவிட்டார். மிஞ்சி நின்ற நாங்கள் இருப்புக் கொள்ள முடியாமல் சற்றுத் தாமதமாக பின் தொடர்ந்தோம். சனக் கூட்டம் போன வழியில் தீப்பந்தங்களைப் பின் தொடர்ந்து சென்றால் அது குடியிருப்புக்கு ஒரு வகையில் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தவரின் குடிசை வீட்டுக்கு கொண்டு போய்ச் சேர்த்தது. அங்கு நிறையப் பேர் ஏற்கனவே குழுமியிருந்தனர். எல்லா விபரங்களையும் சுற்றி நின்றவர்கள் சொல்வதற்கு முன்னதாகவே நடந்தது என்னவென்று அங்கு கண்ட காட்சியே எல்லாவற்றையும் சொல்லியது. இந்த இரட்டைக் குடிசை. நெல்லு மூட்டைககள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தினையும் படுக்கின்ற திண்ணையையும் கொண்டிருந்த தலைவாயில் குடிசைக்குப் பக்கத்தில் இருந்த குசினிக் கொட்டிலும் அதையடுத்து நின்ற வாழைத்தோட்டமும் நார்நாராய் கிழித்து வீசப்பட்டிருந்தது. கொட்டிலின் கூரை முகட்டினை சிறு தட்டுத் தட்டி மோதியதில் அது காட்போட் பெட்டியை நசுக்கின மாதிரி விழுந்து கிடக்க தட்டிகள் கிடுகுகள் எல்லாம் சிதிலமாய் கிடந்தது. வேரோடு பிடுங்கி வீசப்பட்ட வாழைமரங்கள் தலைவிரி கோலமாய் தரையில் துவம்சமாய் கிடந்தன. அந்த தலைவாசல் திண்ணையில் நித்திரையில் இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்து போய் சத்தம் எழுப்பாமலே இருந்து விட்டார்கள். தாங்கள் தப்பியது அருந்தப்பு என்று அவர்கள் கூறினார்கள். தலைவாசல் குடிசையில் அடுக்கியிருந்த நெல்மூட்டைகளோ என்னவோ அல்லது மனித வாடையோ என்னவோ தும்பிக்கை கொண்ட இந்த காட்டு ஜீவனை அக்குடிசையை தீண்டாமல் விலக்கி வைத்திருந்தது.

அன்றிரவு குடிசைகளுக்குள் விளக்குகளும் வெளியில் விறகுக்கட்டைகளால் மூட்டப்பட்ட தீச்சுவாலைகளும் தகரங்களைத் தட்டி எழுப்பப்படும் ஒலியும் அக் காட்டுக்கிராமத்தின் காவலை பலப்படுத்தியிருந்தன.

அன்றிலிலிருந்து அங்கு தங்கிநின்ற நாட்களின் இரவுகள் முறை வைத்துக் காவல் இருக்கும் இரவுகளாக கடந்து போனது.

இந்த இரவுகளை கடந்தவர்களில் மூவர் இன்று உயிருடன் இல்லை. அவர்களில் ஒருவர் சந்ததியார். கண்கள் தோண்டப்பட்டு குரூரமாக கொலை செய்யப்பட்டு சாக்குப்பையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரைக் கொன்றவர்களில் சிலரும் இன்று இல்லை. அவரைக் கொலை செய்யத் தூண்டியவர்களும் அதற்கு களம் அமைத்துக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.

-நண்பர் ஒருவரின் பதிவில் இருந்து 

 

Link to comment
Share on other sites

டாக்டர் ராஜசுந்தரம் பற்றி மேலும் தகவல்களுக்கு Gandhiyam என்ற முக புத்தகபக்கதிற்கு போனால் நிறைய அறியலாம் .எமது ஆரம்ப காலப்போராட்டம் பற்றியும் நிறையே தகவல்கள் இருக்கு .

 

இங்கு அவற்றை மேலும் இணக்க விரும்பவில்லை .


969153_180934065403099_789101493_n.jpg?o


ஒரு ரஷ்ய ,சீனா ,வியட்னாம் புரட்சியாக தோழர்கள் கனவு கண்ட காலங்கள் அவை . :(

Link to comment
Share on other sites

டாக்டர் றாஜசுந்தரம் வெளிநாட்டில் சுகபோகமாக வாழ வழியிருந்தும் மக்களுக்காகவே சிந்தித்து காந்தீயம் இயக்கத்தின் வாயிலாக வன்னி மக்களுக்கு பெரும் சேவைகளைச் செய்து வெலிக்கடையில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்.

 

மக்களை நேசிப்பவர்கள் எப்போதும் மக்களுடனேயே இருக்க விரும்புவர். மக்களுக்கு சேவையாற்றுவர். வெளிநாடுகளில் பத்திரமாக இருந்து கொண்டு மக்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களாக மட்டும் இருக்க மாட்டார்கள்.

 

அந்த வகையில் பலருக்கும் உதாரணமாக இருந்த ஒரு தமிழ் உணர்வாளர் என்பதில் ஐயமில்லை. அவரது மனைவி மற்றும் சகோதரர்கள் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள்..

Link to comment
Share on other sites

டாக்டர் றாஜசுந்தரம் வெளிநாட்டில் சுகபோகமாக வாழ வழியிருந்தும் மக்களுக்காகவே சிந்தித்து காந்தீயம் இயக்கத்தின் வாயிலாக வன்னி மக்களுக்கு பெரும் சேவைகளைச் செய்து வெலிக்கடையில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்.

 

மக்களை நேசிப்பவர்கள் எப்போதும் மக்களுடனேயே இருக்க விரும்புவர். மக்களுக்கு சேவையாற்றுவர். வெளிநாடுகளில் பத்திரமாக இருந்து கொண்டு மக்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களாக மட்டும் இருக்க மாட்டார்கள்.

 

அந்த வகையில் பலருக்கும் உதாரணமாக இருந்த ஒரு தமிழ் உணர்வாளர் என்பதில் ஐயமில்லை. அவரது மனைவி மற்றும் சகோதரர்கள் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள்..

அவரது மனைவி பெயர் தான் சாந்தி .அவரின் பெயரில் தான் அவர்களது மருத்துவமனை இருந்தது .டேவிட் ஐயாவும் நீங்கள் சொல்லும் பட்டியலில் இருக்கின்றார் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.