Jump to content

20,000 பதிவுகள் கடந்த விசுகு விற்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

126coqa.jpg

 

எங்கள் களத்தின் முக்கிய உறவான விசுகு அவர்கள் 20,000 பதிவுகளை அண்மையில் கடந்து இருக்கின்றார். யாழின் பல பகுதிகளுக்குள்ளும் சென்று கறுப்பு , நீலங்களில் எழுதி குவித்து வரும் எங்கள் விசுகு மேலும் மேலும் பதிவுகள் இட வாழ்த்துக்கள்.

 

 

பதிவுக்கும்  நேரத்திற்கும் நன்றி  நிழலி

 

எனது கருத்துக்களையும்

பொறுமையுடன் அனுமதித்த நிர்வாகத்தினருக்கும்

பொறுமையுடன் வாசித்த உறவுகளுக்கும் முதலில் நன்றிகள்...

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக்கலரை விட்டுட்டீங்க நிழலி, வாழ்த்துக்கள் விசுகர்.

 

 

நன்றி தம்பி  நந்தன்..

 

கலர் பற்றி...

வேறுபடுத்திக்காட்டவேண்டும் என்பதற்காக ஆரம்பித்தேன்...

ஒரு சொல்லில் அதன் போக்கை அறிவிக்க இது உதவும் என நம்பினேன்

ஆரம்பத்தில் சிலருக்கு எரிச்சலாக இருந்தது

இசை கூட பிரின்ரரில் கலர் மை முடிந்துவிடடதா என நக்கலடித்திருந்தார்

(அவரால் களஉறவுகள் சம்பந்தமாக எழுதப்பட்ட  நகைச்சவை பகுதியில்)

ஆனால் தற்பொழுது பலரும் பாவிக்கிறார்கள்...

 

மற்றும்படி

சொந்த வாழ்வில் துக்க நிகழ்வுகளுக்கு (மாவீரர்நாள் உட்பட)

செல்லும் போது கறுத்த சேட் தான் அணிவேன்

 

அதே நேரம் சந்தோசமான விடயங்களுக்க போகும் போது கறுப்பு அணிவதில்லை

அந்தவகையிலேயே கறுப்பும் பச்சையும்

அத்துடன் கிளுகிளுப்பான விடயங்களுக்கு நீலமும்

காட்டமான விடயங்களுக்கு சிவப்பு.

 

நன்றி  நந்தன் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல்லாயிரம் பதிவுகளைக் குவிக்க வாழ்த்துக்கள் விசுகு ஐயா. :)

எதிலும் பூடகமாக ஏதாவது சொல்லியிருக்கா என்று துருவும் பழக்கம் இருப்பதால் நீங்கள் வெளிப்படையாக எழுதும் சில கருத்துக்களில் ஏதாவது இரகசியச் செய்திகள் உள்ளனவா என்று தேடுவேன். இதுவரை கண்டுபிடிக்கவில்லை! :icon_mrgreen:

 

 

நன்றி  கிருபன்....

 

உண்மை

பொய்

இரண்டும் தானுண்டு

அவை பற்றியே  என்னால் பேசமுடியும்

இரண்டுக்கும் நடுவில்....??

 

கதையை  எழுதி

உண்மையும் கற்பனையும் கலந்தது என்று 

அது தான் இது

இது தான் அது என வாழைப்பழ விளையாட்டு விளையாட இது என்ன சினிமாவா...??

 

பொறுப்புடன்

நானாவது நடந்து கொள்கின்றேன் என்று தான் நினைக்கின்றேன்

அது தொடரும்....

 

நன்றி கிருபன் ஐயா

நேரத்துக்கும்  கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் உடன் பிறவா அண்ணன் விசுகு அண்ணாவிற்கு என் இனிய வாழ்த்துக்கள் .உண்மையின் உருவமாகவே இந்த களத்தில் நான் பார்க்கிறேன் [தாயக விடயம்] தொடர்க அண்ணா உங்கள் பணி,துணைக்கு எப்போதும் நான் வருவேன் .......

 

நன்றி  தம்பி  தமிழ்சூரியன்

 

முடிந்தவரை உண்மையாக இருப்போம்

அதுவே இன்றைய தேவை..

 

நன்றி  தம்பி  தமிழ்சூரியன்

நேரத்துக்கும்  கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்புக்கும்..

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அண்ணை தொடர்ந்தும் இணைந்திருப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள் விசுகு அண்ணா!
 
யாழ்கள உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் உங்களையும் கந்தப்பு அவர்களையும்(2009)தான் சந்திக்க முயற்சி செய்தேன் இரண்டும் முடியாது போய்விட்டது.
(தற்செயலாக ஜஸ்டின், ஈழபிரியன் அவர்களை சந்தித்திருக்க வாய்ப்பிருக்கிறது).
எனது ப்ளேன் 9 மணிக்கே பாரிஸ் வந்தது. பாரிஸில் இருந்து ஜெனிவா சென்ற ரயிலும் 9 மணிக்கு புறபட்டதால். நான் இன்னொரு விமானம் மூலம் ஜெனிவா சென்றுவிட்டேன் நேரம் ஒன்றுக்கும் போதுமாக இருக்கவில்லை. 
என்றோ ஒருநாள் எப்படியும் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
 
கூடாதார் கூட்டம் கூடாதே என்று சொல்வார்கள்.......
அதலால் நல்ல மனிதர்களை மட்டுமே தேடுவது. உங்கள் கருத்துக்கள்தான் அப்படியொரு நம்பிக்கையை தந்தது. 
தொடர்வோம்! 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா,

 

1- தேசியத்தின் பால்நீங்கள் கொண்ட உறுதியால் எனக்கு உங்கள் மீது பற்று அதிகம்.

 

2- பல விவாதங்களில் தேசியத்தை விட்டுக் கொடுக்காமல் நீங்கள் கருத்தாடல் செய்திருந்தீர்கள், அதற்காக நீங்கள் அதிகளவு நேரத்தினைச் செலவு செய்திருப்பீர்கள் எல்லாவற்றிற்கும் நன்றிகள்.

 

3-தாயக மக்களிற்கான உதவிகளிலும் நீங்கள் முன்னின்று செயல்படுவீர்கள். அதற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

 

 

நன்றி  தம்பி

சந்தர்ப்பம் எப்பொழுதும் கிடைக்காது

இன்றிருந்தார்: நாளை...?

அதனால் கொஞ்சம் எழுதலாம் என நினைக்கின்றேன்...

 

1-  தேசியத்தின்பால் எனது ஈடுபாடு என்பது சிங்களம் அடித்து ஊட்டியது.

அத்துடன் எனது இளமைக்காலத்திலேயே  அழிவுகளையும் அதர்மத்தையும் கண்ணால் பார்த்ததும்

அகிம்சைப்போராட்டம்  தோன்றி தோல்வியடைந்து ஆயுதப்போராட்டம்   என என்கண்முன்னே வளர்ச்சி அடைந்ததும் காரணமாக இருக்கலாம்.  இவை அனைத்துக்கும் நானே சாட்சியாக இருக்கும் போது

நடந்தவை அனைத்திலும் முடிந்தவரை உதவியாக பங்காளியாக இருந்திருக்கின்றேன்.

என்னுடைய வாழ்வில் பெரும்பகுதி அவர்களுடன் தான் கழிந்துள்ளது..

எனது நட்பு வட்டம் மற்றும் உறவு வட்டம் எல்லாமே தாயக விரும்பிகளுடன் மட்டுமே இருந்திருக்கிறது. இருக்கிறது. 

 

2- தேசியத்தில் நாம் எதைவிட்டுக்கொடுக்கமுடியும்?? எதை நாம் விட்டுக்கொடுக்கவில்லை?? சிங்களத்தின் விடாப்பிடிக்குள் நாமே தொடர்ந்து குனியணும் என்பதும் நம்மீதே பிழைகள் என்பதும் யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டது. தோல்வியை  வைத்துக்கொண்டு வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலிகள் வீரர்கள் என்பது எவ்வளவு அறிவீனம்?? ஒருவன் தர்மஅடி அடிக்கும் போது அதை வலியோடு தடுப்பவனின் கைகால் அசைவுகளை படம்பிடித்துவிற்பது எவவளவு சுயநலமானது??? அந்த தடுக்கும் உறவுகளோடு நானும் இருந்தேன். கை கோர்த்தேன். அந்த நேரம் அது தேவைப்பட்டது. சரியாகவே இருந்தது. அது தப்பு என்றால் தற்பொழுது சரியான பாதைகளைக்காட்டணும். அவர்களுடன் கைகோர்க்க காத்திருக்கின்றேன். ஆனால் வெறும் வாயால் வடை சுடுதலே  தொடர்கிறது. அத்துடன் தம்மை ஈகம் செய்தோரை அவர்களுக்கு உறுதுணையாக இருந்தோரை என்ன பழி போட்டாவது துரத்தணும் என்பதே நடக்கிறது. தர்மம் வெல்லும் என்பது எனது நம்பிக்கை. உயிருள்ளவரை அது   தொடரும்......

 

3- புலம்பெயர்ந்ததிலிருந்து தாயகத்துக்கான நிதிப்பங்களிப்பு என்பதை செய்து வருகின்றேன். அது எனது வாழ்வில் ஒரு பகுதியாக பழக்கப்பட்டுவிட்டது.  எனக்குத்தேவைகள் அதிகரித்து வாழ்க்கை சுமையான போதும் அதில் நான் கைவைத்ததில்லை. காரணம் தாயகநிலமை அவ்வளவு மோசமடைந்தே வந்திருக்கிறது. வருகிறது. என்ன முன்னர் தேசிய மட்டத்தில் நின்று செய்தேன். தற்பொழுது ஊர் மட்டத்துக்கு பின் வாங்கியுள்ளேன். இது ஒரு வருத்தமான நிலமை.  எனக்கு சில சங்கடங்களைத்தந்தபோதும் ஏதாவது செய்தாகணும். அதற்கான வழிகள் மாறியபோதும். அது தொடரும்............

 

நன்றி தம்பி

அன்புக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...

உங்கள் போன்ற தம்பிகளைத்தந்த யாழுக்கு நன்றிகள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல்லாயிரம் பதிவுகளைக் குவிக்க வாழ்த்துக்கள் விசுகு.  :) 

 

நன்றி  சகோதரா..

தமிழ் அரசு

என் வாழ்வில் அதைக்காணவேண்டும்.......

வாழ்த்துக்கள் விசுகன்னை.

 

நன்றி  சகோதரா..

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

தொடர்ந்து எழுதுங்கள்

பதியுங்கள்...

நன்:றி  தங்களது நேரத்துக்கும்..

வாழ்த்துகள்!

 

 

நன்றி  அண்ணை

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

ஆளைக்காணக்கிடைக்குதில்லை

 

தொடர்ந்து எழுதுங்கள்

பதியுங்கள்...

நன்றி  தங்களது நேரத்துக்கும்..

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

 

 

நன்றி  சகோதரா..

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

 

அடிக்கடி பிரான்சுக்கு வந்து போவது போல் தெரிகிறது

சந்திக்காவிட்டால்

ஒரு நாள் வேகபாதையில் மறிப்பேன்... :lol:

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

 

நன்றி  சகோதரி

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

வாழ்க வளமுடன்..

மேலும் பல பதிவுகளை தொடர வாழ்த்துக்கள்!!!!

 

 

நன்றி  சகோதரா..

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

 

உங்கள் கருத்துக்களின் எழுத்துக்களின் வாசகன் யான்..

தொடர்ந்து எழுதுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் உடன் பிறவா அண்ணன் விசுகு அண்ணாவிற்கு என் இனிய வாழ்த்துக்கள் .உண்மையின் உருவமாகவே இந்த களத்தில் நான் பார்க்கிறேன் [தாயக விடயம்] தொடர்க அண்ணா உங்கள் பணி......

 

 

நன்றி  தம்பி

உங்கள்  போன்ற இளைய தலைமுறைத்தம்பிகளை பெற்றதற்காக யாழுக்கு நன்றி  கூறுகின்றேன்..

தங்கள் வரவும்

ஒரு சில திரிகளோடு எழுத்தும் குறைவடைந்து வருவதை அவதானிக்கமுடிகிறது..

அதிகம் எதிர்பார்க்கின்றேன் ராசாக்கள் உங்களிடம்...

 

 

நன்றி  தம்பி

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

வாழ்க வளமுடன்..

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

 

நன்றி  சகோதரா

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

 

நேரமிருக்கும் போது தொடர்பு கொள்ளுங்கள்

தேநீர் குடிக்கலாம்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா...!!!

 

நன்றி  ராசா..

 

இந்த யாழ் கள தொடர்பு என்பது ஒரு குடும்ப உறவுகளாக பழகும் அளவுக்கு எம்மை உள்வாங்கியுள்ளது

எனது அண்ணரின் இழப்புக்கு உங்கள் போன்ற யாழ் உறவுகளின் தொலைபேசி  அழைப்பு அதிகமாக இருந்தது

உண்மையில் நான் செய்த பாக்கியம் உங்கள் போன்ற தம்பிகளை அடைந்தது

எமக்கென்று ஒரு குறியுண்டு

தொடர்ந்து பயணிப்போம்

நிச்சயம் ஒருநாள் வெல்வோம்

 

நன்றி  தம்பி

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

வாழ்க வளமுடன்..

வாழ்த்துக்கள் விசுகு!

 

நன்றி  சகோதரா

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

 

 விசுகருக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் பல்லாயிரம் கருத்துக்களை எழுதிக்குவிக்க வேண்டுகின்றேன்.

 

 

நன்றியண்ணா..

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

உடல் நலத்தை கவனியுங்கள் அண்ணா....

இன்னும் பல்லாயிரம் பதிவுகளைக் குவிக்க வாழ்த்துக்கள் விசுகு

 

நன்றி  சகோதரா

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகர் .தொடரட்டும் உங்கள் பணி.

எனக்கு யாழில் அதிக ஈடுபாடு வந்ததற்கு நீங்களும் ஒரு முக்கியகாரணம்.தூங்கி கிடந்த சிங்கத்தை தட்டி எழுப்பியதற்கு நன்றிகள் .  :D

 

நன்றி  அண்ணா...

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

 

எதிலும் சரி

எதிராளியின் பலமே  எம்மை வலுவாக்கும்

எனக்கு அந்த நிலைதான் பிடிக்கும்..

அந்தவகையில் சரியோ பிழையோ

இந்த இருபதினாயிரம் கருத்துக்களில் பல ஆயிரம் உங்களுடன் எழுதியது தான்..

 

ஒவ்வொரு நாளும் இத்தனை மாவீரர்கள் எமக்காக தமது உயிரைக்கொடுத்தனரே என அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் எழுதத்தொடங்குவேன். வலிக்குமண்ணா...

 

ஒருமுறையாவது விடுதலைப்புலிகளையும் அவர்களது தியாகங்களையும் கனம் பண்ணுங்கள்

 

மற்றும்படி 

எந்த மனத்தாங்கலுமில்லை  அண்ணா...

எனது நோக்கம் ஏதாவது என்னால் முடிந்ததை செய்வது

அதற்கு பகை வளர்த்தல் கேடாகும்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  விசுகு அண்ணா

 

நன்றி  தம்பி

பலமுறை  சந்திக்க முயன்றும் முடியாமல் போன தம்பி

தொடர்ந்து ஆவலாக உள்ளேன்

பார்க்கலாம்

 

உங்கள் போன்ற உணர்வுள்ள தம்பிகள் எங்கள் சொத்துக்கள்

 

நன்றி  தம்பி

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

av-2820.jpg?_r=020000.gif

 

20,000 பதிவுகள், அத்தனையும்... பெறுமதியானவை.

வாழ்த்துக்கள்... விசுகு. :) 

 

 

 

நன்றி  நண்பரே..

 

யாழ்கள கருத்தாளர்களில் நண்பர் என்பது  உங்களைத்தான்...

அநேகமாக எல்லாவிடயங்களிலும் ஒற்றுமையாக எழுதுவோம்

இது யாழையும் தாண்டி விமர்சிக்கப்படுவதுண்டு.

 

பலவழிகளிலும் யாழை கலகலப்பாக வைத்திருக்க இருவரும் முயல்வோம்

வாங்கிக்கட்டிய தளும்புகள் சாட்சி.......... :D

 

எவருமே சந்திக்காத சிறியரை ஒருநாள் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுண்டு.. :icon_idea:

 

நன்றி  சிறி

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும் அன்புக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு!

 

சென்றவாரம் பாரிசில் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் , கிடைக்கவில்லை...!! :)

Link to comment
Share on other sites

இருபதாயிரம் பதிவுகளை பதிந்த வி.அண்ணாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!! மேலும் பல்லாயிரம் கருத்துக்கள் எழுத முன்கூட்டிய வாழ்த்துக்கள் .....!

 

1280px-Logo_20000.svg.png

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652
    • சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ)    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.