Jump to content

கனடா வாழவைப்போம் அமைப்பின் உதவிகள் அம்பாறையில்……


Recommended Posts

இலங்கைத்தீவிலே குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களிலே பல நெடுங் காலமாக தமிழர்கள் மீது நன்கு திட்டமிட்டு அரச படைகளாளும், ஏனைய சமூகத்தினராலும் நாங்கள் அடக்கப்பட்டு எமது சகோதரர்களையும், சகோதரிகளையும் இழந்தவர்களாக இந்த நாட்டிலே வாழமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பு வாழ்வாதார உதவித்திட்டங்களை எமது பகுதிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கூறினார்.

நேற்று நாவிதன்வெளி பிரதேசத்தில் நடைபெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்விலும், மாணவர்களுக்கான கொப்பிகள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பானது வாழ்வாதார உதவிகளுக்காகவேண்டி ஒரு இலட்த்தது பதினையாயிரம் ரூபாவினை வழங்கியிருந்தது.

இந்நிகழ்விற்கு கி.மா.சபை உறுப்பினர் த.கலையரசன் பிரதம அதிதியாகவும் மற்றும் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.குணரெத்தினம் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், அ.கமலதாசன், காரைதீவு பிரதேசசபையின்உறுப்பினர் பாஸ்கரன், கலைச்சுடர் கலைக்கழக்த்தின் தலைவர் ஜெகதீசன், மற்றும் வாழ்வாதார உதவி பெறுவோர், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்.

இன்று புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இங்கு இன்னல் பட்டுக்கொண்டிருக்கும் உறவுகளுக்காகவேண்டி பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள் அதில் ஒரு வேலைத்திட்டந்தான் இன்று இப்போதுநடைபெற்றுக்கொண்டிருக்கும் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வாகும்.

இன்று எமது மக்கள் படும் துன்பதுயரங்களை புலத்தில் உள்ள எமது உறவுகளுக்கு தெரியப்படுத்தியிருந்தேன் அதற்கு உடன்பட்டு எமது உறவுகள் உடனடியாகவே எமது மக்களுக்காக உதவிக்கரம் நீட்ட முன்வந்தார்கள் இவர்களது இந்த சேவையினை நாம் ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருப்பது மிகவும் அவசியமானதொன்றாகும்.

இன்று அன்னமலை கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்பவர்கள் அன்று சவளக்கடை கிராமத்தில் இராணுவ முகாமிற்கு அருகில் 53 குடும்பங்கள் வாழ்ந்தார்கள் இவர்கள் திட்டமிட்டு 1990ஆம் ஆண்டு சிறுவர் தொடங்கி முதியவர்வரை படுகொலை செய்யப்பட்டார்கள் அதன்பின்பு அந்தக்கிராமமே இருந்த இடம்தெரியாமல் போனது.

அம்பாறை மாவட்டத்திலே தாய்தந்தையரை இழந்தவர்கள், போராட்டத்திலே ஈடுபட்டு அவயவங்களை இழந்தவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்காக புலம்பெயர் அமைப்புக்கள் பல முன்வந்திருக்கின்றன அவர்களது உதவிகள் அனைத்தும் உரியவர்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதற்காக உரிய தேர்வுகளை செய்தே இவர்கள் 10 பேரையும் தெரிவு செய்திருக்கின்றோம்.

நாங்கள் தெரிவு செய்த பத்துப்பேரையும் எந்தவிதமான சலுகைகள் அடிப்படையிலும் தெரிவு செய்யவில்லை என்பதனை பகிரங்கமாகவே கூறிக்கொள்கின்றேன் இவர்கள் பெறும் இந்த பணத்தினை உரியமுறையில் பயன்படுத்தி அதன்மூலம் நன்மைகளை பெறும் பட்சத்திலேதான் மேலும் பல உதவிகளை செய்வதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் முன்வரும் என்பதனை இன்று பயன்பெற்ற பயனாளிகள் கருத்தில் கொள்ளவேண்டும்.

இன்று எமது சமூகம் தொலைக்காட்சி வானொலி போன்றவற்றைபொழுதுபோக்கு சாதனங்களாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் அதன்காரணமாக எமது கலாசாரங்கள் மருவிப்போகும் நிலை உருவாகி வருகின்றது 25 வருடகாலத்திற்கு முன்னர் நாட்டுக்கூத்து, கும்மி, நாடகம் கரகம் என எமது கலைஞர்கள் பலவற்றை மேடையேற்றினார்கள் அது இன்று குறைந்து கொண்டே செல்கின்றது.

இதனை கருத்தில் கொண்டு எமது பிரதேச கலைஞர்கள் அதனை வளர்த்தெடுப்பதற்கு முயற்சி எடுத்து அதனை எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக்கொடுப்பதற்கு முன்வரவேண்டும் எதிர்காலத்தில் இவ்வாரான கலைகளை வளர்ப்பதற்கு எனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து உதவி செய்வதற்கும் தயாராகவே இருக்கின்றேன்.

அம்பாறை மாவட்டத்தில் இதுவரை காலமும் மறைக்கப்பட்டிருந்த பலவிடயங்கள் தற்போதூன் வெளி உலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது இதற்கு முழு மூச்சாக இருந்ததது லங்காசிறி எனும் இணையமாகும் இதன்மூலந்தான் எமது பிரச்சனை சர்வதேச ரீதியாக எடுத்துச்செல்லப்பட்டு எமது மக்களுக்கான உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு வழிஏற்படுத்தப்பட்டிருக்கின்றது எனவும் கூறினார்.nnvv-600x450.jpg bkkug-600x450.jpg ewr-600x450.jpg hbjj-600x450.jpg hgf.jpg hjh-600x450.jpg kik-600x450.jpg kjh-600x450.jpg kjk-600x450.jpg kk-600x450.jpg oo-600x450.jpg po-600x450.jpg pop-600x450.jpg vvbb-600x450.jpg

 

 

- See more at: http://www.canadamirror.com/canada/36316.html#sthash.MJNQFXUA.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.