Jump to content

நல்லதோர் வீணை செய்வோம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

இணைந்திருக்கின்றோம்

இந்த தேடிப்படியுங்கள் என்ற  ஏவல் எல்லாம் வேண்டாம்

 

வழி காட்டி ஒழுங்காக கொண்டு பொய்ச்சேர்க்கவேண்டியது உங்கள் வேலை

சொல்லிப்போட்டன்...

கையை  விடமாட்டாம் அது தான் எமது வேலை.. :lol:

 

நன்றி! இது ஒரு process development விசுகர்! ஒருவருக்கு வடையைச் சுட்டுச் சாப்பிடக் குடுக்கிறத விட வடை சுடும் வழியைச் சொல்லிக் கொடுத்தல் மூலம் வாழ் நாள் முழுவதும் அவர் வடை சாப்பிட வழி சமைக்கிறோம்! இங்கே தேடக் கற்றுக் கொண்டால் வேறு விடயங்களிலும் தேடல் வரும். இயலுமானவரை முயற்சிக்கிறேன்! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது உங்கள்  MUFA  வும் PUFA  வும் தான் கண்முன்னே வந்து போகின்றன. :D 
தொடர்ந்தும் ஆரோக்கியமான தகவல்களைத் தரும் ஜஸ்ரினுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது உங்கள்  MUFA  வும் PUFA  வும் தான் கண்முன்னே வந்து போகின்றன. :D 

தொடர்ந்தும் ஆரோக்கியமான தகவல்களைத் தரும் ஜஸ்ரினுக்கு நன்றிகள்

 

We have a winner! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடற் பயிற்சி: ஒரு முன்னோட்டம்!

 

ஊக்க மாத்திரை!

 

உடற்பயிற்சி பற்றிய பதிவுகளுக்கு முன்னர் ஒரு ஊக்க மாத்திரையும் எச்சரிக்கையும் உங்களுக்குத் தர வேண்டியிருக்கிறது. இவை உங்கள் மனதில் பதிய வேண்டும்.

2002 ஆம் ஆண்டில் இலங்கையை விட்டுக் கனடாவுக்குக் குடி பெயர்ந்த எனது ஆசிரியர் ஒருவரை நான் பத்து ஆண்டுகளாகத் தேடி போன வருடம் கண்டு பிடித்தேன். ஆசிரியர் என்பதை விட எனக்கு ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக இருந்தவர், தமிழில் ஆக்கங்கள் படைப்பதை முதன் முதலில் ஊக்குவித்தவர். அவருடனான தொலைபேசி உரையாடலில் அவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள் இங்கே குறிப்பிடத் தக்கவை. ஓய்வு பெற்ற வயதில் கனடாவுக்கு வந்த பின்னர் 2009 வரை அவர் பெரும்பாலான எங்கள் தமிழ் முதியோரைப் போல வீடு, கோயில், ஒன்று கூடல்கள் என்று நாட்களைக் கழித்திருக்கிறார். பின்னர் 2009 இல் அத்லெரிக் கனடா (Athletic Canada) நடத்தும் வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பயிற்சி எடுத்துக் கலந்து கொண்ட போது அவருக்கு வயது 69. அந்த ஆண்டிலிருந்து, இப்போது வரை, ஒவ்வொரு ஆண்டும் அத்லெடிக் கனடா நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து கொண்டிருக்கிறார். அந்த ஆசானின் பெயர் சின்னப்பு பிலிப்நேரி. 74 வயதில் கடந்த ஆண்டு அவர் பெற்ற விளையாட்டு வெற்றிகளை இந்த இணைய இணைப்பில் பார்வையிடலாம்!

 

http://www.athletics.ca/pr2.asp?event_id=172&rank_type=Rankings&season_type=Outdoor&class_type=Masters%2070-74&par_type=no&year_type=2014&gender_type=Men&province_type=&lang=_en

 

உடற்பயிற்சி பற்றிய பதிவுகளை வாசிக்கையில், எங்களுக்கு வயதாகி விட்டதோ என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால், பிலிப்நேரி ஆசிரியரை நீங்கள் நினைவில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்தக் கதையை இங்கே பகிர்ந்தேன். பிலிப்நேரி ஆசிரியர் இளமைக் காலத்தில் விளையாட்டு வீரனாக இருந்த ஒருவர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அந்த வகையில் அவரது உடல் கடின உடற்பயிற்சிக்கு ஈடு கொடுக்கும் தரத்தில் இருந்திருக்க வேண்டும் என நம்புகிறேன். இனி எச்சரிக்கை!

 

எச்சரிக்கை

 

இதை வாசிக்கும் 35 தாண்டிய நண்பர்களுக்கான அறிவுறுத்தல் இது: நீங்கள் கடந்த காலத்தில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாதவராக அல்லது பல வருடங்களாக உடற்பயிற்சியக் கைவிட்டிருந்த ஒருவராக இருப்பின் நீங்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து பரிசோதனைகள் செய்து கொண்ட பின்னரே புதிதான உடற்பயிற்சி முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். மென்மையான உடற் செயல் பாடுகளான நடை போன்றவற்றுக்கு இது அவசியம் இல்லை, ஆனால் மத்திம (moderate) அல்லது தீவிர (intense) பயிற்சிகளுக்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனையை ஒரு தடவை பெற்று விடுங்கள். இது பெரும்பாலும் உங்கள் இதய ஆரோக்கியம் சம்பந்தப் பட்டது. சிலருக்கு இதயத்தின் இரத்த நாளங்களில் குறைந்தளவிலான அடைப்பு இருந்தால் கடின உடல் பயிற்சியின் போது மட்டுமே அதன் விளைவுகள் தெரிய வரும் (விளைவு மாரடைப்பாக இருக்கலாம்!). சில சமயங்களில் இதைக் கண்டு பிடிக்க மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் உங்களை பல மட்டங்களிலான உடற்பயிற்சியில் ஈடு படவைத்து உங்கள் இதயத் தொழிற்பாட்டை பரிசோதிப்பார்கள் (இது stress test எனப்படும்!).

 

விஞ்ஞான அடிப்படை

 

எந்த அளவுக்கு ஒருவர் உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில் தான் விவாதம் இன்றும் தொடர்கிறது (பின் வரும் பதிவுகளில் இதைப் பார்ப்போம்). ஆனால் உடற் பயிற்சி உடலுக்கு நன்மையே விளைவிக்கும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு உண்மை. இந்த நன்மைகளின் விஞ்ஞான அடிப்படைகளும் அனேகமாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றன. ஒரே ஒரு உதாரணம் மட்டும் குறிப்பிடுகிறேன். ஜீன்கள் எங்கள் உடலின் சாதகமான பாதகமான எல்லா மாற்றங்களுக்கும் அடிப்படையானவை. உடற் பயிற்சியின் விளைவாக பயன் பெறும் இதயம், தசைகள், நுரையீரல் போன்ற உறுப்புகளில் சாதகமான மாற்றங்களை உருவாக்கும் ஜீன்களின் செயல் பாடு அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன (அப்படியான ஒரு ஆய்வு, மேலதிக தகவல் தாகம் உள்ளோருக்காக இதோ:   http://www.tandfonline.com/doi/full/10.4161/15592294.2014.982445#abstract )

 

உடற்பயிற்சியின் வகைகள், யாருக்கு எந்த வகை அவசியம் என்பன பற்றி அடுத பதிவில் சந்திப்போம் நண்பர்களே! ஊக்க மாத்திரையையும் எச்சரிக்கையையும் எப்போதும் நினைவில் வைத்திருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமான பதிவு மற்றும் செய்தி

 

தொடருங்கள் ஐயா...

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அடடா இங்கு வேற வகுப்பு நடக்குதா? நல்லாத்தான் இருக்கு....தொடருங்கள் யஸ்டின் :rolleyes:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்டின்.வரவேற்கிறேன்.முதலாவதாக நோகாமல்,டயட் பண்ணாமல்,உடற் பயிற்சி செய்யாமல் எப்படி உடம்பை குறைக்கலாம் என எழுதுங்கோ

உடற்பயிற்சி, டயட் இல்லாமல் உடல் எடையைக் குறைப்பதற்கு மிகவும் முக்கியமானது சோற்றையும், வெள்ளை நிற பாண் போன்றவற்றையும் நிறுத்துவது. அதிலும் குறிப்பாக இரவில் சோறோ அல்லது மாச்சத்துள்ள உணவுவகைகளோ முற்றாக உண்ணாமல் இருப்பது. இந்த உணவு வகைகளுக்கு மாற்றீடாக Whole meal என்றழைக்கப்படும் அனைத்துத் தானிய கலப்புணவை உண்ணலாம். இன்னொரு முக்கிய விடயம் இரவு தூங்குவதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்னாவது உங்கள் இரவுணவை முடித்து விடுங்கள். உடல் உரக்க நிலைக்கு போனபின்னர் உட்கொண்ட உணவு அரைக்கப்படாமல், முற்றாகச் சமிபாடடையாமல் கொழுப்பாகத் தேங்கிவிடும். 

 

காலையில் இடியப்பம், புட்டு என்று உள்ளே தள்ளாமல் Whole meal  ஸீரியல் வகைகளை உண்ணுங்கள். Oates என்றழைக்கப்படும் தானியம் மிகவும் அருமையானது. காலை உணவுக்கு சிறந்தது. உடற்பருமனைக் குறைக்க பெரிதும் உதவுவது. ஆனால் சீனி கலந்த, சாக்லெட் கலந்த சீரியல் வேண்டாம். சீனி பொல்லாத சாமான்.

 

தேங்காய்ப்பால் இதுவரை கூடாது என்று சொன்னார்கள். அதை நம்பவேண்டாம். தேங்காய்ப் பாலிலுள்ள எண்ணெய் உடலுக்கு அவசியமானது. செயற்கை மாஜரீன்களைவிட தேங்காயெண்ணெய் எவ்வளவு நல்லது. ஒலிவ் எண்ணெயும் நல்லது. இவற்றால் கெட்ட கொழுப்பு உடலில் சேராது. பட்டர் பாவிப்பதற்குப் பதிலாக இதுவரை மாஜரீன் பாவித்திருந்தால், பழக்கத்தை மாற்றுங்கள். ஏனென்றால் பட்டர் இயற்கையானது, மாஜரீன் செயற்கை எண்ணெய்களால் ஆனது. 

 

காப்பி தேனீரால் தீமை என்று யாரும் சொன்னால் நம்பவேண்டாம். கொழுப்புணவை உடலில் தங்கவிடாமல் அகற்றும் Anti Oxidants  காப்பியில் உண்டு. அதிலும் Green Coffee எனப்படும் காப்பியில் நாம் கொழுப்பைக் கரைக்க உதவும் என்று நம்பும் Green Tea க் காட்டிலும் 70% அதிக Anti Oxidants உண்டு. ஆகவே தாராளமாகக் குடியுங்கள், ஆனால் சீனி வேண்டவே வேண்டாம் !

 

சோற்றைக் குறையுங்கள், மரக்கறி, தானியங்களை அதிகமாக உண்ணுங்கள். உடல் கல வளர்ச்சிக்கும், கல திருத்துதலுக்கு அமினோ அமிலம் எனப்படும் புரதம் அவசியம். ஆகவே நீங்கள் குறைக்கவிருக்கும் மாப்பொருளுக்குப் பதிலீடாக புரத உணவை உண்ணுங்கள். முட்டை, பருப்பு, சிவப்பு மாமிச வகை, சிறு மீன்களில் இப்புரதம் உண்டு. நீங்கள் மாமிசம் சாப்பிடுபவர் இல்லையென்றால், பருப்பு, கொழுப்புக் குறைந்த பால், மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் Protein Powders ஐ உண்ணலாம். 

 

இறுதியாக, உடற்பருமன் குறைவதால் மட்டும் ஆரோக்கியமாக வாழ்ந்துவிட முடியாது. உங்கள் உடல் அழகு பெற சிறிதளவாவது உடற்பயிற்சி செய்யுங்கள். நடப்பதிலிருந்து வீட்டில் கைய்யைக் காலை நீட்டி செய்வது வரை எல்லாமே உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்வோர் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விடயம், உடற்பயிற்சியின் பின்னரான தசை மற்றும் மூட்டு நோவுகள். இவை தற்காலிகமானவைதான். ஒன்று இரண்டு நாளில் அவை மறைந்துபோகும்,.ஆகவே உடற்பயிற்சிகளுக்கிடையில் குறைந்தது ஒரு நாளாவது இடைவெளி விடுங்கள். இந்தச் சிற்றோய்வு தசைகளை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வழிவிடுவதுடன், உடற்பயிற்சியின் போது தமது எல்லைகளுக்கு இழுத்து காயப்பட்ட தசைகளை மீண்டும் புணரமைப்பதோடு புதிய தசை நார்களையும் உருவாக்க வழி வகுக்கும். உடற்பயிற்சி நோவுகளுக்கு மருந்தாக நிச்சயம் பாவிக்க வேண்டியது மீன் எண்ணெய். இது மூட்டு, தசைகளுக்கு ஒரு Lubricant ( மென்மையாக்கி) ஆகத் தொழிற்படுவதுடன், நீங்கள் விரைவாக உடற்பயிற்சிகளுக்கு மீண்டு திரும்புவதற்கும் உதவுகிறது. உடற்பயிற்சி முடிந்த 30 நிமிடங்களுக்குள் புரதம் நிரைந்த உணவை உட்கொள்ளுதல் மிக அவசியமானது. இது தசை வளர்ச்சிக்கும், புணரமைப்பிற்கும் மிகவும் இன்றியமையாதது. வீட்டில் புரதம் சரியான அளவிற்கு கிடைப்பதில்லை என்றால், பதிலீட்டுப் பொருளாக  Protein Powders ஐ உண்ணலாம். 

 

செய்துபாருங்கள் உங்கள் உடல்மீது உங்களுக்கே பொறாமை வரும் ! 41 வயதில் இதை உணர்பவன் என்கிற வகையில் இதைச் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நானும் உங்கள் பதிவை தொடர்ந்து வாசிப்பவன்.எல்லாம் சரி இந்த நல்லெண்ணை பற்றி நீங்கள் எழுதியது தான் ஒரே குழப்பமாய் இருக்கு :rolleyes:

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கொழுப்பும் உடற்பருமனும்- சில புதிய தகவல்கள்

உடல் எடை குறைப்பதற்கான உணவு முறைகள் பற்றி நாளாந்தம் புதிய தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இவற்றில் சில விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையிலானவை. பெரும்பாலானவை விஞ்ஞானத்தை விட வியாபரத்தை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்ட தகவல்கள். மூன்றாவது வகையான தவல்களும் உண்டு: அவை விஞ்ஞான அடிப்படையிலான கண்டு பிடிப்புகளை அரைகுறையாக விளங்கி பிழையாக மொழிமாற்றம் செய்து தவறான தகவல்களை மக்களிடையே பரப்பும் தகவல்கள். "தேங்காயெண்ணை இதய நோய்க்கு வழி வகுக்கும் என்பது பொய்! தேங்காயெண்ணை உண்மையில் ஆரோக்கியமானது!" என்று தமிழ் இணையப் பரப்பில் விரவிக் கிடக்கும் தகவல் இந்த மூன்றாவது வகையான தகவலுக்கு  உகந்த உதாரணம். இப்படியான தவறான தகவல்களைத் தவிர்க்க ஒரு வழி, நம்பிக்கையான ஆய்வுகளை உடனுக்குடன் புரியக் கூடிய தமிழில் கொண்டு வந்து விடுவது தான். இந்த நோக்கத்திற்காக, வேலைப் பளு இருந்தாலும், நேச்சர் இதழில் வெளிவந்திருக்கும் கொழுப்புணவுகளுக்கும் உடற்பருமனாதலுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஒரு அரிய ஆக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்:

53 உடற்பருமன் குறைப்பு சம்பந்தமான ஆய்வுகளை மீள ஆராய்ந்த போது, உணவில் கொழுப்பைக் குறைப்பதால், உடற்பருமனை பெரிதாகக் குறைக்க முடியவில்லை என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். பெரும்பாலும் இந்த ஆய்வுகளில், ஒரு வருடம் குறைந்த கொழுப்புள்ள உணவை உட் கொண்டோரிடையே பாரிய உடல் எடைக் குறைப்பு நிகழவில்லை என்பதே ஆய்வு முடிவு. உணவில் கொழுப்பைக் குறைப்போர் மாச்சத்தைக் குறைக்காமல் இருப்பதே இந்த ஆய்வு முடிவுக்குக் காரணமாக நம்பப் படுகிறது. எந்தப் போசணைப் பொருளாக இருந்தாலும், அதிலுள்ள கலோரிகளின் அளவே எங்கள் உடற்பருமனைத் தீர்மானிக்கும் புறக்காரணியாக இருக்கிறது. ஒரு கிராம் கொழுப்பில், ஒரு கிராம் மாச்சத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு கலோரிகள் இருப்பதால், கொழுப்பை உணவில் குறைத்தால் உணவின் மூலம் வரும் கலோரிகளின் அளவைக் குறைக்கலாம் என்பதே கொழுப்புணவைத் தவிர்ப்பதன் அடிப்படை. ஆனால், கொழுப்பைக் குறைத்து விட்டு மாச்சத்தில் டபுள் மடங்கு அள்ளிக் கட்டினால், கலோரிகள் குறையாமல் உடல் எடை அப்படியே இருக்கும். இது தான் பல கொழுப்புக் குறைந்த டயற்றிங் முறைகளில் நடந்திருப்பதாக ஆய்வாளர்கள் அனுமானிக்கிறார்கள்.

இதற்கு ஆதாரமாக, உணவுக் கட்டுப்பாட்டில் இருப்போரின் நடத்தைகள் பற்றிய ஆய்வுகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள். உணவுக் கட்டுப் பாட்டை ஆரம்பிக்கும் போது மிகுந்த கட்டுப் பாட்டுடன் இருக்கும் நபர்கள், ஆறு மாதமளவில் அதன் பயனை அடைகிறார்கள். அந்த ஆறு மாதம் தாண்டியவுடன், கொழுப்பைத் தொடர்ந்து குறைத்தாலும் கலோரிகளை அதிகரிக்கும் மாச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள ஆரம்ப்பிக்கிறார்கள். "உணவுக் கட்டுப் பாட்டில் இருக்கிறோம்" என்று நம்பிக் கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த கலோரி அதிகரிப்பும், உடல் எடை மீண்டும் அதிகரிப்பதும் நடைபெறுகிறது.

இந்த அவதானிப்புகளின்  மூலம் எங்களுக்கு என்ன செய்தி சொல்லப் படுகிறது?:

என்னுடைய விளக்கம் இது: உடல்பருமன் குறைப்பிற்கு கொழுப்பை மட்டுமே குறைப்பது போதாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். என்னுடைய கருத்துப் படி, உடற்பருமன் குறைய கொழுப்பையும் மாச்சத்தையும் குறைப்பது மட்டுமே போதாது! உடற்பயிற்சியையும் அதனோடு சேர்த்துக் கொள்ளும் போது மட்டுமே உடற்பருமன் குறைப்பு நீண்ட கால நோக்கில் சாத்தியமாகும். என்னுடைய அவதானிப்பில், வர்த்தக ரீதியான உடல் எடை குறைப்பு முறைகளை நாடும் பலர், உடற்பயிற்சிக்கு முற்றான மாற்றீடாக அந்த உடல் எடை குறைப்பு முறைகளைப் பயன் படுத்த முயல்வதாலேயே உரிய பயன் கிடைப்பதில்லை.

அதனால், கொழுப்பைக் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது! எடுக்கும் கொழுப்பை நிரம்பாத கொழுப்பாக (ஒலிவ் எண்ணை, மற்றும் தானியங்களில் உள்ளவை போன்று) எடுத்துக் கொள்வது நல்லது. சோறு போன்ற மாச்சத்துள்ள உணவுகளையும் குறைக்க வேண்டும். இவற்றோடு வாரத்திற்கு மூன்று தடவைகளாவது மத்திமமான அல்லது கடினமான உடற்பயிற்சி செய்யவும் வேண்டும்.

நன்றி.

ஜஸ்ரின்.

மூலங்கள்: 

1. Tobias, D. K. et al. Lancet Diabetes Endocrinol. http://dx.doi.org/10.1016/S2213-8587(15)00367-8 (2015).

2. http://www.nature.com/news/low-fat-diets-have-low-impact-1.18678

3.  http://www.ncbi.nlm.nih.gov/pubmed/17413101?dopt=Abstract&holding=npg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜஸ்டின்,என்னோட வேலை செய்யும் ஒரு மனிசி கொஞ்சம் உடம்பு தான்.காலையில் ஒவ்வொரு நாளும் உணவாக சொக்கிலேட் சாப்பிட்டுக் கொண்டு வந்தவ. உடம்பைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சொக்கிலேட் சாப்பிடுவதை நிறுத்தி இரண்டு,மூன்று மாதங்களுக்குள் எலும்பும்,தோலும் ஆகி விட்டார்...எனது நண்பி ஒருவர் உடம்பைக் குறைப்பதற்காக அவித்த மரக்கறிகளும்,பழங்களும்,பயறு போன்ற தானியங்கள் சாப்பிடத் தொடங்கி மூன்றே நாட்களில் 4 கிலோ குறைத்து விட்டார்...அதைப் பார்த்து நானும் வெறும் பழங்களும்,அவித்த மரக்கறிகளும்,கடலை,கெளப்பி,பயறு போன்ற உணவுகளை சாப்பிட்டாலும் என்னால் மட்டும் உடம்பை குறைக்க முடியவில்லை...எதற்காக என்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொருவரது உடம்பு வாசியும் வித்தியாசமானதா?...பல பெண்களை நான் கண்டு இருக்கிறேன் சோத்தை வைச்சு வெளுத்துக் கட்டுவார்கள். ஆனால் அவர்களைப் பார்த்தால் ஈக்குச்சி மாதிரி இருப்பார்கள்...நன்றி



Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜஸ்டின்,என்னோட வேலை செய்யும் ஒரு மனிசி கொஞ்சம் உடம்பு தான்.காலையில் ஒவ்வொரு நாளும் உணவாக சொக்கிலேட் சாப்பிட்டுக் கொண்டு வந்தவ. உடம்பைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சொக்கிலேட் சாப்பிடுவதை நிறுத்தி இரண்டு,மூன்று மாதங்களுக்குள் எலும்பும்,தோலும் ஆகி விட்டார்...எனது நண்பி ஒருவர் உடம்பைக் குறைப்பதற்காக அவித்த மரக்கறிகளும்,பழங்களும்,பயறு போன்ற தானியங்கள் சாப்பிடத் தொடங்கி மூன்றே நாட்களில் 4 கிலோ குறைத்து விட்டார்...அதைப் பார்த்து நானும் வெறும் பழங்களும்,அவித்த மரக்கறிகளும்,கடலை,கெளப்பி,பயறு போன்ற உணவுகளை சாப்பிட்டாலும் என்னால் மட்டும் உடம்பை குறைக்க முடியவில்லை...எதற்காக என்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொருவரது உடம்பு வாசியும் வித்தியாசமானதா?...பல பெண்களை நான் கண்டு இருக்கிறேன் சோத்தை வைச்சு வெளுத்துக் கட்டுவார்கள். ஆனால் அவர்களைப் பார்த்தால் ஈக்குச்சி மாதிரி இருப்பார்கள்...நன்றி


 

 

ஆம், ஒவ்வொருவரதும் உடம்பு வாசி வித்தியாசமானது தான்! இது உடற்பருமனுக்கு/உடற்பருமன் குறைப்புக்கு மட்டுமன்றி பல்வேறு உடல் அமைப்புகள்/தொழிற்பாடுகளுக்கும் பொருந்தும். இந்த உடல் வாசி (phenotype) என்பது உண்மையில் எங்கள் ஜீன்களாலும், சூழலினாலும் தீர்மானிக்கப் படுகிறது. பத்து வருடங்களுக்கு முன்பே, உடற்பருத்தலோடு தொடர்புடைய சுமார் 127 ஜீன்களை மனிதனில் கண்டறிந்துள்ளார்கள். எல்லா மனிதர்களிலும் இந்த 127 ஜீன்களும் ஒரே மாதிரியான தொழிலைச் செய்தாலும், இந்த ஜீன்களில் பரம்பரையாக ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்கள் சில மனிதர்களில் இந்த ஜீன்களின் தொழிற்பாட்டைக் குறைப்பதால் அல்லது கூட்டுவதால் அம்மனிதர்களில் உடற்பருமன் பிரச்சினை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். இது உணவுகுறைப்பால் ஒருவருக்கு நன்மையைத் தர, இன்னொருவருக்கு எதிர்பார்த்த நன்மையைத் தராமல் விடலாம்.

ஆனால், உடற்பருமன் பிரச்சினை என்பது நவீன காலத்திற்குரியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்! மனிதர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த போதும் , இப்போது சில பத்து  ஆண்டுகளாகத் தான் உடல்பெருத்தல் பரவலாக எம்மிடையே காணப்படுகிறது. இதனால், ஜீன்கள், பரம்பரை என்பவற்றை விடவும் எமது சூழலே உடற்பருமன் பிரச்சினைக்கு அதிக பங்களிப்புச் செய்யும் காரணி எனக் கூற முடியும்!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பரீட்சை எல்லாம் நன்றாக முடிந்துவிட்டதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசி இல்லாமல், வியர்க்காமல், நடக்காமல் இருந்தால் உடற்பருமன் கூடும்தானே. பட்டினி கிடந்து மட்டும் குறைக்கமுடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரோக்கியமான பதிவு
நன்றி ஜஸ்டின்
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.