Jump to content

பொங்கலும்_வால்கட்டைவெடியும்‬..!


Recommended Posts

2000ம் ஆண்டுக்கு முதலான யாழ்ப்பாணம்,

பல பொருட்கள் பொருளாதார தடை காரணமாக யாழ்ப்பாணத்து வராத காலகட்டம்,

பண்டிகைக்காலங்களில கொழுத்தும் "சீன வெடி" கூட அந்த காலத்தில தடைசெய்யப்பட்ட ஒன்று .

அதால ,பண்டிகைகளுக்கு வெடி நாங்களே செய்யவேண்டிய கட்டாயம் ,

அப்ப எங்களுக்கு வெடி செய்ய தேவையான பொருட்கள் எண்டு பார்த்தால் ,

சைக்கிள் ரியூப்பில இருக்கிற வால்கட்டை (இது பேச்சுவழக்கு ,ஆங்கிலத்தின்ர VALVE எண்டததான் சொல்லுறது)

நெருப்பெட்டி 

வால்கட்டைக்க பட்டும்படாமலும் போய்வரக்கூடிய ஆணி

பொதுவாக ,கருக்கு மட்டைலயோ ,சைக்கிள்ட முன் பிறேக் கட்டை கம்பியிலயோதான் வால்கட்டைய பூட்டுறது ,கருக்குமட்டை கொஞ்சம் பாதுகாப்பு எண்டதால அதில செய்தால் வீட்டில கொஞ்சமா பேச்சுவிழும்.

அதுக்குள்ள குட்டி வால்கட்டைய ,சைக்கிளுக்கு காத்தடிக்கேக்க போடுற வால்ரியூப்ப களட்டிட்டு போட்டு இறுக்கமா மூடினா வெடிட பேஸ்மன்ற் ரெடி. 

எனி வெடிக்கிறதுக்கு சூரியா நெருப்பெட்டி மருந்துதான் நல்ல பவர் , ஒவ்வொரு வெடிக்கும் ரெண்டு குச்சு போடனும் , மிச்சம்பிடிக்கிறன் பேர்வளி எண்டு ஒரு குச்சு போட்டு வெடிக்கிறதுக்கு ரெண்டு கையையும் இறுக்கி தட்டிப்போட்டு போகலாம் ,சத்தமே வராது.

இதுக்க அறப்படிச்சதனமா மூண்டு குச்சு போட்டம் எண்டா குட்டி வால்கட்டை வெடிச்சுப்போம் அந்தகாலத்தில சையிக்கிள் கடைவளிய வால்கட்டை வாங்கிறதவிட நகைக்கடைல ஒரு பவுண் சங்கிலி வேண்டிரலாம் ,

என்ர மாமா சைக்கிள்கடை வச்சிருந்ததால கடைல போய் ஒட்ட்வாற சைக்கிள்களுக்கு ஒட்டுப்பாக்கிறநேரம் காத்தடிச்சுவிட்டு ,அரமணித்தியாலம் தொட்டாட்டி வேலை செய்தால் பெரிய அட்வைசுக்கு பிறகு ஒரு வால்கட்டை தருவார் , அப்பிடியே சுத்திஉள்ள சைக்கிள்கடைகலெல்லாம் போய் வால்கட்டை சேர்க்கணும் ,ஏன்னா உள்ளுக்க போடுற குட்டி வால்கட்டை இடைக்கிட வெடிச்சுப்போம் ,மாத்தணும் .

அளவான ஆணி தேடிட்டம் எண்டா வெடி ரெடியாகிடும் ,வெடி அடிக்கேக்க ஆணி அனேகமா பறந்திடும் ஆணிட தலைக்கு கிட்டவா நூல் கட்டி வெடியோட கட்டினா நல்லது .

அப்ப ஒரு டசின் நெருப்பெட்டி பதினைஞ்சு ரூபாய் எண்டு நினைக்கிறன் ,ரெண்டுநாள் தொடர்ந்து ஆறுமணிதொடக்கம் பத்துமணிவரைக்கும் படிக்கிறமேசைல இருந்தால் மூன்றாம்நாள் அம்மாட்ட கேட்டா ஒரு டசின் நெருப்பெட்டி வாங்கலாம் , 

மிச்சத்துக்கு அப்பா வீடிபத்த வச்சிருக்கிற நெருப்பெட்டில எரிஞ்ச குச்சிய வச்சிட்டு நல்லத சுடலாம் .

இதுக்குள்ள மூண்டு நெருப்பெட்டி மருந்து வேணும் பொங்கல் பொங்கேக்க பெரிய சத்தமா வெடிக்க எண்டு அன்ரனா அலுமினிய பைப்பில ஒரு வெடி செய்யணும் , மண்ணெண்ணை சீலய சுத்திட்டு கொழுத்தி வெடிக்கவைக்கிறது ,பொங்கேக்க வெடிக்க எண்டு கொழுத்தினா பொங்கி முடிஞ்சு தேவாரம் பாடேக்கதான் வெடிக்கும் ,திடுக்கிட்டு தேவாரமும் மறந்துபோம்.அது வேற கத ,

வால்கட்டை வெடி அடிக்க சீமெந்து சுவர் வேணும் ,அப்ப மதில் வீடு சரியான குறைவு ,கல் வச்சு அடிக்க ஏலாது ,தலைகீழ அடிச்சால் மருந்து கொட்டுண்டுபோம்,வெடி அடிக்கிற இடத்தில கறுப்பா வரும் எண்டதால மதில் வீட்டுக்காரர் கேமகேப்பினம் ,அப்ப ஒரே ஒரு பொதுச்சொத்து லைற் போஸ்ற் ,கரண்ட் இல்லாத காலத்திலயும் லைற் போஸ்ற் எங்களுக்காக ,அதுதான் தஞ்சம், இவளவெல்லாம் கஸ்டப்பட்டு ,சுத்தியுள்ள வீட்டுக்காரரெல்லாம் பேச பேச வால்கட்டை வெடி வெடிச்சு கொண்டாடுற பொங்கல் மகிழ்ச்சி ,இப்ப நூறு வெடி இருநூறுரூபாய்க்குவாங்கி வெடிக்கிறதில வராது .

 

கதை ...கோபிரமணன் .

 

Link to comment
Share on other sites

உண்மைதான் அண்ணா. அந்த காலங்கள் அழகியது. வாழ்தல் நிறைந்தது. சிறுவர்களுக்கானது. படிப்பினைகள் கொண்டது. இன்றைய கால பெரியவர்களாய் திரியும் சிறுவர்கள் போலல்லாது சிறுவர்கள் சிறுவர்களாய் இருந்த காலம். இனிமையான பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு கனாக்காலம்...! :rolleyes::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.