Jump to content

அகோர டெல்கி


arjun

Recommended Posts

எனது கனவிலும் நினைத்து பார்த்திராத ஒரு நகரத்திற்கு  காலம் என்னை இழுத்துக்கொண்டுபோய் விட்டிருந்தது .நள்ளிரவு டெல்கி விமான நிலையத்தில் நண்பருடன் இறங்கி சக பயணிகளுடன் பச்சை நிற லைட் எரியும் வெளியே செல்லும் பாதையில் நிற்கும் போது ஒரு சீக்கிய அதிகாரி வந்து எமது சூட்கேசுகளை பரிசோதிக்க வேண்டும் என்று உள்ளே அழைத்துசெல்லுகின்றார் .என்னுடன் கையில் கொண்டுவந்த கைப்பையில் தான் எனது உடுப்புகள் அனைத்தும் இருந்தது .
 
சூட்கேஸ்  பாண்டேஜ்,பிளாஸ்டர்கள்,கையுறைகள் ,மருந்துவகைகள் என்று நிரம்பியிருக்கு .நீ ஒரு வைத்தியரா? என்று கேட்டார் அந்த அதிகாரி .
இல்லை, இது தமிழ் நாட்டு அகதி முகாம்களில் இருக்கும் எமது மக்களுக்கு கொண்டு செல்லுகின்றேன் என்றேன் .இந்த பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவர முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும் ,எனவே இரு சூட்கேசுகளையும் இப்போ இங்கே விட்டுவிட்டு போகலாம் .சூட்கேசுகளை பின்னர் முறையான பத்திரங்களுடன் வந்து பெற்றுகொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டார் .
 
வெளியே வரும்போது அதிகாலை இரண்டு மணியிருக்கும் .டெல்கியின் வெக்கை காற்று அனலாக வீசுது .மக்கள் ஆரவாரம் அதிகமில்லை .எங்கும் எதிலும் ஹிந்தி மயம் .எம்மை பார்த்து கை ஆட்டிய படியே இருவர் வருகின்றார்கள் (இப்போ ஒருவர் கனடாவில் மற்றவர் சென்னையில் ).சிறிய அறிமுகத்துடன் டாக்சி 166 south avenue இல் நிற்கின்றது .
 
இரண்டாவது மாடி தான் எமது அலுவலகம் .மூன்று அறைகள் ,விசாலமான ஹால் ,குளிப்பறை ,தொலைபேசி வசதிகளுடன் ஆனது .இரண்டு அறைகளும் வாடகைக்கு விடப்பட்டிருந்து . தி முக ராஜ்யசபை உறுப்பினர் எல்.கணேசனின் குவாட்டர்ஸ் அது .பயண களைப்பு தூங்க போய்விட்டோம்.
 
காலை கண்ணை விழித்தால் ,மிக மிக சுத்தமான ,பச்சை பசேலென்ற பசுமையான மரங்களும் புற்களும்  சூழ்ந்த சுற்றாடல் .இந்த இடம்  இந்தியாவிலா இருக்கு என்று வியப்பாக இருந்தது.புதுடெல்கி முற்று முழுதாக வெளிநாட்டவர்களும் அரசியல்வாதிகளும் இருக்கும் ஒரு நகரம் அதனால் அந்த அளவு துப்பராவாக வைத்திருப்பதாக நண்பன் சொன்னார் .ஒரு நண்பரை காணவில்லை மற்றவர் காலை சாப்பிடபோகலாம் என்றார் .
 
கீழே  இறங்கினால் ஒரு சிறிய மைதானம் அதைதாண்ட மிக அகண்ட வீதி சவுத் அவனியு .ஜனாதிபதி மாளிகையை சுற்றவரவீதி அதில்  இருந்து  இரு வீதிகள் பிரிகின்றது .வடக்கு தெற்கு செல்லும் இந்த வீதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,இராஜதந்திரிகள் ,அரசஊழியர்கள் ,புலனாய்வாளர்கள் தங்கும் குவார்டேர்ஸ். சற்று தள்ளி பாராளுமன்றம் ,இந்தியா கேட் ,பிரஸ்கிளப் எல்லாம் அமைந்திருக்கின்றது.
 
காலை சாப்பாடு அங்கிருந்த கன்டீனில் இட்டலி சாப்பிட்டோம் .தென்னிந்தியர்களை போல ஆறு எழு இட்டலியை சம்பல் சாம்பாருடன் சாப்பிடாமல் ஒன்று இரண்டு பெரிய இட்டலியை சாம்பருக்குள் போட்டு கரண்டியால் இட்டலியை வெட்டி சாம்பாருடன் சேர்த்து அள்ளி சாப்பிட்டார்கள் .வடையும் அதே பாணியில் தான் .சப்பாத்தி கோழி கறி எதுவித ருசியும் இல்லை வெறும் பச்சைத்தண்ணி .
 
வேறு ஒரு இடத்தில் இருந்த மற்றவர் மாலை தனது வேஸ்பா ஸ்கூட்டரில் வந்தார் .அவர்தான் நிரந்தரமாக டெல்கியில் இருப்பவர் .அடுத்த நாள் சென்னைக்கு  நாங்கள் பயணமாகிவிட்டோம். திரும்ப மூன்று வாரங்களில் நான் மட்டும் டெல்கி திரும்பினேன் .
 
டெல்கி வெப்பம் தொடரும்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பராய் எழுதியிருக்கிறீங்க. மறக்காமல் மாலைதீவுக்குப் போன ஸ்ரோறியையும் எழுதுங்க அண்ணே

 

ஏன் அவசரப்படுகின்றீர்கள்? அண்ணா எல்லோருக்கும் தருவார்.....எழுதித்தருவார். :D  :D  :D

Link to comment
Share on other sites

சுப்பராய் எழுதியிருக்கிறீங்க. மறக்காமல் மாலைதீவுக்குப் போன ஸ்ரோறியையும் எழுதுங்க அண்ணே

நிச்சயம் எழுதுவன் ,நடந்தது முக்கால்வாசி தெரியும் இருந்தாலும் சும்மா பிழையான தகவல்கள் எழுத கூடாது .மாலைதீவிற்கு போனவர் இங்கு இருக்கின்றார் .(வவுனியாவில் இருந்தவரை வெளியில் எடுக்க உதவியும் செய்தேன் ) ஆனால் அவர் வாய் திறக்கிறார் இல்லை .

அதே போல பல கொலைகளின் போது இருந்தவர்களும் இங்கு இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் வாயால் அணுவும் அசையுதில்லை .(சந்ததியார் கொலை ,சுழிபுர புலிகள்கொலை ,டேவிட்  ஐயா கடத்தல் ,உமா கொலை )

அவர்கள் இடத்தில நான் இருந்தாலும் வாயை திறக்கமாட்டன் என்றுதான் நம்புகின்றேன் . 

ஆனால் இந்த பதிவில் அரசியல் வராது . :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் எழுதுவன் ,நடந்தது முக்கால்வாசி தெரியும் இருந்தாலும் சும்மா பிழையான தகவல்கள் எழுத கூடாது .மாலைதீவிற்கு போனவர் இங்கு இருக்கின்றார் .(வவுனியாவில் இருந்தவரை வெளியில் எடுக்க உதவியும் செய்தேன் ) ஆனால் அவர் வாய் திறக்கிறார் இல்லை .

அதே போல பல கொலைகளின் போது இருந்தவர்களும் இங்கு இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் வாயால் அணுவும் அசையுதில்லை .(சந்ததியார் கொலை ,சுழிபுர புலிகள்கொலை ,டேவிட்  ஐயா கடத்தல் ,உமா கொலை )

அவர்கள் இடத்தில நான் இருந்தாலும் வாயை திறக்கமாட்டன் என்றுதான் நம்புகின்றேன்

ஆனால் இந்த பதிவில் அரசியல் வராது . :o

 

அதெப்படி  புலிகளில் இருந்தவர்கள் வாய் திறக்கணும்???

திறந்தவர்களுக்கு ஆராதனை.....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அர்ஜீன் அண்ணா. வாசிக்க நான் இருக்கேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் எழுதுங்கோ உங்களது எழுத்துக்களில் உங்களை அறியாமலேயே பல உண்மைகளை வெளிவரும். ஆனால் பெண்களைப்பற்றி விமர்சனம் செய்யும்போது அவதானமான வார்தைகளைப் பிரயோகிக்கவும். ஜனநாயகம் எனும் பெயரில் பொதுவெளியில் யார்மீதும் சாணியடிக்கும்வேலையில் ஈடுபடாதீர்கள். நாம் கிடுகு வேலிகளால் அரணமைத்து போதாக்குறைக்கு கிணத்தடிக்கும் வேறாக வேலியடைச்சு எம்மைக் கட்டுபாட்டுடன்  பேணிக்காத்த சந்ததிகளைக் கொண்ட சமூகம். அவ்வேலிகளுக்கு நெருப்புமூட்ட எத்தணிக்காதீர்கள். மேலைத்தேச வாழ்கையும் அவ்வாழ்க்கைக்குள் நீங்கள் நுழைத்த புதியனவவும் உங்கள் வார்த்தைப்பிரயோகங்களை வன்மையாக்கின்றன.

 

 

Link to comment
Share on other sites

எதையும் எழுதுங்கோ உங்களது எழுத்துக்களில் உங்களை அறியாமலேயே பல உண்மைகளை வெளிவரும். ஆனால் பெண்களைப்பற்றி விமர்சனம் செய்யும்போது அவதானமான வார்தைகளைப் பிரயோகிக்கவும். ஜனநாயகம் எனும் பெயரில் பொதுவெளியில் யார்மீதும் சாணியடிக்கும்வேலையில் ஈடுபடாதீர்கள். நாம் கிடுகு வேலிகளால் அரணமைத்து போதாக்குறைக்கு கிணத்தடிக்கும் வேறாக வேலியடைச்சு எம்மைக் கட்டுபாட்டுடன்  பேணிக்காத்த சந்ததிகளைக் கொண்ட சமூகம். அவ்வேலிகளுக்கு நெருப்புமூட்ட எத்தணிக்காதீர்கள். மேலைத்தேச வாழ்கையும் அவ்வாழ்க்கைக்குள் நீங்கள் நுழைத்த புதியனவவும் உங்கள் வார்த்தைப்பிரயோகங்களை வன்மையாக்கின்றன.

அண்ணைக்கு TALIBAN ,RSS, ISIS இந்த மூன்று அமைப்புகளிலும்  சேர முழுதகுதியும் இருக்கு  .அவனவன் வெளிச்சத்தை தேடி போவான் சிலர் என்னடா என்றால் இருட்டிற்குள் இருந்து பழகிவிட்டோம் அப்படியே விடுங்க என்கின்றார்கள் . :(

Link to comment
Share on other sites

தொடரை எழுதுங்க.. கருத்துக் குழப்பல்களும் நல்லதுதான்.. அப்போதுதான் எழுத வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும்!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

அர்ஜூனும் சாத்திரியும் எழுதுவது மிக நல்லது..பலரின் கனவுக்கோட்டைகள் தருகிறது.....

ஒரு இயக்கத்தில் உயிரை துச்சமாக நினைத்து இருந்த்திலும் பார்க்க ...பின் அது விடும்(விட்ட) பிழைகளை சுட்டிக்காட்டுவதற்கு தான் மிக அதிக நெஞ்சுரம் வேண்டும்...bravo..தொடருங்கள்..

 

சும்மா பாபா கூட்டம் மாதிரி brainwashed பண்ணப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் இது தான் வித்தியாசம்...இருவரும் தொடர்ந்து எழுதுவதே நல்லது

Link to comment
Share on other sites

ஒரு சனிக்கிழமை காலை மீண்டும் டெல்கியில் வந்து இறங்கினால் அன்று மதியமே இலங்கை தமிழர்களுக்காக டெல்கி தமிழ்சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊர்வலம் இந்தியா கேட்டிற்கு முன்னால்  நடைபெறுகின்றது என்று என்னையும் போய் கலந்துக்க சொன்னார் டெல்கி நண்பர் சொன்னார்.
 
சம்பத் என்ற ஒரு தமிழ்நாட்டு உறவுடன் ஊர்வலத்திற்கு சென்றால் "இலங்கை தமிழருக்கு நீதி வேண்டும் " என்று முன்னால் பெரியதொரு பானரை பிடித்தபடி ஆண்களும் பெண்களுமாக இருநூறு பேர்வரையில் கோசம் எழுப்பியபடி செல்கின்றார்கள் .ஒரு பெண்தான் "இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பு ,தமிழர்களுக்கு உரிமையை கொடு ,தமிழர்களை கொல்லாதே " இப்படி பல கோஷங்களை எழுப்ப மற்றவர்கள் திருப்பி அதை சொல்லிக்கொண்டு போனார்கள். முன் வரிசையில் அரசியல்வாதிகள் போல தோற்றத்துடன் பத்துபதினைந்து பேர்களும் பின்னால் சென்றவர்கள் மிகவும் ஏழ்மையான கிராமத்தவர்கள் போல இருந்தார்கள் .எனக்கு ஒரு தெரிந்த முகமும் இல்லை .ஊர்வலம் முடிய டாக்டர் இரா .ஜனார்த்தனம் ,அதிமுக எம்.பி வலம்புரிஜான் ,வரதராஜமுதலியார்,பகுகுணா போன்றவர்கள் உரையாற்றினார்கள் .
 
வரதராஜமுதலியாருடன் நின்ற ஒரு இளைஞனை எங்கே பார்த்த நினைவு வர அருகேசென்றால்  ஒரு சின்ன நாயகியாக கொழும்பில் இருந்து எமது ஊருக்குள் வலம் வந்த ஜெயந்தியின் தம்பி .ஜெயந்தியுடன் சேர்ந்து இவரும் பரதநாட்டியம் ஆடுவதால் அவரை அப்படியே நினைவில் இருந்தது .
 
கமராவுமா கையுமாக நின்றவரை நெருங்கி என்னை தெரியுமா என்று கேட்டேன் .ஆம் என்று தலையாட்டிவிட்டு தான் பம்பாயில் இருந்து வரதராஜா முதலியாருடன் வந்ததாகசொன்னார்.அவர் ஈழதமிழர்களுக்கு பல வழிகளிலும் உதவுதாக சொன்னார் .தான் எந்த இயக்கத்திலும் இல்லை என்று சற்று அழுத்தி சொன்னார் .இந்த வரதராஜா முதலியாரின் கதைதான்  "நாயகன்" படமாக வந்ததென்று பின்னர் அறிந்தேன் .தான் என்ன செய்கின்றார் என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை என்னையும் கேட்கவில்லை போட்டுவருகின்றேன் என்று போய்விட்டார் .ஊரில் நாலு வீடு தள்ளி இருந்தவர் பல வருடங்களின் பின் டெல்கியில் சந்தித்தும் இரு நிமிட விசாரிப்புடன் முடிந்துவிட்டது .பல வருடங்களின் பின்னர் பிரசாந்த் ,தியாகராஜனை வைத்து "அடைக்கலம் " படம் எடுத்தது இவர்தான் . 
 
ஊர்வலம் முடிய ஆட்டோவில் வீடு திரும்பும் போது என்ன என்ன ஊர்வலம் ,ஏன் நடந்தது ,வந்த அந்த மக்கள் யார் என்று எல்லாம் ஆயிரம் கேள்விகள் எழுந்தது . ஆனால் பின்னர் அப்படி ஒரு அனுபவம் எனக்கு ஏற்படவேயில்லை .ஒழுங்காக நித்திரை இல்லாதது,பயணக்களைப்பு , உச்சி வெயில் ,ஊர்வலம் எல்லாம் சேர்த்து முதன் நாளே மண்டையை ஒரு கலக்கு கலக்கிவிட்டிருந்தது .
 
டெல்கி நண்பர் உமாவின் பெரும் விசுவாசி .எண்பதாம் ஆண்டில் இருந்து அமைப்பில் இருக்கின்றார் .டெல்கியில் பலருடன் தொடர்பில் இருந்தார் .பாலஸ்தீனதிற்கு போராளிகளை அனுப்புவது  இவர் வேலை தான் .பெரிதாக எங்கும் வெளியில் போககூடாது ,கண்டவர்களுடன் கதை வைக்க கூடாது ,ஐந்து சதத்திற்கும் காசு கணக்கு எழுதவேண்டும் என்று எல்லாம் கொண்டிசன் சொன்னார் .இது ஒரு விடுதலை அமைப்பு அதுவும் டெல்கியில் இருக்கின்றோம் வேண்டாத பிரச்சனைகள் ஏதும் வந்துவிடக்கூடாது என்றார் .அவர் எங்களுடன் தங்குவதில்லை சற்று தள்ளி அதிமுக எம்பி ஆலடி அருணாவின் தனி வீட்டில் ஒரு அறையில் இருந்தார் .ஆலடி அருணா தனது குவாட்டேர்சை ஒரு மலையாள குடும்பத்திற்கு வாடைகைக்கு கொடுத்திருந்தார் .அவர்களுக்கு மூன்று அழகான பாடசாலை செல்லும் பைங்கிளிகள் இருந்தார்கள் .அநேகமாக மாலையில் பாட்மின்டன்  விளையாடிக்கொண்டிருப்பார்கள் அதனால் தானோ என்னவோ எனது நண்பர் நான் அங்கு வருவதை பெரிதாக விரும்புவதில்லை .
 
நான் இருந்த குவாட்டேர்சில் இருந்த தமிழ் நாட்டு உறவுகள் , சம்பத் -சட்டம் படித்துக்கொண்டிருந்தார் ,முன்னாள் திமுக எம்பியின் மகன் .மிக நல்லவர் பழகவும் இனியவர் . எனது பேச்சுத்துணை இவர்தான் . சித்தார்த்,கபிலன் -சகோதரர்கள் வேலை செய்துகொண்டு இருந்தார்கள் .இவர்கள் உலகமே வேறு .பெரிதாக நான் கதைவைப்பதில்லை .ஜான் சுந்தர் -டெல்கி தமிழ் வானொலியில் (ஆகாசவாணி) செய்தி வாசிப்பவர் .சிறந்த அறிவாளி ,உலக விடயம் எல்லாம் நுனிவிரலில் வைத்திருப்பார் .அனேக இரவு இவருடன் கழியும் .
 
 எனது வேலை -பத்திரிகையாளர்கள் ,அரசியல்வாதிகள் ,வெளிநாட்டு இராஜதந்திரிகள் இவர்களை  தொலைபேசியில் அழைத்து நியமனம் வைத்து  பின்னர் போய் சந்தித்து எமது பிரச்சனையை எடுத்து சொல்வது .இவர்கள் தொலைபேசி எண்கள் விலாசங்கள் அடங்கிய கையேடு இருந்ததால் வேலை சுலபமாக இருந்தது . பலருடன்  தொலைபேசி அழைப்புடன் தொடர்பு நின்றுவிடும் .சிலர் நியமனத்தை தந்து விட்டு அங்கு போனால் எமது பிரசுரங்களை வாங்கிகொண்டு இரண்டு வார்த்தையுடன் அனுப்பிவிடுவார்கள் .சிலர் மிக ஆர்வமாக அனைத்து விடயங்களை கேட்பது மாத்திரம் அல்லாமல் முடிந்தால் இடைக்கிடை வந்து சந்திக்கவும் சொன்னார்கள் .தலைவர் டெல்கி வந்தால் தங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் படியும் கேட்டார்கள் .அமேரிக்கா ,கனடா ,பிரிட்டன் ,பிரான்ஸ்,சிம்பாவே போன்ற நாடுகள் இப்படி ஆர்வம் காட்டினார்கள் .பத்திரிகையாளர்கள் பொதுவாக சந்திப்புகளில் ஆர்வம் காட்டுவார்கள் .
-தமிழ் ஆங்கில தினசரி வார மாத பத்திரிகைகள்,புத்தகங்கங்கள் வாங்கி எமது பிரச்சனை பற்றி ஏதும் இருந்தால் அவற்றை  சேர்த்து வைப்பது .இந்த காலகட்டத்தில் தினமும் எமது நாட்டுபிரச்சனை ஏதாவது செய்தி பத்திரிகைகளில் வந்துகொண்டே இருக்கும் .இதை விட சென்னையில் இருந்து பிரசுரங்கள் ரெயினில் பெரிய  பொட்டலாமாக அனுப்பிவிடுவார்கள் .குறிப்பாக ஆங்கிலத்தில் Spark என்று மிகத்தரமான  சஞ்சிகை ஒன்று சேர்லி கந்தப்பாவை ஆசிரியராக கொண்டு வெளிவந்துகொண்டிருந்தது .
 
பஸ்சில் தான் எனது அனேக பயணங்கள் இருந்தது அங்கு  ஒரு  பெரிய வேடிக்கை என்னவென்றால் பஸ் தரிப்பில் பஸ் நிற்காது .சிலோவாக்கி விட்டு போய்கொண்டே இருப்பார்கள் .பயணிகள் ஏறுபவர்கள் என்றாலும் இறங்குபவர்கள் என்றாலும் ஜம்பிங்தான் .சில வாரங்களில்  சயிக்கில் ஒன்று வாங்கிவிட்டேன் .டெல்கி ரயில்வே ஸ்டேசனுக்கு ஒரு மணித்தியாலம் சயிக்கிளில் ஓடிப்போய் பார்சலை எடுத்துக்கொண்டு வந்ததை  நினைக்க இப்ப வியப்பாக இருக்கு .சயிக்கிளுக்கும் எனக்கும் அப்படி ஒரு பொருத்தம்  லண்டனிலும் Neasden to Knightbridge எந்த குளிரிலும் சயிக்கிளில் தான் வேலைக்கு போய்வந்தேன் .
 
சாப்பாடு காலையில்  அனேகம்   கேரள பெட்டிகடை உப்புமாதான் .ஒரு சொட்டு சீனியையும் அதன் மேல் தூவி தருவார்கள் .கரண்டியால் நின்றபடியே சாப்பிட்டு விட்டு டீ ஒன்று அடிக்க சரி .மதியம் மூன்று சொய்ஸ் . ஒன்று  அரசியல்வாதிகளின் கன்ரீன் .நல்ல சுத்தமாக இருக்கும் ஆனால் வட இந்திய சாப்பாடுதான் .சப்பாத்தியும் கோழி குழம்பு பருப்பு .முழுக்க கதர்வேட்டி கோஷ்டிகள் .வடையை கரண்டியால் தின்பவர்கள் சப்பாத்தியை கையால் அந்த மாதிரி சத்தத்துடன் பிரித்து மேய்வார்கள் .இரண்டாவது வேறொரு கேரள கடை .  Rice Pilau அல்லது முட்டை குழம்பும் பரோட்டாவும் .இவை இரண்டும்தான்  நான் அதிகம் சாப்பிட்டது .மூன்றாவது ஒரு தமிழரின் சாப்பாட்டுக்கடை .கொழும்பு கோட்டையில் இருந்த கடை போலிருக்கும் .அனேக தமிழர்கள் அங்குதான் வருவார்கள் .விலைசாப்பாடு.நிர்ணயிக்கபட்ட விலைக்கு எவ்வளவும் சாப்பிடலாம் .காசை மிச்சம் பிடிப்பதற்காக காலையில் சாப்பிடாமல் மதியம் இங்கு வந்து மூன்று நாலு பிளேட் என்று வெட்டுவார்கள் .
 
மாலையில் காலை உணவு அருந்தும் கேரளகடையில் வாய்பான் மாதிரி இனிப்பான ஆனால் தட்டையான ஒரு பணியாரம் பிளேன் ரீ. இரவு தினமும் இட்டலிதான் .வீட்டிற்கு   கொண்டுவந்து தருவார்கள் .அனேக தமிழ் எம்பி மார்களுக்கு எல்லாம் இவர்கள் தான் சப்ளை .இவர் இடைக்கிடை எம்பி மார்கள் வீட்டில் நடக்கும் கிசு கிசு செய்திகளுடன் வருவார் .
 
அங்கு நடந்த சில சம்பவங்களுடன் மீண்டும் ..... :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இங்கு நீங்கள் பதிந்தவைகளை மீண்டும் மீண்டும் அரைப்பது போலுள்ளது..

முன்பு நீங்கள் எழுதியவற்றை ஒருமுறை வாசித்துவிட்டு எழுதினால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்ஹெய்தா, ஐஎஸ் ஐஎஸ், ஆர் எஸ் எஸ், என்பன மத அடிப்படைவாதக் கூட்டமெனிலும் அவர்கள் தங்கள்சார்ந்த மார்க்கத்தையோ அன்றேல் அவைகளைக் கடைப்பிடிக்கும் மக்களையோ ஜனநாயகம் எனும்பெயரில் தூசணை செய்வதில்லை. தவிர அவர்கள் தாம்மை ஜனநாயகவாதிகள் எனக் கூறிக்கொள்வதில்லை.

 

இங்கு புலி ஜனநாயகம் தமிழர் ஜனநாயகம் உட்கட்சி ஜனநாயகம் இயக்க ஜனநாயகம் என்று பீத்திக்கொள்வோரே பொதுவெளியில் மக்களின்மீது காறு உமிழ்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.