Jump to content

உங்கள் ஜெசிக்கா.............


Recommended Posts

  • Replies 204
  • Created
  • Last Reply

ஜெசிக்கா தமிழ் டிவியில் தமிழ் பாட்டு பாடி இரண்டாம் இடம் வந்ததால இது வரை உலகின் கண்களுக்கு தெரியாமல் இருந்த ஈழ தமிழினத்தை உலகமே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் வட கொரியா அதிபரில் இருந்து உலக தலைவர்கள் அனைவரும் இப்பிடி ஒரு திறமை மிக்க இனம் உலகில் இருக்கா என்று ஆச்சரியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெசிக்கா தமிழ் டிவியில் தமிழ் பாட்டு பாடி இரண்டாம் இடம் வந்ததால இது வரை உலகின் கண்களுக்கு தெரியாமல் இருந்த ஈழ தமிழினத்தை உலகமே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் வட கொரியா அதிபரில் இருந்து உலக தலைவர்கள் அனைவரும் இப்பிடி ஒரு திறமை மிக்க இனம் உலகில் இருக்கா என்று ஆச்சரியம்

ஆமா நீங்கள் என்ன செய்தீர்கள் ஈழதமிழினத்தை உலகம் திரும்பி பார்க்க. இவ பாடியதால ஈழதமிழினத்திற்கு ஏதாவது தீமை ஏற்பட்டதா?

Link to comment
Share on other sites

ஹா ஹா ஜெசிக்கா ஒரு கிலோ தங்கம் வென்றதால் ஈழத்தமிழர்களுக்கு சுயமரியாதையும் உரிமையும் கிடைச்சிரிச்சாம் .....

பாவம் போராளிகளுக்கு இது தெரியாமல் போய்டிச்சி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் சிறுமி ஜெசிக்காவுக்கு,

 

நீ தங்கம் வென்றதையும் அதை எமது தேசத்தின் ஏதிலிகளுக்குத் தானமாகக் கொடுத்ததையும் அறிந்தேன், நன்றிகளும் வாழ்த்துக்களும். இதற்குமுன்பு நான் இத்திரியில் எழுதிய விமர்சனத்தில் உன்னில் பிழைபிடிக்கவேண்டுமென்பதற்காகவே அன்றேல் மட்டம்தட்ட வேண்டுமென்பதற்காகவே இல்லை. உனது இசைத்துறை வாழ்கை சுப்பச் சிங்கர் என்பதுடன் நின்றுவிடாது இமையம் தொடவேண்டுமென்பதற்காகவும் நல்ல ஒரு குருவைத்தேடிப்பிடிப்பதற்காகவுமாகும்.

 

புலம்பெயர்ந்து தேசங்கள் எங்கும் பயணப்படினும் புலத்தை மறக்காதிருக்கும் நல்ல குணம் உன் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் எப்போதுமே இருப்பதாக.

 

இவ்விடுகையில் ஏற்கனவே நான் தெரிவித்திருந்த கருத்துக்களில் உனது மனம் புண்பட்டிருந்தால் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறென். இதில் நான் எள்ளளவும் வெட்கப்பட்டுக்கொள்ளவில்லை. தவிர உனது வெற்றிக்காக நான் இதுவரை ஒரு வாக்குக்க்கூட உனக்காகப் போடவில்லை தவிர ஏனையோருக்கும் போடவில்லை எனப் பகிரங்கப்படுத்துகிறேன்

 

இவண்

எழுஞாயிறு.

Link to comment
Share on other sites

ஏதோ இவர்கள் எல்லாம் விருப்பமே இல்லாமல் தான் வெளிநாடுகளில் போய் இருப்பதாகவும் ....போட்டி நிகழ்சிகளில் வந்து விடைகொடு எங்கள் நாடே என்று பாடி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்களாம் அதைக்கேட்டு ஈழத்தமிழர்கள் கண்ணீர் வடிக்கின்றார்கலாம்.....இசைப்பிரியா போன்றவர்களுக்காக வீதியில் இறங்க சொன்னால் கதவைப்பூட்டிபோட்டு வீட்டுக்குள் இருக்கும் தமிழர்கள்தான் ஜெசிகாவை படம் போட்டு கொண்டாடுகின்றார்கள்......

Link to comment
Share on other sites

ஐக்கிய நாடுகள் சபை விசாரணை தள்ளிபோனத்தை அடுத்து செய்வதறியாது குழம்பி நிக்கும் தமிழ் சமுகத்தின் ஒரு பகுதி......இந்த விசாரணை வேண்டி பனிக்குள்ளும் மழைக்குள்ளும் எத்தனனை எத்தனை போராட்டங்கள் எவ்வளவு தமிழர்களின் தியாகங்கள்.....ஆனால் சிங்களத்தின் ராஜதந்திரத்தால் அவைகள் எல்லாம் பொய்யாகி போன நிலையில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பல்கலை கழக மாணவர்கள் கூட உயிரை பொருட்படுத்தாது போராட்டங்களில் இறங்க தயாராகி வரும் நிலையில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஜெசிகாவுக்கு பின்னால் கொடிபிடித்துக்கொண்டு.......

இதற்குள் தமிழக தமிழர்கள் எங்களுக்கு உதவி செய்யிறதில்லை என்ற குற்றச்சாட்டு வேறு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் இதைதான் வயித்தெரிச்சல் என்பது. இவவால் ஏதாவது தீமை ஏற்பட்டால் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களில் எத்தனை விதமான குணம் கொண்டவர்கள் உள்ளனர் என்பதை இந்த திரியைப்பார்த்தால் புரிந்து கொள்ளலாம்..

 

தமிழேண்டா... :(  :(  :(  :(

Link to comment
Share on other sites

புலம் பெயர் தமிழ்

பெற்றோர் தங்க பிள்ளைகளிட்ட சொல்லி விடுறது போட்டிகள்ள விடைகொடு எங்கள் நாடே பாடு .... அனுதாபத்திளையாவது கூட ஒட்டு கிடைக்கும் என்று.... அதென்ன பங்குபற்றும் அத்தனை புலம்பெயர் போட்டியாளர்களும் அந்த பாட்டையே பாடுறாங்க..... தயவு செய்து திறமைகளை மட்டும் வைத்து போட்டிகளில் பங்குபெறுங்கள்..... வெறும் அனுதாபங்களை நம்பி களம் காணாதீர்கள்.....

Link to comment
Share on other sites

அனாதை குழந்தைகளுக்கும் அனாதை ஆச்சிரமங்களுக்கும் உதவி செய்ய பல நிறுவனங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கு என்று போராட போன பல இளைஞர்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியோடு எதிர்நோக்கி இருக்கின்றார்கள் உண்மையில் தாயக பற்றுல்கவர்கள் என்றால் தங்களுக்கு கிடைத்த பரிசை போராளிகளின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தி இருக்கலாமே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனாதை குழந்தைகளுக்கும் அனாதை ஆச்சிரமங்களுக்கும் உதவி செய்ய பல நிறுவனங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கு என்று போராட போன பல இளைஞர்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியோடு எதிர்நோக்கி இருக்கின்றார்கள் உண்மையில் தாயக பற்றுல்கவர்கள் என்றால் தங்களுக்கு கிடைத்த பரிசை போராளிகளின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தி இருக்கலாமே.....

 

 

சுண்டல் உங்களுக்கு என்னாச்சு.......??? :(  :(  :(

Link to comment
Share on other sites

சற்று முன் இன்று ஈழத்தமிழர்களை யாரென்று உலகுக்கு சுப்பர்சிங்கர் ஜூனியர் மூலம் ஜசிக்கா என்ற கனடியத்தமிழ் பெண் உணர்த்தியதாக முகநூலில் இரண்டு நிலைத்தகவல்களை பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை..

நிலைத்தகவல் 1) - "எமது வலியை உலகுக்கு உணர்த்தியவள், ஜெசிக்காதான் எங்கள் வெற்றித்திருமகள்"

நிலைத்தகவல் 2)- இதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் பலம் என்னவென்று உலகத்துக்கு புரிஞ்சு இருக்குமாம்..

ஒருவேளை உலகம் உலகம் என்று விஜய் ரீவிய சொல்லுறாங்களோ..?

ஒருத்தன் ரெண்டுபேர் இல்ல முகப்புத்தகத்தில் அநேகமான நம்மாழுங்க இப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்... இதுவெறும் உணர்ச்சிப்பெருக்கில் எழுதியதென்று சொல்லமுடியாது இப்படித்தான் நம்மாழுங்க அநேகம்பேர் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்..இப்படியான செயல்கள்தான் இனி நமது போராட்டவடிவம் என்றாகிவிட்டது.. புலம்பெயர் ஊடகங்களும் இந்திய அரசியல்வாதிகளும் நம்ம அமைப்புகளில் சிலவும் இதை கற்றுகொடுத்திருக்கிறார்கள் அல்லது இப்படியான செயல்கள்தான் உலகம் நம்மை திரும்பிபார்க்கும் என்று நம்மவர்களை நம்பும்படி ஆக்கி இருக்கிறார்கள்..

என்னத்தை சொல்ல..

Thanks to subesh

Fb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் உங்களுக்கு என்னாச்சு.......??? :(  :(  :(

 

 

அதே ஆதங்கம் தான் எனக்கும்,
 
ஒரு சிறுமியுடன் அரசியலைக் குழப்ப வேண்டிய தேவை என்ன?
 
ஒரு வேளை, ஒரே ஊர், குடும்பப் பகையோ என யோசிக்க வைக்கிறார், நம்மை சிலவேளை தனது யோக்குகளால் சிரிக்க வைக்கும் சுண்டல்.  :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்று முன் இன்று ஈழத்தமிழர்களை யாரென்று உலகுக்கு சுப்பர்சிங்கர் ஜூனியர் மூலம் ஜசிக்கா என்ற கனடியத்தமிழ் பெண் உணர்த்தியதாக முகநூலில் இரண்டு நிலைத்தகவல்களை பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை..

நிலைத்தகவல் 1) - "எமது வலியை உலகுக்கு உணர்த்தியவள், ஜெசிக்காதான் எங்கள் வெற்றித்திருமகள்"

நிலைத்தகவல் 2)- இதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் பலம் என்னவென்று உலகத்துக்கு புரிஞ்சு இருக்குமாம்..

ஒருவேளை உலகம் உலகம் என்று விஜய் ரீவிய சொல்லுறாங்களோ..?

ஒருத்தன் ரெண்டுபேர் இல்ல முகப்புத்தகத்தில் அநேகமான நம்மாழுங்க இப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்... இதுவெறும் உணர்ச்சிப்பெருக்கில் எழுதியதென்று சொல்லமுடியாது இப்படித்தான் நம்மாழுங்க அநேகம்பேர் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்..இப்படியான செயல்கள்தான் இனி நமது போராட்டவடிவம் என்றாகிவிட்டது.. புலம்பெயர் ஊடகங்களும் இந்திய அரசியல்வாதிகளும் நம்ம அமைப்புகளில் சிலவும் இதை கற்றுகொடுத்திருக்கிறார்கள் அல்லது இப்படியான செயல்கள்தான் உலகம் நம்மை திரும்பிபார்க்கும் என்று நம்மவர்களை நம்பும்படி ஆக்கி இருக்கிறார்கள்..

என்னத்தை சொல்ல..

Thanks to subesh

Fb

 

 

பேஸ்புக்கில் ஆட்கள் எழுதும் கருத்துக்களை பார்த்து பதின்நான்கு வயதுச்சிறுமி மீது காழ்ப்புணர்வுடன் கீழ்த்தரமாய் விமர்சிப்பது நிச்சயமாய் தமிழ் மக்களுக்கு ஒரு விடிவைத்தரும். 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் . நல்ல விசயங்கள் சில செய்திருப்பதில் மகிழ்ச்சியே ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இசை மேல் உள்ள தீராத காதலால் நான் கேட்கும், பார்க்கும் நிகழ்சிகளில் இதுவும் ஒன்று.
வியாபார நோக்கு, பாரபட்சம் இந்த நகழ்ச்சிக்கு கூட விதி விளக்கு அல்ல. 
ஜெசிக்காவுக்குதான் அதிகபட்சமான வாக்குகள் விழுந்ததாகவும் பின்னர் அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதாகவும் கூட ஒரு செய்தி அடி படுகின்றது. 
 
என் அனுமானிப்பின் படி அவர் முதல் 3 பேருக்குள் வந்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. 
ஜெசிக்கா தனக்கு தரப்பட்ட பாடலை அல்லது தேர்ந்தெடுத்த பாடலை வெறுமனே பாடி விட்டு போகும் தன்மை கொண்டவரல்ல. அதனை நன்கு புறிந்து, பாடலுக்குரிய (B)பாவங்கள் (எசன்ஸ்) அனைத்தையும் கிரகித்து வெளிப்படுத்தும் ஒரு பாடகி. தவிர இசையில் உண்மையான பற்றுதல் கொண்டவர் என நினைக்கிறன்.
ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தன் பாடல் பாடும் திறமையை வளர்த்துக்கொண்ட விதம் ஆச்சரியப் படக்கூடியது. இது நன்கு அவதானித்தால் புறியும்.
 
எது எப்படியோ இந்த வெற்றி மிகவும் சந்தோசம் தருகிறது. இவர் தொடர்ந்தும் படிப்பிலும், இசையிலும் கவனம் செலுத்தி மேன் மேலும் முன்னெர  வாழ்த்துக்கள்.
 
இவருக்கு கிடைத்த பரிசுதொகை குறைந்த பட்சம் $53,000 கனேடியன் டாலர்ஸ்.
இவ்வளவு பரிசுத் தொகையையும் சமனாக பங்கிட்டு  தமிழகத்திலும், ஈழத்திலும் இருக்கும் பாதிப்படைந்த, மற்றும் நலன் குறைந்த குழந்தைகளுக்கு நன்கொடை செய்துள்ளார்.
இந்த மனது எல்லாருக்கும் வருமா? ஏன் எனேக்கே வருமா தெரியவில்லை? 
 
இங்கு கனாடாவில் இவர்கள் ஒன்றும் கோடீஸ்வரர்கள் அல்ல, சாதாரண தமிழ் குடும்பம். நாங்கள் படும் அணைத்து கஷ்டங்களும், நஷ்டங்களும் இவர்களுக்கு உண்டு. எனவே இது மிக மிக போற்றத்தக்க செயல்.
நாம் அனைவரும் பெருமை கொள்ளகூடிய தருணம். இவரால் நன்மை அடையப்போகும் குழந்தைகளின் ஆசீர்வாதம் இவருக்கும் இவரின் குடும்பத்தாருக்கு என்றும் கிடைக்கும்.
 
சகட்டு மேனிக்கு இந்த திரியிலும் (ஜெசிக்கா சூப்பர் சிங்கர் தெரிவிலும்) அரசியல் எழுதியவர் இங்கே உண்டு.
உங்களால் யாருக்கு என்ன லாபம்? ஜெசிக்கவால் அவள் குடும்பத்தால் 40 பிள்ளைகள் கொஞ்ச காலத்துக்கு சந்தோசமாக இருப்பார்கள். அதுவே போதும்... மற்றும் படி நீங்கள் அண்ணாந்து பார்த்து அதிக அதிகமாக காரி துப்புங்கள் ...தாங்குவது என்னவோ உங்கள் முகங்கள்  தானே.
 
ஸ்ரீஷா முதல் மூன்றுக்குள் வராதது ஆச்சர்யமே...
 
Jessica we are so proud of you and your family !!! 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"சுண்டல்" பெயருக்கேற்ற  எழுத்து.. நீங்க நல்லா வர்வீங்க பாஸ்....
என்ன இப்போதைக்கு
உங்க சுண்டல்ல .. உப்பு  இல்ல
அதனால அது குப்பையில ... 
இது நான் சொல்ல இல்ல உங்க முன்னோர் சொன்னது அவ்ளோதான்...
Link to comment
Share on other sites

நல்லதொரு பதிவு சசி ,

 

விஜேய் டி வி நடாத்தும் உலகளாவிய இந்த பிரமாண்ட நிகழ்வில் பாரபட்சங்கள்  குளறுபடிகள் இருந்தாலும் அதையும் தாண்டி சாதிக்கவேண்டும் என்றுதான் பலர் பங்குபற்றுகின்றார்கள் .

நாங்கள் ஒதுக்கி விஜேய் டி வி ஒன்றும் ஆட்டம் காணப்போவதில்லை .

 

எம்மவர் அமைப்புகள் நடத்தும் சிறு சிறு நிகழ்வுகளில் கூட பாரபட்சமும் அரசியலும் இருக்கத்தான் செய்கின்றது அதையும் தாண்டித்தான் ஒரு பொதுநோக்கிற்காக என்ற ரீதியில் வேலை செய்யவேண்டிய தேவையும் இருக்கு .

Link to comment
Share on other sites

ஈழக்கலைஞன் என்ற வகையில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் . எம் உரிமையோடும்எம் சுய மரியாதையோடும் வாழ்வதற்காக நாம் ஏங்கி இந்த பூமிப்பந்திலே நாதியற்றவர்களாக எம் கலை கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை பேணி பாதுகாக்க அன்றாடம் போராடுகின்றோம் ..இந்த சிறுமியின் அபார திறமை .எம் ஈழக்கலை கலை வாழ்வுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது .வாழ்த்துக்கள் .
 
 
என்ன* இங்க நடக்குது .இந்த சிறுமியின் திறமை மட்டுமே பார்க்கப்படவேண்டும் .ஆளாளுக்கு ஒவ்வொரு தலைப்பில எழுதி தொலைக்கிறாங்க .............. இப்படி .......... .....முடியல :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிக்கா ஓரளவு திறமை வைத்துக் கொண்டு போட்டியில் வெற்றி பெற்றதற்கு...ஜெசிக்கா உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.நீங்கள் வெல்வதற்காக எவ்வளவு பணத்தை செலவழித்தார்களோ?

ஸ்ரீஷா,ஹரிப்பிரியாவுக்கு எனது அனுதாபங்கள் உங்களிடம் திறமை இருந்தும்,பண பலம் இல்லாததால் தோத்துப் போனீர்கள்...ஏதோ ஒரு விதத்தில் உங்கள் இசைப் பயணம் தொடரட்டும்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களே உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஸ்ரீஷா,ஹரிப்பிரியாவை விட ஜெசிக்கா நன்றாக பாடினாரா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.