Jump to content

உங்கள் ஜெசிக்கா.............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க முகநூலில்.. ஜெசிக்கா போன்ற சிறுமிகளை அட் பண்ணுறதில்ல. மேலும் அவர்களின் முகநூல்.. நடவடிக்கைகளில் பங்களிப்பதோ.. இல்ல பதிவிடுவதோ இல்லை. விஜய் நிகழ்ச்சிகள் சிலவற்றை தேடற் பொறி இனங்காட்டின்.. யு ரியுப் பார்ப்பது தவிர வேறு பார்ப்பதில்லை.

 

இதில.. சைபர் புளியுங் என்று போனால்.. ஜெசிக்கா தான் பல கேள்விகளுக்குள் சிக்க நேரிடும். அதனால் அவரை எல்லாம் எங்க பக்கத்துக்கு அனுமதிக்கிறதில்ல. :lol::D

 

16 வயசு வரை சின்னப்பிள்ளை சின்னப்பிள்ளையாகவே இருக்கட்டும். அதனை ஏன் பெரிய பிள்ளை ஆக்குவான். பின் சிரமப்படுகுது.. குத்துது குடையுதுன்னு கஸ்டப்படுவான். :)

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறும் காழ்ப்புணர்வுடன் கருத்துக்களை வைப்பதைக் கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும். யாழ் களம் ஆரோக்கியமான விமர்சனங்களையே கள உறுப்பினர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது.

நன்றி

 

 

மதிப்புக்குரிய நியானி அவர்களே,

 

இந்த உரையாடலின் முதலாவது பக்கத்தில் இருந்து எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்துக்களாய் வாசித்து வாருங்கள். உண்மையில் எத்தனை கருத்துக்களில் ஆரோக்கியமான, காழ்ப்புணர்வுடன் இல்லாத விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது? 

 

 

கனடாவில் பிறந்த ஒரு சிறுமி எம் மொழிகற்று அதை அழகாக உச்சரித்து 65-70 பாடல்களை மனப்பாடம் செய்து அத்தனை அழகாகக பாடிய திறமையை பாராட்டாமல்

இந்தளவிற்கு காழ்ப்புணர்வோடு அநாகரிகமாக அந்த சிறுமியையும் அவள் குடும்பத்தையும் எள்ளி நகையாடும் சிலரை நினைத்தால் வெறுப்பாக இருக்கின்றது.

உங்களுக்கு எல்லாம் மனச்சாட்ச்சி இல்லையா? உங்கள் அரசியல் ஆய்வுகளை அரசியலோடும் அதை விளையாடுபவர்களோடும் வைத்துக்கொள்ளுங்கள்...தயவு செய்து இந்த சிறுமியின் திறமையில் வேண்டாம்.

 

அந்த சிறுமி பாடசாலை போகவேண்டும் படிக்கவேண்டும் கிடைத்த பரிசை யாருக்கு கொடுக்கனும் என்பதெல்லாம் அவளதும் அவளது பெற்றோரதும் தனிப்பட்ட முடிவு..இதில் உங்கள் முடிவு தேவையில்லாதது அது பற்றி நீங்கள் முதலைக்கண்ணீர் வடிக்கவும் தேவையில்லை.

 

அந்த சிறுமிக்கு எதிராக எழுதிய கருத்துக்களை வாசித்தபோது முதன் முதலாக யாழில் எதற்காக இணைந்தேன் என்று நினைத்து வேதனைப்பட்டேன்.

இவ்வளவு வக்கிரமாக கருத்தெழுதும் உங்கள் போன்றவர்களுடன் அண்ணா தம்பி என்று உரிமையுடன் கதைத்ததை நினைத்து வெட்கப்பட்டேன்.

 

தயவு செய்து இங்கு அந்த சிறுமியின் திறமையையும், அதன் உயர்ந்த உள்ளத்தையும் எள்ளி நகையாடும் நீங்கள முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள் சமுதாயம் தானாக திருந்தும். உங்களை போன்ற குறுகிய மனம் உடையவர்கள் திருந்தும் மட்டும் எமக்கு விடுதலை கிடைத்தும் ஒரு பலனும் இல்லை!!!!!

 

 

( இத்திரியில் தொடர்ந்தும் பந்தி பந்தியாக எழுதி உங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம். நீஙகள் தலை கீழாக நின்று எப்படி கூப்பாடு போட்டாலும் அந்த சிறுமியின் திறமைக்கும், உயர்ந்த உள்ளத்திற்கு முன்னால் நீங்கள் எல்லாம் .......................)

 

நன்றி

வணக்கம்

 

கிட்டு மாமா காலம் தொடக்கம் டக்கி மாமா காலம்வரை நாங்கள் நாட்டிற்கு இரவு, பகலாக எவ்வளவு செய்கின்றோம், செய்தோம் அக்கா.

 

வலதுகையினால் போய்வருவது இடது கையுக்கு தெரியாமலும், இடது கையினால் போய் வருவது வலது கையுக்கு தெரியாமாலும், எமது புலமைப்பரிசில் காசை பல்கலைக்கழகத்திற்கு டிமிக்கு கொடுத்துவிட்டு வடக்கு, கிழக்கில் வாடும் முன்னாள் போராளிகளிற்கு அனுப்புவது தொடக்கம் தினமும் ஒரு தடவை மட்டும் உணவு உண்டு மிகுதி நேரங்களில் தண்ணீர் மாத்திரம் அருந்தி அதில் மிச்சம் பிடிக்கும் எல்லாக்காசையும் ஶ்ரீ லங்கா சிறையில் வாடும் போராளிகளின் தேவைகளிற்கு பயன்படுத்துகின்றோம். 

 

எமது வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு நாம் தெரு ஓரமாய் வசிக்கின்றோம். அதில் சேமிக்கும் காசை அடுத்தகட்ட ஈழப்போரிற்காய் சேமிக்கின்றோம்.

 

இங்கே பாருங்கள் அக்கா.

 

நீங்கள் ஒரு ஜெசிக்கா பற்றி கவலைப்படுகின்றீர்கள். நாங்கள் ஆயிரம் வியூசிகாக்களை நினைத்து கண்ணீர் வடிக்கின்றோம்.

 

நாட்டிற்கு எவ்வளவோ செய்யும் எங்களை நீங்கள் ஒருவரும் கண்டுகொள்ளாமல் கேவலம் இந்தப்பதினாழு வயது சிறுமியை நீங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினால் எங்களால் அதை தாங்கிக்கொள்ளமுடியுமா? இனி, ஒவ்வொரு வருடமும் இப்படி சூப்பர் சிங்கர் 5, 6, 7, 8, 9, 10 என படை, படையாய் புதியவர்கள் வருவார்கள், பாராட்டு பெறுவார்கள்.

 

ஆனால், எங்கள் நிலமை? இப்படியே விட்டால் எங்களை கண்டுகொள்ளப்போவது யார்?

 

தொடர்ந்து நாங்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகுவோம். அதனால் மனநிலை குன்றி முழு பைத்தியமாகியும் விடுவோம்.

 

நாம் மனநிலை குன்றி பைத்தியமாகிவிட்டால் எங்கள் தாய் நாட்டை காப்பாற்றுவது யார்? தாய் நாட்டை கட்டி எழுப்புவது யார்?

 

சிறிய பாம்பானாலும், பெரிய பொல்லால் அடிக்க வேன்டும்.

 

இந்தச்சிறுமி நாளை பெரிய பிள்ளையாய் வளர்ந்து நாளை சுமந்திரனின் தலமைக்கு பின்னால் போகமாட்டாள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

 

முளையிலேயே கிள்ளினால்தான் எமது இனத்தை நாம் காப்பாற்றமுடியும்.

 

நாங்களும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுகின்றோம். கவிதை, கதை எல்லாம் நன்றாக வரும்.. கதை எழுதுவோம், கதை விடவும் தெரியும். நல்லாய் பாட்டுக்கள் போடுவோம்.

 

எமக்கு ஜெசிக்கா போல் பாட எல்லாம் வராது. ஆனால், சுமாராய் நிலா நிலா வா வா பாடலை இராக, தாளங்களுடன் பாடமுடியும். அதனால் என்ன?

 

எங்களைப்பற்றி பேசுங்கள். எங்களை புகழுங்கள். எமக்கு பச்சை புள்ளிகளை வாரி வழங்குங்கள். நாம் மெதுமெதுவாக அமைதி அடைகின்றோம்.

 

இல்லாவிட்டால், நாங்களும் இருக்கின்றோம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துவதற்கும், எங்களை மற்றவர்கள் திரும்பிப்பார்க்க வைப்பதற்கும் ஜெசிக்கா என்ன ஜெசிக்கா உங்கள் பிள்ளையே நாளை சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடைக்கு வந்தாலும் ஜெசிக்காவிற்கு செய்ததையே செய்வோம் என்பதை தெரிவித்துகொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

அதைக் காட்டிக்கொடுத்து தான் உங்க அசைல வாழ்வை உறுதிப்படுத்திக் கொண்டீங்கன்னு உலகத்துக்கே தெரியும். காட்டிக்கொடுக்க.. எவனாலும் முடியும்.. எலிகளாலும் முடியும். போராடுவது எல்லாராலும் முடியாது. நிச்சயம் எலிகளால் முடியாது. அதுங்க பதுங்கி.. கொள்ளையடிச்சு.. கொறிச்சு தின்று தான் வாழ்ந்து சாகுங்க. :lol::D

 

ஓ இப்ப உலகமும் மொக்கு கூட்டமா?  போற போக்குல உங்கள தவிர புத்திசாலி யாரும் உலகில இருக்க மாட்டாங்க போல இருக்கே.   :lol:

 
சுப்பிரமணிய சாமி உங்கட கூட்டத்தை ட்விட்டரில எலி எலி என்டு டங்குவார கிழிக்கிறார் என்டா நீங்களும் ஏன் சார் உங்கள நீங்களே எலி என்கிறீங்க. நீங்க லண்டனில பதுங்கி இருந்து கொண்டு இந்த வீர வசனம் தேவையா  :lol:  :lol:

எங்கள் எதிர்ப்பை.. நாங்கள்.. சினிமா வியாபார ஊடகமான.. விஜய் ரீவி எம்மவர்களின் திறமைக்கான அளவு கோலாக்கப்படுவதையும்.. சிறுவர் வியாபாரம் பண்டங்கள் ஆக்கப்படுவதையும்.. அதனை திறமை வளர்ப்பு என்ற போர்வையும் முன்னெடுப்பதையுமே கண்டிக்கிறோம்.

 

ஆனால் விஜய் ரீவி தங்கபாலுவுக்கு வெள்ளை அடிக்கும்.. என்ற அரசியலையும் செய்ய தயங்காது என்பது தற்போது நிதர்சனமாகியுள்ளது. இதே விஜய் ரீவி எம்மக்களின் செத்து மடிந்த போதும்.. இதையே தான் செய்து கொண்டிருந்தது.

 

அப்போது புலம்பெயர் மக்களை நோக்கி விஜய் ரீவி வந்த போது இன்று அதன் நிகழ்ச்சிக்கு வக்காளத்து வாங்கும்.. இதே யாழின் உறுப்பினர்கள்.. அன்று தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தார்கள்.

 

இதே யாழில்.. இந்த நிகழ்ச்சியை.. சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்.. என்று வகைப்படுத்தி இட்ட தலைப்பும் இதே யாழில் உள்ளது.

 

முதலில் எமக்கு ஒரு கொள்கை வேண்டும். அதில் தெளிவு வேண்டும். பின் அதில் பிடிப்பு வேண்டும். இது இப்போ யாழில் உள்ளவர்களிடம் அருகி வருகிறது.

 

நாங்கள் அநியாயத்துக்கு உதவும் கொள்கையோடு இல்லை. அது எங்கள் வீட்டுக்கு சீதேவியை கொண்டு வரும் என்பதற்கா...அநியாயத்தை.. நியாயம் என்று காட்டக் கூடாது. அது அபந்தம். அப்படி ஒரு அபந்தத்தை யாழில் இப்ப தாராளமா காண முடிவது.. ஆச்சிரியமில்லை.காரணம்.. பலரின் முகமூடிகள்.. கிழியும் தருணம் இது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். :):icon_idea:

 

ஸப்பாஆ முடியல..இவங்களின்ட முதலை கண்ணீருக்கு ஒரு அளவே இல்லையா
நாட்டில சிறுவர் கையில துவக்கை குடுத்து  கொலை களத்திற்கு அனுப்ப அதை பார்த்து விசிலடித்த கூட்டமெல்லாம் இப்ப ஒரு சிறுவர் பாட்டு நிகழ்ச்சியையே சிறுவர் துஸ்பிரயோகம் என்டுது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட வாதம் எப்பிடியிருக்கு என்றால்.. அவ குட்டைப் பாவாடை போட்டா.. நான் தப்பு பண்ணிட்டேன்.. :o

cyber-bullying பண்ணுகிற நீங்கள்தான் முதல்ல நிறுத்தவேணும்.. மற்றவை எல்லாம் அடுத்த படி.. ஏன்.. நீங்களே முகநூலுக்கு எழுதிப் போடுறது.. :huh:

 

cyber-bullying பற்றி முறைப்பாடு கொடுப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளனவே. உங்களுக்கு திருமணம் ஆகி ஜெசிக்கா போல் ஒரு புதல்வி இருந்தால், அவர் மீது cyber-bullying செய்யப்படும்போது முறைப்பாடு கொடுக்கமாட்டீர்களா? cyber-bullying செய்யப்படுகின்றது என்று நீங்கள் சந்தேகப்பட்டால் இந்த முறைப்பாட்டை நீங்கள் ஏன் செய்யக்கூடாது? சம்மந்தப்பட்டவர்களை விசாரிக்கவேண்டியவர்கள் விசாரிக்கும் வகையில் விசாரிக்கும்போது அது cyber-bullying செய்யும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.

Link to comment
Share on other sites

ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிறுமி ஒருவரின் சாதனையைப் பலர் கொண்டாடினாலும், ஒரு சிலர் கருத்துச் சுதந்திரம் எனும் போர்வையில் காழ்ப்புணர்வுடனும், வன்மத்துடனும் தொடர்ச்சியாகக் கருத்துக்களைப் பதிந்துவருகின்றனர். இச்செயலானது ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமூகத்தைப் பற்றிய எதிர்மறையான தோற்றப்பாட்டை உருவாக்குவதாக கள உறவுகள் சிலர் விசனமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது என்பதால் இத்திரி பூட்டப்படுகின்றது.

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.