Jump to content

ஏலுமெண்டால் கண்டுபிடியுங்கோ பாப்பம்.


Recommended Posts

மன்னிக்கவும் விசுகு அண்ணா 

உங்கள் கேள்வியை தவற விட்டு விட்டேன்.

 

 

இவர் பிறேசில் நாட்டைச் சேர்ந்தவர். 

Link to comment
Share on other sites

  • Replies 353
  • Created
  • Last Reply

இல்லை தமிழினி இவர் விளையாடிய அணி இதுவரை உலகக் கிண்ணத்தை வெல்லவில்லை என்று நினைக்கிறேன்...

Link to comment
Share on other sites

இல்லை நான் தெரிவு செய்த விடை றொனால்டோ அல்ல.

 

 

இன்னொரு உதவிக் குறிப்பு:

 

இவரது இயற் பெயரை விட இவரது  nickname தான் மிகவும் பிரபலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை பேலே, டுங்கா, காபு (Cafu), ராமோஸ் மற்றும் பெலினி ஆகிய காப்டன்களே உலக கிண்ணத்தை பிரேஸிலுக்கு பெற்றுத்தந்துளார்கள். (ஏதோ மற்றவர்களுக்கு என்னாலான உதவி :D)

Link to comment
Share on other sites

இதுவரை பேலே, டுங்கா, காபு (Cafu), ராமோஸ் மற்றும் பெலினி ஆகிய காப்டன்களே உலக கிண்ணத்தை பிரேஸிலுக்கு பெற்றுத்தந்துளார்கள். (ஏதோ மற்றவர்களுக்கு என்னாலான உதவி :D)

 

:D

Ricardo (kaka)

 

இல்லை தமிழினி

 

 

நான் ஏற்கனவே உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தும் பாக்கியம் என்றே குறிப்பிட்டிருந்தேன். இப்போது உதவியை மேலும் இலகுவாக்கி அவர் உலகக்கிண்ணத்தை வென்றெடுத்த தலைவர் என்று  தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

இல்லை தமிழினி

 

 

இன்னொரு உதவி:

 

இவர் அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

 

இங்கே பலரும் கேள்விகள் பதில்களைத் தர முயற்சிப்பதால் தான் உடனடியாகப் பதிலைக் கண்டுபிடிப்பதில் சிக்கலாக இருக்கிறது.

 

நான் பத்துக் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராயிருக்கிறேன். இதன் பின்னர் இந்தக் கேள்விக்கு 4 புள்ளிகள் மட்டுமே வழங்கப்படும்  :(


Carlos Caetano Bledorn Verri   என்ற சரியான விடையைத் தந்த நவீனனுக்கு 4 புள்ளிகள் கிடைக்கின்றன...

Link to comment
Share on other sites

Carlos Caetano Bledorn Verri  (டுங்கா)  என்ற சரியான விடையைத் தந்த நவீனனுக்கு 4 புள்ளிகள் கிடைக்கின்றன...

 

அடுத்த சொல்...

 

ஆங்கிலப் பேச்சிலே கில்லாடி இவர்

Link to comment
Share on other sites

 1993/ 1995 காலங்களில் VfB Stuttgart எனும் ஜெர்மனி கழகத்துக்கும் விளையாடினார் :)


 

 

 


 

ஆங்கிலப் பேச்சிலே கில்லாடி இவர்

 

 

ஒரு நாட்டின் பிரதமராக இருந்தாரா

Link to comment
Share on other sites

இவர் பிரதமராக இருக்கவில்லை

 

இவர் இலங்கையைச் சேர்ந்தவர்

Link to comment
Share on other sites

ஜி ஜி பொன்னம்பலம் .

 

அப்பையா என்று பகிடியாக எழுதவில்லை கொழும்பு ரட்ணம் கிளப்பின் மிக பிரபலவீரர் .

Link to comment
Share on other sites

ஐநா சபையில் ஆங்கிலத்தில் உரையாற்றி வெளிநாட்டுத் தலைவர்களின் குறிப்பாக ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற ஜி.ஜி பொன்னம்பலத்தை சரியாக இனங்கண்ட அர்யுன் அண்ணாவிற்கு 8 புள்ளிகள் கிடைக்கின்றன.

 

ரட்ணம் கழகத்தில் பல தமிழ் வீரர்கள் விளையாடியதை அறிந்திருக்கிறேன். ஆனால் அப்பையா என்ற வீரர் பற்றி நான் கேள்விப்படவில்லை. மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபலமான ஒரு நபர்

 

தம்பி மணி

 

இவ்வாறு ஒரு எழுத்தில் சொல்வதால்..

எந்த பதிலையும் கூறுவது கடினம்

கேள்வியுடன் ஒரு விளக்கத்தையும் தாருங்கள்...

 

உதாரணமாக

இலங்கை அரசியலில் இன்று பிரபலமான நபர்...

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா நான் தரும் சிறு விளக்கத்தை தொடர்ந்து நீங்கள் பத்துக் கெள்விகளைக் கேட்கலாம். ஒரு தடவையில் ஒரு கேள்வி என்ற அடிப்படையில்.

அதன் அடிப்படையில் விடையைக் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும்.

 

முதல் பத்துச் சொற்கள் இந்தஅடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் போட்டி முறையை மாற்றலாம் என்று இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.