Jump to content

இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை:


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுநீர் களித்தல் போல் உங்களுக்கு சிறிதாகத்தெரிகின்ற இந்த விடயமே இராணுவத்தினனோடு எனும் போது மக்களின் நீதிக்கு சாட்சியாக முன்வைக்கப் படுகிறது.

உளவுச் செயலில் உள்ள அவளின் பங்குக்கு.

சாதாரண வழக்குகளினல் கத்தியைக் கையில் வைத்திருந்ததமையின் சாட்சியின் நிரூபணத்தைக்கொண்டே கொலைக்கான உரிமை அவன் கழுத்தில் இறுகுகிறது.

அப்படி என்றால் நீங்கள் கேட்ப்பீர்கfளாக்கும் கத்தி வைத்திருத்தல் குற்றமா?

Link to comment
Share on other sites

  • Replies 189
  • Created
  • Last Reply

கத்தி வைத்திருந்தது அவர் குற்றம் செய்தார் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்று. அந்த ஆதாரத்தை வைத்து அவர் குற்றம் செய்தார் என்ற முடிவுக்கு வர முடியும்.

அதற்காக கத்தி வைந்திருந்தது குற்றம் என்று அறிவிக்க முடியாது.

இன்னும் ஒன்றையும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். நான் எந்த இடத்திலும் குறிப்பிட்ட பெண் அப்பாவி என்று சொல்லவில்லை. ஈபிடிபி ஒட்டுக்குழுவே அவர் தமது ஆள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகு, குறிப்பிட்டவர் தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் மரண தண்டனைக்கான குற்றங்களின் பட்டியலில் "பாலியல் தொடர்பு" என்பதை இணைப்பது எனக்கு உடன்பாடாக இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் எழுதியது

இவ்வாறான சம்பவங்கள் ஈழத்தில் நடப்பதே இல்லை என்று சொல்லி விடாதீர்கள். இவைகளைப் பற்றி நாங்கள் பேசுவதில்லை என்பதாலும், பேச விரும்புவது இல்லை என்றாலும் இவைகள் நடக்கவில்லை என்று அர்த்தம் இல்லை.

இது உலக நாடுகள் முழுவதும் நடைபெறுகின்றது.

தீவிரவாத இஸ்லாமிய நாடுகளில்தான் இவைகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இந்திய சட்டத்தின்படி திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் உறவு கொள்வது விபச்சாரத்திற்குள் அடங்குகிறது. ஆனால் யாரும் அப்படி தண்டிக்கப்படுவதில்லை.

இந்தியா, சிறிலங்கா, தமிழீழம் போன்ற நாடுகள் இதை கண்டும் காணமல் விடுகின்றன. என்னுடைய பார்வையில் இந்த நாடுகள் செய்வது சரியான ஒன்றே.

ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி இணைவதை சட்டரீதியாக தடுக்க முடியாது. தண்டிக்கவும் முடியாது.

_________________இனவிடுதலையும் பகுத்தறிவும் எம் இரு கண்கள்

சட்டம் விரும்பியா கண்டும் காணாமலும் விடுகிறது. அம்பலத்தில் நிகழும் கொலைகளுக்கு கூட சட்டம் தன் இயலாமையை வெட்கம் இல்லாமல் வெளிப்படுத்தும் போது, நெருக்கமாய்த் திரிகின்ற உறவுகளுக்கே good bye சொல்லுகின்ற அந்த இரகசிய சமாச்சாரம் எப்படி சட்டத்தின் கண்களுக்கு வரும்? வந்தாலும் இருவரில் ஒருவராவது உடன்படுவார்களா? சட்டத்தால் அனைத்தையும் சாதித்துவிட முடியுமா? ஆசிரியரின் திறமை மட்டும் போதுமா மாணவர்களை கல்வியில் செளிக்கவைக்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் எழுதியது

இவ்வாறான சம்பவங்கள் ஈழத்தில் நடப்பதே இல்லை என்று சொல்லி விடாதீர்கள். இவைகளைப் பற்றி நாங்கள் பேசுவதில்லை என்பதாலும், பேச விரும்புவது இல்லை என்றாலும் இவைகள் நடக்கவில்லை என்று அர்த்தம் இல்லை.

இது உலக நாடுகள் முழுவதும் நடைபெறுகின்றது.

தீவிரவாத இஸ்லாமிய நாடுகளில்தான் இவைகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இந்திய சட்டத்தின்படி திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் உறவு கொள்வது விபச்சாரத்திற்குள் அடங்குகிறது. ஆனால் யாரும் அப்படி தண்டிக்கப்படுவதில்லை.

இந்தியா, சிறிலங்கா, தமிழீழம் போன்ற நாடுகள் இதை கண்டும் காணமல் விடுகின்றன. என்னுடைய பார்வையில் இந்த நாடுகள் செய்வது சரியான ஒன்றே.

ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி இணைவதை சட்டரீதியாக தடுக்க முடியாது. தண்டிக்கவும் முடியாது.

_________________இனவிடுதலையும் பகுத்தறிவும் எம் இரு கண்கள்

சட்டம் விரும்பியா கண்டும் காணாமலும் விடுகிறது.

அம்பலத்தில் நிகழும் கொலைகளுக்கு கூட சட்டம் தன் இயலாமையை வெட்கம் இல்லாமல் வெளிப்படுத்தும் போது,

நெருக்கமாய்த் திரிகின்ற உறவுகளுக்கே good bye சொல்லுகின்ற அந்த இரகசிய சமாச்சாரம், எப்படி சட்டத்தின் கண்களுக்கு வருமா?

வந்தாலும் இருவரில் ஒருவராவது உடன்படுவார்களா? சட்டத்தால் அனைத்தையும் சாதித்துவிட முடியுமா? ஆசிரியரின் திறமை மட்டும் போதுமா மாணவர்களை கல்வியில் செளிக்கவைக்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கத்தி வைத்திருந்தது அவர் குற்றம் செய்தார் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்று.

அதுபோலத்தான் அவள் உளவுச் செயலில் உள்ள அவளின் பங்கை அது நிரூபிக்கின்றதால் அதை பட்டியலிடுகிறார்கள்.

குற்றத்தை அவளின் தலையில் சுமப்பிக்கின்ற சாட்சிகளில் ஒன்று.

அது அவளின் பருவத்தின் காச்சல் தான் ஒரேகாரணம் எனவாதிட்டால். போர்க்காலச்சட்டம் சாதாரண காலச்சட்டம் போல் அதிக கருணை காட்டாது என்பேன்.

தவிர காச்சல் ஒன்றும் கேட்க்காதே அப்புகாமிதான் வேண்டும் என்று.

Link to comment
Share on other sites

தேவன் சொல்வது போன்று "பாலியல் தொடர்பு" குற்றத்திற்கான ஆதாரமாக காட்டப்படுகின்ற பொழுது அதில் தவறு ஒன்றும் இருக்கப் போவதில்லை.

ஆனால் "பாலியல் தொடர்பை" ஆதாரம் என்பதையும் தாண்டி "குற்றம்" என்ற வகையிலேயே எமது சமூகம் நோக்குகிறது.

அதை வலுப்படுத்துகின்ற வேலையை ஊடகங்கள் செய்கின்றன.

"இயற்கையின் விதிப்படி" நடக்கின்ற ஒரு விடயத்தை மரண தண்டனைக்குரிய குற்றங்கள் பற்றிய பட்டியலில் இணைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அது குற்றம் அல்ல. ஒரு சந்தர்ப்ப சாட்சியம்.

Link to comment
Share on other sites

விபச்சாரம் என்பது சிங்கள இராணுவத்தோடு மட்டுமல்லாமல், தமிழர்களுக்கும் நடந்தாலும் அது தண்டிக்கப்படக் கூடியதே!

்.

அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட அவ் அப்பாவிப் பெண்ணின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனியன் (பிடித்தது) எழுதியது;

அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட அவ் அப்பாவிப் பெண்ணின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

_________________

வெளிநாட்டில் வெள்ளைக்காரனுக்கு குண்டி கழுவும் ஈழத்தமிழரில் ஒருவன்.

உங்களோடு கூடவே வந்த அந்த தகுதி அந்தப்பிழைப்பு ஒன்றுக்குத்தான் பொருத்தமானதா?

Link to comment
Share on other sites

சனியன் (பிடித்தது) எழுதியது;

அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட அவ் அப்பாவிப் பெண்ணின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

_________________

வெளிநாட்டில் வெள்ளைக்காரனுக்கு குண்டி கழுவும் ஈழத்தமிழரில் ஒருவன்.

உங்களோடு கூடவே வந்த அந்த தகுதி அந்தப்பிழைப்பு ஒன்றுக்குத்தான் பொருத்தமானதா?

ம் . . .

Link to comment
Share on other sites

வெளிநாட்டில் வெள்ளைக்காரனுக்கு குண்டி கழுவும் ஈழத்தமிழரில் ஒருவன்.

வெள்ளைகாரன் எப்ப கழுவிஇருக்கிறான் அதாலை கழுவிறது எண்டிறதை துடைத்துவிடும் ...என்று மாற்றினால் மிக மிக நன்று :P :P

Link to comment
Share on other sites

என்கருத்துகளுக்கு உடனுக்குடன் தனது பதில்களை தந்த நெடுக்கால்போவானுக்கு மிக்க நன்றி.

உங்கள் கருத்துக்கள் நான் பதில் தேடிக் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு விடையளித்துள்ள போதும் சில புதிய கேள்விகளையும் தொடுத்து நிற்கின்றது.

நீங்கள் பெரும்பாலும் வன்னிப்பெருநிலப்பரப்பு(இராண

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்போது கூட வன்னியில் நின்றிருந்த யாழ் மீனவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் மீண்டும் யாழ் வந்துள்ளனர்.

அவர்கள் சண்டையின் இடையில் சிக்கி வன்னியில் தஞ்சமடைந்தவர்கள். அவர்களின் குடும்பங்கள் யாழிலும் அவர்கள் வன்னியிலும் என்று தங்க நேரிட்டதால் தங்கள் குடும்பங்களோடு சேரும் நோக்கில் யாழ் குடாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ் குடாநாடு பாதுகாப்பென்று அவர்கள் போகவில்லை. :idea:

Link to comment
Share on other sites

குற்றங்கள் பட்டியல் இடப்படுவது மரபு.

ஆனால் இங்கே குற்றங்களின் பட்டியலில் (உளவு பார்த்தல், காட்டிக் கொடுத்தல்..) குற்றமற்ற ஒன்றும் (பாலியல் தொடர்பு) இணைக்கப்படுவதுதான் எனக்கு சரியாக படவில்லை..

இதில் நீங்கள் ஏன் இராணுவத்துடன் (அதிகாரியாகத்தான் இருக்கவேணும்) உறவு வைத்திருந்தார் என்பதை குற்றமாக காணமுடியாதா...??? ஒருவர் இணங்கிப்போனால் அது பாலியல் தொடர்பு... அதுவே இணங்காதவிடத்து பாலியல் பலாத்காரம்... ஒரு தர்சினியையும், ஒரு கிருசாந்தியையும், அல்லது சாரதாம்பாளையும்தான் உங்களுக்கு (நான் உட்பட) தெரியும் .. இனும் துன்பத்துக்கு உள்ளாகி உயிர்போன, உயிரோடு இருக்கின்ற உறவுகள் எத்தனையோ...! அத்தனைக்கும் காரணமாக இருக்கிறது ஒரு சிலபெண்களின் விட்டுக்கொடுப்புத்தான். அதனால்த்தான் பலர் விட்டுக்கொடுக்கபடாததால் பலாத்காரம் செய்கின்றான்...!

உதாரணத்துக்கு ஒண்று சொல்கிண்றேன்... ஒரு பெண்.! இராணுவ அதிகாரி ஒருத்தனுடன் ஒரு இரவை களிக்கிறார். அதை அவரால் இருகசியமாக வைக்க முடியாது... காரணம் சுற்றுக்காவல் இராணுவ வீரர்களுக்கு தெரியாமல் செய்ய முடியாது... இதுவே அந்த வீரர்களுக்கு ஒரு தவறான உதாரணத்தை கொடுக்கும்... கையில் ஆயுதம் இருக்கும் துணிவு ஒருபுறம்... மனைவிமாரை பிரிந்து வாழ்தல் ஒருபுறம் எண்று அந்த இராணுவத்தினன் (சிப்பாய்)அருகில் இருக்கும் பெண்கள்வீடுகளுக்கு வேலிபாயமாட்டான் என்பதுக்கு உத்தரவாதம் கிடையாது மட்டும் அல்ல அதுதான் பலகாலமாக நடைபெற்றும் வருகின்றது...!

இங்கை இராணுவத்தினனை திருமணம் செய்தவர்கள் ஊரில் இல்லாமல் இல்லை... அல்லது ஊரில் இருக்கும் பொதுமக்களுள் தவறு செய்யாமல் பெண்கள் இல்லாமல் இல்லை... ஆனால் அவர்கள் எல்லாருக்கும் தண்டனை வளங்கப்படுவதும் இல்லை....!

பணக்கஸ்ரத்தில் காட்டிக்கொடுத்து இருந்தாலும் மன்னித்து விடலாம்... அப்படி மன்னிக்கபட்டவர்கள் இல்லாமல் இல்லை...! ஆனால் சாதாரண மக்களுக்கு துன்பம் தரும் ஒரு தொடர்பு தண்டனைக்கு உரியது...!

Link to comment
Share on other sites

தமிழீழச் சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா?

பாலியல் வல்லுறவிற்கு மரண தண்டனை வரை வழங்கப்படும் என்கிறது.

இன்னும் ஒன்றையும் சொல்கிறது.

14 வயதிற்கு உட்பட்ட ஒருவருடன் பலியல் உறவு வைத்துக்கொள்வது "வல்லுறவாக" கருதப்படும் என்கிறது.

திருமணமான ஒருவர் இன்னொருவருடன் உறவு வைத்துக்கொள்ளும் பொழுது அவருடைய கணவனோ, மனைவியோ வழக்குப் போடலாம் என்றும் அப்பொழுது குறைந்தபட்ச தண்டனையாக அபராதமும் அதிக பட்ச தண்டனையாக 2 வருட கடும் காவல் தண்டனையும் வழங்கப்படும் என்கிறது.

மற்றையபடி திருமணமாகத இருவர் உறவு வைத்துக் கொள்வதை தமிழீழ சட்டம் ஒரு குற்றமாக கருதுவதாக நான் அறியவில்லை. (மற்றவர்கள் அறிந்திருந்தால் சொல்லுங்கள்)

திருமணமானவர் விடயத்தில் கூட கணவனோ, மனைவியோ வழக்குப் போட்டால்தான் அது செல்லுபடியாகும்.

நிலமை இப்படி இருக்க, எப்படி ஒரு பெண்ணினுடைய "பாலியல் தொடர்பை" ஒரு குற்றமாக அறிவிக்க முடியும்?

அடிப்படையில் - ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் - ஒன்றை... வேறுபாடு!

பாலியல் தொடர்பு என்பது வேறு!

பாலியல் தொழிலென்பது வேறு!!

பாலியல் தொடர்புகளுக்கு - கடுமையான தண்டனைகள்

கிடையாது- உலகில் எங்கையுமே!

மத அடிப்படையை - மட்டுமே வாழ்வியலா -கொண்டியங்கும் - ஒரு சில பிராந்தியம் தவிர்த்து!

ஆண் ஆதிக்கதுக்கு - முண்டு கொடுப்பவை!

சட்டரீதியாக - யாரும் நியாயம் கேட்கும்வரை - அவை கண்டு கொள்ளப்படுவதில்லை!

நீங்கள் எதிர்பார்க்கும் நியாயத்துக்கு - இங்கே விடை கிடைத்து விடுகிறது!

ஆனால்- ஒரு கலாச்சார கட்டமைப்புக்குள்- வாழ்ந்து பழகிய சமூகத்துக்கு - பாலியல் தொழில் - சமூகத்தின் - கட்டமைப்பயே - புதைப்பதாகாதா?

பணக்கார நாடுகளில் - இலகுவாகவே அரங்கேறும் - பல விடயங்கள்...

வறுமையில் - உழலும் கிழக்காசிய - இனங்கள் - மத்தியில் - நினைத்தவுடன் சாத்தியப்படுவதில்லையே- அது ஏன்?

மேலே - நான் சொன்னது-காரணம்!

நீண்ட விவாதம் நடக்கும் இடத்தில் ஒரு கேள்வி!

பாலியல் தொடர்பில் - எம் இரத்த உறவுகள் - தடம் மாறி போனால்- இலகுவாக அவர்களுடனான தொடர்பை துண்டிப்பதை - மேற்கொள்ளும் சமூகம்...........

அதையே - தொழிலாய் கொண்டால்...???

ஒன்று அவர்களை அழிக்க முயல்வார்கள்...

அல்லது - குடும்பத்தோடு செத்துப்போகலாம் - என்று சொல்வார்கள்!

அதனோடு + உளவும் சேர்ந்தால்?

தன்னோட தொழிலை -ஊரையும் அழிக்க பாவிப்பது???

நாங்கள் போகவேண்டிய - தூரம் - நிறைய என்று தெரிந்தாலும் - கண்ணை மூடிக்கொண்டே போகிறோம்!

சோகம்!! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.புத்தூரில் முன்னாள் ஈ பி டி பி பணியாளர் சுட்டுக்கொலை.

நேற்று சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் அச்சுவேலி புத்தூர் வீதியால் துவிச்சக்கர வண்டியில் பிரயாணம் செய்த யுவதி ஒருவர் இனம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

Link to comment
Share on other sites

யாழ்.புத்தூரில் முன்னாள் ஈ பி டி பி பணியாளர் சுட்டுக்கொலை.

நேற்று சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் அச்சுவேலி புத்தூர் வீதியால் துவிச்சக்கர வண்டியில் பிரயாணம் செய்த யுவதி ஒருவர் இனம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த கொலைக்கு யாரும் உரிமை கோரவில்லை. ஆனால் கொலை செய்யப்பட்டவர் முன்னாள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பணியாளர். இந்த ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி பெயரில் மட்டும் தான் ஜனநாயகத்தைத் தரித்திருக்கிறது மற்றும் படி ஆயுதங்களுடன் அடாவடி அராஜக சனநாய் அகம் நடத்தும் கட்சி.

இவருடைய கொலைக்கு அரசியல் காரணங்கள் தான் இருக்க முடியும். கொலையை ஈபிடிபியே செய்திருக்கலாம். அது வேறு விடயம். இப்பெண்ணின் கொலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்பதைத் தான் சுட்டிக்காட்ட விளைந்தோம்.

இங்கு ஒரு தவறான பார்வை வைக்கப்பட்டது. பெண்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால்.. அது ஈபிடிபி வழங்கி இருக்கலாம் அல்லது இராணுவம் வழங்கி இருக்கலாம் அல்லது எல்லாளன் படை வழங்கி இருக்கலாம்.. அதற்கு எப்போதும் பாலியல் தொடர்புகள் தான் பெரிதும் முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டு என்று. ஆனால் அது இதில் அவ்வாறில்லை என்பதே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்போ இந்தப் பெண்ணின் கொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உங்களின் குரல்கள் எந்த வகையில் அமையப் போகிறது. கொலையாளிகளே அடையாளம் காணப்படாத போது எவரைக் குற்றம்சாட்டப் போகிறீர்கள். அந்த வகையில் எல்லாளன் படை செய்த மரண தண்டனையிலின்றும் இது பல வழிகளில் வேறுபடுகிறது என்பது புலனாக வேண்டும். :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பின் குசும்பு

மீண்டும் ஒரு பெண் சுட்டுக் கொலை. இங்கு சொல்லப்பட்ட காரணங்கள் வேறு. எனவே எப்போதும் பாலியல் தொடர்பு பெண்கள் மீதான மரணதண்டனைக்கு காரணமாக்கப்படுகிறது என்பது தவறு, தவறான பாலியல் தொடர்புகளே தண்டனைக்குரிய குற்றங்களாகின்றன.

என்ன காரணம் சொல்லப்பட்டுள்ளது என்பதை எனக்கு ஒரு முறை சொல்வீர்களா?? நானும் தேடிப்பார்த்து களைத்து விட்டேன்.

தயவு செய்து எனி அவரவர் கற்பனையில் பலதை எழுதுவார்கள் என்று மட்டும் பதிலெழுதி விடவேண்டாம்.

அப்பு குசும்பு!

உங்கட துரோகப் பணி; காரண, காரியம் எல்லாம் பார்த்துதான் பிழைப்பு நடத்துதோ இங்கு?

வந்துடாருங்கோ துரோக விசுவாசத்தை வாந்திஎடுக்க!

Link to comment
Share on other sites

குறித்த கொலைக்கு யாரும் உரிமை கோரவில்லை. ஆனால் கொலை செய்யப்பட்டவர் முன்னாள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பணியாளர். இந்த ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி பெயரில் மட்டும் தான் ஜனநாயகத்தைத் தரித்திருக்கிறது மற்றும் படி ஆயுதங்களுடன் அடாவடி அராஜக சனநாய் அகம் நடத்தும் கட்சி.

இவருடைய கொலைக்கு அரசியல் காரணங்கள் தான் இருக்க முடியும். கொலையை ஈபிடிபியே செய்திருக்கலாம். அது வேறு விடயம். இப்பெண்ணின் கொலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்பதைத் தான் சுட்டிக்காட்ட விளைந்தோம்.

இங்கு ஒரு தவறான பார்வை வைக்கப்பட்டது. பெண்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால்.. அது ஈபிடிபி வழங்கி இருக்கலாம் அல்லது இராணுவம் வழங்கி இருக்கலாம் அல்லது எல்லாளன் படை வழங்கி இருக்கலாம்.. அதற்கு எப்போதும் பாலியல் தொடர்புகள் தான் பெரிதும் முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டு என்று. ஆனால் அது இதில் அவ்வாறில்லை என்பதே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்போ இந்தப் பெண்ணின் கொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உங்களின் குரல்கள் எந்த வகையில் அமையப் போகிறது. கொலையாளிகளே அடையாளம் காணப்படாத போது எவரைக் குற்றம்சாட்டப் போகிறீர்கள். அந்த வகையில் எல்லாளன் படை செய்த மரண தண்டனையிலின்றும் இது பல வழிகளில் வேறுபடுகிறது என்பது புலனாக வேண்டும்.

:idea:

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எந்தவித குற்றச்சாட்டோ அல்லது கொலை உரிமை கோரலோ இல்லாமல் இது அப்படியிருக்கலாம் அல்லது இப்படியிருக்கலாமென்று உங்கள் ஊகங்களின் அடிப்படையில் கருத்தைச் சொல்வது நல்ல வேடிக்கை தான்.

இறந்தது யாரோ ஒரு பெண் என்பதற்காக தயவுசெய்து மனம் போனபடி கருத்தெழுதாதீர்கள்.

எமது பிறப்பையோ அல்லது இறப்பையோ எம்மால் தீர்மானிக்க முடியாத போது இன்னொருவரின் இறப்பைத் தீர்மானிப்பதற்கு யாருக்கு உரிமையுண்டு.

இன்று அடுத்தவருக்குத் தானே என்று கூத்தடித்துவிட்டு பின்பு அதே பாதிப்பு வேறு எவராலும் உங்கள் குடும்பத்திலும் ஏற்படும்போது தலையிலடிப்பது கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எந்தவித குற்றச்சாட்டோ அல்லது கொலை உரிமை கோரலோ இல்லாமல் இது அப்படியிருக்கலாம் அல்லது இப்படியிருக்கலாமென்று உங்கள் ஊகங்களின் அடிப்படையில் கருத்தைச் சொல்வது நல்ல வேடிக்கை தான்.

இறந்தது யாரோ ஒரு பெண் என்பதற்காக தயவுசெய்து மனம் போனபடி கருத்தெழுதாதீர்கள்.

எமது பிறப்பையோ அல்லது இறப்பையோ எம்மால் தீர்மானிக்க முடியாத போது இன்னொருவரின் இறப்பைத் தீர்மானிப்பதற்கு யாருக்கு உரிமையுண்டு.

இன்று அடுத்தவருக்குத் தானே என்று கூத்தடித்துவிட்டு பின்பு அதே பாதிப்பு வேறு எவராலும் உங்கள் குடும்பத்திலும் ஏற்படும்போது தலையிலடிப்பது கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் தான்.

உங்கள் கருத்தும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. நன்றி.

Link to comment
Share on other sites

வெள்ளைகாரன் எப்ப கழுவிஇருக்கிறான் அதாலை கழுவிறது எண்டிறதை துடைத்துவிடும் ...என்று மாற்றினால் மிக மிக நன்று :P :P

என்ன நக்கலா சாத்திரி :lol::lol:

Link to comment
Share on other sites

வர்ணன் எழுதியது போன்று "பாலியல் தொழில்" வேறு, "பாலியல் தொடர்பு" வேறு என்பது சரி.

பெண் உளவாளிகள் தண்டிக்கப்படுகின்ற பொழுது "பாலியல் தொடர்பு" என்றுதான் பெரும்பாலும் கூறப்படுகிறது. அதனாற்தான் அது குற்றமா என்று கேட்டேன்.

மீண்டும் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளது பற்றி நெடுக்காலபோவான் சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால் அக் கொலைக்கு யாரும் உரிமை கோரவில்லை. காரணமும் சொல்லவில்லை. உரிமை கோரி காரணமும் சொன்ன பிறகுதான் அது குறித்து சொல்ல முடியும்.

முன்னாள் உறுப்பினர் என்பதால் ஈபிடிபியில் இருந்து விலகியவராக இருப்பார். அதனால் ஈபிடிபியே கொலை செய்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.