Jump to content

“Key Logger” என்ற ஆபத்து பற்றித் தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ணையத்தில் தகவல்களைத் திருட பல வழிகளில் ஒன்று தான் இந்த Key logger (Keystroke logging). உண்மையில் இந்த மென்பொருள் திருடுவதற்காக உருவாக்கப்படவில்லை. முதலில் இந்த மென்பொருளின் பயன் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். Image Credit – Mashable.com

தங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் போது எதிர்காலப் பயன்பாடு மற்றும் சாட்சிக்காக தங்கள் இணையத் தகவல் பரிமாற்றங்களை பதிவு செய்து வைத்துக் கொள்ள உதவும் மென்பொருள் தான் இது. இந்த மென்பொருளை நிறுவிவிட்டால், உங்கள் கணினியில் என்ன தட்டச்சு [Type] செய்தாலும் பதிவாகிக் கொண்டு இருக்கும், உங்கள் கடவுச்சொல் உட்பட. இதைப் பெரும்பாலும் வங்கி சார்ந்த நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். எங்கள் நிறுவனத்தில் இதைப் பயன்படுத்திய அனுபவம் எனக்கு உண்டு.

இதை நீங்கள் அறியாமல் உங்கள் கணினியிலோ அல்லது பிரௌசிங் சென்டரிலோ நிறுவி விட்டால், நீங்கள் என்னென்ன தட்டச்சு செய்கிறீர்களோ அத்தனையையும் ஒரு எழுத்து விடாமல் பதிவு செய்து விடும். உங்கள் மின்னஞ்சல் கணக்கின் பயனர் கணக்கு [user Account] கடவுச்சொல்லை [Password] இதன் மூலம் எளிதாகத் திருட முடியும். இந்த மென்பொருள் இருப்பதையும் உங்களால் அறிய முடியாது.

Keylogger-hardware-PS2-example-connectedஇதன் உண்மையான பயன்பாடு நல்லதுக்கு தான் என்றாலும், அதிகம் பயன்படுத்தப்படுவது என்னவோ திருடுவதற்குத் தான். இந்த Key logger மென்பொருளாக மட்டுமல்ல, ஹார்ட்வேர் ஆகவும் இருக்கிறது அதாவது, Keyboard இணைக்கும் இடத்தில் ஒரு கனெக்டர் போல ஒரு Key logger சாதனத்தை இணைத்து விட்டால் போதும், மென்பொருள் செய்யும் அனைத்து வேலையையும் இதுவும் செய்து விடும். எனவே தான், அறிமுகம் இல்லாத இடத்தில் முக்கியமான தகவல்களை பரிமாற்றம் செய்யக் கூடாது. Image credit – Wikipedia.org

இதில் என்ன பெரிய ஆபத்து என்றால், உங்கள் தகவல்கள் திருடப்படுவது மட்டுமல்லாமல் நீங்கள் யார்? எப்படிப் பட்டவர்? எதை ரசிக்கிறீர்கள்? எதை வெறுக்கறீர்கள்? என்னென்ன தவறு செய்கிறீர்கள்? என்று ஒன்று விடாமல் எளிமையாக அறிந்து விடலாம். உதாரணத்திற்கு ஒருவர் வெளி உலகத்திற்கு நல்லவராக இருக்கலாம் ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் வேறு மாதிரி இருக்கலாம் அதுவும் இணையத்தில் என்னென்ன செய்கிறார் யாரைத் ரகசியமாகத் திட்டுகிறார்? யாரிடம் சாட் செய்து கொண்டு இருக்கிறார்? என்ன பேசுகிறார்? யாரிடம் கடலை போடுகிறார்? யார் யாருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்? என்று ஒன்றுவிடாமல் தெரிந்து விடும். சுருக்கமாக உங்கள் அந்தரங்கத்தைப் புட்டு புட்டு வைத்து விடும்.

நீங்கள் என்னென்ன ஆபாச தளங்கள் சென்றீர்கள்? எதை அதிகம் ரசிக்கிறீர்கள்? என்பது வரை தெரிந்தால், உங்களை எந்த விதத்தில் அணுகினால் மடக்கலாம் என்பதை வரை தெரிந்து விடும். இதே பெண்ணாக இருந்தால்..! இதைப் படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் (ஆணோ / பெண்ணோ) ஆபாசத் தளங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கலாம். இது பெரும்பான்மையானவர்களுக்கு இயல்பான செயல் என்றாலும், இது உங்கள் அந்தரங்கம். உங்கள் செயலால் யாருக்கும் பாதிப்பில்லை மற்றும் இவை வெளியே தெரியாத வரை பிரச்சனை இல்லை, தெரிந்து விட்டால் அவர்களும் அதே செய்து கொண்டு இருந்தாலும், சந்தோசமாக அனைவருக்கும் இது குறித்துப் பரப்புவார்கள்.

தற்போது கூறுங்கள் இது மிக மிக ஆபத்தான தொழில்நுட்பம் தானே! icon_smile.gif

இது போல நேரங்களில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை எனக்குத் தெரிந்த அளவில் கூறுகிறேன். முடிந்த வரை எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.

1. உதாரணத்திற்கு உங்கள் கடவுச்சொல் 12345 என்று இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யும் போது முதலில் 35 என்று தட்டச்சு செய்து பின் மவுஸ் கர்சரில் 3 முன்பு க்ளிக் செய்து 12 என்று தட்டச்சு செய்து பின் 3 பிறகு மவுஸ் ல் க்ளிக் செய்து 4 என்று தட்டச்சு செய்ய வேண்டும். நான் உதாரணத்திற்கு இந்த முறையில் கூறினேன் நீங்கள் எழுத்துக்களை மாற்றியும் இதைச் செய்யலாம்.

உங்கள் கடவுச்சொல் 12345 ஆனால், இந்த முறையில் 35124 என்று தட்டச்சு செய்யப்பட்டதாக Key Logger ல் காட்டும். புரியும் படி கூறுவதென்றால், key logger மென்பொருளை ஏமாற்றும் வழி இது. Key Logger வேலை தட்டச்சு செய்வதை பதிவு செய்வது. இதை இந்த வழியின் மூலம் ஏமாற்ற முடியும். எனவே, இதில் இருந்து கடவுச்சொல் கிடைத்ததாக நினைத்து எவர் முயற்சித்தாலும் அவர்களால் நுழைய முடியாது. ஏனென்றால், திருடுபவர் 12345 என்பதற்குப் பதிலாக 35124 என்பதை முயற்சித்துக் குழம்பிக் கொண்டு இருப்பார்.

2. இதெல்லாம் ரொம்ப சிரமங்க.. வேற ஏதாவது எளிமையான வழி சொல்லுங்க என்றால், உங்கள் மின்னஞ்சல் / ஃபேஸ்புக் கணக்கிற்கு இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறையை செயல்படுத்துவது தான். இதன் மூலம் உங்கள் கடவுச்சொல் தெரிந்தாலும் குறுந்தகவலில் [sMS] வரும் security code இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

Read: ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!

Read: ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி

3. Virtual keyboard மூலமாக உங்கள் கடவுச்சொல்லை பயன்படுத்தலாம் ஆனால், இந்த வசதி வங்கிக் கணக்குகளுக்கு மட்டும் தான் இருக்கும், நம்முடைய மின்னஞ்சல் கணக்குகளுக்கு கொஞ்சம் கூடுதல் வேலைகள் செய்ய வேண்டியது வரும் ஆனால், தற்போது இதையும் ஹேக் செய்ய வசதி வந்து விட்டது.

4. மேற்கூறிய மூன்று முறைகளும் கடவுச்சொல்லை எப்படி பாதுகாப்பது? என்பது ஆனால், இந்த மென்பொருள் பிரச்னைக்கு என்ன செய்வது என்றால்..

நீங்கள் அவசியம் Antivirus நிறுவி இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் மைக்ரோசாஃப்ட் இயங்கு தளத்திற்கு (OS) இலவசமாகவே மைக்ரோசாஃப்ட் Antivirus தருகிறது, இதை நிறுவலாம். Microsoft Security Essentials

அறிமுகம் இல்லாதவர்களிடம் உங்கள் கணினியைப் பயன்படுத்தக் கொடுக்கக் கூடாது.

கண்டபடி Third Party மென்பொருள்களை நிறுவக் கூடாது. இது பற்றி விரிவாக இன்னொரு நாள் எழுதுகிறேன். நம்முடைய கணினி கெட்டுப் போக முழுக்காரணமே இது போன்ற மென்பொருள்கள் தான்.

http://www.giriblog.com/2015/01/do-you-know-key-logger.html

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.