Jump to content

நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் - வரலாறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தற்சயலாக லா சப்பலில் கிடைத்த புத்தகத்தில்

இந்த வரலாற்றைப்பார்த்தேன்....

அந்த வரலாற்றின் முக்கியத்துவம் கருதி

உங்களுக்கு தருகின்றேன்....

 

 

img224_Page_1.jpgimg224_Page_2.jpgimg224_Page_3.jpgimg224_Page_4.jpgimg224_Page_5.jpgimg224_Page_6.jpgimg224_Page_7.jpgimg224_Page_8.jpgimg224_Page_9.jpg

நன்றி - அகரதீபம்...

Link to comment
Share on other sites

அது நான் கடவுளை நம்பி கும்பிடும் காலம்

 

கனவில் அடிக்கடி அழகான ஒரு நாகப் பாம்பு ஒன்று வந்து போகும். உடம்பில் ஏறும், விளையாடும், முறைத்துப் பார்க்கும், மிகவும் பழக்கப்பட்ட ஒரு உறவைப் போல தோன்றும்

கனவு முடிந்த பின்பும் அதன் தாய்மை நிறைந்த நெருக்கம் மனசுக்குள் கனக்க நேரம் நிற்கும்.

 

இக் கனவு அடிக்கடி வர எனக்கு நயினை நாக பூசனி அம்மன் கோயிலுக்கு போக வேண்டும் என்ற ஆசை அதிகரிக்க தொடங்கியது. சிறு வயதில் ஒரு முறை சென்று இருக்கின்றேன். அதன் காட்சிகள் அரை குறையாக மனசுக்குள் வந்து போகும்.

 

வளர்ந்த பின் 2002 இல் தான் நயினாதீவுக்கு போகும் முதல் சந்தர்ப்பம் கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினா தீவு கோவிலுக்கு போய் அங்கு தீர்த்தம் குடிக்கும் வரைக்கும் சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் இருந்து இருக்கின்றேன். அன்றில் இருந்து 2005 வரைக்கும் 3 தடவை போயிருக்கின்றேன்.

 

கோவில்களில் ஒரு போதும் அருச்சனையோ அல்லது விசேட பூசையோ செய்வதில்லை. பூசை நேரத்தில் கோவிலுக்கு போகும் பழக்கமும் எனக்கு இருந்ததில்லை. ஆனால் நயினை அம்மனின் பூசையை மட்டும் பார்க்க ஆசையாக இருக்கும். அங்கு வாங்கிய கோவிலின் படத்துடனான அம்மன் படம் ஒன்று மட்டும் தான் நான் வீட்டில் வைத்து வணங்கும் கடவுள் படமாகவும் கன காலம் இருந்தது.

 

கோவிலின் அமைவிடம், கடல் காற்று, கடற் கரையில் சங்கு விற்கும் ஆச்சி, பக்கத்து கடையில் இருக்கும் சுவையான வாய்ப்பன் பணியாரம் என்று எல்லாமே மனசுக்குள் மிக நெருக்கமாக இருந்தது.   அதுவும் அங்கு தரும் அன்னதானத்தின் சுவையை விட சுவையான சோறு கறி வேறு எங்கும் சாப்பிடவில்லை. சோறும் சாம்பாரும் தான் தருவார்கள்...ஆனால் தேவாமிர்தம்!

 

 2005 இன் மனசுக்குள் ஏற்பட்ட சடுதியான மாற்றங்கள், 2009 முள்ளிவாய்க்கால் என்று பல நிகழ்வுகள் கடவுள் மறுப்பினை நன்கு விதைத்து விட்டது. இப்ப நினைக்கும் போது அன்று இப்படியெல்லாம் இருந்து இருக்கின்றேனோ என்று நினைக்க சிரிப்பு வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியையும்  பேச வைத்த அம்மனுக்கு நன்றி... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணையா அடுப்பும், அனுதினமும் அன்னதானமும் கொண்ட அன்னபூரணி....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு சாதாரண தர பரீட்சைக்கான காலம்! 

 

அநேகமான ஆசிரியர்கள், பரீட்சை மேற்பார்வையாளர்களாக, வேறு வேறு இடங்களுக்கு நியமிக்கப்படுவதுண்டு!

 

எனது பெற்றோரும் அவ்வாறு ' நயினாதீவுக்கு' சென்றிருந்தனர்!

 

அங்கு சென்ற சிறிது காலத்தில் தான், தண்ணீரால் இவ்வளவு  ' உப்பாக' முடியும் என்று அறிந்து கொள்ள முடிந்தது! :o

 

செவ்விளனியிலும் 'மூத்திரக்குழவிக்குக்' கூடு கட்டத் தெரியும் என்று புரிந்து கொள்ள முடிந்தது!

 

பூவரசம் பூக்களாலும் எமது தெய்வங்களுக்கு ' அர்ச்சனை' செய்ய முடியும் என்றும் தெரியவந்தது! நாக விகாரைக்குள் இருந்த பிள்ளையாரையும், முருகனையும் தான் சொல்கிறேன்!

 

நாகபூஷணி அம்மனைப் பற்றி... கடலில் தானாக அமிழ்ந்த தேரின் 'முடி' இன்னும் சிலரது கண்களுக்குத் தெரிவது பற்றி..  இளங்கோவடிகளின் 'சிலப்பதிகாரத்தில்' வரும் மணிபல்லவம் பற்றி... மாதவியின் மகளான 'மணிமேகலையின்' துறவறம் பற்றி... நிறைய அறிந்து கொள்ள முடிந்தது!

 

அங்கு வாழ்ந்த 'புத்த கோவிலின் பிக்கு' எனது தந்தையிடம் பாரதியாரின் பாடலில் வரும் வரும் வரிகளுக்கு விளக்கம் கேட்டது இன்னும் நினைவிலிருக்கின்றது !

 

பாலைப் பொழிந்து தரும் பாப்பா,

 

அந்தப் பசு மிக நல்லதடி பாப்பா!

 

 

எனும் பாடலில் வரும் ' நல்லதடி' என்ற சொல்லுக்குத் தான் அந்தப் பிக்கு விளக்கம் கேட்டார்!

 

நல்லது என்றால்.... ஹொந்தாய்!

 

தடி என்றால்... Stick!

 

அப்படியானால் 'நல்லதடி'    என்றால் ஹொந்தாய்  ஸ்டிக்????? :o

 

அந்த வயல்களில் நான் பிடித்து விளையாடிய ' வாற் பேத்தைகளுக்கு' அளவே கிடையாது!

 

இன்னும் கூட 'அமுத சுரபி' யின் மதிய உணவின் சுவையை நினைக்க... நாவின் நீர் சுரக்கின்றது!  

 

அதை அனுபவிக்க முடியாத ஏக்கத்தினால்... கண்ணிலும் நீர் சுரக்கின்றது!

 

 

நல்லதொரு நினைவு மீட்டலைத் தந்த 'பதிவுக்கு' நன்றிகள்... விசுகர்! :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நயினை அம்மனின் வரலாற்று இணைப்பிற்கு நன்றி விசுகர்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.