Jump to content

கானகத்தின் குரல்: சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 காடோடி, உலகின் மிகப் பெரிய ஆதிக் காடுகளில் ஒன்றான போர்னியோ காட்டின் அழிவை, காட்டழிப்பின் அரசியலை அழுத்தமான குரலில் சொல்லும் நாவல். இந்த நாவலைப் படித்து முடிப்பவர்கள் ஒரே ஒரு மரத்தை வெட்ட நினைத்தாலும், அவர்களுடைய மனசு வலிக்கும்.

இந்நாவலை எழுதியுள்ள நன்னிலத்தைச் சேர்ந்த சூழலியலாளர் நக்கீரன், உத்வேகம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். கவிஞர், குழந்தை இலக்கியவாதி, பேச்சாளர் என பல முகங்கள் கொண்ட இவருடைய முதல் நாவல் இது.

 

கவிதை மொழியும் கதைக்கான கூறுகளும் கூடிவந்த புதுமையான சூழலியல் எழுத்து இவருடையது. மூன்றாம் உலக நாடுகளில் கண்ணுக்குத் தெரியாமல் களவாடப்படும் மறைநீர் (Virtual water) போன்ற சூழலியல் கருத்தாக்கங்களை பரவலாக்கியவர். காட்டழிப்பைப் பற்றி அவர் எழுதிய 'மழைக்காடுகளின் மரணம்' என்ற சிறுநூல் பரவலான அதிர்வுகளை ஏற்படுத்தியது.

 

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்ற நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் ஒரு பகுதியில், இரண்டாகப் பிளந்து கிடந்த ஒரு பெருமரத்தின் அருகே அவருடன் உரையாடியதில் இருந்து:

 

எண்பதுகளில் போர்னியோ காடுகள் சந்தித்த அழிவை காடோடி பேசுகிறது. இன்றைய நிலையில் அதன் பொருத்தம் என்ன?

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாமாயில், சாப்பிடும் சாக்லேட்டுக்கான கோகோவுக்கான மூலப்பொருள் போர்னியோ காடுகளில் இருந்தும் வந்துகொண்டிருக்கிறது. நம் நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலையும் காபியும் பயிரிடப்பட்டதைப் போல, அங்கு காடு அழிக்கப்பட்டு செம்பனையும் கோகோவும் பயிரிடப்பட்டுள்ளன. அந்தக் காடுகளில் தெரியும் இலைகளில் மிளிரும் பச்சைகூட, டாலர் பச்சைதான்.

தேயிலைத் தொழிலாளர்கள் பட்ட அவலங்கள் பற்றி ‘எரியும் பனிக்காடு' நாவல் பேசியது. ஆனால், அந்தத் தேயிலைத் தோட்டங்களை உருவாக்க காடுகள் அழிக்கப்பட்டது பற்றி நம்மிடம் இலக்கியப் பதிவு இல்லை.

 

நமது தொன்மைக் கூறாகவும் மரபு வளமாகவும் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் அழிவும் போர்னியோவின் அழிவுக்கு இணையானதுதான்.

 

தன்னில் வாழும் சிற்றுயிருக்கும் உயிரைக் கொடுக்கிறது ஒரு காடு. அந்த சிற்றுயிர்களின், தாவரங்களின் ஓசைகள் அடங்கும்போது ஒரு காடு உயிரிழந்துவிடுகிறது. ஊருக்குள் வரும் நீரூற்று தன் சலசலப்பை நிறுத்திக்கொண்டு விடுகிறது.

 

இன்றைக்கு அந்த நாவல் நடந்த களத்துக்கு நீங்கள் திரும்பிச் சென்றால், என்ன நடக்கும்?

இன்றைக்கு போர்னியோவின் கினபத்தாங்கன் பகுதிக்கு நான் திரும்பிப் போனால், நிச்சயமாக அந்தக் காடு இருந்த இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியாது. போர்னியோ காட்டுப் பகுதியின் மூன்றில் இரண்டு பங்கு ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டது.

 

ஒரு காடு வெட்டுமரத்துக்காக அழிக்கப்படுகிறது என்றால், உடனடியாக அங்கே செம்பனைத் தோட்டம் முளைத்து எழுந்துவிடும். 2 பீர் பாட்டிலை விலையாகக் கொடுத்து, 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு உள்ள ஒரு காட்டையே வாங்கியதெல்லாம் நடந்திருக்கிறது.

 

அமேசான் காடுகள் பெருமளவு சுரண்டப்பட்டு, காடழிப்பு உச்சத்தை அடைந்த நிலையில்தான் போர்னியோ காடுகள் வெட்டுமரத் தொழிலுக்குத் திறக்கப்பட்டன. அந்தக் காலத்தில் இந்தோனேசிய அதிபராக இருந்த சுகார்த்தோவும் இதற்கு முக்கிய காரணம்.

 

காடுகள் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

எண்பதுகளின் பிற்பகுதியில் மலேசியாவில் உள்ள சண்டகானில் ஒரு சூப்பர் மார்கெட்டில் மேலாளராக வேலை பார்த்தேன். ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டால் இருப்புகொள்ளாது. ‘நோக்கமில்லா பயணம்' என்ற பெயருடன் நானும் நண்பரும் புறப்பட்டுவிடுவோம். அருகிலே செப்பிலோக் என்ற மனிதத் தடம் படாத கன்னிக்காடு இருந்தது. எங்கே ஒரு காட்டுப் பாதை தெரிகிறதோ, அதற்குள் நுழைந்துவிடுவோம்.

நான் உருண்டு புரண்ட தஞ்சை தரணியில் காடே கிடையாது. அங்கிருந்து போன என்னை, மலேசியக் காடு அரவணைத்துக்கொண்டது. இப்படித்தான் காட்டின் மீதான காதல் துளிர்த்தது, காடுகளுக்குள்ளேயே வாழ வேண்டும் என்ற தீவிர ஆசையாக அது வேர்விட்டது.

 

போர்னியோவுக்கு ஏன் சென்றீர்கள்?

நான் வேலை பார்த்த கிழக்கு மலேசிய பகுதிக்கு அருகில் போர்னியோ காட்டின் ஒரு பகுதி இருக்கிறது. காடுகளிலேயே தங்கி, வெட்டுமரங்களை கணக்கெடுத்து நிறுவனத்துக்குச் சொல்லும் வேலை எண்பதுகளின் பிற்பகுதியில் தானாக வந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு வேலை பார்த்தேன்.

போர்னியோ வெட்டுமர நிறுவன வேலை விட்டுப்போன பிறகு, அதைவிட அதிக சம்பளத்தில் ஆப்பிரிக்கக் காடுகளில் வேலை வந்தது. ஆனால், அதை ஏற்கும் மனநிலையில் நான் இல்லை.

வேலையே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, காட்டை அழிக்கும் வேலையை, மரம் அறுக்கும் தொழிலை எந்தக் காலத்திலும் செய்யக்கூடாது என்ற உறுத்தலை போர்னியோ எனக்குத் தந்தது. அந்த அனுபவம் மிகப் பெரிய துயரம்.

 

இந்த நாவல் எப்படி கருக் கொண்டது?

2007-க்குப் பிறகு சொந்த ஊரான நன்னிலத்துக்குத் திரும்பிவிட்டேன். ஆனால், 15 ஆண்டுகளைத் தாண்டியும் போர்னியோ காடுகளின் அழிவைப் பற்றிய கவலை மட்டும் மனதை விட்டு அகலவே இல்லை. நண்பர்களுடனான பேச்சு, எப்படியாவது அந்தப் புள்ளிக்கு இழுத்துச் சென்றுவிடும். அங்கு கிடைத்த அனுபவங்களைப் பற்றியே பெரும்பாலான நேரம் பேசிக் கொண்டிருப்பேன்.

இந்த நிலையில்தான் ‘மழைக்காடுகளின் மரணம்' என்ற சிறிய புத்தகத்தை பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டனர். அதைப் படித்துவிட்டு புதுச்சேரியைச் சேர்ந்த 11 வயது மாணவன் ஒருவன் என்னை அழைத்தான். தெருவில் அவன் வளர்த்த மரக்கன்றை பக்கத்தில் இருந்தவர்கள் அழித்துவிட்டார்கள். அதற்காக அடிதடியில் இறங்கிவிட்டான்.

அதற்குக் காரணம் நீங்கள் எழுதிய புத்தகம்தான் என்றான். தாணே புயலுக்குப் பிறகு அதே பக்கத்து வீட்டுக்காரர்கள் இவனை அழைத்து, ஊரெல்லாம் மரம் நடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். காரணம், தாணே புயல் மரங்களை சாய்த்திருந்தது. இதுபோன்ற சம்பவங்கள்தான் ‘காடோடி’யை எழுதும் முனைப்பைத் தூண்டின.

 

சூழலியலைத் தாண்டி போர்னியோ பழங்குடிகளின் இனவரைவியலையும், தொன்மக் கதைகளையும் இந்த நாவல் நிறைய பேசியிருக்கிறது...

போர்னியோ பழங்குடிகளைப் பொறுத்தவரை காடு என்பது அவர்களுடைய மற்றொரு அங்கம். அவர்கள் அந்தக் காட்டின் அங்கம். இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. போர்னியோ பழங்குடிகள் இன்னும் முழு உணவு உற்பத்தியாளர் சமூகமாக மாறவில்லை. உணவு சேகரிப்புச் சமூகமாகவே வாழ்ந்தார்கள், தற்சார்பு நிறைந்தவர்கள்.

நாகரிக மனிதர்களைப் போல காடு என்னுடையது என்று அவர்கள் உடைமை கொண்டாடுவதில்லை, தனியுடைமைச் சிந்தனையில்லை. அதனால்தான் அக்காட்டின் மூதாய் மரம் வெட்டப்படும்போது, உறவினர் இறந்ததைப் போல புல்லாங்குழல் வாசிக்கும் சடங்கை நிகழ்த்தி, தங்கள் துயரத்தை தணித்துக் கொள்கிறார்கள்.

இந்த நாவலைப் படிப்பவர்கள் காட்டையெல்லாம் காப்பாற்ற வேண்டாம். தங்களைச் சுற்றியுள்ள ஒரு மரம் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்தினால் போதும்.

 

அதேநேரம், இந்த நாவலில் பழங்குடிகளின் நம்பிக்கையாக வரும் பல விஷயங்கள் கற்பனாவாத (ரொமாண்டிசைஸ்) நோக்குடன் இருக்கின்றனவே?

இந்த நாவலை சூழலியல் நாவலாக, இனவரைவியல் நாவலாக எழுத வேண்டும் என்றெல்லாம் திட்டமிடவில்லை. அந்த வயதில் எனக்கு என்ன அனுபவம் ஏற்பட்டதோ, அப்போது என்ன மனநிலையில் அவற்றை நான் எதிர்கொண்டேனோ, அதைத்தான் பதிவு செய்துள்ளேன். அதில் வியப்பும், அறியும் ஆர்வமுமே அதிகம்.

 

பழங்குடிகள் ஒரு காட்டின் தன்மையை, அதன் அசைவுகளை கிரகித்துக் கொண்டிருக்கிறார்கள். நாவலில் வரும் பிலியவ் கதாபாத்திரம் சொல்லும் பல விஷயங்கள் தொன்மத்தைப் போலிருக்கும். தோண்டிப் பார்த்தால் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும்.

 

ஒரு முறை வேட்டைக்குச் சென்றிருந்தபோது குறிப்பிட்ட பகுதியில் இரண்டு மான் தடங்கள் தெரிந்தன. அவை, ஆண் மான்கள் என்றார் பிலியவ். எப்படி என்று கேட்டபோது, பெண்ணை ஈர்க்க ஆண் மான்கள் ஒரு வகை பாறை உப்பை உண்ணும். அந்தப் பகுதியில் இருந்த பாறையில் கொம்புகளின் தடங்கள் இருந்தன. அந்தப் பாறையை நக்கிப் பார்த்து, உப்புச் சுவை அறிந்து கடந்து போனவை ஆண் மான்கள்தான் என்றார்.

 

அவரைப் போலத்தான் என் கிராமத்தில் உள்ள வயசாளிகளும். மார்கழி மாதம் அதிகாலை 4 மணிக்குச் சத்தம் போடும் ஆனைச்சாத்தான் என்று திருப்பாவையில் ஆண்டாள் குறிப்பிட்டுள்ள பறவை எது என்று தேடினேன். அப்போது என் ஊர் வயசாளி, எத்தனை மணிக்கு எந்தெந்த பறவை கூவும் என்பதை வரிசை கிரமமாக விளக்கினார். காலை 4 மணிக்குக் கூவும் பறவை கரிச்சான் என்று தெரியவந்தது.

 

பிலியவுக்கும் என் ஊர் வயசாளிக்கும் இடையே நிலம் மட்டும்தான் வேறு. நாம் இயற்கையில் இருந்து அந்நியப்பட்டு வாழ்கிறோம். இயற்கையை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், உணர்ந்துகொள்ள வேண்டும், ரசிக்க வேண்டும் என்று இவர்கள்தான் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.

 

 

நாவலின் தலைப்பான காடோடி என்பதே புதிய கலைச்சொல். எப்படி கலைச்சொற்களை தேர்ந்தெடுத்தீர்கள்? பலவும் தமிழிலேயே அமைந்துள்ளனவே?

இது இயற்கை சார்ந்த ஒரு நாவல் என்பதால் கலைச்சொற்கள் அத்தியாவசியமாகின்றன. சில சொற்களைத் தேடவும், உருவாக்கவும் கஷ்டமாக இருந்தது. பல சொற்களை மீட்டெடுத்தேன். மரத்தின் உச்சிப் பகுதிகளின் பெயர் கவிகை. ஃபெசன்ட், சிங்காரக் கோழி.

இதற்கான பழங்குடிப் பெயர்கள் ஆயாம் ஹூத்தான், துவாங். சருகுமான் - கூரன்பன்றி. ஓராங் ஊத்தான் என்பது வாலில்லாக் குரங்கைக் குறிக்கும் மலாய்ச் சொல். கோகியோ அதற்கான பழங்குடிச் சொல். யானைக்கு காஜா எனப் பெயர். நேநே என்பது அதன் பழங்குடிப் பெயர்.

இந்தப் பழங்குடிப் பெயர்கள் எதற்கும் எந்த குறிப்புதவி நூல்களும் கிடையாது. நான் போர்னியோவில் இருந்து திரும்பி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், அந்தச் சொற்களை நினைவில் இருந்து மீட்டுத்தான் கொண்டுவர வேண்டும். ஒரு நாள் இரவு ஒன்றரை மணிக்கு துவாங் என்ற பெயர் ஞாபகத்துக்கு வந்தது.

 

இன்றைய நவீன இலக்கியம் இயற்கையை, சூழலியலை எப்படிப் பார்க்கிறது என்று நினைக்கிறீர்கள்?

சங்க இலக்கியத்தில் ஒவ்வொரு பாடலும் நிலவியல் காட்சியுடன் இருக்கும். பக்தி இலக்கிய காலம்வரை இந்தத் தொடர்ச்சியைப் பார்க்க முடியும். ஆனால், இன்றைய இலக்கியம் பெரும்பாலும் இயற்கை, உயிரினம், தாவரம் பற்றி எந்த விவரிப்பும் இல்லாமல் இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுத் தொடர்ச்சி அறுபட்டுவிட்டது. நவீன இலக்கியத்தில் கரிசல் எழுத்தாளர் களிடம்தான், கூர்ந்த இயற்கை அவதானிப்பைப் பார்க்க முடிகிறது.

எப்படி ஒரு நாவலில் இருந்து கதை மாந்தரைப் பிரிக்க முடியாதோ, அதுபோலத்தான் நிலமும். நில அடையாளங்கள் அற்ற கதைகள் தட்டையாகி விடுகின்றன. ‘பெயர் தெரியாத் தாவரம்', ‘வந்து அமர்ந்து சென்றதொரு பறவை' என்றெல்லாம் எழுதுகிறார்கள். இது எழுதுபவரின் அறியாமைதான். நவீன தமிழ் எழுத்து தரும் இந்த ஏமாற்றம் தவிர்க்கப்பட வேண்டும்.

 

‘பசுமை இலக்கியம்’ புதிதாக உருவாகி வரும் ஒரு துறை. அதன் எதிர்காலம் எப்படியிருக்கும்?

முந்தைய பத்தாண்டுகளில் பெண்ணியம், தலித்தியம் போன்ற இலக்கிய முயற்சிகள் தமிழில் புதிய இயக்கமாக உருவெடுத்தன. அடுத்த பத்தாண்டுகள் பசுமை இலக்கிய ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறேன். சூழலியல் சார்ந்த அக்கறை எல்லா தரப்பு எழுத்தாளர்களிடமும் பெருகி வருகிறது.

வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், விவசாய அழிவு, வேலை நிலையின்மை போன்றவை சூழலியல் சார்ந்த அக்கறையும் எழுத்தும் பெருகுவதற்கு அடிப்படையாக இருக்கின்றன. அதுவே உலகை உயிர்ப்பிப்பதாகவும் இருக்கும்.

 

உதவி: ந. வினோத்குமார் 

 

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/article6842542.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.