Jump to content

தைப்பூசத்திருநாளும் தமிழ் கடவுளின் திருவிழாவும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

108-names-of-lord-muruga3.jpg

தை மாதம் பிறந்து விட்டது, தெட்சனாயனம் முடிந்து உத்தராயனம் காலம் தொடங்கி விட்டது. தமிழ் எனும் மொழி தந்த தலைவன் அழகன் முருகனுக்கு உகந்த நாளாம் தைப்பூசத்திருநாளும் வந்துவிட்டது.

குமரன் அந்த  ஆறுபடை வீட்டில் பழனியாண்டவர், திருப்பரங்குன்றன், பழமுதிர்ச்சோலை பாலகுமாரன், செந்திலாண்டவன், திருத்தணிகை வேலவன், சுவாமிநாதன் இப்படி பலபெயர் கொண்டு விளங்குகின்றான். சொல்ல சொல்லத்  தித்திக்கும் திருக்குமரன் பெயரும் அழகு, தமிழும் அழகு. எங்கெல்லாம் தமிழ் வாழ்கிறதோ அங்கெல்லாம் முருகன் வாழ்ந்து வாழ வழிவைத்துக் கொண்டிருப்பான்.

அண்ணனிடம் ஞானப்பழத்திற்கு சண்டையிட்டு, அப்பனிடம் பிரணவப்பழம் கொடுத்து, கிழவியிடம் சுட்டபழம் தந்து, தாயிடம் சக்திவேல்பழம் பெற்று தமிழின்  கருவாய் உலகிற்கு அரும்பழம் அளித்தவர். தைப்பூசத் திருநாளில் தேவரும், மூவரும் பூவுலகத்தவரும் போற்றி வணங்குவர். குமரனின் தமிழருள் பழம் பெறுவதற்கு சரவணனின் தலம் எங்கும் முருகனடியார்கள் காவடிகள் எடுத்தும் பால்குடம் ஏந்தியும், தலைமுடியை காணிக்கை செலுத்தியும் பலவிதமாக வழிபாடாற்றுவர். பால், பழங்கள், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி சந்தனம், தேங்காய் யாவும்அபிஸேத்திற்காக எடுத்துச் சென்று அவனை  குளிர்வித்தால் சக்திவேலன் எம்மை குளிர்விப்பான். அனைத்து வளங்களும் கிடைக்கச் செய்வான். என்பது கலியுகத்

தெய்வத்தின் மீது அனைத்து மக்களும் கொண்டுள்ள நம்பிக்கையாகும்.

 "நெஞ்சக்கனகல் நெகிழ்ந்துருக தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல் சேர்

 செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்."

நெஞ்சமானது நான் எனும் ஆணவ எண்ணங்களால் கல்லாகிப் போய்விடுகின்றது. பிறப்புகள் எனும் அலைகளால் கல்லாகிய மனம் மோதித் தள்ளாடி வதைப்படுகின்றது. இந்த நிலையில் எல்லாம் அவன் செயல் என நம்மனத்தை முருகன்பால் செலுத்த கனமாகிய மனமும் தேய்ந்து தஞ்சமடைகிறது. ஒன்றுபடும் வேளை கனம் குறையக் குறைய மனமானது லேசாகிவிடுகிறது. ஓய்வு ஏற்பட ஆனந்தம் உண்டாகிறது. ஆனந்தநிலையே நெகிழ்ந்த நிலையாகும்.இவ்வானந்த நிலையில் மனம் பாடிடும். பாடிக்களித்திடும்.

அப்படி பாடிக்களிக்கும்  உள்ளத்து அன்பால் பிறந்திடும் செவ்விய இயற்றமிழ் சொல்மலர்களால் புனையப்பட்ட அப் பாமாலையே கந்தரனுபூதி ஆகும். இப்பாமாலை சிறப்புற  வேண்டி பஞ்சாக்கர பிரணவ ரூவருபன், ஐங்கரத்தான் யானை முகத்தானை  அருணகிரியார் பணிந்து தம்பாடலுக்கு  பிழைகள் ஏதும் நேராது காப்பாக அணிசெய்கிறார். விநாயகரை முதல் தொழும் மரபு ஆலயங்களில் எப்பொழுதும் உண்டு.

வழிபடும் போது விக்கினேஸ்வரரை விக்கினங்கள் ஏதும் வராது முதலில் வணங்கிட வேண்டும். தலையில் குட்டி நினைவாற்றலை அதிகப்படுத்தி தோப்புக்கரணம் இட்டு உடலும் மூளையும் சுறுசுறுப்பு பெற்றிட விநாயகரை உள்ளன்போடு துதிக்கவேண்டும். அண்ணனை காப்பிட்டு தம்பி கந்தனுக்கு அனுபூதி செய்கிறார் அருணகிரி. அவர் கூடுவிட்டு கூடு பாய்ந்து அருந்தமிழை வளர்க்க அயராது பாடுபடுகிறார். அருணகிரியார் ஆபத்துக்கு உதவி செய்யப் போய் அவருடற்கூட்டை விட்டு கிளியின் உருவெடுத்து உதவினார். ஆனால் அவரைப்பிடிக்காதவர் அவருடலை எரித்து விட்டனர்.

ஆனாலும் கிளியின்  உருவிலே இருந்த அருணகிரியார் கந்தரனபூதி பெற்றவரல்லவா, அவர் முருகப்பெருமானின் மீது மாறாத பக்தியினால் கந்தரனுபூதி பாடுகிறார்.

" ஆடும் பரிவேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் 

 தேடும் கயமாமுகனைச் செருவில் சாடும் தனியானை சகோதரனே"

ஆடும் பரி சுயமாக அனைத்துவித நடனங்களையும் ஆடத்தெரிந்தபரி, நீலகண்டம் என அழைக்கப்படும் மயிலும்,வேல் முருகன் கையில் அணிந்து இருக்கும் ஞானவேல் அதாவது அனைத்தையும் வென்றுவிடும் ஞானம் இந்த ஞானமாகிய அறிவே ஆழம் அகலம் கூர்மை என்னும் மூன்று இலக்கணங்கள் அமையப்பெற்றதாக விளங்குகின்றது.

வேலின் அடிப்பகுதி ஆழமானதாக இடைப்பகுதி அகலமானதாக நுனிப்பகுதி கூர்மையானதாக இப்படி ஆழ்ந்த அகன்ற கூரிய அறிவு அமைய வேண்டும். தீமையை அழிக்க வல்ல படைக்கலமாகிய சக்திவேலும், அழகிய செயல் புரியும் சேவல், அதிகாலை கதிரவனாகிய சூரியோதயத்தை உலகிற்கு உணர்த்துவது, ஞானசூரியனை முருகப்பெருமானின் வரவையும் உணர்த்திடும். ஆதலால் அகில உலகங்களையும் ஒரு

நொடியில் சுற்றி வரும் திருமுருகனின் அருளைப் பெற்ற வாகனமாக விளங்கும் மயிலையும், ஞானவேலையும், திருக்கொடியில் வீற்றிருக்கும்,சேவலையும் பாடித்துதிக்கின்ற செயல் ஒன்றையே பணியாக அருள்வாய். தேவர்களை தேடிச்சென்று துன்புறுத்தும் கயமுகாசுரனை போர்களத்தில் சாடி போரிட்டு வென்ற ஒப்புயர்வற்ற மூலமுதல்வனான ஆனைமுகன் சகோதரனே. அருள் புரிவாய் என்று பணிந்து அடுத்த பாடலை தொடர்கிறார்.

"உல்லாச நிராகுல யோகவிதச் சல்லாப விநோதனும் நீயலையோ 

 எல்லாமற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியெ"

இன்பம் உடையவரும் துன்பம் இல்லாதவரும் சிவயோக மூர்த்தியும் இனிமையாகப் பேசுபவரும் மகிழ்ச்சியைத்தருபவரும்,அருள் விளையாடல் பலபுரிபவரும்,நீரல்லவோ ,நான் எனது எனும் புறப்பற்று அகப்பற்று நீங்கியதும் ஏற்படும் நலமாகிய பேரின்பம் அடையச் சொல்லால் உனது தீந்தமிழால் உபதேசித்தருள்வாய். தன்னை அழிக்கவந்த சூரனை வதை செய்ததோடு அவனுக்கும் தன்னுடனேயே மயிலாகவும் சேவலாகவும் விளங்கக்கூடிய சாயுச்சியப் பதவியைக் தந்தவர். முருகப்பெருமான் அப்படி விளங்கும் சுரபூபதியை  தயாமூர்த்தியை கந்தரனுபூதி பாடி நாம் தைப்பூச நன்னாளில் பணிந்து வணங்கிட எம் துன்பம் போக்கி இன்பம் அருளிடுவார். இதில் ஐயம் ஏதும் இல்லை. வேல் வேல் முருகா, வெற்றிவேல் முருகா. ஓம் சரவணபவ!

-அருந்தா

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.